Sunday 3 August 2014

ஓவியக் கவி

ஓவியக் கவி

தமிழின் உச்சம்

டபடபடபடபடபடபடபடபடபடபடபடபடபடப

கவிதை என்பதுவரிவடித்தில்தான் உலகம் முழுவதும் படைக்கப்பபடுகிறது; ஆனால், ஒரு கவிதையை ஓவிய வடிவில் தருவது தமிழில் மட்டுமே உள்ளது.

மேலேயுள்ள படத்தில் உள்ள பாடலை வரிவரியாகப் படித்தாலும் சரி சுழல் சுழலாகப் படித்தாலும் சரி ஒரே மாதிரிதான் இருக்கும்;
நேராக வரிவடிவிலும், சுழியாக ஓவிய வடிவிலும் அமைந்துள்ளது.
இதை சுழிகுளம் என்பர்.

கவிமுதி யார் பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா

பொருள் :
வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள்
விலைமதிப்பிட முடியாத அளவிற்குப்
பெருமையுடையனவாகும்.
அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும்.
அப்படி
முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத
செல்வமாகும்....
( http://www.devasundaram.com/2013/06/blog-post_19.html?m=1  )

இத்தகைய பாடல்கள் கவியெழுதவே பிறந்த பிறவிக் கவிஞருக்கும் கடினமானது;
(கவிதைக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்ரா பெü ண்ட்
ஆங்கிலத்திலும், இந்தியாவில் தாகூர் வங்க மொழியிலும் ஓவியக் கவிதைகளை எழுதியுள்ளனர்; சிறிய ஓடை ஓடுவது போன்ற வடிவில் ரஷிய மொழியில் மாயகாவ்ஸ்கியும் , பிரெஞ்சு மொழியில் ஃபார்க், சீன மொழியில் லூசூன் போன்றோர் சித்திரக்கவி எனப்படும் ஓவியக் கவிதைகளை எழுதியுள்ளனர்;
ஆனால், பல நூறாண்டுகள் முன்பே ஓவிய வடிவிலான செய்யுள்கள் தமிழில் உள்ளன)

கீழே விதவிதமான வடிவங்களில் பாடல்கள் வரையப்பட்டுள்ளதைக் காணுங்கள்

ஒரு பாம்பு
https://m.facebook.com/photo.php?fbid=515128225181459&id=453108694716746&set=a.453184938042455.116738.453108694716746&relevant_count=1&refid=21&m_sess=soBxITiX-DDsgRayu&_ft_=qid.5798271391724928424%3Amf_story_key.574692501394141798&_rdr
இரண்டு பாம்புகள்
http://thogai.blogspot.com/2008/03/blog-post.html?m=1
நான்கு பாம்புகள் (பாவலர்.க.பழனிவேலன்)
http://www.thamizham.net/pezhi/rare/rare15-u8.htm
எட்டு பாம்புகள் (அஷ்டநாக பந்தம்)
http://ta.m.wikipedia.org/wiki/சித்திரக்_கவி
தேர் வடிவம் (ரத பந்தம்)
http://thiruppugazhamirutham.blogspot.com/2012/09/113.html?m=1
http://www.itsjg.com/விமான-ரதம்/
http://konguvenadar.org/konguvenadar/radha-bhandhana-nerisa-venba-p-105.html
சக்கரம்
http://sangappalagai.blogspot.com/2012/08/163-12.html?m=1
மயில் வடிவம் (மயூர பந்தம்)
http://2009may18.blogspot.com/2012/07/blog-post_22.html?m=1
தேனி வடிவம்
http://ramilhan.blogspot.com/2012/10/Thenee.html?m=1
மாலை வடிவம்
http://www.yarl.com/forum3/index.php?showtopic=130090
மாணிக்க மாலை
http://natarajadeekshidhar.blogspot.com/2010/04/blog-post.html?m=1
குத்துவிளக்கு (தற்காலத்தில் இயற்றப்பட்டது)
http://vallalarr.blogspot.com/2013/11/blog-post_25.html?m=1
முரசு
http://www.thamizham.net/pezhi/rare/rare16-u8.htm
http://www.tamilvu.org/library/l3H00/html/l3H00p01.htm

