Friday 26 May 2017

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தி தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை வாழ்ந்தார்.
இந்த 21 ஆண்டுகளில் அவரை மகாத்மாவாக ஆக்கியது தமிழர்களே.

ஆம். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் குடியேற்றிய இந்தியர்களில் 90% தமிழர்களே.

அதாவது மலையாளிகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம்,
தெலுங்கருக்கு ஐதராபாத் சமஸ்தானம்,
கன்னடருக்கு மைசூர் சமஸ்தானம் என ஓரளவு ஆட்சியுரிமை பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன.
மற்ற இனங்களில் பாதிப்பேராவது ஆங்கிலேயரின் நேரடி அடக்குமுறையில் இருந்து தப்பிக்க இந்த சமஸ்தானங்கள் வழிசெய்தன.

ஆனால் தமிழர்கள் ஐரோப்பியர் கால்வைத்த காலத்திலிருந்தே போராடி கடைசியில் ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் நெடுங்காலம் நசுங்கினர்.

ஆங்கிலேயர்கள் தமிழர்களை உலகம் முழுக்க அடிமாடுகளாக ஓட்டிச்சென்று உழைக்கவைத்தனர்.

இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது வெளிநாடுகளில் நிதி திரட்டிய ஆங்கிலேயர் அந்த ரசீதுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமே அச்சடித்தனர்.

அப்படி இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.
தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.
சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.
மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.
பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.
ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.
ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.
ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.
கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.

அதாவது இலங்கைக்கு அடுத்ததாக தமிழர்கள் சென்றது தென்னாப்பிரிக்கா.

அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களை வேலைவாங்க அதிகாரிகளாக மற்ற இந்தியர்களும் ஒரு 10% அவர்களுடன் இருந்தனர்.

ஆனால் வெள்ளைக்காரர்கள் அனைவரையும் கீழ்த்தரமாகவே நடத்தினர்.
அதாவது தென்னாப்பிரிக்கா நிறவெறியின் உச்சசூட்டில் இன்றுபோல அன்றும் இருந்தது.

காந்தி வரும் முன்பே தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அங்கே போராடத் தொடங்கியிருந்தனர்.

ஜோசப் ராயப்பன் என்ற தமிழர் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து படித்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
மக்களுக்காகப் போராடியவர்.
காந்திக்கு முன்னுதாரணம் இவரே.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1893 இல் தென்னாப்பிரிக்கா வந்து அப்துல்லா தாதா கம்பெனியின் வழக்கை நடத்தி ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பும் வேளை,
பாலசுந்தரம் என்ற தமிழன் வின்சென்ட் லாசரஸ் என்ற இளம் வழக்கறிஞருடன் காந்தியிடம் வந்தான்.
தன் வெள்ளைக்கார முதலாளி தன்னை அடித்து உதைத்த காயத்துடன் வந்து நின்றான்.
தன் உரிமைக்காக வழக்கு தொடுத்து வாதாடுமாறு காந்தியைக் கேட்டான்.

ஏற்கனவே வெள்ளையர்களிடம் பலமுறை அவமானப்பட்ட காந்தி இந்த வழக்கை நடத்த முடிவெடுத்தார்.

வழக்கை நடத்தி தனது வாதத்திறமையால் அந்த வெள்ளைக்கார முதலாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார் காந்தி.
வின்சென்ட் அவரிடமே உதவியாளராக சேர்ந்தார்.
தமிழை காந்திக்கு மொழிபெயர்த்து கூறியது இவரே.

மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தமிழ்த் தொழிலாளர்களால் ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது பற்றி பேச்சு எழுந்தது.
அதாவது கரும்பு பயிரிட இந்தியர்களை தென்னாப்பிரிக்கா அழைத்துவரும்போது ஆங்கில அரசாங்கம்,
ஐந்தாண்டு உழைத்தால் நிலம் சொந்தமாகும் என்றும்
குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டி அழைத்து வந்தது.
ஆனால் பிறகு குடியுரிமையை மறுத்ததோடு தலைக்கு 25 பவுன் கட்டவேண்டும் என்றும் சட்டம் போட்டது.
காந்தி இந்த பிரச்சனைக்காப் போராட தமிழர்கள் வலியுறுத்தினர்.
காந்தி மறுபடியும் ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டார்.

1894 ஆகஸ்ட் 22 அன்று 'நேட்டால் காங்கிரஸ்' காந்தியால் தொடங்கப்பட்டு இந்தியர்கள் ஒருங்கிணைய முதலடி எடுத்துவைத்தார்.
இதில் அப்துல்லா ஹாஜி என்பவர் தலைவர்.
துணைத் தலைவர்களாக 23 பேரில் 4 தமிழர்கள் இருந்தனர்.
(ஆனால் தொண்டர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்!)

1896 ல் ஆதரவு இந்தியா வந்த காந்தி இது தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பிரச்சனை என்பதால் தமிழகத்தில் 14 நாட்கள் தங்கி ஆதரவு திரட்டினார்.

அப்போது இந்தியாவில் யாருக்கும் காந்தியைத் தெரியாது.
ஆனால் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது.
ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர், சர் ராமசாமி முதலியார், பரமேஸ்வரன் பிள்ளை, பாஷ்யன் ஐயங்கார் ஆகியோர் காந்தியை வரவேற்று சென்னையில் தங்கும் வசதிகள் செய்துகொடுத்தனர்.
ராஜா சேதுபதி தந்தி அனுப்பினார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.
ஹிந்து, மெட்ராஸ் ஸ்டான்டர்ட், மெட்ராஸ் மெயில் ஆகிய தமிழக பத்திரிக்கைகளே முதன்முதலாக காந்தி பற்றி அப்போது எழுதின.

1903ல் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற ஒரு பத்திரிக்கையை காந்தி தொடங்கினார்.
இதற்கு அச்சுத் தொழிலாளி சாம் என்ற கோவிந்தசாமி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.

1904ல் காந்தி டர்பன் நகரில் பீனிக்ஸ் ஆசிரம் அமைத்தார்.

1906 ல் ஆங்கில நிறவெறியின் அடுத்த அடியாக இந்தியர் அனைவரும் கட்டாய கைரேகை அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் போடப்பட்டது (அன்றைய ஆதார்).
இந்த சட்டத்திற்கு எதிராக காந்தி போராட முடிவெடுத்து நிதி திரட்டியபோது அம்மாக்கண்ணு, திருமதி.பக்கிரிசாமி ஆகிய இரண்டு தமிழ்ப்பெண்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர்.

பெரிய போராட்டம் தொடங்கியது.
ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.
ஆங்கில அரசு அவர்களை சித்திரவதை செய்தது.
சித்திரவதையால் சிறையில் உயிர்விட்ட முதல் மாவீரனும் ஒரு தமிழனே.
ஆம். நாகப்பன் என்ற அந்த மாவீரன் தனது 17 வது வயதில் 1909 ஜூலை 6 அன்று கொடுமைகளால் உடல் நலிந்து குளிரில் போடப்பட்டு நிமோனியா குளிர்க்காய்ச்சல் வந்து இறந்தான்.
தென்னாப்பிரிக்காவில் பெரிய போராட்டம் வெடித்தது.
இங்கிலாந்து வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது.

இரண்டாவது மாவீரர் உரிமைக்காகப் போராடியதால் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி.
நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு 16.10.1910 ல் கப்பலில் இறந்தார்.

அதன்பிறகு நடந்த ஒரு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி செல்வன், சூசை, பச்சையப்பன் என மூன்று தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வீரமரணம் அடைந்த முதல் பெண்போராளி தில்லையாடி வள்ளியம்மை.
சிறையில் நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு தூக்கிவரப்பெற்று 2.2.1914 அன்று இறந்தார்.
அப்போது அவருக்கு வயது 16.

மேற்கண்ட அனைவரும் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த தமிழர்கள் ஆவர்.

கிறித்துவ திருமணங்கள் மட்டுமே செல்லும் என்று அடுத்த அடி விழுந்தது.
இப்போது பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஜோகனஸ்பெர்க் இல் இருந்து நியூகேசில் வரை ஊர்வலம் சென்றனர்.
காந்தியின் மனைவி பங்கேற்ற முதல் போராட்டமான இதில் பங்குபெற்ற 16 பெண்களில் 8 பேர் தமிழர்கள்.

1914 ல் குடியுரிமை பெற போராட்டம் நடந்தபோது காந்தி உட்பட அனைவருக்கும் உணவு உறைவிடம் தந்து உபசரித்து அதனால் அரசினால் துன்புறுத்தப்பட்டவர் லாசரஸ் எனும் தமிழர்.

1916ல் கோச்ரப் கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவினார்.
அதில் குடியேறிய 25 பேரில் 11 பேர் தமிழர்கள்!

லைசன்ஸ் வாங்காமல் கடை நடத்தும் போராட்டம் நடத்தியபோது காந்தியின் மகனோடு சேர்த்து 6 பேர்  கைதாயினர்.
அதில் 4 பேர் தமிழர்கள்.

ஒரு ஜெர்மானிய முதலாளியிடம் பேசி வெள்ளை முதலாளிகளிடம் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அவர் பண்ணையில் வேலை வழங்க ஏற்பாடு செய்து அதை ஒரு புகலிடமாகவே உருவாக்கிய நால்வரில் இருவர் தமிழர்.

சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோது குண்டு வாங்கி இறந்த செல்வனின் மனைவி மற்றும் இரு மகன்களை தரங்கம்பாடியில் இருந்து அழைத்துவந்து தங்கவைத்தார்.

தமிழர் அல்லாதோரில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் உண்டு.
அவர் தம்பி நாயுடு.
8 முறை சிறை சென்றவர்.
அவரது குடும்பமே காந்தியின் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டது.
ஆனால் வி.ர.செட்டியார் போன்ற இவரை மிஞ்சிய தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.
இவர் 4 முறை சென்றவர்.
சொத்துகள் அனைத்தையும் இழந்தவர்.
செட்டியாரின் மகனோ 7 முறை சிறைசென்றவர்.
வீடே ஜப்தி செய்யப்பட்ட முனுசாமி,
காந்தியின் இயக்கத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்து (நெல்சன் மண்டேலா பின்னாட்களில் அடைக்கப்பட்ட சிறையான) டிப்குளுப் சிறையில் அடைக்கப்பட்ட துரைசாமி,
மாணவராக இருந்தபோதே போராடி நாடுகடத்தப்பட்டு சிறையில் போடப்பட்ட மாணிக்கம்பிள்ளை,
ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்ற ஆர்.எல்.சி பிள்ளை, டி.ஏ. சுப்பிரமணிய ஆசாரி என பல தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.

அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியின் பக்கம் நின்று சிறைசென்ற 88 தமிழர்களையும்
நாடுகடத்தப்பட்ட 28 தமிழர்களையும் பட்டியலிட்டுள்ளார்.
வேறு எந்த இனமும் இதில் பாதி கூட காந்திக்காக உழைத்ததில்லை.

1919 ல் ரௌலட் சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்ததும்
1921 ல் மதுரையில் ஆடம்பர ஆடை துறந்து அரைநிர்வாணம் ஆனது என பல முக்கிய முடிவுகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டன.

மொழிவாரியாக காங்கிரஸ் கிளைகளை காந்தி பிரித்தபோது அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதும் ஒரு தமிழரே.
இதுவே மொழிவழி உரிமையின் முதல் நடவடிக்கை ஆகும்.

ஆக காந்தியை முன்னிறுத்தி பின்னால் நின்று நகர்த்தியது தமிழர்களே.

படம்: காந்தி தமிழில் எழுதிய கடிதம்

Thursday 25 May 2017

தனிநாடே சொர்க்கம்

தனிநாடே சொர்க்கம்

குண்டுகள் விழுந்து மண் மலடானாலும் சரி!

விடுதலைப்போரில் மண்ணுக்கு மேல் ஒன்றுமில்லாது இடிந்துபோனாலும் சரி!

விடுதலை கிடைத்த மறுநொடி அணுகுண்டுகள் விழுந்து நாடே அழிந்தாலும் சரி!

ஒரு நொடியேனும் சுதந்திரத் தமிழர்நாட்டில் வாழ்ந்திடவேண்டும்.

மறுநொடி உலகமே அழிந்தாலும் சரி.

  அடிமைத் தமிழனாகவே செத்துமட்டும் போய்விடக்கூடாது.

அதன்பிறகு சொர்க்கமே கிடைத்தாலும் சரி.

Friday 19 May 2017

தென் கேரளாவில் இருக்கும் தமிழர் பகுதிகள்

தென் கேரளாவில் இருக்கும் தமிழர் பகுதிகள்

திருவனந்தபுரம்
செங்கோட்டை பாதி
தேவிகுளம்

Census of India 1931 volume 26 Travancore part 1 report page 322.

நன்றி: Gabriel Raja

Thursday 18 May 2017

ஹிந்துத்வா

ஹிந்துத்வா

ஹந்தியாவும்,
அதன் அடிப்படையான ஹிந்தி மொழியும்
அதன் கொள்கையான ஹிந்துத்வாவும்

ஒரு ஹிந்திய இசுலாமியனின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து உரிமையும் சலுகையையும் வழங்கினாலும் வழங்குமே தவிர

ஒரு தமிழனுக்கு ஒருபோதும் வழங்காது.

அவன் எந்த மதத்து தமிழன் ஆனாலும் சரி.

முடிந்தது ஒரு முன்னோட்டம்தான்

முடிந்தது ஒரு முன்னோட்டம்தான்

8 கோடி உலகத் தமிழர்கள் இனப்பற்று கொள்ள
5 லட்சம் ஈழத்தமிழர் உயிர்ப்பலி பெரிய விலை இல்லை.

இதன் பிறகு தமிழர்நாடு விடுதலைப் போருக்கு மேலும் 1 கோடி உயிர்ப்பலி நாம் விலையாகக் கொடுக்கவேண்டி உள்ளது.
அதுவும் இந்தத் தலைமுறையில்.

நமக்கு வேறுவழியே இல்லை.

தயாராக இருங்கள்.

Monday 15 May 2017

தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் காயிதே மில்லத்

பெருமகனார் காயிதே மில்லத் 24.12.1955 அன்று மக்களவையில் ஆற்றிய உரை,

"நான் ஒரு தமிழன்.
எனது தாய்மொழி தமிழ்.
தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை.
அதேபோல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை.

தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை.
அப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.

ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது.
தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும்,
வந்துபோகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
கடந்த தேர்தலின்போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்துபோகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி.
தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது.
தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள்.
எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்.
அதுவே நியாயம்"

இத்தனைக்கும் அவர் அப்போது 'அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' தலைவர்.
அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இசுலாமியர்களின் தலைவர்.
 
இதையெல்லாம் மீறி தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும் குரல்கொடுத்த தூய தமிழன்தான் காயிதே மில்லத் எனும் முகமது இஸ்மாயில்.

அதேபோல "இந்தி தேசியமொழி என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்கவேண்டியதுதானே?" என்று கூறியவர் அண்ணாதுரை கிடையாது காயிதே மில்லத் அவர்கள்தான்.

Saturday 13 May 2017

பாலக்காட்டு சித்தூர் தமிழர்கள்

1931 கொச்சி மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆவணத்தில் உள்ள மொழி வரைபடம்.

சித்தூர் (பாலக்காடு அருகே உள்ளது) மலையாளிகளுக்கு ஏறத்தாழ இணையாக தமிழர்கள் இருப்பது பதிவாகியுள்ளது.

இது மேலும் அறிய,
search பாலக்காட்டுச் சித்தூரில் தமிழ்த் திருவிழா

Friday 12 May 2017

பழங்காலத் தமிழகம் நாடுகள் மற்றும் சிற்றரசுகள் -2

பழங்காலத் தமிழகம்
நாடுகள் மற்றும் சிற்றரசுகள் -2
(எளிமையான வரைபடம்)

இடமிருந்து வலமாக வரிவரியாகப் படிப்பது போல

கொங்காண நாடு
பாழி (மல்லி நாடு)
கடம்ப நாடு
இருங்கோ நாடு (அருவா நாடு)
வெளிமா நாடு
வொளிமா நாடு
இடைச்சுரம்
பாயல நாடு
நல்லமலை
வெள்ளிமலை
கனிமலை
வேளாவி நாடு (வேங்கி)

பாயல் (சேர பாயல் மலை)
மேகுட்டுவம் (குட்டுவ நாடு)
குடநாடு
எருமையூர்
விச்சிகோ நாடு
குதிரைமலை
புங்கிநாடு
வேங்கட நாடு
புல்லி நாடு

சேரர்
தோட்டிமலை
தகடூர் (அதிகன் நாடு)
வாணர் நாடு
ஒய்மான் நாடு
ஆமூர் (முக்காவல் நாடு)
முழம்புல நாடு

பறம்புமலை
ஆழுந்தூர்
மிலாடு (முள்ளூர் நாடு)
கொல்லிமலை நாடு
பழுவூர்
தோன்றிமலை
புண்நாடு
தொண்டை நாடு
முதியமலை
நடுநாடு
கண்கெழு நாடு

கரூவூர் நாடு
பாண்டிய நாடு
காணப்பேரெழில்
(எவ்வியின்) நீடூர் மிழலை
யாழ் நாடு
மணிபல்லவம்
நாகர்நாடு

மலை நாடு
கோடைமலை
பொதிகை (ஆய் நாடு)
கறநாடு
காந்தள்
நாஞ்சில் நாடு
இயக்கர்கண்
ஈழம்
வேட்டரைய நாடு

சிங்க ஈழம்
கோனார்மலை நாடு

(ஆங்கிலத்தில் இருந்து எடுத்ததாலும் தெளிவின்மையாலும் சில தவறுகள் இருக்கலாம்)

நன்றி: Senthil Kumaras

Thursday 11 May 2017

பழங்காலத் தமிழகம் - நாடுகள் மற்றும் சிற்றரசுகள்

பழங்காலத் தமிழகம்
நாடுகள் மற்றும் சிற்றரசுகள்

இடமிருந்து வலமாக (வரிவரியாகப் படிப்பது போல)

கொங்கணம்
கோசர்
வடுகர்
(கிருஷ்ணா அதாவது கரும்பெண்ணாறு ஆற்றங்கரையை ஒட்டிய இம்மூன்றும் மொழிபெயர் தேயம்)
கனிமலை
வேங்கி

கடம்பர்
பல்குன்றநாடு

இடைச்சுரம்

சோழபாயலநாடு 

நல்லமலை
வெள்ளிமலை
சோழி வேளாவிநாடு
புங்கி

சேரநாடு (குட்டுவம்)
பாயல்
சேரப்பாயல்
இருங்கோ நாடு
சோழிகற்காநாடு
புல்லி
சோழ வாணர் நாடு
வேங்கடம்
பொன்தப்பி
?
?

சேரநாடு
?
மல்லி
குடநாடு
இடிகண்மா
விழிமா நாடு
அதிகன் நாடு
ஒய்மாநாடு
தண்மா ?
அருவா நாடு
தொண்டை நாடு
?
?

தோட்டிமலை
எருமைநாடு
கதிரைமலை
மிலாடு
பார் ?
?
நடுநாடு

(இரும்பொறை) சேரநாடு
அன்னிட்டை
வையாவி
?
பாண்டியநாடு
சோழநாடு
நாகநாடு

விளவங்கோடு
?
?
பொதிகை
காந்த்?
நாஞ்சில்
ம??ல்
??
சிங்கேழம்
? கின்னரை
???
பாதுண்ட ???
இரமனகம் (இயக்கர்)
வெல்வெட்டுவம்

ஆங்கிலத்தில் எழுதியுள்ளதாலும் சில சிறிய பகுதிகளின் பெயர்கள் தெளிவில்லாது காணப்படுவதாலும் தவறுகள் இருக்கலாம்.

நன்றி: Ancient tamil kinglines (blogspot)

Tuesday 9 May 2017

நீட் ஏன்?

நீட் ஏன்?

இந்திய ஒன்றியத்தின்

டெல்லி - அரசியல் தலைநகர் 

மும்பை - பொருளாதாரத் தலைநகர்

சென்னை - மருத்துவத் தலைநகராக அறியப்படுகின்றன.

அதாவது இந்தியாவிலேயே சென்னையில்தான் நவீன மருத்துவமனையும்
திறமையான மருத்துவர்களும் இருக்கின்றனர்.

செலவும் குறைவு என்பதால் பல வெளிநாட்டினர் மருத்துவம் பார்க்க சென்னைக்கு வருகின்றனர்.
இந்தியாவிற்கு மருத்துவம் பார்க்கவருவோரில் முக்கால்வாசிப்பேர் சென்னைக்குத்தான் வருகிறார்கள்.

இங்கே வரும் வெளிநாட்டவர் சுற்றிப்பார்க்கவும் செய்வர்.
அவர்களுக்கு தமிழகத்தின் கோயில்கள் மிகவும் பிடித்து தமிழகத்தின் புகழ் உலகம் முழுவதும் பரவி சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகின்றனர்.
இந்தியாவில் தமிழகம் சுற்றுலாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதையெல்லாம் பார்த்து வயிறெரிந்த ஹிந்தியர்கள் இதற்கு அடிப்படையான தமிழர்களின் மருத்துவ அறிவுக்கு வைத்த ஆப்புதான் நீட்.

மத்திய அரசின் பாடத்திட்டமான CBSC படித்தோர் தமிழகத்தில் 1.6% மட்டுமே.

இந்த பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்வி கேட்போம் என்கிறது மத்திய அரசு.

இதற்கு உறுதுணையாக இணைந்து வழக்கை வாதாடி வென்றது தெலுங்கர் நடத்தும் சங்கல்ப் அமைப்பு.

தமிழகத்தின் 98.4% மாணவர்களின் மருத்துவக் கனவு கனவாகவே ஆகிவிட்டது.

இது மத்திய ஹிந்தி அரசின் மாநிலங்களின் உரிமை மீதான தாக்குதல்.
இது தமிழகத்தைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது.

ஆனால் திராவிடம் ஊட்டிய பார்ப்பனவெறுப்பு விசம் யாரையும் சரியான திசையில் சிந்திக்கவிடவில்லை.

1930ல் சமஸ்கிருதம் படித்தால்தான் டாக்டர் ஆகலாம்.
அதைத்தான் இப்படி மீண்டும் கொண்டுவந்துவிட்டான் பார்ப்பான்.
செயினை கழட்ட சொன்னீர்களே பூணூலை ஏன் கழட்ட சொல்லவில்லை?
என்றெல்லாம் முகநூல் பதிவர்கள் விளாசித் தள்ளுகிறார்கள்.

இது தமிழக அரசின் பாடத்திட்டத்தை ஒழித்து ஹிந்தி அரசின் பாடத்திட்டத்தைக் கொண்டுவர நடக்கும் நவீன மொழித்திணிப்பு.
தமிழகத்தின் மீதான பிற இனத்தாரின் எரிச்சல்.

இது தெரியாமல் கண்ணைமூடிக்கொண்டு பார்ப்பனரை எதிர்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது முட்டாள்த்தனம் மட்டுமல்லாது திராவிடத்தின் வெற்றி எனவும் கூறலாம்.

உண்மையான எதிரியை மறைத்து இல்லாத ஒன்றை நோக்கி நம்மை திசைதிருப்ப உருவாக்கப்பட்டதே திராவிடம்.

சரி. பார்ப்பன வெறுப்பாளர்கள் எக்கேடும் கெட்டு ஒழியுங்கள்.

மாணவர்களே!
இந்த ஆண்டு நீட் நடந்து ஆடை களைந்து அவமதிப்பு வரை உங்களுக்கு நடந்தாயிற்று.

அடுத்த ஆண்டு இரண்டு மாதம் முன்பே திட்டமிட்டு பெரிய போராட்டம் நடத்துங்கள்.
இந்த முறை நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதை திட்டமிடுங்கள்.
அடுத்த தலைமுறை மாணவர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள்.
பொதுத்தேர்வை மொத்தமாகப் புறக்கணிப்பது சரியான பதிலடியாக இருக்கும்.

இது மருத்துவர் ஆக நினைக்கும் 'நன்றாகப் படிக்கும் மாணவர்களின்' பிரச்சனை மட்டும் இல்லை.
இன்று அவர்களுக்கு நடந்தது நாளை ஒவ்வொரு மேற்படிப்பிற்கும் நடக்கும்.

ஏற்கனவே எல்லா அரசுவேலைகளிலும் வடயிந்தியனை நிரப்பிவருகிறார்கள்.
கல்வியையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் பொதுமக்கள் போராட்டத்திற்காகக் களத்தில் இறங்கினீர்கள்.
உங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் கட்டாயம் வருவார்கள். 
அவர்களுக்கும் தரமான மருத்துவம் வேண்டும்தானே?!

ஆனால் போராட்டம் மட்டுமே இறுதித்தீர்வு கிடையாது.
ஹிந்தியாவோடு நாம் இணைந்திருக்கும் வரை தமிழன் ஒருவன் கூட நிம்மதியாக வாழமுடியாது என்பது உறுதி.
நீட் போனால் இன்னொன்று அது போனால் மற்றொன்று என கொண்டுவந்துகொண்டே இருப்பார்கள்.
நாம் போராடி போராடி சாகவேண்டியதுதான்.

தமிழர்நாடு விடுதலையே இறுதியான தீர்வு.

இளைய தலைமுறை மாணவர்களே!
இதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

Monday 8 May 2017

பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே!

பெங்களூர், மைசூர், கோலார் தமிழர் பூர்வீக மண்ணே

படத்தில் 1901 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பு விபரம் காட்டப்பட்டுள்ளது.

இதில் மைசூர் நகரம், பெங்களூர் நகரம், பெங்களூர் மாவட்டம்,   கோலார் தங்கவயல் நகரம், கோலார் மாவட்டம், ஆகிய பகுதிகளில் தமிழர் குடியிருப்புகளே (Residence) கன்னடரை விட அதிகம்.

ஆனால் பிறகு குடிவந்த வந்தேறிகளால் மக்கட்தொகையில் தமிழர்கள் பின்தங்கிவிட்டனர்.
ஆனால் நிலம் தமிழர்கள் கையில்தான் இருந்தது.

அட்டவணையில் உள்ள விபரம் (பத்தாயிரத்தால் வகுக்கப்பட்டது)
கீழே,

மைசூர் நகரம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 371 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 97 ×10,000

பெங்களூர் நகரம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 841 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 54 ×10,000

பெங்களூர் மாவட்டம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 2365 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 1238 ×10,000

கோலார் தங்கவயல் (நகரம்) :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 1252 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 18 ×10,000

கோலார் மாவட்டம் :-
தமிழ் குடிமக்கள் எண்ணிக்கை = 2341 ×10,000
கன்னட குடிமக்கள் எண்ணிக்கை = 146 ×10,000

மேற்கண்ட பகுதிகள் வரைபடத்தில் பழுப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.

சான்று : Census of india 1901,
Volume 24, Part 1. (Page 446)
_ T. Ananda Row.

கீழே ஒட்டுமொத்த மக்கட்தொகை அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கோலார் தங்கவயலில் மட்டுமே தமிழர் அதிகம் உள்ளனர்.

(கன்னடர், தமிழர் தவிர பிற இனங்களுக்கு இந்த பகுதியில் உரிமை இல்லை என்பதால் அவர்களை ஒப்பிடவில்லை)

---------------

17.09.2017

தவறுக்கு வருந்துகிறேன்.

மேற்கண்ட தரவுகள் படி வரைந்த வரைபடத்தில் பிழை உள்ளது.

பெங்களூர் நகரம் மற்றும் மாவட்டம் குடியிருப்புகள் தமிழர் கையில் இருந்தது. 

மைசூர் நகரம் மட்டுமே தமிழர் கையில் இருந்தது. மைசூர் மாவட்ட நிலம் நம் கைவிட்டு போயிருந்தது.

படத்தில் பெங்களூர் மாவட்டத்தை விட்டுவிட்டு மைசூர் மாவட்டத்தை தமிழர் கையிலிருந்ததாக தவறாக வரைந்துவிட்டேன்.

விரிவாக அறிய 

search பெங்களூர், மைசூர், கோலார் சரியான வரைபடம் (தவறுக்கு வருத்தம்) 

Sunday 7 May 2017

பாலக்காட்டு சித்தூரில் தமிழ்த் திருவிழா

பாலக்காட்டு சித்தூரில் தமிழ்த் திருவிழா

பாலக்காட்டில் பேசப்படுவது தமிழே.
அது மலையாளத் தொனியில் இருக்குமே ஒழிய அது சோழநாட்டுத் தமிழே ஆகும்.

உண்மையான (தமிழ்ப்)பார்ப்பனர் தஞ்சையில் இருந்து தொடர்ச்சியாக பாலக்காடு வரை கிழக்கு மேற்காக இருந்தனர். இருக்கின்றனர்.
இந்த வட்டார வழக்குதான் பார்ப்பனத் தமிழ்.

பிறகு கற்கோயில்கள் நாடு முழுவதும் கட்டப்பட்டன.
பார்ப்பனர்களும் தமிழ்மண் முழுவதும் பரவினர்.

பெருங்கோயில்கள் கட்டப்பட்டபோது பிராமணர்கள் வேலைவாய்ப்பு கிடைப்பதால் குடியேறினர்.

பிறகு தமிழனல்லாத குலோத்துங்கன் காலத்தில் பிராமணர் குடியேற்றம் பெருமளவில் நடத்தப்பட்டு பார்ப்பனர்களை விட பிராமணர் அதிகமாயினர்.

அதன்பிறகு வேற்றின ஆட்சி பார்ப்பனர்களை ஓரங்கட்டி பிராமணர்களை எழுச்சிபெறச் செய்தது.

பாலக்காட்டுப் பார்ப்பனர்கள் சோழிய (முன்குடுமி) பார்ப்பனரே ஆவர்.

பாலக்காடு தமிழ்ப்பகுதியாயிருக்க தமிழை மறக்காத இவர்கள் முக்கிய காரணம்.

பாலக்காட்டில் இன்றும் நடத்தப்படும் இராமாயண தொல்பாவைக் கூத்து கம்பராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆயிரம் (தமிழ்ப்)பாடல்களைக் கொண்டது.

பாலக்காடு மாவட்டம் நல்லேபள்ளி நகரத்தில் சுணங்கியம்மன் கோவில் ஆலயவிழாவில் பாடப்படும் ஒரு தமிழ்ப்பாட்டு இராசேந்திரன் காலத்தில் பாலக்காட்டில் குடியேறிய தமிழர்கள் பற்றி கூறுகிறது.
அதாவது ஏற்கனவே இருந்த தமிழர்கள் மத்தியில் தமிழர்கள் குடியேறினர். (பார்க்க: படம்)

இதே பாலக்காடு மாவட்டத்தில் தமிழக எல்லைக்கு அருகே உள்ள சித்தூரில் மாசி மாதம் ஒரு விழா கொண்டாடடப் படுகிறது.
அதன் பெயர் கொங்கன்படை.

இது கி.பி. 1592 ல் கொங்கு நாடு வழியாக நாயக்கர் படை சித்தூரைத் தாக்கிய போது அப்படையை எதிர்த்து போரிட்டு வென்ற நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகை.

இதன் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் அக்காலம் வரை தூய தமிழ்ப் பகுதியாக பாலக்காடு மாவட்டம் இருந்ததற்கான சான்றுகளைக் கொண்டுள்ளது.

