Showing posts with label கன்னடவர். Show all posts
Showing posts with label கன்னடவர். Show all posts

Tuesday, 28 October 2014

அணையை உடைத்து காவிரியை மீட்டவன்

அணையைத் தகர்த்து
காவிரியை மீட்டவன்

&&&&&&&&&&&&&&

மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173)
காவிரியைத் தடுத்தபோது
இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163)
அணையை உடைத்து
காவிரியை விடுவித்தான்.

இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும்
நாம் உருவாக்கியிருந்தோமானால்

காவிரியை கன்னடவன் விதிமீறி அணைகட்டித் தடுத்திருப்பானா?

அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?

அல்லது பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கைவிடுவானா?

https://m.facebook.com/photo.php?fbid=507610149342643&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

Monday, 13 October 2014

கர்நாடகாவில் தமிழனுக்கு வேலை கிடைக்குமா?

கர்நாடகாவில் தமிழனுக்கு வேலைகிடைக்குமா?

1999ஆம் ஆண்டு, ஏ.ஜி.ஓ என்ற நடுவணரசு நிறுவனத்தின் அலுவலர்களாக தேர்வானவர்களில் 26  தமிழர்கள் இருந்தனர்;
கர்நாடகாவில் அவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிந்ததும் கன்னடவர்கள் ஒன்றுதிரண்டு அங்கே தமிழர்களுக்குப் பதிலாகக் கன்னடர்களே அமர்த்தப்படவேண்டும் என்று வன்முறையில் ஈடுபட்டனர்.

ஏ.ஜி.ஓ அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வருவது தெரிந்ததும் முதல்நாள் வேலைக்குச் சென்றிருந்த தமிழர்கள் ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.
கூட்டமாக நுழைந்த கன்னடர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இது ஒரு நாளல்ல இரு நாளல்ல நாற்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.
கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்தனர்.
வெளியேயும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக செய்தனர்.

கர்நாடக சலுவளி, கர்நாடக கிரியா கேந்திரா, ராஜ்குமார் ரசிகர்கள், பா.ஐ.க, என்று கட்சி, இயக்க பேதமில்லாமல் மாநில மத்திய கட்சியைச் சேர்ந்த  எம்.பி, எம்.எல்.ஏ எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர், அறிக்கைவிட்டனர், கலந்துகொண்டர்.

எந்த ஊடகமோ, நாளிதழோ, மாந்தநேய அமைப்போ இதைத் தட்டிக்கேட்கவில்லை.
ஏஜிஓ மேலாண்மையே இதைக் கண்டிக்கவில்லை.

கர்நாடக தமிழர் இயக்கம் இதை வழக்குமன்றம் கொண்டுசென்றது.
இறுதியாக அந்த தமிழர்கள் வேறு நடுவணரசு நிறுவனத்திற்கு அனுப்பட்டு கன்னடர்களே அங்கே பணியமர்த்தப்பட்டனர்.

இது அறமா என்றால் உறுதியாக இல்லை எனலாம்.
தற்போதைய கர்நாடகத்தில் 22% தமிழர் நிலமாகும்.
அங்கே வசிப்பவர் பெரும்பாலும் தமிழரே.
பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற நகரங்களும் சத்தியமங்கலம், மாதேசுவரமலை போன்ற வளமான வனப்பகுதியும் காவிரி ஆறு பாயும் பகுதியும் இதில் அடங்கும்.

திப்பு சுல்தான் காலத்தில் பறிபோன நிலமானது மைசூர் சமஸ்தானமாக ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்து பிறகு 1956ல் மாநில பிரிவினையின்போது கன்னடவரிடம் பறிபோனது.
தற்போதைய கர்நாடகத்தில் 50%கூட கன்னடர்கள் கிடையாது.
ஆனால், அவர்கள் தமது தாய்நிலத்தைப்போல இருமடங்கு நிலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை அடக்கி ஆண்டுவருகின்றனர்.
அங்கே 30%க்கும் மேல் தமிழர் இருந்தும் இனவழி அடிமைத்தனத்துக்கு முதல் இலக்காக ஆளாகியுள்ளனர்.
(வீரப்பனார் இருந்தவரை தமிழக எல்லையோரம் கொஞ்சம் விழிப்புடன் இருந்தது, இப்போது அதுவும் இல்லை).
அங்கே எங்கும் கன்னடம் எதிலும் கன்னடவர் என்ற இனவெறி முழக்கமே கேட்கிறது.

இங்கே தமிழகத்தில் என்ன நிலை?

அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவனும் வந்தேறியாக இருக்கிறான்,
வந்தேறி ஒவ்வொருவனும் அதிகாரத்தில் இருக்கிறான்.

( கன்னடன் சுட்டுக் கொன்ற தங்கத் தமிழர்
https://m.facebook.com/photo.php?fbid=412586072178385&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
வீரப்பனார் பிடித்த கன்னடக் குடுமி
https://m.facebook.com/photo.php?fbid=448921765211482&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 ).

Saturday, 13 September 2014

வேற்றினத்தாரைக் குடியமர்த்துதல் (1/2)

வேற்றினத்தாரைக் குடியமர்த்துதல்

தமிழியம் எதிர்கொண்டுள்ள தலையாய சவால்களில் ஒன்று தமிழகத்திற்கு உள்ளேயே வாழும் வேற்றினத்தாரை என்னசெய்வது என்ற குழப்பம்.

தற்போதைய தமிழகத்தில் குடிபுகுந்துள்ள வேற்றினத்தாரில் 60%பேர் தற்போது குடிவந்தவர்களே; மீதி 40%பேர் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே வாழ்ந்துவருவோர் ஆவர்; இந்த மக்களை கேடயமாக்கிக்கொண்டுதான் மற்ற 60% பேர் வாழ்கிறார்கள்.

நாய்க்கெர் ஆட்சியின்போது தமிழகத்தில் குடிபுகுந்த வேற்றினத்தார் வீட்டிற்குள் வேறுமொழியும் வெளியே தமிழும் பேசிவோராவர்;
இவர்கள் தம்மைத் தாமே தமிழர் என்று அடையாளப்படுத்துகின்றனர்;
இவர்களைப் பற்றி நான் அறிந்தவரையில் கூறுகிறேன்.
*ஆந்திராவின் அசல் தெலுங்கர்களும் கர்நாடக அசல் கன்னடர்களும் இவர்களைத் தம் இனமாக எண்ணுவதில்லை
*இவர்கள் பேசும் மொழி அசல் மொழியுடன் 70%மட்டுமே ஒத்துப்போகிறது
*இவர்கள் தாய்மொழியை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக தமிழ்வழிக் கல்வி கற்போராக உள்ளனர்
*இவர்கள் தமிழ் மொழி மீது பற்றுகொண்டவர்களாக உள்ளனர்
*இவர்களது வாழ்க்கைத் தரமானது தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தை ஒத்தே உள்ளது; தமிழ் மக்கள் சந்திக்கும் அத்தனை இடர்களும் இவர்களுக்கும் உள்ளது
*இவர்கள் தம் சாதி தாண்டி இனமாக ஒன்றிணைய இயலாதவாறு பல்வேறு பிரிவுகளாக சிதறி வாழ்கின்றனர்
*தமிழக அரசியல்வாதிகள் தம்மை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவதை இவர்கள் அறிந்திருக்கவில்லை.
நிற்க; மேற்கண்டவை இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் உட்பகுதியில் வாழும் வேற்றினத்தார் பற்றிக் கூறியவை என்பதை நினைவில் கொள்க.
இப்போது மேலும் கூறுகிறேன்.
*இவர்கள் தமிழர்களாகத் தம்மை அடையாளப் படுத்துவதால் இவர்கள் மூலம் மற்ற இனத்தவர் தமிழருக்குள் ஊடுருவ வாய்ப்பளிக்கின்றனர்
*இவர்கள் தமிழின எழுச்சிக்கு என்றும் தடையாகவே இருப்பார்கள்; அதில் தவறில்லை; இது ஒரு பாதுகாப்பு உணர்வாலேயே ஆகும்.
*வேற்றினத்தார் இவர்களைத் தமிழருக்கு எதிராகத் திருப்ப அதிகநேரம் ஆகாது
*இவர்கள் இன்றும் திராவிடக் கட்சிகள் மூலம் வலுவான நிலையில் தமது ஆதிக்கத்தை மறைமுகமாகத் தக்கவைத்துள்ளனர்.
சரி. மீதி 60% வேற்றினத்தார் 1900களுக்கும் பிறகு குடிபுகுந்தவர்கள்; இவர்கள் ஒரு பெரிய பிரச்சனை இல்லை; இவர்கள் தம் தாய்நிலத்துடன் தொடர்பில் உள்ளனர்; திராவிடக் கட்சி மூலம் தமிழகத்தை முடிந்த அளவு சுரண்டிவிட்டு ஏதாவது எதிர்ப்பு எழுந்தால் தமிழகத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்; அதேபோல 60ஆண்டுகளாக கேரள, கன்னட, ஆந்திர மாநிலங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதியில் வாழும் தமிழர்கள் முற்றாக இனவொதுக்கலுக்கு ஆளாகி வருகின்றனர்; சிலர் இன அடையாளத்தை மறந்துவருகின்றனர்; ஆனால், அடுத்த 50ஆண்டுகளுக்குள் தமிழினம் எழுச்சிபெறுமேயானால் தாமும் உணர்வுபெற்றுவிடுவார்கள்;
எவ்வளவு விரைவாக நாம் எழுச்சி பெறுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு நல்லது;
ஈழத்தில் இந்தப் பிரச்சனை இல்லை; அங்கே தமிழர் எழுச்சியானது தமிழின உணர்வை மீட்டெடுத்து இன்று உலகத் தமிழினமே விழிப்பு பெற வழியேற்படுத்தியுள்ளது; அங்கே யார் தமிழன் என்று முட்டாள்த்தனமாக யாரும் கேட்பதில்லை;
எந்தத் தமிழனுக்கும் தான் ஒரு தமிழனா என்று ஐயம் வருவதில்லை; தமிழினத்தைக் குழப்புவோரே இம்மாதிரியான வேடிக்கையானக் கேள்விகளைக் கேட்கின்றனர்.

