அரக்கர்
அரக்கு நிறத்தில் இருப்போர் அரக்கர்.
அசுரன் என்பது வேறு.
சுராபானம் அருந்துவோர் சுரராம்.
அதை அருந்தாததவன் அசுரனாம் அவனே அரக்கன் என்றும் குறிக்கப்படுகிறானாம்.
பொதுமையான அறிவைப் பயன்படுத்தவும்.
ஒரு குறிப்பிட்ட மக்களை வேற்றினத்து மக்கள் அவர்கள் உடல்நிறத்தை குறிப்பிட்டு பெயர்வைத்து அழைப்பார்களா?
இல்லை அவர்கள் குடிக்கும் பானத்தை குறிப்பிட்டு பெயர்வைத்து அழைப்பார்களா?
-----------
சுர், சுள், சுல், சுறீர், சுரம் அனைத்தும் நெருப்பைக் குறிப்பது.
சூரன் என்பது கதிரவனைக் குறிக்கும்.
_ பாவாணர்
-----------
அதாவது குமரிக்கண்டம் முதல் இமயம் வரை தமிழர் வாழ்ந்தபோது
வடக்குத் தமிழர் காலநிலையின் காரணமாக தெற்குத் தமிழரை விட வெளுத்த நிறமாக இருந்திருப்பர்.
அவர்கள் தெற்குத் தமிழரது தோல் சிறிது சிவப்பு கலந்த கரியநிறமாக இருப்பதைக் குறிப்பிட்டு அவர்களை அரக்கர் என்று அழைத்திருப்பர்.
இலக்கியங்களில் இராவணன் அரக்கன் என்று அழைக்கப்பட்டுள்ளான்.
ஆக அரக்கன் இழிவான சொல் இல்லை.
Wednesday, 9 August 2017
அரக்கர்
Saturday, 29 October 2016
தீபாவளி குழப்பத்திற்கு தீர்வு
தீபாவளி குழப்பத்திற்கு தீர்வு
|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|_|
*தமிழரின் விளக்கீடு திருநாளே (கார்த்திகை) வடக்கே பரவி பிறகு தெற்கே விளக்குவரிசையாக (தீபாவளியாக) மீண்டும் திரும்பி வந்தது.
இப்போதும் இவ்விரு பண்டிகை களும் அருகருகே வருகின்றன.
* நரகாசுரனுக்கு தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நரகாசுரன் ஆண்ட பகுதி தற்போதைய பங்களாதேஷின் வடபகுதி.
*மகாபாரதம் (8:8:15) திராவிடர், மகதர், பாண்டியர், சோடர், கேரளர் என அனைவரையும் தனித்தனியாக குறிக்கிறது.
ஆக திராவிடம் வேறு தமிழ் வேறு.
* தீபாவளி வடக்கே கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள்.
அதில் நரகாசுரன் கதையும் ஒன்று.
அதிகம் பிரபலமாகாத அந்த கதையை திராவிட இயக்கம் தமது அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்திக்கொண்டனர்.
* அரக்கு நிறத்தில் இருப்போர் அரக்கர்.
அச்சொல் தமிழர்களை மட்டும் குறிப்பதில்லை.
அரக்கர் என்பது அவமானச் சொல்லும் இல்லை.
* ஆரிய திராவிட கட்டுக்கதைகளை நம்பவேண்டாம்.
கார்த்திகையே நமக்கு தீபாவளி.
ஆக அன்றே நாம் அதைக் கொண்டாடுவோம்
* பட்டாசு வெடித்தல் ஒலி, காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்துவதால் அந்த பழக்கத்தை அறவே விட்டுவிடவேண்டும்.
* சூரிய ஒளி குறைவாகப் படும் மாதத்தில் அமாவாசை அன்று மேலும் ஒளிகுறைவதால் அதை ஓரளவு சமன்செய்ய கார்த்திகை அதாவது தீபாவளி கொண்டாடப்பட வேண்டும்.
* வடக்கே இன்று (29-10-16) சிறுதீபாவளி (கானா திவாலி),
இன்று மக்கள் 5 விளக்குகளை மட்டும் ஏற்றுவார்கள்.
நாளை வீடுமுழுவதும் விளக்கு ஏற்றுவார்கள்.
ஆக கார்த்திகை பண்டிகையே தீபாவளி.
* கார்த்திகை அன்று மகாவீரர் இறந்ததால் சமணர்கள் இதனைக் கொண்டாடுவது இல்லை.
தமிழ்மண்ணில் சமணம் பெரும்பான்மையாக இருந்தபோதே விளக்கிடும் பண்டிகை முக்கியத்துவம் இழந்துவிட்டது.
(கண்ணகி, கோவலன், இளங்கோவடிகள் போன்றோர் சமணரே)
* வடவர் ஆதிக்கம் தமிழகத்தில் தீபாவளியை திணிக்கின்றனர்.
* அசல் கார்த்திகை இருக்க நகல் தீபாவளி எதற்கு?
எனவே தீபாவளியை புறக்கணிப்போம்.
பட்டாசு வெடிக்காமல் புத்தாடை உடுத்தி, கறி சமைத்து, விளக்கு ஏற்றி, இனிப்பு செய்து, கார்த்திகையை கோலாகலமாகக் கொண்டாடுவோம்.