Thursday, 26 June 2025

அம்பேத்கர் கூறியதைத் திரிக்க வேண்டாம்

 அம்பேத்கர் கூறியதைத் திரிக்க வேண்டாம்

 அம்பேத்கர் கூறியதாக நமக்கு சொல்லப்படுவது 
"கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!"
 ஆனால் இது திரிக்கப்பட்டது!
அதாவது "educate! organise! agitate!" என்று அவர் கூறவில்லை!
 "educate! agitate and organise" என்பதே அவர் கூறியது.
அதாவது "கற்பி! (சிந்தனையைத்) தூண்டிவிடு! ஒன்றிணை!" என்பதே இதன் பொருள்! 
 அவரது நோக்கம் ஒன்றிணைவது தான் தூண்டிவிடுவது (agitate) அல்ல! 

 [ “Dr Babasaheb Ambedkar Writings and Speeches” Vol-17, Part-3, Pages – 273 & 276

The All India Depressed Classes Conference was held at Nagpur from 18th to 20th July 1942. Dr Ambedkar addressing the Conference on 20th July 1942 as under:-
 “My final words of advice to you is Educate, Agitate and Organise; have faith in yourselves and never lose hope. 
I shall always be with you as I know you will be with me.
 For ours is a battle, not for Wealth or for Power.
 It is a battle for Freedom!
It is a battle for the Reclamation of Human Personality which has been suppressed and mutilated by the Hindu social system”.]

மார்க்ஸ் கூறியதும் திரிக்கப்படுகிறது "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!" என்று அவர் கூறவில்லை "உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!" என்றுதான் அவர் கூறினார்.

 தேவர் கூறியதும் திரிக்கப்படுகிறது 
"தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்" என்று அவர் கூறவில்லை!
"தேசியம் உடல் தெய்வீகம் உயிர்" என்றுதான் கூறினார்.

மாடு என்பது சொத்து

மாடு என்பது சொத்து 

 மாடு எனும் சொல் செல்வம் அல்லது சொத்து எனும் பொருள் தரும்.
 இந்த சொத்து பொன்னாக இருக்கலாம் அல்லது அசையாத சொத்தான இடம், நிலம், வீடு ஆகியனவாகவும் இருக்கலாம்.

 உதாரணமாக "மாடை" என்பது தங்கத்தை குறிப்பாக தங்க நாணயத்தைக் குறிக்கும் சொல்.
 "மாடு" எனும் சொல்லுக்கு சூடாமணி நிகண்டு பொன் என்று பொருள் தருகிறது.
 
 மாடி, மாடம், மாடவீதி போன்றவை இன்றும் கட்டிடம் சார்ந்த சொற்கள்.
 
 பிற்பாடு கம்பராமாயணம் தான் மாடு என்பதை எருது என்ற பொருளில் தருகிறது.

 அகராதி நிகண்டும் சீதனம் எனும் பொருள் தருகிறது.

 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை 
 எனும் குறளில் உண்மையான செல்வம் கல்வியே மற்றவை (நிலையான) சொத்துகள் இல்லை என்றே கூறப்பட்டுள்ளது.

 குறளில் வரும் மாடு எனும் சொல் கால்நடையை நேரடியாக் குறிக்காது ஆனால் அது ஆகு பெயராகி பிற்பாடு கால்நடைகளைக் குறித்தது.

 இந்த குறளைப் பயன்படுத்தி கால்நடைகளின் முக்கியத்துவத்தைப் புரியவைக்க முயற்சிப்பவரை இது கால்நடையைக் குறிக்காது என்று இழிவு செய்வது மூடத்தனம்! 

  கால்நடை என்பதும் ஒரு மாடு (சொத்து) தான்! 

 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.’ (குறள் எண் 560) 
 ஒரு நாட்டில் காவல் (பாதுகாப்புத்துறை) சரியாக செயல்படாவிட்டால் முதலில் பாதிக்கப்படுவது கால்நடைகள் மூலம் வரும் வருமானம் என்று கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்தும் வள்ளுவர் கூறுகிறார்.
இதிலும் கல்வியையும் கால்நடைகளையும் ஒப்பிடுகிறார்!

 ஆடு மாடுகள் காப்போம்! 

Wednesday, 25 June 2025

யார்தான் ஆரியர்

யார்தான் ஆரியர்?
19.03.2017

ரொம்ப யோசிக்கவேண்டாம்
விடை அருகிலேயே உள்ளது.
இன்றும் கைபர்(khyber) போலன் (bolan) கணவாய்களின் அந்தப்பக்கம் வாழும் இனம் எது?

பெர்சிய மொழி பேசும் ஈரானிய இனம்தான்!

ஈரான் மக்கள் தம்மைத்தாமே ஏரியா (Aryia) என்றே இன்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

ஈரானிய மொழியில் ஏர்யன்(aryia) என்றால் உயர்ந்த அல்லது மாண்புள்ள என்றவாறு பொருள்படும்

இரான் (iran) என்ற சொல்லே ஏர்யன் என்ற சொல்லின் திரிபு என்கிறார்கள் (etymology of iran - Wikipedia). 

  இந்த ஏரியன் என்ற சொல்லைத்தான் ஆர்ய என்ற சொல்லுடன் திரித்து ஆங்கிலேயர் தமது அரசியலுக்காகப் பயன்படுத்தினர்.

(ஆங்கிலேயர் Aryan என்பதை ஏர்யன் என்றே உச்சரிப்பர்.
இது அரையர் என்ற தமிழ்ச்சொல்லுடனும் ஒத்துப்போகிறது.
தமிழகத்தில் அரிய என்று தொடங்கும் ஊர்களும் உண்டு.
அரியநாடு திருப்பதிக்கு அப்பால் அருவா என்றும்
அதற்கும் வடக்கே ஆரிய என்றும் திரிந்ததாக செந்தமிழ் பேரகராதி யில் பாவாணர் கூறுகிறார்)

ஆங்கிலேயர் கூறியபடி ஆரியர் கைபர் போலன் கணவாய் வழியே வந்தனர்.
இன்றும் ஈரானியப் பேரினமே கைபர் போலனுக்கு அந்தப் பக்கம் வாழ்கிறது.

இன்றும் கைபருக்கு அந்தப்பக்கம் ஈரானிய மூலமொழியான பெர்சிய மொழி.
போலனுக்கு அந்தப்பக்கம் பஷ்த்தோ எனும் ஈரானிய கிளைமொழி.
(பார்க்க: படத்தில் சிவப்புக்குறி)

(வேதகால)சமஸ்கிருதம் உட்பட அனைத்து வடஹிந்திய மொழிகளும் indo-aryan பிரிவின் கீழ் உள்ளன.
இந்த இந்தோ-ஆரியன் பிரிவே indo-iranian என்ற பிரிவின் கீழேதான் வருகிறது.
என்றால், ஆரியம் என்றாலே அது ஈரானுக்கு அடங்கியதுதான்.
அவற்றில் சமஸ்கிருதமும் உண்டு.

ஆரிய படையெடுப்பு என்பது 2600 ஆண்டுகள் முன்பு பாரசீக மன்னன் சைருஸ் (cyrus) இந்தியா மீது படையெடுத்து சிந்து நதிவரை கைப்பற்றியதைக் குறிக்கலாம்.
அல்லது அவருக்கு முன் ஈரானிய பழங்குடிகள் சிறிய அளவில் படையெடுத்திருக்கலாம்.

ஈரானியர் மட்டுமன்றி கிரேக்கத்திலிருந்து அலெக்சாண்டரும் தனது அரசாட்சியை ஹிந்தியா வரை பரப்புகிறார்.
இவர்களைப் பின்பற்றி பலரும் அடுத்தடுத்து மேற்கு ஹிந்தியாவை படையெடுத்து ஹிந்தியாவிற்குள் முன்னேறுகிறார்கள்.

ஹிந்தியாவின் முதல் ஆரிய அரசு ஆர்யாவர்த்த (Aryavarta) எனப்படும் அரசு இது கைபர் போலன் கணவாய்களுக்கு சற்று தள்ளி இன்றைய ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உருவாகிறது (அதாவது சிந்து சமவெளி).

அதாவது ஈரானிய இனம் தன் தாய்நிலத்தைத் தாண்டி சிந்து சமவெளிக்கு வருகிறது.
நாளடைவில் அது தாய்நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டு அருகாமை பூர்வகுடிகளுடன் (தமிழர்களுடன்) கலந்து தனி இனமாக உருவாகிறது.

பிறகு தனக்கென தனி அரசையும் நிறுவிக்கொள்கிறது.
தாய்நிலத்தின் மொழி மற்றும் பழக்கவழக்கங்களைத் தழுவி தனக்கென தனி கலப்பு மொழியையும் தனி சமயத்தையும் அது ஏற்படுத்திக்கொள்கிறது.
(பாவாணர் கூற்றுப்படி சமஸ்கிருதத்தில் 5ல்2 பங்கு தமிழ்)

தம் மொழியில் உயர்ந்த சொல்லான ஏரியரைத் தழுவி ஆரியர் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கிறது.
ஆரியவர்த்த என்று தனது அரசாட்சிக்கு பெயரிடுகிறது.
பின்னர் நாளடைவில் அரசாட்சி வீழ்ந்து பூர்வகுடிகளுடன் கலந்து கரைந்துவிடுகிறது.

இவர்கள் கலவையாக உருவாக்கியதே இன்றைய அடிப்படை ஹிந்து மதம்.

ஈரானிய மொழிச்சொல்லான ஹிந்த், ஹிந்தூ, ஹிந்துஸ் போன்ற சொற்களே ஹிந்து என்பதன் வேர்ச்சொல்.
இவர்கள் தமிழ்க் கடவுளரை எடுத்துக்கொண்டு புதிய சமயத்தை உருவாக்கி வேதங்களை எழுதியுள்ளனர்.
இது காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தது.
இதுவே இன்றைய ஹிந்து மதத்தின் அடிப்படை.

இதேபோல தமிழிலிருந்து வேர்ச்சொற்களை எடுத்து இவர்கள் உருவாக்கிய மொழியே சமஸ்கிருதம்.
இது காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தது.
இதுவே வடயிந்திய மொழிகளுக்கு அடிப்படை.

மேலே சொன்னது ஈரானியர் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமே.

இதே போல கிரேக்கர், சகர்கள் (ஈரானியர்), பார்தியர்(ஈரானியர்), குஷாணர் (சீனர்), ஹூனர் (துருக்கிய மங்கோலியர்), அராபியர், முகலாயர் (துருக்கிய மங்கோலியர்) என வடக்கிலிருந்து பலரும் வரிசையாக மேற்கிலிருந்து படையெடுத்து கைப்பற்றி ஆட்சி செய்து தமது மொழி, மத, கலாச்சார அடையாளங்களைக் கலந்துவிட்டு காணாமல் போயினர்.

(வடக்கை ஆண்ட ஒரு சில மன்னர்கள் தெற்கு வரை முன்னேறினர்.
ஆனால் தமிழகத்தை என்றுமே கைப்பற்றியதில்லை)

 வடக்கே இமயமலை, தெற்கே விந்தியமலை வரை இந்த இனகலப்பு அதிகம் நடந்து நடந்து வடயிந்திய இனமே கலப்பினமாக மாறிவிடுகிறது.
 இதனால்தான் மரபணு படி தற்போதைய இந்தியாவின் வடயிந்தியருக்கும் தென்னிந்தியருக்கும் சம்பந்தமில்லை என்றே ஆய்வுகள் சொல்கின்றன.

பிறகு கடந்த 500 ஆண்டுகளாக ஐரோப்பியரின் கடல்வழி படையெடுப்பு நடந்தாலும் இனக்கலப்பு தவிர மற்ற தாக்கங்கள் இருந்தன.

ஆக வரலாற்றில் ஆரியர் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக சிறிய அளவிலானது.
ஆரியர் சிந்து சமவெளியை படையெடுத்து கைப்பற்றியதாகத் தோன்றவில்லை.
இயல்பான குடியேற்றம்தான் நடந்திருக்கவேண்டும்.
(சிங்களவர் இலங்கையில் குடியேறியதுபோல)

ஆரியர் என்பார் பழங்கால ஈரானியரே!

பிராமணரெல்லாம் ஆரியர் வம்சாவழிகள் என்பதே எந்த அடிப்படையும் இல்லாத கருத்து.

அதிலும் தமிழ்ப் பார்ப்பனர்?????

வாய்ப்பேயில்லை.

(பார்ப்பனர்கள் சோழர் காலம் வரை தமிழில் வழிபாடு செய்தனர்.
தாய்லாந்து வரை தமிழிலேயே சைவத்தைப் பரப்பினர்.
சமஸ்கிருதம் அவர்கள் மீது பிறகுதான் திணிக்கப்பட்து.
ஆனாலும் அவர்கள் தமிழை விட்டுக்கொடுத்ததே இல்லை).

ஐரோப்பியர் தமது ஆட்சியை நியாயப்படுத்த "நாங்கள் ஆரியர், ஏற்கனவே நாங்கள் ஆண்டோம், பிராமணர் எங்கள் இனம்" என்று மேக்ஸ்முல்லர் மூலம் கதைகட்டிவிட்டனர்.

 "ஆரியரை எதிர்த்தோர் திராவிடர், அவர்கள் வழிவந்தோரே தென்னிந்தியர்" என்று கால்டுவெல் மூலம் கதைகட்டி பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தினர்.

ஆரிய கருத்தியல் ஹிட்லர் போன்ற மனிதனை உருவாக்கும் என்றோ
திராவிடக் கருத்தியல் கருணாநிதி போன்ற மனிதனை உருவாக்கும் என்றோ அவர்கள் நினைக்கவில்லை.
இதே போலவே சமஸ்கிருத ஹிந்து சமயத்தை உருவாக்கிய ஆரியரும் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று யூகித்திருக்க வாய்ப்பில்லை.

இன்று நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கு என்றோ ஒழிந்துபோன ஆரியரை இழுப்பதும்,
ஆரியருக்கு தொடர்பே இல்லாத பார்ப்பன சமூகத்தின் மீது சாதிய வன்மத்தைக் கொட்டுவதும் எந்த வகையில் தீர்வாகும்?

தென்னிந்தியர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த வடயிந்திய ஆதிக்கமே நடைமுறை ஆரியம் என்று கொள்க.

   தமிழர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த தென்னிந்திய கூட்டு ஆதிக்கமே நடைமுறை திராவிடம் எனக்கொள்க

மேலே கூறிய கதை(?) நம்பும்படியாக இல்லையா!

கீழே உள்ள கதையைப் படிக்கவும்.

ஆரியர்கள் கைபர் போலன் வழியே ஆடுமாடு ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.
பெரிய அரசாங்கம் நடத்திய தமிழர்களை ஏமாற்றி பதவிகளில் அமர்ந்தனர்.
அவர்கள் சிவப்பாக இருந்தார்கள்.
அதனால் தமிழர்கள் அவர்கள் அழகில் மயங்கிவிட்டனர்.
அவர்கள் சமஸ்கிருதம் பேசினார்கள்.
அதிலே மந்திரம் எழுதி இதுதான் கடவுளுக்குப் புரியும் என்றனர். உடனே எல்லாரும் ஒத்துக்கொண்டனர்.
மனுதர்மம் என்ற நூல் எழுதினார்கள்.
அதில் சாதியை படைத்தனர்.
அதைப் படித்துவிட்டு எல்லாரும் உடனே சாதி படிநிலையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
பிறகு அவர்கள் பூணூலைப் போட்டுக்கொண்டு பூசாரி ஆகி அனைவரையும் சாதியாகப் பிரித்து தொடர்ந்து இன்றுவரை ஆள்கிறார்கள்.
 இன்றும் சிவப்பாக இருக்கிறார்கள்.

இரண்டில் எதை நம்புவீர்கள்?!

திரைப்படத்தில் வாஞ்சிநாதன் வரும் காட்சிகள்

திரைப்படத்தில் வாஞ்சிநாதன் வரும் காட்சிகள்

 திரைப்படமாக வெளிவந்த ம.பொ.சி யின் படைப்பான "கப்பலோட்டிய தமிழன்" படத்தில் "செங்கோட்டை வாஞ்சிநாதன்" வ.உ.சி க்கு நேர்ந்த கொடுமைக்காக பழிவாங்க ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றதை காட்டியிருப்பார்.
 இதில் கலவரத்தை அடக்க ஆஷ் நேரடியாக தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபடுவதையும் காட்டியிருப்பார்.
 வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சுயசரிதையில் ஆஷ் மரணத்தை ஒரு காவலர் வந்து தன்னிடம் சொன்னதாகவும் அதைக் கேட்டு தான் மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டிருப்பார்.
 ஆனால் படத்தில் ஒரு டாக்டர் சொல்வது போல வருகிறது.
 அதேபோல வ.உ.சி தண்டிக்கப்பட்ட வழக்கில் பாரதியார் விசாரிக்கப்படவில்லை ஆனாலும் விசாரிக்கப்பட்டதாக காட்சி வைத்திருப்பார்.
 இதில் பாரதியாராக நடித்தவரும் செங்கோட்டையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா அவர்கள்தான்! 

