Wednesday 5 October 2016

இசுலாமியரில் தமிழரைக் கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

இசுலாமியரில் தமிழரைக் கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

வடயிந்திய இசுலாமியர் 500 ஆண்டுகளாக இசுலாமியர் என்றால் தமிழ் இசுலாமியர் 1000 ஆண்டுகளாக இசுலாமியர்கள்.
ஆனாலும் அவர்கள் இன அடையாளத்தை இழக்கவில்லை.

**அவர்களின் பெயர் அரபியில் இருந்தாலும் ஏறக்குறைய தமிழ் வடிவத்துடன் எளிமையாக இருக்கும்.
மைதீன், சம்சுதீன், முகமது, அப்துல், அமீர், அலி, முகைதீன், இரஹீம், உசேன், உமர், ரகுமான், காதர், மீரான், இப்ரான், அகமது, மசூது, அப்துல்லா, இதயத்துல்லா, செய்யது, சலீம், ஆயிஷா, பானு, பேகம், சாயிரா, சாந்தினி, ஆமீனா, பாத்திமா, கமீலா, யாஸ்மீன்.

(இப்பெயர்களுக்கும் இசுலாமுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவை சாதாரண அரபிப்பெயர்கள்.
இசுலாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே வழங்கிவரும் சொற்கள் இவை.
இசுலாம் இந்தமொழியில்தான் பெயர் வைக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் இல்லை.
இதை இசுலாமியர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது என் கோரிக்கை.)

** "நான் ஒரு இசுலாமியன்" என்று வெளியே காட்டிக்கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்கள்.
அதாவது மீசையில்லாமல் தாடி வைப்பது,
குல்லா அணிவது,
நீளமான சட்டையும் முழங்காலுக்கு மேல் கால்சட்டையும் அணிவது,
துண்டை முக்கோண வடிவில் தோளில் போடுவது,
கைகுலுக்கும்போது இரண்டு கை சேர்த்து குலுக்குவது,
கைவிரல்களைச் சேர்த்து முகத்திற்கு நேராக விசிறி வணக்கம் சொல்வது
போன்றவற்றை விரும்பமாட்டார்கள்.

**அதே போல அராபிய உச்சரிப்பு வராது.
அஸ்ஸலாமு அலைக்கும்
மற்றும் வஅலைக்கும் அஸ்லாம் என்பதை 'சலாமலேக்கும்' என்பார்கள்.
sheikh என்பது (ச்)சேக்கு என்பார்கள்.

**பள்ளி, தொழுகை, பெருநாள், நோன்பு, பிறை, இறைவன் போன்ற தமிழ் சொற்களையே பயன்படுத்துவார்கள்.
இசுலாத்தின் கடுமையான சட்டங்களை பலவற்றைப் பெரும்பாலும் பின்பற்றுவது கிடையாது.

**தமிழ் இசுலாமியப் பெண்கள் பர்தா (புர்கா) போடுவதும் தற்போதுதான் அதிகரித்துள்ளது.
ஆனால் இன்றும் முகத்தை மூடுவது கிடையாது.
மற்றபடி அவர்கள் சேலைதான் கட்டியிருப்பார்கள்.
(இசுலாம் நாகரீகமாக உறுப்புகள் வெளித்தெரியாதவாறு உடையணியத்தான் கூறுகிறது.
புர்கா அணிவது கட்டாயம் இல்லை)

**நகைகளும் தமிழ்ப் பாணியிலானதாக இருக்கும்.
பொட்டு இல்லாததை வைத்துதான் அடையாளம் காணவேண்டும்.

**மற்ற இன இசுலாமியரை விட தமிழ் இசுலாமியப் பெண்கள் படித்தவர்களாக இருப்பார்கள்.

**தமிழ் இசுலாமியர் தமிழ்ப் பற்றும் இனப்பற்றும் உள்ளவர்கள்,
பிற இனத்து இசுலாமியருடன் அவர்கள் ஒட்டுவதில்லை.
எங்கே சென்றாலும் தமிழரோடு தமிழராகத்தான் சேர்ந்திருப்பார்கள்.
பிற மதத் தமிழரோடு மிகவும் இணக்கமாக இருப்பார்கள்.

