உலகத் தமிழருக்கு ஒரு அறிவுறுத்தல்.
தாய்மண்ணில் தலைவர் வழியில் நாங்கள் போராடத் தொடங்கியதும்
உலகத் தமிழர் தத்தமது பங்களிப்பைச் செய்யவில்லை என்றால்
அவர்களது சந்ததிகளுக்கு தமிழர்நாடு உதவாது.
ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தமிழினத்தின் போராட்டத்திற்கு விமர்சனங்களை மீறி தமது பங்களிப்பைச் செய்யவேண்டும்.
பங்களிப்பானது,
ஆட்களாக இருக்கலாம்.
ஆயுதமாக இருக்கலாம்.
பணமாக இருக்கலாம்.
அரசியலாக இருக்கலாம்.
தொழில்நுட்பமாக இருக்கலாம்.
தம்மால் முடிந்த பங்களிப்பினை தாய்நிலத்திற்கு அனுப்பவேண்டும்.
தமிழினத்தின் எந்த பிரிவினர் தமிழர் தனிநாடு நிறுவலுக்கு உதவவில்லையோ
அவர்களுக்கு பின்னாளில் எந்த பிரச்சனை வந்தாலும் தமிழரசு அதில் தலையிடாது.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.
தாய்நிலத் தமிழர்கள் உலகத்தமிழர் ஆதரவின்றி வாழ்ந்துவிட இயலும்.
ஆனால், உலகத் தமிழர்கள் தாய்நிலத்தின் ஆதரவின்றி வாழ்வது கடினம்.
இதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.
அண்ணன் தம்பி ஆனாலும் கணக்கு சரியாக இருக்கவேண்டும்.
Showing posts with label தாய்நிலம். Show all posts
Showing posts with label தாய்நிலம். Show all posts
Saturday, 15 August 2015
உலகத் தமிழருக்கு ஒரு அறிவுறுத்தல்
Thursday, 10 July 2014
சிறிலங்கா தனிநாடானது எப்படி?

சிறிலங்கா (இந்திய) மாநிலம்
! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !
ஒருவேளை தமிழர் நிலம் தமிழ்நாடு மாநிலமாகவும், சிங்களர் நிலம் சிறிலங்கா மாநிலமாகவும் இந்தியாவுக்கு உள்ளேயே இருந்திருந்தால் அதன் வரைபடம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்திருக்கும்.
நியாயமாக அப்படித்தான் நடந்திருக்கவேண்டும்.
மற்ற இனங்கள் தமது நிலத்தை விடவும் தாண்டிப்போய் அண்டை இனத்தின் நிலங்களை ஆக்கிரமித்தபோது தமிழர்கள் தமது நிலத்தைக்கூட காத்துக்கொள்ள முயலவில்லை.
அதனால் 70,000 சகிமீ தமிழக நிலம் அண்டை மாநிலங்களிடம் போனது,
ஈழம் அடியோடு பறிபோனது.
பாகிசுத்தானும் வங்கதேசமும் நூறாயிரக்கணக்கான உயிர்களை ஈந்து தனிநாடானார்கள்.
ஆனால் சிராய்ப்புகூட இல்லாமல் இலங்கை தனிநாடானது எப்படி?
பஞ்சாபியர், வங்காளியர், தமிழர் என்ற இனங்கள் வெள்ளையன் ஆண்ட இந்தியாவிலேயே அதிக எண்ணைக்கையும், அறிவார்ந்த மக்களையும், வீரவரலாற்றையும், வெளிநாட்டுத் தொடர்பும் கொண்டிருந்தன.
இவை கவனமாக இரண்டாக உடைக்கப்பட்டன.
அவர்கள் மதத்தால் பிரிக்கப்பட்டனர்; நாம் கடலால் பிரிக்கப்பட்டோம்.
என்றேனும் ஒருநாள் தமிழர்கள் தனியரசு அமைத்து வல்லரசாக வருவார்கள் என்று வெள்ளைக்காரன் கணக்கு போட்டு, நம்மை பிரிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சிறிலங்கா என்ற நாட்டை அவர்கள் கேட்காமலேயே உருவாக்கி 1948ல் ஒரு ஆண்டு கழித்து விடுதலை வழங்கினான்.
ஈழம் எங்கள் மாநிலத்துடன் இணையவேண்டும் என்று தமிழகமோ
நாங்கள் தமிழகத்துடன்தான் இணைவோம் என்று ஈழமோ
குரல் எழுப்பவுமில்லை.
இப்போது விளைவுகளை சந்திக்கிறோம்.
ஈழம் தனிநாடு கோரியபோதுகூட தமிழகத்தின் விடுதலை கோரிக்கையை அது உற்றுநோக்கவில்லை.
இன்னும் இன்னும் அழிவைத்தான் சந்திக்கப்போகிறோம்.
இதற்கெல்லாம் தனித்தமிழ்க்குடியரசு ஒன்றே தீர்வு.
https://www.facebook.com/photo.php?fbid=448275185276140&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
Subscribe to:
Posts (Atom)