Saturday 19 December 2015

கையாலாகாதவன்னு நேரடியா சொல்லிட்டு போகவேண்டியதான?!

அட என்னங்க நீங்க 60 வருசம் முன்னால முடிஞ்ச விசயத்த இப்ப கெளறிகிட்டு!?

திருப்பதி நம்மளுதாம்
நெல்லூர் நம்மளுதாம்
பெங்களூர் நமாமளுதாம்
மைசூர் நம்மளுதாம்
திருவனந்தபுரம் நம்மளுதாம்
பாலக்காடு நம்மளுதாம்

பிரிஞ்சுபோகும்போதே தடுத்திருக்கணும்.
இப்ப ஒப்பாரி வச்சு என்ன பலன்?
இருக்குறதயாவது காப்பாத்த பாருங்க.

----------
அடடே வந்துட்டாரு கொடவள்ளலு!
ஒங்க தாத்தா சாகும்போது எழுதிவச்ச நெலம் ஒரு கிரவுண்ட் ஒனக்கு சொந்தம்னு 60 வருசம் கழிச்சு தெரிஞ்சா சும்மா விட்ருப்பியா?
ஒரு சதுர மீட்டர் நெலம் என்ன ரேட்டு விக்கிது?!
நீ என்னனா 70,000 சதுர கிலோ மீட்டர் நெலத்த விடணும்னு சர்வசாதாரணமா சொல்ற?!
இப்ப இருக்குற தமிழ்நாட்டுல பாதிக்கு சமமான அளவுடா அது.

தெருவுற போறவனுக்கு சும்மா பத்து ரூவா குடுப்பியா?

திருப்பதியிலயும்
கோலார் தங்கசுரங்கத்துலயும்
திருவனந்தபுரம் கோவில்லயும் தங்கமா கொட்டுதே
அவ்வளவையும் வாரிகொடுத்துட்டு விளக்கம் வேற கேக்குறியாக்கும்?!!

இல்ல, தெலுங்கு கன்னட மலையாளிகள கண்டாலே நடுங்குது,
போராட நெஞ்சுல தைரியமில்ல,
நா ஒரு கையாலாகாதவன்னு நேரடியா சொல்லிட்டு போகவேண்டியதான?!
அதென்ன பெரிய யோக்கியன் மாதிரி சீன் போடுறது?!

அதென்ன ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக மண்ணப் பத்தி  எவனுமே எந்த இயக்கமுமே பேசவேமாட்டேங்கிறீங்க?

ஓகோ காரணம் பத்தலயோ?

அக்கா தங்கச்சிய கற்பழிக்குற வர பொறுத்திருந்து பொங்கியெழ நீங்க என்ன சினிமா ஹீரோவா?

ஈழத்துல அதுவும் நடந்தாச்சே
இன்னுமா முழிச்சிக்கல?!

No comments:

Post a Comment