Sunday, 22 June 2025

அன்றைய காதல்

அன்றைய காதல்  

 அந்த பெரிய வீட்டில் அந்த பகுதியில் அதிகம் வாழும் ஒரு சமூகத்தின் பெரியவர்கள் கூடியிருந்தார்கள்.
 வீட்டின் பின்புறம் இருந்த வெற்றிடத்தில் அசைவ உணவு ஆக்கிக் கொண்டிருந்தது அங்கு வீசிய நறுமணத்திலிருந்து தெரிந்தது.
 நாலு பேர் நாலு விதமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 வீட்டின் பின்பக்கம் பெண்கள் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள்.
 அந்த வீட்டின் பெரியவர் கூடத்தில் நடுவே அமர்ந்திருந்தார் அவரை சுற்றி பெரியவர்கள் அமர்ந்து அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
  அவர் அவற்றையெல்லாம் கேட்டு உள்வாங்கியது போல மௌனமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
 அப்போது பின் கட்டில் இருந்து அவரின் மனைவி கூடத்தின் வாசலுக்கு வந்து "என்னங்க..!" என்று அழைத்தார்.
  இவரும் போனார்.
 "என்னங்க அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்! இவ தான் வார்த்தையை விட்டிருக்கா! அதனாலதான் மாப்பிள்ளை கையை நீட்டிட்டார்!
 அவர் ஏடாகூடமான ஆள்!
 நீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க!" என்று கூறினார்.
  பெரியவர் கோபத்துடன் "அதுக்குன்னு இப்படி போட்டு அடிக்கலாமா?" என்று கேட்கவும் அங்கே வந்த இவர்களது இளைய மகன் "அவன் இன்னைக்கு வரட்டும்! ஒழுங்கா மன்னிப்பு கேட்கலைனா இங்கேயே அவனை வகுந்திடுவேன்" என்று கூறினான்!
 அந்த அம்மாளோ "கூறுகெட்டவனே! உனக்கு ஒன்னும் தெரியாது! நீ பேசாம இரு! அவர ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது! மீறி வாயத் தொறந்தே இனி வீட்டுக்குள்ள வரக்கூடாது" என்று சொன்னாள்.
 இதையெல்லாம் அங்கே ஓரமாக அமர்ந்திருந்த பெண் கேட்டுக் கொண்டிருந்தாள்.
 அந்த இளைஞன் அவளருகே போனான் "அக்கா அவன் உனக்கு சரிப்பட மாட்டான்! அவன் வந்ததும் நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுட்டு தாலிய கழட்டி எறிஞ்சிடு! எதாவது பண்ணுனான்னா நா பாத்துக்கிடுறேன்" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று வெளியே போனான்.
 அவள் எதுவும் பேசாமல் வாயை இருக்க மூடியபடி தலையை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள்.
 அவளது தோழி ஒருத்தி பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
 அவளுடைய அம்மா அருகே போனாள்.
 "ஏம்மா அத்துவிடுறதுன்னே முடிவு பண்ணிட்டியா கடைசிய ஒரு தடவ யோசிச்சு பாரேன்!" என்று கூறினாள்.
 அந்த பெண் எதுவும் பேசவில்லை!
"சரிம்மா! கோவம் மட்டும் படாத! மீதிய அப்பா பாத்துக்குவாரு!"
 இப்போது கூடத்துக்கு வந்த பெரியவர் அங்கிருந்த பெரியோர்களைப் பார்த்து "அவங்க வீட்டிலிருந்து யார்லாம் வாராங்கன்னு தெரியல! அவங்க கொஞ்சம் ஏறுமாறா பேசினாலும் நீங்க பொறுமையா பேசுங்க! பொண்ணு பிள்ள விசயம்! அத்துவிடுறதுனாலும் முடிஞ்ச அளவு சுமூகமா முடிக்க பாருங்க!" என்று சொன்னார்.
"சரிப்பா! அன்னைக்கு அவங்க வீட்டுக்கு சமாதானம்  பேசப் போனப்ப என்ன பேச்சு பேசுனாங்க! பரவால்லப்பா! எங்களுக்கு என்ன?! முடிவு உன்னோடது தான்! நாங்க ஒரு ஆதரவுக்காக தான் வந்தோம்! நீ பேசு! நாங்க இடைல எதுவும் பேசலை!" என்று சொன்னார்கள்.
 தூரத்தில் மோட்டார் பைக் வரும் சத்தம் கேட்டது.
 அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெண் பரபரத்தாள்!
 எழுந்து வாசலைப் பார்த்தாள்.
 ஆம் அது அவன்தான்!
 அந்த பெண் பின்வாங்கி ஓரமாக நின்றுகொண்டாள்.
 அவன் ஒற்றை ஆளாக வந்திருந்தான்!
நிதானமாக குடித்து இருந்தான்!
 அதனால் அதிகம் தள்ளாடாமல் நடந்தான்!
 சுற்றி இருந்தவர்களை பார்த்துக் கொண்டே அவர்களையெல்லாம் கடந்து நடுக்கூடத்திற்கு போனான்.
 நட்ட நடு கூடத்தில் நின்று கொண்டு அவள் பெயரைச் சொல்லி அழைத்தான்.
"சாந்தி! ஏ.. சாந்தி!" 
அந்தப் பெண் மெதுவாக மறுபடியும் எட்டிப் பார்த்தாள்.
 அவளைப் பார்த்தவுடன் அவன் உதடுகளில் ஒரு குறுநகை தென்பட்டது.
 "வா! நம்ம வீட்டுக்கு போலாம்" என்று சொன்னான்.
 அந்தப் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
 "என் சந்தனமில்ல! வா வீட்டுக்கு போலாம்! வா! வா! வா!" என்று அவன் வலது கையை அவளை நோக்கி நீட்டினான்.
 அந்தப் பெண் மெதுவாக நடந்து வந்து அவனுடைய கையில் தன்னுடைய கையை வைத்தாள்.
 அவன் திரும்பி புறப்பட எத்தனித்தான்.
 அவள் நகரவில்லை!
 அவன் திரும்பி அவளைப் பார்த்தான்!
அவள் அவளுடைய தந்தையை ஏறிட்டு பார்த்தாள்!
 அவருடைய தந்தையோ சரி போ என்பது போல் தலையை ஆட்டி விட்டு தலையை குனிந்து கொண்டார்.
 அவன் அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வாசல் வரை கொண்டு போய் நிறுத்தி வண்டியில் ஏறி அதை உதைத்து உறுமவிட்டான்.
 அவள் அதை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தாள்!
"ஏறுடி!" என்றான்!
 அவள் அவனுடைய தோளில் கைவைத்து ஏறி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.
எதிரே நான்கு நண்பர்களோடு நின்றுகொண்டிருந்த அவளது தம்பி முகத்தில் ஈயாடவில்லை!
 பைக் சத்தம் தூரமாகச் சென்று மறைந்தது.
 அங்கே இருந்த எல்லோரும் எதிர்பார்த்தது நடக்காதது போல கோபமாக அந்த பெரியவரை பார்த்தார்கள்.
 அந்த பெரியவர் கால்களை லேசாக ஆட்டிக்கொண்டே "சரி! வந்தது வந்துட்டீங்க! எல்லாரும் சாப்பிட்டு போங்க! ஏம்மா எலைய போடு" என்றபடி அங்கிருந்து எழுந்து விறுவிறுவென்று பின்பக்கம் போய்விட்டார்.

அரசியலில் முருகன் சீமான் முதல் பாஜக வரை

அரசியலில் முருகன்
 சீமான் முதல் பாஜக வரை

 2015 இல் சீமான் வீரத் தமிழர் முன்னணி எனும் பாசறையைத் தோற்றுவித்து முப்பாட்டன் முருகன் என்று முருக வழிபாட்டை தமிழ்தேசிய விழாவாக ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கிறார்.

 திருமுருகப் பெருவிழா எனும் பெயரிட்டு நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த விழாக்கள்

2016 திருப்பரங்குன்றம்
2017 திருத்தணி
2018 திருச்செந்தூர்
2019 கோவை 
2020 சுவாமி மலை 
2021 திருப்போரூர்
(இவற்றில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டு 2021 தைப் பூசம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது)

2022 லிருந்து தொகுதி வாரியாக விழா நடக்கிறது.

2025 இல் திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்க மாபெரும் பொதுக்கூட்டம்!
 அதன் விளைவாக குடமுழுக்கு தமிழிலும் நடக்கும் என்று அறிவிப்பு! 

 இதெல்லாம் முடிந்த பிறகு இன்று பாஜக நடத்தும் "முருகன் மாநாடு" நடக்கிறது.

Friday, 20 June 2025

சாதிய கட்டப் பஞ்சாயத்து

 சாதிய கட்டப் பஞ்சாயத்து 

 தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் போலீஸ் வாகனத்துல் சிறுவன் கடத்தல் வழக்கில் உற்று நோக்கினால்.. 

 சம்பந்தப்பட்ட காதல் ஜோடியில் பெண் குடும்பம் நாயுடு சமூகத்தைச் சேர்த்தவர்கள்.
 பையன் வன்னியர் என்று சொல்கிறார்கள்.
இவர்களது காதல் திருமணத்தை ஏற்காக பெண்ணின் தந்தை வனராஜா நாயுடு தன் சமூகத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் தாதாவைத் தொடர்புகொள்கிறார்.
 இந்த மகேஸ்வரி காவல்துறையில் அதிகாரியாக இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர். 
 ஆனாலும் பல போலீஸ் உயரதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்பைத் தொடர்பைப் பேணுகிறவர்.
 போலீஸ் அதிகாரிகள் ஆதரவுடன் கொடைக்கானலில் அடுக்கம் பகுதியில் வடயிந்தியர் ஒருவருக்கு சொந்தமாகன பெரிய எஸ்டேட்ட ஒன்றை இந்த பெண் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்.
 இவருக்கு மிக நெருக்கமானவர் ஏடிஜிபி ஜெயராம்.
 இவர் கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நபர்.
 வனராஜா தரப்பு மகேஸ்வரியிடம் காதல் ஜோடியைப் பிரித்து தம் சாதிய கௌரவத்தைக் காப்பாற்ற ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசியுள்ளது!
 இவர்கள் ஏடிஜிபி ஜெயராம் மூலம் அந்தப் பகுதியில் செல்வாக்குள்ள எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி யை அணுகுகிறார்கள்.
 சாதிமறுப்புத் திருமணம் செய்யும் காதல்ஜோடிகளைப் பிடித்து கட்டப் பஞ்சாயத்து செய்யும் அனுபவம் உள்ள (பறையர் சமூகத்தைச் சேர்ந்த) ஜெகன்மூர்த்தி கும்பல் களத்தில் இறங்குகிறது.
 ஏடிஜிபி யின் அரசு வாகனத்திலேயே மகேஸ்வரி மற்றும் ஜெகன்மூர்த்தியின் ஆட்கள் காதல்ஜோடி தங்கியிருந்த வீட்டுக்குப் போகிறார்கள்.
 அங்கே அவர்கள் இல்லை அதனால் மாப்பிள்ளை பையனின் தம்பியை கடத்திக் கொண்டு போய் அவர்களது குடும்பத்தை மிரட்ட தொடங்குகின்றனர்.
 ஆனால் விசயம் வெளியே தெரிந்து பிரச்சனை பெரிதாக ஆக அந்த பையனை இறக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
 இதையடுத்து நேர்மையான ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் மகேஸ்வரி குழு கைது செய்யப்படுகிறது.
 பூவை மூர்த்தி கைதுக்கு பயந்து தலைமறைவாகிறார். 
 அவர் முன்ஜாமின் கேட்டு போட்ட மனு நீதிபதி வேல்முருகன் பார்வைக்கு வருகிறது.
 இந்த நேர்மையான நீதிபதிதான் ஜெகன் மூர்த்தியை நேரில் வரச் சொல்லியும் ஏடிஜிபி யை கைது செய்யவும் உத்தரவிடுகிறார்.
 இருவரையும் கடுமையாக எச்சரித்து விசாரணைக்கு அனுப்பிவைக்கிறார்.
 
 
 

Thursday, 19 June 2025

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்


கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்
(சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு...
-----------------
முதல் படம்,

14 மார்ச் 2014 தினமணி
டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்:
உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு
by Venkatesan

புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது டாக்டர் கிருஷ்ணசாமி சமர்ப்பித்த சாதிச் சான்று போலியானது என நெல்லை மாவட்டம் கொடியங்குளத்தைச் சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி எம் அக்பர் அலி அண்மையில் விசாரித்தார்.
கிருஷ்ணசாமியின் தந்தை கொண்டா ரெட்டி சமூகத்தையும் தாய் அருந்ததியர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
ஆனால் வேட்பு மனுவில் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
-------------
அடுத்த படம்,

Mallar Advocates Association (MAA)
No.138, Thambu Chetty street,
Chennai 600001.

நாள்: 06.09.2017

அனுப்புநர்,
பெ.இராமராஜ் வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 104
தொ.எண். 9176067906

பத்திரிக்கையாளர் சந்திப்பு

உயர்திரு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். எமது வழக்குரைஞர் சங்கம் சார்பில் வருகின்ற வியாழன் (07.09.2017) அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளோம்.

சந்திப்பின் நோக்கங்கள்:
1.ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள்விரோதத் திட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கண்டிப்பது.
2. தேவேந்திர குல வேளாளர் சாதியில் பிறக்காமல் பொய்யான சாதிச்சான்றிதழ் பெற்று அப்பாவி மக்களை ஏமாற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் போக்கை அம்பலப்படுத்துவது.
3. நீட் தேர்வுமுறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதோடு தொடர்ந்து மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் டாக்டர் கிருஷ்ண சாமியிடமிருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயக் கொடியாகிய சிவப்பு பச்சைக் கொடியை மக்களை அணிதிரட்டுவதற்கான அறைகூவல் விடுப்பது.

இதர முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் சந்திப்பு நடைபெற உள்ளதால் தங்களது பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
பெ.இராமராஜ்
---------------
மேற்கண்ட இரண்டு போக கிருஷ்ணசாமி குடும்பம் பற்றி விரிவாக கூறுகிறது தற்போதைய செய்தி ஒன்று:-

டாக்டர் திரு. கிருஷ்ணசாமியின் “தேவேந்திரகுலத்தான்” என்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம்)

பொருள்:
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி மோசடி செய்து “தேவேந்திரகுலத்தான்” என்று பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய விண்ணப்பம்.

பார்வை:
கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் 09-1-1998 அன்று டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்ட நிரந்தர சாதிச் சான்றிதழ் எண் 1063899,
SL.NO. .10 / 98

ஐயா,
டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்ற சாதிச் சான்றிதழை கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட்டுள்ளது.

இது தவறானது, இது ஏமாற்றிப் பெற்ற சதான்றிதழாகும் அவர் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி “தேவேந்திரகுலத்தான்” என்ற போலியான சாதிச்சான்றிதழை ஏமாற்றிப் பெற்றுள்ளார்.

எனவே மோசடிமூலம் பெறப்பட்ட அவரது சாதிச் சான்றிதழை G.O.Ms(2D) 108,dated 12th September 2007இன்படி ரத்து செய்ய வேண்டும்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவின் கீழ் வரும் அவரது சொந்த கிராமத்தில் இருந்து தனது சாதிச் சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக அவர் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் தேவேந்திரகுலத்தான் என்ற போலியான சாதிச் சான்றிதழை நிலையான சான்றிதழாகப் பெற்றுள்ளார்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பிறந்த சொந்த கிராம நிர்வாக அலுவலரால் முறையாக விசாரிக்கப்பட்டு நிலையான சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இது வருவாய்த் துறையின் ஆணை எண். Go.Ms.No.781 dtd 2nd May 1988 –என்பதற்கு எதிரானதாகும்.

திரு.கிருஷ்ணசாமிக்கு 09-01-1998 அன்று நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழில் அவரது முகவரி "கே கிருஷ்ணசாமி த/பெ கருப்பசாமி,
சங்கீதா மருத்துவமனை,
பாலக்காடு மெயின்ரோடு,
குனியமுத்தூர்"
என உள்ளது.
இச்சான்றிதழ் குனியமுத்தூர் கிராமநிர்வாக அலுவலரால் அவர்பிறந்த ஊர் உள்ள ,உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் நேரடியாக விசாரிக்கப்படாமல் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் விசாரிக்கப்படாமல் வழங்கப்பட்ட்டுள்ளது.
இது மேற்படி வருவாய்த்துறையின் ஆணைக்கு எதிரானதாகும் திரு.கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்ற தனது போலியான சாதிச்சான்றிதழை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஓட்ப்பிடாரம் SC தொகுதியில் MLA ஆகி உள்ளார் இதன் மூலம் உண்மையான தேவேந்திரகுலமக்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தோம்.

இவர் தனது மகன் திரு.சியாம், மகள் திருமதி. சங்கீதா, இவர்களுக்கு தேவேந்திரகுலத்தான் என்று போலிச் சான்றிதழ் பெறுவதன் மூலமாக ஒட்டப்பிடாரம் MLA தொகுதி மற்றும் தென்காசி MP தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகிறார்.
இச்செயல் உண்மையான தேவேந்திரகுல மக்கள் அங்கே போட்டியிடும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும்.
ஏனெனில் திரு.கிருஷ்ணசாமி அருந்ததியர்(மாதாரி,சக்கிலியர்) சாதி இவரது மனைவி கேரளா OBC சாதி.
இவ்விருவரும் தேவேந்திரகுலமல்ல.
எனவே அவரது மகனும் மகளும் தேவேந்திர குலமல்ல..

மேலும் திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுல சாதி அல்ல.  ஏனெனில் அவரது தாயார் திருமதி தாமரை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் (சக்கிலியன்-12,மாதாரி சாதி)
மற்றும் கிருஷ்ணசாமியைப் பெற்ற தந்தை கருப்பக்குடும்பன் அல்ல,
கருப்பக்குடும்பன் அவரது காப்பாளர் மட்டுமே.

திரு.கருப்பக்குடும்பன் அவரது தாயார் தாமரைக்கு இரண்டாவது கணவர் ஆவார்.
திரு. கிருஷ்ணசாமி 8 வயது மற்றும் அவரது சகோதரி பாக்கியம் 6 வயது இருக்கும்போது தமது தாயார் தாமரையுடன் மசக்கவுண்டன் புதூரிலுள்ள திரு.கருப்பக்குடும்பன் வீட்டிற்கு வந்து அவருடன் சேர்ந்துள்ளார்.
அதற்குப் பின்னர் கருப்பக் குடும்பனுக்கும் தாமரைக்கும் தங்கம் என்ற ஒரு பெண் பிறந்துள்ளது.

இவ்வாறு இருக்கும்போது எப்படி கிருஷ்ணசாமி தன்னை கருப்பக்குடும்பனின் மகன் என்று கூறமுடியும்?

அரசின் விஜிலென்ஸ் குழுதான் அவரைப் பெற்ற தந்தை எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் அல்லது குடும்பன் சாதியைச் சார்ந்தவர் அல்ல.

எனவே, தாசில்தார் கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் டாக்டர் திரு.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்று வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.

அத்தோடு டாகடர் கிருஷ்ணசாமியின் மகள். திருமதி.கே.சங்கீதா மற்றும் அவரது மகன் திரு. சியாம் இவர்களுக்கும் தேவேந்திரகுலத்தான் என்று போலியாகச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின் அவைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் Tribal நலத்துறை GO.MS.No.106 நாள் 15-10-12 ஆணைப்படி,
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது விஜிலன்ஸ் குழுமூலம் இவ்வாறு போலியாகச் சான்றிதழ் பெற்ற டாகடர் கிருஷ்ணசாமியின் மீது நடவடிக்கை எடுத்து எமது சாதியை காப்பாற்றுவது கடமை.

திருநெல்வேலி,15-8-2017.

அனுப்பப்படும் நகல்கள்:
(1). Principal Secretary to Govt State of Tamil Nad ,
Revenue Department, Secretariat, Fort St George.
Chennai -600009,
(2). Principal Secretary to Govt State

தேதி: 15-8 -2017
அனுப்புநர்,
S. சிவ ஜெயப்பிரகாஷ், A.D.S.P. (ப.நி),
செல் எண்: 9442219159
செயலாளர்: மள்ளர் பாரதம் சங்கம் (பதிவு எண் .85 / 2013)
செயலாளர்: அகிய இந்திய குடும்பர் சத்திரிய மகாசபாவின் தமிழ்நாட்டுக் கிளை,
தலைமை அலுவலகம்: வாரணாசி,
உத்தரப்பிரதேசம்.
Regd. எண் .1894 (882/1910),
ஆசிரியர்: மள்ளர் பாரதம்.

