Sunday 12 March 2017

மோடி அருள் கிடைத்த வந்தேறிகளுக்கு வந்த வாழ்வு

மோடி அருள் கிடைத்த வந்தேறிகளுக்கு வந்த வாழ்வு

மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் அவரிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்ட ரஜினி தன் மகளுக்கு ஐநாவின் நல்லெண்ணத் தூதர் பதவியை பெற்றுக்கொடுத்தார்.

"இதயம் நல்லெண்ணெய்" க்கு கூட தூதராக எவ்வித தகுதிகளும் இல்லாத ஐஸ்வர்யா
'ரஜினியின் மகள்' 'தனுஷின் மனைவி' என்பதைத் தவிற வேறு சிறப்பியல்புகள் எதுவும் இல்லை.
ஆனாலும் அவர் ஐநாவின் தூதர் ஆனது பற்றி சர்ச்சைகள் எதுவும் இல்லை காரணம் ஐநா என்பதே ஐஸ்வர்யாக்கள் தூதவராவதற்கான அமைப்புதான்.

ஐஸ்வர்யாவின் மாமனார் கஸ்தூரிராஜா ஐநாவின் மனித உரிமை ஆணையரே ஆகலாம்.
காரணம் ஐநாவின் மனித உரிமை ஆணையராக இருக்க அதவருக்கு இருக்கும்(?) தகுதியே போதும்.

'ஐநாவில் பரதநாட்டியம் ஆடப்போகும் தமிழ் பெண்' என்று கடந்த சில நாட்களாகவே பத்திரிகைகளில் பெரிய பெரிய விளம்பரச் செய்திகள் வந்தன.
யார் அந்த தமிழ் பெண் என்று பார்த்தால் ஐஸ்வர்யா தனுஷ்.
அடடா இவளல்லவா தமிழ்மகள்.
என்னவொன்று...
தந்தை மராத்தியர் கணவன் தெலுங்கர் அவ்வளவுதான்.

ஐநா கொண்டாடவிருந்த மார்ச் 8 மகளிர் தினத்தில் ஐஸ்வர்யா நடனம் ஆடுகிறார்.
அதாவது நல்லெண்ண தூதரே பரத நாட்டிய வாய்ப்பை வேறு யாருக்கும் வழங்காமல் எடுத்துக்கொண்டார்.
தன் நாட்டிய திறனைக் காட்ட.

டி.வி.எஸ். சுந்தரம் அய்யங்கார் குடும்பத்தில் இருந்து வந்தாலும் கூட அனிதா ரத்னம் பரதத்தில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைச் செய்தவர்,
அது போல நர்த்தகி நட்ராஜ் போன்றோர்களும் மிகச்சிறந்த தமிழகம் அறிந்த நடனக்கலைஞர்கள்.

ஆனால் இவர்கள் போன்ற யாருக்கும் வாய்ப்பு சென்றுவிடாமல் தானே அந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டு ஐஸ்வர்யா அசைவேயின்றி ஆடிய ஆட்டம் இருக்கிறதே.
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா படு மொக்கை.

நம்மூர் திருவிழாவில் பாம்பு டான்ஸ் ஆடுகிறவர்கள் கூட கை , கால் வளைத்து நெளிவுகளோடு அழகாக ஆடுவார்கள்.
பரதத்திற்கு ஏற்ற உடல் வாகோ பாவனைகளோ பயிற்சியோ கடுகளவும் இல்லாமல் மரக்கட்டை காற்றிலாடுவது போல அவர் 'போட்ட' நடனத்தை அதிர்ச்சியோடு அந்த அரங்கில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குடும்பம் குடும்பாக வந்தேறி மண்ணின் மைந்தருக்குக் கிடைக்கவேண்டிய மொத்த வாய்ப்புகளையும் பதவிகளையும் கைப்பற்றிக் கொள்ளும் இவர்களுக்கும் கலைக்கும் உலகநாடுகளின் சமாதானத்துக்கும் என்னதான் தொடர்பு?

ஐநா நீதி பெற்றுத்தரும் என்று இன்னமும் நம்பும் ஈழத்தமிழரை நினைத்தால்தான் கவலையாக உள்ளது.

(புலனச்செய்தி)

No comments:

Post a Comment