Showing posts with label விழித்தெழு. Show all posts
Showing posts with label விழித்தெழு. Show all posts

Saturday, 19 July 2014

பிலிப்பைன்ஸ் தமிழர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தமிழ்
ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ
படத்தைப் பார்த்தாலே தமிழின் இழிநிலை விளங்கும்;
பிலிப்பைன்ஸில் வாழும் தமிழர்
பற்றி ஏதாவது தெரிந்தால் இங்கே பகிரவும்;
தெரியாத மற்றவருக்கு இந்த பதிவைப் பகிரவும்.
சில தரவுகள்:-
Jose dalman மாவட்ட ஆட்சி மொழிகளில் ஒன்று தமிழ்;
cainta,rizal என்ற இடத்தில் 1794ல்
ஆங்கிலப்படை அழைத்து சென்ற தமிழர்
அங்கேயே குடியமர்ந்தனர்;
தலைநகர் மனிலா ல் வெரித்தாஸ், கிருபை ஆகிய
இரு தமிழ் கிறித்துவ வானொலிகள் உள்ளன;
வெரித்தாசு வானொலியில் பணிபுரிந்த திரு.ஜெகத்
கஸ்பர்
http://nakkheeran.in/users/frmNews.aspx?N=1
9781
தமிழில் ஜெபம் பாடும் பிலிப்பினோ கிறித்தவர்
http://m.youtube.com/watch?v=rb0bL1booEM
சம்போங்கா தமிழ் மழலையர் பள்ளி
http://www.zamboanga.com/z/index.php?title=
File%3AElementary_school_tamil_jose_dalman_za
mboanga_del_norte.jpg
கலைநிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்
http://m.youtube.com/watch?v=UCgZECm6nlA
பிலிப்பைன்சு புரட்சியாளர் ஈழவிடுதலைக்கு ஆதரவு
http://naamtamilar.org/செய்திகள்/புலம்பெயர்-
தேசங்கள்/பிலிப்பைன்ஸ்-நாட்டின்-கி
பிலிப்பைன்சு சூறாவளியில் பாதிக்கப்பட்ட தமிழர்
பேட்டி
http://www.bbc.co.uk/tamil/global/2013/11/
131110_phillipinescyclone.shtml
தமிழருக்கும் பிலிப்பினோவுக்கும் பிறந்தவரின்
கட்டுரை
http://tamilculture.ca/navigating-through-my-
tamil-filipino-world-an-account-of-a-mixed-
first-generation-kid/
https://m.facebook.com/photo.php?fbid=421580777945581&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Friday, 18 July 2014