முகவரி:
எண்:C-32/86H,
ஆசாத்தெரு,
மனகாவலம் பிள்ளை நகர்,
பாளையங்கோட்டை & அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு - 627 002.

பெறுநர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
ஸ்டேட் பாங்க் சாலை,
கோபாலபுரம்,
கோயம்புத்தூர் -641018
-----------
மேற்கண்ட மூன்றும் பள்ளர் பெருமக்களே கொடுத்த புகார் ஆகும்.
சில பள்ளர் உடன்பிறப்புகள் அவரது வளர்ப்புத் தந்தையை உண்மையான தந்தை என்று நம்பி அவருக்கு ஆதவாக செயல்படுகின்றனர்.
இவர் பூர்வீகம் கோவை காமராசர் வீதி (கோவை புரூக்பீட்ஸ் அருகே இருக்கும் அருந்ததியர் வசிக்கும் பகுதி).
இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என்பது அங்கே போய் விசாரித்தால் தெரியும்.
--------
இவரது அரசியல் நுழைவே மக்களைக் காவுகொடுத்த தாமிரபரணிப் படுகொலை மூலம் நடந்தது.
1999ல் மாஞ்சோலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பணியாற்றிய கிருஷ்ணசாமி,
அவர்கள் பிரச்சனை முடிந்து வேலைக்குத் திரும்பிய பிறகு நான்கைந்து நாட்கள் கழித்து எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டனர் என்று பொய்யாக பேட்டி கொடுக்க,
ஏற்கனவே அதிருப்தியில் இருந்த நிர்வாகம் உடன்படுக்கையை ரத்து செய்து வேலையை நிறுத்தியது.
அடுத்த நடந்த திருநெல்வேலி பேரணியின்போது தி.மு.க முன்பே திட்டமிட்டு தாமிரபரணி ஆற்று நீரை அதிகமாகத் திறந்து வைத்து போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தி  ஆற்றில் தள்ளியதால் விக்னேஷ் எனும் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் (பெரும்பாலும் பள்ளர்) இறந்தனர். 500 பேர் வரை காயமடைந்தனர்.

அந்த சூடு ஆறுவதற்குள்ளே 2001 ல் திமுகவுடன் கூட்டணி வைத்து பத்து எம்.எல்.ஏ. சீட்
வாங்கியவர்தான் இந்த கிருஷ்ணசாமி.

இவருக்காக உயிரைவிட்ட எவரையும் இவர் நினைவுகூர்ந்ததோ மரியாதை செலுத்தியதோ ஒருபோதும் கிடையாது
-------------
இது போக இவர் ஹிந்துத்வா கையாள் என்பதற்கும் இரண்டு சான்றுகள் உண்டு.

குமுதம் 16.1.1998
'என் குரு சங்கராச்சாரியார்தான்' என்று கிருஷ்ணசாமி அளித்த பேட்டிக்கான அட்டைப்பட விளம்பரம்.

இது இவரது ஆரம்பகால இந்துத்துவ சார்புக்கு சான்று ஆகும்.
மேலும், நேற்று அனிதா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும்
அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும்
அதை விசாரிக்க முதல்வரையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கவுள்ளதாகவும் பேட்டி கொடுத்தார்.
நேற்று மாலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக சென்று இரவு டெல்லியில் (மிக உயர்தர ஆடம்பரமான) ஹோட்டல் ஷெரட்டனில் தங்கிவிட்டு
இன்று (06.09.2017) காலை 11மணிக்கு எந்த (அப்பாயின்ட்மென்ட்) முன் அனுமதியும் இல்லாமல் நேரடியாக பிரதமருக்கு அடுத்தநிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து அனிதா மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க மனு கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

எந்த பதவியிலும் இல்லாத ஒருவரால் நினைத்த மாத்திரத்தில் உயர்மட்ட பா.ஜ.க அமைச்சரை சந்திக்க முடிகிறதென்றால் அவர் அந்த கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருக்கவேண்டும் என்று யூகிக்கமுடிகிறது.

மேலும் நீட் தேர்வினை ஆதரிக்கும் இவர் எண்ணூற்றி சொச்சம் மதிப்பெண் மட்டுமே எடுத்த தனது மகளுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கெஞ்சி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான இட
ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் இடமும் வாங்கிக்கொடுத்தவர் ஆவார்.
இதனை பாலா பாரதி (கன்னடர்) அம்பலப்படுத்தியுள்ளார்.

இவர் தற்போது மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது தனது மகளுக்காக திருவனந்தபுரத்தில் கட்டிவரும் மிகப் பிரம்மாண்டமான மருத்துவமனைக்கு எந்த தடங்கலும் வரக்கூடாது என்பதுதான்.

எங்கெங்கு நோக்கினும் உருமறைப்பு வந்தேறிகள் !

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)
06.09.2017

Saturday, 14 June 2025

முருகனும் இசுலாமியரும்

முருகனும் இசுலாமியரும்

தமிழ் புலவர் அருணகிரி நாதர் முருகனை ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’ என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்று புகழ்கிறார்.
 அதாவது தமிழின வணிகர்கள் அரேபியா வழியாக குதிரை இறக்குமதி செய்து விற்றபோது ராவுத்தர் எனும் பெயர் பெற்றனர். அதன் பிறகுதான் இசுலாமைத் தழுவினர்.

 மீரா கண்ணு எனும் ஆசுகவி புலவர் மிகச் சிறந்த முருக பக்தராக இருந்துள்ளார்.
 அவரது கடனை முருகனே அடைத்ததாக திருச்செந்தூர் தல புராணம் கூறுகிறது.

 1930 களில் உறையூர் காதர் பாட்ஷா என்பவர் முருகன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார்.
 "சுருளிமலை மீது மேவும் சீலா.."  எனும் பாடல் மிகவும் புகழ்பெற்றது

 புதுச்சேரியில் 1970களில் முகம்மது கௌஸ் எனும் இசுலாமியர் முருகன் கோவிலே கட்டியுள்ளார்.
 இன்றும் அவரது குடும்பம்தான் கோவிலை நிர்வகித்து வருகிறது.

 முருகனை இசுலாமியர் வழிபடுவது அதிசயமோ அரிதானதோ இல்லை!
முப்பாட்டன் முருகன் அனைவருக்கும் ஆனவன்! 
 

Wednesday, 11 June 2025

ஒரே அடியில்...

 ஒரே அடியில்...

 வீராவும் செல்வமும் ஒரு பெரிய குடோனில் வேலை செய்துவந்தனர்.
 அதில் வீரா கொஞ்சம் சீனியர்.
குண்டாக நீளமான முடியுடன் இருப்பான்.
 டியோ ஸ்கூட்டியில் வருவான்.
வாய்த்துடுக்கு அதிகம்!
 எவரையும் நொடிப் பொழுதில் கவுன்ட்டர் போட்டு காலி செய்துவிடுவான்!
 செல்வம் கொஞ்சம் சின்ன பையன்.
கருப்பாக ஒல்லியாக உயரமாக இருப்பான்.
 பழைய ct 100 வண்டியில் வருவான்!
ஆனால் அந்த பழைய வண்டியை திறமையாக ஓட்டுவான்! 
 எப்போதும் மொட்டைத் தலையுடன் இருப்பான்!
கேட்டால் பெற்றோர் வேண்டுதல் என்பான்.
 
 செல்வத்தைக் கண்டால் வீராவுக்கு கொண்டாட்டம் தான்!
வெளிப்படையாக ரேகிங் செய்வான்.
 குடோனில் வேலைபார்த்த பெண்கள் முன்னிலையில் செல்வத்தை கலாய்த்து தள்ளுவான்! 
 செல்வம் முதலில் அமைதியாக இருந்து பார்த்தான்.
 பிறகு சரிக்கு சரி பேசிப் பார்த்தான்.
வீராவின் நாக்கு வலிமைக்கு செல்வத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை!
 அங்கே வேலைசெய்யும் இளம்பெண்களும் செல்வத்தை கடந்துபோகும் போது நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள்.
 ஒருநாள் வீரா வண்டியை சர்வீஸ் விட்டிருந்தான்.
செல்வம் தான் அவனை கூட்டிவந்தான்.
 அன்று செல்வத்துக்கு பிறந்தநாள்.
வீரா அவனிடம் மதியம் பிரியாணியும் செவனப்பும் பீடாவும் வாங்கித்தர சொல்லி ஏறத்தாழ மிரட்டிக் கொண்டிருந்தான்!
 சரியென்று இருவரும் வெளியே வந்தனர்!
வெளியே மரத்தடியில் காற்றோட்டமாக பெண்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
 செல்வம் வண்டியில் ஏறி உதைத்து ஸ்டார்ட் செய்தான்.
வண்டியில் ஏறிய வீரா "டிரைவர் வண்டிய ஹோட்டலுக்கு விடு" என்றான்.
 உடனே பெரிய உறுமலுடன் வண்டியின் முன்சக்கரம் மேல தூக்கியது!
 அடுத்த நொடி புழுதிக்கு மத்தியில் செல்வம் வண்டியை திடமாக பிடித்தபடி தரையில் நின்றுகொண்டு இருந்தான்!
முன்விளக்கு வானத்தை நோக்கி இருக்கும்படி பைக் நட்டமாக நின்றுகொண்டு இருந்தது!
 வீரா கீழே மல்லாக்க விழுந்து கிடந்தான்! 
 பெண்கள் விழுந்து விழுந்து  சிரித்து கொண்டிருந்தனர்! 
 

Friday, 6 June 2025

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிப்பு
நமக்கு எல்லா வசதிகளையும் செய்வது மாநில அரசு. மாநில அரசை விட அதிகம் வரி வாங்கும் மத்திய அரசு நமக்கு செய்வது ரயில், தபால், ராணுவ பாதுகாப்பு போன்றவை மட்டுமே!
மத்திய அரசு எப்படி தமிழகத்தைச் சுரண்டி கொழுக்கிறது என்பதை பலமுறை சான்றுகளுடன் பார்த்துள்ளோம்.
தற்போது மத்திய அரசால் நமக்கு ஓரளவு பலனளிக்கும் ரயில்வே பற்றி பார்ப்போம்.
கேரளாவுடன் ஒப்பிட்டால் தமிழகம் ரயில்வே வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது.
இத்தனைக்கும் இவ்விரு மாநிலங்களும் ஒரே (தென்னக ரயில்வே) மண்டலத்தில் உள்ளன.
அதாவது மாநில எல்லைகள் வேறு ரயில்வே எல்லைகள் வேறு (காண்க: படம்)
இதில் தென்னக ரயில்வே மண்டலத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் திட்டங்களும் கேரளாவுக்கு பலனளிக்கும் வகையில் செலவு செய்யப்படுகின்றன.
இது பற்றி 02.09.2022 இல் தினகரன் வெளியிட்ட செய்தி வருமாறு,
கேரளாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்!
ரயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு:
கிடப்பில் கிடக்கும் நீண்ட கால கோரிக்கைகள்
நாகர்கோவில்:
கேரளாவில் ரயில்வே துறை சம்பந்தமான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி, துவங்கி வைத்துள்ளார். மேலும் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார்.
இதில் முக்கியமாக 750 கோடியில் 27 கி.மீ தூரம் உருவாக்கப்பட்ட குருப்பந்தாரா - கோட்டயம் - சிங்கவனம் புதிய ரயில் பாதை இரு வழி பாதை திட்டம்
மற்றும் 76 கோடியில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் உள்ளிட்டவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இது தவிர எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள இருப்பு பாதை தடத்தில் எர்ணாகுளம் - கோட்டயம்- காயங்குளம் மார்க்கத்தில் புதிய மெமு ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.
கொல்லம் - புனலூர் மார்க்கத்தில் இயங்கி வந்த இரு ரயில்கள் மெமு ரயில் ஆக மாற்றம் செய்யும் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டத்தில் கொல்லம் - புனலூர் மின்மயமாக்கல் திட்டம் முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள மதுரை கோட்டம் நிர்வகித்து வருகிறது.
கோட்டம் எதுவாக இருந்தாலும் கேரள மாநிலம் அதிகளவில் புதிய ரயில்களை பெறுகிறது.
ஆனால் தமிழகம் அந்தளவுக்கான ரயில்வே திட்டங்களை பெற முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்களும் அதை நிரூபிக்கும் வகையில் இருப்பதாக ரயில் பயணிகள் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அப்படியே தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டம் வந்தாலும் கூட, கேரள பயணிகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படும் விதத்தில் தான் இயக்கப்படுகிறது என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருவனந்தபுரம் - திருநெல்வேலி மெமு ரயில் சேவை இன்னும் கனவாகவே உள்ளது.
இந்த பகுதி மின்மயமாக்கல் 2014-ம் ஆண்டு நிறைவு பெற்று இதுவரை ரயில்வே துறையால் மெமு இயக்கப்படவில்லை.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் இயங்கும் பழைய ரயில்கள் மாற்றம் செய்து விட்டு மெமு ரயில்களாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வே தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
இதே போல் சென்னை முதல் மதுரை வரை இருவழி பாதை பணிகள் முடிந்து 5 வருடங்கள் ஆகி விட்டது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இரு வழியாக மாற்றும் பணிகள் 80 சதமானம் முடிவு பெற்றுவிட்டன. ஆனாலும் இந்த பாதையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதும் இன்னும் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.
சென்னையிலிருந்து செல்லும் ரயில்களான
தாம்பரம் - ஐதராபாத் சார்மினார்,
சென்னை- புதுடெல்லி ஜிடி எக்ஸ்பிரஸ்,
சென்னை - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
போன்ற ரயில்களை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
தமிழ்நாட்டில் சமீபத்தில் திண்டுக்கல் - பொள்ளாச்சி, திருவாரூர் - காரைக்குடி, மதுரை - தேனி ஆகிய பகுதிகள் அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இதில் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் ரயில் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளாக ரயில் வசதி இல்லாத தேனி மாவட்ட மக்களுக்கு கூட தேனி - சென்னை புதிய ரயில் சேவையை தொடங்க வில்லை.
இவ்வாறு செய்வதை பார்க்கும் போது ரயில்வே துறையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை நன்கு அறிய முடிகின்றது என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ஜெனி கூறினார்.
கடந்த இருபது வருடங்களாக ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டில் தமிழகத்தை போல் எதிர்கட்சி எம்.பிக்கள் அதிகம் உள்ள கேரளா ஜொலித்தது.
பாரதிய ஜனதா ஆட்சியிலும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது.
ஆனால் தமிழ்நாடு ரயில்வே துறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருபது வருடம் பின் தங்கி காணப்படுகிறது.
இந்த நிலையை மாற்ற தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
4 செப்., 2022 

கண்ணுக்கு கண்

கண்ணுக்கு கண்!

 தமிழர் எல்லைப் பகுதி கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் ஒரு கன்னடர் இருக்கிறார் என்றால் எதிர்ப்பக்கம் கர்நாடகத்தில் இரண்டு தமிழர்கள் இருக்கின்றனர்!
கலவரம் வரும் சூழல் உருவாகி உள்ளது!
 அப்படியே தமிழருக்கு இரண்டு கண்கள் போகும் அதேநேரத்தில்  கன்னடருக்கு ஒரு கண் தான் போகும் என்றாலும் நாம் எதிர்த்து சண்டையிட வேண்டும்!
 1991 இல் கன்னடர் தமிழரை அடித்தபோது வீரப்பனார் திருப்பியடித்தார்!
 அவர் இருந்த வரை அடுத்த கலவரம் வரவில்லை!
 தமிழர்களான நமது ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு வீரப்பன் இருக்கிறான்! 
 நாம் இம்முறை நிமிர்ந்து நிற்போம்!
அடிக்கு அடி கொடுப்போம்! 
 துளு, குடகு, கொங்கணி என சிறுசிறு இனங்களையும் மராத்திய பேரினத்தையும் நம் அணியில் சேர்ப்போம்!
கன்னடர் கொட்டத்தை அடக்க நம்மால் முடியும்!
 இறுதி வெற்றி நமதே! 

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல்

இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல் 

 இதே நாம் தனிநாடாக வல்லரசாக இருந்திருந்தால் கன்னடர் தமது மொழி தமிழில் இருந்து வந்தது என்பதை ஒத்துக்கொண்டு இருப்பார்கள்!
 கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை என்று கன்னடர் சொல்வது ஒருவன் தனக்கு அப்பன் பெயரே தெரியாது என்று சொல்வதைப் போன்றதாகும்!
 கன்னடரை நாம் குறைத்து எடைபோடக் கூடாது!
நமக்கு அழிவு அவர்களால்தான் நடக்கப் போகிறது!
 இது 2000 ஆண்டுகள் தொடரும் பகை!
 அதாவது கரிகாலன் தந்தை காலத்தில் இந்திய துணைக்கண்டத்தை விழுங்கிவிட்டு எஞ்சியிருந்த தமிழகத்தை நோக்கி வந்த மௌரிய பேரரசை வழிநடத்தி வந்தது கர்நாடகப் பகுதி வடுகரே! 
 அன்று மூவேந்தர் கூட்டணிப்படை பெரும்பாடுபட்டு இப்படையெடுப்பை முறியடித்தது!  
 கர்நாடகத்தின் பாழி நகரில் இருந்த படைமையத்தை அழித்தே போர்முடிவுக்கு வந்தது.
 அப்போது கன்னடம் ஒரு தனிமொழியாகவே இல்லை திரிந்த மொழியாக இருந்தது!
 அதாவது கன்னடர் கன்னடராவதற்கு முன்பே நமக்கு எதிரிகளாகி விட்டனர்.
 அதன் பிறகும் கன்னடர் மூன்று முறை தமிழகத்தைப் புரட்டிப்போட்டு உள்ளனர்!
 வடதமிழகம் தவிர்த்து பாண்டிய நாடு வரை பிடித்த களப்பிரர் கன்னடரே! 
 விஜய நகர அரசாக தமிழகத்தைப் பிடித்ததும் கன்னடர்தான்!
 (கன்னடரால் நாயக்கர்களாக நியமிக்கப்பட்ட தெலுங்கர் பிறகு தனியரசுகளை நிறுவினர்.
 இந்த நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பெருமளவு ஆந்திராவிலிருந்து தெலுங்கர் குடியேறி நிலவுடைமை பெற்று தமிழகத்தில் வலுவாக நிலைபெற்றனர்)
 நாயக்கர் காலத்திலும் தென்தமிழக பாண்டிய சிற்றரசுகளை ஒழிக்க முடியாமல் திணறிய தெலுங்கு நாயக்கர்கள் வித்தலராயன் (அ) வெங்கலராசன் எனும் கன்னட தளபதியை அழைத்து வந்தே பாண்டிய வாரிசுகளை இல்லாதொழித்தனர்.
 இந்த படுகொலைக்கு பரிகாரமாக திருநெல்வேலியில் இவன் வெட்டியதே கன்னடியன் கால்வாய் எனும் மாபெரும் கால்வாய் என்று நம்பப்படுகிறது! 
 வித்தலராயன் பற்றி மறைத்து தாமே பாண்டியரை வென்றதாக நாயக்கர்கள் காட்டிக்கொண்டனர்!
 கன்னடியன் கால்வாய்க்கு வேறொரு கட்டுக்கதையை எழுதிவைத்தனர்! 

