Thursday 6 October 2016

இல்லாத நாட்டின் முதல் குடிமகன்

இல்லாத நாட்டின் முதல் குடிமகன்

€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)

தன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார் அப்துல்கலாம்.

பின்னே! வரும்போதெல்லாம் தன் தெருக்காரர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதையும் அவர்களது மனைவி பிள்ளைகள் வந்து ஒப்பாரி வைப்பதையும் எத்தனை நாள்தான் கேட்டுக்கொண்டு இருப்பது?!

போதாக்குறைக்கு இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைபிடிக்கப்பட்ட அப்பாவிகளின் கருணைமனுக்களை ஏற்கவில்லை என்ற பழி வேறு!

தமிழனை ஏறெடுத்துப் பார்த்தாலே அது இந்தியாவுக்கு துரோகம் செய்வதுபோல் ஆகிவிடாதா?

நூறு கோடி ஹிந்தியனுக்காக எட்டு கோடி தமிழன் செத்தால்தான் என்ன?

அதனால் அளவுக்கு மிஞ்சிய தேசப்பற்று தலைக்கேறி அப்துல் கலாம் மரைக்காயர் என்ற தமிழர் தன் சொந்த வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார்

படுக்கும்போது தன் சொந்த ஊரான இராமேஸ்வரம் இருக்கும் தெற்கு திசையில் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.
பாரதமாதாவின் மடியில் வடக்குநோக்கி தலைவைத்து படுத்துக்கொண்டார்.

பணத்தாசையை விட மோசமான புகழாசை அவர் மனதில் வேரூன்றியிருந்தது.

ஹிந்திய அரசு பிச்சை போட்ட சுமாரான வீடு அது.
'கதவு எண் 10'.
'இராஜாஜி மார்க்' சாலை.
ஹிந்தியனோடு ஹிந்தியனாக டெல்லியிலேயே தங்கிவிட்டார்.

உருப்படியாக எதையும் கண்டுபிடிக்காவிட்டாலும் நூறுகோடி முட்டாள்களில் அவர்தான் சிறந்த அறிவாளி என்று பெயரெடுக்க அவர் செய்யாத தியாகங்கள் இல்லை.

செத்தாலும் ஊர் பக்கம் போவதில்லை என்று முடிவெடுத்திருந்த அப்துல்கலாம் மரைக்காயர் ஒருநாள் செத்தும்போனார்.

சாகும்போது தனது பெயர் எட்டுகோடி தமிழர் வரலாற்றில் இல்லாது போனாலும்
நூறுகோடி இந்தியர் வரலாற்றில் என்றும் இருக்கும் என்ற மனநிறைவோடு அவர் ஜூலை 27 2015ல் செத்துப்போனார்.

அவரது கனவு நிறைவேறியதா?

இல்லை. இல்லாத இந்தியாவில் அவர் இல்லாமலேயே போய்விட்டார்.

அவர் இறந்த மூன்று மாதங்களுக்குள் அவர் இருந்த வீடு காலிசெய்யப்பட்டு பொருட்கள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டன.

"மதராஸி மதர்ச்சோத்,
இவனுக்கு இவ்வளவு நாள் தெண்டம் அழுததே பெரியது.
தூக்கிக் கடாசுங்கள் இந்த வீணையையும் நடராசர் சிலையையும்.
இதென்ன புத்தர் சிலை?!
ஓ ஸ்ரீலங்கா போய் புத்தமத சாமியார் காலில் விழுந்தபோது பொறுக்கிவந்ததா?!
பரதேசிப்பயல், மொத்தமே 4,5 மாற்றுத்துணிகள்தான்.
அதனால் அதிகம் வேலையில்லை.
பொருட்களை இராமேஸ்வரத்தில் இவன் வீட்டில் இறக்குங்கள்.
இவனுக்குப் பிள்ளைகுட்டியெல்லாம் கிடையாதே?!
வாங்க நாதியில்லை என்றால் வாசலில் போட்டுவிட்டு வாருங்கள்"

மறுநாள் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அந்த வீட்டிற்கு குடி வந்தார்.

