Saturday 31 December 2022

சேனைத்தலைவர் தமிழ்த் தலைவர் ஆவது எப்போது?

சேனைத்தலைவர் தமிழ்த் தலைவர் ஆவது எப்போது?

  என் சேனைத் தலைவர் சமுதாயமே! 
படைகளைக் கட்டியாண்ட தளபதி வம்சமே !
 உங்களை நோக்கி சில கேள்விகள்....

 நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு சுயநலமாக இருக்கப் போகிறோம்?
 இன்னும் எத்தனை நாட்களுக்கு தானுண்டு தன் வேலையுண்டு தன் சமூதாயமுண்டு என்று இருக்கப் போகிறோம்?
 மூவேந்தர் காலத்தில் படைகளை வழிநடத்தும் தளபதிகளாக இருந்த நாம் இன்று எப்படி இருக்கிறோம்?!
கல்வியில் முன்னேறி பத்ம பூசன் வரை வாங்கிவிட்டோம் சரிதான்.
 வணிகத்தில் ஓரளவு முன்னேறி நாம் வாழும் பகுதிகளில் கோலோச்சியும் வருகிறோம் சரிதான்.
 ஆனாலும் நம் சமுதாயத்தில் பாதிபேர் அன்றாடங் காய்ச்சிகளாக இன்றும் உள்ளனரே அது பற்றி சிந்தித்தீர்களா?!
 மரம் செழித்தால்தான் கிளை செழிக்கும், இனம் செழித்தால்தான் குலம் செழிக்கும் என்பது தெரியுமா?
 வரலாற்றில் வாளே தூக்கியிராத சமூகமெல்லாம் தாங்கள் போர்க்குடி என்று மார்தட்டும் சூழலில் இன்று நாம் இருக்கிறோமா இல்லையா என்று தெரியாத அளவிற்கு ஊமையாக வாழ்வது ஏன்?
 அரசியலில் நம் சமுதாயம் காணாமல் ஆக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகாலம் ஆகிறது என்பது தெரியுமா?
 என்னதான் திறமையிருந்தாலும் செல்வம் இருந்தாலும் அரசியல் செய்யாமல் மேலெழவே முடியாது என்பது தெரியுமா?
 ஜனநாயகத்தில் மிகச் சிறுபான்மையாக இருக்கும் நாம் என்ன செய்யமுடியும் என்கிற தாழ்வு மனப்பான்மையா?
 தமிழக மக்கட்தொகையில் 0.003% இருக்கும் ஒரு சமுதாயம் அரசியலில்  தலைமையில் இருக்கும் போது  0.4% இருக்கும் நாம் ஏன் எதையும் சாதிக்க முடியவில்லை?

 இனியும் நாம் ஒதுங்கியிருப்பதில் அர்த்தம் இல்லை.
 நாம் நமது சமுதாயத்தை ஒருங்கிணைத்து நம் தமிழ் இனத்தை வழிநடத்தும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
  மூவேந்தரை அழித்த மன்னர்களின் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களது போர்க்குடிகளும் அவர்களது இன மக்களும் இன்னமும் அதே அதிகாரத்துடன் நவீன மன்னராட்சி நடத்தி வருகின்றனர்.
 ஆனால் மூவேந்தர் வாரிசுகள் மறைந்துவிட்டனர். அவர்களது போர்க்குடிகள் விலைபோய் விட்டன. தமிழ் இனமும் வேற்றாரை அனுசரித்துப் போகப் பழகிவிட்டது. தமிழரை வழிநடத்த யாருமில்லை!
 இந்நிலையில் தமிழினப் போர்க்குடிகளுக்கு தலைமை வகித்த குடியாகிய சேனைத்தலைவர் நாம் இருக்கிறோம்.
தகப்பன் இல்லாத நிலையில் மூத்த மகன் குடும்ப பாரத்தைச் சுமப்பது போல இன்று இந்த இனத்தின் தலைசிறந்த போர்க்குடி நாம் தமிழினத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறோம்.

 ஆம்! இனி தமிழ்தேசியத்தைக் கையில் எடுப்போம்.
ஏனென்றால் இனி தமிழ்தேசியத்தின் காலம்.
 பிற குடிகளில் இளைய சமுதாயம் இதை உணரத் தொடங்கிவிட்டனர். நம் சமுதாயத்திலும் அத்தகையோர் உண்டு. மற்றவர்களை முந்திக் கொண்டு நாம் தமிழ்தேசியத்திற்கு அதிக பங்களிப்பைச் செய்து தமிழினத்தின் தலைமைக்கு உயர வேண்டும். பங்களிப்பு என்றால் சிந்தனை, செயல், பொருளாதாரம், உழைப்பு, தியாகம், வீரம் என்று பங்களிப்பது.
 
இனி தமிழ்தேசிய எழுச்சிக் காலம்! 
இனி தமிழ் இனத்திற்காக அதிகம் செயல்படுவோர் ஆதிக்க சாதி! இனத்திற்காக எதுவும் செய்ய முன் வராதோர் அடிமை சாதி! 

 எவன் தமிழினத்திற்காக படைகட்டி எழுப்புகிறானோ அவனே சேர, சோழ, பாண்டியருக்கும் மேலான அரசன்! அவன் சந்ததியும் உறவினரும் அரச பரம்பரை! அவன் சமூகமே ஆதிக்க சாதி!

 நாம் மீண்டும் ஆதிக்க சாதியாக மாற வேண்டும்!

சேனைத் தலைவர் என்றால் தமிழருக்காக எதையும் செய்பவர் என்றாக வேண்டும்!

 சேனைத் தலைவர் வாழ்ந்தால் தமிழர் வாழ்வார் என்கிற எண்ணம் தமிழர்களிடம் வரவேண்டும்!
 சேனைத் தலைவரை ஒழித்துவிட்டால் தமிழினம் அழிந்துவிடும் என்று தமிழின எதிரிகள் நினைக்க வேண்டும்!

 தமிழருக்கு ஆபத்து வந்தால் சேனைத்தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒவ்வொரு தமிழனும் நம்ப வேண்டும்!

 உலகில் எங்காவது ஒரு தமிழருக்கு பிரச்சனை என்றால் ஒரு சேனைத் தலைவனை சந்தித்துக் கூறிவிட்டால் சரியாகிவிடும் என்றாக வேண்டும்!

 தமிழினம் சிறிது வீழ்ந்தாலும் சேனைத் தலைவர் பெரும் பின்னடைவு அடைய வேண்டும்!
 தமிழினம் சிறிது உயர்ந்தாலும் சேனைத் தலைவர் பெரும் வளர்ச்சி பெற வேண்டும்!

  அரசியலில்  மட்டும் இல்லை தமிழினம் நம் தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதம் தூக்க நேர்ந்தாலும் நாம் முன்னின்று செய்ய வேண்டும்!
நமக்கு போர்த் தொழில் புதிதல்ல!
மூவேந்தர் காலத்தில் வெற்றிகளைக் குவித்த வரலாறு நமக்கு உண்டு!
 நம் உடலில் வீர ரத்தம் ஓடுகிறது!
மூவேந்தர் வீழ்ந்த பிறகு வந்தேறிகளுக்கு போர்த்தொழில் செய்யமாட்டோம் என்று மானத்தோடு வெளியேறிய நாம் இன்று வரை வந்தேறி ஆட்சியாளர்களுக்கு அடிபணியவில்லை.
 எவனுக்கும் கூழைக் கும்பிடு போட்டதில்லை!

 இனி நாம் வீறுகொண்டு எழுவோம்!
தமிழராக சிந்திப்போம்! தமிழ்தேசிய கட்சிகளிலும் இயக்கங்களிலும் சேர்வோம்! பிற தமிழரை விட அதிகம் பங்களித்து தலைமைக்கு உயர்வோம்!
 எந்த கட்சியில் இருந்தாலும் எந்த வேலையில் இருந்தாலும் நம் குடிக்கும் அதற்கு அடுத்து பிற தமிழருக்கும் சாதகமாக நடப்போம்!
 
 காலம் வந்தால் உண்மையிலேயே சேனைத் தலைவராக மாறவேண்டும்!
 படையொன்று கட்டியெழுப்பி தனிநாடு காணவேண்டும்!
 தலைமை ஏற்ற ஆள்வதற்கு மட்டுமில்லை இனத்திற்காக உயிரைக்கூட இழக்க முன்வர வேண்டும்!

நம் முன்னோன் முருகன் போல இறைநிலை 
அடையவேண்டும்!!

 அரசியலில் பெரும்பான்மைத் தமிழ்க் குடிகளில் ஆதிக்க குடிகள் வந்தேறிகளிடம் பேரம் பேசி பங்கு வாங்குவதிலும் பட்டியலினத்தார் பங்கு பிச்சை கேட்பதிலும் குறியாக இருக்கிறார்கள்.
 சிறுபான்மை தமிழ்க்குடிகள் அரசியலில் நம்பிக்கை இழந்து ஒதுங்கிவிட்டனர்.

 இந்த நிலையை மாற்ற நமக்கு தகுதி இருக்கிறது.
 நமக்கு வரலாறு இருக்கிறது!
 பொருளாதாரத் தகுதியும் அறிவும் இனப்பற்றும் நம்மிடம் இருக்கிறது.
 நாம் நினைத்தால் நம் இனத்தை வேற்றினத்தார் பிடியிலிருந்து விடுவிக்க முடியும்.
 நாம் மனது வைத்தால் நம் தாய்நிலத்தை விடுதலை செய்து ஆளமுடியும்.

 நம் சமுதாயத்தை ஒன்று திரட்டுவோம்!
சாதியில்லை என்கிற வந்தேறிகளின் சதியை முறியடிப்போம்!
 சாதிப் பட்டத்தை பெயருக்குப் பின் சேர்ப்போம்!
குடிகள் சேர்ந்துதான் இனம் என்கிற புரிதலுக்கு வருவோம்!
 சக தமிழ்க் குடிகளை அரவணைப்போம்!
வந்தேறு குடிகளை சிதறடிப்போம்! 
இனப் பகைவர்களை வேரறுப்போம்!


பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஏழை, பணக்காரன் என எல்லா சேனைத்தலைவரும் தமிழினத்தை காத்து வழிநடத்த சூளுரைப்போம்!
 சமுதாய கூட்டங்களிலும், விழாக்களிலும் தமிழ்தேசியம் குறித்து பேசுவோம்!

 தமிழ்தேசியம் என்றால் சேனைத்தலைவர்!
ஒரு சேனைத்தலைவரிடம் பேச்சுக் கொடுத்தால் தமிழ்தேசியம் தான் பேசுவார் என்று ஆக வேண்டும்!

 நம்மைப் பார்த்து பிற ஆதிக்க தமிழ்க் குடிகள் நாண வேண்டும்!
 நம் இனப்பற்றைப் பார்த்து பிற குடிகளும் இனப்பற்று கொள்ளவேண்டும்!
 இதன் மூலம் இனி நம் தாய்நிலத்தில் வேற்றின அதிகாரம் என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் என்றாக்குவோம்!
 தமிழகம் ஈழம் சேர்ந்த தமிழ்த்தாய் நிலத்தில் ஆள்பவன் சேனைத் தலைவனாக இருக்க வேண்டும் அல்லது ஆளவைத்தவன் சேனைத்தலைவனாக இருக்கவேண்டும்!
 நம் மேலாண்மையை சக தமிழ்க் குடிகள் முழுமனதுடன் ஏற்கும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும்!
 இன எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நாம் சிம்ம சொப்பனமாகத் திகழவேண்டும்!
 பெரும்பான்மைத் தமிழ்க்குடிகளால் முடியாத ஒன்றை நம்மால் சாதிக்க முடியும் என்று காட்டவேண்டும்!
 ஒரு தமிழர் எப்படி இருப்பான் என்று கேட்டால் எல்லாரும் சேனைத்தலைவரைக் காட்ட வேண்டும்!
 
ஜனநாயகம் என்றாலும் சரி ஆயுத வழி என்றாலும் சரி! தமிழினத்தை முன்னின்று காக்க சேனைத்தலைவர் தயாராக வேண்டும்!

 சாமுராய்கள் ஆண்ட ஜப்பான் போல சேனைத்தலைவர் ஆளும் தமிழர்நாடு இருக்கும்!
 உலகில் சிறந்த நாடு தமிழர்நாடு!
அதிலும் சிறந்தது சேனைத்தலைவர் ஆட்சி என்று வரலாறு பேச வேண்டும்!

 தமிழின எதிரிகள் அழிவு சேனைத்தலைவர் கையால் நடக்க வேண்டும்!
 சேனைத்தலைவரில் ஒரு இனத் துரோகி கூட கிடையாது என்றிருக்க வேண்டும்!
 சேனைத் தலைவரைத் தாண்டித்தான் பிற தமிழரைத் தொடமுடியும் என்கிற நிலை வரவேண்டும்!

 ஒன்று தமிழ்தேசியத்தைக் கையிலெடுத்து தமிழினத் தலைவர் ஆகத் தயாராவோம்!
 அப்படி இல்லை வேறு எந்த தமிழ்க்குடி தலைமைக்கு உயர்ந்தாலும் அவர்களுக்கு மனமனமுவந்து அடிமை சேவகம் செய்ய தயாராவோம்!

 இந்த 2023 ஆம் புத்தாண்டில் உறுதி ஏற்போம்! 
இனி தமிழ்தேசியம் நம் கொள்கை!
தனிநாடு நம் இலக்கு!
நாமே இனி தமிழர்நாட்டை ஆளப்போகும் பரம்பரை!
இனம் வாழ்ந்தால் குடிகள் வாழும்!
குடிகள் வாழ்ந்தால் இனம் வாழும்!

இனி தமிழ்தேசியத்தின் காலம்!
இனி சேனைத்தலைவரின் காலம்! 


 
 
 

Sunday 25 December 2022

மைசூர் தாண்டியும் தமிழ்க் கல்வெட்டுகள்

மைசூர் தாண்டியும் தமிழ்க் கல்வெட்டுகள்

 கர்நாடகா மாநிலத்தின் ஏறத்தாழ மையத்தில் சித்ரதுர்கா அருகே தமட்டக்கல் (thamatakal) எனும் இடத்தில் தமிழி வட்டெழுத்துகளால் ஆன கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று உள்ளது. இதே காலகட்டத்தைச் சேர்ந்த பழைய கன்னட நடுகல்லும் இதனுடன் உள்ளது. அதில் 'ஏழூர் சாத்தன்' எனும் பெயர் காணப்படுகிறது.

 மைசூரிலிருந்து தென்கிழக்காக 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது 'தலக்காடு' என்னும் ஊர் இராஜராஜ சோழன் கங்கபாடியைக் கைக்கொண்டு "முடி கொண்ட சோழ மண்டலம்" பெயரிட்டு தலைநகரான தலவனபுராத்தை "தழைக்காடான இராஜராஜபுரம்" என்ற தன் பெயரை சூட்டினார். இவ்வாறு 120 ஆண்டுகள் இங்கு சோழர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் பின்னர் ஹொய்சாள மரபினன் விஷ்ணு வர்த்தன் என்ற அரசன் கர்நாடக முழுமைக்குமான ஒரு பேரரசை கட்டியெழுப்ப துணிந்து தன் கி.பி. 1117ல் தலைக்காடு போரில் சோழப்பிரதியாக கங்கநாட்டில் ஆட்சி நிர்வாகம் புரிந்து வந்த அதியமானைக் கொன்று தலைக்காட்டை கைப்பற்றினார். மேலும் இவ்வெற்றியின் நினைவாக தலக்காட்டில் கீர்த்தி நாராயணன் என்ற கோயிலை எடுப்பித்தார். இக்கோவிலில் உள்ள அவ்வரசனது கல்வெட்டு தமிழில் உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்கள் தமிழர் என்று அறியலாம்.
கல்வெட்டு வரிகள் வருமாறு,
"ஸ்வஸ்திஸ்ரீ விஷ்ணு வர்த்ன போய்சாள
தேவர் ஹேவிளம்பி- சம்வரத்து மார்கழி
மாசத்து பூர்வ பக்ஷத்து வெள்ளிக்கிழமை யும் பெற்ற
விசாகத்து நாள் அதியமானை
நிர்மூலித்து தலைக்காடு- கொண்டு ஸ்ரீகீர்த்தி
நாராயணப்பெருமானை திருப்ரதிஷ்டை பண்ணி -
இந்நாயனார்க்கு அமுதுபடிக்கும் சாத்துப்
படிக்கும் நித்தபோகத்துக்கும் ஆக விட்ட
திருவிடையாட்ட ஊர்கள் இவ்வூர் நகரம் குக்கூர்-
சிறுவிண்ணகர் ஓடப்பட்டி,வாகியூர் இவ்வூர்
ஆவனித்திரையும் ஏரிக்கீழ் கமுகம், வளமும் இத்தனையும் ஸ்ரீ விஷ்ணுவர்தன போய்சாள தேவன்
சர்வபரிகாரமாக அச்சந்திராற்கஸ்தாயி நடப்பதாக விட்டான் இதுக்கு அழிவு நினைத்தான் ஸ்வதத்த ப்ரதத்தம்...."