 தமிழரும் சளைத்தவர் இல்லை!
 இந்திய துணைக்கண்டத்தின் மையம் அதாவது கன்னோசி வரை வென்ற புலிகேசி தமிழகத்தில் பல்லவ நாட்டை நிர்மூலமாக்கிவிட்டு பாண்டிய நாடு வரை வந்து கொடி நாட்டிச் சென்றவன்!
 நமக்கு ராசராசன் போல கன்னடருக்கு புலிகேசி!
 பல்லவர் மீண்டெழுந்து பாண்டியருடன் கைகோர்த்து சாளுக்கிய அரசை வென்று தலைநகர் வாதாபியை அழித்து புலிகேசியின் கொட்டம் அடக்கினர். 
 ராசேந்திரன் படையெடுத்த காலத்தில் கன்னட நாட்டு பிராமணரையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக அந்த நாட்டு கல்வெட்டு கூறுகிறது!
 (சில ஆண்டுகளுக்கு முன் அன்னிகேரி எனுமிடத்தில் பல எலும்புக்கூடுகள் ஓரிடத்தில் கிடைத்த போது இந்த படுகொலை சோழர் செய்தது என்று கன்னடர் வதந்தி பரப்பினர்)
 மைசூர் அரசு திருமலை நாயக்கர் காலத்தில் தமிழகத்தின் மீது படையெடுத்து மதுரைக்கு மிக அருகேவரை முன்னேறி வந்தபோது ராமநாதபுரம் மறவர் படைகள் வந்துதான் அப்படையெடுப்பை திருப்பியடித்து புறப்பட்ட இடத்திற்கே தள்ளியது!
 இப்படி வரலாறு நெடுக தமிழரும் கன்னடரும் மோதிக்கொண்டே இருந்துள்ளனர்!
 தமிழக கன்னட எல்லையும் கூட இழுபறியிலேயே இருந்து வந்துள்ளது!
 அதாவது நம் எல்லையை அவர்கள் ஆக்கிரமிப்பதும் நாம் மீட்பதும் என!
 கர்நாடகத்திற்குள் ஏறத்தாழ அம்மாநில மத்தியில் உள்ள தமட்டக்கல் எனுமிடத்தில் 6 ஆம் நாற்றாண்டு தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது! 
 அதில் ஏழூர் சாத்தன் எனும் பெயருள்ளது.
 அப்போது அங்கே தமிழர் அரசாட்சி பரவியிருக்கவும் இல்லை! 
தமிழகத்தினுள் இத்தகைய பழமையான கன்னட சான்று எதுவும் கிடையாது!
 1956 இல் தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லை மாவட்டங்களை எத்தனையோ சான்றுகள் இருந்தும் தமிழகத்திற்கு கிடைக்கவிடாமல் பறித்த கன்னடர் ஏற்கனவே இருந்த எல்லையைத் தாண்டி அன்றைய கோவை மாவட்ட ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டனர்!
 திராவிட மாயையில் கிடந்த , கிடக்கும் தமிழர் இதை மீட்க முயலவே இல்லை!
 இதுவே நமது இன்றைய தோல்விக்குக் காரணம்!
 குடகு மொழி பேசும் கொடகர் பகுதியில் காவிரி உற்பத்தி ஆகிறது! 
 அவர்களையும் அடக்கி ஒடுக்கிவிட்ட கன்னடர் காவிரி நீரை மறித்து தேவையில்லாமல் தேக்கி தமது மாநில தொழிற்சாலைகளுக்கு வழங்கியும் தமிழகத்தில் அவர்களின் பங்காளிகளான திராவிட அரசுகள் நீரில்லாத ஆற்றில் மணலை அள்ளி விற்றும் மனிதத்தன்மை அற்ற அரசியல் செய்கின்றனர்!
 கேட்டால் கன்னடர்கள் நல்லவர்களாம் சில கன்னட வெறியர்கள் இப்படி அரசியல் செய்கின்றனராம்!
 எனவே நாம் இருவருமே சண்டை போடாமல் இருக்க வேண்டுமாம்!
 இதுவும் ஒரு திராவிடப் பிரச்சாரம்!
அடிப்பவனையும் அடிவாங்குபவனையும் ஒரே தரத்தில் வைப்பது!
 ஒரு உயிருக்கு தண்ணீரை மறுப்பது எவ்வளவு பெரிய பாவம் என்று விலங்குகளுக்கு கூட புரியுமே?!
 கன்னட இனத்தில் ஒருவருக்கு கூடவா இந்த அறிவும் இரக்கமும் இல்லை!
 கர்நாடக ஆறுகள் ஆண்டுக்கு ஆயிரம் டிஎம்சி கடலில் சென்று கலக்கின்றன. 
 ஆனால் தமிழகத்துக்கு வரும் 100 டிஎம்சி நீரை மறித்து அரசியல் செய்கின்றனர்.
 கேட்டால் கடலில் கலக்கும் 10 டிஎம்சி காவிரி நீரை சேமிக்கிறார்களாம்.
 கன்னடரோ உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டது இல்லை!
 அவர்கள் பணிந்தது வீரப்பனார் நீட்டிய துப்பாக்கிக்கு மட்டும்தான்!
 இன்றுவரை தமிழகத்தை ஒரு வெள்ள வடிகாலாக ஒரு சாக்கடையாகவே  பயன்படுத்துகின்றனர் கன்னடர்.
 இதனால் நெற்களஞ்சியமான டெல்டா விவசாயம் பெரும்பங்கு அழிந்துவிட்டது.
 மன்னார்குடி வரை நிலத்தடியில் கடல் நீர் புகுந்துவிட்டது.
 ஹிந்திய அரசு இதைத் தட்டிக்கேட்கவில்லை.
 ஹிந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இத்தனை ஆண்டுகால பகையிருந்த போதும் இப்போது வரை சிந்து நதியை மறிக்கவில்லை!
 தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனரே தவிர நடைமுறையில் எதுவும் செய்யவில்லை! 
 ஹிந்தியாவை நம்பி பல ஆண்டுகளாக போராடி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தையும் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக பயன்படுத்துகிறது.
 பாகிஸ்தானுக்கு தண்ணீர் விடும் ஹிந்தியருக்கு ஒரு தமிழ்க் குழந்தை தண்ணீர் குடிப்பதில் உடன்பாடில்லை!
 ஹிந்தியர் ஆதரவுடன் காவிரி ஆணையத்திலேயே தீர்மானத்தை நிறைவேற்றி மேகதாது அணை கட்ட கன்னடர் தயாராகிவிட்டனர். 
 இந்த ஆணையம் சூழ்ச்சியாக டெல்டா கால்வாய்களைத் தூர்வார கடன் பெற்றுத்தருவதாக ஒரு அம்சத்தைச் சேர்த்து தமிழக அரசை ஆணைய கூட்டத்திற்கு வரவழைத்து மேகதாது கட்ட தீர்மானம் கொண்டுவந்து தமிழகமும் புதுச்சேரியும் எதிர்த்தும் கூட அத்தீர்மானம் நிறைவேறியுள்ளது.
 இதன் மூலம் வெளிநாட்டு கடனாக தமிழக அரசுக்கு கிடைக்கும் 1400 கோடியில் ஏறத்தாழ 40% திமுகவுக்கு கமிசன் கிடைக்கும்.
 இந்த பணத்திற்காக தீர்மானம் நிறைவேறும் என்று தெரிந்தும் பல ஆண்டுகள் செய்தது போல புறக்கணிப்பு செய்யாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு பிறகு வெளியே வந்து அயோக்கித்தனம் செய்துவிட்டார்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாடகமாடி பேட்டி கொடுக்கிறார்.
 அதாவது இன்னும் சில ஆண்டுகளில் சொட்டு நீர் கூட தமிழருக்கு கிடைக்காது.
 5கோடி தமிழர்களுக்கு தண்ணீர் இருக்காது!
 இது ஒரு வெளிப்படையான இனப்படுகொலை ஆகும்.
 இந்த இனப்படுகொலை குற்றவாளிகளைத் தான் அதுவும் அவர்கள் வெளிப்படையாக இனவெறுப்பு பேசிக் கொண்டிருந்த போது தான்  தமிழக முதலமைச்சரே நேரில் சென்று பிரச்சாரம் செய்து ஆட்சியில் அமர்த்தினார்.
 ஈழத்தில் ஹிந்தியாவும் சிங்கள அரசும் செய்த இனப்படுகொலைக்கு துணைநின்றது போலவே 
 தமிழகத்திலும் ஹிந்தியரும் கன்னடரும் செய்யவுள்ள நேரடி இனப்படுகொலைக்கு திமுக துணை நிற்கிறது.
 நியாயப்படி தமிழர்தான் கன்னடரை கொலைவெறி கொண்டு அடிக்க வேண்டும்.
 ஆனால் கன்னடர் தொடர்ந்து தமிழரை அடிப்பதும் கொல்வதும் நடக்கிறது.
1982 இல் கன்னடத் திணிப்பை எதிர்த்து போராடிய நான்கு கோலார் தமிழர்களை சுட்டுக் கொன்றதன் மூலம் தொடங்கியது கொலைத் தாண்டவம். 1991 இல் மிகப்பெரிய கலவரம் நடத்தி நூறு பேர் வரை கொன்று பல நூறு பேரை முடமாக்கி 2 லட்சம் தமிழரை அடித்து விரட்டிவிட்டனர் கன்னடர்.
 தொடர்ச்சியாக அவ்வப்போது தமிழரைத் தாக்கியே வந்துள்ளனர்.
 2016 இல் கூட தமிழர்களைக் குறிவைத்து கலவரம் நடந்தது.
 தற்போது நடந்த கிரிக்கெட் மோதல்களையும் இதில் சேர்க்கலாம்.
 இப்படி முழுவெறியுடன் இருக்கும் கன்னடர் மேகதாது அணையைக் கட்டிவிட்டால் தமிழர் அழிவுக்காலம் தொடங்கிவிடும்.
 நாம் குடகு மழைக்குப் போகும் மழை மேகங்களை தடுத்து செயற்கை முறையில் மழை பொழிய வைப்பதைத் தவிர வேறு வழியிருக்காது!
 அப்படிப் பொழிந்தாலும் அது அமில மழையாகவே இருக்கும்!
 திராவிடத்தை வீழ்த்தி இனப்பற்றுள்ள தமிழரை ஆட்சியில் அமர்த்தி மேகதாது அணையைத் தடுக்க வேண்டும்! 
 கன்னடர் கொட்டமடக்க இன்னொரு வீரப்பன் உருவாக வேண்டும்! 
 இந்த தேர்தலை விட்டால் மேகதாது கட்டப்படும்! தமிழகத்தில் நிரந்தர பஞ்சம் வரும்!
 நாம் இன்னொரு சோமாலியா ஆக வேண்டியதுதான்! 
 அதன்பிறகு எத்தனை வீரப்பன்கள் உருவானாலும் பலனில்லை! 
 
 
 
 

Tuesday, 3 June 2025

செங்கிஸ்கான் கருணாநிதி

 செங்கிஸ்கான் கருணாநிதி

 ஈவேரா வசதி படைத்தவர்! ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்! நகர வாசி!
எம்.ஜி.ஆர் ஏழை என்றாலும் அழகும் உடல்வாகும் கொண்டவர்! 
ஜெயலலிதா கூட ஓரளவு பின்புலம் கொண்டவர்! அழகு வாய்க்கப் பெற்றவர்! நகர வாசி!
 பழனிச்சாமி கூட சமூக மற்றும் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்! உடல்வாகு வாய்க்கப் பெற்றவர்! கல்வித் தகுதியும் உண்டு!
 ஆனால் கருணாநிதி அப்படி இல்லை!
 அழகு இல்லை! உடல்வாகு இல்லை! ஒரு கண் குறைபாடு! தகர குரல்!
 கிராமத்தில் பிறந்தவர்!
 ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்!
கல்வியறிவும் பெரிதாகக் கிடையாது!
 தனிமனிதனாக திருட்டு ரயில் ஏறி சென்னை வந்துள்ளார்! 
 இப்படிப்பட்ட ஒரு மனிதர் ஆசியாவிலேயே பணக்காரனாக உயர்ந்திருக்கிறார்!
 ஒரு இனத்தையே சுரண்டி அழித்து பெரிதாக எந்த தண்டனைக்கும் ஆளாகமல் 
3 மனைவிகள் பல துணைவிகள் என சுகபோகமாக 90 வயது வரை வாழ்ந்து
 எந்த தகுதியும் இல்லாத தன் வாரிசுகளை ஆதிக்க சக்தியாக ஆக்கிவிட்டு செத்திருக்கிறார்!
 இந்த மண்ணில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு அவருடைய தாக்கம் இருக்கும்!
 அவரை நினைக்கும்போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது! 
 கருணாநிதி செங்கிஸ்கான் உடைய மறுபிறவி என்றே சொல்லலாம்! 
#HBDfatherOFcorruption 
 

சண்டாள சதிகாரன்

சண்டாள சதிகாரன்

 ஒரு நபர் இருந்தார். ஒரு கிராமத்தில் பலான புரோக்கருக்கு பிறந்தவர்.
 சரியான திருட்டு புத்தி வாய்ந்தவர்.
 அவரது தாத்தா காலத்தில்  இருந்தே வெள்ளையருக்கு சேவை செய்த வகையறா.
 அவருக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள் அவளும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அவளது அண்ணன்கள் இவர் மீது சந்தேகம் கொண்டு அடித்து உதைக்கின்றனர். கண்ணிலேயே குத்தினர். 
 எப்படியோ தப்பித்தவர் ஊரில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று ஊரைவிட்டு ஓட தீர்மானித்தார்.
 பக்கத்து ஊரில் இவருக்கு உறவினரான ஒரு நாட்டியக்காரி அக்கா சென்னையில் ஒருவருக்கு வைப்பாக இருந்தாள்.
 காலில் விழுந்து கெஞ்சியதால் எடுபிடி வேலைக்கு இவரை சென்னைக்கு அழைத்துச் சென்றார்கள்.
 முதல் வகுப்பு பெட்டியில் அந்த செல்வந்தரும் இவரது அந்த அக்காவும் உல்லாசமாக இருக்க டிக்கெட் இல்லாமல் வெளியே கிடந்த இவரை பரிசோதகர் பிடித்தார்.
 கதவைத் தட்டி கேட்க செல்வந்தர் இவரை யார் என்று தெரியாது என்று கைகழுவி விடுகிறார்.
 ரயிலில் இருந்து கழுத்தைப் பிடித்து தள்ளப் படுகிறார். 
சென்னைக்கு சற்று முன்னதாக இரவில் இறக்கிவிடப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
 கையிலும் பணமில்லை. அப்போது அருகில் ஒரு பத்திரிக்கையாளர்களுக்கான கூட்டம் ஒன்று நடக்கிறது.
  இவரும் அங்கே சென்று உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறார்.
 அங்கே இருந்தவர்கள் விசாரித்த போது தானும் எழுத்தாளர் என்றார்.
 நகரத்துக்கு சென்று செக்ஸ் புக் வாங்கி வந்து அதை கையால் எழுதியே பல பிரதிகளை தயார் செய்து அநியாய விலைக்கு விற்ற தன் விடலைப் பருவ அனுபவத்தையும் 
அவ்வப்போது பெண்களை ஏமாற்ற காதல் கடிதங்கள் எழுதிய தனது அனுபவத்தையும் 
 கொஞ்சம் மேம்படுத்தி தான் கையால் எழுதும் பத்திரிக்கையை நடத்தியதாகவும் தற்போது உள்ளூரில் மட்டும் பிரபலமாக இருக்கும் ஒரு சிறு பத்திரிக்கை நடத்துவதாகவும் தன்னை இறக்கிவிட்ட செல்வந்தரைப் பற்றிச் சொல்லி தான் அவருடைய உறவினர் என்றும் பொய் சொன்னார்.
 இரண்டொரு நாட்கள் அவர்களுடன் சுற்றிக் கொண்டிருந்த இவர் ஒரு இரவில் அவர்களுடைய பொருட்களைத் திருடிக்கொண்டு ஓடுகிறார்.
 அந்த அக்காவைத் தேடி அலைகிறார். அப்போது ஒரு பிளாட்பாரத்தில் தங்கினார். அங்கே ஒரு பெண் ஒரு வாடகை வீட்டில் இன்னொருவருக்கு வைப்பாக இருந்தார். அங்கே சோறு போட்டால் போதும் என்று வேலைக்கு சேர்ந்தார். சில நாட்களில் உன்னைப் பற்றி ஊரெல்லாம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியும் தன் பாலியல் புத்தியாலும் அந்தப் பெண்ணை தன் வழிக்கு கொண்டு வந்தார்.
 அந்த வயதான செல்வந்தர் வந்திருந்த நேரம் அவர் மனைவியிடம் இதை போட்டுக் கொடுத்து அவர் இங்கேயே தங்கும் படி செய்து விடுகிறார்.
 சிறிது காலத்தில் அந்த செல்வந்தரும் சந்தேகமான முறையில் இறந்து விடுகிறார்.
 அந்த வாடகை வீட்டில் அவருடைய பெயரை தான் எடுத்துக் கொண்டு இவர் செட்டில் ஆகிவிடுகிறார். குடும்பத் தொழிலான புரோக்கர் தொழிலை ஆரம்பிக்கிறார். அந்த நாட்டியக்காரி அக்காவை கண்டுபிடிக்கிறார்.
 அவள் மூலம் இன்னொரு அக்காவுக்கு தம்பியாக இருந்த ஒருவரின் பழக்கம் கிடைக்கிறது.
 இவரும் அண்ணன் தம்பி போல ஆகின்றனர்.
 அக்காவின் புண்ணியத்தால் ஒரு பணக்கார பெரியவருடன் நெருக்கம் கிடைக்கிறது.
  அவர் ஒரு லெட்டர்பேடு கட்சி நடத்திவந்தார்.
 அதில் இவர்களும் சேர்கின்றனர்.
பெரியவர் சரியான பெண்பித்தர் ஆனால் ஒரு பெண்ணை ஒரு முறைதான் தொடுவார்.
 அவரது குறுக்கு புத்தி வேலை செய்தது.
தன் வகையறாவில் ஒரு இளம்பெண்ணை வேலைக்காரியாக அனுப்பி வைத்தார்.
 இவரது வழிகாட்டுதலில் அந்த பெண் அந்த பெரியவரை கவிழ்த்து வேலைக்காரி, வைப்பாட்டி, வாரிசு, மனைவி என்று முன்னேறி அவரது சொத்துக்களை அடைகிறாள்.
 இதன் மூலம் அவரை கேவலப்படுத்தி கட்சி தலைமையில் இருந்து இறக்கி தன் அண்ணாவை தலைமைக்கு உயர்த்தி அக்காக்களின் புண்ணியத்தால் பிறரை சரிகட்டி இவ்விருவரும் பதவிகளை அடைகின்றனர்.
 ஒரு நடிகரிடம் வைப்பாக இருந்த இன்னொருத்தியையும் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கி ஒரு மகள் பிறந்த பிறகு பெரிய பிரச்சனை ஆகிறது. அந்த குழந்தை தன் மகளே இல்லை என்று கடைசி வரை சாதிக்கிறார்.
 இன்னொரு முக்கிய நடிகர் இவரது அக்கா சேவைக்காக இவருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தார்.
 ஆனால் வேறொருத்தி தன் அழகான மகளை நடிகையாக்கி இந்த முக்கிய நடிகருடன் கோர்த்துவிட்ட பிறகு பிரச்சனை வருகிறது. இவருக்கு அழிவுக்காலம் ஆரம்பமாகிறது.
 இன்னொரு மசாலா நடிகை இவர் மூலம் தொழில் செய்து வந்தாள்.
  அவளை கர்ப்பமாக்கி ஒரு மகனை கொடுக்கிறார்.
 இந்த நடிகை அவரது மூன்றாவது மனைவி பற்றி இரண்டாவது மனைவியிடம் சொல்லி குடும்பத்திலும் பிரச்சனை ஆகிறது.
 இன்னொரு சினிமாக்காரர் இவரது சேவைக்கு தாசனாக இருந்தவர் ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்த இவரைப் பற்றிய உண்மைகளை பக்கம் பக்கமாக எழுதினார். ஒரு புரோக்கரிடமே ஒரு விபச்சாரி பணம் வாங்கலாமா என்று ஒரு விபச்சார விடுதியில் அவர் பிரச்சனை செய்தது வெட்ட வெளிச்சமானது.
 அவர் செக்ஸ் கதைகள் எழுதி பணம் சம்பாதிப்பதும் அவ்வப்போது திருடுவதும் வெளியே தெரிந்தது. 
இப்படி எத்தனையோ பிரச்சனைகள் வந்தன.
 ஆனாலும் இவரை சரிக்க முடியவில்லை.
 ஏனென்றால் பல வைப்புகளை மெயின்டெய்ன் செய்த இவரது புரோக்கர் குடும்பம் முக்கியமாக அவர்கள் மூலம் வரும் கறுப்பு பணத்தை எப்படி கையாள்வது என்று நன்கு தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் அரசியலில் இறங்க பயந்தனர். 
 இவர் அரசியலில் இறங்கியதால் அவரது சமுதாயமே மாபியா போல இவரின் கீழ் ஒன்றிணைந்தது.
 கறுப்பு பண மையமாக இவர் மாறியிருந்தார்.

