Tuesday 27 September 2022

அடுத்தது ரிக் வேதப் பொய்

அடுத்தது ரிக் வேதப் பொய் 

 ரிக் வேதம் 62:10 கடவுளை விட பிராமணர் உயர்வு என்று சொல்வதாக இன்னொரு பொய் திராவிடவாதிகளால் பரப்பட்டு வருகிறது.

அந்த வரிகள்,

தை³வாதீ⁴னம்ʼ ஜக³த்ஸர்வம்ʼ
மந்த்ராதீ⁴னம்ʼ து தை³வதம்।
தன்மந்த்ரம்ʼ ப்³ராஹ்மணாதீ⁴னம்ʼ
ப்³ராஹ்மணா மம தே³வதா:॥

“தெய்வங்களின் வசத்தில் உலகம். மந்திரங்களின் வசத்தில் தெய்வங்கள். அந்த மந்திரங்கள் பிராமணர் வசத்தில். அத்தகைய பிராமணர் எனது தெய்வங்கள்” என்று இதற்குப் பொருளாம்.

 உண்மை என்னவென்றால் இந்த வரிகள் கொண்ட ஸ்லோகம் ரிக் வேதத்திலேயே இல்லை.
 ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களிலும் கூட இந்த அல்லது இதுபோன்ற பொருள் தரும் சுலோகம் இல்லை.

ஆம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று திராவிடவாதிகள் சான்று காட்டிய ஸ்லோகத்தில் எப்படி சூத்திரன் பற்றி எதுவுமே இல்லையோ அதுபோலவே இதுவும். 
அடிப்படையே இல்லை.
 திரிப்பு வேலையைக் கூட ஒழுங்காகச் செய்ய துப்பில்லை இவர்களுக்கு! 

 உண்மையான அந்த ஸ்லோகமும் மேற்கண்டதில் இருந்து சற்று மாறுபட்டது.
 Mantra dhinam Jagat sharvam, Mantra dhinam cha devatha,. Tan Mantra Brahmana adheenam TASMAT Brahman Devta. 

 இதன் பொருள் மந்திரங்கள் உலகத்தையும், தெய்வங்களையும் ஆட்டிப்படைக்கின்றன. எனவே மந்திரம் ஓதும் பிராமணன் தெய்வம் போன்றவன்.
 
 இந்த ஸ்லோகம்(பதிகம்) எந்த புராணத்தில் (பெருங்காப்பியம்) இருக்கிறது என்று தெரியவில்லை.

பிராமணர் கடவுளுக்கு நிகர் என்று வேதத்தில் இல்லை. அதாவது கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

No comments:

Post a Comment