Saturday 15 October 2016

கேரள அரசு தமிழக எல்லையை ஆக்கிரமிக்கிறது!

கேரள அரசு தமிழக எல்லையை ஆக்கிரமித்தது

பறிபோகின்றது தமிழக எல்லை!

தாளூர் ஆக்கிரமித்து தமிழக எல்லையில் எல்லை மைல் கல் ஜேசிபி கொண்டு உடைப்பு!

அத்துமீறி அடுக்குமாடி கட்டடங்களை கட்டி கேரளாவில் இருந்து மின் இணைப்பு பெற்று கேரளாவுக்கு இணைக்க பூர்வாங்க வேலைகள் ஆரம்பம்!

எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக எல்லைப்பகுதிகளை விட்டுக்கொடுக்கும் தமிழக அதிகாரிகளின் அலட்சியம்!

நீலகிரியில் தமிழக எல்லைக்குள் தாளூர் பகுதியில் மலையாளிகள் பலர் வீடுகள் கட்டியிருந்தனர்.

இவர்கள் கேரள அரசுக்கு தகவல் கொடுத்து மின் இணைப்பு கோரியிருந்தனர்.
இதன்விளைவாக நேற்று உடைப்பு இயந்திரம் கொண்டுவந்த கேரள அதிகாரிகள் எல்லைக்கல்லை உடைத்துவிட்டு அப்பகுதி கேரளாவுக்கு சொந்தம் என்று கூறிவிட்டு சென்றனர்.

மலையாளிகளுக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தை கேரள பதிவுத்துறை மூலம் பதிவு செய்து கேரள வீட்டுவசதி துறை அப்பகுதியில் பணிகளை ஆரம்பிக்க உள்ளது.

  ஏற்கனவே மலையாள இனவெறிக்கு ஆளாகிவரும் அப்பகுதி தமிழர்கள் தற்போது பீதியில் உள்ளனர்.

ஆந்திரா தமிழக எல்லையில் இருந்த கோவிலை காவல்துறையை அனுப்பி ஆந்திர அரசு கைப்பற்றி ஆந்திரபிரதேச அறநிலையத்துறையில் சேர்த்தது.
அந்த செய்தியை ஒன்றிரண்டு நாளிதழ்கள் வெளியிட்டன.

இந்த செய்தியை எந்த ஊடகமும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment