Friday 17 March 2017

தமிழே தெரியாமல் தமிழில் 24/25, அரசு வேலையைத் தட்டிப்பறித்த ஹிந்தியர்

'தமிழ் நஹி மாலும்' மாணவர்களுக்கு தமிழில் 25க்கு 24 மதிப்பெண்
தபால்துறைபோட்டித் தேர்வில் தமிழ் மாணவர்கள் புறக்கணிப்பு -செய்தி

தமிழில் 25க்கு 24 மதிப்பெண்கள் அரியானா மாணவர்கள் 'வாங்கினார்களா?' -செய்தி

ஹரியானா மாநிலத்தவர்கள் தமிழில் 25க்கு 24 மதிப்பெண்
தபால்துறை தேர்வில் முறைகேடு என ஆட்சியரிடம் புகார் - செய்தி

மதுரையில் நடந்த தமிழக தபால்துறை போஸ்ட்மேன் பணியிட நிரப்பலுக்கான தேர்வில் 300 காலியிடங்களுக்கு 50% வரை அரியானா மாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர்.
இவர்கள் போக மகாராஷ்ட்ர மாணவர்களும் பெருமளவில் தேர்வாகியுள்ளனர்.
இதில் பலர் தமிழில் 25க்கு 24 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.

தமிழர்கள் 25%கூட தேர்வாகவில்லை.
இவ்வாறு பலமுறை நடந்துவிட்டது.

சென்ற மாதம் தென்னக ரயில்வேயில் (தமிழகம் மற்றும் கேரளா உள்ளடக்கியது) ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு எழுதப்படிக்கவே தெரியாத பீகாரிகள் 276 காலியிடங்களில் 274 இடங்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஞ்சிய இருவரும் மலையாளிகள்.
ஒரு தமிழர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தமிழருக்கு எதிரான மத்திய அரசின் இந்த இனவெறிப்போக்கு தமிழகத்திற்கு வெளியே மத்திய அரசு வேலைகளில் தமிழர் இடம்பெற இயலாது தடுத்துவந்தது.

தற்போது தமிழகத்திற்கு உள்ளேயும் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளை தமிழருக்கு கிடைக்கவிடாமல் ஹிந்தியர் முறைகேடான வழியில் நிரப்பப்படுகின்றனர்.

No comments:

Post a Comment