Showing posts with label திராவிட எதிப்பு. Show all posts
Showing posts with label திராவிட எதிப்பு. Show all posts

Friday, 11 October 2019

திராவிட கட்சிகளில் சாதியம் -3



திராவிட கட்சிகளில் சாதியம் -3


 மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழகத்தார் பட்டியல்.

 இதில் தமிழரல்லாதார் மஞ்சள் வண்ணம் இட்டு காட்டப்பட்டுள்ளனர்.

 தமிழரல்லாத வந்தேறி சாதிகளில் மாநில மக்கட்தொகைஙயில் 0.12% இருக்கும் இசை வேளாளர் மிக அதிகம் பயனடைந்துள்ளனர்.

 அடுத்ததாக 4.43% உள்ள நாயுடு (நாயக்கர்) அதிகம் பயனடைந்துள்ளனர்.

 வந்தேறிகளுக்கு அதிகம் வாய்ப்பளித்தது தி.மு.க ஆகும்.
 இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் உள்ளது.

 [நன்றி: அச்சமில்லை]

Sunday, 12 July 2015

செங்கோட்டை வாஞ்சி

செங்கோட்டை வாஞ்சி

1911ல் ஆஷ் துரையை (Lord Ashe) சுட்டுக்கொன்றார் வாஞ்சி .

ஆஷ்துரையின் பேரனான ராபர்ட் ஆஷ் வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு கொடுத்தனுப்பிய கடிதம்...

"துயரமும் பெருமிதமும் ஒருங்கே அமைந்த இன்றைய தினத்தில் ராபர்ட் வில்லியம் ஆஷ் பேரனுமாகிய கொள்ளுப் பேரன் பேத்திகளுமாகிய நாங்கள் வாஞ்சி ஐயரின் குடும்பத்திற்கு எங்கள் ஆறுதலையும் நட்பையும் வெளிபடுத்தும் முகமாக இச்செய்தியை விடுக்கிறோம்.
லட்சிய நோக்கம் மிகுந்த அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சி.
வாஞ்சியின் விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது.
அரசியல் களத்தில் தீவிரமாக பாடுபடுபவர்கள் அவர்கள் ஆட்சியாளர்களானாலும் சரி ஒடுக்கப்படுபவர்களானாலும் சரி, பெரும் பிழைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகின்றது.
இன்றைக்கு உயிர் வாழும் வாய்ப்பைப் பெற்ற நாம், பழையவற்றை மறந்து சமாதானமாக உடன்வாழ்தல் இன்றியமையாதது.
அன்புடன்
ஆஷ் குடும்பத்தினர்,
அயர்லாந்து"

வ.உ.சிதம்பரனார் தமது தன்வரலாற்று நூலில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.

‘கலெக்டர் ஆஷுவைத் தெரியுமா?’ என்றான்.
‘நன்றாகத் தெரியும்’ என்றேன்.
‘எப்படி?’ என்றான்.
‘யான் இவண் ஏகியதற்கும் தூத்துக் குடியில் தோன்றிய ‘சுதேசிக் கப்பல் கம்பெனி’ செத்தொழிந் ததற்கும் அவன்கா ரண’மென் றறைந்தேன். ‘
ஒருவன் அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச் செத்தான்’ என்றான்.
‘நல்லதோர் செய்தி நவின்றாய் நீ நலம் பெறுவாய்’ என்றேன்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி,
தூத்துகுடி துறைமுகத்தில் கொடிகட்டிப்பறந்த ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்தை எதிர்த்து சொந்தமாகக் கப்பல் விட்டார்.
ஆங்கிலேய தொழிற்சாலைத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டம் செய்து உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.
இவற்றை சமாளிக்க ஆங்கில அரசு ஏவிவிட்ட அதிகாரிதான் ஆஷ்.
வ.உ.சி.யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் பிள்ளை
ஆஷ் கொலைச் சதி வழக்குக்கு அப்ரூவரானார்.
இந்தியாவை நாசப்படுத்தும் வெள்ளையராட்சியை ஒழிக்க வேண்டுமானால் எல்லா வெள்ளையரையும் கொல்ல வேண்டுமென்றும்,
1908இல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியை நசுக்குவதில் தலைமையேற்ற ஆஷைக் கொல்ல வேண்டுமென்றும் வாஞ்சி கூறியதாக சோமசுந்தரம் பிள்ளை வாக்குமூலம் அளித்தார்.