மத்திய அரசு எதைச் செய்தாலும் குற்றம் சொல்லி அறிக்கைவிடும் டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அன்று எதுவும் வெறும்வாயை மென்று கொண்டு இருந்தார்.
இந்த செய்தியை அவருக்குச் சொல்லிவிட்டு அவர் வாயில் அவல் போட்டுவிட்டு போனார் ஒரு ஆம்ஆத்மி தொண்டர்.

"அப்துல் கலாம் வீட்டை நினைவிடமாக்குங்கள்.
அவர் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்.
எவ்வளவு அடி தாங்கியிருக்கிறார்.
நான் தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கிளை ஆரம்பித்துள்ளேன்.
வேறு என்ன செய்வது
மற்ற எந்த மாநிலத்தானுமே என்னை மதிக்கவில்லையே?!"

"ப்ரோக்கர்.. ச்சீ.. பிரதமர் என்றைக்கு உள்நாட்டில் இருந்திருக்கிறார்?!
ஆஸ்திரேலியாவிடம் அதானிக்கு கடன்வாங்கி தந்துவிட்டு
ஆப்பிரிக்காவில் அம்பானிக்கு இடம் வாங்கித்தர போயிருக்கிறார்.
அதனால் அவர் வந்ததும் கேட்டுசொல்கிறேன்.
அவரிடம் என்ன கேட்பது?
மதராசி அதிலும் முஸ்லீம்.
அவனுக்கென்ன மண்ணாங்கட்டி நினைவு இல்லம்?
அதெல்லாம் முடியாது"
ஆர்.எஸ்.எஸ் அலுவலம்... ச்சீ.. பிரதமர் அலுவலகம் பதிலளித்தது.

டெல்லி முதலமைச்சர் என்னையே மதிக்கவில்லையே?!
சரி வழக்கம்தானே என்று கேஜரிவாலும் கேசரி கிண்டி சாப்பிட போய்விட்டார்.

கலாமின் அண்ணன் ஏ.பி.ஜே.முகமது முத்துமீரான் மரைக்காயர்,
தன் தம்பிக்கு ஒரு நினைவிடம் அமைக்குமாறும்.
உடைமைகளை அனுப்பிவைக்கவா என்று கேட்டும் கேஜரிவாலுக்குக் கடிதம் எழுதினார்.

  அப்துல்கலாம் கண்டுபிடித்ததை அருங்காட்சியில் வைக்காவிட்டால் ஹிந்தியாவில் அறிவாளிகளே இல்லை என்பது உலகம் முழுவதும் தெரிந்துவிடும்.

ஆகவே துண்டுதுக்கடா கண்டுபிடிப்பானாலும் அதையாவது காட்சிக்கு வைப்போம்.
இவ்வளவாவது கண்டுபிடித்தார்களே என்று வெளிநாட்டுக்காரன் கொஞ்சமாகவே காறி துப்புவான்.

"யோவ் கபில் மிஸ்ரா, நீதானே டெல்லி சுற்றுலா அமைச்சர்?!
நீ தமில்நாட் போய் அப்துல் ஸலாம் பொருட்களை எடுத்துவிட்டு வா"

"என்ன அது தமில்நாட்? கேள்விப்பட்டே இல்லையே?!"

  "அட பாவி தமில்னா தெரியாதா?
பிரபாகரன் ஊர்"

"ஓகோ ஸ்ரீலங்காவா? அப்துல் ஹஸன் ஸ்ரீலங்காக்காரனா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே?!"

"ஓ மூஞ்சி! மதராஸ் போய் கடலோரமாக கன்னியாகுமரி வரை போனால் சிறிலங்காவுக்கு ஒட்டி கடலுக்கு இந்த பக்கம்"

"கேக்கவே தல சுத்துதே! எங்கிட்ட பாஸ்போட் கூட இல்ல.
அவன் பொருள இங்க வச்சா எவன் வந்து பாப்பான்?"

" அட ராமா?!
டெல்லியில் எட்டு லட்சம் மதராசிகள் சேரிகளில் கூலிகளாக மாரடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நாள்தோறும் பல மதராசிகள் தாஜ்மகால் பார்க்க உத்திரபிரதேசம் வரை வருகிறார்கள்.
இங்கே அப்துல்கலாம் நினைவிடம் வைத்தால் கொஞ்சமாவது சில்லறை தேறும்.
நீ ராமேஸ்வரம் போ மதராஸிகள் பேசும் கரடுமுரடான மொழி புரியவில்லை என்றால் நம் பழைய ஆள் சுப.உதயகுமார் இருக்கிறார்.
அவரிடம் தொலைபேசிக்கொள்"

கபில் மிஸ்ரா சாவகாசமாக ஆறுமாதம் கழித்து ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் இராமேஸ்வரம் போய் அப்துல்கலாம் பொருட்களை எடுத்துவந்தார்.

சில நாட்கள் பயணமாக இந்தியா வந்த இந்திய பிரதமர் மோடி அலுவலகத்தில் நுழையும்போதே உதவியாளர் கூறினார்.

"இந்த கேஜரிவால் தொந்தரவு தாங்கவில்லை.
அகமது கலாமுக்கு நினைவிடம் அமைக்கப்போகிறானாம்"

இருக்கையில் அமர்ந்த மோடி "யாரு அது அகமது கலாம்?!" என்றார் பழக்கத்தொற்றில் சீட் பெல்ட்டைத் தேடியபடி.

"முன்னாள் ஜனாதிபதி. கறுப்பன். மதராஸி. துலுக்கன். துடைப்பம் மாதிரி முடி வைத்திருப்பானே?!"

"அவன்தான் செத்துட்டானே!"

"ஆமா ஆனா ஒரு வருசம்கூட  ஆகலயே.
மக்கள் கொஞ்சூண்டு நினைவு வச்சிருக்காங்க.
அதனால் இப்பவே நினைவிடம் அமைத்து பெயர் வாங்க பார்க்கிறான்"

"அவன்ட்ட சல்லிபைசா நிதி கெடைக்காதுனு சொல்லிரு.
மாட்டு கறி திங்கறவனுக்கு எதுக்கு நினைவிடம்?
ஏற்கனவே எல்லாரும் அவன மறந்துட்டாங்க.
அவன் செத்து ஒரு முதல் வருசம் நினைவஞ்சலி ஹிந்திக்காரன் எவனாவது நினைவு வச்சு கொண்டாடிட்டா எ பேர மாத்திக்கிறேன்.
இது கடவுள் டாடா மேல சத்தியம்.
ஆமா நா ஒடனே கெளம்பி ப்ளைட்ட புடிக்கணும் என் நாய்க்கு கே.எப்.சி சிக்கன் வாங்கி போட்டுடு"

கேஜ்ரிவால் வெறும்வாயை மென்றுகொண்டு இருந்தார்.
நிதி கிடைக்காது என்ற அவல் கிடைத்தது.

"யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க.
டெல்லி சுற்றுலா நிதியில் இருந்து எடுத்து நானே பார்த்துக்கிறேன்"

"ஐயா, நீங்க வாரி வழங்கிய இலவச சலுகையால் கஜானா காலி.
டெல்லி சுற்றுலா நட்டத்தில் ஓடுகிறது"

"அதெல்லாம் தெரியாது. டெல்லி போக்குவரத்து வளர்ச்சிக் கழகம், டெல்லி கலை மற்றும் கலாசாரத் துறை இவற்றிலிருந்தும் சுரண்டி எடுத்தாவது நிதி சேருங்கள்.
ஒரு சாதாரண வீடு, ரெண்டு ஆட்கள், இது போதாதா?
அப்துல்லாகான் என்ன எடிசனா ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்பு வைக்கறதுக்கு?
ஒரு அறையே போதும்.
இப்போவே இதை அறிக்கை வெளிவிடுறேன்"

டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதலுடன் அறிக்கை மே மாதம் வெளிவந்தது.

என்றால் ஐந்து மாதம் ஆகிறதே?!
நினைவிடம் அமைந்திருக்குமே?!
என்று நம்பிக்கையோடு கேட்டால் நீங்கள்தான் அடுத்த அப்துல் கலாம்.

2 comments:

  1. ஹாஹாஹா

    நகைச்சுவையோடு அப்துல் கலாமின் உண்மை முகத்தை உரித்து வைத்துள்ளீர்கள்.

    ReplyDelete