பழந்தமிழர் போர்க்குற்றம்

பழந்தமிழர் போர்க்குற்றம்
"""""""""""" """""""""""""""
தோற்ற மன்னர்களின் தலையே அடுப்பாக
வைத்து அவர் குருதியே உலைநெய்யாக
வார்த்து அவர்கள் வெட்டுண்ட
கைகளையே அகப்பையாக ஆக்கி போர்க்களத்தில்
தமிழ் மன்னர்கள் செய்த வேள்வி பற்றி சங்ககால
நூல்கள் கூறும் செய்யுள்கள்:-
ஆண்தலை - அடுப்பின் வய வேந்தர் ஒண்
குருதிசினத் தீயிற் பெயர்பு பொங்க...தொடித்
தோட்கை துடுப்பாக -
(மதுரைக் காஞ்சி.29-34)
முடித்தலை அடுப்பாக புனற்குருதி யுலைக்
கொளீஇத் தொடித் தோள் துடுப்பிற் றுழந்த
வல்சி
(புறநானூறு 26)
முடித்தலை யடுப்பில்
தொடித்தோள் துடுப்பில் (சிலப்பதிகாரம் 26
-242)
'அசுரர் சிரங்கள் அடுப்பா வைத்து'-
போர்க் களத் தலகை வகுப்பு -அடி 24. //
பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப்
பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார்
என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,
"பகைவர் நாட்டில் தேர்செல்லும் தெருக்களைக்
கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய்
. பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில்
குதிரைகள் பூட்டிய தேரைச்
செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்"(புறந
ானூறு 15).
இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர்
"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே" (புறம்6)
என்று வாழ்த்துகிறார்.
பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால்
எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும்
என்பது இதன் பொருளாகும்.
சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும்,
இரவும் கருதாது பகைவரது ஊரைத்
தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின்
புலம்பலோசையுடன்
கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,
"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"
என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம்.
சோழன் இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும்
வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக்
கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.
பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல்
அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான்
பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய
பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன்
சிவந்திறுத்த புலம்போல" என்ற
உவமையைப் பயன்படுத்துகிறார்.
போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப்
பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.
நன்னன் என்ற குறுநிலமன்னன் தன்னுடைய
பகைவர்களை வென்ற பிறகு அவர்களின்
உரிமை மகளிரின்
தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத்
திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின்
யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).
வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன்
பழையன் என்ற மன்னனை வென்று அவன்
மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப்
பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில்
பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட
பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான்
(பதிற்றுப் பத்து 5ம் பத்து)
கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன்
மூவன் என்பவனைப் போரில்
வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித்
தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.
மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற
குறுநில மன்னனின் பற்களைப்
பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில்
பதித்து வைத்தான். (அகம் 211).//
ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்திகளில்
அவனது.வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக
"இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று"
என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜராஜன் தன்
மகன் முதலாம்
இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப்
பெற்றான். முதலாம் இராசேந்திரன் தலைமையில்
சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற
மேலைச் சளுக்கர் மன்னனுடன்
போரிட்டு வென்று இரட்டைபாடியைக்
கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன்
மேற்கொண்ட
பழி செயல்களை சத்தியாசிரையனின் கிபி.1007ம்
ஆண்டு காலத்திய
கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது
(சாஸ்திரி 1989: 23940).
நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான்.
நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள்,
அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக்
கொன்றும் கன்னியரைக்
கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச்
சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக்
கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத்
திரும்பினான்.
இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின்
ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார்
கோவிலுக்கு வழங்கினான்//
இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின்
மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள்,
குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத்
தொகுதிகள்"
ஆகியனவற்றை சத்தியாசிரயனிடம
ிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக்
குறிப்பிடுகிறது (தந்தையாகிய
இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால்
இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ
இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுக
ிறது).
இராஜேந்திரன்
பட்டத்திற்கு வந்தபிறகு (1012-1044) நிகழ்த்திய
போர்களில்
கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப்போரில்
(ஈழம்=இலங்கை) ஈழமன்னனை இவன்
வெற்றிகண்டு கைப்பற்றிய பொருள்
குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச்
செப்பேடு (செய்யுள் 58-59)
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"அவனுடைய நாட்டையும், அவனுடைய
முடியையும், அவனுடைய அரச
பத்தினியையும், அவளுடைய முடியையும்,
அவனுடைய மகளையும், மற்றப்
பொருட்குவியல்களையும் . . . கைப்பற்றினான்.
"
சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன்
காட்டுக்குள் ஓடிப்போனதாகவும்,
உடன்பாடு செய்து கொள்வதாகச் சொல்லிய
சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக்கொண்ட
ு, மேற்கொண்ட
செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள்
சிக்கிய கருவூலங்களையும்
உடனே சோழமன்னனுக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பாக பல இடங்களில்
இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த
நினைவுச் சின்ன
அறைகளை உடைத்து அவற்றிலிருந்த
பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச்
சென்றனர். அவர்கள் கண்பட்ட
இடங்களிலெல்லாம் பெளத்த
சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும்
அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள்
அனைத்தையும் கொள்ளையடித்தனர்
" (சாஸ்திரி, 1989: 272).
வங்காள தேசத்து மன்னன்
மகிபாலனை வென்று யானைகள், பெண்கள்,
செல்வம் எல்லாவற்றையும் கைப்பற்றிக்கொண்
டான் (மேலது: 281).
முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான
ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின்
மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற
சிங்களமன்னனை வென்றான்.
சிங்கள மன்னன் ஓடி ஒளிய
அவனது தமக்கையையும், மனைவியையும்
சிறைபிடித்ததுடன் அவனது தாயின்
மூக்கை அறுத்தான் (ளு11111; 5056).
ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல்
நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில்
உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில
மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும்
சிறைபிடிக்கப்பட்டனர், பூண்டூர் நகர் அழித்துத்
தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய
ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது.
மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது.
1894ம் ஆண்டுக்கான
கல்வெட்டு ஆண்டறிக்கையில்(எண்.172).
சாளுக்கியர்களின் பழமையான நகரான
கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத்
தரைமட்டமாக்கி அங்கிருந்த
ஒரு தூவாரபாலகர்.உருவத்தைக்
கொண்டுவந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம்
கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில்
"ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம்
எரித்து கொண்டு வந்த துவார பாலர்"
என்று குறிக்கப்பட்டுள்ளது. முதல்
குலோத்துங்கச் சோழன் (1070---1120)
இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110)
வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள்
மற்றும் செல்வங்களுடன் மகளிரையும்
கைப்பற்றி.வந்தான். மூன்றாம்
குலோத்துங்கன் (கி.பி. 1178-1218) மதுரையின்
மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன்
செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள்
பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.
1. பெண்கள் அடிமைகளாகக்
கொண்டு செல்லப்பட்டனர்.
2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.
3. பாண்டியனின்
கூடமண்டபத்தை (முடிசூட்டும்
மண்டபம்).இடித்து கழுதை ஏரைப்
பூட்டி உழுதனர்.
திருவாரூர்த் தலைவனாக இருந்த
கங்கை கொண்டான்.உத்தம சோழராயனின்
படையதிகாரியான கூத்தன்
கணபதி என்பவனை "பகைவர்களின்
மனைவியர்க்குக் கணவன்"
என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE
1913 ப.97).//
கி.பி. 1219இல் சோழ நாட்டின்
மீது படையெடுத்த முதல் மாறவர்மன்
சுந்தரபாண்டியன் (1216 -1238)
தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான
மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான்
(I.P.S; 290,323)
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்
மலையில் உள்ள அக்கல்வெட்டின்
உரைநடை வடிவம் வருமாறு:
கொடுங் கோபமுடைய குதிரைகளையும்,
யானைகளையும் செலுத்திச்
சென்று சோழர்களின் தஞ்சைநகரையும்
செந்தழலிட்டுக் கொளுத்தினான். அழகிய
குவளை மலர்களும், நீல மலர்களும் தம்
அழகை இழக்கும்படி குளங்களையும்.ஆற
ுகளையும் கலக்கினான்.கூடம், மதில்,
கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள்,
மாடமாளிகைகள், கருவூலங்கள்
ஆகியனவற்றை இடித்துத்
தள்ளினான்.தன்னை வந்து அடிபணியாத
பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுதகண்ணீர்
ஆறாக ஓடும்படிச் செய்தான்.
பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர்
கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான்.
சோழர் தலைநகராக விளங்கிய.முடிகொ
ண்டசோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்"
எனனும் சடங்கை இவன் செய்தான். அதன்
பொருட்டு சோழ அரசியும் அந்தப்புரத்துப்
பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப்
பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப
்பட்டனர் (சாஸ்திரி, மேலது,579).//
இலங்கைப் படையெடுப்பின்போ
து இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை
அவனது
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
குறிப்பிடுகின்றன.
ஈழநாட்டு கிராமங்களை தஞ்சைப்
பெருவுடையார்.கோவிலுக்குத் தானமாக
ராசேந்திரன் வழங்கினான்//
மேலும், சிங்கள
போர்க்கைதிகளை அடிமையாகக்
கொண்டுவந்து கல்லணை கட்டினான்
கரிகாலன்//
கண்ணகி மதுரையை எரித்தபின்
ஒரு பொற்கொல்லன் அறம்தவறியதற்காக 1000
பொற்கொல்லர்கள் கழுவிலேற்றிக்
கொல்லப்பட்டனர்//
ரொம்ப நல்லவன்
என்று சொல்லி சொல்லியே பல நூற்றாண்டுகள்
நம்மை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்துவருகின்ற
னர்; நாமும் சராசரி காட்டுமிராண்டி மனிதரே;
போர்க்குற்ற சான்றுகள் கொஞ்சமா நஞ்சமா?
பலன்தான் இல்லை;
சான்றுகாட்டி கெஞ்சிக்கேட்க
விடுதலை ஒன்றும் பிச்சையல்ல;
இது இனவழிப்பு இதைத் தடுக்க இனம்
ஒன்றுசேர்ந்தாலே போதும்;
போர் என்பது வெற்றி என்ற ஒன்றால்
மட்டுமே அளக்கப்படுகிறது.//
தமிழன் நல்லவனும் கிடையாது அப்பாவியும்
கிடையாது; ஒவ்வொரு காலத்திலும்
ஒவ்வொரு இனங்களின் கை ஓங்கியிருந்தது;
இப்போது எதிரிகள் கை ஓங்கியுள்ளது;
காயத்தைக் காட்டி கையேந்தும்
பிச்சைக்காரன்போல
கணக்கிலடங்கா சான்றுகளை கையில்வைத்துக்க
ொண்டு அனைத்துலகத்திடம் ஓடாமல், வாங்கிய
அடியை தமக்குள் பரப்பி அடுத்த
போரை திட்டமிட வலியுறுத்துகிறேன்;
எதிரிகளெல்லாம் நம்முன் குழந்தைகள் ஆனால்
உண்மையில் தமிழன்தான் பொல்லாதவன்;
உள்நெஞ்சில் பெருந்தீ
கொண்டோர்க்கு இப்பதிவின் நோக்கம் விளங்கும்.
https://m.facebook.com/photo.php?fbid=423969407706718&id=10000280986

