Thursday 29 June 2017

தமிழ்தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம்தான் என்ன?

தமிழ்தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம்தான் என்ன?

பொதுவாக தேசியவாதம் வைக்கும் அதே முழக்கம்தான்.

அதாவது இனம், மொழி, நாடு மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டும்.

தமிழ், தமிழர், தமிழர்நாடு !

மொழியால் தமிழன்!
இனத்தால் திராவிடன்!
தேசியத்தால் இந்தியன்!
என்று கூறுவது பச்சோந்தித்தனம் ஆகும்.

தமிழர்நாடு பச்சோந்திகளை ஒழித்துக்கட்டி ஒருநாள் விடுதலை அடையும்.
விடுதலை என்பது வல்லாதிக்கத்தின் அடிமை அமைப்பான ஐ.நா வழங்கும் அங்கீகாரம் கிடையாது.
ஐ.நா இனப்படுகொலைக்கு துணைபோகிறதே ஒழிய நியாயத்திற்காகப் போராடுவதில்லை.

விடுதலை என்பது வலிமையான இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட நிலமும் அதில் மக்கள் விரும்பும் தலைமையும் ஆகும்.

பிற விடுதலையடைந்த நாடுகள்போல தமிழர்நாடானது
விடுதலை அடைந்து,
தன்னிறைவு பெற்று,
வல்லரசாக உயர்வதோடு நின்றுவிடக்கூடாது.

இந்த உலகத்தின் அடக்கப்பட்ட பூர்வகுடிகளை விழிப்படையச்செய்து மொழிவழி நாடுகளாக இந்த உலகையே மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெரிய நாடுகளையெல்லாம் துண்டுதுண்டாக உடைக்கவேண்டும்.

தமிழர்நாட்டின் வழிநடத்துதலால் விடுதலை அடைந்த நாடுகள் தமிழர்நாட்டுடன் ஓரணியில் நின்று தன்னிறைவு பெற்று வல்லரசாகி இந்த உலகமாற்றத்திற்கு உதவவேண்டும்.

உலகில் அடக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்திற்கும் தமிழர்நாடும் அதன் கூட்டணி நாடுகளும் சேர்ந்து விடுதலை பெற்றுத்தரவேண்டும்.

  நாம் ஹிந்தியாவை உடைப்பதில் இருந்து தொடங்கலாம்.

உலகில் வல்லாதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட நாடுகள் விடுதலை அடைந்த பிறகும் எழமுடியாமல் கிடக்கின்றன.
ஆனால் சுரண்டிய இனங்கள் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்கின்றன.

இது தொடரக்கூடாது!

தமிழர் இராணுவம் இதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கக்கூடாது!

விடுதலை பெற்றுத்தருவதோடு நில்லாது நாம் சுரண்டப்பட்ட செல்வத்தையும் பறித்து நட்ட ஈடு பெற்றும் தரவேண்டும்.

முதலில் நாம் விடுதலை அடைவோம் பிறகு மற்றவை தன்னால் நடக்கும்.

No comments:

Post a Comment