Showing posts with label பங்களாதேஷ். Show all posts
Showing posts with label பங்களாதேஷ். Show all posts

Sunday, 22 May 2016

வங்காள இனப்பற்று

வங்காள இனப்பற்று
.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.

மேற்கு வங்க மாநிலமும் வங்கதேசநாடும் வங்காள மொழிபேசும் ஒரே இனத்தவர்.

ஆனால் வெவ்வேறு மதத்தவர்.

பங்களாதேசிலிருந்து இந்தியாவிற்குள் அகதிகள் நுழைவது அதிகரித்து வருவதை ஒட்டி

மேற்குவங்கத்தில் பாஸ்போட் இன்றி ஊடுருவியுள்ள பங்களாதேஸ் நாட்டினரை வெளியேற்றுவேன் என்று மோடி கூறினார்.

இதனால் கோபமடைந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி
"எங்கள் சகோதரர்களை வெளியேற்ற மோடி யார்"

"துணிச்சலிருந்தால் தொட்டுப்பார்"
என்று கடுமையாக சாடியுள்ளார்.

The BJP's prime ministerial candidate had threatened to deport illegal immigrants from the neighbouring country if his party won the Lok Sabha elections.

"Modi has no right to say he will oust Bangladeshis from West Bengal. Who is he? He is nobody," Banerjee, chief of the Trinamool Congress, said.

"I dare you to touch them [Bangladeshis]. Modi is playing divisive politics in West Bengal," said Banerjee, whose state borders Bangladesh.

முன்பாவது இந்தியா பங்களாதேஷ் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாமல் இருந்தன.
இருதரப்பிலும் சில கிராமங்கள் எல்லைதாண்டி இருந்தன.
எல்லைதாண்டிய கிராமங்களை  அவரவர்களே எடுத்துக்கொள்ளுமாறு செய்து மோடி அரசு அதனை சரி செய்தது.

அதன்பிறகும் வங்காளதேச மக்கள் இந்தியாவிற்குள் எந்த தடையுமில்லாமல் வந்து போவதற்குக் காரணம் மேற்குவங்க மாநிலத்தின் இனப்பாசம்தான்.

ம.பொ.சி கூறினார். வங்காளியரின் இனப்பற்றுக்கு ஈடான ஒன்று இந்த உலகில் உண்டோ?

அந்த இனப்பற்றுதானேஅந்தமானைத் தமிழரிடமிருந்து அவர்கள் பறித்துக்கொள்ள உதவியது?!

நான் நமது ஈழத்தமிழனை நினைத்து கண்ணீர் விட்டேன்.

-ஆதி பேரொளி

Thursday, 17 March 2016

இந்திய, திராவிட உணர்வு தவறா?

இந்திய, திராவிட உணர்வு தவறா?
------------------------------------------------------
தமிழ் மண்ணில் மூழ்கிய குமரிக்கண்டம் போக இன்று இமயம் வரை பரவியிருக்கும் பூர்வீக தமிழ்நிலம் சிந்து சமவெளி வரை நீள்கிறது.

நில அமைப்பின் படி படத்தில் காட்டிய பகுதி இயற்கையான எல்லைகளைக் கொண்ட நிலப்பரப்பு.

இந்த நிலத்தின் பழமையான குடிகள் என்ற வகையில் இந்த முழு நிலமும் நமக்கு உரிமையானது என்ற எண்ணம் தமிழர்கள் அனைவரின் அடிமனதில் வேரூன்றி உள்ளது.

தமிழ் இலக்கியம் படிக்காத, வரலாறு தெரியாத ஒரு சராசரி தமிழனுக்கும் இந்த எண்ணம் உள்ளது.

'இமயம் வரை நமது மண்' என்ற இந்த அடிப்படை உணர்வுதான் இந்திய பற்றாக வெளிவருகிறது.

இந்த பகுதியை மீட்டு தமிழர் நாடாக அமைக்க காலம் கடந்துவிட்டது என்றுதான் கூறவேண்டும்.

திராவிட உணர்வும் அப்படியே!

'முழு இந்தியாதான் கைவிட்டுப் போனது.
பாதியையாவது தக்கவைப்போம்'
என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான்
திராவிட உணர்வாக தோற்றம் பெற்றது.