1980களில் மணியாச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு வாஞ்சியின் பெயரை வைக்கவேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.
(தற்போது நிறைவேறிவிட்டது)
உடனே திராவிட இயக்கங்கள் ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்கள்.
அதில் வாஞ்சி தற்கொலை செய்துகொண்ட பிறகு அவர் சட்டைப்பையில் கிடைத்த கடிதத்தின் சில வரிகள் அளிக்கப்பட்டிருந்தன.
"எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை."

இந்துமத வெறியன் என்று கூறினால்கூட பொறுத்தமாக இருந்திருக்கும்.
ஆனால் வழக்கம்போல சாதிவெறி என்று ஆரம்பித்தது திராவிட இயக்கம்.
இதில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜை, பஞ்சமன் அதாவது கீழ்சாதிக்காரன் என்று சாதிவெறிபிடித்த பார்ப்பானாகிய வாஞ்சி கூறியுள்ளதாகவும்
ஆஷ் துரை நல்லவரென்றும்
அவர் குற்றாலத்தில் அனைத்து சாதியினரும் குளிக்க உத்தரவிட்டார் என்றும்
அவர் கடையத்தில் (தெலுங்கு)அருந்
ததிப்பெண் ஒருவர் பிள்ளைபேறு வலியால் துடித்தபோது அவரை அக்கிரஹாரம் வழியே பார்பனர்களை எதிர்த்து மருத்துவமனை கொண்டுசென்றார் என்றும் கூறப்பட்டிருந்தது.

'George V' என்பதை வடமொழியில் 'ஜார்ஜ் பஞ்(ச்)சம்' என்று எழுதுவர்,
வாஞ்சி அதைத்தான் எழுதியுள்ளார்.

ஆங்கிலேயருக்கு எதிரான திருநெல்வேலிக் கலவரத்தை மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கி ஒடுக்கிய ஆஷ் நல்லவனாம்,
வெள்ளையனை எதிர்த்து ஒரு வார்த்தைகூட எப்போதுமே பேசாத எழுதாத ஆங்கில அடிமைகளின் கூடாரமான திராவிட இயக்கம் கூறுகிறது.
குற்றாலத்தில் அனைத்து சாதியினரும் குளிக்க உத்தரவிட்டாராம் அதனால் கொன்றுவிட்டார்களாம்.
அருந்ததியப் பெண்ணை கடையம் அக்கிரஹாரம் வழியே கொண்டுசென்றாராம்.
அப்போது பார்ப்பனர்கள் தடுத்தார்கள்.
அங்கே 16வயது வாஞ்சி இருந்தாராம்.
அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் ஆஷ்துரையை சுட்டாராம்.

1906ல்தான் ஆஷ்துரை தென்தமிழம் வருகிறார்.
அப்போதே வாஞ்சிக்கு 20வயது.

அந்த துண்டுபிரசுரம் பல்வேறு வடிவங்களில் சுழன்று சுழன்று இன்று ஒரு சுவையான கதையாக மாறிவிட்டது,
"ஆஷ் துரை மாலை நேரத்தில் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் உள்ளவர்.
அப்படி ஒருநாள் வழக்கமாக போகும் ராஜபாட்டைவிட்டு விலகி வேறு பாதையில் போகிறார்.
உடன் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தரை பின்னால் தனது சாரட்டை மெதுவாக குதிரைகளை நடத்தி கூட்டிவரச்சொல்லிவிட்டு.நடந்துக
ொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது.
நடைப்பயிற்சியில் இருந்தவர் ஓசை வந்த திசை நோக்கினார் . நாலைந்து குடிசைகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் இருந்து ஓசைவந்ததை உணர்ந்த ஆஷ் துரை அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
பின்னால் குதிரகளை நடத்தி அழைத்துவந்த ராவுத்தர் ஓடிவந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார்.
ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது" என்றும் சொல்லுகிறார்.
ஓரளவு தமிழ்நாட்டு ஜாதிய சூழல் விளங்கிய ஆஷ் துரை,
ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வருவாயா எனக்கேட்கிறார்.
"சரி துரை நான் போய் பார்க்கிறேன் என்றபடி சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார் " மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம்,
பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார்.
ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க , அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார்.
அவரை தடுக்க முனைந்த ராவுத்தரின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது.
உள்ளே சென்று பார்த்து வந்த துரையின் மனைவி உடனே மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை.
ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார்.
அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான் சென்றாகவேண்டும்.
சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள்.
வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள்.
வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் .
இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.
குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார்.
வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது.
பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள்
"ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்கிறார்கள்.
வழிவிட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே வண்டியைக்கிளப்ப
ு என்று உத்தரவிடுகிறார்.
மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது.
அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள்.
ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.
சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது.
இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது.
இனி மறைந்திருக்கும் வரலாறுகள் ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை"

வழக்கம்போல கதையாக ஆரம்பித்து கட்டுரையாக விரிக்கும் அதே சத்தற்ற திராவிடக் கட்டுரை.