சான்று: https://www.newindianexpress .com/states/
karnataka/2021/sep/15/karnataka-6th-century-hero-stone-tamil-inscription-restored-in-tamatakallu-2359027.html

நன்றி: John Peter

 (தனித் தமிழர்நாடு புத்தகம் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது)

தமிழ்க் கங்கர்

 தமிழ்க் கங்கர்

கோலார் நகரத்தின் பழைய பெயர் குவலாளபுரம் ஆகும். இது கங்கர்களின் தலைநகரம் ஆகும். இலக்கியத்தில் கங்கன் என்றொரு சிற்றரசன் பெயர் வருகிறது (அகநானூறு 44). ஏழு மன்னர்கள் கூட்டணி அமைத்து சோழன் பெரும்பூட் சென்னியுடன் போரிட்டபோது அந்த கூட்டணியில் கங்கன் இருந்தான். கங்கர்கள் கி.பி.350 முதல் 550 வரை தனியரசு செலுத்தி பின் பல்வேறு பேரரசுகளுக்கு அடங்கி சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர் (இவர்களின் ஒரு பிரிவினர் இன்றைய ஒரிசா மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியையும் ஆட்சி செய்துள்ளனர்). இவர்களின் கடைசி மன்னனும் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாகவே இருந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தைச் (பனிரெண்டாம் நூற்றாண்டு) சேர்ந்த அமராபரணன் சீயகங்கன். பவணந்தி அடிகள் நன்னூல் இயற்றியது இவனது அரசவையில்தான்.
நன்னூல் கூறுவது போல (பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி) இப்புலவர் பிறந்த சனகை என்பது மைசூர் மாவட்டம் திருமுக்கூடல் நரசிபுரம் தாலுகாவிலுள்ள சனாகாதபுரம் என்று சோழர் சரித்திரம் இரண்டாம் பாகத்தில் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். நன்னூல் "குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடல்" என்று தமிழக எல்லைகளைக் குறிக்கிறது.
 இதன்படி வடக்கே குடகு மலை முதல் வேங்கடம் வரை தமிழ்நிலம் என்றாகிறது. இதனுள் மைசூரும் பெங்களூரும் அடங்கும். இந்த அமராபரணன் சீயகங்கனின் இயற்பெயர் "திருவேகம்பமுடையான்" என்பதாகும். இவன் மனைவி பெயர் "அரியபிள்ளை". இவனது மகனின் பெயர் "அருங்குன்றைப் பிள்ளையாரான செயகங்கன்". ஒரு மகளும் உண்டு அவள் பெயர் "வடவாயில் செல்வியாரான சந்திரகுல மாதேவியார்" என்பதாகும்.  கோலார் தமிழர் பகுதியே!

(தனித் தமிழர்நாடு புத்தகம் இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது)

Saturday 17 December 2022

மீண்டும் தனித் தமிழர்நாடு

மீண்டும் தனித் தமிழர்நாடு

"தனித் தமிழர்நாடு" புத்தகம் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது

தனித் தமிழர்நாடு இரண்டாம் பதிப்பில் புதியதாக சேர்க்கப்படவுள்ள 13 தலைப்புகள்,

1) தமிழர் பேரரசுகள் (தமிழர் ஆண்ட பேரரசுகள் பற்றியது)

2) அசோக சக்கரம் சொல்லும் உண்மை (அசோகர் ஆட்சியில் தமிழகம் இல்லாதது பற்றியது)

3) பெங்களூர் மைய நகரம் முழுக்க தமிழர்கள்
(பெங்களூர் நகரம் பற்றியது)

4) ஜமீன்களின் அட்டூழியம்
(கீழ வெண்மணி, குறிஞ்சாக்குளம் போன்றவை)

5) மொழி வரைபடம் 1822
(முதல் மொழி வரைபடம்)

6) தமிழகம் இழந்த நிலம் தற்கால நிலை

7) இரண்டாவது பெரும்பான்மை மொழிகள்
(தென்னிந்திய மாநிலங்களில் இரண்டாவது பெரும்பான்மை கொண்டு விளங்கும் மொழிகளின் மாவட்ட வரைபடம்)

8) 1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம் 

9) தமிழ்ப் பெருஞ்சுவர்
(சீனப் பெருஞ்சுவர் போல தடுப்பு சுவர் பற்றியது)

10) கண்டியில் தெலுங்கர் குடியேற்றம்
(கண்டி நாயக்கர் பற்றியது)

11) புலிகள் ஆண்ட ஈழம் 
(புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய வரைபடம்)

12) தேசிய தனியரசும் பழங்குடி துணையரசும்
(தமிழர்நாட்டில் பழங்குடி மக்களின் நில உரிமை பற்றியது)

13) இழந்தது தேவிகுளம் பீர்மேடு மட்டும்தானா?
(2011 இல் புதிய தலைமுறை இதழில் வந்த மண்மீட்பு கட்டுரை)

14) வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை (வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப் படுவது பற்றியது)

* சான்றுகள் குறைவாக உள்ளதால் நீக்கப்பட்டது
1) தாலியறுத்தான் சந்தை 

* மொத்தம் 300 பக்கங்கள்
 * 120 க்கும் மேற்பட்ட படங்கள் (55 வண்ணப்படங்கள்) 
* முன்பை விட பக்கங்கள் குறைக்கப்பட்டு நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு வெளிவருகிறது.

  

Tuesday 6 December 2022

வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை

வேலைவாய்ப்பு இனத்தின் உரிமை

 ஒரு இனம் தமது தாய்நில வளங்களைப் பயன்படுத்தி வாழ்ந்துகொள்வது தமது அடுத்த சந்ததியை ஆளாக்கிவிடுவது வாழ்வியல் முறையாகும். நிலத்தின் வளங்களை மண்ணின் மைந்தர் அல்லாத பிறர் பயன்படுத்துவது முறையில்லை. ஒருவேளை அப்படி பிறர் பயன்படுத்தும்போது அப்பகுதி மக்களுக்கு அதில் வாழ்வாதாரம் தருவதே முறை! ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு நிலப்பகுதியை எடுத்துக்கொண்டு அதன் வளங்களைப் பயன்படுத்தும்போது அதில் அம்மண்ணின் மைந்தருக்கு வேலைவாய்ப்பு தருவதே முறை! அது அரசின் உதவியைப் பெறுமானால் அந்த அரசுக்கு வரி அளிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது ஒப்பந்தம் போன்ற வாழ்வாதாரங்களை அளிப்பதும் தார்மீகக் கடமை ஆகும். ஒரு இனம் தமது வளங்களின் மீது வாழ்வாதார உரிமை கோருவது தவறென்று ஆகாது. ஆங்கிலேயர் காலத்தில் வளச்சுரண்டல் உச்சத்தை அடைந்தபோது வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு உருவாக்கியதே காங்கிரஸ். பின்னர் அதுவே இந்திய சுதந்திர குரலாக மாறியது.
 திராவிட இயக்கமும் சரி சிங்கள பேரினவாதமும் சரி ஆங்கிலேயர் காலத்தில் தமிழர்கள் முறையாகப் படித்து தேர்வாகிப் பெற்ற வேலைவாய்ப்பைக் கண்டு எழுந்த பொறாமை உணர்வின் விளைவாகவே தோன்றியது.  முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர். இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது. 1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன. இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று தமிழர்கள் நிறைகின்றனர் (குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்) ஈழத்திலும் அவ்வாறே தமிழர்கள் கல்வி மூலம் உயர்பதவிகளை அடைகின்றனர் (குறிப்பாக யாழ் வெள்ளாளர்கள்). 
 தமிழர்கள் கல்வி மூலம் அடைந்த உயரத்தை பிறர் அரசியல் மூலம் அடைய திட்டமிடுகின்றனர். இவ்வாறே திராவிடமும் சிங்களப் பேரினவாதமும் பிறந்தன. ஆங்கிலேய ஆதரவுடன் திராவிடம் ஆட்சியைப் பிடித்து மறைமுகமாக செயல்பட்டது. ஆனால் சிங்களவர் நேரடியாகவே செயலில் இறங்கினர். 1956 இல் சிங்களம் திணிக்கப்பட்டு தமிழர்கள் வீட்டுக்கு அனுப்பபட்டு எல்லா அரசு வேலைகளிலும் ராணுவத்திலும் காவல்துறையிலும் சிங்களவர் நிறைகின்றனர். 1956 இல் 30% நிர்வாகப் பணிகள்,  50% எழுத்தர் பணிகள், 60% பொறியாளர் மற்றும் மருத்துவர் பணிகள் மற்றும் 40% ராணுவ மற்றும் காவல்துறை பணிகள் தமிழர் வசம் இருந்தன. ஆனால் 1970 இல் 5% நிர்வாகப் பணிகள்,  5% எழுத்தர் பணிகள், 10% பொறியாளர் மற்றும் மருத்துவர் பணிகள் மற்றும் 1% ராணுவ மற்றும் காவல்துறை பணிகள் மட்டுமே தமிழர் வசம் இருந்தன. இந்த வேலைவாய்ப்பு இழப்பே தமிழ் இளைஞர்கள் கொதித்தெழக் காரணம். இதேபோல ஹிந்தியர் ஹிந்தியைத் திணித்தபோது தமிழகம் ஈழத்தடிகள் தலைமையில்  எழுநூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொடுத்து பெரும் போராட்டம் நடத்தித் தடுத்ததால் ஈழம் அளவுக்கு நிலை மோசமாகவில்லை. இந்த மொழிப்போரில் இடையில் புகுந்து இடையிலேயே விலகிவிட்ட திராவிடத் தலைவர்கள் இதன் பலனை மறைமுகமாக தமது மக்களுக்கு சாதகமாக மாற்றினர். ஆம்! திராவிடம் இந்த இருமொழிக் கொள்கையை "தமிழ் - ஆங்கிலம்" என்றில்லாமல் "தாய்மொழி - ஆங்கிலம்" என்றாக்கி தம் மக்களைக் காத்தது. 2005 இல் தமிழ் கட்டயாமாக்கப்படும் வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தமிழ் இல்லாமலேயே இயங்கின.  அவற்றின் எண்ணிக்கை.
- தெலுங்கு : 269 + 35
- உருது : 260 + 56
- மலையாளம் : 100 + 50
- கன்னடம் : 61 +1.

மாநில வேலைவாய்ப்பில் தமிழுக்கு மதிப்பெண்கள் அதிகம் தரப்பட்டு இருந்ததால் தமிழர்கள் அதை அடைவது எளிதாக இருந்தது. ஆனால் தமிழகத்தினுள் மத்திய அரசின் கீழ் இயங்கும் துறைகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டே வந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு  தமிழுக்கு மதிப்பெண்ணை குறைத்தனர். பின் தமிழக அரசின் வேலைவாய்ப்புக்கு எந்த மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்றாக்கினர்.
 இதைவிட ஒருபடி மேலே போய் 1.9.2016 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்டத்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது எத்தனை பெரிய அநீதி?! 
 இதன் மோசமான விளைவுகளை தற்போது தமிழக இளைஞர்கள் சந்தித்து வருகின்றனர்.
சில எடுத்துக்காட்டுகள் வருமாறு,

* தென்னக ரயில்வேயில் 196 SM காலியிடங்கள் நிரப்பப்பட்டபோது 2 மலையாளிகள், 194 பீகாரிகள், 0 தமிழர்கள்
(செய்தி 26.02.2017)

* மதுரையில் நடந்த தபால்துறை போஸ்ட்மேன் பணியிட நிரப்பலுக்கான தேர்வில் 300 காலியிடங்களுக்கு 50% வரை அரியானா மாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் போக மகாராஷ்ட்ர மாணவர்களும் பெருமளவில் தேர்வாகியுள்ளனர்.  தமிழர்கள் 25%கூட தேர்வாகவில்லை
(செய்தி 17.03.2017)

* சென்னை மண்டலத்திற்கு தேர்வான "வருமான வரித்துறை அதிகாரிகள்" 92 பேரில் 5 பேர் மட்டுமே தமிழர்கள். அதேபோல சென்னை மண்டலத்திற்கு தேர்வான "உதவி வருமான வரித்துறை அதிகாரிகள்" 233 பேரில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்
(செய்தி 29.10.2018)

* தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தேர்வான 300 பேரில் 39 பேர் வெளிமாநிலத்தவர்கள்
(செய்தி 31.05.2019)

* மதுரை ரயில்வே பணியிடங்கள் 572 இல் 10 பேர் மட்டுமே தமிழர்
(செய்தி 18.09.2019)

* தென்னக ரயில்வே (தமிழகம் மற்றும் கேரள ரயில்வே சேர்ந்தது தென்னக ரயில்வே) பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள் (செய்தி 16.06.2020)

 இந்த நிலையை ஒப்பிட கர்நாடகம் வைத்திருந்த மொழிக்கொள்கையைப் பார்ப்போம். 1982 இல் கர்நாடகம் முழுவதும்  கன்னடம் திணிக்கப்பட்டு அதை எதிர்த்துப் போராடிய 4 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15 பேர் வரை காணாமல் போயினர். தமிழ்ப் பகுதிகளுக்கு அப்போது விலக்கு அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கர்நாடகத்தில் கன்னடருக்கே முன்னுரிமை என்று எழுத்தப்படாத சட்டம் 1986 இல் சட்டமாகவே ஆனது. சரோஜினி மகிஷி கமிஷன் பரிந்துரைகள் படி 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இதில் முக்கியமானவை வருமாறு,
1. 100% இடஒதுக்கீடு கர்நாடக மாநில அரசு பணிகளில் கன்னடர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
2. 100% இடஒதுக்கீடு மத்திய அரசு பணிகளில் "C", "D" எனும் ப்ளூ காலர் பணிகள் கன்னட மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
3. மத்திய அரசின் "B" கிரேட் பணிகளில் 80% கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும்.
4. மத்திய அரசின் "A" கிரேட் பணிகளில் 65% கன்னட மக்களுக்கே வழங்க வேண்டும்.
5. 100% தனியார் வேலைகளில் கன்னடர்களுக்கே முன்னுரிமை. அப்படி கன்னடர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை எனும் நிலையில் பிறருக்கு வழங்கலாம்.
 இதில் கன்னடவர் என்பதற்கான வரையறையும் தரப்பட்டுள்ளது. அதாவது,
 பதினைந்து ஆண்டுகளுக்கு குறையாமல் கர்நாடகத்தில் இருந்திருக்க வேண்டும். கன்னடம் பேச, படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும் (அதிலும் கன்னட மீடியத்தில் படித்திருந்தால் முன்னுரிமை) இந்த வரையறையில் வருபவர் கன்னடர். இந்த அடிப்படையில் செயல்பட்டதால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். 
 கர்நாடக கல்வித் துறையின் ஆவணங்களின்படி 1978-79 கல்வி ஆண்டில் கர்நாடகாவில் இருந்த 267 தமிழ்வழி தொடக்கப்பள்ளிகளில் 76,309 மாணவர்கள் படித்துள்ளனர். 100 -க்கும் அதிகமான உயர்நிலை பள்ளிகளில் 13,455 மாணவர்கள் படித்துள்ளனர்.  இந்த மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வியை போதிக்க 1706 தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர்.
2015-16 கல்வி ஆண்டில் மொத்தம் 8.35 லட்சம் மாணவர்கள் கர்நாடகாவில் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். இதில் 832 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வு எழுதியுள்ளனர் (அதாவது 35 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில் 5% கூட இல்லை).

தப்பித் தவறி பிறருக்கு வேலை கிடைத்தால் கன்னடர் பெரும் எதிர்ப்பைத் தெரிவிப்பர். உதாரணமாக 1999 இல் மத்திய அரசு நிறுவனமான ஏ.ஓ.ஜி இல் கன்னடர் பெரும் போராட்டம் செய்து முறைப்படி தேர்வாகி வேலைபெற்ற 28 தமிழர்களை வெளியேற்றினர். 

 தமிழகத்தினுள் மாநில, மத்திய மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் தமிழக மாநிலத்தாருக்கே கிடைக்கவேண்டும் என்று மாநில உரிமைகளை மீட்கும் நோக்கத்துடன் இயங்கும் பெ.மணியரசன் அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார். 

 அரசாங்க வேலைவாய்ப்பு சரியாகப் பங்கிடப்படாதபோது அங்கே கலகம் வெடிக்கும் என்பது கண்கூடு! 

Monday 21 November 2022

பெங்களூர் நகரம் முழுக்க தமிழர்கள்



பெங்களூர் நகரம் முழுக்க தமிழர்கள் 


 1951 இல் வெளியான பெங்களூர் மாவட்ட மொழிவழி வரைபடம் இங்கே தரப்பட்டுள்ளது.

 இதில் பெங்களூர் நகரம் முழுக்க தமிழர்களால் நிறைந்துள்ளது. நகருக்கு வெளியே பிற வட்டங்களில் தெலுங்கர் மற்றும் கன்னடர் உள்ளனர்.

 தமிழர்களிடம் இருந்து பெங்களூரைப் பிரித்தது இடையில் உள்ள தெலுங்கர் குடியேற்றமே ஆகும். ஆனால் மறுபக்கமாக கன்னடர் இடையில் புகுந்து குடியேறி தெலுங்கரிடமிருந்து பெங்களூரைப் பிரித்தது போல் உள்ளது இவ்வரைபடம். 


வரைபடத்திற்கு நன்றி: ஸ்ரீநிதி (twitter)

Friday 18 November 2022

கண்டித் தமிழர் ரித்திஷ்

கண்டித் தமிழர் ரித்திஷ் 

 ஜே.கே.ரித்திஷ் 1973 இல் இலங்கை கண்டி மாநகரில் பிறந்தார். இவரது தந்தை குழந்தைவேலு மற்றும் தாய் ஜெயலட்சுமி. இவருக்கு மூன்று வயதாக இருந்த போது இவரது குடும்பம் ராமநாதபுரம் வந்து குடியேறினர். இவருக்கு சாந்தி,மணி என்று இரு அக்காக்கள் உண்டு. 2007 இல் ஜோதீஸ்வரி என்பவரைத் திருமணம் கொண்டார்.
  இவர் தனது நண்பர் சின்னி ஜெயந்த் மூலம் 2007  'கானல் நீர்' எனும் படம் எடுத்து திரைத்துறையில் நுழைந்தார். 

2009 இல் தி.மு.க சார்பாக தேர்தலில் நின்று 3 லட்சம் வாக்குகள் வாங்கி தன்னை எதிர்த்து நின்ற அதிமுக சத்தியமூர்த்தியை விட 69,000 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். மத்திய அமெச்சரும் ஆனார்.

 2011இல் ஒரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.  

 LKG திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். நடிகர் சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார். 

2014 இல் அதிமுக விற்குத் தாவிய ரித்தீஷ் 2019 இல் மாரடைப்பால் மரணமடைந்தார்.

Thursday 17 November 2022

நரிக்காரர் குறவர் ஆனது எப்போது

நரிக்காரர் குறவர் ஆனது எப்போது?

