Friday 7 October 2022

இசுலாமியர் பார்ப்பனர் மற்றும் வந்தேறிகள்

இசுலாமியர் பார்ப்பனர் மற்றும் வந்தேறிகள்

 எனது முதல் நோக்கம் இசுலாமியரையும் பார்ப்பனரையும் தமிழ்தேசியத்தில் மீளிணைத்தல்!

 இசுலாமியர், பார்ப்பனர் இவ்விருவர் மீதான பிறரின் வெறுப்பே இங்கு பிரதான அரசியல்.

 எனவே தான் இவ்விரு சமூகத்தையும் தமிழ்தேசியத்தில் இருந்து அந்நியப்படாமல் காக்க நினைக்கிறேன்.

 ஏனென்றால் தமிழகத்திற்கு இந்த வெறுப்பரசியல் தேவையற்றது. 
 தமிழகத்தில் ஒட்டுமொத்த இசுலாமியரையும் வெறுக்கும் வகையில் அவர்கள் எதுவுமே செய்யவில்லை!
 அதேபோல ஒட்டுமொத்த பார்ப்பனரையும் வெறுக்கும் வகையில் அவர்களும் ஒன்றுமே செய்யவில்லை.

நன்கு அலசி ஆராய்ந்து பார்த்து உறுதியாகக் கூறுகிறேன்.

 அப்படி இரு சமூகங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை நன்கு ஆராய்ந்தால் ஒன்று அது தமிழகத்திற்கு வெளியே நடந்திருக்கிறது அல்லது தமிழகத்தினுள் வேற்றினத்தவரால் நடந்திருக்கிறது அல்லது திரிக்கப்பட்ட பொய்யாக இருக்கிறது.

 பெரும்பான்மைத் தமிழர் பாதிக்கப்படும் ஒரு கேட்டை பார்ப்பனர் செய்ததாக திராவிடம் இன்று வரை நிறுவ முடியவில்லை. இந்துத்துவமும் அவ்வாறே! 

 நீங்கள் இசுலாமியரை வெறுத்தால் வேறுவழியே இல்லை அது பாஜக வுக்குத் தான் சாதகமாக முடியும். தமிழகத்தில் வடவர் ஆதிக்கமும் சமஸ்கிருத ஆதிக்கமும் பரவும். தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் குழம்பி தொலைந்து போகும்.
 [இந்தியன் என்கிற உணர்வும் அவ்வாறே, காங்கிரஸ் க்கு சாதகமாக முடியும் வடவர் ஆதிக்கமும் இந்தி ஆதிக்கமும் பரவும், தமிழ் மொழி அடையாளம் தொலைந்து போகும்]

 அதேபோல நீங்கள் பார்ப்பனரை எதிர்த்தால் வேறுவழியே இல்லை அது திமுக வுக்கு தான் சாதகமாக முடியும். ஈ.வே.ரா உங்கள் தலைவர் ஆவார். வந்தேறிகள் ஆதிக்கம் அதிகரிக்கும். தமிழ் இன அடையாளம் குழம்பி தொலைந்து போகும்.
 [ திமுக வை பிடிக்காது என்கிற ஒரே காரணத்தால்தான் அதிமுக வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அதுவும் அழியும் நிலையில் உள்ளது]

 நீங்கள் இந்தியனாக சிந்தித்தால் (தமிழகம் தவிர்த்த இந்தியாவில்) முஸ்லிம் படையெடுப்பு, பாகிஸ்தான் பிரச்சனை, மதமாற்றம், தீவிரவாதம் என்று அவர்களை வெறுக்க பல காரணங்கள் உண்டு அதேபோல அங்கே சாதிக்கொடுமை, தீண்டாமை, மதச் சுரண்டல், பதவி ஆதிக்கம் என பிராமணரை வெறுக்கப் பல காரணங்கள் உண்டு.

  உண்மையை ஆராய்ந்து தமிழனாக  நாம் தனிநாடு என்கிற அடிப்படையில் சிந்தித்தால் நாம் உண்மையில் வெறுக்க வேண்டியது தமிழகத்தில் இருக்கும் பழைய மற்றும் புதிய வந்தேறிகளை என்று புரியும்.

ஆம்! இவர்களே நமது அரசியல் பிரச்சனைகளை எதிர்கொள்ள விடாமல் பல்வேறு சதிகள் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றி நம் இனத்தை பலவீனமாக்கி அண்டை மாநிலங்களாலும் இந்திய அரசாங்கத்தாலும் இலங்கை அரசாலும்  நமக்கு வரும் முக்கியமான பிரச்சனைகளை எதிர்கொள்ள விடாமல் செய்கிறார்கள். தமிழரை இனமாகத் திரள விடாமல் தொடர்ந்து குழப்பி திசைதிருப்பியபடி இருக்கிறார்கள். நம்மைச் சுரண்டி கொழுத்தபடி நம்மை முழுக்க அழிக்கும் நோக்கத்துடன் இருக்கிறார்கள்.
 தமிழகத்தில் தமிழர் தவிர அனைவருமே இவ்வாறு தான் இருக்கிறார்கள்.
 ஏன் இருக்கமாட்டார்கள்? பாகிஸ்தான் முதல் இலங்கை வரை தமிழர் மீது வெறுப்புடன்தான் இருக்கின்றனர். தமிழர்கள் அத்தனை பேரும் இவர்களால் பன்னெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.