தமிழகத்தில் இருநூறாண்டுகளாக வாழ்ந்துவரும் தெலுங்கு, உருது, மராட்டி, மர்வாரி, சௌராஷ்ட்டிர, கன்னட, மலையாள மக்களே!
உங்களால் தமிழருக்கு வரும் சிக்கல் எல்லாமே நீங்களும் தமிழராக அடையாளப்படுத்திக் கொள்வதால்தான் வருகிறது;
நீங்கள் என்னதான் எங்கள் உற்ற நண்பராக இருந்தாலும் உடன்பிறப்புகள் ஆக முடியாது;
நீங்கள் தமிழர்களுக்கு நன்மைசெய்ய விரும்பினால் நீங்களும் உங்களைத் தமிழர் என்று இனியும் கூறாதீர்கள்;
பிற இனங்களால் தமிழினம் எத்தனையோ அவலங்களைச் சந்தித்தபோதும் தமிழர்கள் தம் மத்தியில் சிறுபான்மையாக வாழும் வேற்றினத்தாரைத் துன்புறுத்தியதில்லை;
தமிழர்கள் இன்றுபோல் என்றும் இருப்பார்களா என்று தெரியாது; ஆனால், தமிழின எழுச்சிக்கு நீங்கள் தொடக்கத்திலிருந்தே உதவுவீர்களேயானால் வருங்காலத்தில் உங்கள் சந்ததிகள் அச்சமின்றி வாழலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
தமிழின மக்களே!
நம் மத்தியில் வாழும் சிறுபான்மையினரை சரியாக நடத்தினால்தான் மற்ற நாடுகளில் குடியேறியுள்ள நம் மக்கள் சரியாக நடத்தப்படுவார்கள்; நாம் என்னதான் சலுகை வழங்கினாலும் நேர்மையாக நடத்தினாலும் வேற்றினத்தார் நமது இனவெழுச்சியை எதிர்க்கவே செய்வார்கள்; இன்றைய இனவெழுச்சி நாளைய பேரினவாதமாக மாறாது என்று எந்த உறுதியும் கிடையாது அல்லவா; இருக்கும் எல்லாப் பிரச்சனைக்கும் வேற்றினத்தாரே காரணம் என்று நினைக்காதீர்கள்;
ஒரு தெலுங்கன் வந்து சொல்லித்தான் நீங்கள் கையூட்டு(லஞ்சம்) வாங்குகிறீர்களா?
ஒரு கன்னடவன் வந்து சொல்லித்தான் நீங்கள் ஆங்கில வழியில் கற்கிறீர்களா?
ஒரு மலையாளி வந்து சொல்லித்தான் நீங்கள் சாதிக்கலவரங்களில் ஈடுபடிகிறீர்களா?
ஒரு சிங்களவன் வந்து சொல்லித்தான் நீங்கள் காசுவாங்கி வாக்கு போடுகிறீர்களா?
ஒரு ஹிந்தியன் வந்து சொல்லித்தான் நீங்கள் குடிகாரர்களாக ஆனீர்களா?
இனப்பற்றுள்ள மற்ற இனமக்களிலும் ஏழைகளும் தாழ்த்தப்பட்டவர்களும் போதைக்கு அடிமையானவர்களும் விபச்சாரம் செய்பவர்களும் சமூக எதிரிகளும் கடத்தல்காரர்களும் இருக்கவே செய்கின்றனர்; கண்ணை மூடிக்கொண்டு வேற்றினத்தவரை எதிர்ப்பது இப்போது சரியாகப் படலாம்; நாளை நம் இனத்தவனே அதிகாரத்துக்கு வந்து இன்று வேற்றினத்தான் செய்வதை நமக்குச் செய்யலாம்; அதற்காக இனவெழுச்சி பெறக்கூடாது என்று கூறவில்லை; கொள்ளைபோவது என்றாகிவிட்டால் ஏன் ஒரு வேற்றினத்தானிடம் கொள்ளைபோகவேண்டும்? நம்மினத்தானிடமே கொள்ளைபோவோமே;அதுவே மேல்;
