Saturday 25 February 2017

ஆ.. ஊ..னா ஆரியன்

ஆ.. ஊ..னா ஆரியன் >.<

தாத்தா காலத்துல குடிவந்த மார்வாடி சேட்டுகளே இங்க கருகருனு ஆயாச்சு

(எ.கா:- பியூஷ் மானுஸ், ஆர்.ஜே.பாலாஜி)

இதுல ஆரியர்கள் 3000 ஆண்டுகளா வெள்ளை நிறமா இருக்காங்களாம் 

என்னா அறிவு?

பார்ப்பானரைத் தவிர வேற யாருமே நிறமில்லையா இங்கு?

ஜாதி என்பது தொழிலுடன் தொடர்புடையது.
தொழில் பொருளாதாரத்துடன் தொடர்புடையது.
உடல் நிறத்தின் மாற்றமும் தொழிலுடன் தொடர்புடையதே.

(வாழ்விடத்தின் பொறுத்து வரும் தோல் நிறத்தை இங்கே கூறவில்லை)

ஆரியத்தை அழிப்பது இயலாத ஒன்று.
இருக்கிற ஒன்றைத்தானே அழிக்கமுடியும்?

இல்லாத ஆரியத்தை இல்லாத திராவிடம் கொண்டு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் எதிர்க்கலாம்.

ஆனால் இருக்கும் தமிழியத்தை இல்லாததை நோக்கி திருப்புவது எப்படி பலனளிக்கும்?

சிவனும் ஆரியத்தை எதிர்த்த தக்காண பீடபூமி தமிழனாம்.
சிவனை மாணிக்கவாசகர் ஆரியனே என்று அழைக்கிறார்.
கலித்தொகை ஈர்ஞ்சடை அந்தணன் என்றழைக்கிறது.

என்றால் எதுதான் இன்று ஆரியம்?

ஆரியம் என்றால் இன்று ஹிந்தியம்.
திராவிடம் என்றால் இன்று வடுகம்.
தமிழியம் என்றால் என்றும் தமிழியம்.

2 comments:

  1. சங்க நூல்களில் "ஆரிய" என்ற சொல் ஆரியவர்த்தம் என்ற வடபாரத நிலப்பகுதியைத் தான் கறிக்கிறது.அங்கு ஆண்ட மன்னர்கள் ஆரிய மன்னர்கள் எனப்பட்டனர்.சங்க காலத்திலும் தமிழ் நாட்டில் பிராமணர்கள் இருந்திருக்கிறார்கள்.அவர்களை ஆரியர் எனக் குறிப்பிடவில்லை.பார்ப்பான், அந்தணன் போன்ற சொற்கள் பிராமணரைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.நெய்தற் கார்க்கியர்,வாதுளி நற்சேந்தனார்,காசிபன் கீரனார்,தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் போன்ற புலவர்கள் பிராமண கோத்திரப் பெயர்களைக் கொண்டுள்ளதால் பிராமணர்களாகக் கருதலாம்.கபிலர், கடியலூர் உருத்திரங் கண்ணனார், நக்கீரனார் ஆகிய புலவர்களும் பிராமணர்களாகக் கருதப்படுகின்றனர்.சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் கவுண்டின்னிய கோத்திர பிராமணரே.திருஞானசம்பந்தரும் கவுணிய பிராமணரே.அகநானூற்றைத் தொகுப்பித்த உருத்திர சன்மர்(ருத்ர சர்மன்) எனும் பிராமணரே.பாலைக் கோதமனார்,சாண்டிலியனார்,வான்மீகியார்,மார்க்கண்டேயனார்,கேசவனார்,தாமோதரனார்,கவுதமன் சாதேவனார்,கௌசிகனார் போன்ற சமற்கிருதப் பெயர் கொண்ட புலவர்களும் இருந்திருக்கின்றனர்.நச்சினார்க்கினியர் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவர்.ஆரிய எனும் சொல் அறிவுமிக்க என்ற பொருள் தருவதே.திருக்குற்றாலக் குறவஞ்சியில் திருக்கற்றாலத்தை திரிகூடராசப்பக்கவிராயர் "திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே" என்று குறிப்பிட்டுள்ளார்.ஆரியர்கள் ஒரு தனி இனம் எனவும், அவர்கள் உருசியா(Russia)விலிருந்து கைபர் கணவாய் வழியாக பாரதத்திற்குள் நுழைந்தார்கள் எனவும், அவர்களின் வழித் தோன்றல்களே பிராமணர்களும், சத்திரியர்களும் என்ற தேற்றத்தை உருவாக்கியது மாக்சு முல்லர் என்ற செர்மானியர். அவருக்கு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் உதவி இருந்தது.பாலகங்காதர திலகரை "THE ARCTIC HOME" என்ற நூலை எழுத வைத்து அதற்குக் கைம்மாறாக அவர் மீதிருந்த வழக்குகளை நீக்கினர். அம்பேத்கர் கூட ஆரிய படையெடுப்புக் கொள்கையை ஏற்கவில்லை. இராமசாமி நாய்க்கரும் அவரின் மாணாக்கர்களும் தான் இதைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர் தமிழ்நாட்டில். DNA ஆய்வுகளும் பாரதத்துக்குள் ஆரியர்கள் வந்து குடியேறினார்கள் என்ற கொள்கை உண்மையில்லை என்பதைத் திட்டவட்டமாக நிரூபித்துவிட்டன.ஆரிய இனம் என ஓர் இனமே கிடையாது.சரச்சுவதி ஆறு வற்றியவுடன் அதன் கரையிலிருந்த மக்கள் வெவ்வேறு திசைகளில் சென்று குடியேறினர்.தனு மற்றும் திதி(Diti) ஆகிய பெண்களுக்குப் பிறந்தவர்கள் முறையே தானவர்கள் என்றும் தைத்தியர்கள் எனவும் அழைக்கப் பட்டனர்.காசிப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவன் இரணிய கசிபு.இரணிய கசிபுவின் கொள்ளுப் பேரன் மாவலி(Mahabali).அசுர குல சிற்பி மயனை ஒரு தமிழனாகக் கருதலாம்.இராவணனின் தந்தை விச்சிரவசு ஒரு பிராமண முனிவர்.அவனது தாய் ஓர் அசுரப் பெண்.Zoroastrianism எனும் சமயத்தைச் சேர்ந்தவர்கள் அசுரர்களை வழிபடுபவர்கள்.பார்சிக்கள் இச்சமயத்தின் ஒரு பிரிவினர்.சௌராட்டிரப் பகுதியிலிருந்து போனவரால் உருவாக்கப்பட்டதே Zoroastrianism.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தகவலுக்கு :)

    ReplyDelete