Showing posts with label தமிழப் பேரரசு. Show all posts
Showing posts with label தமிழப் பேரரசு. Show all posts

Friday, 15 February 2019

ஆதித்தனார் வெளியிட்ட தமிழர்நாடு வரைபடம்

ஆதித்தனார் வெளியிட்ட தமிழர்நாடு வரைபடம்

 ஆதித்தனாரின் தமிழ்தேசிய சிந்தனைகளைத் தொகுத்து "சி.பா.ஆதித்தனாரின் தமிழப் பேரரசு" எனும் நூலை வள்ளலார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 இதில் மேற்கண்ட வரைபடம் உள்ளது.

 இவ்வரைபடம் 1960 வாக்கில் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.

 இதில் "முழுதும் தமிழர் வாழும் பகுதிகள்",
 "முழுதும் தமிழர் வாழும் பகுதிகள் (துண்டுபட்டவை)" மற்றும்
 "பாதிபேர் தமிழர் வாழும் பகுதிகள்" என மூன்று அடர்த்தியில் பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.

 இதில் துண்டுபட்டவை (அதாவது தமிழ்நாடு மாநிலத்துடன் சேராமல் போனவை) என்று திருப்பதி(1), பெங்களூர்(2), தேவிகுளம்(3), பீர்மேடு(4), திருவனந்தபுரம்(5) புதுச்சேரி(6), காரைக்கால்(7) ஆகியன குறிக்கப் பட்டுள்ளன.

  தமிழ்நாடு மாநிலமும் ஈழமும் மற்றும் மேற்கண்ட 7 பகுதிகளும் சேர்ந்த "தமிழர் பெரும்பான்மைப் பகுதிகள்" தனிநாடாக "தமிழப் பேரரசு" என்கிற பெயரில் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று ஆதித்தனார் 1942 முதலே கூறிவந்துள்ளார்.

 (பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிரதேசம் என்கிற பெயரில் டெல்லியில் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தமிழர் நிலம் ஆறு துண்டுகளாக சிதறிக் கிடப்பதாகவும் ஆதித்தனார் கவலையுடன் கூறுகிறார்)

 இதுபோக பாதியளவு தமிழர் வாழும் பகுதிகளாக (அதாவது பாதி உரிமை கொண்ட) பகுதிகளென சித்தூர் மாவட்ட மேற்கும்
 ஈழத்தின் அனுராதபுரம் நகரமும்
கொழும்பு வரை உள்ள கடற்கரை  பகுதியும்
கண்டியுடன் கூடிய மத்திய பகுதியான மலையகமும்
 தென்கோடி காலி பகுதியும் குறிக்கப்பட்டுள்ளன.
 (இவற்றை ஆதித்தனார் தமிழர்நாட்டுடன் இணைக்கக் கோரவில்லை)

 இவ்வரைபடமானது புலிகள் வெளியிட்ட ஈழ வரைபடம் மற்றும் ம.பொ.சி வெளியிட்ட தமிழ்நாடு வரைபடம் ஆகியவற்றுடன் ஒத்துப் போகிறது என்றாலும்
 ஈழத்தின் தென் மேற்கு எல்லை நீண்டும் கொள்ளேகால் இல்லாமலும் உள்ளது.

 மற்றபடி ஈழமும் தமிழகமும் ஒரே நாடு என்பது அதுவரை எவருக்குமே உரைக்காத உண்மையாகும்.

 ஆதித்தனாருக்கு இந்த விடயத்தில் தமிழர்களாகிய நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

தகவல்களுக்கு நன்றி :- Rajokkiyam Thangaraj
(பிப்ரவரி 1 அன்று முகநூல் பதிவாக இட்டது)