செங்கோட்டையில் பிறந்த வாஞ்சி கடையத்திற்கு எப்படி வந்தார்?
அந்த 16வயது இளைஞன்தான்
வாஞ்சி என்று வோனிஸ் நேரில் பார்த்திருப்பாரோ?
சேரியில் இருந்து மருத்துவமனை போக வேறுவழியே இல்லையாம்.
துண்டு பிரசுரத்தில் ஆஷ் கையில் துப்பாக்கி இருந்தது.
இப்போது அது சவுக்காக மாறிவிட்டது.
வாஞ்சி ஆஷ்துரையைச் சுடும்போது உடன் வந்த மாடசாமி பிள்ளை பார்ப்பனர்தானோ?
ஆஷ்துரை கொலைவழக்கில் பாரதியை தேடியபோது அவர் பாண்டிச்சேரிக்குள் சென்றார்.
ஏனென்றால் பாரதி சொல்லித்தான் வாஞ்சிக்கு பாரதிதாசன் பாண்டிச்சேரியில் இருந்து துப்பாக்கி வாங்கி அனுப்பியதாக 'சிரிக்கும் சிந்தனைகள்' நூலில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதியேற்காததால் பாரிஸ்டர் பட்டத்தையே உதறித்தள்ளிய வ.வே.சு.ஐயர் தான் வாஞ்சிக்கு பாண்டிச்சேரியில் துப்பாக்கிப் பயிற்சி அளித்தார்.
ஆக அந்த காலகட்டத்தில் ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் கிளம்பிய தீவிரவாத இந்து மத பற்றாளர்கள் செய்ததுதான் ஆஷ் கொலை.

பார்ப்பனன் என்றால் பாய்ந்துவந்து சாதிப்பட்டம் கட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக எதையாவது உருவி ஆதாரமாக்கி
திரைக்கதை வசனம் எல்லாம் எழுதி எப்படியெல்லாம் மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுபோடுவது என்று திராவிட இயக்கங்களிடம்தான் கற்கவேண்டும்.

நன்றி: http://www.kalachuvadu.com/issue-118/page12.asp
http://www.jeyamohan.in/4488 #.

Friday, 17 October 2014

மதிமுக நடிகர் வைகோ

புலிகளின் மீதா தடையை நீக்க ஐரோப்பிய வழக்காடுமன்றம் உத்தரவு

அதன் அதிர்வலையை ஆட்டையைப்போட அலையும் மதிமுக

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க கோரிக்கை வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் பாஜகவுக்கு.தெரியாது.
அப்படியே கோரிக்கை வைக்கப்பட்டாலும்  புலிகள் மீதான தடையை நீக்க முடியாது.
–வெங்கையா நாயுடு(11-5-2000)

தனிஈழத்தை பாஜக ஆதரிக்காது
-வெங்கையா நாயுடு(25-3-2014)

இது இரண்டுமே வைகோ பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு ஈழத்தை வலியுறுத்தியபோது கூறப்பட்ட பதில்கள்.

புலிகளை வைத்து அரசியல் மட்டும் நடத்துபவர்களே!

ஐரோப்பிய வழக்காடுமன்றம் புலிகள் மீதான தடையை நீக்கியதில் உங்களுக்கு தொடர்பேதும் இல்லை

ஆனால் பாடம் இருக்கிறது.

புலிகள் மீதான தடையை உடைத்தவர்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=572025202926720&id=100003g577372981&refid=7&_ft_=qid.6070873816491780739%3Amf_story_key.5413175128472836337%3Aog_action_id.572025209593386

Monday, 8 September 2014

திராவிட மார்வாடிகள்

திராவிட மார்வாடிகள்.

திராவிடம்,
அதாவது திரமிளம்,
அதாவது தமிழ்,
அதாவது தென்னிந்தியா
அதாவது ?????

