Showing posts with label tamil republic. Show all posts
Showing posts with label tamil republic. Show all posts

Wednesday, 6 September 2017

தமிழர்நாடு (வட்டார எல்லைகள்)

தமிழர்நாடு (வட்டார எல்லைகள்)

ஏற்கனவே உள்ள மாவட்ட, வட்டார எல்லைகளைப் பெரிதும் பயன்படுத்தி
அதிக நீளம் வராதவாறு எல்லைக்கோடு வரைந்தால் இதுதான் நம் நாடு.

தமிழர்நாடு !

Thursday, 10 July 2014

சிறிலங்கா தனிநாடானது எப்படி?


சிறிலங்கா (இந்திய) மாநிலம்

! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! 

ஒருவேளை தமிழர் நிலம் தமிழ்நாடு மாநிலமாகவும், சிங்களர் நிலம் சிறிலங்கா மாநிலமாகவும் இந்தியாவுக்கு உள்ளேயே இருந்திருந்தால் அதன் வரைபடம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்திருக்கும்.

நியாயமாக அப்படித்தான் நடந்திருக்கவேண்டும்.

மற்ற இனங்கள் தமது நிலத்தை விடவும் தாண்டிப்போய் அண்டை இனத்தின் நிலங்களை ஆக்கிரமித்தபோது தமிழர்கள் தமது நிலத்தைக்கூட காத்துக்கொள்ள முயலவில்லை.
அதனால் 70,000 சகிமீ தமிழக நிலம் அண்டை மாநிலங்களிடம் போனது,
ஈழம் அடியோடு பறிபோனது.

பாகிசுத்தானும் வங்கதேசமும் நூறாயிரக்கணக்கான உயிர்களை ஈந்து தனிநாடானார்கள்.
ஆனால் சிராய்ப்புகூட இல்லாமல் இலங்கை தனிநாடானது எப்படி?

பஞ்சாபியர், வங்காளியர், தமிழர் என்ற இனங்கள் வெள்ளையன் ஆண்ட இந்தியாவிலேயே அதிக எண்ணைக்கையும், அறிவார்ந்த மக்களையும், வீரவரலாற்றையும், வெளிநாட்டுத் தொடர்பும் கொண்டிருந்தன.

இவை கவனமாக இரண்டாக உடைக்கப்பட்டன.

அவர்கள் மதத்தால் பிரிக்கப்பட்டனர்; நாம் கடலால் பிரிக்கப்பட்டோம்.

என்றேனும் ஒருநாள் தமிழர்கள் தனியரசு அமைத்து வல்லரசாக வருவார்கள் என்று வெள்ளைக்காரன் கணக்கு போட்டு, நம்மை பிரிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிறிலங்கா என்ற நாட்டை அவர்கள் கேட்காமலேயே உருவாக்கி 1948ல் ஒரு ஆண்டு கழித்து விடுதலை வழங்கினான்.

ஈழம் எங்கள் மாநிலத்துடன் இணையவேண்டும் என்று தமிழகமோ
நாங்கள் தமிழகத்துடன்தான் இணைவோம் என்று ஈழமோ
குரல் எழுப்பவுமில்லை.

இப்போது விளைவுகளை சந்திக்கிறோம்.

ஈழம் தனிநாடு கோரியபோதுகூட தமிழகத்தின் விடுதலை கோரிக்கையை அது உற்றுநோக்கவில்லை.

இன்னும் இன்னும் அழிவைத்தான் சந்திக்கப்போகிறோம்.