**சித்தி-பெரியம்மா மகளைத் திருமணம் செய்வது
பெரியப்பா-சித்தப்பா மகளைத் திருமணம் செய்வது மிகவும் குறைவு.

**பெண்களின் பிறப்புறுப்பின் முக்கிய பாகத்தை அகற்றும் பழக்கம் அறவே கிடையாது.

**ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள்.

**இசுலாமியரின் மனநிலை எவ்வாறு எவ்வாறு என்றால்,
அவர்கள் தமிழ் இனத்தில் ஒரு (சாதி) சமூகம்.
அவ்வளவுதான்.
தாங்கள் தனிமதம் என்றோ உலக இசுலாமியர்கள் தம் சொந்தங்கள் என்றோ எண்ணுவதில்லை.
பிற சாதிகளை மாமன், மச்சான், சித்தப்பா, பங்காளி என உறவுமுறை சொல்லி அழைப்பார்கள்.
(ஆசாரிகளை சித்தப்பா என்று அழைப்பார்கள்,
இதுபோல வேறு சமூகங்களை எவ்வாறு அழைப்பார்கள் என்று தெரிந்தவர்கள் கருத்திடவும்)

**இசுலாமியர் ஆகும் முன் அவர்களின் தமிழ்ச்சாதி அடையாளம்

*இலுப்பைக்குடி (லெப்பைக்குடிகாடு)  இசுலாமியர் பெரும்பாலும் முத்தரையர் சாதியினர்.

*பள்ளப்பட்டி இசுலாமியர் பெரும்பாலும் கொங்கு கவுண்டர் சாதியினர்.

*கூத்தாநல்லூர் இசுலாமியர் பெரும்பாலும் பள்ளர் சாதியினர்.

*தென்காசி இசுலாமியர் பெரும்பாலும் நாடார் சாதியினர்.

*சங்கராபுரம் இசுலாமியர் பெரும்பாலும் துளுவ வேளாளர் சாதியினர்.

*கூடலூர் இசுலாமியர் பெரும்பாலும் பிள்ளைமார் சாதியினர்.

*கோயம்புத்தூர் இசுலாமியர் பெரும்பாலும் பள்ளர் சாதியினர்.

*கிருஷ்ணகிரி இசுலாமியர் பெரும்பாலும் பறையர் சாதியினர்.

*கீழக்கரை இசுலாமியர் பெரும்பாலும் கள்ளர் மற்றும் பள்ளர் சாதியினர்

*காயல்பட்டினம் இசுலாமியர் பெரும்பாலும் பரதவர் மற்றும் நாடார் சாதியினர்.

மேலே நான் கூறியவை என் அனுபவத்தில் உணர்ந்தவை.
சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

மேலும் நான் ஒரு இறைமறுப்பாளன்.
எனக்கு இசுலாம் உட்பட எந்த மதமும் பிடிக்காது.
ஆனால் தமிழ் இசுலாமியரைப் பிடிக்கும்.

ஏனென்றால் ஒரு இனத்தின் ஒருபங்கு மக்களை அவர்களின் கடவுளையும் மொழியையும் பழக்கவழக்கத்தையும் தோற்றத்தையும் நம்பிக்கைகளையும் மாற்றி அவர்களை தமது இனத்தின் மத்தியிலேயே அந்நியராக்குவது இனப்படுகொலையே ஆகும்.

ஆனால் இந்த அடையாள மாற்ற இனப்படுகொலை தமிழ்மண்ணில் எடுபடவில்லை.

மாறிய அடையாளத்தோடு ஒற்றுமையாக இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கலாம்.
ஆனாலும் ஒரே அடையாளத்தோடு இருப்பது இன்னமும் சிறந்தது.

எனவே தமிழர்கள் இன்று பின்பற்றும் பல்வேறு மதங்களை தூக்கி எறிந்துவிட்டு தமது ஆதிகால மதமான இயற்கையை வணங்கும் நெறியை மதமாக பின்பற்றவேண்டும் என்பது என் விருப்பம்.

படம்: சேரமன்னன் கட்டிய 1400 ஆண்டுகள் பழமையான சேரமான் பள்ளிவாசல்.
(இந்திய துணைக்கண்டத்திலேயே பழமையானது)

No comments:

Post a Comment