Thursday, 10 July 2014

ஆசாரித்தமிழன் வாயில் மண்


ஆசாரித்தமிழன் வாயில் மண்
=#=#=#=#=#=#=#=#=#=

என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட சில விடயங்களைப் பகிர்கிறேன்; எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை; 
ஆசாரிகள்தான் அந்தக்காலத்துப் பொறியாளர்கள் (எஞ்சினியர்ஸ்); தமிழர் தலையெழுத்துக்கு அவர்கள் மட்டும் விதிவிலக்கா?
இன்று கேரளாவுக்குப் போய் சம்பாதிக்கும் அளவுக்கு தரம்தாழ்ந்துபோனார்கள்; தமிழகத்தில் இருக்கும் கொத்தனார்கள், நாவிதர்கள், சிற்பிகள், கூலிகள், ஓட்டுநர்கள் எல்லாரும் இப்போது கேரளாவுக்குப் போய் சம்பாதிக்கிறார்கள்;
அதாவது தமிழகத்திலிருந்து ஆள்கூட்டிவந்து வேலைவாங்குமளவு மலையாளிகள் உயர்ந்துவிட்டனர், தமிழர் தாழ்ந்துவிட்டனர்;
சபரிமலை ஐயப்பன் சிலையை செய்து தந்ததே தமிழக சிற்பிகள்தான் (ஸ்தபதி என்று அழைக்கப்படும் பெருந்தச்சர்);
இன்று அதே சபரிமலையில் ஒரு தேநீர்கடை மலையாளி தமிழனை வெந்நீர் ஊற்றிக்கொல்லும் அளவு தரம்தாழ்ந்துவிட்டனர்;
சரி, ஆசாரிகள் கதைக்கு வருவோம்; மற்ற தமிழரைப்போலவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கல்வியறிவு இல்லாமல் (ஆங்கிலம் தெரியாமல் படிப்பைவிட்டோரே அதிகம்) சொந்தமண்ணில் எதிர்காலமும் இல்லாமல் அவர்கள் குடிமூழ்கிவருகிறது;
தமிழர்களின் கலைகள் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகின்றன என்பதை அறியப்போகிறீர்கள்; ஊரறிந்த பெருந்தச்சன் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் 'கணபதி ஸ்தபதி';
குமரிக்கடலில் வானுயரம் நிற்கும் வள்ளுவர் சிலையை கட்டியவர்; இவர் பல்வேறு புகழ்பெற்ற சிலைகளையும் கோவில்களையும் தமிழர் வாழும் பல நாடுகளில் செய்துதந்துள்ளார்;
(பலருக்குத் தெரியாத செய்தி- இலங்கை அரசு 1998ல் பாம்புப்படுக்கையில் இருக்கும் திருமால் சிலை செய்ய முன்பணம் கொடுத்தது; பல இடங்கள் தேடி நீலநிறப் பாறைகளைக் கண்டறிந்து தன் கைக்காசைப்போட்டு அந்த சிலையைச் செய்தார்; சிங்கள அரசுகளைப் பற்றிக் கூறவும் வேண்டுமா, ஆட்சிமாறியதும் அம்போவென விட்டுவிட்டார்கள்;
அச்சிலையை அவர் தானியங்கள் நிரப்பிய தொட்டியில் வைத்து புதைத்துவைத்திருந்தாராம், அது இன்றும் அப்படியே இருக்கிறதாம்)
சென்னையில் சிற்பக்கல்லூரி நிறுவப்பட்டபோது (அதை நிறுவியதும் தமிழ்ப் பார்ப்பனரான ராஜாஜிதான், திராவிடக்கட்சிகள் ஆட்சிக்கு ஆபத்து வரும்போது வள்ளுவர் கோட்டம், கண்ணகி சிலை போல எதையாவது கட்டி விளம்பரம் தேடுவதோடு சரி) அக்கல்லூரியின் முதல்வராக கணபதியார் நியமிக்கப்பட்டார்; வெறும் உளிப்பட்டறையாக இருந்த சிற்பக்கல்லூரியை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு குறைவில்லாமல் கட்டியெழுப்பினார் கணபதி ஸ்தபதி; தமது 84ம் வயதில் 2011 ல் மறைந்தார்;
கணபதி ஸ்தபதிதான் அதுவரையிலும் தலைமுறை தலைமுறையாக வாய்வார்த்தையாக ஆசாரிகள் கற்றுவந்த தொழில்நுட்பங்களை (கட்டுமானம் மற்றும் சிற்பம்) சரியாக தொகுத்து சீராக்கி வார்த்தைகளை உருவாக்கி கோட்பாடுகளை வகுத்து நூலாக வெளியிட்டார்;
அவர் இருந்தவரை ஆங்கில எழுத்துகள் கூட தெரியாத ஆசாரிகள் பட்டறிவை(அனுபவத்தை) நிறுவி 'ஸ்தபதி' பட்டம் வாங்கமுடிந்தது; அதாவது
மூன்றாம் வகுப்பு தாண்டாத ஒரு கோவில்கட்டும் ஆசாரி தமது பட்டறிவால் கற்றுத்தேர்ந்ததும் அக்கல்லூரியில் விண்ணப்பித்தால் பட்டறிவை சோதித்து 'ஸ்தபதி' பட்டம் வழங்கினார்கள்; கணபதியார் மறைந்தபிறகு சிற்பக்கலையில் கல்லூரிப் பட்டம் பெற்றவருக்கு மட்டுமே அப்பட்டம் கிடைக்கிறது;
இதனால் தனியாக தாமே முழுக்கோவிலையும் கட்டிமுடிக்கும் திறமையுள்ள பட்டறிவு வாய்ந்த ஆசாரிகள், பட்டம் வாங்கிய ஒரு மாணவன் இருந்தால்தான் கோயில்கட்ட இசைவே(அனுமதியே) பெறமுடியும்;
வெறுமனே புத்தகத்தைப் படித்த ஒரு இளைஞன் உட்கார்ந்த இடத்தில் கையெழுத்துப்போட்டுவிட்டு காசுபார்ப்பான்;
இதைவிடவும் கேடு வேறொன்று உள்ளது;
அதாவது வெளிநாட்டு ஆட்களும் அக்கல்லூரியில் சேர்ந்து புத்தகத்தைப் படித்து தேர்வெழுதிவிட்டு தமிழகத்தின் தலைசிறந்த ஆசாரிகளுக்கு தன் பட்டத்தின் மூலம் தொழில்பெற்றுக்கொடுத்து அதற்கு கைமாறாக அவர்களின் தொழில்முறையைப் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டு அவன் நாட்டுக்குப்போய் அதற்கான காப்புரிமையை வாங்கிவிடுவான்;
அதன்பிறகு ஆசாரிகள் காலம்காலமாக பயன்படுத்திவரும் தொழில்நுட்பங்கள் அவனிடம் இசைவு பெற்றபிறகுதான் ஆசாரிகளே பயன்படுத்தமுடியும்;
எடுத்துக்காட்டாக, இன்று தங்க வளையல்களில் போடப்படும் வேலைப்பாடுகள் (டிசைன்ஸ்) ஆசாரிகள் பயன்படுத்திவந்த அதே முறையை பயன்படுத்தி சிறிய இயந்திரத்தின் மூலம் செய்யப்படுகின்றன;
அதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமைகள் வைத்துள்ளன; அந்த வேலைப்பாடு மற்றும் அதன் அளவீடுகள் வடிவங்கள் என அனைத்தும் ஆங்கிலப்பெயர்களில் மாற்றப்பட்டுவிட்டன;
அதாவது வளையல் செய்யும்கலையே வெளிநாட்டிலிருந்து வந்ததாக மக்கள் நம்புவார்கள்;
எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் நடைமுறைக்கு கொண்டுவரும் முன் பழைய தொழில்நுட்பம் பயன்படுத்துவோர் அடையும் பாதிப்பை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்;
பழைய தொழில்நுட்பத்தில் பிழைப்போருக்கு புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கவேண்டும் அல்லது அவர்களுக்கு உரிய மாற்றுவழி அமைத்துத் தரவேண்டும்;
நமக்குத்தான் அரசே கிடையாதே;
எப்படி பனினி என்பவரால் தமிழின் புணர்ச்சி விதிகள் திருடப்பட்டு சமசுக்கிருத இலக்கணத்தில் சேர்க்கப்பட்டு இன்று அது தமிழுடன் போட்டிபோடுகிறதோ.
எப்படி தெலுங்கர் ஆட்சியில் தமிழிசையைக் கற்று அதில் தெலுங்கு பாடல்களை அமைத்து மெட்டு, தாளம், இசை ஆகியவற்றின் பெயரை சமசுக்கிருதத்தில் மாற்றி தமிழரின் இசையை திருடி இன்று கர்நாடக சங்கீதம் ஆக்கினார்களோ. அதே கலைத்திருட்டுதான் இதுவும்;
கலையைப் பாதுகாக்க அக்கறையுள்ள ஆற்றலுள்ள அரசு நமக்கு இல்லை;
தமிழரின் பழமையான நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகத்தை இந்தியா தனதாக்கிக்கொண்டது;
தோப்புக்கரணத்திற்கு ஆங்கிலத்தில் பெயர்வைத்து அமெரிக்கா காப்புரிமை வைத்துள்ளது;
இன்று பரதநாட்டியம் என்று அறியப்படுவது தமிழர் கலையான சதிராட்டத்தின் ஒரு வடிவமே;வாடிப்பட்டி மேளம் என்பது போல பந்தநல்லூர் சதிராட்டம்தான் இன்றைய பரதநாட்டியம் (பந்தநல்லூர் தஞ்சாவூர் அருகில் உள்ளது);
இந்த திருட்டுவேலையைச் செய்த சென்னை கலாச்சேத்ராவுக்குப் போய்ப் பாருங்கள் ஒரு தமிழன் கூட அங்கு கிடையாது;
கலையை வளர்க்காமல் அதை வெளிநாட்டாருக்கும் வேற்றினத்தாருக்கும் விற்று பின் அவன் திருத்திய வடிவத்தை நமக்கே கொண்டுவந்து கொடுத்து இரட்டையாக காசுபார்த்து நம்மை சீரழிக்கின்றன இந்த வேற்றின அரசுகள்.
கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இழந்துவருகிறான் தமிழன்