 குறத்தி மகன் (1972) என்கிற படம் எடுக்கிறார்கள். அதைப் பார்ப்பவர் குறவர்கள் என்றாலே ஊசி பாசி விற்றுக்கொண்டு துப்பாக்கி வைத்துக்கொண்டு 'ஓ சாமியோ!' என்று அழைத்துக்கொண்டு இருப்பார்கள் என்று நினைப்பார்கள். ஆனால் அது நரிக்காரர் பற்றிய படம். அதில் காட்டப்படும் எதுவுமே குறவர் வாழ்வியலில் இல்லை. 
அம்மையார் ஜெயலலிதா 'கந்தன் கருணை' (1967) திரைப்படத்தில் குறத்தியாக நடித்திருப்பார். அதுதான் உண்மையான குறவர் தோற்றம்.

 BC இல் மிகவும் பின்தங்கியவர்கள் MBC என்று கொண்டுவரும்போது 'நக்கலே' என்கிற பெயரில் BC இல் இருந்த 'நரிக்காரர்கள்' பெயர்மாற்றப்பட்டு 'நரிக்குறவர்' என்கிற பெயரில் MBC இல் சேர்க்கப் படுகிறார்கள். அதற்கு முன்னர் 'நரிக்குறவர்' என்று எந்த சாதியும் கிடையாது. இப்படி புதியதாக ஒரு சாதி உருவாக்கப்பட்டது முறையில்லை என்று சட்டநாதன் அறிக்கை கூட சுட்டுகிறது. ஆந்திராவில் இன்னமும் நரிக்கார மக்கள் நக்கலே என்றுதான் ஆவணங்களில் குறிக்கப்படுகின்றனர்.

 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குஜராத்தின் மோவார் எனும் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பஞ்சத்தின் காரணமாக புலம்பெயர்ந்து ஆந்திரா வந்தவர்கள் இந்த நரிக்காரர்கள். அவர்களின் தாய்மொழி ஹிராணியம் என்கிற எழுத்து வடிவம் அற்ற மொழி. 

குறவர்கள் ஆதி தமிழ்க்குடி. சங்க காலத்திலேயே பெண்பாற் புலவர் 'குறமகள் இளவெயினி' எழுதிய 18 பாடல்கள் புறநானூற்றில் உண்டு. குறவர்கள் முழுத் தமிழர்கள். நரிக்காரர்கள் மொழி, கலாச்சாரம் என முற்றிலும் தமிழர்களுக்கு வேறானவர்கள். இந்த பெயர் குழப்பதால் குறவர்களின் வாழ்வியல், அடையாளம், பண்பாடு ஆகியன சிதைவிற்கு உள்ளாகிறது. 

எம்.ஜி.ஆர் தொடங்கி பல தலைவர்கள் நரிக்காரர்கள் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். குறவர்களும் வரவேற்கிறோம். அவர்கள் முன்னேற்றத்தை நாங்களும் விரும்குகிறோம். ஆனால் எங்கள் அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது.

நன்றி: 
இரணியன் அவர்களது பேட்டி
Dots media (29.09.2022)

 குறவர்கள் காடுகளில் வாழும் பழங்குடிகள்.
குற்றாலம் மலையில் சன்னியாசி புடவு பகுதியில் 2500 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துகள் 'குறவ' என்று உள்ளது. முருகனுக்கு பெண் கொடுத்த தமிழ்க் குடி அவர்கள்.
 நரிக்காரர்கள் நகரங்களில் தெருவோரத்தில் வாழும் நாடோடிகள். நாகரிகம் அற்றவர்கள். இரவு நேரங்களில் குறவர் குறத்தி ஆட்டம் என்கிற ஆபாச நடனம் நரிக்காரர் செய்வதே! இன்று குறவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் நரிக்காரர்கள் கைக்குப் போய்விட்டன.
 ஆம்!
 நரிக்காரருக்கு மத்திய (குஜராத்திகள்) அரசால் பழங்குடி (ST) இடவொதுக்கீடு  கொடுத்துவிட்டது. அதே மாதத்தில் குறவர்களுக்கு குறவர் என்று சாதிச்சான்று கூட கிடைக்காமல் ஐந்தாண்டு அலைந்த விரக்தியில் படப்பையில் வேல்முருகன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். 
  
இதனால் மேற்கண்ட பேட்டியளித்த இரணியன் அவர்கள் (வனவேங்கைகள் கட்சி) ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரையும் அவரை அழைத்து வந்த தென்காசி எம்.பி தனுஷ்.எம்.குமார் (பள்ளர்) அவர்களையும் நிற்கவைத்து கால்மேல் கால்போட்டபடி 'தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்' சாத்தூர் ராமச்சந்திரன் எனும் KKSSRR (தெலுங்கர்) திமிராக பேசி அனுப்பினார்.

 வந்தேறிகள் என்றால் நகரங்களில் தெருவோரங்களில் பரதேசிகள் வரை நினைத்ததைச் சாதிக்கலாம். ஆனால் இந்த மண்ணின் மைந்தர்கள் பழங்குடியில் இருந்து மந்திரி வரை அவமானத்தை மட்டுமே சந்திப்பது வாடிக்கையாகி விட்டது. 

Saturday 12 November 2022

பெண்கள் பெரியார் பட்டம் வழங்கவில்லை

பெண்கள் பெரியார் பட்டம் வழங்கவில்லை

13.11.1938 அன்று நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்று பட்டம் வழங்கப்பட்டதாக கூறுவது பொய்!
 இந்த மாநாடு பற்றி ஈ.வே.ரா வின் 'குடி அரசு' ஏடு செய்தியும் வெளியிட்டதுள்ளது. அதில் பட்டம் வழங்கப்பட்டதாக எதுவும் இல்லை.
 மீனாம்பாள் அவர்கள் இப்பட்டத்தை வழங்கியதாக கூறுவதும் பொய்!
 உண்மையான பெரியார் தொண்டர் யாராவது இருந்தால் பெண்கள் அல்லது பெண் தலைவர் எவர் எந்த மேடையில் பெரியார் பட்டம் வழங்கினார் என்று சான்று தரவும்!

Friday 11 November 2022

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே செங்கொடி

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே!

தாயே செங்கொடி....!
பெண்!
ஏழை!
சிவப்பு சிந்தனை!
இருளர் சமூகம்!  
கணவனால் கொல்லப்பட்ட தாய்!
சிறையில் குடிகாரத் தந்தை!
நம்பி நிற்கும் தம்பி தங்கை!
இனக் கடமையை மறுக்க 
இருந்தன உனக்கு பல காரணங்கள்!

ஆனாலும் நீ துணிந்தாயம்மா!
உயிரீந்து அறம் காத்தாயம்மா!

அன்று மதுரை எரிந்தது!
இன்று உன்னால் டெல்லி பிழைத்தது! 

இனம் காத்த உயிர்களை
இந்தியா எனும் எமனிடமிருந்து 
மீட்டுக் காட்டிய தமிழச்சியே!
கண்கண்ட அம்மன் தீப்பாச்சியே!

மனுநீதி வழித்தோன்றலே!
தனுவின் மீள்த்தோன்றலே!

ஏழு பெற்றோரை ஈன்ற மகளே! 
ஈழம் வரை போற்றும் தாயே!

என்றும் மறக்க மாட்டோம்!
வென்ற பிறகும் நினைப்போம்!

உனக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்து!
எமது கண்ணீர் நிறைந்த நன்றி! 

உலகத் தமிழரே!
உறுதிமொழி கூறுங்கள்!
இனி நம் வரலாற்றில் இல்லை
இன்னொரு செங்கொடி!




Wednesday 9 November 2022

இரண்டாவது பெரும்பான்மை மொழிகள்


இரண்டாவது பெரும்பான்மை மொழிகள் 


 படத்தில் மாவட்ட வாரியாக இரண்டாவது பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழிகள் குறிக்கப்பட்டுள்ளன (2011 கணக்கெடுப்பு அடிப்படையில்).

 எல்லை மாவட்டங்களில் அருகாமை மொழி பரவியிருப்பது இயல்பு என்ற வகையில் நோக்கினால் தமிழ் அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பரவியுள்ளது (இவற்றில் தமிழர் இழந்த பகுதிகளும் அடங்கும்).


 இந்த அடிப்படையில் தமிழகத்தில் நியாயமான பரவல் என்றால் அது குமரி மற்றும் நீலகிரி மாவட்டஙகளில் வழங்கும் மலையாளம் மட்டுமே! 


 தெலுங்கு எல்லையோர மாவட்டங்கள் மட்டுமின்றி கடைக்கோடியில் திருநெல்வேலி வரை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது இது தெலுங்கரின் பெருந்தொகையான குடியேற்றத்தைக் குறிக்கிறது.


 தமிழ் மண்ணுக்குச் சிறிதும் தொடர்பில்லாத உருது, குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட சௌராஸ்ட்ரா ஆகியனவும் சில பகுதிகளில் தெலுங்கைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன.


 அதாவது அரசியல் கண்ணோட்டத்தில் தமிழகத்தினுள் ஒரு திராவிடம், ஒரு பாகிஸ்தான், ஒரு அகண்ட பாரதம் இருப்பது போல் தோன்றுகிறது.


 வரைபடம் வழங்கியவர்: கார்வேந்தன் அழகையா

நன்றி: statsofindia.in 

 

காட்டுப் பன்றியின் வீரமும் சங்க காலக் காதலும்

காட்டுப் பன்றியின் வீரமும் சங்க காலக் காதலும் 

 காதலியைப் பார்க்க குன்றநாடன் காட்டுவழி செல்கிறான். அப்போது வேடர்கள் வேட்டை நாயுடன் காட்டுக்குள் வேட்டைக்கு வந்திருந்தனர். அப்போது ஒரு காட்டுப் பன்றி வேட்டை நாயைத் தாக்கித் துரத்திவிட்டு வேடனைத் தாக்கத் தயாராக நின்றதாம். ஏனென்றால் அது தன் குட்டிகளையும் அதன் தாயையும் பதுக்கி வைத்துக்கொண்டு அரணாக நின்றதாம். வேடர்கள் அம்புகளை எய்யவே எதுவும் பன்றியின் மீது படவில்லையாம்.
 அதாவது அம்புகள் தன் மீது படாதவாறு வளைந்து சற்று விலகி அதே இடத்தில் நிற்குமாம்! 
 இதைக் கண்டு வியந்து போகிறான் குன்ற நாடன்.
இதைத் தன் காதலியிடம் கூறுகின்றான்.

 மற்றொரு நாள் அதே பாதையில் அவன் வரும்போது அந்தப் பன்றியைப் பார்க்கிறான். "இந்த பன்றி வீரத்தில் என்னைப் போன்றது எனவே இதை என்றும் கொல்லமாட்டேன்" என்று மனதுக்குள் உறுதி எடுக்கிறான்.
  காதலி வீட்டுக்கு வருகிறான். ஆனால் காதலியின் அம்மா பார்த்துவிடுகிறாள். உடனே தன் மகளிடம் "நன்றாக இருக்கிறது உன் செயல்" என்று கூறிவிட்டு சிரித்துக் கொண்டே கண்டும் காணாமல் அங்கிருந்து சென்றுவிட்டாளாம் அந்தத் தாய். தலைவி இதைத் தன் தோழியிடம் "ஒரு நகைச்சுவை கூறுகிறேன் கேள்" என்று மகிழ்ச்சியுடன் முழுவதுமாகக் கூறுகிறாள். 

நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
இளையர் எய்துதல் மடக்கி,
கிளையொடு
நால்முலைப் பிணவல் சொலிய
கான் ஒழிந்து,
அரும் புழை முடுக்கர் ஆள்
குறித்து நின்ற 
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
குறுகினன் தொடுத்த
கூர்வாய்ப் பகழி
மடை செலல் முன்பின் தன் படை
செலச் செல்லாது,
''அரு வழி விலக்கும் எம்
பெருவிறல் போன்ம்'' என,
எய்யாது பெயரும் குன்ற
நாடன் 
செறி அரில் துடக்கலின், பரீஇப்
புரி அவிழ்ந்து,
ஏந்து குவவு மொய்ம்பின் பூச்
சோர் மாலை,
ஏற்று இமிற் கயிற்றின், எழில்
வந்து துயல்வர,
இல் வந்து நின்றோற் கண்டனள்,
அன்னை;
வல்லே என் முகம்
நோக்கி, 
''நல்லை மன்!'' என நகூஉப்
பெயர்ந்தோளே.

அகநானூறு 248

இதில் இரண்டு விடயம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
 ஒன்று வடுகர் சின்னமான காட்டுப் பன்றி வீரம் மிக்கது!
 சங்க காலத்தில் காதலுக்கு பெற்றோர் தடையாக இல்லை!

கி. பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல் பன்றியால் கொல்லப்பட்ட நாய்களுக்காக வைக்கப்பட்டது.
 வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் உள்ள அம்பலூரில் உள்ள நடுகல் ஒரு காட்டுப் பன்றியுடன் சண்டையிட்டுக் கொன்று தாமும் இறந்த முழகன், வந்திக் காகத்தி என்கிற பெயர்களையுடைய இரண்டு நாய்களுக்காக நடப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

Saturday 5 November 2022

1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம்

1978 இல் தமிழகத்தில் வெளியான ஈழ வரைபடம் 

 1977 ஆகஸ்ட் இல் சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் மீது கலவரம் நடந்தது. 300 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50,000 தமிழர்கள் அகதிகளாக தமிழர் பகுதிகளுக்கு சென்றனர்.
 கொழும்பு மற்றும் மலையகத் தமிழர்கள் இதில் கடுமையாகப் பாதிப்பட்டனர்.
 இதன் அதிர்வலை தமிழகம் வரை பரவியது.
தமிழகத்தில் சிலர் கூடி "தமிழக ஈழ நட்புறவுக் கழகம்" எனும் அமைப்பு தொடங்கப்பட்டு 1978 இல் சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டு "இலங்கையில் ஈழம்" எனும் நூல் வெளியிடப்பட்டது.
 அதில் 1978 வரையான இலங்கை வரலாறு விளக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக மலையகத் தமிழருக்கும் ஈழத் தமிழருக்குமான வேறுபாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
 இதில் தொடக்கத்திலேயே ஈழ வரைபடம் இடம்பெற்றுள்ளது.
அதில் 'இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தின் ஒரு பகுதி அதாவது திரு. வன்னிய சிங்கம் கூறிய தமிழ்ப்பகுதியே. பருத்தித்துறை முதல் பதுளை வரை மன்னார் முதல் மட்டக்களப்பு வரை பொத்துவிலும் உள்ளடக்கிய பகுதியே இங்கு ஈழம் என்று குறிக்கப்படுகிறது' என்கிற விளக்கமும் உள்ளது.
 தமிழகத்திற்கு ஈழம் பற்றி எதுவும் தெரியாது என்கிற கருத்தை இந்நூல் பொய்யாக்குகிறது. 
 1980 இல் மதுரையில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக மாநாடு நடந்துள்ளதும் இங்கே குறிப்பிடத் தகுந்தது.
 
இந்நூலைப் பாதுகாத்து வைத்துள்ள படிப்பகம் (padippakam) இணையத்திற்கு நன்றி! 
  

Thursday 3 November 2022

நீயுமொரு ராஜராஜன்

நீயுமொரு ராஜராஜன்

ராஜராஜ சோழன்னா ரொம்ப பிடிக்குமோ?!
 நீ ராஜராஜ சோழன் மாதிரி ஆகிற வேண்டியது தானே?!
 வீரப்பன், பிரபாகரன் வழியில போ! 
அவர் ஈழம் கேட்டாருனா நீ தனித் தமிழர்நாடு கேளு!
 நாலு பேர சேத்துக்கோ! துரோகி எதிரினு 4 பேர போட்டுத்தள்ளு!
வீரப்பன் மாதிரி டான் ஆகிரு!
நீ கைகாட்றவன் தான் தேர்தல் ஜெயிப்பான்!
கள்ளக் கடத்தல் பண்ணு! 
கொள்ளையடி!
எதிரிகள தீத்துகட்டு! 
ஆயுதம் வாங்கி குவி!
பெரிய ஏரியாவ கன்ட்ரோலுக்கு கொண்டு வா!
அப்பறம் மொத்த தமிழனுக்கும் நீதான் தலைவன்!
மக்களுக்கு கொஞ்சம் நல்லது செய்!
பாதுகாப்புக்கு சின்ன படை வச்சிக்கோ!
கொஞ்சம் வயசானதும் நீயே ராஜாவா முடிசூட்டிக்க!
ராஜ வாழ்க்க வாழு!
10 பொண்டாட்டி கட்டு!
20 பிள்ள பெறு!
பிரபாகரன பாத்து KGF, வீரப்பன பாத்து புஷ்பா எடுத்தமாதிரி உன் வாழ்க்கையையும் படம் எடுப்பாங்க! 
மூத்த மகனுக்கு பட்டம் கட்டிட்டு ஒருநாள் செத்துரு!
அட செத்த பிறகு கூட கடவுளாயிக்கோ!
எவன் கேக்கப் போறான்?!
ராஜராஜ சோழன் கூட எல்லாத் தமிழனும் ஏற்றுக்கொண்ட தலைவன் இல்ல!
 நீ அவருக்கும் ஒரு படி மேல போகலாம்!
 உலகம் முழுக்க உன் படம் போட்ட டீசட் கூட போடுவாங்க! 
என்ன நான் சொல்றது?!

Tuesday 1 November 2022

இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல்

இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல் 
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
(சிலப்பதிகாரம், காட்சிக் காதை)
பொருள்: சேரனே! நீ கடல்களை வேலியாக்கொண்டு இந்நிலப்பரப்பை தமிழ்நாடாக ஆக்க நினைத்தால் எவரும் எதிர்க்க முடியாது.

"தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
(சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை)
பொருள்: தெற்கிலிருக்கும் தமிழ்நாட்டு மூவேந்தர் வடக்கே படையெடுத்து வில், புலி, மீன் பொறித்த கொடியை பறக்கவிட்ட நாள்.
-----------------
"தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த"
(பரிபாடல்)
பொருள்: பாண்டியனின் மதுரை நகரத்தின் புகழ் தமிழை எல்லையாகக் கொண்ட தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றுள்ளது.
------------------
“நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“
(தொல்காப்பிய உரை)
ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கவேண்டும் என்று கூறி அதற்கு உதாரணமாக இதைக் கூறுகிறார் இளம்பூரணர்.
----------------------
"சோணாடு கடந்தால்.... மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”
(கம்ப ராமாயணம்)
 பொருள்: சோழ நாடு கடந்து மலைநாடு (எனும் சேரநாட்டு) அருகே தமிழ்நாடு (எனும் பாண்டிய நாட்டை) அடையலாம்
----------------------
“தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார்”
“மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்”
(பெரிய புராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம்) 

“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்”
(பெரிய புராணம், திருஞான சம்பந்த மூர்த்திகள் புராணம்)
-------------------------
“கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
(இராசராச சோழனுலா)
--------------------------
"செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே"
"தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! "
(பாரதியார்)

நன்றி: வி.இ.குகநாதன்
____________________________________
"தமிழ்நாடு" எனும் சொல் மட்டும் கணக்கில் கொண்டு (சங்கம் மருவிய காலத்துக்குப் பிறகான) இலக்கிய சான்றுகள் இப்பதிவில் காட்டப்பட்டுள்ளன.
 பழமையான இலக்கியங்கள் நமது நாடு பற்றி கூறுவனவற்றை ஏற்கனவே 'இலக்கியத்தில் தமிழர்நாடு' எனும் பதிவு இட்டுள்ளேன்.
 
 இந்திய அளவில் தமிழினம் போல எந்த இனமும் தமது நிலத்தை (சிற்றரசு, பேரரசு கடந்து) மொழி அடிப்படையில் பெயரிட்டு அழைத்ததில்லை. 


Monday 31 October 2022

மாநில அதிகாரம் தேசியத்தின் துருப்புச்சீட்டு


மாநில அதிகாரம் தேசியத்தின் துருப்புச்சீட்டு

 முதலில் நாம் பேசுவது தேசியமா? 
நாம் தற்போது தமிழ்தேசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்!  உண்மையில் தேசியம் என்றால் என்ன என்கிற புரிதல் நம்மிடம் இல்லை. 
 தேயம் என்கிற தூய்மையான தமிழ்ச் சொல்லுக்கு "குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பு" என்று பொருள் (வேற்றினத்தார் வாழ்விடங்கள் "மொழிபெயர் தேஎம்" என்று இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது).

 தற்போதைய தமிழ்நாடு (மாநிலம்) மட்டும்தான் நமது தேசம் என்பது தவறு!
(ஆதித்தனார் சிந்தனைப்படி) அண்டை மூன்று மாநிலங்களிடம் இழந்தவை, புதுச்சேரி மற்றும் ஈழம் ஆகியவற்றை சேர்த்தே இனி தேசியம் பேசவேண்டும்.
 தமிழ்தேயம் தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தைப் போல் ஒன்றரை பங்கு வரும் (தமிழ்நாடு பரப்பளவு ஏறத்தாழ 1,30,000 ச.கி.மீ; தமிழ் தேச பரப்பளவு ஏறத்தாழ 2,20,000 ச.கீ.மி ஆகும்). தமிழ்தேயம் உலகில் கால்வாசியை ஆண்ட இங்கிலாந்து தேசத்தை விடப் பெரியது. ஏறத்தாழ தற்போதைய ஜெர்மனி பரப்பளவு வரும். 

 நமது மாநிலத்திற்கு தமிழ்'நாடு' என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். நாடு என்பது நிர்வாக அடிப்படையிலானது. அதாவது ராணுவ வேலி போடப்பட்ட நிலப்பரப்பு 'நாடு' என்றாகும்.
ஒரு நாட்டில் பல தேசங்கள் இருக்கலாம் (இந்தியாவைப் போல). ஒரு தேசத்தில்  பல நாடுகளும் இருக்கலாம் (பழங்காலத்தில் தமிழ்தேயத்தில் பல நாடுகள் இருந்தன; இருந்தாலும் தமிழ்தேயம் எது என்கிற புரிதலும் சங்ககாலத்தில் இருந்தே நம்மிடம் இருந்து வந்துள்ளது). தமிழ்நாடு என்பது நில நிர்வாகம் மற்றும் காவல்படை கொண்ட நிர்வாக அமைப்பு ஆகும். இது 'நாடு' எனும் சொல்லுக்கு முழுமையான தகுதியற்றது. 

 (தமிழ்நாடு தாண்டிய) தமிழ்தேயம் தற்போதும் இருக்கிறது. ஆனால் இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் கீழ் உள்ளது. ஒரு தேசம் அந்நிய ஆட்சியில் எவ்வளவு காலம் இருந்தாலும் அது சுரண்டப்படலாம் ஆனால் சுருங்காது (எ.கா: பிரிட்டிஷ் இந்தியா).
 அதுவே அந்நிய குடியேற்றம் நடந்தால் சுருங்கி வலுவிழந்து அழிந்துவிடும் (எ.கா: அமெரிக்கா). தமிழ் தேசமானது அந்நிய குடியேற்றங்களால் எல்லைகளை இழந்து சுருங்கிக்கொண்டும் வலுவிழந்தும் வருகிறது.

 தேசியம் என்பது தேசத்தை (ஒற்றை) நாடாக்கி தன்வலுவில் ஆளும் கொள்கை ஆகும்.
தமிழ்தேசத்தை தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதால் அந்த அமையவுள்ள நாட்டை "தனித் தமிழர்நாடு" என்று அழைக்கிறோம்.  
தேசம் எவ்வளவு பெரியது என்று தெரியாமல் தேசியம் பேசுவது அறிவுடைமை ஆகாது.

 எப்போதுமே தேசத்தை நாடாக்குவது இனத்திற்கு பெரிய நன்மையில் முடியும்.
வளர்ந்து நிற்கும் ஐரோப்பிய நாடுகள் சான்று.
ஐரோப்பிய இனங்கள் தமது தேயத்தை நாடு ஆக்கி தத்தம் தாய்மொழியில் நிர்வாகம் செய்கின்றன.

 ஒரு இனம் தனது மண்ணின் மைந்தனை ஆட்சியில் அமரவைத்து தனது மொழியால் நிர்வாகத்தைக் கட்டமைத்து தன்னைத் தானே ஆளும்போது வெளிப் பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்ளமுடியும் என்பதுடன் உச்சபட்ச தலைமையிலிருந்து கடைக்கோடி குடிமகன் வரையிலான இடைவெளியானது மிகவும் குறையும்.
தலைமை தவறானால் நீக்குவதும் எளிதாக இருக்கும்.

 மிகப்பெரிய போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி ஒரு வாரம் கழித்துதான் இந்தி சேனல்களில் ஒரு வரிச் செய்தியே வருகிறது. பத்து நாட்களாக லட்சக் கணக்கில் திரண்டு போராடினால்தான் மத்திய அமைச்சர் நமக்கு பத்து நிமிடம் ஒதுக்கிறார்.
 100 உயிர் போனால்தான் இந்தியா முழுக்க அந்த பிரச்சனை கவனம் பெறுகிறது. 

 சமீபத்தில் பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு நடத்திய மிக நீண்ட போராட்டம் பற்றி நாம் அறிவோம். 
 வடமேற்கு இந்தியா முழுவதும் எல்லையற்ற ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாபியருக்கே இந்நிலை என்றால் கடைக்கோடியில் இருக்கும் நம் நிலை என்ன?
நம்மால் டெல்லியை முற்றுகை இடுவதை நினைத்துப் பார்க்க முடியுமா? 
தொலைவு, மொழி, அரச்கட்டமைப்பு என நமக்கும் உச்ச அதிகாரத்திற்கும் இவ்வளவு இடைவெளி நியாயம்தானா?!
 இதுவே நமது உச்ச அதிகாரம் சென்னை என்றால்? நம்மால் நினைத்ததை சாதிக்க முடியும்தானே?! 

 தற்போது தமிழ் உணர்வுடன் பேசினாலே தேசத் துரோகி என்றழைக்கும் போக்கும் இன்று உள்ளது.
 தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்தியடிகள்தான் மொழிவாரியாக காங்கிரஸ் கட்சியை பிரித்துக் கட்டமைத்து மொழிவழி மாநிலங்களை அமைக்க முதல் வித்திட்டவர். அக்காலத்தில் மொழிவழி இனங்களுக்கான உரிமைகள் அளிப்பது பற்றிய வாக்குறுதிகள் எதுவும் இந்தியா விடுதலையான பிறகு நிறைவேற்றப்படவில்லை. சுருக்கமாகக் கூறினால் அன்று ஆங்கிலேயர் சமஸ்தானங்களுக்கு அளித்த உரிமைகள் கூட இன்று மாநிலங்களுக்கு நடுவணரசு அளிக்கவில்லை (புதுக்கோட்டை சமஸ்தானம் அம்மஞ்சல்லி எனும் தனி காசு வைத்திருந்தது).

 தற்போதைய இந்தியா என்பது தமிழர்களின் ஒட்டுமொத்த குரலைக் கூட (தமிழ்நாடு அனைத்துக் கட்சித் தீர்மானம்) மதிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு சர்வாதிகாரம் பெற்று விளங்குகிறது.

 அதாவது நம் முன்னோர்கள் கேட்ட (கூட்டரசு) இந்தியா வேறு!
 இன்று இருக்கும் (ஏகாதிபத்திய) இந்தியா வேறு!

 இருந்தும் விடுதலைக்கு பிறகு நம்முடைய முன்னோர் போராடி  நமது இனத்தின் தாய்நிலத்தில் 65% நிலப்பரப்பை பகுதியளவு நிர்வாகம் செய்யவாவது வழிவகுத்தனர்.
 இதுவே இன்றைய தமிழ்நாடு மாநில அதிகாரம்.
 அதையும் திராவிடம் என்கிற பெயரில் சதிசெய்து வேற்றினத்தார் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். 
 "தமிழ் வளர்ச்சிதான் இன வளர்ச்சி" என்றும் "சாதியை ஒழிப்பதே இனத்தை ஒருங்கிணைக்கும்" என்றும்  நம்மை மூளைச் சலவை செய்து தமது (வேற்று) மொழியையும் தமது (வேற்றின) சாதி அடையாளத்தையும் மறைத்துக்கொண்டு தமிழராக நடித்து நம் தலைமேல் ஏறி உட்கார்ந்துகொண்டு இனத்தையும் மண்ணையும் அழிக்கும் வேலையைச் செய்துகொண்டுள்ளனர். இவர்கள் தமிழில் பேசுவதால் சாதியை வைத்தே அடையாளம் காண முடியும் எனும் நிலையில் இனவுணர்வு கொண்டோரை "சாதியை ஆராயும் வெறியன்" என்றழைக்கும் போக்கு இவர்களிடம் உள்ளது. 

 அண்டை மாநிலங்கள் தமது மண்ணையும் மக்களையும் காப்பதில் குறியாக இருக்கும்போது இங்கே திராவிடம் அதைச் செய்வதில்லை. இதனால் நமது ஆற்று மணலும் மலையும் கொள்ளை போகிறது. ஒரு மலையாளிக்கு பக்கத்தில் ஒரு ஆற்றில் மணல் அள்ளுவதை விட காவிரியில் வந்து மணல் அள்ளுவது கடினமில்லை. பணம் செலவளித்து தமிழக எல்லையில் வந்து குப்பை கொட்டுகிறார்கள். ஏனென்றால் இயற்கை வளங்களைக் காக்க அம்மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் உள்ளன. 
தற்போது கேரளாவில் அதானி துறைமுகம் அமைக்க  தமிழக மலைகளைக் குடைந்து கணக்கு வழக்கில்லாமல் கொண்டு செல்கிறார்கள். 
ஏன் கேரளாவில் மலைகளே இல்லையா?!
 அந்த எல்லைப் பகுதிகளில் பாஜக வேகமாக வளர்ந்துவருகிறது ஏனென்றால் பின்னணியில் அதானி இருக்கிறார்!
 காவிரிப் பிரச்சனையும் இதே பின்னணிதான் அளவுக்கதிகமாக கர்நாடகா தண்ணீர் சேர்த்துவைத்து அதை தொழிற்சாலைகளுக்குத் தருகிறது. தமிழகத்தில் தண்ணீர் இல்லாத ஆற்றில் மணல் அள்ளுகிறார்கள். மொத்த தமிழகமும் ஆந்திராவிடம் அரிசி வாங்குகிறது என்றால் அது மிகையில்லை. இதனால் திராவிட கட்சிகளுக்கு அண்டை மாநில பணக்காரர்கள் நிதியுதவி செய்கின்றனர். இப்படி தமிழக அரசியல்வாதிகளுக்கு நல்ல வருமானம் வருகிறது என்பதால் அவர்கள் மதம், சாதி என்று மக்களை மடைமாற்றியே காலம் கழிக்கின்றனர். இந்த நாடகத்திற்கு பாஜக உடந்தையாக போலிச் சண்டை போடுகிறது. ஆந்திராவில் சுங்கச்சாவடியில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டபோது மக்களை மடைமாற்ற கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்தை பெரிதாக்கி தீவிரவாதம் மதவாதம் என்று திராவிட மற்றும் இந்துத்துவ அரசியல்வாதிகள் அரசியல் செய்தது சிறந்த எடுத்துக்காட்டு.
 
  வேலைவாய்ப்பு பறிப்பும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. காங்கிரஸோ அல்லது பாஜகவோ ஆளும் மாநிலங்கள் அனைத்தும் தமது மண்ணின் மைந்தருக்கே வேலை என்று சட்டம் போட்டுள்ளன. தற்போது ஓசூரில் டாடா நிறுவனத்திற்கு தனி ரயிலில் 800 பெண்கள் வந்து இறங்கியபோது எழுந்த எதிர்ப்புக்கு அந்த நிர்வாகம் கூறிய காரணம் இங்கு 'மண்ணின் மைந்தருக்கு வேலை' என்று சட்டம் இல்லை என்பதே! 
 பிற மாநிலங்களில் நமக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. நமது மாநில அரசு வேலைவாய்ப்பும் நமது மாநிலத்தினுள் மத்திய அரசு வேலைகளும் முழுக்க வடவர் கைக்குப் போகிறது.
 
 மத்திய அரசு பழைய ஆங்கிலேய அரசை விட மோசமாக மாநில வருவாயைக் கொள்ளையடிக்கிறது (ஒரு ரூபாய் வாங்கிவிட்டு 30 பைசா கொடுக்கிறது). அத்துடன் வடவரையும் இந்தியையும் முழுமூச்சாகத் திணிக்கிறது.
கல்வி அதிகாரம் மாநில வரம்பிலிருந்து எமர்ஜென்சி காலத்தில் பறிக்கப்பட்டது இன்றுவரை தொடர்கிறது. இதன் விளைவே நீட் தேர்வு மற்றும் மாணவர் மரணங்கள். உயர்கல்வி மாணவர் சேர்க்கையும் இவ்வாறே தமிழரல்லாதவர் கைக்குப் போகிறது.
 தப்பித் தவறி வாய்ப்பு கிடைத்து வெளிமாநிலங்களில் உயர்கல்வி படிக்கப்போன தமிழக மாணவர்கள் 10 பேர் வரை மர்மமாக இறந்துள்ளனர். 

 காங்கிரசை விட பாஜக அரசு மாநிலங்களை நசுக்குவதிலும் இந்தி, இந்தியரைத் திணிப்பதிலும் வெளிப்படையாக மிகத் தீவிரமாக இருக்கிறது.
 நமது மூல குடியான குறவர் பழங்குடி இடவொதுக்கீடு கிடைக்காமல் தாழ்த்தப்பட்ட (SC) ஒதுக்கீட்டில் இருக்க மத்திய அரசு ஆதரவினால் மராத்திய வந்தேறிகளான நாடோடி நரிக்காரர்கள் பழங்குடி இடவொதுக்கீடு (ST) பெற்றுவிட்டனர். இதைக் கண்டித்து ஆறுநாள் உண்ணாவிரதம் இருந்த இரணியன் அவர்களை நிற்கவைத்து பேசி அனுப்பினார் தி.மு.க தலைவர். தமிழர்களை நசுக்குவதில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இது நல்லவொரு சான்று.

 மோடி அரசு தமிழக நிதியை தராமல் இழுத்தடிப்பதுடன் தமிழக மீனவரை ஐந்துமுறை சுட்டுள்ளது.
 இது 'வாயைத் திறந்தால் தமிழர்கள் மீது இனப்படுகொலை நடத்தப்படும்' என்கிற முன்னெச்சரிக்கையே!

 எல்லாம் புரிந்தும் நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லை. ஏனென்றால் நம் மாநில அதிகாரத்தில் இருக்கும் வேற்றினத்தார் நம்மைத் தொடர்ந்து திசைதிருப்பி குழப்புவதை திட்டமிட்டு அட்டவணை போட்டு செய்கின்றனர். சாதி, மதம், திரைப்படம், சாராயம், பாலியல் என பலவாறான திசைதிருப்பல்கள் நடக்கின்றன.

 தப்பித் தவறி ஒரு தமிழர் (அவரும் அதிகார அடிவருடிதான்) ஆட்சிக்கு வந்தபோதுதான் இந்த தமிழ்நாடு நாள் அறிவிப்பும் வந்தது. இதையும் குழப்ப திராவிட கட்சியினர் தவறவில்லை. ம.பொ.சி அவர்கள் போராடி "மதராஸ் மாகாணம்" என்று இருந்ததை  "தமிழ்நாடு" என்று பெயர்மாற்றம் செய்யவைத்தார்.  அதை அறிவித்தது மட்டுமே அதிகாரத்தில் இருந்த அண்ணாதுரை. அப்படி அறிவித்தபோதும் ம.பொ.சி க்கே நன்றி தெரிவித்துள்ளார். ஆனால்  தமிழ்நாடு என்று பெயரிட்டதே அண்ணாதுரைதான் என்றும் அந்த அறிவிப்பு வந்த நாளைக் கொண்டாடவேண்டும் என்று திராவிடவாதிகள் குழப்பி வருகின்றனர்.
 ஏற்கனவே தமிழ்ப் புத்தாண்டை இவ்வாறே குழப்பியுள்ளனர்.

