Thursday 18 February 2016

பறையரையும் இசுலாமியரையும் கேவலமாகப் பேசிய ஈ.வே.ரா

பறையரையும் இசுலாமியரையும் கேவலமாகப் பேசிய ஈ.வே.ரா

ஈ.வே.ரா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடினார் என்று சிலர் கூறுகிறார்கள்.

அவர் பறைச்சி ரவிக்கை போட ஆரம்பித்தது துணிவிலை ஏறக் காரணம் என்று பேசியது பலராலும் அன்று கண்டிக்கப்பட்டது.

அவர் அவ்வாறு பேசவில்லை என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஈ.வே.ரா பறையர்களை இழிவாகப் பேசினாரா?
தாழ்த்தப்பட்ட மக்களை அவர் எவ்வாறு நோக்கினார் என்று இங்கே அலசுவோம்.

இந்த பேச்சை கருணாநிதி தனது முரசொலியில் 1962 ம் ஆண்டின் பொங்கல் சிறப்பு இதழில் கோட்டோவியம் (கார்ட்டூன்) போட்டு வெளியிட்டார்.
(அப்போது திமுக வும் ஈவேராவும் எதிரிகள்.
1968ல் சேர்ந்துகொண்டார்கள்.
இவர்கள் சேர்ந்துகொண்ட பிறகு ஆறாண்டுகள் கழித்து ஈவேரா பேசிய சப்பையான விளக்கத்தைதான் பதிலாகத் தந்து பலரும் அவர் நல்லவர் என்று காட்ட முயல்கிறார்கள்)

அன்பு பொன்னோவியம் என்பவர் 2.3.1963 அன்றைய "நாத்திகம்" வார இதழுக்கு 'ஆசிரியர் அவர்களுக்கு' பகுதியில் "ஆதி திராவிடர்களும் பெரியாரும்" என்ற தலைப்பில் கடிதமொன்றை எழுதினார்.

அந்த கடிதம் ஈ.வே.ரா பறையர்களை இழிவாகப் பேசியதையும் அதன்பிறகு அதற்கு சரியான விளக்கமோ மன்னிப்போ கூறாதிருந்ததையும் வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.
ஈவேரா ஆரம்பித்திலிருந்தே இப்படி பேசிவந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீழே படியுங்கள்

** "துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்!
வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்"
என்று பெரியார் கூறியதாகச் செய்திகள் வந்த போது மலைத்து விட்டவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் தாங்கள் குறிப்பிட்டதைப் போன்று நான் அப்பாவி அல்ல.
ஏனெனில், 1939ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பெரியாரை கூர்ந்து கவனித்து வரும் பல பேர்களில் நானுமொருவன்.

எங்களது நினைப்பிற்கு காரணம் பெரியார் அவர்களோ, அன்றி அவரது பத்திரிகையோ,

அது பற்றிய விளக்கத்தை தராமையாலும்,
பொதுக் கூட்டங்களிலும் கூட அதைப்பற்றி பேச்சு எழாததாலும்,
குறிப்பாக சமீபத்தில் நடந்த மாநாட்டின் போது அதைப் பற்றிய தகவல் எதையும் தெரிந்து கொள்ள முடியாத காரணத்தாலும் எங்களுக்கு மலைப்பு ஏற்பட்டதில் தவறில்லை.
பெரியார் பல சமயங்களில் ஆதி திராவிட மக்களைச் சாடி பழித்துப் பேசியிருக்கிறார்.**

சென்னையில் அம்பேத்கரிஸ்ட்கள் நடத்திய 'அம்பேத்கர்' இதழின் சூட்டுகோல் பகுதியில் (1963 நவம்பர் & டிசம்பர்)

"ஒரு முறை ஈ.வெ.ரா.
துணி விலை ஏறி விட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டதுதான் என்று கூறினார்.
அன்று மறுப்பு கூறினோம்."
என்று வெளியானது.

கே.எஸ். சீதாராமன் அவர்கள் தான் எழுதிய
"கோலார் தங்கவயல் வரலாறு" எனும் (1989. பக்.193) நூலிலும் பெரியாரின் இந்தப் பேச்சை சுட்டிக்காட்டி திராவிடர் வேறு, ஆதி திராவிடர் வேறு என்றே பெரியார் கருதியதாக குறிப்பிடுகிறார்.

இனி தாழ்த்தப்பட்டவரை ஈவேரா எப்படி பார்த்தார் என்று அலசுவோம்

"தீண்டாமை விலக்கு விசயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்காகச் செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது."
(குடியரசு 16.6.1926.)

இங்கே நாங்கள் என்பது பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதியினரை
நீங்கள் என்பது தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாவோரை
(அதாவது தாழ்த்தப்பட்டவரை)

"ஆதி திராவிடர் நன்மை கருதிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதி திராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்"
(குடியரசு 11.10.1931)

இதன்பொருளும் மேற்கண்டதை ஒத்ததே.

அதாவது பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதிகளின் தளபதியாகத்தான் ஈவேரா தன்னை முன்னிறுத்தியுள்ளார்.

அவர் தாழ்த்தப்பட்டோரை மட்டுமன்றி கிறித்துவ இசுலாமியரையும் கேவலமாகக் கருதினார்.
ஈ.வே.ரா தானே வெளியிட்ட அவரது 85வது பிறந்தநாள் விழா மலரில் (17.09.1963) எவ்வளவு கேவலமாக எழுதியுள்ளார் என்று பாருங்கள்.

// 1.பார்ப்பனர்கள்
2.நம்மில் கீழ்த்தர மக்கள்
3.முஸ்லீம்கள்
4.கிறித்துவர்கள்

ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன.//

அதாவது தாழ்த்தப்பட்டோர் கீழ்த்தரமானவர்களாம்.
பார்ப்பனர்களைப்போல பிறமதத்தினரும் தாழ்த்தப்பட்டோரும் பிராமணரல்லாத சாதியாருக்கு எதிரிகளாம்.

மேலும் கூறுவதைப் பாருங்கள்.

// நம்மில் கீழ்த்தர மக்கள் என்பவர்கள் தங்களுடைய இழிநிலை பற்றி கவலை இல்லாதவர்கள்.

சோறு, சீலை, காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்கள்//

ஆக தனது 85 வயது வரை ஈவேரா தாழ்ப்பட்டோரை இழிவாகத்தான் கருதியுள்ளார்.

பறையர்களைக் கேவலமாகப் பேசிய அதே ஆண்டு அவர் சிறுபான்மையினரையும் இசுலாமியரையும் கேவலமாக எழுதியுள்ளார்.

"நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) சமூதாயம், மதம், கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்.

மைனாரிட்டிகளான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியும், காங்கிரசும் காட்டி வந்த சலுகைகளாலும்,
தனி நீதி போன்ற காரணத்தினாலும்,
மேலும் அவர்களது ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும்,

நாடு வளர்ச்சி அடையாமலும், மெஜாரிட்டி மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்!

குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.
இதற்கு உதாரணம், இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்து வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமேயாகும்.

அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி,
ரோட்டில் கல் உடைத்து,
வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்,
அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும்,
பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்!
- ஈவெரா (விடுதலை 6.3.1962)

ஈவேரா பார்ப்பனரை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை ஆதிக்கசாதிகள் பிடிக்க உழைத்தவரே அன்றி அவர் தாழ்த்தப்பட்டோருக்காகச் சிறுதுரும்பையும் அசைத்ததில்லை.

ஏற்கனவே டி.கே.மாதவன் என்பவர் நடத்திவந்த வைக்கம் போராட்டத்தில் ஈவேரா கடைசியாக பத்தோடு பதினொன்றாகத்தான் போய் கைதானார்.

நாடார் ஆலையநுழைவுப் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டதும் இவ்வாறே.

ஆக கடைசிக்கட்டத்தில் போய் பங்குகொண்டு ஏதோ தானே முதலில் இருந்து முன்னின்று நடத்தியதைப் போலப் பீற்றிக்கொள்வது அவர் பாணி.
அவரது சீடர்களும் அந்த போராட்ட வரலாற்றை அப்படியே ஈவேராவுக்கு எழுதிவைப்பார்கள்.

பெரியாரால்தான் இதெல்லாம் நடந்தது என்பதைப்போல திரித்து எழுதுவார்கள்.

இனியும் இப்பொய்யர்களை நம்பவேண்டாம்.

No comments:

Post a Comment