இசுலாமியத் தமிழரே



தமிழ்ப் பேசும் இசுலாமியரே,
உங்களுக்கு ஒரு தமிழ்ச் சகோதரனின் வணக்கம்.
சமீபத்தில் காசுமீரின் விடுதலைப் போராளியான திரு.யாசின் மலிக் அவர்களை மதிப்பிற்குரிய திரு.சீமான் அவர்கள் தமிழகத்தில் பேச அழைத்து வந்தார்.
எந்தவிதத்திலும் தவறேயில்லாத, வரலாற்றில் கரையாமல் நிலைத்து நிற்கப்போகிற அந்த நிகழ்வில் ஏவப்பட்ட வன்முறையும் அதன் தொடர்பான கடுமையான விமர்சனங்களும் அனல்பறக்கும் இந்நேரத்தில் நான் யோசிப்பது என்னவென்றால்,
ஏன் இசுலாமியர் மீது மட்டும் இத்தனை விமர்சனம்?
இந்தக்கேள்வி மனதை உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
தமிழ்த் தாயின் பிள்ளைகளில் இரு சமூகம் மட்டும் மற்றத் தமிழர்களிடமிருந்து தூரமாக விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ப் பார்ப்பனரும் தமிழ் இசுலாமியரும் மற்றத் தமிழரிடமிருத்து அந்நியப்பட்டு நிற்கின்றனர்.
என் அறிவுக்கு எட்டியவரை முடிவேயில்லாத ஒரு கேள்விக்கு இங்கே விடைதேட முயல்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் மருகால் தெருவில் ஒரு முனையில் தேவாலயமும் மறுமுனையில் பள்ளிவாசலும், ஒருபக்கத்தில் சுடலைமாடன் கோவிலும் மறுபக்கத்தில் இலங்கத்தம்மன் கோவிலும் முத்தாரம்மன் கோவிலும், நடுவில் சிறிய ராமர் கோவிலும் இருக்கும், மூன்று மதத்தினரும் அருகருகே வாழும் ஒரு தெருவில் பிறந்தவன் நான்.
சுவையான நோன்புக்கஞ்சி வாங்க சிறுவயதில் பள்ளிவாசலுக்கு சென்றிருக்கிறேன்; சிஎஸ்ஐ தேவாலயம் நடத்தும் பள்ளியில் படித்தபோது மழையில் பள்ளிக்கூரை ஒழுகும்போது தேவாலயத்தினுள் அடைக்கலமும் புகுந்துள்ளேன்.
தாத்தா அருள் வந்து சாமியாடும் தளவாய்மாடன் கோவிலுக்கு பால்குடமும் எடுத்திருக்கிறேன்.
பாங்கு ஓதும்போது அங்குமிங்கும் ஓடாமல் ஓரிடத்தில் நிற்கவும், தேவாலயத்தில் மேடைமீதேறி பைபிளின் வசனத்தை வாசிக்கவும் பயிற்றுவிக்கப்பட்டேன்;
என் உயிர்நண்பர்களில் என் பள்ளித்தோழர் ஒரு கிறித்தவரும் என் கல்லூரி நண்பர் ஒரு உருதுமுசுலீமும் அடக்கம்.
இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால் நான் எந்தவகையிலும் எந்த மதத்தையும் குறைகூற இதை எழுதவில்லை என்பதைத் தெரிவிக்கத்தான்;
தவிர நான் கடவுள் நம்பிக்கையை வெறுக்கும் தீவர நாத்திகன்;
என்னுடைய அனுபவத்திலிருந்து நான் அறிந்துகொண்டதைக் கூறுகிறேன். என்னதான் தமிழ்இசுலாமியர் மற்றத் தமிழரோடு தமிழராகக் கலந்து வாழ்ந்தாலும் அவர்கள் மிகவும் தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது;
அதுவும் ஒரு தீவிரத் தமிழ்த் தேசியவாதியாக தமிழ்இசுலாமியரை பார்க்கும்போது எனக்கு வேதனையாகவே உள்ளது.
அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தை புறக்கணித்து மெல்ல மெல்ல அராபியர்களாக மாற்றப்பட்டு வருவதாக எனக்குப் படுகிறது;
எனது தாய்பிறந்த ஊரான செங்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் இந்துத்துவ மனப்பான்மையும் வேரூன்றி வருவதைப் பார்க்கும்போது அச்சமே உண்டாகிறது;
வடயிந்தியாவில் உதவிப்பொறியாளராகப் பிழைப்பு நடத்திவரும் நான் இங்கு இந்து-முசுலீம் மதவெறி அதிகமாக மக்கள் மனதில் வேறூன்றி இருப்பதையும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் அத்தகைய மனப்பான்மை இல்லை என்பதையும் உணர்ந்துகொண்டவன்;
இருந்தாலும் தமிழ்இசுலாமியர் இவ்வளவு அந்நியமாகத் தெரியக் காரணம் என்னவென்று யோசித்து பார்த்தபோது என் மூளைக்கு எட்டும் காரணங்களைக் கூறுகிறேன்.
முதலில் இசுலாமியர் யாரும் தமது தாய்மொழியில் பெயர் வைத்துக்கொள்வதில்லை; அவர்கள் இசுலாமிய மகான்களின் பெயரை வைத்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை ஆனால் அவர்கள் சாதாரணப் பெயரை அரபியில் வைத்துக்கொண்டுள்ளனர்.
சாதிக் பாட்ஷா- உண்மை அரசன்
கமால்- திறமையானவன்
ஜமீலா - அழகி
சுல்தான்- மன்னன்
மேற்கண்ட பெயர்களுக்கும் இசுலாமிய மதத்திற்கும் இசுலாமிய தலைவருக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
பிறகு ஏன் சம்பந்தமே இல்லாத அராபியச் சொற்களில் பெயர்வைக்கவேண்டும்.
மற்ற மதத்தவரும் வேறுமொழிப்பெயர்களை வைக்கின்றனரே என்று கூறி மழுப்பவியலாது. கிறித்துவர்களும் அழகானத் தமிழில் பெயர்வைத்துள்ளனர்.
செல்லத்துரை, அருள்செல்வி, அடைக்கலம்,பேரின்பம் என்றெல்லாம் கூட பெயர் வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், இசுலாமியர் 99.99% அராபியப் பெயர்களை வைத்துள்ளனர்.இன்னொரு காரணம் தமது பிள்ளைகளை பள்ளிவாசலுக்கு அனுப்பி அரபி அல்லது உருது படிக்கவைப்பது, இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