 தொடரும்...
 
 

Saturday, 24 May 2025

கோபுரங்கள் சாய்வதில்லை அகதிகளின் கதை

கோபுரங்கள் சாய்வதில்லை அகதிகளின் கதை கோபுரங்கள் சாய்வதில்லை - இரு அகதி(?)களின் கதை 03.01.2016 1982ல் இரண்டு நண்பர்கள் கடற்கரையில் சந்தித்துக் கொண்டனர். 20 ஆண்டுகள் முன்பு கொழும்பு காவல்துறையிடமிருந்து தப்பித்து கள்ளத்தோணியில் கடல்கடந்து வந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர். அதில் ஒருவர் வெற்றியம்பதி என்ற ஊரில் குடியேறினார். 15 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். திருமண வயதில் பெண் இருந்தாள். அவளுக்கு 80 பவுண் நகை சேர்த்துவைத்திருந்தார். அவள் பெயர் அருக்காணி. அவளுக்கு மாப்பிள்ளை அமையவில்லை. இன்னொருவர் சென்னையில் குடியேறினார். வட்டிக்கடை வைத்து வசதியாக இருக்கிறார். திருமண வயதில் அவருக்கு முரளி என்றொரு மகன் இருந்தான். நல்ல படிப்பு, பெரிய நிறுவனத்தில் மேலாளராக இருந்தான். இருவருக்கும் திருமணமானது. முரளிக்கு அருக்காணியைப் பிடிக்கவில்லை. தமிழர் மண்ணான பெங்களூரில் ஒரு ஜூலி என்றொரு தமிழ்ப்பெண்ணை பார்த்து காதல்வயப்படுகிறான். தனக்கு திருமணமானதை மறைத்து அவளைத் திருமணம் செய்துகொள்கிறான். இப்படி மேற்கொண்டு கதை செல்கிறது. ஆமாம். இதில் அகதி முகாம் கொடுமைகள் வரவில்லையே? இது அகதி முகாம்களில் இருக்கும் 2லட்சம் தமிழர்களின் கதை இல்லை. தமிழகம் முழுவதும் வாழும் 5லட்சம் அகதிகள் இல்லையில்லை எப்படியோ குடியுரிமை பெற்றுவிட்ட ஈழத்தமிழர்களின் கதை.

Friday, 23 May 2025

இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு

 கண்ணாடியைப் பார்த்து என் கூந்தலில் இருந்த சில நரைமுடிகளை நகவெட்டியை வைத்து வெட்டிப் போட்டேன்.
 அகவை நாற்பதைத் தொடவுள்ளது. இன்னும் சில காலம் தான். நாகரீகத்தின் ஆதித்தொழிலில் 40 வயதுக்கு மேல் வருமானம் குறைந்துவிடும்.
 அதன்பிறகு என்ன செய்வது என்று நான் சிந்திப்பதில்லை. ஏனென்றால் அதற்கான நேரமும் இல்லை துணிச்சலும் இல்லை.
 கதவு தட்டப்பட்டது. திறந்தேன்.  "அத்தை" தான்.
"ஏன்டி இவ்வளவு நேரம்?!"
"சீவி சிங்காரிக்க வேண்டாமா அத்தை?!"
"அத கேக்கல வர்றதுக்கு ஏன் இவ்வளவு நேரம்? எவனோடடி ஊர்சுத்திட்டு வர்ற?"
"கடைவீதிக்கு போய் மேக்கப் சாமான்கள் வாங்கப்போனேன்"
"ம்..! வாசனை பத்தலையே?! பூவும் வைக்கலையா?"
"அத்தர் பூசினேனே! போதும் போதும்!"
"ஆமா... வர்றவன் உன் வீட்டுக்காரன் பாரு மல்லிப்பூவோட வர்றதுக்கு?! இந்தா பூ"
"அத்தை பசிக்குது"
"சனியனே! மதியம் நல்லா சாப்டலயா நம்ம தொழில்ல மதியத்துக்கு பிறகு சாப்பிட முடியாதுனு உனக்கு தெரியாது! இரு சர்பத் அனுப்புறேன்"
 அத்தை போய்விட்டாள்.
இவளும் ஆண்களைப் போலத்தான். இளமை இருந்தபோது செல்லம், பட்டு என்று எவ்வளவு கொஞ்சுவாள் இப்போது நான் சனியன் ஆகிவிட்டேன்.
 சர்பத்தை குடித்துவிட்டு படுக்கையில் காத்திருந்தேன்.
 இந்த விலைமாதர் விடுதியில் பத்து ஆண்டுகள் ஓட்டிவிட்டேன். அனாதை! ஏமாற்றிய காதலன்! கற்பழிப்பு! பிச்சை! போலீஸ்! விபச்சாரம்! அடுத்து என்ன...?! சாவுதான்!
 என் தொழில்முறை தோழி ஒரு யோசனை கூறியிருந்தாள்!
 "இளமை இருக்கும்போது கொஞ்சம் வயதான பணக்காரனை வளைத்துப் போட்டு சின்னவீடு ஆகிவிடு! அப்படியே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டால் இரண்டாம் தர வாழ்க்கையாவது கிடைக்கும்".
 இளமை இருந்த திமிரில் அந்த அறிவுரை காதுகளில் ஏறவில்லை! 
 இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை!  
 என் உருவம் சிறியது! உள்ளாடை போடாமலே நேராக குத்திட்டு நிற்கும் என் மார்பகம்! எவனையும் அளவுக்கு மீறி கசக்க விட்டதில்லை! அளவான உணவு மற்றும் நல்ல பகலுறக்கம்! அதனால் வாய்த்த கட்டான உடல்! கொஞ்சம் நடனம் கற்றுக் கொடுத்துள்ளனர்! தீய பழக்கங்கள் பக்கம் போகவில்லை! எனவே இப்போதும் பார்க்க 25 வயது போல இருக்கிறேன் (என்று நினைக்கிறேன்).
தோழி சொன்ன திட்டத்தை இன்றே நிறைவேற்ற வேண்டியதுதான்.
 வருபவன் கொஞ்சம் பணக்காரனாக இருந்தால் சரி!
 இந்த ஆண்களைக் கவிழ்ப்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை!
 ஆண் ஒரு பெண்ணின் உடல் மீது வைத்திருக்கும் ஆசைதானே இந்த உலகமே இயங்க அடிப்படை!
 ஆறுதலாக நான்கு வார்த்தைகள்!
பிறகு கொஞ்சம் வலியைத் தாங்கிக்கொண்டால் போதும்! காலில் விழுந்து கிடப்பார்கள்!
 கதவு தட்டப்பட்டது! திறந்தேன்!
 ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் நின்றுகொண்டு இருந்தார்!
 இருவரும் ஒருவருக்கொருவரை பார்வையால் அளந்தோம்!
 அவரை கையைப் பிடித்து உள்ளே இழுத்து கதவைத் தாழிட்டேன்!
 சிலர் தாழிடும்போது பின்புறத்தில் இருந்து கட்டிப்பிடிப்பார்கள்! இவர் அப்படி இல்லை! தலையைக் குனிந்தபடி நின்றுகொண்டு இருந்தார்.
 நல்ல உடைகள் உடுத்தி இருந்தார்! நடுத்தர வர்க்கம் என்று தெரிந்தது! அரசாங்க ஊழியராக இருக்கலாம்!
 "என்னங்க முதல் தடவையா?!" 
"ம்"
"உக்காருங்க! இந்தாங்க தண்ணி குடிங்க!"
"இல்ல வேண்டாம்.."
"சரக்கு எதும்..."
"இல்ல பழக்கமில்ல"
"டீ கொண்டு வர சொல்லவா"
"இல்ல அதுவும் பழக்கமில்லை" 
"சரி உக்காருங்க"
அவர் உட்கார்ந்தார். அருகில் அமர்ந்தேன்.
"சொல்லுங்க என்ன பண்ணனும்?!"
"நா அதுக்காக வரலை! ஏதோ வேகத்துல வந்துட்டேன்"
"முதல் தடவை எல்லாரும் இப்டித்தான் சொல்வாங்க! கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா நானே போதும்னு கையெடுத்து கும்புடுற மாதிரி பண்ணுவீங்க!"
 அவர் என் முகத்தைப் பார்த்து சிரித்தார்.
"நா என்ன சொன்னாலும் செய்வீங்களா?!"
"செய்வேன். என்ன நீங்க என்னவேணாலும் செய்யலாம்!"
 ஏன்தான் இந்த வார்த்தைகள் ஆண்களுக்கு ரொம்ப பிடிக்குமோ தெரியாது!
  அவர் தயாரானார்! தன் கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்தார்.
 "அங்கே போய் நில்லு"
அடடா! என்ன அதிகாரம்! 
கொஞ்சம் தூரம் போய் நின்றேன்! 
அவர் தன் சட்டையைக் கழற்றினார்.
நானும் என் உடைகளைக் கழற்றினேன்!
அவர் கண்களை சுருக்கி விரித்து பார்த்தார்.
கண் கண்ணாடி இல்லாமல் அவருக்கு மங்கலாகத் தெரிகிறேன் என்று புரிந்தது.
 சட்டைப்பையில் சிறிய பொட்டலம் வைத்திருத்தார் அதில் பாரம்பரிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் வாசனைப் பவுடர் இருந்தது. அதை என்னை நோக்கி விட்டெறிந்து "இதைப் போட்டுக்க" என்றார்.
 நான் அதைக் கைகளில் கொட்டி கழுத்து அக்குள் மார்பு என பூசிக்கொண்டேன்! 
 கட்டிலில் அமர்ந்தபடி அவர் கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் நீட்டி குழந்தை போல அழைத்தார்! 
 நான் அருகே வந்ததும் கட்டி அணைத்துக் கொண்டார்.
 அவர் வலது காதை என் இடது மார்பில் வைத்து அழுத்தியபடி இறுகக் கட்டியணைத்தார்.
 நான் ஏதோ சொல்லவர "ஷ்..." என்று அமைதிப் படுத்தினார்.
 அவர் என் இதயத் துடிப்பைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
 மார்புக்கு அடியில் என் விலா எலும்புகளில் கைவைத்து நான் மூச்சுவிடுவதை உணர்ந்தார்.
ஐயோ பாவம்! காதல் தோல்வி அடைந்தவர்! இவருடைய காதலி இறந்துவிட்டாள் போலிருக்கிறது! அவளை உயிரோடு இருப்பதாக உணர்வதற்காக இப்படி செய்கிறார்!
 அவர் தலையை என் மார்போடு அணைத்தேன்.
என் மூச்சுக்காற்று அவர் மீது படும்படி செய்தேன்!
என் மார்பைச் சுட்டது அவரது கண்ணீர்.
கொஞ்ச நேரம் அழவிட்டேன். பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டேன். தலைமுடியைக் கோதிவிட்டேன்!
முதுகைத் தடவிக் கொடுத்தேன்!
 "தங்கம்... எந்...தங்கம்! எந்ந்ந்... தங்க்...கம்!" என்று அவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்ததார். 
சில காதல் தோல்வி அடைந்தவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள்! ஒரு பெண்ணின் உடலில் இன்னொரு பெண்ணின் ஆன்மாவைத் தேடுவார்கள்! பிறகு அது கிடைக்காமல் மேலும் நொறுங்கிப் போவார்கள்! 
 பார்க்கவே பாவமாக இருக்கும்!
 நான் அணைத்தபடி அவரைத் தூங்கவைப்பது போல  தட்டிக் கொடுத்தேன்! அவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார்! விசும்பியபடி கைக்குட்டையால் கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டார்!
 நான் அவர் அருகில் அமர்ந்தேன்!
 அவரது ஒரு கையை என் மார்பில் பதியுமாறு அணைத்துக்கொண்டு ஒட்டி உட்கார்ந்தேன்!
"என்ன ஆச்சுங்க?! ஏன் அழறீங்க?"
"என் காதலி நினைவு வந்துருச்சு" 
"அவங்க பேரு தங்கமா?!"
"இல்ல! நா அவள அப்பிடித்தான் கூப்பிடுவேன்!"
"ம்..."
"இன்னைக்கு கடைவீதில உன்னைப் பார்த்தேன்! அவள மாதிரியே இருந்தே! அதான் பின்னாடியே வந்தேன்"
 "கவலைப் படாதீங்க எல்லாம் சரியாயிடும்! ஆமா உங்களுக்கு ஏன் அவங்க கிடைக்காம போனாங்க?! உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்கிட்ட சொல்லலாம்!"
 "அவ எங்க வீட்டுக்கு பக்கத்து தெரு! சொக்கத் தங்கத்துல செஞ்ச சிலை மாதிரி இருப்பா! அவ பேரு தெரியாதப்பவே அவளுக்கு நா எனக்குள்ள வச்ச பேருதான் தங்கம்! தங்கத்தை ரொம்ப நாளா ஒரு தலையாக் காதலிச்சேன்! ஆனா என் தங்கத்துக்கு என்ன புடிக்கல! அப்பறம் சாக மனசில்லாம எங்கேயோ போய்ட்டேன்! ஆனா ரொம்ப நாள் கழிச்சு விதி எங்களை சேத்துவச்சது!"
 "அப்போ அவங்க இப்ப..."
"என் மனைவி!"
"அவங்க கிடைச்சிட்டாங்களே அப்பறம் ஏன் இவ்வளவு சோகம்?!"
"அவ மனசுல யாரோ இருக்காங்க! அவளால என்னோட ஒட்ட முடியல! காதலி கிடைச்சிட்டா ஆனா காதல் கிடைக்கல!"
 அடக் கடவுளே! இதென்ன கொடுமை! 
காதலி இறந்துவிட்டால் தானும் இறந்துவிடலாம்! காதலி நிராகரித்துவிட்டால் மனதைத் தேற்றிக்கொண்டு வேறு பெண்ணை ஏற்றுக் கொண்டு வாழலாம்!
 ஆனால் இது வாழவும் முடியாத சாகவும் முடியாத நிலை ஆயிற்றே!
 காதலே இல்லாத கண்களை தினமும் பார்க்கும் இவர் எத்தனை கொடுப்பினையற்ற பிறவி?!
 இருந்தாலும் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றத் தோன்றியது! 
"இவ்வளவு காதல் வச்சிருக்கீங்க!? இதுவே வாழ்க்கைக்கு போதுமே! பெரும்பாலும் காதலர்கள் னு சொன்னாலே அதுல ஒருத்தர்தான் காதலிப்பாங்க! இன்னொருத்தர் அத ஏத்துக்குவாங்க! ஒருத்தரோட காதலை வச்சுதான் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வாங்க! இதுதான் யதார்த்தம்"
 "ஆமா! ஆனா.... எப்ப அவ என்னை வேண்டாம்னு சொன்னாளோ அப்பவே என் உலகம் நின்னு போச்சு! 
 நா காதலிச்ச தங்கமும் என் மனைவியும் ஒருத்திதான் னு என்னால ஏத்துக்க முடியல!"
 நான் என்ன சொல்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்!
"எனக்கு பெண்குழந்தை பிறக்கும்னு நெனச்சேன்! அத என் தங்கமா நெனச்சு வாழலாம்னு நெனச்சேன்! அதுவும் நடக்கல!"
 "அவங்க மனசுல இருக்குறது யாரு?!"
"தெரியாது! இருக்காங்களா இல்லையானு கூட தெரியாது!"
அவர் அமைதியாக எதையோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தார். பிறகு மூச்சை இழுத்த படி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
 "என் தங்கம் இவ இல்ல! அவ இன்னும் எங்க வீட்டு பக்கத்துல தெருவுல இருக்கா! அவ என்னையே நினச்சுக்கிட்டு இருக்கா! எனக்கு நல்லா தெரியும்! அவ என்னோட தங்கம்! எனக்கு மட்டும்தான் அவ சொந்தம்!"
 அப்படியே இருந்தோம்! 
கதவு தட்டப்பட்டது! 
நேரம் முடிந்துவிட்டது!
அவர் கிளம்பினார். அவரது பர்சை எடுத்துக் கொடுத்தபோது பார்த்தேன் ஒரு பழைய புகைப்படத்தில் மாணவி ஒருவர் சிரித்தபடி இருந்தார். 
 
