Sunday 6 November 2016

தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்

தமிழரல்லாதார் ஆட்சி
அம்பலப்படுத்திய பாரதியார்

1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி
மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது,

  "புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்த
பிராமணரும்-பஞ்சமரும்-ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள்,
தமிழரும் அல்லாதார் என்று
ஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும்! இந்த பாஷை சரிப்படாது.

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்.

தமிழ் வேளாளர் ஒருவர்,
இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும்
ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும்
தெலுங்கர்கள் என்றும்
தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும்
என்னிடம் வந்து முறையிட்டார்"

(பாரதி தமிழ்: பக்.403)

No comments:

Post a Comment