தாய்மொழியைப் போலப் பற்றுடன் சொல்லிக் கொடுக்கக் காரணம் எனக்கு விளங்கவில்லை.
எங்கள் தெருவில் அரபி கற்றுக் கொடுக்கவே இரண்டு பெண்களை அழைத்துவந்து ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அதுதான் அரபிக் கல்லூரியாம்.அந்தப் பெண்களை கணவரைத் தவிர யாரும் பார்க்கக் கூடாதாம்.உலகில் வேகமாகப் பரவிவரும், அடிப்படையில் ஒரு சீர்திருத்த மார்க்கமான இசுலாம் இப்படி ஒரு கட்டாயக் கல்வியை வலியுறுத்தாது என்று நான் நம்புகிறேன்.
மூன்றாவது நெருடல் தமதுப் புனித நூலை பாதித்தமிழும் பாதி அரபியும் கலந்து மொழிபெயர்த்து வைத்திருப்பது.
குர்ஆன் மிகச்சிறந்தநூல் என்று பலரும் புகழ்வதைக் கேட்டு அதைப்படிக்க முயன்றேன்.
அதிலே பாதி அரபிச்சொற்களால் நிறைந்திருந்தது. படிக்கப் படிக்க எரிச்சலே மிஞ்சியது.கிறித்தவர்கள் தமது வேதநூலையே தமிழில் மொழிபெயர்த்து அதைக் கற்றுக் கொடுக்கும்போது இசுலாமியர் அதை ஏன் செய்யவில்லை?
மொழிபெயர்ப்பில் முழுப் பொருள் சிறிது மாறிவிடும் என்று சப்பைக்கட்டு கட்டக் கூடாது. தமிழில் அத்தகைய சொல்வளம் இல்லையா என்ன?
இதே காரணத்தை வைத்தே ஆரியத்தால் சமசுக்கிருதம் தமிழரின் சாபக்கேடாக தமிழர்தலையில் கட்டப்பட்டது.
கிறித்துவர் வேதநூலில் தனிநபர் பெயர்களைக்கூட தமிழ்ப்படுத்த முயன்றுள்ளனர்.
ஜீசஸ்- ஏசு
ஜான்- யோவான்
மேத்யூ- மத்தேயு
பிறகு ஏன் வேற்றுமொழிக் கலப்பேயில்லாத ஒரு புனிதநூலை உருவாக்க இயலாது ?
மற்றொன்று பெண்கள் மீதான அடக்குமுறை. பள்ளிவாசலுக்குப் போக பெண்களுக்கு முழுஉரிமை அளித்துள்ளது இசுலாம். ஆனால் எந்த பெண்ணும் பள்ளிவாசலுக்குப்போய் நான் பார்த்ததேயில்லை. தேவாலயத்திற்கு பெண் பிரசங்கிகளே மேடையேறி பிரச்சாரம் செய்யும்போது பள்ளிவாசலில் ஏனிப்படி?
தவிர சித்திரை மாதவெயிலில் பெண்கள் உடையணிந்து அதன்மேல் வெப்பத்தை ஈர்க்கும் புர்க்கா (அ) பர்தா அணிந்துகொண்டு செல்வதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. நாகரீகமான உடையணிந்தால் போதாதா?
நான்காவது தமது கலாச்சாரத்தை மறந்தது. வணக்கத்திற்குப் பதிலாக குதாஹாபிஸ் சொல்வது, திருமண சடங்குகள் ஈமச்சடங்குகளில் தனிமுறை,உறவுமுறைகளில் தனிவழக்கம் ,தாய்தந்தையை வேற்றுமொழியில் அழைப்பது என்று. ஆனாலும் தமிழ்இசுலாமியர் தனித்தன்மையான சில தமிழ்ச்சொற்களையும் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதையும் மறுக்கவியலாது.
ஐந்தாவது, தோற்றம்;
அராபியர் போல உடையணிவதும், மீசையில்லாதத் தாடியும், தோளில் துண்டு அணியும் முறை, சாரம்(கைலி) அணியும் முறை, என்று வேறுபட்டுத் தோற்றமளிப்பதை விரும்புகின்றனர்
எனக்கும் தெரிந்து மற்ற மக்கள் இசுலாமியரை அந்நியராக நினைக்கக் காரணம் இத்தகைய மாறுபட்டத் தோற்றமேயாகும்.
தமிழ் மக்கள் அத்தனை மதத்தையும் கைவிட்டுஇயற்கையை நன்றிதெரிவிக்கும் விதமாக வழிபடும் தமது பழமையான நெறிக்குத் திரும்பவேண்டும் என்பது என் நோக்கம்.
எனது சொந்தக்காரர்களில் வறுமையில் வாடிய சிலர் பணம் கொடுக்கப்பட்டு கிறித்தவராக்கப்பட்டதையும் , என் நண்பனின் நண்பன் குடும்பம் வறுமையில் இருந்தபோது அவனுக்கும் அவனது அண்ணனுக்கும் அரேபியாவில் வேலைவாங்கித் தந்து கைமாறாக மதம் மாறச் செய்ததையும் கண்ணால் கண்டவன்.
தேவாலயக் கோபுரமும் பள்ளிவாசல் கோபுரமும் போட்டிபோட்டுக் கொண்டு வளர்வதையும் அதில் காதைக்கிழிக்கும் ஒலிபெருக்கிகளில் பாடல்களும் பிரச்சாரங்களும் ஒலிபரப்பப்படுவதும்
தம்மை இந்துக்கள் என்று அப்பாவியாக நம்பிவரும் மற்றத் தமிழர்களிடம் கோவில்வரி, கொடைவரி, பூசைவரி என்று அரங்காவலர்களும் பூசாரிகளும் சுரண்டி வருவதையும், பண்டிகைகளின் பேரில் நடக்கும் கேலிக்கூத்துக்களையும் பார்த்துப் பார்த்து மனம் பொங்கி நாத்தினாக மாறினேன்.
மூடநம்பிக்கைகளும், புளுகுப் புராணங்களும், தேவையற்ற சடங்குகளும் ,பணவிரயமும், நேரவிரயமும் அத்தனை மதங்களிலும் நிரம்பியுள்ளன.
மற்ற மதத்தினரை விட ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இசுலாம் வலியுறுத்துகிறது.
அதற்காக தமிழ்இசுலாமியர் கொடுக்கும் விலை அதிகம்.
2008 ல் தென்காசியில் நடந்த இந்து இசுலாமிய மோதலும், மேலப்பாளையத்தில் அராபியமுறையிலான கொடூர தண்டனைகளும், இசுலாமியத் தெருக்களில் ஒபாமா வாயில் நாய் மூத்திரம் போவது போன்ற சுவரொட்டிகளும் எனக்கு எதையோ எச்சரிக்கை செய்வதாகத் தோன்றுகிறது.
நேர்மையான பதில்களை எதிர்பார்க்கிறேன்.
மதச்சண்டை வேண்டாம்.
நான் சொல்வதில் தவறெதுவும் இருந்தால் எடுத்துக் கூறவும்
நன்றி.

