Monday 30 May 2016

வீரப்பனார் எத்தனை யானைகளைக் கொன்றார்?

வீரப்பனார் எத்தனை யானைகளைக் கொன்றார்?

1972-85 ஆண்டுகளுக்கிடையில் இந்திய யானைகளின் மொத்தத் தொகையே சுமார் 10,000 தான்.

அவற்றில் தமிழ்நாட்டில் சுமார் 1500 மட்டுமே இருந்திருக்கலாம்.

வீரப்பனின் இருப்பிடம், மொத்த தமிழ்நாடோ, இந்தியாவோ அல்ல.

குறிப்பிட்ட சுமார் 600 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட அடர்த்தியற்ற ஒரு குறுமரக் காட்டுப்பகுதிதான்.

ஏனெனில் ஒரு யானைக் கூட்டத்திற்கு சராசரியாக 100 ச.கி.மீ. காடுகள் தேவை.

(நன்றி: ச.முகமது)

ஆக ஆறு யானைக்கூட்டங்கள்தான் வாழ்ந்திருக்கவேண்டும்.

ஒரு யானைக் கூட்டத்தில் ஐம்பதில் இருந்து அறுபது யானைகள் வரை இருக்கும்.

ஆக அதிகப்படியாக 350 யானைகள்தான் மொத்தமே இருந்திருக்கும்.

வீரப்பனார் வேட்டைக்காரர்தான்.
ஆனால் அவர் வேட்டையாடிய காலம் மிகவும் குறைவு.

அவர் என்னமோ ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்றதாகக் கூறுகின்றனர்.

படம்: தமிழகத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பல வழிபாட்டுச் சிலைகளில் ஒன்று.

No comments:

Post a Comment