Showing posts with label சிறி லங்கா. Show all posts
Showing posts with label சிறி லங்கா. Show all posts

Wednesday, 15 July 2015

இதுதான் ஈழக்கொலைக்குத் தீர்வு

இதுதான் ஈழக்கொலைக்குத் தீர்வு

==========================

சிங்களவரிடமிருந்து கொழும்பையும் கண்டி வரைக்குமான நிலத்தையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதுதான் அவர்கள் நடத்திய கொலைக்கும் குற்றங்களுக்கும் தரப்போகிற விலை.

மலையகத் தமிழரை நிலமில்லாமல் வைத்திருந்ததற்கும் விரட்டியடித்ததற்கும் தண்டனை.

மீனவரைச் சுட்டுக் கொன்றதற்காக அவர்கள் கடற்கரைப் பகுதி இல்லாமல் திண்டாடப்போகிறார்கள்.

ஐநா வை அண்ணாந்து பார்க்கிறவர்கள் பார்த்துக்கொண்டே இருங்கள்.

தமிழகப் போராளிகள் ஈழப்போராளிகளுடன் இணைந்து மேற்கண்ட தீர்வை நோக்கி நகர்வார்கள்.

எத்தனை ஆதாரங்கள்? படங்கள்? காணொளிகள்? சாட்சிகள்?

நியாயம் பெற்றுத்தர ஒரு நாதியில்லை.

நேர்மையாக ஒரு வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை.

தீவிரவாதமே தடை என்று வயிற்றிலடித்தவர்கள் இன்று எங்கே?

இதுவொன்றும் அநியாயமான தீர்வு கிடையாது.
கண்டி எமது முப்பாட்டன் கோவில் கொண்டுள்ள எமது மண்.
கொழும்பு இன்றும் தமிழர் பெரும்பாண்மை நகரம்.
நடுப்பகுதி மலையகத் தமிழர் பகுதி.

இதை நாங்கள் எடுத்துக்கொள்வோம்.
போர் நடக்கும்போது சிங்களவர் மேலும் அப்பாவித் தமிழரைக் கொல்வார்களேயானால் மேலும் தாய்நிலத்தை இழப்பார்கள்.

மற்ற இனங்களும் நேர்மையாகப் போர்புரிந்தால் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிலம் கிடைக்கும்.
அப்பாவி மக்களைக் கொன்றால் தாய்நிலத்தை இழக்கவேண்டிவரும்.

Monday, 13 July 2015

ஆஸ்திரீழம் -ஒரு நக்கல் பதிவு

ஆஸ்திரீழம் -ஒரு நக்கல் பதிவு

6666666666666666666666666

ஆஸ்திரீழம் (அடுத்த ஈழம்)?

சிறுலங்காவில் தனித்த தமிழ் தாயகக் கனவு கலைந்துவிட்டதால்,

தமிழ் அறிவாளிகள் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் புதிய ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்,

அவர்கள் கூறுதாவது,
அங்கே முன்னொரு காலத்தில் ஒரு தமிழ் அரசாட்சி ஒன்று இருந்தது.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதி அபாரிஜின் மக்கள் அதிக தொகையில் வசித்த தாயகம் ஆகும்.
அந்த வடக்குப் பகுதியில் 40,000 ஆண்டுகள் பழமையான கலாச்சாரம் இருந்தது.
கூடை பின்னுதல், ஈட்டிமூலம் மீன்பிடித்தல், கதை அளத்தல் போன்றவை அக்காலச்சாரத்தில் அடங்கும்.

மலையேறும் ஒருவர் ஒரு குகையில் கண்டெடுத்த நன்கு பதப்படுத்தப்பட்ட வடை மற்றும் தோசை பார்சல் நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
அதை ஜெர்மனியில் ஆய்வு செய்ததில் அந்த பார்சலின் கார்பன் வயது கணக்கீடு 27,000 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இருக்கும் தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள், கறுப்பாக குட்டையாக ஆண்களும் பெண்களும் பாறை ஓவியங்களில் வரையபபட்டுள்ளவர்கள் தமிழர்களே என்று கூறுகின்றனர்.
அந்த குகை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

ககடு தேசிய பூங்காவானது ககடுதுறை என்று தமிழ் அரசாட்சி நடந்தபோது அழைக்கப்பட்டது.
அதே போல உலுரு என்பது உலுருப்பாலம் என்ற புனித நகரமே என்றும் கூறுகின்றனர்.

வடக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு தமிழ் தாய்நிலத்தை நிறுவும் பொருட்டு தமிழெழுச்சி பரப்புரை நடத்த திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
மேலும் முழு ஆஸ்திரேலியாவையும் பிடித்துக்கொள்ள தேவையான ஆதாரங்கள் பரவலாக ஆங்காங்கு கிடைக்குமாறு செய்யப்படும்.

ஏற்கனவே இருக்கும் கொடியில்,
விரைவில் ஒழிக்கப்படவிருக்கும் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற வார்த்தைக்குப் பதிலாக ஒழியப்போகும் 'டாஸ்மானிய புலி' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு புதிய கொடியாக அறிவிக்கப்படும்.

ஆஸ்திரேலியாவில் பேச்சு வழக்கில் இனி ர மற்றும் ட அழுத்தி உச்சரிக்கப்படும் அதனால் உலகின் மற்ற மக்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும்.

அதேபோல வெள்ளையின ஆஸ்திரேலியர்கள் அகதிகளாக சிறிலங்காவில் வந்து இறங்குவதும் ஒரு உலகளாவிய பிரச்சனையாக இருக்கும்

ஆஸ்திரேலிய நகரங்களின் பெயர்கள் பின்வருமாறு,

சிட்னியிருப்பு
டார்வின்குளம்
அடிலெய்டதளை
மெல்போர்னொச்சி
ஹோர்பர்தப்புரம்
கேன்பற்றைக்கல்
பெர்த்தாளம்

http://answers.yahoo.com/question/index?qid=20090522032026AA9G2C4

(இது 2008 வாக்கில் எழுதப்பட்ட ஒரு சிங்களவனின் நக்கல் பதிவு,
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது)

Thursday, 10 July 2014

சிறிலங்கா தனிநாடானது எப்படி?


சிறிலங்கா (இந்திய) மாநிலம்

! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! 

ஒருவேளை தமிழர் நிலம் தமிழ்நாடு மாநிலமாகவும், சிங்களர் நிலம் சிறிலங்கா மாநிலமாகவும் இந்தியாவுக்கு உள்ளேயே இருந்திருந்தால் அதன் வரைபடம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்திருக்கும்.

நியாயமாக அப்படித்தான் நடந்திருக்கவேண்டும்.

மற்ற இனங்கள் தமது நிலத்தை விடவும் தாண்டிப்போய் அண்டை இனத்தின் நிலங்களை ஆக்கிரமித்தபோது தமிழர்கள் தமது நிலத்தைக்கூட காத்துக்கொள்ள முயலவில்லை.
அதனால் 70,000 சகிமீ தமிழக நிலம் அண்டை மாநிலங்களிடம் போனது,
ஈழம் அடியோடு பறிபோனது.

பாகிசுத்தானும் வங்கதேசமும் நூறாயிரக்கணக்கான உயிர்களை ஈந்து தனிநாடானார்கள்.
ஆனால் சிராய்ப்புகூட இல்லாமல் இலங்கை தனிநாடானது எப்படி?

பஞ்சாபியர், வங்காளியர், தமிழர் என்ற இனங்கள் வெள்ளையன் ஆண்ட இந்தியாவிலேயே அதிக எண்ணைக்கையும், அறிவார்ந்த மக்களையும், வீரவரலாற்றையும், வெளிநாட்டுத் தொடர்பும் கொண்டிருந்தன.

இவை கவனமாக இரண்டாக உடைக்கப்பட்டன.

அவர்கள் மதத்தால் பிரிக்கப்பட்டனர்; நாம் கடலால் பிரிக்கப்பட்டோம்.

என்றேனும் ஒருநாள் தமிழர்கள் தனியரசு அமைத்து வல்லரசாக வருவார்கள் என்று வெள்ளைக்காரன் கணக்கு போட்டு, நம்மை பிரிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிறிலங்கா என்ற நாட்டை அவர்கள் கேட்காமலேயே உருவாக்கி 1948ல் ஒரு ஆண்டு கழித்து விடுதலை வழங்கினான்.

ஈழம் எங்கள் மாநிலத்துடன் இணையவேண்டும் என்று தமிழகமோ
நாங்கள் தமிழகத்துடன்தான் இணைவோம் என்று ஈழமோ
குரல் எழுப்பவுமில்லை.

இப்போது விளைவுகளை சந்திக்கிறோம்.

ஈழம் தனிநாடு கோரியபோதுகூட தமிழகத்தின் விடுதலை கோரிக்கையை அது உற்றுநோக்கவில்லை.

இன்னும் இன்னும் அழிவைத்தான் சந்திக்கப்போகிறோம்.

இதற்கெல்லாம் தனித்தமிழ்க்குடியரசு ஒன்றே தீர்வு.


https://www.facebook.com/photo.php?fbid=448275185276140&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739