வடயிந்தியரை விட தென்னிந்தியர் தமிழருக்கு (தமிழுக்கு) மிக நெருக்கமானவர்கள்.

ஆனால் அதற்கும் கூட காலம் கடந்துவிட்டது.

ஆனால் (இலங்கையுடன் சேர்த்த) தென்னிந்திய நிலப்பரப்பில் சரி பாதியை மீட்க இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

வடயிந்தியரும் தென்னிந்தியரும் தமிழரில் இருந்து தோன்றியோரே!
ஆனால் 'பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்' என்ற பழமொழிக்கேற்ப
இன்று இந்திய, திராவிட உணர்வுகள் தமிழரை ஏமாற்றமட்டுமே பயன்படுகின்றன.

எனவே தென்னிந்தியாவில் பாதியை ஆயுதப் போராட்டத்தால் மீட்டு
நமது அரசை நிறுவி
நாம் வல்லரசாக உருவெடுக்கவேண்டும்.
அப்படி செய்தால் இமயம் வரை மீண்டும் தமிழ் மயமாகும் வாய்ப்பு உள்ளது.

ஏன் உலகம் முழுவதும் (இன்று ஆங்கில மொழியைப்போல) தமிழ் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கூட உள்ளது.

Wednesday, 27 August 2014

அந்தமானின் வந்தேறிகள்

அந்தமானின் வந்தேறிகள்

அந்தமான்-நிகோபர் மக்கள் தொகையில் இனவாரியாகப் பார்த்தோமேயானால்,
வங்காளியர் 32%
தமிழர் 26%
மலையாளிகள் 11%
ஹிந்தியர் 11%
தெலுங்கர் 6%
உருது 2%
தொல்குடிகள் 12%