சரி. திராவிடம் என்றே சொல்(லித்தொலை)வோம்.

பிறமொழி பிராமணரும் திராவிடமும்.

*1928ல் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் யார் தெரியுமா?
தெலுங்கு பிராமணரான 'மணத்தட்டை சேதுரத்தின ஐயர்'.
1930ல் ஈரோட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டிலும் இவர் முன்னிலை வகித்தார்.
(பின்னே! தமிழகத்தில் சுயமரியாதையுள்ள ஒரு பிராமணர் கிடைக்கவேண்டுமல்லவா!)

*ஈ.வே.ரா தமிழகத்தின் அத்தனைப் பார்ப்பனர்களையும் பாகுபாடில்லாமல் கைக்கு வந்தபடியெல்லாம் எழுதி (கிழித்து)வந்தார்; ஆனால், அவர் காலத்தில் காஞ்சி பெரிய சங்கராச்சாரியாராக இருந்த (சொல்லப்போனால் பிராமணர்களின் தலைமையாக இருந்த) கன்னட பிராமணரான சந்திரசேகரை ஒரு வார்த்தைகூட அவர் பழித்தது கிடையாது.(பெரியார் என்ற சொல் 'மகா பெரியவாள்' என்பதைவிட வலிமை குன்றியதோ?)

*ஈ.வே.ரா வின் ஆதரவுடன் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு சென்னை மாகாண தலைமை அமைச்சரானார்; (திராவிட சதிவேலையின் காரணமாக காங்கிரசு ராஜாஜி மற்றும் காமராசர் குழுவாக பிளவுபட்டிருந்தது).
என்னயிருந்தாலும் ஒரு பெயருக்கேனும் அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் ஆனால் மூச்சுகூட விடவில்லை திராவிடக் கட்சியினர்.
(பின்னே தன்னின பிராமணனை வேறு இனம் என்று கூறினால் அதை நம்ப தெலுங்கன் என்ன தமிழனைப்போல முட்டாளா?)

*அ.தி.மு.க கன்னட பிராமணர் எச்.வி.அண்டே என்பவரை மக்கள் நல்வாழ்வுத்துறைக்குத் தலைவராக்கியது (மக்கள் நல்வாழ்வு என்பதை கன்னடர்கள் போல் இன்னொருவரால் செய்யமுடியுமோ?! அண்டைமாநிலத்துக்குத் தண்ணீரைத் தராமல் தன் மக்களை நல்வாழ்வு வாழவைக்கிறார்களே?!)

*மலையாள பிராமணரான வி.என்.ஜானகி ராமச்சந்திரன் 24நாட்கள் முதல்வரானார்

*கன்னட பிராமணரான ஜெயலலிதா ஜானகியை ஓரம்கட்டிவிட்டு கட்சிக்குத் தலைவராகி ஆட்சியைப் பிடித்து, ஆண்டு அனுபவித்து, சொத்துகுவித்து, தமிழக ஆயுதக்குழுக்களை வெற்றிகரமாக ஒழித்துக்கட்டி, இன்று தமிழன் தலைமேல் அமர்ந்து தொண்டுசெய்கிறார்.

*அதிமுக சார்பில் டெல்லி மேலவை உறுப்பினரானார்  கன்னடப் பிராமணர் மைத்ரேயன். (டெல்லிவரை கன்னட பிராமண அனைத்திந்திய திராவிடமானது முன்னேற்றம் அடைந்தது)
இன்றும் அவர் சளைக்காமல் மாநில அமைப்பாளராகக் களம்காண்கிறார்!

பாவம், திராவிடப் போர்வாள் பதம் பார்த்தது எல்லாம் தமிழ்ப் பார்ப்பனரை மட்டுமே.
--------
வாழவைப்பதே வைக்கிறோம் வடஹிந்திய வந்தேறிகளை ஏன் விலக்கிவைக்கவேண்டும்; (நம் அப்பன் வீட்டு சொத்தா போகிறது) என்ற பரந்துவிரிந்த மனதுடன் திராவிடம் வாழவைத்த  வடவர்கள்.