 இன்று தமிழ்நாடு நாள் அரசு விழாவாகக் கொண்டாடுகிறோம் என்றால் அது முழு வெற்றியல்ல!
 ஒரு வீடு கட்ட நிலம் வாங்கியதைப் போன்றதுதான்.   நிலத்தை வேலியிட்டு, அடித்தளம் இட்டு, சுவர் எழுப்பி, கூரை அமைத்து, வீடு கட்டி முடித்தால்தான் முழு வெற்றி.
அதாவது முழு தமிழ்தேயத்தையும் தனிநாடு ஆக்கி உலகில் மற்ற இனங்கள் போல நாம் தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதே தமிழ்தேசியத்தின் இலக்கு!

 பிற நாடுகளைப் போல நியாயமாக  அமைந்திருக்க வேண்டிய "தமிழர் நாடு" வரைபடம் இங்கே தரப்பட்டுள்ளது.
இதற்கான சான்றுகளும் "தனித் தமிழர்நாடு" எனும் நூலாக 2021 இல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தற்கால நிலையைக் கருத்தில் கொள்ளாமல் இலக்கியம், கல்வெட்டு, ஆவணங்கள் அடிப்படையில் பூர்வீக தாய்நிலம் வரையப்பட்டுள்ளது. 
 நெல்லூர், திருப்பதி, பெங்களூர், மைசூர், பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம், அனுராதபுரம், கதிர்காமம் என (தமிழக மற்றும் ஈழ வரைபடத்தில் இடம்பெறாத) நமக்குச் சொந்தமான பெரும் நிலப்பரப்பை சான்றுகளுடன் உரிமை கோரும் நூலாக உள்ளது  (நம் தேசததில் 65% தான் தற்போதைய தமிழகம்).

 மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது (வரலாற்றை கருத்தில் கொள்ளாமல்)  தமிழர் பெரும்பான்மை அடிப்படையில் கோரப்பட்ட "தமிழ்நாடு" வரைபடமும் தரப்பட்டுள்ளது.
 இதிலும் தமிழருக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பல பகுதிகள் அண்டை மாநிலங்களிடம் பறிபோய்விட்டதை அறியலாம் (இதனால் நமக்கு ஏறத்தாழ ஐம்பது தேர்தல் தொகுதிகளும் அதற்கான பதவிகளும் கிடைக்காமல் போயின).

 உலகில் தமிழர்கள் பத்து கோடிப் பேர் இருக்கிறோம்.
இத்தனை பெரிய இனத்திற்கு மாநில உரிமைகள் போதவே போதாது என்றாலும் நம்மிடம் இருக்கின்ற ஒரே துருப்புச் சீட்டு நமது மாநில அதிகாரம் மட்டுமே!

 இந்த அதிகாரமும் தமிழர் கையில் இல்லாததால்  வேலி இல்லாமல் திறத்துகிடக்கும் தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாக இருக்கிறது. அதிலும் தற்போது வடவர் குடியேற்றம் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
 நிலைபெற்ற ராணுவப் படை முகாமைக் கூட அப்புறப்படுத்தி விடலாம். ஆனால் வேற்றினத்தார் ஒரு குடும்பம் குடியேறினாலும் நம்மால் எதுவும் செய்யமுடியாது. அவர்களை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
 தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றரை கோடி வடயிந்தியர் குடிவந்துள்ளனர் என்கிறார் பெ.மணியரசன் அவர்கள்.
 
 ஆகவே இருக்கின்ற மாநில அதிகாரத்தை தமிழர் கைப்பற்ற வேண்டும். குடியேற்றத்தைத் தடுக்கவேண்டும். புதிய வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும். பழைய வந்தேறிகள் திராவிட ஆட்சியின் பயனாக அடைந்த அனைத்தையும் பறிமுதல் செய்து தமிழருக்கு வழங்க வேண்டும். ஜனநாயக வழியில் நாம் நமது மாநிலத்திற்குள் எல்லா மட்டத்திலும் நமது இனத்தின் ஆதிக்கத்தை உறுதிசெய்ய வேண்டும். மாநிலத்தினுள் மத்திய மற்றும் மாநில வேலைவாய்ப்புகளை தமிழருக்கே வழங்கவேண்டும். மாநில இடவொதுக்கீடு ST, BC, MBC, SC என்று பொதுவாக இல்லாமல் அந்த அந்த சாதியின் பெயரிலேயே அந்த அந்த சாதிகளின் சதவீதத்திற்கு ஏற்ப இடவொதுக்கீடு வழங்கப்பட வேண்டும். பெயருக்குப் பின்னால் குடிப்பட்டம் சேர்த்துக்கொள்ள வலியுறுத்த வேண்டும் (வேலைவாய்ப்பிலும் உயர்கல்வியிலும் வடவர் ஊடுறுவல் அவர்களது குடிப் பெயர்களை வைத்தே கண்டறியப்பட்டது). 

மத்திய அரசின் வரிக் கொள்ளையை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி இலிருந்து தமிழ்நாடு விலக வேண்டும். முடியாத பட்சத்தில் மாநில வருவாயைக் கணக்கில் காட்டாமல் கையாள வேண்டும். நம் இனத்தில் பெரும் பணக்காரர்களை உருவாக்க வேண்டும்.
தங்கம் கடத்தி முத்தூட், ஆலுக்காஸ் போன்ற நிறுவனங்களை கேரளா உருவாக்கியது போல் கடற்கரையைத் தாரைவார்த்து அதானியை குஜராத் உருவாக்கியது போல் நாமும் செய்ய வேண்டும்.
 அதாவது பிற மாநிலங்கள் போல செயல்பட வேண்டும்.

 நமது இனமான ஈழத்தமிழர் குடியுரிமை பெறவேண்டும். எம்.ஜி.ஆர் காலத்தில் புலிகளுக்கு உதவியது போல ஈழப் போராளிகளை மீண்டும்  உருவாக்க வேண்டும். 
 இழந்த எல்லைப் பகுதிகளை ஜனநாயக வழியில் அதாவது வழக்கு போடுதல், எல்லைக்கு இருபுறமும் ஆர்ப்பாட்டம், மாநிலம் தழுவிய போராட்டம், எல்லைப் பகுதி மாநில அலுவலகங்கள் முற்றுகை, பெரும் தொகையில் எல்லைதாண்டுதல், கொடுக்கல் வாங்கல் முறிப்பு, வேற்றினத்தார் வெளியேற்றம், வேற்றின நிறுவனங்கள் மூடல், அண்டைமாநில பொருட்களுக்குத் தடை, எல்லைப் பகுதிகளை வரைபடத்தில் சேர்த்தல் மற்றும் குடும்ப அட்டை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மீட்க முயல வேண்டும்.
 வீரப்பன் போன்ற போராளிகளை உருவாக்கி அண்டை மாநிலத்தினுள் தமிழரைக் காக்கவும் வேண்டும்.

 ஜனநாயக வழியில் நாம் வெற்றி பெற வாய்ப்பு குறைவு. அப்படி ஜனநாயக போராட்டம் தோல்வியில் முடிந்தால் தமிழர் மீது அடக்குமுறை மேலும் இறுக்கமானால் செண்பக ராமன் மற்றும் அவரது சீடர் நேதாஜி வழியில் பிரபாகரன், தமிழரசன், வீரப்பன் போல ஆயுதம் தூக்கி நம் தேசத்தை நாமே விடுதலை செய்யவும் தயாராக வேண்டும். 

இந்த தமிழ்நாடு நாளில் இருப்பதை காப்பதுடன் இழந்ததை மீட்கும் உறுதி மொழி எடுப்போம்!

இனி உண்மையான தமிழ்தேசியம் பேசுவோம்!
தனித் தமிழர்நாடு அமைப்போம்! 

 நன்றி!

Sunday 30 October 2022

ஆலயம் நுழைந்த பார்ப்பனர் மூவர்

ஆலயம் நுழைந்த பார்ப்பனர் மூவர்

 வைத்தியநாத ஐயர் செய்த ஆலய நுழைவு பற்றியும் ஆலய நுழைவை சட்டமாக்கிய இராஜாஜி பற்றியும் மீண்டும் பேசுகிறோம்.
 அத்தோடு எம்.சி. ராஜா அவர்கள் ஆலய நுழைவு வேண்டி தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பே தமிழகத்தில் முதன்முதலாக 1933 இல் ஆலய நுழைவு தீர்மானம் (The Hindu Temple Entry Disabilities Removal Bill) கொண்டுவந்த சி.எஸ்.ரங்க ஐயர் பற்றியும் பேசுவோம். 
 நீதிக் கட்சி ஜே.எஸ்.கண்ணப்பர் ஆலய நுழைவு முயற்சி (1927) எனும் கட்டுக்கதையை புறந்தள்ளுவோம்.
 

Tuesday 25 October 2022

Liberation Tigers of Tamilian Nation

Liberation Tigers of Tamilian Nation

புலிகள் தமிழகம் வரவேண்டும்!
தமிழர்நாட்டு விடுதலைப் புலிகள் (LTTN) என்று பெயர் மாற்றிக்கொள்ள வேண்டும்!
 உலகத் தமிழர் அனைவரையும் திரட்டி முழுத் தமிழர்நாட்டையும் மீட்கவேண்டும்!
 புலிகள் வழியில் தனித் தமிழர்நாடு விடுதலை அடையவேண்டும்!


 

Friday 21 October 2022

ஐத்தாவது முறையாக மீனவரைச் சுட்ட ஹிந்தியர்

ஐத்தாவது முறையாக மீனவரைச் சுட்ட ஹிந்தியர்

 ஹிந்திய கடற்படை இதுவரை தமிழக மீனவரை ஐந்துமுறை சுட்டுள்ளனர்.
அந்த தேதிகள் வருமாறு,
02.08.2013 , 
30.03.2017, 
09.10.2017, 
13.11.2017,
21.10.2022.

 ஒவ்வொரு முறையும் இந்தி பேசச் சொல்லியோ அல்லது இந்தி புரியாததாலோ இந்த கொலைமுயற்சி நடக்கிறது.
 மத்திய அரசு ஹிந்தி திணிப்பு செய்வதும் தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அதைத் தொடர்ந்து இவ்வாறான நிகழ்வுகளும் நடக்கின்றன.
 2013 இல் பாஜக எழுச்சி பெற்ற வேகத்திலும் 2017 இந்தி தினம் திணிப்பும் தற்போது இந்தி பயிற்றுமொழி என்கிற திணிப்பும் இத்தகைய சம்பவங்களுக்கு காரணம்.
 

 

 

Thursday 20 October 2022

கருணாநிதி இந்தியை எதிர்த்த லட்சணம்

கருணாநிதி இந்தியை எதிர்த்த லட்சணம்

 முரசொலி மாறன் (இயற்பெயர் வேறு) இறந்தபோது அந்த மத்திய அமைச்சர் பதவிக்கு திமுக வில் மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
 1) ஸ்டாலினைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட சிட்டி பாபு வின் மகன்,
2) இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தீக்குளித்த அரங்கநாதனின் மகன்,

3) முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன்.

 தன் பேரனான தயாநிதிக்கே அந்த மத்திய அமைச்சர் பதவியை அளிக்கிறார் கருணாநிதி!

 மூத்தவர் இருக்க பேரனுக்கு பதவி ஏன் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் 
"தயாநிதிக்கு இந்தி தெரியும்" 

நன்றி: ராஜீவ்காந்தி பேச்சு 
நா.த.க வில் (ஒல்லியாக) இருந்தபோது பேசியது

Monday 17 October 2022

இந்தியை எதிர்த்த பார்ப்பனர்கள்

இந்தியை எதிர்த்த பார்ப்பனர்கள்

 நமது சமகாலத்தில் இந்தியை இந்தியர்கள் மத்தியில் எதிர்த்த மூன்று பார்ப்பனர்களைக் காட்டமுடியும்.

 இணைத்துள்ள காணொளியில் நான்கு நிகழ்ச்சிகள் உள்ளன.

 மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் R.மாதவனை அழைத்து  செயிப் அலிகான் மற்றும் ஷாருக்கான் ஆகிய முன்னணி கதாநாயகர்கள் R என்றால் என்னவென்று கேட்டு அதற்கு மாதவனை விளக்கம் அளிக்க விடாமல் அவர்களாக அர்த்தம் சொல்லிக்கொண்டிருக்க மாதவன் கோபம் ஆகிறார். அவர்கள் 'தமிழில் பேசுங்கள்' என்று கூற "போங்கடா கிறுக்கு கதாநாய்களா?" என்று திட்டுகிறார்
( 2010, 55 th film fare awards).

 இந்தியில் பேசிக்கொண்டிருந்த நவ்ஜோத் சிங் சித்துவிடம் இது எல்லாருக்கும் புரியாது எனவே ஆங்கிலத்தில் பேசும்படி கேட்க அதற்கு அவர் இந்திதான் எல்லாருக்கும் புரியும் என்று சொல்ல உடனே "நான் தமிழில் பேசினால் உனக்கு புரியுமாடா?" என்று சத்தம் போட ஆரம்பித்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்
(2013 ipl, sony channel).

 NDTV ஏற்பாடு செய்த இந்தியை ஆட்சிமொழி ஆக்குவது பற்றிய விவாதத்தில் சித்ராஜி என்பவர் இந்தியிலேயே பேச அதை எந்த மொழிக்காரரும் எதிர்க்காத சூழலில் எழுத்தாளர் ஞாநி சங்கரன் தமிழில் பதிலளித்துப் பேசி எதிர்க்கிறார். சித்ராஜி ஆங்கிலத்தில் பேச மறுக்க நெறியாளர் தான் மொழிபெயர்ப்பதாக சொல்கிறார். உடனே ஞாநி தமிழுக்கும் மொழிபெயர்ப்பாளர் கொடுங்கள் என்று குரல் கொடுக்கிறார்
(2014, ndtv, big fight over language).

 ஜல்லிக்கட்டு தடை தொடர்பான விவாதத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாக்சிங் போன்ற போட்டிகளெல்லாம் நடக்கிறது எங்கள் பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஆங்கிலத்தில் கூறி பிறகு தமிழிலும் அதைக் கூறி நெறியாளரான zakka jacob என்பவரையும் 'நீயும் தமிழன்தானே' என்று கேட்டு தமிழில் பேச வைக்கிறார்
(2019, CNN news 18).

 வேறொரு இந்திய தொலைக்காட்சி விவாத்ததிலும் ஸ்ரீகாந்த் தமிழில் பாட்டுப்பாடி சல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்.

 பார்ப்பனர்கள் தமிழ் மொழி உணர்வுடனும் இன உணர்வுடனும் இப்போதும் எப்போதும் இருககின்றனர்.

 காணொளிகளுக்கு நன்றி: thug k thug (YouTube)

Sunday 16 October 2022

வழக்கமான சட்ட திரிப்புகளும் பதில்களும்

வழக்கமான சட்ட திரிப்புகளும் பதில்களும்

 ஆங்கிலேயர் பிராமண ஆதிக்கத்தை ஒழித்ததாக ஒரு பதிவு உலா வருகிறது அது பற்றி பார்ப்போம்.

 கீழே திரிக்கப்பட்ட பதிவை அப்படியே இட்டு அதில் இடையிடையே [ ] இந்த அடைப்புக் குறிக்குள் பதில் எழுதியுள்ளேன்.

அந்த பதிவு வருமாறு,

 ஆங்கிலேய அரசு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக இயற்றிய சட்டங்கள்
வியக்கவைக்கும் தினமணி கட்டுரை - 25.02.2007.
 பிரிட்டிஷார் Vs பிராமணர்கள்

[இப்படி ஒரு கட்டுரை தினமணியில் வரவே இல்லை]

பார்ப்பனர் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும், வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த, பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை, கிறிஸ்தவ பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், 1773 ஆம் ஆண்டு முதல் கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசு,  பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.

