Thursday 16 March 2017

தமிழ் மண்ணில் தெலுங்கர் குடியேற்றம் (வரைபடம்)

தமிழ் மண்ணில் தெலுங்கர் குடியேற்றம்
வரைபடம் (1931)

மேற்கண்ட படத்தில் முதல் வரைபடம் Eugene F.Irschick என்பவர் எழுதி 1969 ல் வெளிவந்த Politics and social conflict in south india எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்பது.

இதில் தமிழர் பெரும்பான்மைக்கு மத்தியில் ஊடுருவியுள்ள தெலுங்கர் பகுதிகளைப் புள்ளிகளாகக் குறித்துள்ளார்.

இரண்டாவது படம் அதே ஆசிரியர் Dialogue and history எனும் நூலில் 1994 ல் வெளியிட்டது.

இந்த வரைபடங்கள் 1931ல் ஆங்கிலேய அரசு நடத்திய கணக்கெடுப்பில் M.W.M Yeatts என்பவர் எடுத்த கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து வரையப்பட்டன ஆகும்.

இதன்மூலம் 1930ல் தெலுங்கர் 15% க்கு மேல் குடியேறியிருந்த பகுதிகளையும்
10 முதல் 15% வரை குடியேறியிருந்த பகுதிகளையும் அறிந்துகொள்ளலாம்.

(அவ்வளவு தெளிவாக இல்லாத படத்தை நான் சிறிது மேம்படுத்தி வரைந்துள்ளேன்.
10% க்கு குறைவாக தெலுங்கர் வாழ்ந்த பகுதி தெளிவாக இல்லை.
அதனால் அதை விட்டுவிட்டேன்)

எனக்குத் தெரிந்து தெலுங்கர் மேற்கண்ட பகுதியிலேயே இன்றும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகிறார்கள்.

தெலுங்கர் தொடர்ந்து தமிழகத்தில் குடிவந்த வண்ணம் உள்ளனர்
எனவே குறிக்கப்பட்டுள்ள பகுதி வடக்கில் சற்று விரிவடைந்து அப்பகுதியில் தெலுங்கர் சதவீதம் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.

இதிலே வடக்கே ஓசூரும் தெற்கே தூத்துக்குடி அருகே விளாத்தி குளமும் முழுக்க தெலுங்கு மயமாகிவிட்டது என்பதை இங்கே கூறவேண்டும்.

மேற்கே உதகமண்டலத்தில் தெலுங்கர் எண்ணிக்கை தமிழரை மிஞ்சிவிட்டது என்பதையும் அறியத்தருகிறேன்.

No comments:

Post a Comment