*1967ல் உடுமலைப் பேட்டையிலிருந்து தி.மு.க சார்பில் சட்டமன்றத்திற்கு நிற்கவைக்கப்பட்டு வெற்றிபெற்றவர் நாராயண்சிங்.
(உடுமலை நாராயணன் என்று மக்களுக்கு அறிமுகம் செய்விக்கப்பட்டார்).
அண்ணாதுரையால் கோவை மாவட்ட தி.மு.க செயலாளராக நியமிக்கப்பட்டார்.(உடுமலைப் பகுதியில் தெலுங்கர் யாரும் கிடைக்கவில்லை போலும்)

*எம்.ஜி.ஆர் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு சென்று தேடிக் கண்டுபிடித்து உக்கம்சந்த் என்ற மார்வாடியை சட்டமன்ற உறுப்பினருக்கு நிற்கவைத்து வெற்றிபெறச்செய்தார்.
பின்னாளில் இவர் குடிநீர் வாரியத் தலைவராகவும் காஞ்சிபுர மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.
(எம்.ஜி.ஆர் செய்தால் சரியாத்தான் இருக்கும் என்ன நான் சொல்வது?)

*வீட்டுக்கு ஒருவர் போதாதென்று உக்கம் சந்தின் தம்பி பிரேம்சந்த்  மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராக ஆனார் (அடடா! என்னே ஒரு திராவிட சேவை)

*அடுத்த மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் இதே உக்கம்சந்துக்கு வாய்ப்பளித்தார் கருணாநிதி; இன்றும் அந்த மார்வாடி தி.மு.க வில் இருந்துகொண்டு தன்னால் முடிந்தவரை திராவிடரை முன்னேற்றி வருகிறார்.

*1980ல் அதிமுக மூலம் ஹீராசந்த் என்பவர் திண்டிவனம் நகராட்சித் தலைவர் ஆனார் (அந்த ஆளுக்கு திண்டிவனம் என்று எழுதியிருக்கும் பெயர்ப் பலகையை படிக்கவாவது தெரியுமா?)
இவரே பாராளுமன்ற மேலவை உறுப்பினராகவும், தென்னாற்காடு மாவட்ட செயலாளராகவும், விழுப்புரம் மாவட்ட செயலாளாராகவும் இருந்தார்.

*காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாலாஜி என்ற வடவர் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.
இவரே பின்னாட்களில் சென்னை-செங்கல்பட்டு (தமிழனுக்குப் பாலூற்ற வசதியாக) பால்உற்பத்தியாளர் ஒன்றியத்தின் தலைவரானார்.

*பவன்குமார் என்ற மார்வாடி அதிமுக சார்பில் திருவண்ணாமலை நகர்மன்றத் தலைவரானார்; இன்றும் திருவண்ணாமலை அதிமுக நகரச் செயலாளராக (திராவிடப்பணியில்) ஆதிக்கம் செலுத்திவருகிறார்.

*மேடையேறி செந்தமிழில்(?) பேசும் வடநாட்டு  கூத்தாடி நடிகை குஷ்புவை பிளந்த வாயோடு ரசித்து ரசித்து வடவர் எதிர்ப்பைக் காட்டினாரல்லவா கருணாநிதி?!

*உண்மையான திராவிடர்கள் என்றால் அது வை.கோபால்சாமி நாயக்கரும்(வைகோ) விஜயராஜு நாயுடுவும் (விஜயகாந்த்)தான்.
அவ்விருவர்தான் தெலுங்கர்களால்  தெலுங்கர்களுக்காகத் தெலுங்கரே நடத்தும் கட்சியை வைத்துள்ளனர்.
கூட்டணி என்ற பெயரில் கன்னட பிராமணத்தியோடும் வடவரோடும் கைகோர்ப்பது தவறாகுமோ?!

தமிழர்கள் கணிசமாக வாழும் அண்டைமாநிலங்களில் மன்ற உறுப்பினராகக் கூட (கவுன்சிலர்) ஒரு தமிழன் வரமுடிவதில்லை;
தமிழக திராவிடக் கட்சிகளைப் போல வருங்காலத்தில் மற்ற மாநிலங்களும் அங்கே வாழும் தமிழருக்கு வாய்ப்புகள் வாரிவழங்குவார்கள் என்று அறவழிநின்று இனவேறுபாடு காட்டாமல் மனதார நம்புவோமாக.