 

 

 

Wednesday, 21 May 2025

இந்திய அமைதிப்படை கொலைகள் முழு பட்டியல்

இந்திய அமைதிப்படை கொலைகள் முழு பட்டியல் இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் நடத்திய படுகொலைகளின் பட்டியல் 1) 02.06.1987 - Liberation Operation படுகொலை - வடமராட்சி 2) 10.06.1987 - முகமாலை இளைஞர் படுகொலை - முகமாலை சந்தி 3) 14.06.1987 - Operation Liberation சிறை படுகொலை - பூசாசிறைச்சாலை 4) 17.06.1987 - liberation operation இராணுவ நடவடிக்கை - வடமராட்சி 5) 28.06.1987 - நாட்டுப்பற்றாளர் க.ஏகாம்பரம் படுகொலை - கூனித்தீவு 6) 08.07.1987 - தையிட்டி பராசக்தி சன சமூக நிலைய மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் படுகொலை 7) 10.07.1987 - வடமாராட்சி தேடுதல் வேட்டை - (கல்லூரி, ஆலயம், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்) 8 ) 19.07.1987 - பன்குளம் குழந்தைகள் எரித்துப் படுகொலை - கிராமம் 9) 26.07.1987 - அளவெட்டி ஆசிரமம் படுகொலை - ஆசிரமம் 10) 23.09.1987 - மனு கொடுக்கச் சென்ற யோகன் படுகொலை - எழுத்தூர் 11) 10.10.1987 - கோட்டைப் படுகொலை - யாழ் 12) 11.10.1987 - பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை - பெரியபுலம் 13) 11.10.1987 - காங்கேசன்துறை தேடுதல் வேட்டை - வீடு 14) 11.10.1987 - புதுக்காட்டு சந்தி படுகொலை - சந்தி 15) 12.10.1987 - மல்லாகம் படுகொலை - கிராமம் 16) 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை - கிராமம் 17) 12.10.1987 - சுன்னாகம் படுகொலை - கிராமம் 18) 12.10.1987 - பிரம்படி படுகொலை - கிராமம் 19) 12.10.1987 - பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை) 20) 19.10.1987 - யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை - குடியிருப்புப் பகுதி 21) 19.10.1987 - கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை 22) 20.10.1987 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 23) 20.10.1987 - கேரதீவு இறங்குதுறை தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 24) 20.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 25) 20.10.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 26) 21.10.1987 - யாழ் மருத்துவர்கள் படுகொலை - மருத்துவமனை 27) 21.10.1987 - யாழ் மருத்துவமனைப் படுகொலை - மருத்துவமனை 28) 22.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டை - குடியிருப்புப் பகுதி 29) 22.10.1987 - யாழ் மருத்துவமனை ஊழியர்கள் படுகொலை 30) 22.10.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை 31) 22.10.1987 - சுண்டுக்குளி படுகொலை 32) 22.10.1987 - அராலித்துறை படுகொலை 33) 24.10.1987 - யாழ் மத்திய கல்லூரி மாணவர் லக்ஸ்மணன் படுகொலை 34) 24.10.1987 - கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை 35) 25.10.1987 - கொக்குவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது பீரங்கித்தாக்குதல் 36) 25.10.1987 - சேரதீவு படுகொலை 37) 25.10.1987 - சந்தை மீது உலங்கு வானூர்தித் தாக்குதல் 38) 25.10.1987 - இந்துக்கல்லூரி அகதி முகாம் படுகொலை 39) 26.10.1987 - சூறாவத்தை படுகொலை 40) 26.10.1987 - அளவெட்டி படுகொலை 41) 26.10.1987 - புத்தூர் படுகொலை 42)26.10.1987 - அளவெட்டி படுகொலை 43) 26.10.1987 - புத்தூர் படுகொலை 44) 27.10.1987 - சாவகச்சேரி கந்தசட்டி கோயில் படுகொலை 45) 04.11.1987 | - களபூமி, வீமன்காமம், கோண்டாவில் படுகொலை 46) 05.11.1987 - மூளாய் மருத்துவமனை படுகொலை 47) 07.11.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப்படுகொலை 48) 07.11.1987 - உரும்பிராய் படுகொலை 49) 09.11.1987 - மானிப்பாய் படுகொலை 50) 10.11.1987 - அச்சுவேலி தேடுதல் வேட்டைப் படுகொலை 51) 10.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை 52) 10.11.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை 53) 11.11.1987 - நெடுங்கேணி தேடுதல் வேட்டைப்படுகொலை 54) 12.11.1987 - இணுவில் தேடுதல் வேட்டைப்படுகொலை 55) 12.11.1987 - சுன்னாகம் தேடுதல் வேட்டைப்படுகொலை 56) 16.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை 57) 19.11.1987 - குழந்தைகள் சுவரில் அடித்து படுகொலை 58) 20.11.1987 - அச்செழு படுகொலை 59) 21.11.1987 - ஆனைக்கோட்டைச் சந்தி பதுங்குகுழி படுகொலை 60) 30.11.1987 - மூதூர் எழுவர் படுகொலை 61) 02.12.1987 - மட்டக்களப்பு படுகொலை 62) 27.12.1987 - மட்டக்களப்பு எறிகணைவீச்சு 63) 02.12.1987 - தம்பாப்பிள்ளைசிவம் படுகொலை 64) 02.12.1987 - ஏழாலை இளைஞர்கள் படுகொலை 65) 03.12.1987 - மட்டக்களப்பு பேரூந்து படுகொலை 66) 20.12.1987 - ஊரெழு தேடுதல் வேட்டைப் படுகொலை 67) 27.12.1987 - சாவகச்சேரி பொதுச்சந்தை படுகொலை 68) 28.12.1987 - முல்லைத்தீவு நகர் படுகொலை 69) 30.12.1987 - காத்தான்குடி படகு பயணிகள் படுகொலை 70) 04.01.1988 - புதுக்குடியிருப்பு தேடுதல் வேட்டை 71) 13.01.1988 - வட்டுக்கோட்டை காவல் முகாம் படுகொலை முகாம் 72) 19.01.1988 - பாண் வியாபாரி தங்கராசா படுகொலை 73) 21.01.1988 - தாண்டியடி படுகொலை 74) 26.01.1988 - கிண்ணியடி படுகொலை 75) 02.02.1988 - வட்டக்கச்சி பதுங்குகுழி படுகொலை 76) 03.02.1988 - வட்டக்கச்சி து.கிருஷ்ணப்பிள்ளை படுகொலை 77) 08.02.1988 - தம்பிலுவில் அரசியல் பிரமுகர் நடேசன் படுகொலை 78) 08.02.1988 - ஏறாவூர் வானூர்தித் தாக்குதல் 79) 08.02.1988 - திருக்கோவிலில் குண்டு வெடித்து 9 வயது சிறுவன் சிறுவன் விஜேந்திரன் இறப்பு 80) 13.02.1988 - நாட்டுப்பற்றாளர் சிவா படுகொலை 81) 16.02.1988 - பம்பலப்பிட்டி விநாயகர் ஆலயப்படுகொலை 82) 19.02.1988 - வட அளவெட்டி அமைதிப்படை முகாம் படுகொலை 83) 04.03.1988 - கோணமலை விமானத் தாக்குதல் 84) 06.03.1988 - மட்டக்களப்பு பொதுமக்கள் படுகொலை 85) 11.03.1988 - திருமலை பேருந்து படுகொலை (வவுனியா வழியில்) 86) 11.03.1988 - முத்தையன்கட்டு படுகொலை 87) 15.03.1988 - தம்பலகாமம் எல்லை பேருந்து பயணிகள் படுகொலை 88) 15.03.1988 - ஸ்கந்தபுரம் தமிழர் படுகொலை 89) 15.03.1988 - கோட்டைக்கல்லாற்றில் பேராதனை வைத்தியபீட மாணவன் கொலை 90) 15.03.1988 - வடக்கந்தை தமிழர் படுகொலை 91) 16.03.1988 - ஸ்கந்தபுரம் துப்பாக்கிச்சூடு 92) 16.03.1988 - மட்டு தமிழ் இளைஞர் படுகொலை 93) 16.03.1988 - வந்தாறுமூலையில் இளையோர் படுகொலை 94) 22.03.1988 - ஹொரவபொத்தானை பேரூந்து பயணிகள் படுகொலை 95) 22.03.1988 - பம்பைமடு தேடுதல் வேட்டை படுகொலை 96) 05.04.1988 - இந்துக் கல்லூரி மாணவன் கொலை 97) 21.04.1988 - பண்ணாகம் தேடுதல் வேட்டை 98) 28.04.1988 - வட்டக்கச்சி கணபதிப்பிள்ளை படுகொலை 99) 10.05.1988 - கெப்பிட்டிகொலாவ தாய் - சேய் படுகொலை 100) 12.05.1988 - கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர் கொலை 101) 13.05.1988 - மணலாறு தமிழர்கள் படுகொலை 102) 13.05.1988 - விசாரணை முகாமில் மகாவித்தியாலய மாணவன் படுகொலை 103) 13.05.1988 - நாசிவன்தீவு சரிபுதீன் மொகமட் சபீர் படுகொலை 104) 14.05.1988 - திருகோணமலை பெண் திரைப்படத் தயாரிப்பாளர் கொலை (ஒட்டுக்குழு + IPKF) 105) 16.05.1988 - கிராம சேவையாளர் கடத்தல் (வெற்றிலைக்கேணி சேவையகம்) 106) 17.05.1988 - மல்லாவி விவசாயி படுகொலை 107) 19.05.1988 - மதவாச்சிபாரவூர்திக்கு தீ வைப்பு 108) 27.05.1988 - பிரசைகள் குழுத்தலைவர் படுகொலை (ஆரையம்பதி வீதி) 109) 01.06.1988 - உரும்பிராய் நாட்டுப்பற்றாளர் பாக்கியம் அக்கா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF) 110) 01.06.1988 - நல்லூர் நாட்டுப்பற்றாளர் க.நடராசா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF) 111) 11.06.1988 - கிரான்குளம் பொதுமகன் படுகொலை 112) 01.07.1988 - பாவற்குளம் பொதுமகன் படுகொலை 113) 06.06.1988 - அருட்திரு. சந்திரா பெர்னாண்டோ படுகொலை 114) 03.07.1988 - நெடுங்கேணி தாய், மகள் வல்லுறவுப் படுகொலை 115) 08.07.1988 - நவஜீவனம் தேடுதல் வேட்டைப் படுகொலை 116) 09.07.1988 - இராமநாதபுரம் தேடுதல் வெட்டிப்படுகொலை 117) 12.07.1988 - சில்லாலை நீர்ப்பாசன இலாகா அலுவலப் படுகொலை 118) 13.07.1988 - ஆரையம்பதி விசாரணை முகாம் இளைஞர் படுகொலை 119) 13.07.1988 - இன்பருட்டியில் சிற்றூர்தி மீதான தாக்குதல் 120) 15.07.1988 - பரந்தன் சந்தி தேடுதல் வேட்டை 121) 15.07.1988 - தமிழ்ப்பொதுமகன் படுகொலை (தள்ளாடி முகாம்) 122) 18.07.1988 - பரந்தன் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 123) 18.07.1988 - கம்பர்மலை இளைஞர் கைது - படுகொலை 124) 04.08.1988 - பரந்தன் குடியிருப்புப் பகுதி படுகொலை 125) 15.08.1988 - யாழ் நாட்டுப்பற்றாளர் இரங்கநாதன் படுகொலை 126) 16.08.1988 - திருகோணமலை வீதி துப்பாக்கிச்சூடு 127) 18.08.1988 - பேராதனை பல்கலை., பொறியியல் பீடம் மீதான தாக்குதல் 128) 24.08.1988 - நாட்டுப்பற்றாளர் துரைராசா படுகொலை (உரும்பிராய்) 129) 31.08.1988 - முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியர் சுட்டுக்கொலை 130) 05.09.1988 -மட்டக்களப்பு விசாரணை முகாம் படுகொலை 131) 08.09.1988 - நுணா தேடுதல் வேட்டைப் படுகொலை 132) 11.09.1988 - ஈச்சமோட்டை பொறியியலாளர் படுகொலை (நல்லூர் நாவலர் மண்டபம்) 133) 17.09.1988 - நல்லூர் வீதி தேடுதல் வேட்டை படுகொலை 134) 23.09.1988 - செல்வக்குமார் படுகொலை (யாழ் வீதி) 135) 25.09.1988 - பட்டிருப்பு பொதுமக்கள் படுகொலை 136) 29.09.1988 - யாழ்ப்பாணம் இராமலிங்கம் வீதி இளைஞர் படுகொலை 137) 02.10.1988 - சிறுப்பிட்டி மாணவன் நந்தன் சுட்டுக்கொலை 138) 04.10.1988 - கெருடாவில் தந்தை, மகன் படுகொலை 139) 04.10.1988 - சாளம்பைக்குளம் படுகொலை 140) 04.10.1988 - யாழ் மத்திய பேருந்து நிலைய படுகொலை 141) 04.10.1988 - பூநகரி மரத்தடி படுகொலை 142) 05.10.1988 - மின்சாரம் பாய்ச்சிக்கொல்லப்பட்ட துரையம்மா (விசாரணை சித்ரவதை) 143) 05.10.1988 - இடைக்காடு தமிழர்கள் படுகொலை 144) 06.10.1988 - மயிலங்காடு பொன்னம்பலம் சுட்டுக்கொலை 145) 06.10.1988 - மட்டக்களப்பு உபதபாலதிபர் சுட்டுக்கொலை (காங்கேயன் ஓடை) 146) 09.10.1988 - இராணுவ முகாமில் மட்டக்களப்பு மாணவன் படுகொலை 147) 11.10.1988 - திருமலை வீதி தேடுதல் வேட்டை 148) 11.10.1988 - ஈரற் பெரியகுளம் பேருந்து படுகொலை 148) 11.10.1988 - கட்டைபறிச்சான் படுகொலை 148) 13.10.1988 - ரவி சுட்டுப்படுகொலை 149) 13.10.1988 - தெல்லிப்பழை வீதி படுகொலை 150) 13.10.1988 - இணுவில் வீதி படுகொலை 151) 14.10.1988 - யாழ் கதிர்காமநாதன் படுகொலை 152) 14.10.1988 - பொன்னையா சிறிதரன் படுகொலை 153) 17.10.1988 - மங்களஓயா படுகொலை 154) 18.10.1988 - குளிர்பான நிலையம் மானிப்பாய் சற்குணராசா படுகொலை 155) 21.10.1988 - செல்வராசா விசாரணைப் படுகொலை 156) 21.10.1988 - தமிழீழ மக்கள் மன்றத்தலைவர் சிவானந்தசுந்தரம் படுகொலை (வெலிங்டன் சந்தி) 157) 22.10.1988 - ஊர்காவற்றுறை புதுமணத் தம்பதியர் கொலை (பொன்னாச்சி கடைச்சந்தி) 158) 22.10.1988 - கிற்றார் கலைஞர் கி.செல்லையா படுகொலை (இசைக்கூடம்) 159) 22.10.1988 - பொன்னாச்சி இளம்தம்பதியார் படுகொலை (கடைச்சந்தி) 160) 25.10.1988 - விஞ்ஞான ஆசிரியர் படுகொலை (யாழ் மருத்துவமனை வீதி) 161) 25.10.1988 - சுகாதார அத்தியட்சகர் பணிமனை படுகொலை 162) 25.10.1988 - மல்லாகம் வர்த்தகர்சங்கத் தலைவர் படுகொலை 163) 25.10.1988 - வவுனியா சுகாதார பணிமனை படுகொலை 164) 25.10.1988 - சங்கானை ஆசிரியர் படுகொலை 165) 25.10.1988 - மல்லாகம் வர்த்தக சங்கத் தலைவர் சிவதாசபிள்ளை படுகொலை 166) 26.10.1988 - கரடிக்குழி படுகொலை 167) 26.10.1988 - மறிச்சுக்கட்டி படுகொலை 168) 31.10.1988 - நெடுங்கேணி படுகொலை 169) 31.10.1988 - யாஸ் பரியோவான் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை 170) 31.10.1988 - நுணாவில் தேடுதல் வேட்டை 171) 31.10.1988 - மகாவித்தியாலய மாணவர்கள் படுகொலை 172) 02.11.1988 - நாட்டுப்பற்றாளர் வெள்ளையன் படுகொலை 173) 02.11.1988 - கனகராயன்குளம் படுகொலை 174) 02.11.1988 - சகோதரர்கள் உயிருடன் எரித்துக்கொலை 175) 02.11.1988 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப்படுகொலை 176) 03.11.1988 - சரசாலை நாட்டுப்பற்றாளர் சுந்தரம் படுகொலை 177) 04.11.1988 - புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் படுகொலை 178) 04.11.1988 - பச்சனூர் படுகொலை 179) 04.11.1988 - இணுவில் நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் படுகொலை 180) 04.11.1988 - புங்குடுதீவு படுகொலை 181) 05.11.1988 - சாவகச்சேரி வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராசா படுகொலை 182) 06.11.1988 - ஆனையிறவு குடியிருப்புப் பகுதி படுகொலை 183) 07.11.1988 - மூதூர் 55ஆம் கட்டைபகுதி படுகொலை 184) 07.11.1988 - மூதூர் நாட்டுப்பற்றாளர் ரகு படுகொலை 185) 08.11.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர் பிரேம்குமார் படுகொலை 186) 08.11.1988 - சாவகச்சேரிதமிழ் மாணவன் படுகொலை 187) 08.11.1988 - பண்டத்தரிப்பு பிரசைகள் குழுவினர் படுகொலை 188) 09.11.1988 - வடமராட்சி அட்டூழியம் 189) 11.11.1988 - மன்னார் உயர்வகுப்பு மாணவன் படுகொலை 190) 11.11.1988 - ஆசிரியர் பாலகிருஷ்ண படுகொலை 191) 12.11.1988 - பொருளியல் ஆசிரியர் கிருஷ்ணானந்தன் படுகொலை 192) 12.11.1988 - சரசாலை தமிழ் இளைஞர் படுகொலை 193) 13.11.1988 - மகேந்திரநாதன் படுகொலை 194) 13.11.1988 -தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் படுகொலை (மாம்பழம் சந்தி - அரியாலை) 195) 13.11.1988 - ஊரிக்காடு தேடுதல் வேட்டைப் படுகொலை 196) 13.11.1988 - திருநெல்வேலி நாட்டுப்பற்றாளர் வைகுந்தவாசன் படுகொலை 197) 14.11.1988 - முல்லைத்தீவு நாட்டுப்பற்றாளர்கள் சங்கர்-கிளியன் கொலை 198) 16.11.1988 - சங்கத்தானை நாட்டுப்பற்றாளர் குணாளன் படுகொலை 199) 16.11.1988 - இருதயக்கல்லூரி தேடுதல் வேட்டை 200) 17.11.1988 - பொத்துவில் படுகொலை 201) 17.11.1988 - முல்லைத்தீவு குடியிருப்புப் படுகொலை 202) 19.11.1988 - மகாவித்தியாலய மாணவன் படுகொலை 203) 21.11.1988 - கோணாவில் நாட்டுப்பற்றாளர் சங்கரன் படுகொலை 204) 22.11.1988 வவுனியா நாட்டுப்பற்றாளர் பூலோகசிங்கம் படுகொலை 205) 22.11.1988 - பாவற்குளம் 4 ஆம் படிவம் படுகொலை 206) 22.11.1988 - கல்முனை படுகொலை 207) 23.11.1988 - யாழ் செயலக கணக்காளர் படுகொலை 208) 23.11.1988 - திருகோணமலை தேடுதல் நடவடிக்கை 209) 25.11.1988 - கடற்றொழிலாளி படுகொலை 210) 26.11.1988 - வட்டக்கச்சி கட்சன் வீதி படுகொலை 211) 27.11.1988 - வட்டகச்சி கண்ணிவெடி படுகொலை 212) 27.11.1988 - யாழ் பேராலய இளைஞர் படுகொலை 213) 28.11.1988 - நாவற்குழி நாட்டுப்பற்றாளர் மனோகரி படுகொலை 214) 28.11.1988 - நாவற்குழி தேடுதல் வேட்டை படுகொலை 215) 29.11.1988 - இணுவில் மருத்துவமனையில் நோயாளி இளம்பெண் படுகொலை 216) 30.11.1988 - மூதூர் தமிழர்கள் படுகொலை 217) 01.12.1988 - புத்தூர் புத்தெழில் ஆசிரியர் திருஞானம் படுகொ (தேசவிரோதிகள் + IPKF)லை 218) 03.12.1988 - கருகம்பனை சிவதாசன் நிர்மலன் படுகொலை 219) 03.12.1988 - பற்றிக்சுவீதி தமிழர் படுகொலை 220) 04.12.1988 - ஆசிரியர் கருணானந்தசிவம் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 221) 05.12.1988 - வவுனிக்குளம் படுகொலை 222) 07.12.1988 - காணிக்கை மாதா கோயில் படுகொலை 223) 08.12.1988 - யாழ் சிற்றூர்தி சங்கத்தலைவர் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 224) 09.12.1988 - காங்கேசன்துறை மாணவன் படுகொலை 225) 12.12.1988 - திருகோணமலை எறிகணைத்தாக்குதல் 226) 15.12.1988 - ஊரெழு தேவதாசன் படுகொலை (கோப்பாய் முகாம், தேசவிரோதிகள் + IPKF) 227) 17.12.1988 - அக்கரைப்பற்று படுகொலை 228) 17.12.1988 - ஆலையடிவேம்பு படுகொலை 229) 19.12.1988 - சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவர்கள் படுகொலை 230) 19.12.1988 - ஆனைக்கோட்டை படுகொலை 231) 19.12.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 232) 19.12.1988 - மன்னார் இளைஞர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 233) 21.12.1988 - அப்புத்தளை மலையகம் தமிழிளைஞர்கள் படுகொலை 234) 23.12.1988 - மானிப்பாய் ஜெயதாசன் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 235) 27.12.1988 - மட்டக்களப்பு அட்டூழியம் 236) 02.01.1989 - ஒட்டிசுட்டான் துப்பாக்கிச்சூடு 237) 07.01.1989 - கண்டாவளை தேடுதல் வேட்டை 238) 08.01.1989 - இராமநாதபுரம் பழைய கண்டி வீதி கண்ணிவெடி வெடிப்பு 239) 09.01.1989 - அக்கரைப்பற்று பேரூந்து நிலைய காவல் சோதனை படுகொலை 240) 13.01.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டை படுகொலை 241) 17.01.1989 - காத்தார் சின்னக்குளம் படுகொலை 242) 20.01.1989 - மன்னார் காவல் நிலைய படுகொலை 243) 26.01.1989 - இந்துக் கல்லூரி படுகொலை 244) 28.01.1989 - அரியாலை பொதுமக்கள் படுகொலை 245) 29.01.1989 - அளம்பில் தேடுதல் வேட்டை 246) 30.01.1989 - ஆறுகால்மடம் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர் படுகொலை 247) 31.01.1989 - கரவெட்டி இராணுவ முற்றுகை படுகொலை 248) 03.02.1989 - மிருசுவில் சிவரஞ்சன் சுட்டுக்கொலை 249) 08.02.1989 - பிறவுண்வீதி இளைஞர் படுகொலை (கிழக்கு கொக்குவில்) 250) 10.02.1989 - பேசாலை படுகொலை 251)15.02.1989 - மாவிட்டபுரம் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட இளைஞர் 252) 15.02.1989 - முள்ளியவளை செல்வரட்ணம் சுதர்சன் படுகொலை 253) 15.02.1989 - உடுப்பிட்டி முகாமில் யாழ் சகோதரிகள் சுட்டுக்கொலை 254) 16.02.1989 - மொறக்கொட்டாஞ்சேனை படுகொலை (டெலோ + IPKF) 255) 22.02.1989 - நெல்லியடி மருத்துவமனைக் காவலாளி படுகொலை 256) 23.02.1989 - துன்னாலை எறிகணைத் தாக்குதல் 257) 23.02.1989 - திக்கம் மக்கள் படுகொலை 258) 01.03.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை 259) 14.03.1989 - பளை தேடுதல் வேட்டைப் படுகொலை 260) 16.03.1989 - மட்டுவில் தேடுதல் வேட்டை 261) 19.03.1989 - மணற்காட்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை 262) 11.04.1989 - காட்டுமுறி தமிழ்ப்பொதுமகன் படுகொலை 263) 14.04.1989 - கரம்பன் மேற்கு பக்தி கிராமம் கிராமசேவகர் படுகொலை 264) 25.04.1989 - கட்டுவன்புலம் பள்ளி மாணவன் படுகொலை 265) 01.05.1989 - நாட்டுப்பற்றாளர்கள் சிறி.முறிசெல்வம் & செ.பாலேந்திரன் படுகொலை (வவுனியா சிறை) 266) 02.05.1989 - பருத்தித்துறை தேடுதல் வேட்டை 267) 03.05.1989 - மல்லாகம் செல்லையா நிர்மலன் படுகொலை 268) 03.05.1989 - புங்குடுதீவு முருகேசு குகதாஸ் படுகொலை 269) 14.05.1989 - மிருசுவில் பேருந்து மீது தாக்குதல் 270) 14.05.1989 - மணலாறு உணவு விடுதி படுகொலை 271) 14.05.1989 - யாழ் மருத்துவமனையில், தமிழிளைஞரை சடலமாக ஒப்படைத்தது 272) 16.05.1989 - தரவத்தை விவசாயப் பெண் கூலித்தொழிலாளர் கடத்தல் 273) 16.05.1989 - பால்நிலைய அதிபர் படுகொலை 274) 16.05.1989 - புத்தூர் வாதரவத்தை படுகொலை 275) 17.05.1989 - மல்லாவி பெண் படுகொலை 276) 17.05.1989 - அத்தியாயர் கல்லூரி மாணவன் படுகொலை 277) 17.05.1989 - புன்னாலைக்கட்டுவன் படுகொலை 278) 18.05.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை 279) 19.05.1989 - உரும்பிராய் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 280) 20.05.1989 - சுதுமலை படுகொலை 281) 20.05.1989 - நிலாவெளி கோயில் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 282) 23.05.1989 - கிளிநொச்சி பிரசைகள் குழுப்பிரமுகர் கொலை (கனகபுரம் - ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 283) 28.05.1989 - வந்தாறுமூலை இளைஞர்கள் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 284) 28.05.1989 - தமிழ்ப்பொதுமகன் சுட்டுக்கொலை (சாவச்சேரி) 285) 28.05.1989 - வண்ணார்பண்ணை இருதமிழர் சுட்டுக்கொலை (நாகர்கோவில்) 286) 01.06.1989 - நாவாந்துறை தேடுதல் வேட்டைப் படுகொலை 287) 01.06.1989 - திருநெல்வேலி தேடுதல் வேட்டைப் படுகொலை 288) 01.06.1989 - மாணிக்கம் யோகேந்திரன் படுகொலை 289) 01.06.1989 - ஏழாலை தேடுதல் வேட்டைப் படுகொலை 290) 01.06.1989 - வைத்தீஸ்வரா கல்லூரி மாணவர் ஆனந்தராசா படுகொலை 291) 04.06.1989 - கட்டுடைச்சந்தி வணிகர் கணபதிப்பிள்ளை படுகொலை 292) 04.06.1989 - பிராம்பத்தை கோடீஸ்வரி பத்மநாதன் படுகொலை 293) 04.06.1989 - தபால்பெட்டிச்சந்தியில் அரியாலை தமிழ்ப்பொதுமகன் படுகொலை 294) 05.06.1989 - வரணி எறிகுண்டுத் தாக்குதல் 295) 05.06.1989 - கண்டிக்காடு படுகொலை 296) 17.06.1989 - சங்கத்தானை தேடுதல் வேட்டை 297) 19.06.1989 - கோப்பாய் சண் படுகொலை 298)19.06.1989 - புதுக்குடியிருப்பு பேபி படுகொலை 299)20.06.1989 - கந்தர்மடம் சண்முகம் உதயவர்மன் படுகொலை 300) 20.06.1989 - மாவிட்டபுரம் கந்தையா குஞ்சுக்கிளி படுகொலை 301) 20.06.1989 - முருகுசசிக்குமார் படுகொலை 302) 20.06.1989 - யாழ் வைத்தியசாலையில் முகமாலை நாகேந்திரராசா படுகொலை 303) 24.06.1989 - நாகர்கோவில் தேடுதல் வேட்டை 304) 24.06.1989 - கந்தரோடை கணேசகுமார் படுகொலை 305) 24.06.1989 - தாண்டிக்குளம் பெரியதம்பி படுகொலை 306) 24.06.1989 - வேப்பங்குளம் மோகன்ராஜ் படுகொலை 307) 24.06.1989 - வல்லிபுரம் முருகேசு படுகொலை 308) 24.06.1989 - நெடுந்தீவு ஏரம்புநடராசா படுகொலை 309) 26.06.1989 - அத்தாய் மகேந்திரராசா படுகொலை 310) 28.06.1989 - அல்வாய் மாலிசந்தி தேடுதல் வேட்டைப் படுகொலை 311) 28.06.1989 - நந்தாவில் அம்மன்கோவிலடி படுகொலை 312) 28.06.1989 - பண்டத்தரிப்பில் இளைஞர் சடலம் மீட்பு 313) 28.06.1989 - அளவெட்டி தேடுதல் வேட்டைப் படுகொலை 314) 28.06.1989 - மிருசுவில் தேடுதல் வேட்டைப் படுகொலை ஆசைப்பிள்ளை ஏற்றம் 315) 28.06.1989 - செல்வம் அக்கா சித்ரவதை படுகொலை (ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 316) 28.06.1989 - புலோலிகந்த முருகேசனார் சிலை தமிழ்ப்பெண் சுட்டுப்படுகொலை 317) 29.06.1989 - அளம்பில் துப்பாக்கிச்சூடு 318) 29.06.1989 - நீர்வேலி பெண்கள் வன்படுகொலை 319) 03.07.1989 - ஓமந்தை எறிகணைத் தாக்குதல் 320) 03.07.1989 - கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு 321) 18.07.1989 - திருகோணமலை தேடுதல் வேட்டை 322) 19.07.1989 - பாரதிபுரம் தேடுதல் வேட்டை படுகொலை 323) 24.07.1989 - உயரப்புலம் தமிழிளைஞர் சுட்டுப்படுகொலை 324) 26.07.1989 - அல்வாய் ஆசிரியர் சின்னத்தம்பி படுகொலை 325) 26.07.1989 - தெல்லிப்பளை ரவீந்திரன் படுகொலை 326) 26.07.1989 - ஓராம்கட்டை இராணுவ நடவடிக்கை 327) 02.08.1989 - தீருவில் தேடுதல் வேட்டைப் படுகொலை 328) 02.08.1989 - அரியாலை இளைஞர் கைது 329) 02.08.1989 - வல்வெட்டித்துறை படுகொலை (மருத்துவமனை, சமூக நிலையம், கோயில், குடியிருப்புப் பகுதி) 330) 02.08.1989 - வல்வை 15 பெண்கள் பாலியல் வன்படுகொலை 331) 04.08.1989 - கீரிமலை தேடுதல் வேட்டைப் படுகொலை 332) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் தேடுதல் படுகொலை 333) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் எறிகணைத்தாக்குதல் 334) 10.08.1989 - கோண்டாவில் இளைஞர் சடலமாக மீட்பு 335) 14.08.1989 - பருத்தித்துறை வியாபாரி எரித்துப்படுகொலை 336) 14.08.1989 - மூலை நடன ஆசிரியர் படுகொலை 337) 14.08.1989 - யாக்கரை எறிகணைவீச்சு படுகொலை 338) 17.08.1989 - நெடுங்கேணி தமிழ்க்குழந்தைகள் படுகொலை 339) 17.08.1989 - கன்னியர்மட மாணவியர் வன்படுகொலை (எழுதுமட்டுவாள்) 340) 17.08.1989 - உடுப்பிட்டி இமையணனை படுகொலை (கரவெட்டி வதிரிச்சந்தி) 341) 18.08.1989 - ஐயன்குளம் படுகொலை 342) 18.08.1989 - நுணா சிறுவன் சுட்டுக்கொலை 343) 21.08.1989 - வடமராட்சி தேடுதல் வேட்டைப் படுகொலை (திக்கம், அல்வாய் பகுதிகளில்) 344) 21.08.1989 - மாணவன் அருளானந்தம் சுதாகரன் கொலை 345) 21.08.1989 - கந்தளாய் படுகொலை 346) 23.08.1989 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை 347) 23.08.1989 - மாவிட்டபுரம் வியாபாரி படுகொலை 348) 25.08.1989- ஆவரங்கால் இந்திரன் சுட்டுப்படுகொலை 349) 27.08.1989 - பேசாலை எறிகணைத்தாக்குதல் 350) 31.08.1989 - ஆவிரங்கால் விவசாயி சுட்டுக்கொலை 351) 02.09.1989 - ஆண்டான்வளவு தேடுதல் வேட்டை 352) 02.09.1989 - ஆண்டான் வளவுப் பகுதியில் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 353) 08.09.1989 - பருத்தித்துறை பொதுமக்கள் படுகொலை 354) 17.09.1989 - கிளிநொச்சி முகாம் படுகொலை 355) 18.09.1989 - புற்றளை தேடுதல் வேட்டைப் படுகொலை 356) 22.09.1989 - நமசிவாயம் தெய்வேந்திரன் படுகொலை 357) 23.09.1989 - இயக்கச்சி நாட்டுப்பற்றாளர் தர்மகுலேந்திரன் படுகொலை 358) 25.09.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப் படுகொலை 359) 26.10.1989 - கரடிக்குழி தேடுதல் வேட்டைப் படுகொலை 360) 26.10.1989 - மறிச்சுக்கட்டி தேடுதல் வேட்டை 361) 29.10.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் ரவீந்திரன் படுகொலை 362) 17.11.1989 - மானிப்பாய் செல்லத்தம்பி படுகொலை 363) 26.11.1989 - கிளாலி நாட்டுப்பற்றாளர் பவுண் படுகொலை 364) 10.12.1989 - மன்னார் பெண் குழந்தை படுகொலை 365) 28.12.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் பாலா படுகொலை 366) 12.01.1990 - கோண்டாவில் நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை படுகொலை 367) 24.05.1990 - வங்காலை முகாம் படுகொலை 368) 14.06.1990 - கந்தளாய் பேருந்து பயணிகள் வெட்டிப்படுகொலை 369) 14.06.1990 - மூதூர் பீரங்கித் தாக்குதல் (இப்பட்டியல் The North-East Secretariat on Human Rights (NESoHR), Voice உலகத்தமிழர்கள் உரிமைகள் குரல் அமைப்பு, Tamil Nation, ஆகியவை வெளியிட்ட ஆவணங்கள் & நூல்களில் இருந்து இப்பட்டியலை பரப்புரை நோக்கத்திற்காக தயாரித்துள்ளோம்) தோழர் சிவப்ரியன் செம்பியன் பதிவிலிருந்து பகிர்வு