ஆனால், இனப்பற்று இருந்தாலே போதும் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நான் கூறமாட்டேன்; இன்று நம்மிடம் இருக்கும் பெரும்பான்மையான குறைகள் இனப்பற்று கொண்டால் காணாமல் போகும்; ஆனால், எல்லாப் பிரச்சனைகளுக்கும் இனப்பற்றே தீர்வு என்றாகாது; பசியோடு நீர் அருந்த வந்தவன் தண்ணீரில் விழுந்துவிட்டால் முதலில் அவனுக்குத் தேவை மூச்சு; அதன்பிறகுதான் அவனுக்கு உணவு கொடுக்கலாமா? உடை கொடுக்கலாமா? நீச்சல் கற்றுத்தரலாமா? என்று விவாதம் செய்யவேண்டும்.
இன்று தமிழினத்துக்கு முதல்தேவை விடுதலை; அதாவது படைவலிமையோடு நம்மைக் காக்கும் ஒரு அமைப்பு (ஐநா அங்கீகாரம் என்பது முழுவிடுதலையாகாது); முதலில் மூழ்கிக்கொண்டிருக்கும் இனத்திற்கு மூச்சைக் கொடுப்போம் அதன்பிறகு மற்றவைகளைப் பார்க்கலாம்.
மதம்,சாதி, சுரண்டல், அரசியல், பொருளாதாரம். சமூக வேறுபாடு என இருக்கும் பிரச்சனைகள் அப்படியே இருக்கட்டும்; சாதி, வட்டாரம், மதம், பால், நாடு, கொள்கை என இருக்கும் பிரிவுகள் அப்படியே இருக்கட்டும்;
நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவரோ, எந்த சாதியைச் சேர்ந்தவரோ, எந்த பாலினமோ, எந்த நாட்டில் வாழ்பவரோ, எந்த கொள்கையைப் பின்பற்றுபவரோ அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை; நீங்கள் தமிழர் என்றால் தமிழின விடுதலைக்காக உழைக்கவேண்டும்; அதைச் செய்யாமல் நீங்கள் எந்த தீர்வை முன்வைத்தாலும் அது வீணாகவே ஆகும்.
சரி இப்போது வேற்றினத்தாரைக் குடியமர்த்துவது பற்றி எனது கருத்துகளை முன்வைக்கிறேன்;
தமிழ்த் தாய்நிலம் படையரண்களால் காவல்போடப்பட்டதும் தமிழ்க் குடியரசிலேயே நீடிக்க விரும்பும் வேற்றினத்தாரை படத்திலுள்ளவாறு ஒரு வளைய அமைப்பில் குடியமர்த்தவேண்டும்;
அதாவது நடுவில் தமிழர் அவர்களைச் சுற்றி தடிமனான வளையம் போன்ற பகுதியில் ஒருவரோடு ஒருவர் கலக்காமல் வேற்றினங்கள் குடிவைக்கப்படவேண்டும்;
நடுப்பகுதியில் தலைநகரம், தலைமைச் செயலகம், கலை வளர்ப்பு, ஓய்வு தளங்கள், கட்டளைப் பீடம், தகவல் மையம், தமிழ்த்தாய்க் கோவில்கள், மாவீரர் இல்லம் என முக்கியமான இடங்கள் இருக்கவேண்டும்; இந்த நடுப்பகுதியில் 80%க்கு குறையாமல் தமிழர்கள் இருக்கவேண்டும்;
இந்த நடுப்பகுதியைச் சுற்றி பெட்டி பெட்டியாக வளையத்தில் வேற்றினத்தாரைக் கலவாமல் குடிவைக்கவேண்டும்; அப்பகுதிகளில் அவ்வினத்தாருக்கு மாநில உரிமைகள் வழங்கவேண்டும்; மொழி,மதம்,காவல், கருத்து,பேச்சு ,கல்வி, அரசியல்,இடவொதுக்கீடு, அரசுவேலை என அப்பகுதி அவ்வின மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும்;
இந்த வளையத்தில் 30%க்கு குறைவாகவே தமிழர்கள் குடியேறலாம்;
வெளிப்பகுதி சற்று பெரிய பகுதி இதில் 60% தமிழர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