1954ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அந்தமான்-நிகோபர் தீவுகளின் பெரிய அந்தமான் தீவில் தமிழர்களே அதிகம் வசித்து வந்தனர்; அதன்படி அத்தீவு தமிழகத்துடன் இணைத்திருக்கவேண்டும்;
ஆனால் அப்படி நடக்கவில்லை;
1952லிருந்தே வங்காளியர் உட்பட பல்வேறு இந்துக்களை அந்தமான்-நிகோபரில் குடியேற்றும் திட்டமானது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 1953லேயே நடைமுறைப்படுத்தப்பட்டது;
அதாவது அத்தீவுகளை ஹிந்தியாவிடமே வைத்திருக்க திட்டமிட்ட குடியேற்றம் நடைபெற்றது;
ஐந்தாண்டுத் திட்டம்போல மூன்று கட்டமாக நடைபெற்ற இந்த குடியேற்றத்தின்படி 15ஆண்டுகளில் ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன;
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து ஏக்கர் நிலம், போக்குவரத்திற்கு ரூ210, உணவுக்கு ரூ70, வீடுகட்ட ரூ800, மாடு வாங்க ரூ700, பண்டங்கள் வாங்க ரூ180, விதைகள் வாங்க ரூ100 என வாரிவழங்கியது ஹிந்திய அரசு. (அதற்கு முன்பே தமிழர் வாழ்ந்து வந்த நிலம் தமிழர்களுக்கு பட்டா போட்டு இன்றுவரை தரப்படவில்லை);
1970ல் 300ஆயிரம்(30லக்சம்) பேரைப் பலிகொண்ட வங்கதேச விடுதலைப் போரின்போது வெளியேறிய வங்காளியரையும் இங்கேயே ஹிந்திய அரசு குடியமர்த்தியது;
இதற்கெல்லாம் காரணம் ஹிந்திய அரசில் இடம்பெற்றிருந்த வங்காளியரின் இனப்பற்றே ஆகும்;
ஏதிலி என்ற பெயரில் பலரும் குடியேறினர் இன்றும் கூட அவர்கள் வங்கதேசத்திற்கான விசா வைத்துள்ளனர்; அவர்களின் நண்பர், உறவினர், வீடு, சொத்து, தொழில் என அனைத்தும் வங்கதேசத்திலேயே நடத்திவருகின்றனர்;
இவை மட்டுமல்ல அதுவரை சென்னையிலிருந்து சென்றுவந்த கப்பல் போக்குவரத்து கல்கத்தா வழி செல்வதாக மாற்றப்பட்டது; அந்தமான்-நிகோபர் உயர்வழக்காடு (நீதி)மன்றத்தின் மேல்முறையீடு கல்கத்தாவின் உச்ச வழக்காடு மன்றமாக ஆக்கப்பட்டது;
பள்ளிகளில் இந்தி, வங்காளி மொழிகள் புகுத்தப்பட்டு பல்கலைக் கழகங்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டன;
வங்க மக்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மேற்குவங்க மாநில அரசு செய்துவருகிறது;
தமிழருக்குப் பிறகு குடிவந்த வங்காளியர் இப்போது சகலமானதும் பெற்று நிரந்தரக் குடிமக்களாக முதல்நிலைக் குடிகளாக ஆகிவிட்டனர்;
வங்காளியர் குடிவரும் முன்பே அங்கே வாழ்ந்துவரும் தமிழர் இன்றும் பிழைக்கச் சென்றவர்களாக, சிறு வணிகர்களாக, வேளாண்மைக் கூலிகளாக, சேரி மக்களாக வங்காளியரை அண்டிப்பிழைக்கும்  இரண்டாம் தர மக்களாகவே வாழ்ந்துவருகின்றனர்;
தமிழக வந்தேறி அரசுகள் அந்தமான் தமிழரை ஏறெடுத்துப் பார்க்காததுடன் அவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டன;
1970ல் வங்க ஏதிலிகள் குடிவந்தபோது அப்போது பெரும்பாண்மையாக இருந்த தமிழர்கள் சின்ன எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்கவில்லை;
1980களின் தொடக்கத்தில் சிறிமாவோ-சாஸ்திரி உடன்பாடு மற்றும் சிறிமாவோ-இந்திரா உடன்பாடு ஆகியவற்றின்படி இலங்கை அரசு 500ஆயிரம்(5லக்சம்) மலையகத்தமிழரை வெளியேற்றியபோது ம.கோ.ரா(எம்ஜிஆர்) தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று இந்திராவைச் சந்தித்து அவர்களை அந்தமானில் உள்ள ரப்பர்,தேயிலைத் தோட்டங்களில் குடிவைக்க கோரிக்கை விடுத்தது;
உடனே வங்காளியர் கொதித்தெழுந்தனர்;
அந்தமானின் வங்காளிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வங்காளிய மக்களை அரசின் இந்த முடிவைத் தடுக்க தந்தி அனுப்பும் போராட்டத்தை செய்யவைத்தனர்;
தமிழக அனைத்துக் கட்சி தூதுக்குழு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததை வங்காளியர் அனுப்பிய காகிதத்துண்டுகள் தோற்கடித்தன;
இதுதான் சாக்கு என்று ஹிந்திய அரசு அந்தமானில் இடம் இல்லை என்று வடிகட்டிய பொய்யைச் சொல்லி மறுத்துவிட்டது;
இறுதியாக மலையகத் தமிழர் நீலகிரி மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

அந்தமான்-நிகோபரில் தமிழர்:

'தேனக்க வார்பொழில் மாநக்கவாரம்' என்று இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் இடம்பெறும் 'நக்கவாரம்'தான் தற்போதைய நிகோபர்;
சோழர்களின் எழுச்சி உச்சத்திலிருந்தபோது (கிபி.1020கள்) அந்தமான்-நிகோபர் தீவுகள் உட்பட இன்றைய மலேசியா வரை சோழராட்சி பரவியிருந்தது;
நிகோபரில் இருக்கும் இராசேந்திர சோழனின் வெற்றித்தூண் 'கங்காநதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்' என்று பொறிக்கப்பட்டுள்ளது;
கி.பி.1066ல் இராசேந்திர சோழன் இந்தத் தீவுகளுக்கு வருகை தந்துள்ளார்;
முனைவர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் வெளிக்கொண்டுவந்த உண்மை, அந்தமானில் 'நான்கௌரி' தீவில் இராசராச சோழனில் வெற்றித்தூணும் கல்வெட்டும் உள்ளன;
தஞ்சைக் கல்வெட்டுக்களிலும் இத்தீவுகள் நக்கவாரம், நாகதீபம், கார்த்தீபம் என்று குறிக்கப்பட்டுள்ளன;
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அந்தமான்-நிகோபர் தீவுகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்;
பழக்கங்கள், மொழி, வேர்ச்சொல், தோற்றம் என அந்தமானின் பழங்குடிகளிடம் தமிழ் அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன;
1895ல்  ஒரு தமிழ்க் கிறித்தவப் பாதிரியார் 'வேதப்பன் சாலமன்' என்பவர் தொண்டுகள் பல செய்தார்;
ஆதிகுடிகளுடன் தமிழருக்கு நெருக்கம் ஏற்பட முக்கிய காரணம் இவர்; அதன்பிறகு அந்தமானில் தமிழர் குடியேற்றம் அதிகரித்தது (திணிக்கப்பட்ட குடியேற்றம் அல்ல);
1944ல் ஜப்பான் இத்தீவுகளைக் கைப்பற்றியயோது சுபாஸ் சந்திரபோசிடம் கையளிக்கப்பட்டு 'கேணல்.லோகநாதன்' என்ற தமிழரை அவர் ஆளுநராக நியமித்தார்;
இன்றும் தமிழகத்தின் ஆதரவில்லாமலேயே அந்தமான் தமிழர் தாக்குப்பிடித்து வருகின்றனர்.

(நன்றி: 'தமிழன் இழந்த மண்' பழ.நெடுமாறன்)

தமிழ் நாட்டாண்மையின் பொறுப்பு:

அந்தமான்-நிகோபர் தீவுகளானது தமிழர் ,கலிங்கர், ஆங்கிலேயர், சப்பானியர், பர்மியர், வங்காளியர், ஹிந்தியர் என பல்வேறு வல்லாதிக்கங்களின் கீழ் பந்தாடப்பட்டு வருகிறது; தமிழர்கள் அந்தமான்-நிகோபரை தமக்காகக் கேட்கவில்லை;
(நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள்; பழந்தமிழர் அங்கே ஆடையின்றி வாழும் மக்களைக் குறிக்கும் வகையில்தான் பெயரே வைத்துள்ளனர்)
அங்கே குடியிருப்போருக்கான உரிமைகளைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள்; தமிழர்கள் அங்கே வங்காளியரைப்போல ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை; பிழைத்துதான் வருகின்றனர்; அந்தமான்-நிகோபர் தீவுகள் 293 உள்ளன; இங்கே மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் சந்தித்து  வருவதெல்லாம் அழிவைத்தான்;
வல்லரசுகளால் இவர்கள் முற்றாக அழியும் எண்ணிக்கைக்கு வந்துவிட்டனர்;
ஹாங்காங் தீவு ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது அங்கே இயங்கிவரும் தொழிற்சாலைகள் இங்கே மாற்றப்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன; ஹிந்திய படை இங்கே பழங்குடிகளை கேடாக நடத்துகின்றனர்; வடக்கே கோகோ தீவு பர்மாவால் சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு ஹிந்தியாவைக் கண்கானிக்க சீனா தளம் அமைத்துக்கொண்டுள்ளது; ஆதிகுடிகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல; சுற்றுலா என்ற பெயரில், மதப்பரப்புரை என்ற பெயரில், படைத் தளங்கள் என்ற பெயரில், கள்ளத் துறைமுகங்கள் என்ற பெயரில், மொழித்திணிப்பு என்ற பெயரில் நாள்தோறும் அவர்கள் சீரழிந்து வருகிறார்கள்;
தனித்த நாடமை (தேசிய)இனமான 50பேர் வாழும் ஒரு சின்னஞ்சிறு தீவு தனிநாடு கோருமேயானால் அதை ஆதரிப்பதுதான் தமிழ்நாட்டாண்மை;
தமிழ்மக்கள் தாய்நிலத்தை மீட்டு தமிழ் குடியரசு உருவாகுமேயானால் உலகின் மூத்த இனம் என்றவகையில் உலக இனங்களுக்கு அதன் தாய்நிலத்தில் விடுதலை பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு;
அதை நாம் அந்தமான்-நிகோபர் தீவுகளில் இருந்து தொடங்கலாம்.