நன்றி: திராவிடக் கட்சிகளும் போலி எதிர்ப்பும்
-பா.குப்பன்.
https://m.facebook.com/photo.php?fbid=491034881000170&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=52&__tn__=E

Thursday, 10 July 2014

பார்ப்பனர் தமிழரே


தெரியாமல்தான் கேட்கிறேன் தமிழ்ப்பார்ப்பனரை ஏன் எல்லாரும் வெறுக்கிறீர்கள்?
அதென்ன எங்கு திரும்பினாலும் பார்ப்பான்
எதற்கெடுத்தாலும் பார்ப்பான்
எவனைக் கேட்டாலும் பார்ப்பான்.
அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் உங்களை?
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தினானாம் பார்ப்பான், அவன் மனுதர்மம் என்று சொல்லிக்கொடுத்தால் உங்களுக்கு எங்கே போனது அறிவு?
எந்த ஊர் சாதிக்கலவரத்தில் பார்ப்பான் துணைபோனான்;
சாதியைப் பார்ப்பன் ஏற்படுத்தினான் எப்படி சொல்கிறீர்கள்? அந்தக்காலம் முதல் இன்றுவரை மக்களுக்காகப் பாடுபட்ட எத்தனையோ பார்ப்பனர்கள் இருக்கின்றனர்; தவிர உலகத்தில் அத்தனை மூலைகளிலும் நான்கடுக்கு சாதிகள் உள்ளன;
ஆன்மீகத்துடன் இணைந்துள்ள முதல் அடுக்கு, நிலத்தை ஆக்கிரமித்து காவல் மற்றும் படைத்துறையுடன் இணைந்த இரண்டாம் அடுக்கு, கருவிகளைக் கொண்டு தொழில்செய்யும் மூன்றாம் அடுக்கு, உடலுழைப்பை மட்டுமே கொண்டு பிழைக்கும் நான்காம் வகுப்பு;
உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறது; அதனால் இவை சரி என்று சொல்லவில்லை இவை ஒழிக்கப்படவேண்டியவையே;
தவிர நீங்கள் வாடிகன் தேவாலயத்திலும் மக்கா மசூதியிலும்கூட பிறப்பால் உயர்ந்தவரென்று அந்த அந்த மதப் பிராமணனைக் காணமுடியும்; இத்தகையவர்களின் ஆதிக்கபலமும் ஒழிக்கப்படவேண்டியதே;
பிராமணன் வேறு பார்ப்பனன் வேறு; தமிழ்ப் பார்ப்பனர் உண்மையில் மற்றபகுதி பார்ப்பனரைப்போல் ஆண்டாண்டுகாலம் அடக்கியாளும் சாதியினர் கிடையாது; 1300 வருடங்கள் முன்பு வேற்றின பிராமணர்கள் பல்லவர்கள் ஆட்சியில் இடம்பிடித்தனர் இதன்பிறகு சமசுக்கிருதம் மெல்ல மெல்ல தமிழ்ப்பார்ப்பனர் மீதும் திணிக்கப்பட்டு வேற்றினப் பிராமணருக்கும் தமிழ்ப்பார்ப்பனருக்கும் கலப்பு நடந்து பிராமணர் பார்ப்பனரோடு பார்ப்பனராய் கலந்துவிட்டனர்; 700வருடங்கள் பிறகு தெலுங்கு-கன்னட அரசான விசயநகர ஆட்சியில் மீண்டும் வேற்றினப் பார்ப்பனர் நுழைந்து இன்னும் வலுவாக தமிழர் அனைவர்மீதும் சமசுக்கிருதம் திணிக்கப்பட்டது; அதன்பிறகு 300 ஆண்டுகள் முன்பு ஆங்கிலேயர் வந்து கிறித்துவத்தையும் ஆங்கிலத்தையும் திணித்தனர்;
இந்த மூன்று காலகட்டத்திலும் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தும் சமசுக்கிருதத்தை எதிர்த்தும் போராடியவர்களில் தமிழ்ப்பார்ப்பனர் பங்கு மறுக்கமுடியாதது; அதேபோல வேற்றின ஆதிக்கத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய தமிழ்ப்பார்ப்பனரின் பங்கும் மறுக்கமுடியாதது;
