Thursday 17 November 2016

ஈழத்தில் இழந்த மண் -சுருக்கமான வரலாறு

ஈழத்தில் இழந்த மண்
-சுருக்கமான வரலாறு

ஈழம் அதாவது பழங்கால இலங்கைத் தீவு முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதி ஆகும்.

வடயிந்தியாவிலிருந்து (தற்போதைய வங்கதேசம்) தமது கூட்டாளிகளுடன் கப்பலில் ஏற்றி விரட்டப்பட்ட இளவரசன் விஜயன் என்ற மன்னன் கரை ஒதுங்கிய இடம் தென்னிலங்கை.
அவனை குவேனி என்ற தமிழ் அரசி வரவேற்று உதவிகள் செய்து குடிவைத்தாள்.

இது சிங்களவரின் மூல காப்பியமான மகாவம்சம் கூறும் வரலாறு ஆகும்.

குடிவந்த சிங்களவர் பாண்டிய நாட்டிலிருந்து பெண்ணெடுத்து இனப்பெருக்கம் செய்து நாகரீக குடிகளாகி தமக்கான அரசை தென்னிலங்கையில் நிறுவினர்.
தமிழர்களுடன் நட்புறவுடன் இருந்த அவர்கள் காலம் செல்லச் செல்ல தமிழர்களையே போட்டியாக நினைக்கத் தொடங்கினர்.

இன்றும் சிங்கள பாடத்திட்டத்தில் இருக்கும் மகாவம்ச கதை ஒன்று துட்டகாமினி அல்லது துட்டகைமு என்ற சிங்கள இளவரசன் பற்றிக் கூறுகிறது.

அவன் சிறுவயதாக இருக்கும் போது அவனது தந்தையுடன் உணவருந்துகையில் வழக்கமாக உறுதிமொழி எடுத்துவிட்டு உணவருந்துவது வழக்கம்.
அப்போது அவனது தந்தை "தமிழர்களுடன் போர் புரியமாட்டேன்" என்று உறுதிமொழி கூறி மகனையும் கூறச்சொல்கிறார்.
துட்டகாமினி மறுக்கிறான்.
கோபமாகச் சென்று படுக்கையில் கைகால்களைச் சுருக்கி படுத்துக்கொள்கிறான்.
அவனது அன்னை வருகிறாள் அவனிடம் "மூன்று புறம் கடல், வடக்கே தமிழர்கள், நான் எப்படி நீட்டி படுப்பது?" என்று கேட்கிறான்.

இவன் மன்னனானதும் தமிழர்கள் மீது போர் தொடுக்கிறான்.
தமிழர்கள் அப்போது பெரும்பான்மை.
தீவின் முக்கால்வாசி தமிழர் பகுதி.
படையிலும் அறிவியலிலும் நாகரீகத்திலும் மிக முன்னேறிய நிலையில் இருந்தனர்.
துட்டகாமினி படைகள் தோல்வியடைகின்றன.
உடனே துட்டகாமினி தமிழ் அரசனான எல்லாளனை தனிப்பட்ட நேருக்குநேர் போருக்கு அழைக்கிறான்.

துட்டகைமு இளைஞன், எல்லாளனோ வயது முதிர்ந்தவன்.
ஆனாலும் அவன் ஒத்துக்கொள்ளவேண்டிய நிலை.
எனவே மோதல் நடக்கிறது.
அதில் எல்லாளனை கொன்று துட்டகாமினி முழு தீவையும் தனது ஆட்சியில் கொண்டுவருகிறான்.
இது மகாவம்சம் கூறும் வரலாறு ஆகும்.

ஆனாலும் தீவில் தமிழர்கள் தொடர்ந்து பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

சோழரும் பாண்டியரும் இலங்கை மீது படையெடுத்து தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்ததும் சைவம் தமிழர் மத்தியில் பரவியதும் நடந்தது.

சிங்களவர் அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்து தமிழர்களுக்கு சமமான எண்ணிக்கையில் 1700 களில் வருகிறார்கள்.
தமிழர் பகுதியில் குடியேறி குடியேறி தீவில் பாதியை சிங்கள மயமாக்குகிறார்கள்.

1850 வரை தீவில் வடக்கு கிழக்கு என சரிபாதி தமிழர்கள் வசமே இருக்கிறது.

