Wednesday 8 October 2014

விலைபோகும் தமிழர் கலைகள்

இடம்: மஹிபால்பூர், டெல்லி.

டெல்லியில் இந்திராகாந்தி அனைத்துல
வானூர்தி நிலையத்தின் (IGIA) அருகே,
தமிழகத்திலிருந்து ஆட்களைக்
கூட்டிச்சென்று கலைவேலைப்பாடுகளுடன் ராமர்
கோவில்கட்டுகின்றனர்;

கோவிலில் பளிங்கு தரை, குளிரூட்டி,
வண்டி நிறுத்தும் இடம் எல்லாம் உண்டு;
அதன் வாசலில் நல்ல உயரமான அரச(ராஜ)கோபுரம்
கட்டவுள்ளனர்;

என் குழந்தைப்பருவ நண்பர் Anbudan Maya
இங்கே வந்துள்ளார்;

அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன்;
இந்தப் படத்தில் பின்னால் தெரிகிறதே இதுபோன்ற
வேலைப்பாடுகளுக்கே அந்தப்பக்கமாக வரும்
வடயிந்தியனெல்லாம் வாயைப்பிளந்துகொ
ண்டு அங்கேயே மணிக்கணக்கில் நின்று அவர்கள்
வேலைசெய்வதை வேடிக்கை பார்க்கிறான்;

இந்த சராசரி சாந்து(சிமெண்ட்)
வேலைப்பாடுக்கே இப்படியா?!
இன்னும் கோபுரம் வேறு வந்துவிட்டால் அவ்வளவுதான்.
வடயிந்தியனுக்கு கலைகள் எதுவும் தெரியாது;

கோவில்கள் எல்லாம் மொழுக்கட்டீர் என்று கூசாவைக்
கவிழ்த்ததுபோல்தான் இருக்கும்.
நமக்குத்தான் நம் கலைகள் அருமை தெரியவில்லை;

வடயிந்தியன் காசுகொடுத்து நமது கலையை அவன்
இடத்தில் ஏற்படுத்தி பெருமை பீற்றிக்கொள்ளப்
போகிறான்;

கேரளா,கர்நாடகா,ஆந்திராக்காரர்கள்தான்
இவ்வாறு செய்துவந்தனர்;
இப்போது வடயிந்தியரும் தொடங்கிவிட்டனர்;
கட்டியவன் தமிழன் என்று எவனுக்குத்
தெரியப்போகிறது?

https://m.facebook.com/photo.php?fbid=460474454056213&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13

No comments:

Post a Comment