Wednesday 11 May 2016

யானையை விட பலம்வாய்ந்த ஆளி

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி
வெண்கோடு புய்க்கும் ….
– நக்கண்ணையார்,
அகநானூறு 252 : 1-4

அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய
வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு,

ஆளியானது (யாளி) பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி,
அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.

No comments:

Post a Comment