மேலும் அறிய,

தமிழன் இழந்த மண் (மின்னூல்)
http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=7594%3A2012-08-22-14-31-42&catid=508%3A2012-07-29-15-40-17&Itemid=1
அந்தமான் பழங்குடிகள்:
http://www.thinakaran.lk/2013/09/18/?fn=f1309182
அந்தமான் தமிழர்:
http://www.tamilkalanjiyam.com/tamil_world/countries/anthaman.html
----
https://m.facebook.com/photo.php?fbid=483394018430923&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

அந்தமானின் வந்தேறிகள்

அந்தமானின் வந்தேறிகள்

அந்தமான்-நிகோபர் மக்கள் தொகையில் இனவாரியாகப் பார்த்தோமேயானால்,
வங்காளியர் 32%
தமிழர் 26%
மலையாளிகள் 11%
ஹிந்தியர் 11%
தெலுங்கர் 6%
உருது 2%
தொல்குடிகள் 12%

1954ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அந்தமான்-நிகோபர் தீவுகளின் பெரிய அந்தமான் தீவில் தமிழர்களே அதிகம் வசித்து வந்தனர்; அதன்படி அத்தீவு தமிழகத்துடன் இணைத்திருக்கவேண்டும்;
ஆனால் அப்படி நடக்கவில்லை;
1952லிருந்தே வங்காளியர் உட்பட பல்வேறு இந்துக்களை அந்தமான்-நிகோபரில் குடியேற்றும் திட்டமானது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 1953லேயே நடைமுறைப்படுத்தப்பட்டது;
அதாவது அத்தீவுகளை ஹிந்தியாவிடமே வைத்திருக்க திட்டமிட்ட குடியேற்றம் நடைபெற்றது;
ஐந்தாண்டுத் திட்டம்போல மூன்று கட்டமாக நடைபெற்ற இந்த குடியேற்றத்தின்படி 15ஆண்டுகளில் ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன;
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து ஏக்கர் நிலம், போக்குவரத்திற்கு ரூ210, உணவுக்கு ரூ70, வீடுகட்ட ரூ800, மாடு வாங்க ரூ700, பண்டங்கள் வாங்க ரூ180, விதைகள் வாங்க ரூ100 என வாரிவழங்கியது ஹிந்திய அரசு. (அதற்கு முன்பே தமிழர் வாழ்ந்து வந்த நிலம் தமிழர்களுக்கு பட்டா போட்டு இன்றுவரை தரப்படவில்லை);
1970ல் 300ஆயிரம்(30லக்சம்) பேரைப் பலிகொண்ட வங்கதேச விடுதலைப் போரின்போது வெளியேறிய வங்காளியரையும் இங்கேயே ஹிந்திய அரசு குடியமர்த்தியது;
இதற்கெல்லாம் காரணம் ஹிந்திய அரசில் இடம்பெற்றிருந்த வங்காளியரின் இனப்பற்றே ஆகும்;
ஏதிலி என்ற பெயரில் பலரும் குடியேறினர் இன்றும் கூட அவர்கள் வங்கதேசத்திற்கான விசா வைத்துள்ளனர்; அவர்களின் நண்பர், உறவினர், வீடு, சொத்து, தொழில் என அனைத்தும் வங்கதேசத்திலேயே நடத்திவருகின்றனர்;
இவை மட்டுமல்ல அதுவரை சென்னையிலிருந்து சென்றுவந்த கப்பல் போக்குவரத்து கல்கத்தா வழி செல்வதாக மாற்றப்பட்டது; அந்தமான்-நிகோபர் உயர்வழக்காடு (நீதி)மன்றத்தின் மேல்முறையீடு கல்கத்தாவின் உச்ச வழக்காடு மன்றமாக ஆக்கப்பட்டது;
பள்ளிகளில் இந்தி, வங்காளி மொழிகள் புகுத்தப்பட்டு பல்கலைக் கழகங்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டன;
வங்க மக்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மேற்குவங்க மாநில அரசு செய்துவருகிறது;
தமிழருக்குப் பிறகு குடிவந்த வங்காளியர் இப்போது சகலமானதும் பெற்று நிரந்தரக் குடிமக்களாக முதல்நிலைக் குடிகளாக ஆகிவிட்டனர்;
வங்காளியர் குடிவரும் முன்பே அங்கே வாழ்ந்துவரும் தமிழர் இன்றும் பிழைக்கச் சென்றவர்களாக, சிறு வணிகர்களாக, வேளாண்மைக் கூலிகளாக, சேரி மக்களாக வங்காளியரை அண்டிப்பிழைக்கும்  இரண்டாம் தர மக்களாகவே வாழ்ந்துவருகின்றனர்;
தமிழக வந்தேறி அரசுகள் அந்தமான் தமிழரை ஏறெடுத்துப் பார்க்காததுடன் அவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டன;
1970ல் வங்க ஏதிலிகள் குடிவந்தபோது அப்போது பெரும்பாண்மையாக இருந்த தமிழர்கள் சின்ன எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்கவில்லை;
1980களின் தொடக்கத்தில் சிறிமாவோ-சாஸ்திரி உடன்பாடு மற்றும் சிறிமாவோ-இந்திரா உடன்பாடு ஆகியவற்றின்படி இலங்கை அரசு 500ஆயிரம்(5லக்சம்) மலையகத்தமிழரை வெளியேற்றியபோது ம.கோ.ரா(எம்ஜிஆர்) தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று இந்திராவைச் சந்தித்து அவர்களை அந்தமானில் உள்ள ரப்பர்,தேயிலைத் தோட்டங்களில் குடிவைக்க கோரிக்கை விடுத்தது;
உடனே வங்காளியர் கொதித்தெழுந்தனர்;
அந்தமானின் வங்காளிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வங்காளிய மக்களை அரசின் இந்த முடிவைத் தடுக்க தந்தி அனுப்பும் போராட்டத்தை செய்யவைத்தனர்;
தமிழக அனைத்துக் கட்சி தூதுக்குழு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததை வங்காளியர் அனுப்பிய காகிதத்துண்டுகள் தோற்கடித்தன;
இதுதான் சாக்கு என்று ஹிந்திய அரசு அந்தமானில் இடம் இல்லை என்று வடிகட்டிய பொய்யைச் சொல்லி மறுத்துவிட்டது;
இறுதியாக மலையகத் தமிழர் நீலகிரி மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