[1773 ஒழுங்குமுறை சட்டம் பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்திய கம்பனிக்கு விதித்த கட்டுப்பாடுகள் தொடர்பானது, இது 'சட்டம் அனைவருக்கும் சமம்' என்கிற நோக்கமெல்லாம் கிடையாது.
1773 இந்து சட்டம் என்பது ஒன்று வந்தது. அது அன்றைய வங்காளத்தின் சில சாதியினருக்கு மட்டுமானது]

 சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை, 1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை, கிறிஸ்தவ வெள்ளையர்களால்  வழங்கப்பட்டது.
[1795 இல் எந்த சட்டமும் இயற்றப் படவில்லை] 

 1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை, கிறிஸ்தவ வெள்ளையரால்  வெளியிடப்பட்டது. 
[இதுவும் பொய் அப்படி எந்த சட்டமும் இயற்றப்படவில்லை]

 1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம், கிறிஸ்தவ வெள்ளையரால்  கொண்டுவரப்பட்டது.
[1813 இல் பட்டயச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கிழக்கிந்திய கம்பனி உரிமம் நீட்டிக்கப்பட்டது,  ஆங்கிலக் கல்விக்கு ஒரு லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது, கிறித்துவ மதம் பரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. இதுதான் கொத்தடிமை ஒழிப்பாம்! 
உண்மையில் 1843 இல் தான் அடிமை ஒழிப்பு சட்டம் வந்தது. அன்று வட இந்தியாவில் 8 ல் ஒருவர் அடிமை. தமிழகத்தில் 100 ல் 4 பேர் அடிமை. பெரும்பாலும் பண்ணை அடிமைகள் ]

 பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன்  கொல்லப்பட வேண்டும் என்ற பிராமணர்கள் மனுசாஸ்திர  சட்டம் (VII 374, 375), கிறிஸ்தவ வெள்ளையர்களால் நீக்கப்பட்டது.
 ஒரு பிராமணன்,  காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால், அது பிணம் போன்றதே ஆகும்.(பிராமணர்  மனுசாஸ்திர சட்டம் IX 178). இந்த மனுசாஸ்திர சட்டத்தையும், கிறிஸ்தவ வெள்ளையர்களே நீக்கினர். 
[இதில் ஆண்டு கூட இல்லை, எப்போதுமே வழக்கத்தில் இல்லாத மனு ஸ்மிருதி ஆங்கிலேயர் காலத்தில் மட்டும் பின்பற்றப் பட்டிருக்குமா என்ன?! 
இந்து சட்டம் 1773 இல் மனுஸ்மிருதி அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. அதில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. (அதாவது கலாச்சாரம் தொடர்பான சட்டங்கள் ணாஸ்திரங்களை ஆராய்ந்து எழுதப்படன.  தண்டனை க்கான சட்டம் அல்ல) ஜோன்ஸ்  என்பவர் இந்தியர்களுக்கான சட்டத்தை இயற்ற மனு ஸ்மிருதியை ஆராய்ந்து 1794 இல் அதை மொழிபெயர்ப்பு செய்கிறார். அதுவரை மனு ஸ்மிருதி பற்றி யாருக்குமே தெரியாது. இப்படி பல்வேறு சாஸ்திரங்களை ஆராய்ந்து இந்துக்களுக்கான சட்டம் 1860 இல் வந்தது. மனு கூறும் சட்டத்தை நீக்குவதாக இதில் எங்கும் இல்லை] 

பிராமணன் தப்பு செய்தால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில், பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை, 1817 ஆம் ஆண்டு கிறிஸ்தவ பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது
[இது வேடிக்கையாக இருக்கிறது. Murders Abroad Act 1817 என்பது பிரிட்டிஷ் பேரரசின் பல்வேறு பகுதிகளில் கொலைகளுக்கான பொதுத் தண்டனை பற்றியது]

  சூத்தரப் பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிவிடைகள் செய்ய 7 நாள்கள் கோவிலில்? இருக்க வேண்டும் என்ற கொடுமை, கிறிஸ்தவ பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. 
[1819 இல் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை]

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த பிராமண இனவெறி மனு சாஸ்திர  சட்டத்தை, 1835 ஆம் ஆண்டு கிறிஸ்த்தவரான Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.
[1835 இல் english education act ஆங்கில கல்வியைத் திணிக்க கொண்டுவந்த சட்டம் ஆகும்]

 சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொலைசெய்ய  வேண்டும்! 1835-ல் கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.
[மனம் போன போக்கில் எழுதப்பட்டுள்ளது. குழந்தையைக் கொல்ல எந்த வேதம் சொல்லும்?! 1835 இல் அப்படியான அரசாணை எதுவும் வெளிவரவில்லை]

 1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை கிறிஸ்தவ வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்டது.
[இதுவும் கட்டுக்கதை]

1868 ஆம் ஆண்டு கிறிஸ்தவ பிரிட்டிஷ் அரசாங்கம், பிராமண மனுசாஸ்திர  சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது!
இவற்றின் மூலம் இந்துமக்களுக்கு கொடுமை இழைத்த பிராமணர் ஆதிக்க சட்டம் மாற்றப்பட்டது.
[1868 இல் Hindu law முழுமையான வடிவத்திற்கு வந்தது. அப்போது மனு உட்பட சாஸ்திரங்களைத் தழுவிய அதன் பழைய வடிவம் நீக்கப்பட்டது]
----------------

 அதாவது பார்ப்பன, சூத்திர என்கிற வார்த்தைகளைப் போட்டு எதாவது ஆண்டுகளை இடையில் சேர்த்து எதை எழுதினாலும் அப்படியே நம்பும் மனநிலையில் இருக்கிறோம்.

 திராவிட ஊதுகுழல்கள் இன்னமும் தமது குலதெய்வங்களான ஆங்கிலேயரை புனிதப்படுத்துவதை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
 
 சில ஆண்டுகள் முன் வந்த இப்பதிவு காணொளியாகவும் உலவுகிறது. மொழிகடந்து ஆங்கில கட்டுரையாகவும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட பதிவு முழுக்கவே பொய்கள் நிரம்பியது.

 இதை ஒரு அறிவுள்ள வக்கீலோ, ஐ.ஏ.எஸ். தேர்வாளரோ கூடவா கடந்து வரவில்லை?! 

 ஒரு குற்றச்சாட்டு என்றாலும் அது நேர்மையாக இருக்க வேண்டும்.

 எதிரியாகவே இருந்தாலும் அவர் மீது வைக்கப்படும் நேர்மையற்ற குற்றச்சாட்டைத் தட்டிக் கேட்கவும் வேண்டும். 

Sunday 9 October 2022

தமிழ்நாட்டான் இராசராசன்

தமிழ்நாட்டான் இராசராசன்

புது சங்கி:- ராஜராஜ சோழன் காலத்தில் தமிழ்நாடே கிடையாது !

பழைய சங்கி:- சும்மா இருடா! வாங்குன வர போதும்!

தமிழன்:- அப்பவும் தமிழ்நாடு இருந்தது! இராசராசன் பெருமைகளைச் சொல்லும் (மெய்கீர்த்தி) அவனது ஆட்சிக்காலத்து கல்வெட்டில்  இராசராசனை தமிழ்நாடன் என்று கூறிய சான்று உள்ளது.

"..தண்டமிழ் நாடன் சண்ட பராக்கிரமன் திண்டிறற் கண்டன் செம்பியர் பெருமான் செந்திரு
மடந்தை மன் ஸரீராச ராசன்.."

இடம் : வீரட்டானேசுவரர் கோவில், திருக்கோயிலூர் வட்டம், கீழுர். 
கல்வெட்டு எண்: (No.863. S.I.I. Vol. VII.)

Saturday 8 October 2022

பார்ப்பனர் பற்றி நேர்மையாக விவாதிப்போம்

நேர்மையாக விவாதிப்போம்

நான் ஏன் பார்ப்பனர்களை வெறுக்கவேண்டும்?
ஒரே ஒரு உருப்படியான காரணத்தை கூறுங்கள்.

 அதாவது தமிழகத்திற்குள் தமிழ் பேசும் பார்ப்பன சாதிகள் அப்படி என்ன பாவம் செய்துவிட்டார்கள் என்று அவர்களை அனைவரும் வெறுக்கிறீர்கள்?
 நான் நன்றாக யோசித்து ஆராய்ந்து பார்த்துவிட்டேன் அவர்களை வெறுக்கும் அளவிற்கு அப்படி எதுவுமே அவர்கள் செய்யவில்லை.

 ஆரிய கடடுக்கதைகள், திராவிட பொய் பிரச்சாரங்கள், சில பார்ப்பனர்களின் திமிர் பேச்சுகள், புராண கட்டுக்கதைகள், பாஜக ஆதரவு என்று அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து விட்டேன்.
 பார்ப்பனர்களை குறிப்பிட்டு வெறுக்கும் அளவிற்கு ஒரு காரணம் கூட எனக்கு தென்படவில்லை.

 தமிழகத்தில் நடந்த பார்ப்பனிய கொடுமைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிடவும் (தமிழகத்திற்கு வெளியே நடந்த எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது).
தமிழகத்தில் நடந்த இரண்டு விடயங்களை ஏற்கனவே அலசிவிட்டோம்.

1)சமணர்களை திருஞானசம்பந்தர் படுகொலை செய்தார் என்கிற கட்டுக்கதை. பலமுறை நன்கு விவாதித்து ஆராய்ந்து அது பொய் என்று நிறுவப்பட்டுவிட்டது. 
(விரிவாக அறிய தேடுக :- சமணர் கழுவேற்றம் கற்பனை வேட்டொலி)

 2) சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சிவாச்சாரியாரைத் தமிழ் பாட விடவில்லை என்கிற குற்றச்சாட்டு. அதாவது கருவறையில் தமிழ் ஒலிக்க தடையாக இருப்பதாகக் கூறுவது.
 அதையும் ஆராய்ந்து பார்த்துவிட்டோம் சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் தமிழில்தான் வழிபாடு பூஜை என எல்லாவற்றையும் செய்கிறார்கள். அவர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி பாடுவதற்கு மட்டுமே தடையாக இருக்கிறார்கள். இது சாதிய பிரச்சனை மொழிவெறுப்பு என்று திரிக்கப்படுகிறது.
(மேலும் அறிய தேடுக :- தீட்சிதர்கள் தமிழ் நீசபாசை என்றனரா வேட்டொலி)

 மேற்கண்ட இரண்டிலும் பார்ப்பனர் குற்றமிழைத்தனர் என்றே வைத்துக்கொண்டாலும் அது ஒட்டுமொத்த தமிழர்களையும் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் இல்லை.

 கருவறையில் பிறரை நுழையவிடாமல் தடுப்பதை நான் வாழ்வாதார பிரச்சினையாகவே பார்க்கிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியினர் ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்யும்பொழுது வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர் அந்த தொழிலை செய்ய முன்வரும்போது எதிர்ப்பு எழத்தான் செய்யும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீனவரல்லாத சாதியைச் சேர்ந்தவர் மீன் பிடிக்க வந்தால் எதிர்க்கவே செய்வார்கள்.  அதிலும் தீட்சிதர்கள் மற்ற பார்ப்பனர்களைப் போல் கிடையாது அவர்கள் முழுக்க முழுக்க சிதம்பரம் கோவிலை மட்டுமே நம்பி பிழைப்பவர்கள். சிதம்பரம் கோவிலை சுற்றி மட்டுமே வாழ்பவர்கள். அவர்களுடைய முழு வாழ்வாதாரமும் அந்த கோவிலை நம்பி மட்டுமே உள்ளது.

 இவை தவிர வேறு ஏதாவது உருப்படியான குற்றச்சாட்டு இருந்தால் கூறவும்.
 ஏற்கனவே பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதை மறுபடியும் கிளைப்பிள்ளை போல ஒப்பிக்க வேண்டாம். அவர் கூறினார் இவர் எழுதியுள்ளார் என்று ஒருவரது தனிப்பட்ட கருத்தை பதிவு செய்யக்கூடாது. தனிப்பட்ட அனுபவக் கதைகள் வேண்டாம். கிரிக்கெட் டீம் என்று தயவுசெய்து ஆரம்பிக்க வேண்டாம்.

 தமிழர்நாடு என்றுமே தனிநாடு. எனவே தமிழர்நிலத்துக்கு வெளியே நடத்த பிராமணீய கொடுமைகளுக்கு பார்ப்பனர் பொறுப்பாகமாட்டர்.

 தமிழர் நிலத்தில் பார்ப்பனர்கள் தமிழுக்கோ தமிழருக்கோ இழைத்த கொடுமைகள் எதாவது இருந்தால் கூறவும். அதாவது அதில் பார்ப்பனர் பெரும்பங்கு வகித்திருக்கவேண்டும். அது பெரும்பான்மைத் தமிழர்களை வெகுவாக பாதித்திருக்க வேண்டும்.
 (அதாவது ஈழத்தமிழருக்கு சிங்களவர் செய்த நேரடிக் கொடுமைகள் போல 
அல்லது தமிழகத் தமிழரை ஆதிக்கம் செய்யும் நிலவுடைமை பெற்ற வந்தேறித் தெலுங்கர் செய்துவரும் அடக்குமுறை போல 
அல்லது தமிழகத்திற்கு மத்திய அரசு செய்துவரும் உரிமை பறிப்புக் கொடுமைகள் போல
அல்லது குறைந்தபட்சம் தமிழர்களின் வணிகத்தை பறிக்கும் சேட்டுகளின் சட்டவிரோத செயல்பாடுகள் போல)

நினைவில் கொள்ளுங்கள்,
எங்கேயோ இருக்கும் கைபர் போலனில் தொடங்கும் ஆரிய கட்டுக்கதைகள் வேண்டாம்.
தமிழருக்குத் தொடர்பே இல்லாத மனுதர்மம் வேணனாம்.
ஆதரமற்ற திராவிட பொய்ப்பிரச்சாரங்கள் வேண்டாம்.
பாஜக ஆதரவு என்பதும் வேண்டாம். 
 (ஏனென்றால் அனைத்து சாதியிலும் பாஜக இந்துத்துவ ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அதில் பார்ப்பனர்களைக் குறிப்பிட்டு குற்றம் சாட்ட எதுவுமில்லை)
சு.சாமி போன்ற சிலரின் திமிர் பேச்சுகள் வேண்டாம்.

 தமிழர்கள் தெலுங்கரை, கன்னடரை, மலையாளிகளை, ஹிந்தியரை வெறுக்க பல காரணங்களை என்னால் கூறமுடியும்.
 தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பிரச்சனைகள் பல நூறு உள்ளன. அதில் எதிலாவது பார்ப்பனரின் பங்கு இருந்தால் கூறவும்.

நீங்கள் பார்ப்பனர்கள் தமிழினத்தின் எதிரிகள் என்று நிறுவமுடியாத பட்சத்தில் நீங்கள் பார்ப்பன வெறுப்பைக் கைவிடவேண்டும் என்று நான் கூறமாட்டேன்.
அதே நேரத்தில் பார்ப்பனர்கள் தமிழினத்தின் எதிரிகள் என்று நீங்கள் நிறுவிவிட்டால்  நான் 
அவர்களை வெறுக்கத் தயாராக இருக்கிறேன்.
08/07/2021 அன்று முகநூல் பதிவாக இட்டது 

Friday 7 October 2022

இசுலாமியர் பார்ப்பனர் மற்றும் வந்தேறிகள்

இசுலாமியர் பார்ப்பனர் மற்றும் வந்தேறிகள்

 எனது முதல் நோக்கம் இசுலாமியரையும் பார்ப்பனரையும் தமிழ்தேசியத்தில் மீளிணைத்தல்!

 இசுலாமியர், பார்ப்பனர் இவ்விருவர் மீதான பிறரின் வெறுப்பே இங்கு பிரதான அரசியல்.

 எனவே தான் இவ்விரு சமூகத்தையும் தமிழ்தேசியத்தில் இருந்து அந்நியப்படாமல் காக்க நினைக்கிறேன்.

 ஏனென்றால் தமிழகத்திற்கு இந்த வெறுப்பரசியல் தேவையற்றது. 
 தமிழகத்தில் ஒட்டுமொத்த இசுலாமியரையும் வெறுக்கும் வகையில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை!
 அதேபோல ஒட்டுமொத்த பார்ப்பனரையும் வெறுக்கும் வகையில் அவர்களும் ஒன்றுமே செய்யவில்லை.

நன்கு அலசி ஆராய்ந்து பார்த்து உறுதியாகக் கூறுகிறேன்.

 அப்படி இரு சமூகங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை நன்கு ஆராய்ந்தால் ஒன்று அது தமிழகத்திற்கு வெளியே நடந்திருக்கிறது அல்லது தமிழகத்தினுள் வேற்றினத்தவரால் நடந்திருக்கிறது அல்லது திரிக்கப்பட்ட பொய்யாக இருக்கிறது.

 பெரும்பான்மைத் தமிழர் பாதிக்கப்படும் ஒரு கேட்டை பார்ப்பனர் செய்ததாக திராவிடம் இன்று வரை நிறுவ முடியவில்லை. இந்துத்துவமும் அவ்வாறே! 

 நீங்கள் இசுலாமியரை வெறுத்தால் வேறுவழியே இல்லை அது பாஜக வுக்குத் தான் சாதகமாக முடியும். தமிழகத்தில் வடவர் ஆதிக்கமும் சமஸ்கிருத ஆதிக்கமும் பரவும். தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் குழம்பி தொலைந்து போகும்.
 [இந்தியன் என்கிற உணர்வும் அவ்வாறே, காங்கிரஸ் க்கு சாதகமாக முடியும் வடவர் ஆதிக்கமும் இந்தி ஆதிக்கமும் பரவும், தமிழ் மொழி அடையாளம் தொலைந்து போகும்]

 அதேபோல நீங்கள் பார்ப்பனரை எதிர்த்தால் வேறுவழியே இல்லை அது திமுக வுக்கு தான் சாதகமாக முடியும். ஈ.வே.ரா உங்கள் தலைவர் ஆவார். வந்தேறிகள் ஆதிக்கம் அதிகரிக்கும். தமிழ் இன அடையாளம் குழம்பி தொலைந்து போகும்.
 [ திமுக வை பிடிக்காது என்கிற ஒரே காரணத்தால்தான் அதிமுக வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அதுவும் அழியும் நிலையில் உள்ளது]

 நீங்கள் இந்தியனாக சிந்தித்தால் (தமிழகம் தவிர்த்த இந்தியாவில்) முஸ்லிம் படையெடுப்பு, பாகிஸ்தான் பிரச்சனை, மதமாற்றம், தீவிரவாதம் என்று அவர்களை வெறுக்க பல காரணங்கள் உண்டு அதேபோல அங்கே சாதிக்கொடுமை, தீண்டாமை, மதச் சுரண்டல், பதவி ஆதிக்கம் என பிராமணரை வெறுக்கப் பல காரணங்கள் உண்டு.

  உண்மையை ஆராய்ந்து தமிழனாக  நாம் தனிநாடு என்கிற அடிப்படையில் சிந்தித்தால் நாம் உண்மையில் வெறுக்க வேண்டியது தமிழகத்தில் இருக்கும் பழைய மற்றும் புதிய வந்தேறிகளை என்று புரியும்.

ஆம்! இவர்களே நமது அரசியல் பிரச்சனைகளை எதிர்கொள்ள விடாமல் பல்வேறு சதிகள் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றி நம் இனத்தை பலவீனமாக்கி அண்டை மாநிலங்களாலும் இந்திய அரசாங்கத்தாலும் இலங்கை அரசாலும்  நமக்கு வரும் முக்கியமான பிரச்சனைகளை எதிர்கொள்ள விடாமல் செய்கிறார்கள். தமிழரை இனமாகத் திரள விடாமல் தொடர்ந்து குழப்பி திசைதிருப்பியபடி இருக்கிறார்கள். நம்மைச் சுரண்டி கொழுத்தபடி நம்மை முழுக்க அழிக்கும் நோக்கத்துடன் இருக்கிறார்கள்.
 தமிழகத்தில் தமிழர் தவிர அனைவருமே இவ்வாறு தான் இருக்கிறார்கள்.
 ஏன் இருக்கமாட்டார்கள்? பாகிஸ்தான் முதல் இலங்கை வரை தமிழர் மீது வெறுப்புடன்தான் இருக்கின்றனர். தமிழர்கள் அத்தனை பேரும் இவர்களால் பன்னெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.