கீழ்க்காணும் தரவுகளை தமிழ்இசுலாமியருக்கா அளிக்கிறேன்.
உங்களைத் தமிழ்ப்பற்றில்லாதவர் என்று எவன் சொன்னாலும் பதிலடி கொடுக்க இவற்றை வைத்துக் கொள்ளுங்கள்

http://ta.m.wikipedia.org/wiki/சீதக்காதி

http://ta.m.wikipedia.org/wiki/தக்கலை_பீர்_முகம்மது_அப்பா

http://ta.m.wikipedia.org/wiki/இசுலாமியத்_தமிழ்_இலக்கியம்

பெருமகன் காயிதே மில்லத்
http://siragu.com/?p=3534

http://ta.m.wikipedia.org/wiki/தமிழகத்தில்_இசுலாமியர்_ஆட்சி

குணங்குடி மஸ்தான்
http://puthu.thinnai.com/?p=13162

பழந்தமிழ் கடலோடி வக்குசு
http://en.m.wikipedia.org/wiki/Tamil_bell

ஆஸ்கர் மேடையில் ரகுமான்
http://m.youtube.com/watch?gl=IN&hl=en-GB&client=mv-google&v=QdxS20XpBhQ

விடுதலைப்புலி இம்ரான்
http://eelamaravar.blogspot.com/2011/01/23.html?m=1

முல்லைப்பெரியாறு அரண் கே.எம்.அப்பாஸ்
http://makkalaatsi.blogspot.com/2011/12/19.html?m=1

தமிழக அரசியல் தலைவர் ஜவஹருல்லா
http://www.thinakkathir.com/?p=9127

ஈழத்திற்காக முதலில் தீயைத் தழுவி அணைத்துக் கொண்ட அப்துல் ரவூப்
http://ta.m.wikipedia.org/wiki/அப்துல்_ரவூப்

கவிக்கோ அப்துர் ரகுமான்
http://ta.m.wikipedia.org/wiki/அப்துல்_ரகுமான்



https://www.facebook.com/photo.php?fbid=336032163167110&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13