Tuesday 10 May 2016

சாகட்டும் சேலை கட்டும் தமிழக மீனவன

சாகட்டும் சேலை கட்டும் தமிழக மீனவன்....

இடிந்தகரையில் எழுச்சியுற்ற உம்  வீரம்

இடிந்து விழுந்ததோ சிங்களவன் முன்

முடிந்த அளவு ஆயுதம் பதுக்கி

மடிந்து போகவும் ஆயத்தமாகி

சிலநூறு உயிர்  காவு கொடுத்து

சிங்களவன் பிணமொன்று கரைகொண்டு வந்திருந்தால்....
இலங்கை சீறியிருக்கும்

இந்தியா நம்மீது பாய்ந்திருக்கும்

மீனவர் எழுச்சி மூண்டிருக்கும்

ஈனவர் துப்பாக்கி முழங்கியிருக்கும்

மக்கள் புரட்சி வெடித்திருக்கும்

மேகமெனப் போர் சூழ்ந்திருக்கும்

மறத்தமிழ்க் கூட்டம் திரண்டிருக்கும்

மழைபோல் குண்டுகள் பொழிந்திருக்கும்

தரணிவியக்கும் தமிழர்வீரம்
தக்கப் பதிலடி கொடுத்திருக்கும்

விடியலாய் எம் தமிழர் நாட்டு
விடுதலை பிறந்திருக்கும்

வாயால் கூடக் கண்டனம் தெரிவிக்காத இந்தியா

வயிற்றிலடிக்கும் வந்தேறிகள் ஆட்சி

வக்கில்லை போராட உமக்கு

வழியும்  இல்லை செத்தொழிய

அடிமைபோலக் காலில் விழுகிறீர்

அம்மணமாக்கி கடல்நடுவே வன்கொடுமை நேர்ந்தபின்னும்

உயிரிற் சிறந்ததது மானம்

உமக்கென்னய்யா தயக்கம் அது கப்பலேறிப் போனபின்பும்
???????

(படம்: பாலா)

No comments:

Post a Comment