அந்தமான்-நிகோபரில் தமிழர்:

'தேனக்க வார்பொழில் மாநக்கவாரம்' என்று இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் இடம்பெறும் 'நக்கவாரம்'தான் தற்போதைய நிகோபர்;
சோழர்களின் எழுச்சி உச்சத்திலிருந்தபோது (கிபி.1020கள்) அந்தமான்-நிகோபர் தீவுகள் உட்பட இன்றைய மலேசியா வரை சோழராட்சி பரவியிருந்தது;
நிகோபரில் இருக்கும் இராசேந்திர சோழனின் வெற்றித்தூண் 'கங்காநதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்' என்று பொறிக்கப்பட்டுள்ளது;
கி.பி.1066ல் இராசேந்திர சோழன் இந்தத் தீவுகளுக்கு வருகை தந்துள்ளார்;
முனைவர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் வெளிக்கொண்டுவந்த உண்மை, அந்தமானில் 'நான்கௌரி' தீவில் இராசராச சோழனில் வெற்றித்தூணும் கல்வெட்டும் உள்ளன;
தஞ்சைக் கல்வெட்டுக்களிலும் இத்தீவுகள் நக்கவாரம், நாகதீபம், கார்த்தீபம் என்று குறிக்கப்பட்டுள்ளன;
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அந்தமான்-நிகோபர் தீவுகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்;
பழக்கங்கள், மொழி, வேர்ச்சொல், தோற்றம் என அந்தமானின் பழங்குடிகளிடம் தமிழ் அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன;
1895ல்  ஒரு தமிழ்க் கிறித்தவப் பாதிரியார் 'வேதப்பன் சாலமன்' என்பவர் தொண்டுகள் பல செய்தார்;
ஆதிகுடிகளுடன் தமிழருக்கு நெருக்கம் ஏற்பட முக்கிய காரணம் இவர்; அதன்பிறகு அந்தமானில் தமிழர் குடியேற்றம் அதிகரித்தது (திணிக்கப்பட்ட குடியேற்றம் அல்ல);
1944ல் ஜப்பான் இத்தீவுகளைக் கைப்பற்றியயோது சுபாஸ் சந்திரபோசிடம் கையளிக்கப்பட்டு 'கேணல்.லோகநாதன்' என்ற தமிழரை அவர் ஆளுநராக நியமித்தார்;
இன்றும் தமிழகத்தின் ஆதரவில்லாமலேயே அந்தமான் தமிழர் தாக்குப்பிடித்து வருகின்றனர்.