மேற்கண்ட போருக்குப் பிறகு சித்தூர் மட்டும் கொச்சி அரசு செய்த உதவிக்கு நன்றிக்கடனாக பாலக்காட்டு அரசனால் கொடுக்கப்பட்டு கொச்சி அரசுக்கு வெளியே சிறு துண்டாக கொச்சியின் பகுதியாக 1947 வரை இருந்தது.

போருக்குப்பிறகு மலையாளக் குடியேற்றம் நடந்துள்ளது.
அதன்பிறகு தெலுங்கரும் கன்னடரும் குடியேறினர்.
பிறகு மராத்தியரும் குடியேறினர்.
பிறகு குடகு ஜைனரும் துளு பிராமணரும் குடியேறினர்.

முதலில் தமிழ்ப் பகுதியாக இருந்த பாலக்காடு தற்போது பல்வேறு இனங்கள் வாழும் பகுதியாகிவிட்டது.

தமிழர்களின் பழமையான துறைமுகங்களான தொண்டி,  முசிறி ஆகியவற்றில் வந்திறங்கும் வணிகப் பொருட்கள் பாலக்காடு கணவாய் வழியாக தமிழகம் முழுவதும் கொண்டுசெல்லப்பட்டன.
அதாவது நில அமைப்பாலும் வணிக கட்டமைப்பாலும் பாலக்காடு தமிழகத்துடன் தொடர்பில் எப்போதும் இருந்தது. இருக்கிறது.

1500களில் தமிழகம் முழுவதும் வேற்றின ஆட்சியில் இருந்தது.
அப்போது மதுரை நாயக்கரின் கட்டுப்பாட்டில் கொங்கு பகுதியைக் கவனித்து வந்தவர் (இளையங்குடி) வீரப்ப நாயக்கர் என்பவர்.
இவரது அதிகாரி இரணியமூர்த்தி பிள்ளை.
இவருக்கு வந்த வணிகப்பொருட்களை சித்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள வாளையாற்றுக் கானலில் சிலர் கொள்ளையடித்தனர்.

மதுரை நாயக்க மன்னர் சித்தூர்க்காரர்கள்தான் இந்த கொள்ளையை நடத்தியதாக தவறாக நினைத்து
கொள்ளையர்களை ஒப்படைக்காவிட்டால் போர் தொடுப்போம் என்று பாலக்காட்டை ஆண்ட சேகரிவர்மருக்கு ஓலை அனுப்புகிறார்.
நாயக்க மன்னர் அனுப்பிய எச்சரிக்கை ஓலை தமிழில் எழுதியிருந்தது.
இதை ஓலைமுறி என்று அழைக்கின்றனர்.
சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் விரவி கொச்சையான தமிழில் இது எழுதப்பட்டுள்ளது.

சேகரிவர்மர் ஆட்சியில் பாதைக் காவலராக இருந்தோர் சம்பத்து மன்றாடியார்கள்.
இவர்களுக்கும் ஓலையின் மற்றொரு படிவம் அரத்தி என்ற பறையர் பெண் மூலம் கொடுக்கப்பட்டது.
உடனே சித்தூரின் நூறுவீட்டு நாயகர்களுடன் கலந்துரையாடிய மன்றாடியார்கள் சேகரிவர்மருக்கு தகவல் அனுப்பினர்.

பதில் அனுப்ப ஒரு வாரக் கெடு கொடுக்கப்பட்டிருந்தது.
சேகரிவர்மர் படையோ மிகவும் சிறியது.
அவர் உடனே கொச்சி அரசர் கேசரிராமவர்மனிடம் உதவி கேட்டு ஓலை அனுப்பினார்.
ஆனால் பதில் எதுவும் வரவில்லை.

கெடு முடிந்ததும் வீரப்ப நாயக்கர் படைகள் மணலியாற்று வடகரையில் மணலித்துறை என்ற இடத்திற்கு வந்து கூடாரம் அடித்தன.
இருட்டிய பிறகு மதுரை படை ஊருக்குள் நுழைந்தது.

எருமை மீது அமர்ந்தபடி ஊருக்குள் நுழைந்த நாயக்க மன்னனை அப்பகுதி நாட்டுப்பாடல் கீழ்க்கண்டவாறு (தமிழில்) விவரிக்கிறது,

வெத்திலை போட்டு இருவழியா ஆறொழுகும்
வெத்திலைச் சாறு எச்சில்பட்ட செம்பொன்தாடி
பெரும்தலையும் போண்டிவயிறு குறுங்கழுத்தும்
செங்கடையும் செகசெகத்த செம்மீன்பல்லும்

சேகரிவர்மரின் சிறியபடை நாயக்க படையை எதிர்க்கமுடியாமல் சிறிதுநேரத்திலேயே சிதறியது.

எதிர்பாராத விதமாக கொச்சி அரசர் அனுப்பிய உதவிப்படை அங்கு வந்து சேர்ந்தது.
இதை எதிர்பார்க்காத நாயக்கபடைகள் நிலைகுலைந்தன.
படையை வழிநடத்திய ஊத்துக்குளி பாளையக்காரர் காலிங்கராயர் கொல்லப்பட்டார்.
நாயக்கப்படை பின்வாங்கி ஓடியது.

காலிங்கராயர் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு சித்தூர் அம்மனுக்கு கோவில் கட்டினர்.
ஊத்துக்குளி பாளையப்பட்டு வம்சாவழிகள் இந்த சித்தூர் பகவதிக்கு திருப்பணி செய்துள்ளனர்.
இந்த பகவதி முதலில் மூகாம்பிகை என்றே அறியப்பட்டாள்.
இதற்கு நாயர்கள் பூசாரிகளாக உள்ளனர்.

இந்த கோயிலுக்கு முன்பு சேகரிவர்மரின் குலதெய்வமான பழையனூர் காளிக்கு ஒரு சிறுகோவில் கட்டினார்.
இதில் எம்பிரான்திரி எனும் மலையாள பிராமணர் பூசாரியாக உள்ளனர்.

சித்தூரில் கொங்கன்படை விழாவை நடத்துவோர் சம்பத்து மன்றாடியார்கள்.
தமிழர்களான இவர்கள் தற்போது தமிழை மறந்துவிட்டனர்.

இப்போது விழா பற்றி பார்ப்போம்.

முதலில் கணியார் அல்லது கணியன் (பறையர்) அழைக்கப்பட்டு திருவிழா இடையூறின்றி நடக்குமா என்று 'விரிச்சி' பார்ப்பார்கள்.

பிறகு 'கும்மாட்டி',
இதன் பொருள் என்ன என்று கணிக்கமுடியவில்லை.
இதில் போர்க்கொடி ஏற்றப்படும்.
ஆண்கள் நீண்ட கழிகளில் காட்டுப்பூக்களை இலைதழையுடன் கட்டி எடுத்துவருவர்.
மாலை அம்மன் ஊர்வலத்தோடு இளைஞர்கள் போருக்கு ஊர்வலமாகச் செல்வது போல பேரொலி எழுப்பியவாறு செல்வர்.

அடுத்தது 'பாணன் - பாட்டி',
இது கொள்ளையர்களைப் பிடிக்க எடுத்த முயற்சியில் பாணனையும் அவனது மனைவியையும் சந்தேகத்தின் பெயரில் நாயர்கள் பிடித்துவந்து சம்பத்து மன்றாடியார்களிடம் விசாரணைக்காக நிறுத்திய நிகழ்வு நாடகமாக நடிக்கப்படும்.
பாணன் தனது ஊர் திருச்சிவப் பேரூர் (திருச்சூர்) என்றும் தன் மனைவியின் ஊர் அங்காடிபுரம் என்றும்
குருநாடு, குப்பநாடு, நெடியிருப்பு, தாளியூர், ஆலத்தூர், வில்லுபுத்தூர், காஞ்சிரப்புழை, காட்டூர், மஞ்சளூர், பல்லாவூர், கண்ணாடி ஆகிய ஊரில் உள்ள பாணர்களுக்கு தான் தலைவன் என்று கூறுவான்.
(மேற்கண்ட ஊர்கள் பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ளன)

அடுத்து இதேபோல இரண்டு நம்பூதிரிகள் விசாரிக்கப்பட்டமை நடித்துக்காட்டப்படும்.
இதில் நம்பூதிரிகள் தனது வீட்டில் திருட்டு போனதாகவும் மாந்திரீகம் செய்யும் பெரும்பாணனைப் பார்த்து குறிகேட்க வந்ததாகவும் கூறுவர்.

அடுத்து 'ஆசாரிவேலை', இதில் ஒரு தச்சாசாரியை பிடித்து வந்து விசாரித்ததை நடித்துக்காட்டுவர்.

பிறகு நாயக்கப்படை உளவாளிகள் ஊருக்குள் வந்து திருடியதை மாங்காய் திருடன், தேங்காய் திருடன், பலாப்பழத் திருடன் முதலிய பெயர்களில் வேடமிட்டு நடித்துக்காட்டுவர்.

பிறகு அரத்தி எனும் பறைச்சி மன்றாடியார்களிடம் போர் ஓலையைக் கொடுப்பது காட்டப்படும்.
இதை 'அரத்தி காவு தீண்டல்' என்பர்.

கொங்கன்படை படையெடுப்பு முறியடிக்கப்பட்ட பிறகு சித்தூர் மற்றும் நெம்மாறை ஆகிய தாலுகாக்கள் கொச்சிக்கே கேசரிவர்மரால் பரிசாகக் கொடுக்கப்பட்டன.

சித்தூரை ராணுவமயமாக்க நாயர்கள் சித்தூரில் குடியேற்றப்பட்டனர்.
அந்த விபரங்கள் கீழே,
காவல் பாடியில் இருந்து எழுவத்து வீட்டார் மற்றும் புறையத் வீட்டார்,
வெள்ளிநாழியிலிருந்து அம்பாட் வீட்டார்,
பாலக்காட்டிலிருந்து சிற்றிடத்து வீட்டார் மற்றும் தச்சாட்டு வீட்டார்,
செறுவத்தூரிலிருந்து செறுவாலைக் குடியினர்,
கண்ணாடி பகுதியிலிருந்து வாக்கையில் எனும் வீட்டார்.

பின்னால் குடிவந்த இவர்களே கொங்கன்படை விழாவின் காரியதரிசிகளாக அவ்விழாவை பொறுப்பேற்று நடத்துகின்றனர்.
குறிப்பாக அம்பாட்டு, தச்சாட்டு, பொறையத்து, எழுவத்து என நான்கு வீட்டு மலையாளிகள்.

முக்கியநாளான அன்று,
முதலில் 'பறையெடுப்பு',
இப்பொது பறைக்குப் பதில் செண்டைமேளம் அடித்து யானைகளை ஊர்வலமாக அழைத்துவருகிறார்கள்.

அடுத்து "தாயம்பாகை',
  இதில் மாரார்கள் ஒரு வித செண்டை மேளம் அடிப்பர்.
  பிறகு பூசாரி மீது அம்மன் வந்து திருநீறு பூசும்.
பிறகு 'கோலக்குழந்தைகள்',
அதாவது ஆண் அல்லது பெண் போல வேடமிட்ட குழந்தைகள் பெரியவர்கள் தோளில் அமர்ந்தபடி ஊர்வலமாகச் செல்வர்.
இதை நாயர் மற்றும் பிராமணர் செய்கிறார்கள்.

அதன் பிறகு 'தட்டின்மேல் கூத்து',
மூங்கில் களி மற்றும் தப்பைகளால் செய்யப்பட்ட பெரிய தட்டின் மீது வேடமிட்ட சிலர் ஆட அதை எட்டுபேர் தூக்கியபடி செல்வர்.
இதோடு 'என்னடி சிங்கி ஏதடி சிங்கி' என்று பாடியபடி சிங்கன்-சிங்கி நாடகத்தின் ஒரு காட்சியை வேடமிட்டு நடிப்போர் உண்டு.
'என்ன செய்வேன் ஏது செய்வேன் என் மகனே' என்று சந்திரமதி வேடமிட்டு ஒரு பெண் புலம்பியபடி வருவாள்.

பிறகு இருபது பேர் மார்பில் தோல்பட்டை கட்டி இடுப்பில் கத்தியை செருகி ஈழுவர் வேடமிட்டு ஊருக்குள் ஓடி வந்து கொங்கன்படை வந்ததைக் கூறுவர்.

பிறகு ஊர்வலம் சித்தூரம்மன் கோவிலை வந்தடையும்
கோலக்குழந்தைகள் பழையனூர் கோயிலுக்குப் போவார்கள்.
மாலை ஆகியிருக்கும் இப்போது 'பாண்டிமேளம்' அடிப்பார்கள்.
பிறகு வானவேடிக்கை நடக்கும்.

அதன்பிறகு 'படைமறித்தல்',
இரவு சிற்றிடத்து வீட்டார் கொங்கன்படை வேடமிட்டு குதிரை மீதமர்ந்து வெடிகளை வெடித்தபடி ஆரவாரமாக வருவர்.
இதற்கு தாரை தப்பட்டம் பாலத்துள்ளி பறையர்கள் முழக்குவார்கள்.

கொங்கப்படை பகவதி கோயிலை வலம்வந்து ஒரு கொங்கன் போர் ஓலையை வாசிப்பான்.
இதை வழிவழியாக மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு வருவதால் மளமளவென கூறுவான்.

பிறகு கொங்கன் வேடமிட்ட ஒருவன் தலைமையில் படை பந்தங்களுடன் ஊருக்குள் நுழையும்.

அடுத்த நிகழ்வு 'படை ஓட்டம்',
இதில் இரண்டு படைகளும் மோதுவது போல நடிப்பார்கள்.
நாயர்படையில் நாயர்பெண்களும் ஆண்வேடமிட்டு கையில் கிடைத்த ஆயுதங்களுடன் போரில் கலந்துகொண்டதை நடித்துக்காட்டுவர்.
சிலரை கட்டிலில் கிடத்தி தூக்கிச் செல்வர்.
சிலர் ஒப்பாரி வைப்பர்.
கொங்கன் எருமை போல மரத்தில் செய்து அதன் தலையை வெட்டுவார்கள்.

அடுத்து 'பொன்வேலை',
இதில் இரவு மூன்று மணி அளவில் தாயம்பகை அடித்து சித்தூருக்கு திரும்புவார்கள்.
பிறகு வானவேடிக்கை நடக்கும்.
பிறகு சேகரிவர்மர் வந்து போர்நடந்த இடத்தைப் பார்வையிட்டதை ஒரு மன்றாடியார் நடித்துக்காட்டுவார்.

இதன்பிறகு 'அச்சனும் மகனும்',
இது மலபாரின் இராமந்தளியில் இருந்து ஒரு பாணனும் அவரது மகனும் போர்பயிற்சி அளிக்க சித்தூர் வந்தது நடித்துக்காட்டப்படும்.

அடுத்து மலமையும் தெய்யாட்டமும்,
இதை தரக மன்றாடிகள் நடத்துவர்.
மலமைக் களி எனும் பாடலின் தாள கதிக்கு ஏற்ப கால்வைத்து ஆடும் விளையாட்டே இது.

இதற்கடுத்து தெய்யாட்டு,
பகவதி பிரதிஷ்டை செய்த நிகழ்வைக் குறிக்கும்.
கணபதி பாடல் பாடி தொடங்குவர்.

கற்றைச் செஞ்சடை முடியோன் கறைக்
கண்டன் மகன் பிள்ளையோன்
ஒற்றைக் கொம்புடையதொரு கணபதிக்கு
அபயமே ஞான்

பிறகு பகவதியுடன் சிவனை காண்பதாக

கண்டங்க கொண்டு ஞொஞ்சுடுத்து
அம்ம கையில் வளையிட்டுக் கண்ணெழுதி
கிண்டியில் நீர் கோறிக் கால்கழுகி
அம்ம சிளிவரி வெத்திலை கைபிடித்து
கைலாசத்துக்குச் சென்று
ஏழுவலம் கொண்டு நின்று
ஐயஞ்சு பூதி தெளிஞ்சம்மே
அரியிட்டுக் கைதொழுதாளே
பின் பூதப்படைகளுடன் சேர்ந்து
அவ்வண்ணம் அவளிருந்தாளே
அம்ம அக்கணத்தோடிருந்தாளே

என்ற பாடல் பாடப்படும்.

இதன்பிறகு 'பரிசைமுட்டு',
நூற்றைம்பது ஆண்டுகள் முன்பு சீக்கு எனும் முஸ்லீம் பாடிய பாடல்கள்.
இவை காலம் செல்லச்செல்ல வடிவம் மாறிவிட்டன.
இதை 'படைவெட்டுப் பாடல்கள்' என்கின்றனர்.
கோவை அப்பாச்சி கவுண்டன்பதியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஆறுமுகம் பிள்ளை கொங்கப்படை பற்றி தமிழில் எழுதியுள்ளார்.
அது (சில பாடல்கள் தவிர) இன்று கிடைக்கப்பெறவில்லை.

அடுத்து 'பள்ளு',
பள்ளர்கள் பாடும் பாடலே பள்ளு ஆகும்.
இதில் ஆடு பலியிடுவது சமீபகாலம் வரை நடந்தது.

பிறகு நான்குமணி அளவில் அனைவரும் கூடிநிற்க அம்மன் பூசாரி மீது வரும்.
மன்றாடியார் முன்னிலையில் நான்கு வீட்டு மேனோன்மாரும் வரவு செலவு கணக்கு வாசித்து அம்மனிடம் ஒப்புதல் வாங்குவார்கள்.

இதோடு விழா முடியும்.


உண்மையில் போரில் ஈடுபட்ட தமிழ் வெள்ளாளர்களுக்கு செம்பனாம்பதி, நெல்லியம்பதி, வலிய வள்ளம்பதி, கோழிப்பதி, குன்னங்காட்டுப்பதி, சர்க்கார்பதி, எடுத்தேன்பதி, தேனம்பதி, வடகரைப்பதி, பாலார்பதி, ஒழலப்பதி, பெரும்பதி, ஆட்டையாம்பதி என சித்தூர் மன்னரால் அளிக்கப்பட்ட நிலம் இன்றும் அவர்கள் கையில்தான் உள்ளது.
இவர்கள் கொங்கு வேளாளர் உறவின்முறை ஆவர்.

இராமபட்டினம், ஊத்துக்குழி, முத்தூர் ஆகிய ஊர்களின் கவுண்டர்கள் திருவிழாவிற்கு சமீபகாலம் வரை குதிரை அனுப்பியுள்ளனர்

பாலக்காடு மாவட்டத்தில் நடைபெறும் ஒரு திருவிழா இன்றும் தனது தமிழ் வடிவத்தை இன்றுவரை தக்கவைத்துள்ளமை அது நமது மண் என்பதற்கான சான்றுகளில் ஒன்று.

பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி:
கொங்கன்படை - வரலாற்று அடிப்படைகளும் திருவிழா நடைமுறைகளும் (1993)
_ பேரா. கு. அருணாசலக் கவுண்டர்
(Tamilheritage ebook)