Monday 18 August 2014

நோன்பு பித்தலாட்டம்

நோன்பு பித்தலாட்டம்

வஙவஙவஙவஙவஙவஙவ

ரமலான் மாதம் ஏதோ புனிதமாதம் என்றும் அதில் ஏழைகளின் பசியை உணர நோன்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் இசுலாமிய பரப்பிகள் கூறுகின்றனர்.

இரண்டுமே பொய்.

ரமலான்(ரமதான்) என்றால் அரபியில் 'சாவு' என்று பொருள்.

ரமலானுக்கு முந்தைய மாதம் ஷபான் என்பது; இதற்கு 'சிதறுதல்' என்று பொருள்; இந்த மாதத்தில்தான் அரேபியாவில் வெயில் தீவிரமடையும்; மக்கள் தண்ணீரும் உணவும் தேடி சிதறி அலைவார்கள்; இதற்கடுத்ததுதான் 'சாவு மாதம்' (ramadan) இந்த மாதத்தில்தான் அரேபியாவில் வெளியே வரமுடியாத அளவு வெயில் அடிக்கும்; இந்த மாதத்தில் அரேபிய மக்கள் பகலில் தூங்குவார்கள்,  இரவில் வெளியே நடமாடுவார்கள்; உணவு தேடி சமைத்து உண்பார்கள்; உணவு கிடைக்காதோர், வயதானவர்கள், நோயாளிகள் என பலர் சாவார்கள்.

இரவில் நடமாடி பகலில் தூங்கும் நடைமுறை பன்னெடுங்காலமாக பாலைவன மக்கள் செய்துவருவதுதான்;
நபிகள் நாயகம் (100 ரூபாய் இருந்தால் அதில் 2.50 ரூபாய் கொடையளிக்கவேண்டும் என்ற ஜக்காத் முறை உட்பட) சில விதிமுறைகளை ஏற்படுத்தி இந்த நடைமுறையைச் சட்டமாக்கினார்;
(ஹஜ் புனிதப் பயணம், காபாவை வலம் வருதல், கால்நடைகளைப் பலியிடுதல் போன்ற ஏற்கனவே அராபியர்களிடம் இருந்த பழக்கங்களையும் நபிகள் நாயகம் சட்டமாக்கியுள்ளார்).

இந்த மாதத்தில்தான் குரான் அருளப்பட்டது; எனவே நீங்கள் நோன்பு இருக்கவேண்டும்; அதனால்தான் கொடுமையான இந்த வெயில்காலத்தை இறைவன் உருவாக்கினான் என்றவாறு அறிவுறுத்துகிறார்.

குரானில் எந்த இடத்திலும் ரமலான் புனிதமாதம் என்றோ, ஏழைகள் பசி உணர நோன்பு கட்டாயமாக்கப்பட்டதாகவோ கூறப்படவேயில்லை.
(எச்சில் கூட விழுங்கக்கூடாது என்ற அளவு நம் மக்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள்).

மேலும் சில,

இசுலாமை புரட்டியெடுக்கும் இசுலாமியன்
https://pagaduu.wordpress.com/2012/07/
ஜக்காத் எனும் மாயை
https://senkodi.wordpress.com/2013/04/25/இஸ்லாமியப்-பொருளாதாரம்/
ஈத் தியாகத் திருநாளா?
http://nallurmuzhakkam.wordpress.com/2011/11/06/எது-தியாகம்-அல்லது-எது-தி/

///
https://m.facebook.com/photo.php?fbid=478054252298233&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

No comments:

Post a Comment