(நன்றி: 'தமிழன் இழந்த மண்' பழ.நெடுமாறன்)

தமிழ் நாட்டாண்மையின் பொறுப்பு:

அந்தமான்-நிகோபர் தீவுகளானது தமிழர் ,கலிங்கர், ஆங்கிலேயர், சப்பானியர், பர்மியர், வங்காளியர், ஹிந்தியர் என பல்வேறு வல்லாதிக்கங்களின் கீழ் பந்தாடப்பட்டு வருகிறது; தமிழர்கள் அந்தமான்-நிகோபரை தமக்காகக் கேட்கவில்லை;
(நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள்; பழந்தமிழர் அங்கே ஆடையின்றி வாழும் மக்களைக் குறிக்கும் வகையில்தான் பெயரே வைத்துள்ளனர்)
அங்கே குடியிருப்போருக்கான உரிமைகளைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள்; தமிழர்கள் அங்கே வங்காளியரைப்போல ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை; பிழைத்துதான் வருகின்றனர்; அந்தமான்-நிகோபர் தீவுகள் 293 உள்ளன; இங்கே மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் சந்தித்து  வருவதெல்லாம் அழிவைத்தான்;
வல்லரசுகளால் இவர்கள் முற்றாக அழியும் எண்ணிக்கைக்கு வந்துவிட்டனர்;
ஹாங்காங் தீவு ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது அங்கே இயங்கிவரும் தொழிற்சாலைகள் இங்கே மாற்றப்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன; ஹிந்திய படை இங்கே பழங்குடிகளை கேடாக நடத்துகின்றனர்; வடக்கே கோகோ தீவு பர்மாவால் சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு ஹிந்தியாவைக் கண்கானிக்க சீனா தளம் அமைத்துக்கொண்டுள்ளது; ஆதிகுடிகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல; சுற்றுலா என்ற பெயரில், மதப்பரப்புரை என்ற பெயரில், படைத் தளங்கள் என்ற பெயரில், கள்ளத் துறைமுகங்கள் என்ற பெயரில், மொழித்திணிப்பு என்ற பெயரில் நாள்தோறும் அவர்கள் சீரழிந்து வருகிறார்கள்;
தனித்த நாடமை (தேசிய)இனமான 50பேர் வாழும் ஒரு சின்னஞ்சிறு தீவு தனிநாடு கோருமேயானால் அதை ஆதரிப்பதுதான் தமிழ்நாட்டாண்மை;
தமிழ்மக்கள் தாய்நிலத்தை மீட்டு தமிழ் குடியரசு உருவாகுமேயானால் உலகின் மூத்த இனம் என்றவகையில் உலக இனங்களுக்கு அதன் தாய்நிலத்தில் விடுதலை பெற்றுத்தரவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு;
அதை நாம் அந்தமான்-நிகோபர் தீவுகளில் இருந்து தொடங்கலாம்.

மேலும் அறிய,

தமிழன் இழந்த மண் (மின்னூல்)
http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=7594%3A2012-08-22-14-31-42&catid=508%3A2012-07-29-15-40-17&Itemid=1
அந்தமான் பழங்குடிகள்:
http://www.thinakaran.lk/2013/09/18/?fn=f1309182
அந்தமான் தமிழர்:
http://www.tamilkalanjiyam.com/tamil_world/countries/anthaman.html
----
https://m.facebook.com/photo.php?fbid=483394018430923&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739