ஏன் உங்கள் கண்களுக்கு நல்ல பார்ப்பனர்கள் தெரிவதேயில்லை? தமிழுக்காகப் பாடுபட்ட பார்ப்பனர் உங்கள் கண்களுக்குத் தெரியவேயில்லையா? ஆயிரம் ஆண்டுகள் முன்பு ராசராசனின் ஆட்சியில் பிராமண மற்றும் சமசுக்கிருத ஆதிக்கத்தை ஆராய்ந்து அலசிக் காயப்போடும் நீங்கள் 300வருடம் முன்புவரை பிராமண மற்றும் சமசுக்கிருத பொற்காலமான விசயநகர ஆட்சியைப் பற்றி வாய்திறப்பதேயில்லையே ஏன்? திராவிடப் பாசமா?
பார்ப்பனர் பேசும் தமிழின் மொழிநடை வேறுபட்டு இருக்கிறது என்றால் கோயம்புத்தூர் கவுண்டர்கள் தமிழும், நாகர்கோவில் மீனவர் தமிழும், சென்னை மீனவர் தமிழும், பாலக்காடு பார்ப்பனர் தமிழும் வெவ்வேறாக இருப்பதைக் கவனிக்கவில்லையா? என்றால் அவர்கள் தமிழர் இல்லையா?
ஓதும் தொழிலில் வலுக்கட்டாயமாக சமசுக்கிருதம் திணிக்கப்பட்டதால் ஓதும் பார்ப்பனர்கள் சமசுக்கிருதத்தைக் கற்கின்றனர்; எல்லாப் பார்ப்பானும் சமசுக்கிருதம் கற்கிறான் என்று எவன் சொன்னான்?
கி.பி.700லிருந்து கி.பி.1300 வரை பிராமணருடன் இணைந்து ஆதிக்கசாதியாயிருந்த தமிழ்ப்பார்ப்பனர்,1300 களிலிருந்து 1900வரை ஒடுக்கப்பட்டு அதன்பிறகு 1900க்கு பிறகு மீண்டும் தலைதூக்கினர்;
எப்படி என்றால் 1909ல் வந்த மிண்டோ-மார்லி சீர்திருத்தம் 1919ல் வந்த மாண்டேகு செம்சுபோர்டு சீர்திருத்தம் மூலம் ஆங்கில அரசு இந்தியருக்கு விட்டுக்கொடுத்த அரசுபதவிகளில் தமது கல்வி மூலம் இடம்பெற்று மீண்டும் ஆதிக்கசக்தியாக வளர்ந்தனர்; இன்று அவர்கள் மீண்டும் ஒடுக்கப்பட்டு ஐம்பதாண்டுகளில் வேற்றின வந்தேறிகள் அவர்களை விரட்டிவிடும் நிலை வரவிருக்கிறது;
பார்ப்பனீயத்தை ஒழிக்கிறோம் என்று வந்தேறிகளை வாழவைக்கும் திராவிடத்துக்கு இடம்கொடுத்தோம்;
இருந்தாலும் இந்தப்பார்ப்பனர்களை செருப்பாலேயே அடிக்கவேண்டும்; எவனோ ஒருவன் வந்து 'பார்ப்பானை ஒழி' என்று மற்ற தமிழரிடம் சொல்லும்போது நாங்களும் தமிழர்தான் என்றவகையில் தமது ஊடகபலத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்யாமல் முட்டாள்த்தனமாக ஆன்மீகம், இந்துமதம், சமசுக்கிருதம், ஆரியம் என்று வந்தேறிகளுக்குத் தோதுவான வழியிலேயே பயணித்து மற்ற தமிழருக்கும் எதிரியாகி வேற்றினப் பார்ப்பானோடும் இணையமுடியாமல் தமது பதவிபலத்தை இறுகபிடித்தபடி தனித்துநிற்கின்றனர்;
உங்கள் ஊரில் அக்கிரகாரம் இருந்தால் உற்றுக்கவனியுங்கள்; அதில் இப்போது பாதிகூட பார்ப்பனர் இருக்கமாட்டார்கள்;
வந்தேறிகளும், ஆதிக்க சாதியாரும் பிராமணர்களை விரட்டிவிட்டு அங்கே நிறைந்துவிட்டனர்; பார்ப்பனரும் கல்வி கற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போவதையே விரும்ப ஆரம்பித்துவிட்டனர்;
காலில் செருப்பே போடாத, வெறும் தண்ணீரில் துவைத்து பழுப்போடிய ஒற்றை வேட்டியோடும் பூணூலோடும் ஓட்டைமிதிவண்டியில் கால்வாயடிப் பிள்ளையார் கோவிலுக்குப் பூசை செய்து சில்லறையை எண்ணிக்கொண்டு பிழைப்பு நடத்தும் ஒரு ஏழைப்பார்ப்பானைக்கூடவா நீங்கள் பார்த்ததில்லை?
