தமிழகத்திலேயே இரத்ததானத்தில் தவ்ஹீத் ஜமாத் முதலிடம் ?
 சான்று தருவார்களா?
 தவ்ஹீத் அமைப்பினர் பலரும் இவ்வாறு சொல்கிறார்கள்.
 ஆனால் சான்று கேட்டால் ஓடிவிடுகிறார்கள்.
நானும் எவ்வளவோ தேடிப்பார்த்தும் ஒரு சான்று கூட கிடைக்கவில்லை.
 கிடைத்தவை இரண்டு.
1) இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இரத்ததானம் செய்ததில் முதலிடம். (சான்றிதழில் அவ்வாறு இல்லை)
2) சென்னை மாநகரத்தில் ரத்ததானம் செய்ததில் ஒருமுறை முதலிடம் 
 ஆனால் தவ்ஹீத் அடிமைகள் அள்ளிவிடுகிறார்கள்.
 மாநிலத்திலேயே முதலிடமாம்.
அதுவும் பத்து ஆண்டுகளாக முதலிடமாம்.
 மாநில அரசு தங்கப்பதக்கமா தருகிறதாம்.
 எந்த பத்திரிக்கையும் இதைப் போடுவதே இல்லையாம்.
 அது எப்படி தேசிய ரத்ததான நாளில், தலைநகரான சென்னையில், பல தொண்டு அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கையால் விருது வழங்குவது செய்தியில் வராமல் இருக்கும்? 
 
  எனக்கு தவ்ஹீத் ஜமா அத் ரத்த தானம் செய்ததில் மாநில அளவில்  முதலிடம் பிடித்த பத்திரிக்கை செய்தி அல்லது அளிக்கப்பட்ட சான்றிதழின் படம் தந்தால் போதும்.
 தவ்ஹீத் வெளியிட்ட பேட்டி, காணொளி, வலைதள பதிவு என்று எதுவும் கொண்டுவரவேண்டாம்.
 தக்க சான்று வரவில்லை என்றால் தவ்ஹீத் கூறுவது பொய் என்று இந்த பதிவையே சான்றாகக் காட்டுவேன். 
 (நேற்று முகநூலில் இட்டது இதுவரை பதில் கிடைக்கவில்லை)
Thursday, 23 March 2017
தமிழகத்திலேயே இரத்ததானத்தில் தவ்ஹீத் ஜமாத் முதலிடம் ? சான்று தருவார்களா?
Labels:
ஆதாரம்,
ஆதி பேரொளி,
இரத்ததானம்,
குருதிக்கொடை,
சான்று,
தவ்ஹீத் ஜமாஅத்,
பி.ஜே,
பீ.ஜே,
ரத்த தானம்,
ரத்ததானம்,
விருது,
வேட்டொலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment