Monday 18 April 2016

ஈ.வே.ரா காமராசரை ஏன் ஆதரித்தார்?

ஈ.வே.ரா காமராசரை ஏன் ஆதரித்தார்?

1951 ன் இறுதி மாதங்களில் தேர்தல் வரவிருந்ததை ஒட்டி
"அடித்துக் கொல்லப்பட வேண்டிய நச்சுப் பாம்பு"
என்று 'ஈ.வே.ரா' தனது 'விடுதலை' இதழில் எழுதிய

நச்சு பாம்புகள் பட்டியல் இதோ ,
1) கு.காமராஜ் (காமராசர்)
2) பி.டி. அனந்த சயனம் ஐங்கார்,
3) பி.எஸ்.குமாரசாமி ராஜா,
4) தேனி என்.ஆர்.தியாகராசன்,
5) வி.வி.கிரி,
6) டி.டி.கிருஷ்ணமாச்சாரி (டிடிகே)

ஆனாலும் காமராசர் வெற்றி பெற்றார்.
அவர் பதவிக்கு வந்த மறுநாளே அவரைப் பலவாறு புகழ்ந்து எழுதினார் ஈ.வே.ரா.
அதன் பிறகு  ஈ.வே.ரா காமராசரைத் தொடர்ந்து புகழ்ந்து பாராட்டி எழுதவும் பேசவும் தொடங்கினார்.

இதனை பரப்பிக்கொண்டு என்னமோ காமராசரின் வளர்ச்சிக்கே ஈ.வே.ரா தான் காரணம் என்பது போல பரப்புரை செய்கின்றனர் திராவிடர்கள்.

கதை இதோடு முடியவில்லை.
ஈ.வே.ரா எவ்வளவு மோசமான பிழைப்புவாதி என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ஈ.வே.ரா தன்னை விட 46 வயது குறைந்த தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்தார்.
அதுவும் திராவிடத் தொண்டர்களைப் போல (அன்று சட்டப்படி செல்லாத) சுயமரியாதைத் திருமணம் செய்யவில்லை.
தன் சொத்துக்களைக் காப்பாற்ற முறைப்படி திருமணம் செய்தார்.
இதனால் கோபமடைந்த அண்ணாதுரை தனியாக கட்சி தொடங்கினார்.
அண்ணாதுரையும் ஈவேராவும் ஒருவரை ஒருவர் படுமோசமாக விமர்சித்து எழுதினர்.
அண்ணாதுரை தன்னை கொலை செய்ய முயல்வதாகவும் ஈ.வி.கே சம்பத் அதற்கு உதவுவதாகவும் ஈ.வே.ரா எழுதினார்.
அண்ணாவும் சம்பத்தும், பெரியார் மற்றும் மணியம்மை மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருவரையும் நீதிமன்றம் வந்து மன்னிப்பு கேட்க வைத்தனர்.

1960களில் தி.மு.க பெரிய அளவில் செல்வாக்கு பெறத் தொடங்கியது.

அண்ணாதுரையைப் பழி வாங்கவேண்டும் என்பதற்காகவே காமராசரை தீவிரமாக ஆதரித்தார் ஈ.வே.ரா.

ஆனாலும் காமராசர் தோற்றார். 1967ல் அண்ணாதுரை பதவிக்கு வந்தார்.

உடனே பழைய சண்டைகள் அத்தனையையும் மறந்துவிட்டு தி.மு.க ஆதரவாளராக மாறி மறுபடியும் அவர்களோடு போய் ஒட்டிக்கொண்டார் ஈ.வே.ரா.

No comments:

Post a Comment