அதன் பிறகு தமிழகத்தை அடிமைப் படுத்திய நாயக்கர்கள் இலங்கையின் மத்தியப்பகுதி அரசான கண்டியின் சிங்கள மன்னர்களுடன் திருமணத் தொடர்பு கொண்டு தாமும் குடியேறி இறுதியில் மன்னனுக்கு வாரிசில்லாதபோது மன்னனின் மைத்துனனாக தெலுங்கனை கண்டி மன்னனாக்குகின்றனர்.
பிறகு வரிசையாக தெலுங்கு மன்னர்களால் இலங்கையின் பாதியளவு விரிந்திருந்த கண்டி ராஜ்ஜியம் ஆளப்பட்டு கடைசியாக கண்ணுச்சாமிநாயுடு என்ற மன்னனுடன் முடிகிறது.
வடக்கே வன்னிப்பகுதியை ஆண்ட பண்டார வன்னியனுடன் தமிழர் ஆட்சி முடிகிறது.

ஐரோப்பியர் தமிழர்களையும் சிங்களவரையும் வீழ்த்தி தமது ஆட்சியை நிறுவுகிறார்கள்.

அதன்பிறகு தமிழகத் தமிழர்களை உலகம் முழுவதும் தோட்டத்தொழிலுக்கு கொண்டுசென்ற ஆங்கிலேயர்.
இலங்கை மத்தியில் இருக்கும் மலையகத்திற்கும் கொண்டுசென்று குடிவைக்கின்றனர்.

ஆட்சிகள் எவ்வாறு மாறினாலும் சிங்களவர் தமது இனப்பெருக்கத்தை நிறுத்தவில்லை.
நிறைய பிள்ளைகள் பெற்று பெற்று அவர்களது தாய்நிலம் விரிந்துகொண்டே போனது.
இயற்கையான முறையில் இனப்பெருக்கம் நடந்த தமிழினம் சிறுபான்மையாகி சுருங்கிக்கொண்டே வந்தது.

மிதமிஞ்சிய இனப்பெருக்கத்தால் சிங்களவர் மத்தியில் பஞ்சமும் நெருக்கடியும் எப்போதும் இருக்கிறது.

ஆங்கிலேயர் தம் பிரித்தாளும் அரசியலுக்கு வடயிந்தியாவைப் போலவே இலங்கையிலும் மத அடையாளத்தை திணித்தனர்.
தமிழ் சைவர்களையும் கிறித்துவர்களையும் "தமிழர்" என்றே குறித்தனர்.
ஆனால் இலங்கை இசுலாமியர் அனைவரும் தமிழரே.
அவர்களை "முஸ்லீம்" என்று ஆவணங்களில் குறித்தனர்.
தனிச் சலுகைகள் வழங்கினர்.

தமிழகத்திலும் கிறித்தவ இசுலாமியருக்கு அரசு தனியாக சலுகைகள் தந்தது.
அதனாலேயே இந்துக்கள் பிராமணர்- பிராமணரல்லாதார் என்று ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலக் கல்வி கற்று ஆங்கிலேயருக்கு அடுத்ததாக தென்னிந்தியாவில் தமிழ்-பார்ப்பனரும் இலங்கைத் தீவில் யாழ்-வெள்ளாளரும் பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்தனர்.

ஆங்கிலேயர் மற்றும் பார்ப்பனர் செய்த அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகள் அனைத்தும் தமிழரே பூர்வ குடி என்றும் தமிழே மூத்த மொழி என்றும் உண்மையை வெளிக்கொண்டு வந்தது.

இதனால் அத்தனை இனங்களும் தமிழர்களை பொறாமையுடன் பார்க்க தொடங்கினர்.

இதுவே சிங்கள இனவாததத்திற்கும் திராவிட அரசியலுக்கும் வித்திட்டது.
இந்த வித்து மரமாக வளர்ந்து தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களுக்கு எதிரான அரசியல் களம் அமையக் காரணமானது.
கல்வி மூலம் தமிழர் அடைந்த உயர்வை தமிழரல்லாதார் அரசியல் மூலம் அடைய வழி வகுத்தது.

சென்னை மாகாணத்தில் அமைந்த முதல் அமைச்சரவையில் ஒரு தமிழர் கூட இல்லை.
அதே போல இலங்கையில் அமைந்த முதல் அமைச்சரவையில் ஒரு தமிழர் கூட இல்லை.

ஆங்கிலேயர் தமது பிரித்தாளும் அரசியலுக்காக தமிழகத் தமிழரையும் ஈழத் தமிழரையும் பிரித்தே ஆண்டனர்.

விடுதலை வழங்கும்போதும் 1947லேயே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒரே நேரத்தில் விடுதலை வழங்கியிருக்கலாம்.
இலங்கைக்கு 1948ல் தனியாக விடுதலை வழங்கினர்.
ஈழத் தமிழர்கள் இதனை எதிர்க்கவில்லை.
தமிழகத் தமிழரும் எதிர்க்கவில்லை.
இருவரும் ஒன்றுசேர்ந்து இருக்க நினைக்காதது ஒரு வரலாற்றுப் பிழை ஆகும்.

கண்டியில் அரசாட்சியைக் கைப்பற்றிய தெலுங்கு வாரிசுகள் இப்போது சிங்கள இனவெறியைக் கையிலெடுத்து அரசியலைக் கைப்பற்றினர்.
ஆங்கிலேயருக்குப் பிறகு இலங்கையை ஆளும் அனைவரும் தெலுங்கு வாரிசுகளே.
முழு சிங்களவர் யாரும் இதுவரை ஆளவில்லை.
அதேபோல தமிழகத்திலும் ஆண்டவர்கள் ஆள்பவர்கள் 80% தெலுங்கர்கள்.

பிறகு தந்தை செல்வா தலைமையில் அறவழிப் போராட்டம்.
அதனையடுத்து தனிநாடு கோரிக்கை.
அதனையடுத்து ஆயுதப்போராட்டம் வெடித்தது.

இதேபோல தமிழகத்திலும் தமிழரசன் தலைமையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியது.
ஆனால் ஆரம்பத்திலேயே எம்.ஜி.ஆர் ஆல் ஒடுக்கப்பட்டது.

ஆனால் சிங்களவர் இனப்பெருக்கமும் தமிழர் தாய்நிலம் சுருங்குதலும் நிற்கவேயில்லை.

அதேபோல தமிழகத்தில் வேற்றின ஆட்சி 1550ல் ஏற்பட்ட பிறகிலிருந்து வேற்றினத்தார் தொடர்ந்து குடிவந்துகொண்டே இருக்கின்றனர்.

பிறகு லட்சக்கணக்கான தமிழகத் தமிழரை மலையகத்திலிருந்து வெளியேற்றியது.
அதற்கு ஈழத்தவர் உதவமுடியாது தவித்தது.

பிறகு புலிகளின் எழுச்சி.
இந்தியாவின் தலையீடு.
தமிழர் மீதான இந்தியாவின் இனப்படுகொலை.
பிறகு தமிழகத்தின் உதவியுடன் புலிகளின் இராணுவ பேரெழுச்சி.

அதன்பிறகு உலகநாடுகள் சேர்ந்து இந்திய திராவிட ஆதரவுடன் சிங்கள இராணுவத்தால் தமிழர் மீது நிகழ்த்தப்ட்ட வெளிப்படையான இனப்படுகொலை என வரலாறு நீள்கிறது.

இன்று சிங்கள பேரினவாத அரசு இலங்கையில் முக்கால்வாசிக்கும் மேல் சிங்களமயமாக்கி விட்டனர்.

தமிழர்கள் தாய்நிலத்தை விட்டு வெளியேறி பல நாடுகளில் அகதிகளாக  திரியும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

தமிழகத் தமிழர்கள் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.

தமிழகத்தில் தென்கோடியில் விளாத்திகுளம் வரை தெலுங்ரும்
தென்கோடி தேனி வரை கன்னடவரும்
வடகோடி சென்னை வரை மலையாளிகளும்
குடியேறி கணிசமாக வாழ்கின்றனர்.
தமிழகத் தமிழரோ வேளாண்மை அழிந்து வந்தேறி அரசாங்கத்தின் திறமற்ற செயல்பாடுகளால் பிழைப்பு தேடி தாய்நிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

உலகில் பரந்துவாழும் ஈழ அகதிகள் 15 லட்சம்.
ஆனால் தமிழகத் தமிழர் அகதிகள் எண்ணிக்கை ஒரு கோடி.
(தமிழகத்திற்கு வெளியே இந்திய மாநிலங்களில் மட்டுமே 80 லட்சம் பேர் வாழ்கின்றனர்)

  ஆக தமிழகமும் ஈழமும் சேர்ந்த தமிழர்நாடு நான்குபுறமும் சுருங்கிக்கொண்டே வருகிறது.

தாய்நிலத் தமிழர் அடர்த்தியும் குறைந்துகொண்டே வருகிறது.

ஆகவே ஈழத்தமிழர்கள் தனியே ஈழம் கேட்டுப் போராடாமல் தமிழகத் தமிழருடன் ஒன்றுசேர்ந்து தமிழர்நாடு அமைக்கப் போராடவேண்டும்.

No comments:

Post a Comment