Saturday 29 October 2016

தீபாவளி குழப்பத்திற்கு தீர்வு

தீபாவளி குழப்பத்திற்கு தீர்வு
|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|

*தமிழரின் விளக்கீடு திருநாளே (கார்த்திகை) வடக்கே பரவி பிறகு தெற்கே விளக்குவரிசையாக (தீபாவளியாக) மீண்டும் திரும்பி வந்தது.
இப்போதும் இவ்விரு பண்டிகை களும் அருகருகே வருகின்றன.

* நரகாசுரனுக்கு தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நரகாசுரன் ஆண்ட பகுதி தற்போதைய பங்களாதேஷின் வடபகுதி.

*மகாபாரதம் (8:8:15) திராவிடர், மகதர், பாண்டியர், சோடர், கேரளர் என அனைவரையும் தனித்தனியாக குறிக்கிறது.
ஆக திராவிடம் வேறு தமிழ் வேறு.

* தீபாவளி வடக்கே கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள்.
அதில் நரகாசுரன் கதையும் ஒன்று.
அதிகம் பிரபலமாகாத அந்த கதையை திராவிட இயக்கம் தமது அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்திக்கொண்டனர்.

* அரக்கு நிறத்தில் இருப்போர் அரக்கர்.
அச்சொல் தமிழர்களை மட்டும் குறிப்பதில்லை.
அரக்கர் என்பது அவமானச் சொல்லும் இல்லை.

* ஆரிய திராவிட கட்டுக்கதைகளை நம்பவேண்டாம்.
கார்த்திகையே நமக்கு தீபாவளி.
ஆக அன்றே நாம் அதைக் கொண்டாடுவோம்

* பட்டாசு வெடித்தல் ஒலி, காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் அந்த பழக்கத்தை அறவே விட்டுவிடவேண்டும்.

* சூரிய ஒளி குறைவாகப் படும் மாதத்தில் அமாவாசை அன்று மேலும் ஒளிகுறைவதால் அதை ஓரளவு சமன்செய்ய கார்த்திகை அதாவது தீபாவளி கொண்டாடப்பட வேண்டும்.

* வடக்கே இன்று (29-10-16) சிறுதீபாவளி (கானா திவாலி),
இன்று மக்கள் 5 விளக்குகளை மட்டும் ஏற்றுவார்கள்.
நாளை வீடுமுழுவதும் விளக்கு ஏற்றுவார்கள்.
ஆக கார்த்திகை பண்டிகையே தீபாவளி.

* கார்த்திகை அன்று மகாவீரர் இறந்ததால் சமணர்கள் இதனைக் கொண்டாடுவது இல்லை.
தமிழ்மண்ணில் சமணம் பெரும்பான்மையாக இருந்தபோதே விளக்கிடும் பண்டிகை முக்கியத்துவம் இழந்துவிட்டது.
(கண்ணகி, கோவலன், இளங்கோவடிகள் போன்றோர் சமணரே)

* வடவர் ஆதிக்கம் தமிழகத்தில் தீபாவளியை திணிக்கின்றனர்.

*  அசல் கார்த்திகை இருக்க நகல் தீபாவளி எதற்கு?
எனவே தீபாவளியை புறக்கணிப்போம்.
பட்டாசு வெடிக்காமல் புத்தாடை உடுத்தி, கறி சமைத்து, விளக்கு ஏற்றி, இனிப்பு செய்து, கார்த்திகையை  கோலாகலமாகக் கொண்டாடுவோம்.

No comments:

Post a Comment