Thursday, 10 July 2014

வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி



வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி

$$$$$$$$$$$$$$$$$$

வீரப்பனார் கடத்தல்காரனாக இருந்தபோதே தமிழ் மக்கள் மீது பற்றுள்ளவராக இருந்தார்; 1993ல் வீரப்பனாரைத் தேடுகின்ற பெயரில் அதிரடிப்படை மக்களைக் கொடுமைப்படுத்துவது உச்சநிலையை அடைந்திருந்தது; வீரப்பனார் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் தமது குடும்பத்திற்கும் எதுவும் செய்யாமல் இருந்ததால் அவரது மனைவி இருபெண்பிள்ளைகளுடன் புடவை விற்று பிழைத்துவந்தனர்; இத்தனைக்கும் அவர் கோடிகோடியாக சம்பாதித்து வந்தார்; 1993க்குப் பிறகு அல்லல் படும் மக்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தார்; 1994களுக்குப் பின் கடத்தல்தொழிலை விட்டுவிட்டார்; அதிலிருந்து அவர் வனத்துறை அல்லது காவல்துறையினரை கடத்திச்சென்று பணம்பெற்று விடுதலை செய்து அந்த பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளித்தார்; அவரால் கடத்தப்பட்டவர்கள்,

1994 சிதம்பரம் (டிஎஸ்பி), தமிழகக் காவல்துறை.
1995 மூன்று தமிழக வனத்துறையினர்
1997 பத்து கர்நாடக வனத்துறையினர்
1997 ஆறு பந்திப்பூர் புலிகள் சரணாலய ஊழியர்கள்

ஆயுதங்கள் குறைந்தபோது 1998ல் வெள்ளித்திருப்பூர் காவல்நிலையத்தில் ஆயுதக்கொள்ளை நடத்தினார்.

சிறிதுகால அமைதிக்குப்பின் ஜூலை மாதம் 2000ம் ஆண்டு.

தமிழர் நாடு விடுதலைப் படை(TNLA) தலைவர் மாறன் வீரப்பனார் கட்டுப்பாட்டுப் பகுதியில் தமது படையைக் கட்டமைக்கும் பணியில் இருந்தார்; வீரப்பனாரும் மாறனாரும் கலந்து பேசி திட்டம் ஒன்றை வகுத்தனர்; கன்னடவரால் 'பெரியண்ணன்' என்று அழைக்கப்படுபவரும், தாதா சாகேப் பால்கே விருதுபெற்றவரும், கன்னடத்தை கட்டாயப்பாடமாக்க முழு கர்நாடகாவையும் திரட்டிப் போராடியவரும், கன்னட இனவெழுச்சிப் பாடல்களைத் தன்குரலால் பாடியவருமான திரு.இராஜ்குமாரை கடத்துவதாக திட்டம்; அப்போது அவருக்கு 72 அகவை; அவர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்; அவர் பங்காற்றிவந்த கன்னட இயக்கங்கள் தமிழரையே குறிவைத்து தாக்குபவை ஆனால் அவர் நேரடியாக எந்த அரசியல் விளையாட்டும் செய்ததில்லை; ஆனால், கன்னட இனத்தின் பெருமையான வடிவமாக அவர் அறியப்பட்டார்;
அவரைக் கடத்துவதுதான் கன்னட இனத்தின் தலையில் கைவைத்ததுபோல் இருக்கும்;
கடத்தி பரபரபாக்கி தீங்கில்லாமல் விடுதலை செய்வது என்று முடிவானது.

தோட்டகாஜனூரில் இருந்த தனது தோட்டத்துமாளிகையில் ஓய்வாக இருந்தார் ராஜ்குமார்.

30ஜூலை2000 அன்று இரவு 10மணியளவில் கதவு தட்டப்பட்டது; வெளியில் இரும்புக்கதவைத் தாண்டி வீடுவரை யார்வந்தது என்று எண்ணியபடி கதவை ராஜ்குமாரின் மனைவி திறந்தார்; வெளியே கொட்டும் மழையில் 10,12 துப்பாக்கியேந்திய ஆட்களுடன் வீரப்பனார் நின்றிருந்தார்; அப்பெண்மனி அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்; வீரப்பனார் கன்னடத்தில் "ஐயாவைப் பார்க்கவேண்டும்" என்றபடி உள்ளே நுழைந்தார்; ராஜ்குமார், அவரது மருமகன்,அவரது உறவினர், துணை இயக்குனர் ஒருவர் என நான்குபேரைத் தன்னோடு அழைத்துக்கொண்டு போகும்போது ராஜ்குமார் துணைவியாரிடம் அவரது கணவருக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் ஒரு ஒலிநாடாவைக் கொடுத்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் அதைக் கொடுத்துவிடும்படியும் கூறிவிட்டு சென்றார்; அன்றிரவே பரபரப்பு கிளம்பிவிட்டது;
விடிந்ததும் விடியாததுமாக எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக முதல்வரைச் சந்திக்க சென்னைக்கு பதறியடித்து ஓடினார்; மறுநாள் கர்நாடகாவே கதிகலங்கிப்போனது; கன்னடத் திரைப்படத்துறை வேலைநிறுத்தம் செய்தது;
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன; தமிழக பதிவு வாகனங்கள் எண்களைப் பார்த்ததும் அடித்துநொறுக்கப்பட்டன;
பெங்களூரில் தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன; மாண்டியா அருகில் இரண்டு தொடர்வண்டிகள் நிறுத்தப்பட்டன; பேருந்துகள் கொளுத்தப்பட்டன; ஆனால், உயிர்ப்பலி எதுவும் இல்லை, ராஜ்குமாரை விடுவித்தபிறகும் கூட;
காரணம் வீரப்பனார் கையில் அவர்கள் குடுமி இருந்தது;
சோர்ட் சாலையில் (chord road) ஒருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார் அது ராஜ்குமார் கடத்தப்பட்டதன் எதிரொலியா என்பது உறுதியாகவில்லை;
வீரப்பனார் அனுப்பிய ஒலிநாடாவில் "கர்நாடக மற்றும் தமிழக முதலமைச்சர்களுக்கு வணக்கம், நான் வீரப்பன் பேசுவது என்னவென்றால், என் தோழர் என் கோரிக்கைகளை வாசிப்பார்" என்கிறார். அதன்பிறகு தநாவிப தலைவர் மாறன் கோரிக்கைகளை வாசிக்கிறார்.
அவைகளில் முக்கியமானவை,

1. காவிரிப் பிரச்சினையை அனைத்துலக நீதிமன்றம் விசாரித்து முடிவு கூறவேண்டும்.
2.தமிழக சிறைகளில் உள்ள தமிழர் நாட்டு விடுதலைப் படை, தமிழர்நாடு மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்துபேரை தமிழகஅரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3.வாச்சாத்தி,சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு ஆகியோருக்கு நஷ்டஈடு தரவேண்டும்.
4. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழ்
வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும்.
அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்.
5. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்களை
விடுவிக்க வேண்டும்.
அவர்களுக்கு உறுதியளித்தபடி
நிவாரணம் வழங்க வேண்டும்.

(தொடரும்)


https://www.facebook.com/photo.php?fbid=448921765211482&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739