இதற்கெல்லாம் தனித்தமிழ்க்குடியரசு ஒன்றே தீர்வு.


https://www.facebook.com/photo.php?fbid=448275185276140&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

தமிழ்க் குடியரசின் எல்லைகள்



எதை நோக்கி நாம் போராடவேண்டும்?
========================

காலிஸ்தான் பற்றி இணையத்தில் தேடியபோது அவர்கள் தமது தாய்நில வரைபடத்தை பலவாறு வரைந்துள்ளதை அறிந்தேன்; அதேபோல நமக்கு குழப்பம் வரக்கூடாதே என்றுதான் ஐயமே இல்லாத தமிழர் தாய்நிலத்தின் வரைபடத்தை இங்கே தருகிறேன்; ஏற்கனவே நான் வெளியிட்டிருந்த படத்தில்( https://m.facebook.com/photo.php?fbid=366164226820570&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&source=42&refid=17) ஈழப்பகுதியையும், கேரளா ஆக்கிரமித்துள்ள பகுதியையும் திருத்தியுள்ளேன்; அதே போல அந்தமான்-நிகோபர் பகுதியை நாம் ஐயமின்றி நமது பகுதி என்று கூறவியலாது என்பதால் தற்போதைக்கு நீக்கியுள்ளேன்; நமக்கு எந்த ஐயமும் இல்லாத பகுதியின் வரைபடத்தை கிடைத்துள்ள சான்றுகளோடு தருகிறேன்; முதலில் நாம் இப்பகுதியை மீட்டபிறகு மற்ற பகுதிகளை ஆராய்ந்து நம் நாட்டுடன் இணைப்பதா அல்லது அப்பகுதி பூர்வீக மக்களுக்கு விடுதலை பெற்றுத் தந்து நம்மோடு இணைந்துகொள்ள வலியுறுத்துவதா என்பதை அறம் வழுவாது பிறகு முடிவுசெய்யலாம்; உலகின் தற்போதைய மூத்த இனம் என்றவகையில் உலகத்தவர் யாவருக்கும் இனவிடுதலை பெற்றுத்தரவேண்டிய பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது;
சுருங்கிவரும் நம் தாய்நிலத்தை காக்கவேண்டும்;அதில் எந்த குழப்பம் வரக்கூடாது; நமது நாட்டை நாம்நிறுவும் வரை இதுதான் தாய்நிலம்; யார் தமிழர் தாய்நிலம் பற்றி கேட்டாலும் இந்த படத்தையே காட்டுங்கள்;
முக்கியமான சில எல்லைப் பகுதிகளை சிவப்பில் குறித்துள்ளேன்;எல்லைப்பகுதிகள் பெரும்பாலும் வேற்றுமொழியில் உள்ளன; தற்போதைய பெயர்களையே தருகிறேன்;
கடிகாரத் திசையில் தற்போதைய கேரளாவின் தென்கோடி மேற்கில் 'திருவனந்தபுரம்',நம்முடையது; தற்போதைய கேரளாவின் நடுப்பகுதியில் 'காலடி' வரை நமது; தற்போதைய கேரளாவின் வடகோடி மேற்கில் 'கேளகம்' வரை நமது; தற்போதைய கர்நாடகாவில் தென்கோடி மேற்கில் 'திதிமதி' வரை நமது; அங்கிருந்து வடகிழக்கில் 'கௌடில்' வரை நமது; தற்போதைய ஆந்திராவின் தெற்கே 'புட்டப்பர்த்தி' வரை நமது; அங்கிருந்து வடகிழக்கே 'தோனகொண்டா' மற்றும் 'தர்சி' ஆகியவை நமது வடகோடி எல்லைகளாக உள்ளன; ஈழத்தில் தென்கோடி மேற்கில் 'போதனா' கால்வாய் நமது தென்கோடி எல்லை; தென் தமிழீழத்தின் மேற்கு எல்லை 'எல்லேகொட்டலியா' என்ற பகுதிவரை; வட ஈழத்தின் தென் எல்லை 'மல்வெட்டு ஓயா' ஆறு; மேற்கு ஈழத்தின் தென் எல்லை 'கின் ஓயா' என்ற ஆறு; இதற்கான சான்றுகளை கீழே கருத்துகளில் தந்துள்ளேன்; எனவே இதில் எந்த கருத்தும் இடவேண்டாம்.

நன்றி.

விடுதலை பெறுவோம்
விடுதலை பெற்றுக் கொடுப்போம்


https://www.facebook.com/photo.php?fbid=419383841498608&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739