 அப்படி நீங்கள் வந்தேறிகளை வெறுத்தால் வேறுவழியே இல்லை அது நாம் தமிழர் கட்சிக்குத் தான் சாதகமாக முடியும். சீமான் முதலமைச்சர் ஆவார். (அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும்) வந்தேறிகள் ஆதிக்கம் குறைந்து தமிழர் ஆதிக்கம் தலைதூக்கி நாம்  வலுவான மாநிலமாக அல்லது குறைந்த பட்சம் அண்டை மாநிலங்கள் போலவாவது பிரச்சனைகளை ஓரளவு சமாளிக்கும் வலிமை கிடைக்கும். அதை அஸ்திவாரமாக வைத்து நாம் வலுவான இனமாக மீண்டும் எழுச்சி பெற வாய்ப்பு கூட இருக்கிறது. 
 நமக்கு வேறு வழியும் தற்போதைக்கு இல்லை!

 இப்போது இதைச்செய்யவில்லை என்றால் நிலை இன்னும் மோசமாகும்! நாமும் பீகார் போல ஆகவேண்டியதுதான்! 
எனவே தமிழரே! தமிழ்தேசியத்தைக் கையிலெடுங்கள்! பார்ப்பனர், இசுலாமியரை காரணமில்லாமல் வெறுக்காதீர்கள்! தமிழராக இணைந்து எழுங்கள்! நமக்கு இனத்திற்கு வெளியே மத அடிப்படையிலோ, தேசப்பற்று அனிப்படையிலோ, மனிதநேய அடிப்படையிலோ  எந்த ஆதரவும் எப்போதும் கிடைக்கப்போவதில்லை! 
  நாம் கொத்தாக செத்து விழுந்தாலும் திரும்பிப்பார்க்க நாதி இல்லை! 2009 இனப்படுகொலை சான்று! 

அதேபோல..
 தமிழினப் பார்ப்பனரே! தமிழின இசுலாமியரே! நீங்களும் தமிழினமாக சிந்தியுங்கள்.
 தமிழகத்திற்கு வெளியே இருக்கும் பிராமணரோ அரபு நாடுவரை இருக்கும் முஸ்லிம்களோ உங்களை எப்போதும் ஏறெடுத்தும் பார்க்கப் போவது இல்லை! சக தமிழரை நம்புங்கள்! ஏனென்றால் தமிழ்ச் சமூகம் என்றுமே இசுலாமியரை வெறுத்ததில்லை! பார்ப்பனரை அறியாமையால் வெறுத்த காலமும் மாறிவிட்டது! (தமிழக பொதுமக்கள் பார்ப்பனரை வெறுத்ததே கிடையாது, பொறாமை கலந்த மரியாதையான பார்வையே உள்ளது)
 முதலில் நீங்கள் இரு துருவங்களாக ஒட்டாமல் இருக்காதீர்கள்! நீங்கள் நெருக்கமாகுங்கள்! நீங்கள் இருவரும் பிற தமிழருடன் மேலும் நெருக்கமாகுங்கள்!

 மருதுபாண்டியர் வாரிசு நாடுகடத்தப்பட்ட போது கப்பலில் உடன் சென்று தீவுச் சிறையில் மடிந்த ஜகந்நாத ஐயரும் சேக் உசேனும் போல நீங்கள் ஏன் இணைந்து ஓரினமாக செயலாற்ற முடியாது?!
 இன்று தமிழ்தேசியம் உங்களை ரத்த சொந்தமாக அரவணைத்துக் கொள்ள இரு கரம் விரித்து அழைக்கிறது.

 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இசுலாமியர் புது ரத்தம் பாய்ச்சவில்லையா?! அப்போது (இந்திய கிரிக்கெட் வீரர், பார்ப்பனர்) ஸ்ரீகாந்த் அகில இந்திய அளவில் குரல்கொடுக்கவில்லையா? 

மத்ததை ஒதுக்கி வைத்து தமிழராக வீறு கொண்டு எழுங்கள்!
உங்களைப் பார்த்து தமிழினமே பேரெழுச்சி கொள்ளும்! தமிழினத்தைத் திரட்டும் வலிமை உங்கள் இருவரிடம் இருக்கிறது!
இனமாகத் திரண்டு நிற்போம்! வருவது வரட்டும்!

நம் வலிமைக்கு முன் இந்தியா மட்டும் இல்லை இந்தியத் துணைக்கண்டமே கூட அடிபணிந்தே தீரும்! 

வரலாறு சான்று! 
 



 

No comments:

Post a Comment