Tuesday, 20 May 2025

ஆகாஷ் பாஸ்கரன் இன்னொரு உதயநிதி

ஆகாஷ் பாஸ்கரன் இன்னொரு உதயநிதி

 தற்போது அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கியுள்ள ஆகாஷ் பாஸ்கரன் சேலம் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் தம்மம்பட்டி யைச் சேர்ந்தவர்!
 1940 களிலேயே இவரது பாட்டன் ரங்கசாமி ரெட்டியார் நகைக்கடை ஆரம்பித்து அதை இன்றும் நடத்தி வருகிறது இவர்களது குடும்பம்!
 ஆகாஷின் அக்கா அன்பில் மகேஸ் பொய்யாமொழி யின் உறவினர் ஒருவரை மணந்துகொள்கிறார்.
 இதன் பிறகு அன்பில் மகேஷ் இந்த குடும்பத்துக்கு நெருக்கம் ஆகிறார்.
 இதன்மூலம் உதயநிதி தொடர்பு கிடைக்கிறது!
 ஆகாஷ் திரைத்துறையில் நுழைகிறார்.
இரண்டு பெரிய படங்களில் (நானும் ரவுடிதான், அமரன்) உதவி இயக்குநராக இருந்ததாக சொல்கிறார்கள்!
 பிறகு இவரது பெயரில் டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் உருவானது!
 அது முதல் படம் (இட்லிக்கடை)  தயாரித்து அது இன்னும் வெளிவரவில்லை!
 ஆனால் பராசக்தி, முரளியின் இதயம், சிம்பு நடிக்கும் ஒரு படம் என முன்னனி நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கிறார்.
 கருணாநிதியின் முதல் மகனான மு.க.முத்து வின் மகள் தேன்மொழி (கவின் கேர் உரிமையாளர்). இவரது மகளான தாரணியை ஆகாஷ் திருமணம் செய்துள்ளார்! 
தற்போது ஆகாஷுக்கு 30 வயது! 

 இவரது குடும்பம் தம்மம்பட்டியில் இருந்த நகைக்கடையை (PRR) பெரிதாக கட்டிக்கொள்கின்றனர்.
 திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய நகரங்களில் மூன்று கிளைகள் தொடங்க வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
 குறைந்தது ஒரு டன் தங்கம் இவர்களது கைவசம் இருப்பதாக சொல்கிறார்கள்! 
 ஆட்சியாளர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பிரபலமான நிறுவனங்களை இப்படி சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொள்வது வழக்கம்! 
 அந்த வகையில் தற்போது திமுக உருவாக்கிய ஆகாஷ் பாஸ்கரன் ஈ.டி ரெய்டில் சிக்கியுள்ளார்.