 அப்படி நீங்கள் வந்தேறிகளை வெறுத்தால் வேறுவழியே இல்லை அது நாம் தமிழர் கட்சிக்குத் தான் சாதகமாக முடியும். சீமான் முதலமைச்சர் ஆவார். (அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும்) வந்தேறிகள் ஆதிக்கம் குறைந்து தமிழர் ஆதிக்கம் தலைதூக்கி நாம்  வலுவான மாநிலமாக அல்லது குறைந்த பட்சம் அண்டை மாநிலங்கள் போலவாவது பிரச்சனைகளை ஓரளவு சமாளிக்கும் வலிமை கிடைக்கும். அதை அஸ்திவாரமாக வைத்து நாம் வலுவான இனமாக மீண்டும் எழுச்சி பெற வாய்ப்பு கூட இருக்கிறது. 
 நமக்கு வேறு வழியும் தற்போதைக்கு இல்லை!

 இப்போது இதைச்செய்யவில்லை என்றால் நிலை இன்னும் மோசமாகும்! நாமும் பீகார் போல ஆகவேண்டியதுதான்! 
எனவே தமிழரே! தமிழ்தேசியத்தைக் கையிலெடுங்கள்! பார்ப்பனர், இசுலாமியரை காரணமில்லாமல் வெறுக்காதீர்கள்! தமிழராக இணைந்து எழுங்கள்! நமக்கு இனத்திற்கு வெளியே மத அடிப்படையிலோ, தேசப்பற்று அனிப்படையிலோ, மனிதநேய அடிப்படையிலோ  எந்த ஆதரவும் எப்போதும் கிடைக்கப்போவதில்லை! 
  நாம் கொத்தாக செத்து விழுந்தாலும் திரும்பிப்பார்க்க நாதி இல்லை! 2009 இனப்படுகொலை சான்று! 

அதேபோல..
 தமிழினப் பார்ப்பனரே! தமிழின இசுலாமியரே! நீங்களும் தமிழினமாக சிந்தியுங்கள்.
 தமிழகத்திற்கு வெளியே இருக்கும் பிராமணரோ அரபு நாடுவரை இருக்கும் முஸ்லிம்களோ உங்களை எப்போதும் ஏறெடுத்தும் பார்க்கப் போவது இல்லை! சக தமிழரை நம்புங்கள்! ஏனென்றால் தமிழ்ச் சமூகம் என்றுமே இசுலாமியரை வெறுத்ததில்லை! பார்ப்பனரை அறியாமையால் வெறுத்த காலமும் மாறிவிட்டது! (தமிழக பொதுமக்கள் பார்ப்பனரை வெறுத்ததே கிடையாது, பொறாமை கலந்த மரியாதையான பார்வையே உள்ளது)
 முதலில் நீங்கள் இரு துருவங்களாக ஒட்டாமல் இருக்காதீர்கள்! நீங்கள் நெருக்கமாகுங்கள்! நீங்கள் இருவரும் பிற தமிழருடன் மேலும் நெருக்கமாகுங்கள்!

 மருதுபாண்டியர் வாரிசு நாடுகடத்தப்பட்ட போது கப்பலில் உடன் சென்று தீவுச் சிறையில் மடிந்த ஜகந்நாத ஐயரும் சேக் உசேனும் போல நீங்கள் ஏன் இணைந்து ஓரினமாக செயலாற்ற முடியாது?!
 இன்று தமிழ்தேசியம் உங்களை ரத்த சொந்தமாக அரவணைத்துக் கொள்ள இரு கரம் விரித்து அழைக்கிறது.

 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இசுலாமியர் புது ரத்தம் பாய்ச்சவில்லையா?! அப்போது (இந்திய கிரிக்கெட் வீரர், பார்ப்பனர்) ஸ்ரீகாந்த் அகில இந்திய அளவில் குரல்கொடுக்கவில்லையா? 

மத்ததை ஒதுக்கி வைத்து தமிழராக வீறு கொண்டு எழுங்கள்!
உங்களைப் பார்த்து தமிழினமே பேரெழுச்சி கொள்ளும்! தமிழினத்தைத் திரட்டும் வலிமை உங்கள் இருவரிடம் இருக்கிறது!
இனமாகத் திரண்டு நிற்போம்! வருவது வரட்டும்!

நம் வலிமைக்கு முன் இந்தியா மட்டும் இல்லை இந்தியத் துணைக்கண்டமே கூட அடிபணிந்தே தீரும்! 

வரலாறு சான்று! 
 



 

Sunday 2 October 2022

ஆதித்த கரிகாலன் கொலையாளிகள் பற்றி கேள்விகள் மற்றும் பதில்கள்


ஆதித்த கரிகாலன் கொலையாளிகள் பற்றி கூறும் உடையார்குடி கல்வெட்டு பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்

 கே:- ஆதித்த கரிகாலன் கொலையுண்ட ஆண்டு எது?
ப:- கி.பி.969

 கே:- உடையார்குடி கல்வெட்டு வெட்டப்பட்ட காலம்?
ப:- கி.பி. 987 அதாவது ஆதித்த கரிகாலன் இறந்து 18 ஆண்டுகள் கழித்து வெட்டப்பட்டது

 கே:- உடையார்குடி கல்வெட்டு இராசராச சோழனுடையதா?
ப:- இல்லை. அது ஊர்சபை நிர்வாகி வெட்டிய கல்வெட்டு. அதில் இராசராசனின் உத்தரவு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதில் கொலைகாரர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்கிற விபரம் உள்ளது.

கே: அந்த நிலத்தைக் கையகப்படுத்தியது எந்த மன்னன்?
ப:- உடையார்குடி கல்வெட்டு ராசராசன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் வெட்டப்பட்டது. எனவே இந்நிலத்தை கையகப்படுத்தியது அவருக்கு முன்னர் ஆண்ட உத்தம சோழனாக இருக்கலாம். அல்லது கொலை நடந்தபோது ஆட்சியிலிருந்த சுந்தர சோழனாகவும் இருக்கலாம். இராசராசன் அந்த நிலத்தை பயன்படுத்த அனுமதி மட்டும் வழங்கியிருக்கலாம். 

 கே:- கொலையாளிகள் பிடிபட்டனரா?
ப: பிடிபட்டதாக எந்த சான்றும் இதுவரை இல்லை.

கே:- கையகப்படுத்திய நிலம் யாருடையது?
ப:- கையகப்படுத்திய நிலம் கொலையாளிகளான மூன்று சகோதரர்களின் நான்காவது சகோதரன் மற்றும் பிற உறவினர்களின் உடைமை

 கே: ஏன் உறவினர்களைத் தண்டிக்கவேண்டும்?
ப: கொலையாளிகள் தப்பிய பிறகு அவர்களது உறவினர்களும் பயம் காரணமாகத் தப்பிவிட்டனர். பயன்பாடில்லாத அவர்களின் சொத்துக்களை ஊர்சபை மன்னனிடம் கேட்டு எடுத்துக்கொண்டது. 
 
கே: கொலையாளிகள் பார்ப்பனரா?
ப: ஆம். அவர்கள் பார்ப்பனச் சேரியில் வசித்தனர்.

 கே: கொலையாளிகள் பிடிபட்டிருந்தால் கொன்றிருப்பரா? அல்லது பிராமணர் என்று விட்டிருப்பரா?
ப: கொன்றிருப்பர். சாளுக்கிய கல்வெட்டு ராஜராஜ சோழனை பிராமணக் கொலையாளி என்றே கூறுகிறது. க.த.திருநாவுக்கரசு இக்கல்வெட்டைத் தவறாகப் புரிந்துகொண்டதால் தனது கட்டுரையில் கொலையாளிகளைப் பிடித்து மனுஸ்மிருதி படி அந்த பிராமணரைக் கொல்லாமல் விட்டதாக எழுதினார்.

கே: கொலைக்கான காரணம் என்ன? 
ப: வீரபாண்டியனைக் கொன்றதுடன் நிற்காமல் போர்நெறிகளை மீறி அவனது தலையை வெட்டி ஈட்டியில் குத்தி அரண்மனை மீது வைத்ததால் அந்த அவமானத்திற்கு பழி தீர்க்க ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தனர்.

கே: இந்தக் கொலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த உத்தம சோழன் என்கிற மதுராந்தகன் இந்தக் கொலைக்கு காரணமா?
ப:- இல்லை. ராஜேந்திர சோழனின் இயற்பெயர் மதுராந்தகன். தன் அண்ணனைக் கொன்ற கொலையாளியின் பெயரை தன் மகனுக்கு ராசராசன் வைப்பாரா?! இந்த தவறான கருத்து நீலகண்ட சாஸ்திரி எழுதிய நூலில் இருந்தது. இந்த தவறான கருத்தின் அடிப்படையிலேயே பொன்னியின் செல்வன் புதினம் எழுதப்பட்டது. 

கே: கொலையாளிகள் சோழ அரசில் எந்த பதவியில் இருந்தனர்?
ப:- கொலையாளிகள் மூவர். முதலாமவர் சோமன். இவர் பட்டம் கல்வெட்டில் சிதைந்துவிட்டது. இரண்டாமவர் பஞ்சவன் பிரம்மாதிராஜன் எனும் பட்டம் கொண்ட ரவிதாசன் என்பவர். இந்த பஞ்சவன் பிரம்மாதிராயர் என்பது பாண்டிய அரசின் உயர்பதவியைக் குறிக்கும் பட்டம். மூன்றாமவர் இருமுடிச்சோழ பிரம்மாதிராஜன் எனும் பட்டம் கொண்ட பரமேஸ்வரன் என்பவர். இந்த இருமுடிச் சோழ பிரம்மாதிராயர் பட்டம் சோழ அரசின் உயர்பதவிப் பட்டம். 

கே: என்றால் இவர்களுக்குள்ள ஒப்புமை பிராமணர் என்பது மட்டும்தானே?
ப:- சோழர்கள் பிராமணருக்கு எதிராக எதையும் செய்ததாகத் தெரியவில்லை. இந்த கொலைக்குப் பிறகும் சோழர்கள் பிராமணர்களை நன்றாகவே நடத்தியுள்ளனர். பதவிகளும் அளித்துள்ளனர். சோழர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பாண்டியரை விடாது துரத்தினர். அவர்களது மணிமுடியையும் ஆரத்தையும் கைப்பற்ற இலங்கையை நிர்மூலமாக்கினர். ஆனாலும் பிற்பாடு பாண்டியர் எழுச்சி பெற்று சோழர்களை வீழ்த்தி பேரரசு கண்டனர். கொலைகாரர்களில் மூத்தவர் பாண்டிய அதிகாரியாக இருக்கவேண்டும் என்பது சோழர் வரலாற்றில் கரைகண்ட குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கணிப்பு. எனவே ஆதித்த கரிகாலன் கொலையைச் செய்தது பாண்டிய உயரதிகாரிகளான இரு சகோதரர்கள் மற்றும் அதற்கு உடந்தையான சோழ உயரதிகாரியான மூன்றாவது சகோதரன் என்று ஊகிக்கலாம். 
 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இருவேறு அரசுகளில் உயர்பதவிகளில் இருந்தது வியப்பாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

கே:- ஒரு சோழ உயரதிகாரி ஏன் இவ்வளவு பெரிய துரோகம் செய்யவேண்டும்? 
ப:- கொலையாளிகள் கடைசிவரை சிக்கவேயில்லை. கொலைக்கான காரணமும் கடைசி வரை தெரியவில்லை. உடையார்குடி கல்வெட்டு இன்று நிலத்தின் வரலாற்றைக் கூறி எழுதப்படும் பத்திரம் போன்றது. இதை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. 

கே: நீங்கள் கூறிய பதில்களுக்கான சான்று எது?
ப:- அனைவரும் உடையார்குடி கல்வெட்டு சோழ அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கல்வெட்டு  என்றே நினைத்தனர். குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள்தான் அதை மீண்டும் தெளிவாகப் படித்து 'உடையார்குடி கல்வெட்டு ஒரு மீள்பார்வை' எனும் கட்டுரை எழுதியுள்ளார். அதுவே நான் முன்வைக்கும் முக்கிய சான்று. இதுவரை இக்கட்டுரையை யாரும் மறுக்கவில்லை.

 கே:- என்றால் சோழர் வளர்ச்சி பொறுக்காத பிராமணர் சதி என்று கூறப்படுவது பொய்யா?
ப:- எனது தனிப்பட்ட கணிப்பு ஆதித்த கரிகாலனால் தனிப்பட்ட முறையில் பிராமண உயரதிகாரி சோமன் பாதிக்கப்படிருக்கலாம். அவர் தன் சகோதரன் ரவிதாசனுடன் பாண்டியரிடம் போய் சேர்ந்திருக்கலாம். எனவே இவர்கள் துரோகிகள் என்று அறிவிக்கப் பட்டிருக்கலாம். இவர்களின் இன்னொரு சகோதரனான பரமேஸ்வரன் சோழ அரசில் அண்ணன் விட்ட இடத்தை நிரப்பியிருக்கலாம். பாண்டியர் உதவி கொண்டு சோமன் சோழநாட்டில் ஊடுருவி ஆதித்த கரிகாலனை கொன்றிருக்கலாம். பரமேஸ்வரனால் அதைத் தடுக்க முடியாமல் போயிருக்கலாம். எனவே சோமன், ரவிதாசன் போன்ற துரோகிகளுடன் பரமேஸ்வரனும் துரோகி என்று சேர்க்கப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப் பட்டிருக்கலாம். கல்வெட்டில் மூவரும் துரோகிகள் என்றே குறிக்கப்பட்டுள்ளனர். ஆதித்த கரிகாலன் போர்வெறியுடன் நடந்துகொண்டதால் இந்த கொலை சோழ மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். எல்லாமே யூகம்தான்.

Thursday 29 September 2022

சோழப் பாண்டியர்

சோழப் பாண்டியர்

 பாண்டிய நாட்டிலிருந்து சேரநாட்டுக்கு போகும் செங்கோட்டைக் கணவாயில் இருந்து சேனைத்தலைவர் குடியைச் சேர்ந்த நான் எழுதும் பதிவு.

 நான் தோற்றத்தால் சேர நாட்டான். பூர்வீகத்தால் சோழ நாட்டான். பிறப்பால் பாண்டிநாட்டான்.

 பாவாணர் கூற்றுப்படி சேடைத்தலைவர் சங்ககால கோசர் வழிவந்த தமிழ்க்குடி (இது தெரியாமல் நன்னன் - கோசர் பங்காளிச் சண்டையை வைத்து கோசர் வடுகர் என்று நானே பதிவு இட்டுள்ளேன்).
 கோசர் ஆண்ட குறுநிலம் சேர நாட்டின் பகுதியான கொங்குக்கும் சேரநாட்டுக்கு அடுத்த வடக்கு கடற்கரையை ஆண்ட நன்னனுக்கும் துளுநாட்டுக்கும் கொங்கின் வடபகுதியான கொங்காணத்துக்கும் இடையில் இருந்தது. அதாவது தற்போதைய கேரள கர்நாடக எல்லைக் கோட்டின் மத்தியில் என்று சொல்லலாம்.

 இவர்கள் குதிரைமலை (Gudremukh - Karnataka) பிட்டங்கொற்றன் மீது போர் தொடுத்துள்ளனர்.

 கோசர் சக வேளிர் குடியான ஏழில்குன்றம் (Ezhimala - Kerala) நன்னர்களுடன் பங்காளி சண்டை போட்டு தோற்று பிறகு சூழ்ச்சியால் நன்னனை கொன்றுவிட்டதாக சங்க இலக்கியம் கூறுகிறது.
அதன்பிறகு இவர்கள் கொங்கு வந்து சேரர் படையில் சேர்ந்து பிறகு சோழநாட்டு வடக்கு எல்லைக்கு போர்த்தொழில் செய்யச் சென்றுள்ளதாக ஊகிக்கலாம் (திருநெல்வேலி முதல் தஞ்சாவூர் வரை தொடர்ச்சியாக வாழும் சேனைத்தலைவர் அதன் பிறகு திருவண்ணாமலை அருகே மட்டும் காணக் கிடைக்கின்றனர்).

 இப்படி தமிழகம் வந்த கோசர் இளங்கோசர் என்றும் இவர்களது மூதாதையர் துளு எல்லையில் வாழ்ந்த செம்மல் கோசர் என்றும் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளனர்.  
 கொங்கில் இவர்கள் ஏற்கனவே இருந்ததால் பிரச்சனை வரவில்லை. கொங்கு தாண்டி வந்தபோது சோழநாட்டு தமிழகத்து சிற்றரசர்களுடன் பிரச்சனஐ வந்து அவர்களுடன் மோதிக்கொண்டு இருந்தனர்.
 அப்போது கிள்ளி வளவன் இவர்களைத் தோற்கடித்தான்.
 பிறகு படைத்தலைவராகவும் ஊர்த்தலைவராகவும் சோழ நாட்டிலும் பாண்டிநாட்டிலும் சங்ககாலத்திலேயே பரவிவிட்டனர். 

 (சங்ககாலத்தில் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி எனும் சோழன் படையெடுத்தபோது அவனுக்கு பணிந்து தம் ஊரை காப்பாற்றிக்கொண்ட அஃதை எனும் கோசர் தலைவன் உண்டு. இவன் வழியினரே அகதா மறவர் என்பர். தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் போரில் வென்ற பிறகு தோற்ற கோசர் படை அவனுக்கு பணிந்து பல வெற்றிகளை ஈட்டித் தந்தது)

 பிற்பாடு பல போர்க்குடிகளுடன் கலப்புகள் ஏற்பட்டு கோயர் என்கிற பெயருடன் தமிழகம் முழுக்க பரவினர் எங்கள் முன்னோர்கள்.

 கோயம்பேடு, கோயம்புத்தூர், இளங்கோயக்குடி (அம்பாசமுத்திரம்) இப்படிப்பட்ட ஊர்கள் கோயர் உருவாக்கியவை என்பது பாவாணர் சொல்லாய்வு முடிவு.