நான் தொடர்வண்டியில் பயணித்தபோது 'பார்ப்பனத் தமிழில்' பேசிக்கொண்டு வந்தார் ஒருவர்; சமசுக்கிருதத்தையும் கிருசுணனையும் புகழ்ந்துகொண்டே வந்தவர் திராவிடத்தையும் ஒருபிடி பிடித்தார்; அவர் கிருட்ண பக்தியை வளர்க்கும் ISKCONஇயக்கத்தைச் சேர்ந்தவராம்; மதுரா என்றொரு இடம் டெல்லி அருகே உண்டு அங்கேதான் கிருட்ணன் பிறந்தாகக் கூறப்படுகிறது; அங்கே தொடர்வண்டி நிற்காவிட்டால் சங்கிலிப் பிடித்து இழுத்துவிடுவாராம்; கிருட்ணன் பிறந்த இடமே இந்தியாவின் தலைநகரமாம்; ஒட்டுமொத்த இந்தியாவும் அனைவருக்கும் சொந்தமாம்; மொழிவாரியாக பிரியக்கூடாதாம்; தமிழ்நாட்டில் தமது இயக்கத்துக்கு(?) எதிர்ப்பு இருக்கிறதாம்; அவரிடம் "நீங்கள் வீட்டிற்குள் என்னமொழி பேசுகிறீர்கள்" என்று கேட்டேன்; அவர் "தெலுங்கு" என்றார்; நான் "அதென்ன வந்து குடியேறிவர்கள் மட்டும் மதம், நாட்டுப்பற்று, மனிதநேயம் என்று மாநிலம் கடந்த விடயங்களை வலியுறுத்துகிறீர்கள்?" என்று கேட்டேன். உறைந்துபோய்விட்டார்; வந்தேறிகள் பிராமணரிலும் ஆதிக்க சாதியிலும் தாழ்த்தப்பட்டோரிலும் கலந்து பல்லாயிரக்கணக்கான வருடங்களாக ஒரே இனமாக வாழும் மக்களை வெவ்வேறு திசையில் இழுக்கிறார்கள்;
அந்த வந்தேறிப் பிராமணன் சொன்ன ISKCON பற்றிக் கூறவா? இது கிருட்ண பக்தியை பரப்பும் 'அமெரிக்க' நிறுவனம்; இவர்கள் வேலை என்னவென்றால் பிராமணர் போலக் குடுமிவைத்து காவியுடுத்தி நாமம் போட்டுக்கொண்டு கிருட்ணநாமம் கூட உச்சரிக்கவராத வெள்ளைக்காரர்களைக் கொண்டு,பல ஏக்கரில் சலவைக்கல் பதித்து வண்டிநிறுத்தும் இடத்துடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட ஆடம்பரமானக் கோவில்கட்டி அதில் வரும் காணிக்கையை அமெரிக்காவுக்கு வருமானமாக அனுப்புவது;
பெங்களூரில் இருக்கும் ISKCON கோவில் ஒன்று மட்டுமே colgate என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் சம்பாதித்து தந்த லாபத்தை விட மூன்றுமடங்கு அமெரிக்காவுக்கு சம்பாதித்துத் தருகிறது; பெங்களூரை விட பெரிய ISKCON கோவில் டெல்லியிலும் அதைவிடப் பெரியகோவில் மும்பையிலும் அதைவிடப் பெரியது மதுராவிலும் உள்ளது;
எந்த விளம்பரமும் செய்யாமல் வருமானவரி விலக்குடன் இந்து,கிறித்தவ, இசுலாமிய கோயில்களைக் கட்டி காசுபார்க்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இப்போது போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுகின்றன.
மதம் என்பதே மக்களிடம் இருக்கும் இறைநம்பிக்கை மூலம் சிலர் சுரண்டிக் கொழுக்கத்தான் என்றாலும் இப்போது அது உலகளாவிய வியாபாரமாகிவிட்டது;
பிராமணன் பெயரைச் சொல்லி எவன் எவனோ பிழைக்கிறான்;
அதனால்தான் கூறுகிறேன் பார்ப்பனீயத்தை ஒழியுங்கள் ஆனால் பார்ப்பனர்களை அல்ல;
அவர்களும் இம்மண்ணின் மைந்தரே;
வேற்றினத்து பிராமணரை தமிழ்ப்பார்ப்பனருடன் குழப்பாதீர்கள்;
தமிழராக நாம் இணைவதற்கு எந்தக் காரணமும் குறுக்கேவரக்கூடாது.


https://www.facebook.com/photo.php?fbid=375091589261167&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739