தகவல்களுக்கு நன்றி Shiva media 
 
 இருந்தால் தெலுங்கராக இருக்க வேண்டும்!
 அதிலும் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்!
 அதிலும் தற்போதைய ஆட்சியில் இருக்க வேண்டும்! 
அப்படி இருந்தால் எந்த கவலையும் இல்லை! 

Monday, 12 May 2025

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை
26.04.2017

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்
இது மாசித் திருவிழா.
மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்.
அதுவும் மதுரையில் அல்ல தேனூர் அருகே.

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

முகம் சிதைந்த கண்ணகி சிலை


முகம் சிதைந்த கண்ணகி சிலை
20.12.2015

எச்சரிக்கை:
இப்பதிவைப் படிப்போருக்கு இனவெறி வர வாய்ப்புள்ளது.

சமண மதத்தைச் சேர்ந்த கண்ணகி ,
சோழநாட்டில் பிறந்து
பாண்டிநாட்டில் வழக்காடி
சேரநாட்டில் தெய்வமானாள்.

தமிழ் மூவேந்தர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டார்கள் என்றும் தமிழர் இனவுணர்வு இல்லாமல் பாண்டிநாட்டான்,சோழநாட்டான், சேரநாட்டான் என்ற நாட்டு உணர்வுடன் இருந்தனர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

தமிழர்கள் என்றும் தமிழர்களாகத்தான் இருந்தனர் என்பதற்கான சான்றுதான் மூவேந்தரும் சமமாகப் போற்றப்பட்டு எழுதப்பட்ட சிலப்பதிகாரமும் இன்றும் தொடரும் கண்ணகி வழிபாடும்.

என்றால் ஈழம் விடுபடுகிறதே?
இல்லை, ஈழத்தான் மட்டும் சளைத்தவனா?
இன்று தமிழகத்தை விட அதிகமான கண்ணகிகோவில்கள் ஈழத்திலே உள்ளன.

கண்டியில் உள்ள புத்தர்கோயிலில் பத்தினி வழிபாடு பத்தினித்தெய்யோ என்ற பெயரில் திருவிழாவாகச் சிங்களவரால்  கொண்டாடப்பட்டு வருகிறது.
இது பத்தினித் தெய்வம் வழிபாட்டின் திரிபேயாகும்.
(இது கண்ணகி வழிபாடு கிடையாது).

சேரன் செங்குட்டுவன் இமயம் சென்று கல் எடுத்துவந்து கண்ணகிக்குக் கோயில் எழுப்பியதும் தமிழ் மன்னர்கள் அனைவரும் அப்பத்தினிக்குக் கோவில்கள் எழுப்பினர்.
ஈழத்திலும் அதேகாலகட்டத்தில் கண்ணகிக்கோவில்கள் கட்டப்பட்டன.
ஆக கண்ணகி வழிபாடு
மதம், நாடு தாண்டிய தமிழ் இன உணர்ச்சியின் அடையாளம் ஆகும்.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானதும் சேரன் கட்டியதுமான அந்தக் கோவில் இன்று மங்கலதேவி கண்ணகிக் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
மங்கல தேவி என்பது யார் என்ற கேள்விக்கு தமிழ்ப்பார்ப்பனர் உ.வே.சா வின் விளக்கமானது,
கண்ணகிக்கு வஞ்சிக்காண்டம் வரந்தரு காதையில்:
"மங்கலமடந்தை கோட்டத் தாங்கண்
வெங்கோட்டுயர் வரைச் சேனுயர் சிலம்பில்"
என்று குறிப்பு உள்ளது. மங்கல மடந்தை என்பதற்குப் பொருள் மங்கல தேவி என்றும் அது கண்ணகியைக்குறிக்கும் சொல்லாகும்
என்கிறார் தமிழ்த்தாத்தா.

தமிழ் நிலத்தை கிட்டத்தட்ட 1500ச.கி.மீ ஆக்கிரமித்து இன்று 38,863சகீமி பரப்பளவுகொண்ட கேரள மாநிலம் இன்னமும் மண்வெறி பிடித்து அலைகிறது.

தமிழக எல்லைக்குள் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் 4380 அடி உயர சிகரத்தில் உள்ளது கண்ணகிகோயில்.
1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை.
அதன்பிறகு சிறிய சிறிய பிரச்சனைகளைச் செய்யத்தொடங்கியது.

பிரச்சனையைத் தீர்க்க 1976ல் தமிழ்நாடு கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப்பகுதியில் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதற்கிடையில், கூடலூரில் சில தமிழார்வலர்கள் 'மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக்குழு'  என்று ஒன்றைத் தொடங்கி கோவிலைப் புதுப்பிக்க திட்டமிட்டனர்.

1976ல் இந்த சீரமைப்புக்குழு,
அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து உதவி கேட்டது.
கூடலூரைச் சேர்ந்த, கே.பி.கோபால் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது கண்ணகி கோவிலுக்கு செல்லப் பாதை அமைக்க வேண்டும் என சட்டசபையில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகப்பகுதியில் கூடலூர் பனியங்குழி வழியாக 6 கி.மீ சாலையை போடுவதற்காக ரூ.20 லட்சம்நிதி ஒதுக்கப்பட்டது.
இதிலும் மலையாள அரசு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டது.
இந்தநிலையில் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்டது.
இதனால் இத்திட்டம் தாமதப்பட்டது.

இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 1976ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு அவசர அவசரமாக மலையாள அரசு 16 கி.மீ பாதை ஒன்றை அமைத்தது.
இவ்வாறு போடப்பட்ட இந்தப் பாதையின் வழியாக தமிழக பக்தர்கள், கண்ணகி கோயிலுக்கு செல்லத்தொடங்கினர்.
தற்போது இந்த
சாலையை வைத்துக் கேரள
அரசு கண்ணகி கோயில் கேரளாவிற்குச்
சொந்தமானது என்று உரிமை
கொண்டாடுகிறது.

சித்திரை மாதம் வரும் சித்திரை முழுநிலவு தினத்தன்று இந்த மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் ஒருவாரம் சிறப்பு வழிபாடுகள் செய்து வந்தனர்.
மலையாளிகள் இதை மூன்று நாட்களாக்குதான் அனுமதிக்கமுடியும் என்று மூன்றுநாளாக்கினர்.
அதன்பிறகு ஒரே ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கினர்.
அதுவும் இப்போது காலை, 9மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே
என்று ஆக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவில் வழிபாட்டிற்காக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மலையாள அதிகாரிகளைச் சந்தித்து கெஞ்சிக்கூத்தாடி அனுமதி வாங்குவதும், மலையாளிகள் அவர்கள் மனம்போன போக்கில் விதிமுறைகளை விதிப்பதும் தொடர்கதை ஆகிவிட்டது.

மற்ற நாட்களில்
தமிழர்கள் இங்கு செல்ல
அனுமதி அளிக்கப்படுவதில்லை.
மலையாள காவல்துறை நடமாட்டம் எப்போதும் உள்ளது.
இதனால் கோயில் பராமரிப்பின்றி பாழடைந்த மண்டபம் போல ஆகிவிட்டது.
கோவிலின் பல பகுதிகள்
சிதைந்து போய்விட்டன.கோவில் சுவற்றின் கற்கள் உடைந்து போய் கிடக்கின்றன.
கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.
(இரு கல்வெட்டுகள் மிகமுக்கியமானவை.
முதலாம் இராசராச சோழனின் கல்வெட்டு ஒன்றும், பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் மேலும் பல கல்வெட்டுகளும் இக்கோவிலில் உள்ளன).
இவையும் விரைவில் அழியவுள்ளன.

5-5-82இல் சித்திரை பெளர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ளச்சென்ற தமிழர்களை
கேரள அரசு கைது செய்தது. அதுபற்றி பேசச்சென்ற சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.டி. கோபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கம்பம் நடராசன் ஆகியோரை
மலையாளிகள் மரியாதையின்றி நடத்தினர்.
இதை தமிழக முதலமைச்சரிடம் அவர்கள் முறையிட,  இதைச் சுட்டிக்காட்டி கேரள ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் தந்தி அனுப்பினார்.
அதற்குக் கேரள அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

பிறகு அக்கோவில் மலையாளிகளின் துர்கா கோவில் என்று கூறிக்கொண்டு 15.3.1983ம் அன்று கண்ணகி கோவிலுக்குள் துர்க்கா தேவி சிலையை இ.சி. சுகுமாரன் என்பவர் மலையாள தாசில்தார் உதவியுடன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மற்றும் கேரள போலீஸ் அதிகாரிகளுடன் வந்து கோவிலுக்குள்  நிறுவினார்.

இதுவாவது பரவாயில்லை.
அதன்பிறகு கண்ணகிசிலையை முகத்தை உடைத்து சிதைத்தனர்.
வேறுவழியின்றி  தற்போது சித்திரை முழுநிலவு நேரத்தில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது.

9மணிக்கு அனுமதிக்கப்படும் தமிழர்கள் வெறும் 8மணிநேரத்திற்குள் விழாவை நடத்திமுடித்து இடத்தைக் காலிசெய்தாகவேண்டும்.
வழிபாட்டு நேரத்தில் அங்கே இருக்கும் மலையாள காவல்துறை தமிழர்களை அடிப்பதும் திட்டுவதும் இஷ்டப்படி விதிமுறைகளை விதிப்பதும் வழிபாட்டில் முடிந்த அளவு இடைஞ்சல் செய்வதும் கண்கூடாகக் காணலாம்.
நான்கரை மணிக்குமேல் அடித்துவிரட்டத் தொடங்கிவிடுவார்கள்.

நம் எல்லைக்குள் நமக்கு தடை விதித்து மண்ணைக் கைப்பற்றிக்கொண்டு ஆண்டுக்கொருமுறை வரும் நம்மை தமது ராணுவமான காவல்துறையை அனுப்பி அப்பாவி மக்கள்மீது இனவெறியைத் தீர்த்துக்கொள்கிறான் மலையாளி.

தமிழ் ஆர்வலர்கள் சிலர் "மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை"என்ற
ஒரு அமைப்பு நிறுவியுள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் சித்திரை முழுநிலவு தினத்தன்று கண்ணகிகோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் உட்பட பல உதவிகள் செய்து வருகிறது.
இந்த அமைப்பு தமிழ்நாட்டின்.கூடலூர் (தேனி) மலைப்பகுதியிலுள்ள பளியங்குடியிலிருந்து கண்ணகி கோயிலுக்குத் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் கண்ணகிகோயில் தமிழ்நாட்டுக்குரியது அதை மீட்க வேண்டும் என்றும் போராடிவருகிறது.

மலையாளிகளின் அராஜகத்தைப் பொறுக்கமுடியாமல் தமிழர் ஒருவர் கோயிலுக்குப் போகும்வழியில் தனக்கு சொந்தமான இடத்தில் ஒரு கண்ணகிகோவில் கட்டி அங்கே வழிபாடு நடத்த வழிசெய்துள்ளார்.
கண்ணகி கோயிலில் அவமானப்பட்ட தமிழர்கள் மறுமுறை அங்கே போகமனமில்லாதவர்கள் இங்கே அதேபோல வழிபாடு நடத்துகின்றனர்.

நாதியற்ற தமிழினம் செய்யமுடிந்தவை இவைதான்.

இத்தனை கெடுபிடிகளிலும் தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் இப்போதும் சென்றுவருகின்றனர்.
ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும்,.தங்குவதற்கும் என்று, எந்த வசதிகளும் செய்யப்படாத நிலையில் பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு குறையாத தமிழக மக்கள் மனக்குமுறலுடன் மலையாள இனவெறியையும் தமிழக வந்தேறி அரசுகளின் பாரமுகத்தையும் சகித்துக்கொண்டு வழிபாட்டைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
பழமையான, பாரம்பரியமான,  பல்வேறு தமிழ்கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நாம் விரைந்து எதாவது செய்யவேண்டும். கோவிலை எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீட்டு எடுக்க வேண்டும்.

என்னதான் கேவலப்பட்டாலும் உணவுக்கு தமிழகத்தை நம்பியிருக்கும் வெறும் ஒன்றரை கோடி மலையாளிகள் ஏறிமிதிக்கும் கேவலமான இனமாக நாம் இருப்பது கொஞ்சம்கூட நியாயமே இல்லை

செந்தூர் என்பதே sindoor

செந்தூர் என்பதே sindoor

 தூர் என்பது பொடி எனும் பொருள் தரும்.
தூரல் - சிறு சிறு மழைத்துளிகள் 
தூர்ந்து போதல்- சிறு மணல் சேர்ந்து மேடாகுதல்.
தூர் வாருதல் - படிந்த நுண் மணலை அள்ளுதல்
தூர்த்தல் - சிறு மணலை அள்ளுதல் அதாவது சுத்தம் செய்தல் (திருநெல்வேலி வழக்கு)

 இவ்வாறாக செந்தூர் என்பது சிவந்த பொடியைக் குறிக்கும். இதுவே குங்குமம் ஆகும்.
 தூரம் ஆவது என்பது மாதவிலக்கைக் குறிக்கும் என்பதை நோக்குக.
 செந்தூரப்பூ சிவந்த நிறமுடையது.
 இது வடக்கே உள்ள குங்குமப்பூ  என்றும் செம்பருத்திதான் செந்தூரப்பூ என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.
 அதேவேளை செந்தூர் பயன்பாடு ஆண்பாலுடன் தொடர்புடையது.

 செந்தூரன், செந்தூரப் பாண்டியன், திருச்செந்தூர் போன்றவை இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டவை.

 வடக்கே சென்ற இச்சொல் சிந்தூர் என்றாகி மீண்டும் தமிழுக்கு வந்து செந்தூரம் என்றானது.

Saturday, 10 May 2025

ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்

ஹிந்தியா வல்லரசாக என்ன செய்யவேண்டும்? 20.07.2016 நான் ஹிந்தியனாக பிறந்து ஹிந்தியாவை ஆண்டால்... *) முதல் வேலையாக ஹிந்தியுடன் தொடர்பில்லாத பகுதிகளுக்கு விடுதலை அளித்துவிட்டு ஹிந்தி மொழிக் குடும்பத்துடன் தொடர்புடைய பகுதிகளை மீட்பேன் *) காஷ்மீருக்கு விடுதலை அளித்துவிடுவேன் *) சீன இனங்களுடன் தொடர்புடைய கிழக்கு மாநிலங்களான சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகியவற்றுக்கு விடுதலை அளித்துவிடுவேன் *) தமிழ் மொழிக்குடும்ப பகுதியான தென்னிந்தியாவுக்கும் விடுதலை அளித்துவிடுவேன் *) வங்கதேசத்திலும் நேபாளத்திலும் உள்ள ஹிந்தி தொடர்பான பகுதிகளை ஹிந்தியாவுக்கு தரச்சொல்வேன். மறுத்தால் படை எடுத்து கைப்பற்றுவேன். *) பாகிஸ்தானின் மீது படையெடுத்து அதன் நடுவே ஓடும் சிந்து பேராறு வரையான ஹிந்தி தொடர்புடைய பகுதியை ஹிந்தியாவுடன் இணைப்பேன். ஆப்கானியா, பஷ்தூன், பலூச்சிஸ்தான் போன்ற பகுதிகளுக்கு விடுதலை அளிப்பேன். இதன்மூலம் பாகிஸ்தான் என்றநாடோ மாநிலமோ இல்லாது ஒழிந்து போகும். *) இத்தனை பெரிய நாட்டையும் வளங்களையும் மக்கள் எண்ணிக்கையையும் வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் வறிய நாடாக இருக்காமல் வறுமையை ஒழிக்க வேளாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவேன். *) கறுப்பு பணத்தை மீட்க முயற்சி செய்வேன். பெருமுதலாளிகளை இயற்கையைக் கொள்ளையடிக்க விடமாட்டேன். கையூட்டு, ஊழல் ஆகியவற்றை இல்லாது ஒழிப்பேன். *) வேதங்களில் குறைகளைக் களைந்து நடைமுறை வாழ்க்கைக்கேற்ப ஒரு எளிய ஹிந்து மத புனித நூலை உருவாக்குவேன். அது எல்லா மொழிகளில் கிடைக்கச் செய்வேன். மூடநம்பிக்கைகளையும் போலிச் சாமியார்களையும் ஒழிப்பேன். *) ஹிந்து மதத்தை ஹிந்தியாவின் தேசிய மதமாக அறிவிப்பேன். ஹிந்துநாடு (Hindutva republic of Hindia) என்று பெயர் மாற்றுவேன். எவரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். சிறுபான்மை மதத்தினருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்குவேன். *) மக்கள் தொகையைப் படிப்படியாக பல கட்டங்களில் சரியாகத் திட்டமிட்டு குறைப்பேன் *) சேனையை பலமானதாக நவீனமானதாக வைத்திருப்பேன். நாட்டு மக்களின் உடல் நலத்தைப் பேணுவேன். *) பசு மாடு உட்பட அனைத்து விலங்குகளின் நலங்களையும் காப்பேன். காட்டு வளத்தைப் பெருக்குவேன். *) மக்களிடம் ஒழுக்கத்தைப் புகுத்துவேன். விதிகளை மீறும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவேன். *) ஹிந்தி மொழியை மற்ற ஹிந்திக் குடும்ப மொழியினர் மீது திணிக்கமாட்டேன். இறந்துபோன சமஸ்கிருதத்தைத் தூக்கிவைத்து அழாமல், இருக்கும் மொழிகளுக்கு உரிய உரிமைகளை அளிப்பேன். *) ஒவ்வொரு ஹிந்தி குடும்ப இனங்களுக்கும் சரியான மாநில உரிமைகள் அளிப்பேன். (இராணுவம், தகவல் தொடர்பு நடுவணரசு கட்டுப்பாட்டில்) *) திபெத்தியருக்கு ஆயுதம் கொடுத்து சீனாவிடமிருந்து விடுதலை பெற உதவுவேன். மங்கோலியாவுக்கும் உதவி செய்து சீனாவிடம் பறிபோன தமது பகுதிகளை மீட்க தூண்டுவேன். கேண்ட்டான் (ஹாங்காங்) சீனாவிடமிருந்து விடுதலை பெருவதில் உதவுவேன். இதன் மூலம் சீனாவைத் துண்டாடி வலுவிழக்கச் செய்வேன். *) இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தைப் பெருக்கி எந்த வல்லரசுக்கும் அடிமையாக ஆகாமல் சொந்தக்காலில் இந்துநாட்டை நிற்கவைப்பேன். பிற நாடுகளில் குடியேறிய ஹிந்தியரை திரும்ப அழைத்து வருவேன். *) ஹிந்தியா மற்றும் அதனைச் சுற்றி நிலவழித் தொடர்புடைய நாடுகளை இணைத்து ஒரு ஒன்றியத்தைத் தொடங்குவேன். பொதுவான நாணயம் (currency) ஒன்றை உருவாக்குவேன் *) எந்த நாட்டில் இந்து, இந்தி இன மக்களுக்குக் கொடுமை நடந்தாலும் குரல்கொடுப்பேன்.