Saturday 17 September 2022

ஈ.வே.ரா மக்கள் ஆதரவு பெற்றவரா

ஈ.வே.ரா மக்கள் ஆதரவு பெற்றவரா?!

 ஈ.வே.ராமசாமி க்கு எப்போதும் மக்கள் ஆதரவு இருந்ததே இல்லை!
 ஈ.வே.ரா தலைமை தாங்கிய அல்லது ஆதரவு தெரிவித்த எந்தவொரு கட்சியோ நபரோ தேர்தலில் வென்றதே இல்லை!
 வென்றதில்லை என்றாலே ஆட்சிக்கு வந்ததும் இல்லை என்பது புலப்படும்.
  அதைவிடக் கொடுமை எவர் வென்றாலும் உடனே எதிர்ப்பைக் கைவிட்டு ஓடோடிச் சென்று  ஒட்டிக்கொள்வது ஈ.வே.ரா வழக்கம்.

 இத்தகைய ஒரு நபரைத்தான் தமிழ் இனத்தின் தலைவனாக திராவிடம் சித்தரிக்கிறது.

திராவிடமும் தமிழர்களின் ஆதரவை எப்பொதும் பெற்றதில்லை!

 காங்கிரஸ் தேர்தலைப் புறக்கணித்ததால் மட்டுமே நீதிக் கட்சி ஆங்கிலேயர் ஆதரவுடன் வெல்ல முடிந்தது.

 பிறகு நீதிக் கட்சி வீழ்ந்தபிறகு முப்பது ஆண்டுகள் ஈ.வே.ரா தலைமையில் திராவிடம் பீடை பிடித்தது போல் இருந்தது.

 அண்ணாதுரை தான் திராவிடத்தை அரியணை ஏற்றினார் அதுவும் திராவிடம் என்கிற பெயரில் முழுக்க தமிழ்தேசியத்தைப் பேசித்தான் ஆட்சிப் பிடித்தார்.

 அதன்பிறகும் தமிழக அரசியலில் தி.மு.க பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் அல்லது  மைனாரிட்டி அரசு அமைக்கும். 

 ஆனால் அ.தி.மு.க தோன்றிய காலத்தில் இருந்தே பெரும்பான்மை ஆதரவையும் மெஜாரிட்டி அரசு அமைக்கும் திறனும் கொண்டு விளங்கியது. 
காரணம் அது பெயருக்கு மட்டும்தான் திராவிடக் கட்சி.

 அ.தி.மு.க தலைவர்கள் வீழ்ந்தபிறகே ஸ்டாலின் மெஜாரிட்டி அரசு அமைத்துள்ளார். 
 அதுவும் பணபலத்தின் துணை மட்டும் கொண்டே இதைச் சாதித்தார்.

 

 
 
 

No comments:

Post a Comment