 கோயர் பிற்பாடு பல கலப்பு நடந்து கோளர் என்றாகினர்.
 அவர்களே கைக்கோளர் எனும் படைப்பிரிவு ஆகி சோழருக்கு போர்த் தொழில் செய்துகொண்டு இருந்தனர்.
 மேலும் கலப்பு நடந்து பிற்கால சோழர் காலத்தில் எல்லைக்கு சற்று பின்னே நிலைகொண்டு இருக்கும் உள்நாட்டு படையான (special force) செங்குந்தர் என்றாகினர் என்கிறார் பாவாணர்
 (இவையெல்லாம் ராகவையங்கார் கோசர் பற்றி எழுதி அவர்கள் வெளியார் என்று கூறியபோது அதை மறுத்து கோசர் தமிழரே என்று பாவாணர் எழுதியவை).

 இந்த சிறப்புப் படையின் தலைவர்கள் பிற்பாடு தனிச் சாதியாகி சேனைக்குடையார், சேனைத் தலைவர் என்றாகி இருக்கவேண்டும்.

 16 ஆம் நூற்றாண்டில் தமிழர் ஆட்சி வீழ்ந்த பிறகு கைகோளர், செங்குந்தர், சேனைத்தலைவர் ஆகியோர் போர்த்தொழிலை விட்டுவிட்டனர். நெசவுத் தொழிலுக்கு மாறினர் (போத்தீஸ் - சேனைத்தலைவர் நிறுவனம்). பிறகு சேனைத்தலைவர் வெற்றிலை விவசாயம் போன்ற கொடி விவசாயத்திற்கு மாறினர். 

 முருகனை முதன்மைத் தெய்வமாகக் கொண்ட இவர்கள் பிற்பாடு முருகன் படைத் தளபதி வீரபாகு வழிவந்தவராக கற்பனைப் புராணங்களை எழுதிக்கொண்டனர்.

 சேனைத்தலைவரில் பெரும்பான்மையானோர் செங்கோட்டை முதல் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடம் வரை வாழ்கின்றனர்.
தேனி, தஞ்சாவூர் வரை சிறுசிறு தொகையாக பரவி உள்ளனர் (நீயா நானா கோபிநாத்தை இங்கே குறிப்பிடலாம்). இதற்கு அடுத்து எந்த தொடர்பும் இல்லாமல் திருவண்ணாமலையில் காணக்கிடைக்கின்றனர். செங்குந்தர் அல்லது மறவர் மத்தியில்தான் பெரும்பாலும் சேனைத்தலைவர் வாழ்கின்றனர். 

 என்னுடைய கணிப்பு சோழப் பேரரசு விரிவடைந்தபோது நாங்கள் படைத்தலைவர்களாக பாண்டிய நாடு வந்து தங்கி அப்படியே செங்கோட்டை வழியே சேரநாட்டின் மீதும் படையெடுத்து சென்றுள்ளோம் (ஆனால் சங்ககாலத்திலேயே பாண்டிநாடு வரை கோசர் பரவிவிட்டனர். ஊர்த் தலைவர்களாக இருந்தனர். செல்லூரை ஆண்ட கோசர் தலைவர் செல்லிக் கோமான். ஊர்முது கோசர் எனும் குறுக்கை ஊர் கோசர் சபை  திதியனுடன் போர் செய்துள்ளனர். இதுவே நம்மாழ்வார் பிறந்த திருக்குறுக்கை. இந்த நம்மாழ்வார் பாடிய திருத்தலம் கன்னியாகுமரியில் உள்ள வாட்டாறு இவ்வூரிலும் சங்ககாலத்தில் எழினியாதன் தலைமையில் கோசர் இருந்தனர்).
 
 சேனைத்தலைவரின் ஒரு பிரிவு வேங்கடத்திற்கு அப்பால் படையெடுப்புக்குச் சென்றுள்ளது. இன்றும் வடக்கு எல்லையிலும் மேற்கு எல்லையிலும் செங்குந்தர் அதிகம் உள்ளனர் (பாரதிதாசன் - செங்குந்த முதலியார்)

செட்டியார், முதலியார், மூப்பனார், பிள்ளை என பல பட்டங்கள் கொண்டவர்கள் என்பதால் பல குடிகள் கலந்த கலப்பு என்று அறியலாம். பொட்டல்புதூர் இசுலாமியர் பெரும்பாலும் சேனைத்தலைவர் குடிதான். 
 நான் இங்கே கூறவருவது என்னைப் போல எல்லா குடிகளையும் ஆராய்ந்தால் அது தன்னாட்சி புரிந்த ஒரு வேளிர் இலிருந்து தொடங்கி சங்ககாலத்தின் ஏதாவது ஒரு குடியைத் தொட்டு பிறகு மூவேந்தர் ஆட்சியில் எதாவது ஒரு தொழில்வழிச் சாதி ஆகி பின்னர் இன்றைய பிறப்பு வழிச் சாதியாகி நிற்கும்.

 பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்துள்ள இந்நேரத்தில் சோழர் - பாண்டியர் பங்காளிச் சண்டை போடவேண்டாம்.
அப்படி சண்டை போட்டாலும் என்னை இழுக்க வேண்டாம்!



 
 

Tuesday 27 September 2022

அடுத்தது ரிக் வேதப் பொய்

அடுத்தது ரிக் வேதப் பொய் 

 ரிக் வேதம் 62:10 கடவுளை விட பிராமணர் உயர்வு என்று சொல்வதாக இன்னொரு பொய் திராவிடவாதிகளால் பரப்பட்டு வருகிறது.

அந்த வரிகள்,

தை³வாதீ⁴னம்ʼ ஜக³த்ஸர்வம்ʼ
மந்த்ராதீ⁴னம்ʼ து தை³வதம்।
தன்மந்த்ரம்ʼ ப்³ராஹ்மணாதீ⁴னம்ʼ
ப்³ராஹ்மணா மம தே³வதா:॥

“தெய்வங்களின் வசத்தில் உலகம். மந்திரங்களின் வசத்தில் தெய்வங்கள். அந்த மந்திரங்கள் பிராமணர் வசத்தில். அத்தகைய பிராமணர் எனது தெய்வங்கள்” என்று இதற்குப் பொருளாம்.

 உண்மை என்னவென்றால் இந்த வரிகள் கொண்ட ஸ்லோகம் ரிக் வேதத்திலேயே இல்லை.
 ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களிலும் கூட இந்த அல்லது இதுபோன்ற பொருள் தரும் சுலோகம் இல்லை.

ஆம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று திராவிடவாதிகள் சான்று காட்டிய ஸ்லோகத்தில் எப்படி சூத்திரன் பற்றி எதுவுமே இல்லையோ அதுபோலவே இதுவும். 
அடிப்படையே இல்லை.
 திரிப்பு வேலையைக் கூட ஒழுங்காகச் செய்ய துப்பில்லை இவர்களுக்கு! 

 உண்மையான அந்த ஸ்லோகமும் மேற்கண்டதில் இருந்து சற்று மாறுபட்டது.
 Mantra dhinam Jagat sharvam, Mantra dhinam cha devatha,. Tan Mantra Brahmana adheenam TASMAT Brahman Devta. 

 இதன் பொருள் மந்திரங்கள் உலகத்தையும், தெய்வங்களையும் ஆட்டிப்படைக்கின்றன. எனவே மந்திரம் ஓதும் பிராமணன் தெய்வம் போன்றவன்.
 
 இந்த ஸ்லோகம்(பதிகம்) எந்த புராணத்தில் (பெருங்காப்பியம்) இருக்கிறது என்று தெரியவில்லை.

பிராமணர் கடவுளுக்கு நிகர் என்று வேதத்தில் இல்லை. அதாவது கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

Wednesday 21 September 2022

நம்மை அவர்கள் என்றனர்

நம்மை அவர்கள் என்றனர் 

அவர்கள் வேசி மகன்கள்; ஆனால் நம்மை தேவடியாள் மகன்கள் என்றனர்.

அவர்கள் சாதிவெறியர்கள்; ஆனால் நம்மை சாதியவாதிகள் என்றனர்.

அவர்கள் பிராமண அடிமைகள்; ஆனால் நம்மை பார்ப்பன அடிமைகள் என்றனர்.

அவர்கள் பெண்பித்தர்கள்;  ஆனால் நம்மை வெள்ளைத்தோல் விரும்பிகள் என்றனர்.

அவர்கள் மானங்கெட்டவர்கள்; ஆனால் நம்மை சுயமரியாதை இல்லாதவர்கள் என்றனர்.

அவர்கள் தம் வீட்டுப் பெண்களை வைத்து விபச்சாரம் செய்பவர்கள்; ஆனால் நம்மை ஆணாதிக்கவாதிகள் என்றனர்.

அவர்கள் மூட நம்பிக்கை நிறைந்தவர்கள்; ஆனால் நம்மை காட்டுமிராண்டிகள் என்றனர்.

 அவர்கள் திரிந்து சிதைந்த மொழி பேசுபவர்கள்; ஆனால் நம் மொழியை தகுதியற்றது என்றனர்.

அவர்கள் ஆக்கிரமித்து கொழுப்பவர்கள்; ஆனால் நம்மை ஆதிக்கவாதிகள் என்றனர்.

அவர்கள் வடுகர்கள்; ஆனால் நம்மை திராவிடர்கள் என்றனர்.

19.06.2021 முகநூல் பதிவு மீள்

Monday 19 September 2022

திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம்

திராவிடத்திற்கு முன்பே காங்கிரசை வீழ்த்திய தமிழ்தேசியம் 

  அண்ணாதுரைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸை வென்றவர் ஆதித்தனார்!
 ஆம். 1967 இல் அண்ணாதுரை கூட்டணி அமைத்து காங்கிரசை வீழ்த்தியதை பெரும் சாதனையாகத் திராவிடவாதிகள் கூறுவர்.
 ஆனால் 1952 லேயே காங்கிரஸ் 153 இடங்களில் வென்றது. காங்கிரசை எதிர்த்து கூட்டணி அமைத்து 166 இடங்களில் வென்று காட்டினார் ஆதித்தனார்.
(1937 லிருந்தே தமிழருக்குத் தனிநாடு கோரிவந்தவர் ஆதித்தனார்)
 ஆனால் அன்றைய கவர்னர் ஸ்ரீபிரகாசா கூட்டணியை ஒரே கட்சியாகக் கணக்கில் கொள்ளமுடியாது என்று கூறி காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். 
 (இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும்.
சமீபத்தில் சசிகலா பெரும்பான்மை பலத்துடன் இருக்கும்போது ஆட்சியமைக்க அழைக்காமல் ஜனநாயகப் படுகொலை நடந்தது போல!)

 அப்போது ராஜாஜி ஆதித்தனாரின் 'ஐக்கிய கூட்டணி' யிலிருந்து மாணிக்கவேலர் என்பவரை பதவி ஆசை காட்டி கட்சி மாறச் செய்தார். தான் முதலமைச்சர் ஆகி ஆட்சியும் அமைத்தார்.
 அப்போது அவர் கொண்டுவந்த கல்வித் திட்டம் அன்று பெரும்பான்மை பலத்துடன் இருந்த ஆதித்தனார் கூட்டணியால்தான் தோற்கடிக்கப்பட்டது (இந்த திட்டமே குலக் கல்வித் திட்டம் என்று அவதூறு பரப்பப்பட்டது).

 1957 லும் ஆதித்தனார் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முயன்றார். ஆனால் முடியவில்லை.
 இருந்தாலும் அக்கட்சி பலவீனமடைந்தது.

 1958 இல் சுதந்திரத் தமிழ்நாடு கோரி மிகப்பெரிய மாநாடு ஒன்றை ஆதித்தனார் நடத்தினார். இதில்தான் இந்திய வரைபட எரிப்பு போராட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டது. 

 1960 இல் ஈ.வே.ரா வுடன் இணைந்து (தமிழகம் நீங்கலாக) இந்திய வரைடத்தை எதிர்க்கும் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். ஆனால் போராட்டம் தொடங்கும் முன்பே இரு தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மக்கள் தடையை மீறி மிகப் பெரிய அளவில் வரைபடத்தை எரித்தனர். 4000 பேர் இதற்காகக் கைது செய்யபட்டனர். மும்பை தமிழர்களும் இப்போராட்டத்தை நடத்தினர். அதிலும் சிதம்பரத்தில் வி.கே.சாமித்துரை என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி தந்தது. காங்கிரசு பரவலான மக்கள் எதிர்ப்பைப் பெற்றது.

 அதே 1960 இல் ஆகஸ்ட் மாதம் இந்தி திணிப்பை எதிர்த்து குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்ததுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற ஆதித்தனார் மற்றும் அவரது 'நாம் தமிழர்' கட்சியினர் 126 பேர் கைது செய்யப்படனர். வெளிவந்த பிறகும் அக்டோபரில் ஆதித்தனார் 'தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று மாத சிறைவாசத்தில் 12 கிலோ உடல் எடை குறைந்து வெளிவந்தார். அப்போதும் காங்கிரஸ் மீது இளைஞர்களுக்கு பலத்த அதிருப்தி ஏற்பட்டது.

 1965 மொழிப்போரை மாணவர்கள் முன்னெடுத்தபோது ஈ.வே.ரா காங்கிரசுடன் சேர்ந்துகொண்டார். அப்போது மாணவர்களை வழிநடத்தியது அண்ணாதுரையும் ஆதித்தனாரும். அண்ணாதுரை பாதியில் விலகிக் கொள்ள நாம் தமிழர் கட்சி கடைசிவரை உறுதியாக நின்றது.

 1967 இல் அண்ணாதுரை காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க ஆதித்தனார் மிக முக்கியமான காரணம். அன்று திருநெல்வேலி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. அண்ணாதுரை ஆதித்தனாரிடம் அத்தொகுதிப் பணியை ஒப்படைத்தார். 1962 இல் அதன் 19 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 1967 ல் ஆதித்தனார் 14 தொகுதிகளில் தி.மு.க வை வெல்லவைத்தார். 5 தொகுதிகளே காங்கிரசுக்குக் கிடைத்தது. 
தேர்தலுக்குப் பின் காங்கிரஸின் தோல்வியில் கால்வாசி பங்கு தினத்தந்தி க்குரியது என்று கூறினார் ராஜாஜி. 

 அண்ணாதுரைக்கு கிடைக்கும் புகழ் உண்மையில் ஆதித்தனாருக்குக் கிடைக்க வேண்டியது ஆகும்.
 

Saturday 17 September 2022

ஈ.வே.ரா மக்கள் ஆதரவு பெற்றவரா

ஈ.வே.ரா மக்கள் ஆதரவு பெற்றவரா?!

 ஈ.வே.ராமசாமி க்கு எப்போதும் மக்கள் ஆதரவு இருந்ததே இல்லை!
 ஈ.வே.ரா தலைமை தாங்கிய அல்லது ஆதரவு தெரிவித்த எந்தவொரு கட்சியோ நபரோ தேர்தலில் வென்றதே இல்லை!
 வென்றதில்லை என்றாலே ஆட்சிக்கு வந்ததும் இல்லை என்பது புலப்படும்.
  அதைவிடக் கொடுமை எவர் வென்றாலும் உடனே எதிர்ப்பைக் கைவிட்டு ஓடோடிச் சென்று  ஒட்டிக்கொள்வது ஈ.வே.ரா வழக்கம்.

 இத்தகைய ஒரு நபரைத்தான் தமிழ் இனத்தின் தலைவனாக திராவிடம் சித்தரிக்கிறது.

திராவிடமும் தமிழர்களின் ஆதரவை எப்பொதும் பெற்றதில்லை!

 காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்ததால் மட்டுமே நீதிக் கட்சி ஆங்கிலேயர் ஆதரவுடன் வெல்ல முடிந்தது.

 பிறகு நீதிக் கட்சி வீழ்ந்தபிறகு முப்பது ஆண்டுகள் ஈ.வே.ரா தலைமையில் திராவிடம் பீடை பிடித்தது போல் இருந்தது.

 அண்ணாதுரை தான் திராவிடத்தை அரியணை ஏற்றினார் அதுவும் திராவிடம் என்கிற பெயரில் முழுக்க தமிழ்தேசியத்தைப் பேசித்தான் ஆட்சிப் பிடித்தார்.

 அதன்பிறகும் தமிழக அரசியலில் தி.மு.க பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் அல்லது  மைனாரிட்டி அரசு அமைக்கும். 

 ஆனால் அ.தி.மு.க தோன்றிய காலத்தில் இருந்தே பெரும்பான்மை ஆதரவையும் மெஜாரிட்டி அரசு அமைக்கும் திறனும் கொண்டு விளங்கியது. 
காரணம் அது பெயருக்கு மட்டும்தான் திராவிடக் கட்சி.

 அ.தி.மு.க தலைவர்கள் வீழ்ந்தபிறகே ஸ்டாலின் மெஜாரிட்டி அரசு அமைத்துள்ளார். 
 அதுவும் பணபலத்தின் துணை மட்டும் கொண்டே இதைச் சாதித்தார்.

 

 
 
 

Friday 9 September 2022

பிரிட்டிஷ் அரசர் மரணத்திற்கு ஈ.வே.ரா அஞ்சலி

பிரிட்டிஷ் அரசர் மரணத்திற்கு ஈ.வே.ரா அஞ்சலி

 சவர்க்கர் கூட பிறகுதான் ஆங்கிலேய அடிமையாக மாறினார் ஈ.வே.ரா எப்போதுமே ஆங்கிலேயர் அடிமைதான்.

 மன்னர் ஜார்ஜ் இறந்தபோது ராஜ விசுவாசத்துடன் ஈ.வே.ரா  எழுதிய உருக்கமான இரங்கல். 
(26.01.1936, குடி அரசு தலையங்கம்)
 இதில் 'ஆங்கில ஆட்சியின் குறைகளுக்கு மன்னரை குறை சொல்லக்கூடாது' எனும் கருத்து கவனிக்கத்தக்கது.

 மேலும், இந்தியா பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் பெறும் காலம் கனிந்தபோது கூட 'தமிழகத்தை மட்டுமாவது ஆங்கிலேயர் தொடர்ந்து ஆள வேண்டும்' என்று ஈ.வே.ரா வலியுறுத்தியதையும் காணலாம்.

 27-08-44ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே, கீழ்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
”திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்கம் நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், 

நேரே பிரிட்டிஷ் செக்கரடரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான 

ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது”.

நமது குறிக்கோள் ‘விடுதலை’ வெளியீடு :- 1948
(நூல்:- புதிய தமிழகம் படைத்த வரலாறு)