முரசு,வேல்,பாம்பு வடிவக் கவிதைகள்
http://paddathumsuddathum.blogspot.com/2013/01/blog-post_13.html?m=1
மயில்,தேர்,தாமரை,இரட்டைப் பாம்பு,வேல்,சதுரங்கம் அமைப்பில் உள்ள பாடல்கள்
http://copiedpost.blogspot.com/2012/06/blog-post_11.html?m=1

மேலும் சில,
திரு எழு கூற்று இருக்கை
http://www.dinamani.com/tamilnadu/article631953.ece
சங்குப் புலவர்
http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article1035383.ece
பாம்பன் சுவாமிகள்
http://ta.m.wikipedia.org/wiki/பாம்பன்_குமரகுருதாச_சுவாமிகள்

இவர்கள் மட்டுமல்லை; ஹலரத் செய்கு இஸ்மாயீல் வலியுல்லா என்ற புலவரும் 'இரத பந்தம்(தேர்)' 'அட்டநாக பந்தம்(எட்டு பாம்பு)' 'இரட்டை நாக
பந்தம்(இரண்டு பாம்புகள்)' 'கமல பந்தம்(தாமரை)' ஆகிய 'சித்திரக் (ஓவியக்)கவிகள்' பாடியுள்ளார்.
இவர் மட்டுமின்றி 'சித்திரக்கவிமாலை' (நூல் தரவிறக்க http://
www.tamilheritage.org/old/text/ebook/
pa.pdf ) என்ற நூலைப் படைத்த புலவர்
பி.வி.அப்துல் கபூர் சாஹீப் சாகிபூ என்பவரும் ஏறக்குறைய 5000 சித்திரக்கவிகளை இயற்றியுள்ளார்.
https://groups.google.com/forum/m/#!topic/mintamil/VX4oYaMFqWk

தற்காலத்திலும் சிலர் ஓவியக்கவிதைகளைப் படைத்துவருகின்றனர்;
ராம்கிஷோர் என்பவருடையது
http://ramilhan.blogspot.com/2012/11/Vendumvendaam.html?m=1
ஆதித்ய இளம்பிறையன் என்பவருடையது
http://thalaivanankatamilan.blogspot.com/2013/08/blog-post_21.html?m=1

ஓவியக் கவிதையின் வகைகள் பற்றி தண்டியலங்காரம் (காலம் கிபி 12ம் நூற்றாண்டு) பின்வருமாறு கூறுகிறது;

கோமூத் திரியே, கூட சதுக்கம்,
மாலை மாற்றே, எழுத்து வருத்தனம்,
நாக பந்தம், வினாவுத் தரமே,
காதை கரப்பே, கரந்துறைச் செய்யுள்,
சக்கரம், சுழிகுளம், சருப்பதோ பத்திரம்,
அக்கரச் சுதகமும் அவற்றின் பால
(தண்டியலங்காரம்-97)

(மேற்கண்ட ஓவியக் கவிகள் தமிழ்மண்ணில் சமசுக்கிருதம் புகுந்த பிறகு தோன்றியவை போலத் தெரிகின்றன;
முற்காலத்தில் தூயத் தமிழில் இயற்றப்பட்டவை இன்று கிடைக்கவில்லை;ஆர்வமுள்ளோர் இப்பதிவிலிருந்து படங்களையும் விளக்கங்களையும் எடுத்து ஒரே பதிவாக இணையத்தில் ஏற்றுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; 'தமிழன் கண்ட சித்திரக் கவிகள்' என்ற ஒரு தொடர் இரு பாகங்கள் வந்துள்ளது;
ஆனால் இணையத்தில் பதியப்பட்டுள்ள எந்த தரவுமே தரமான வகையில் இல்லை; அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிநபர் இணையங்களில் சிதறிக்கிடக்கின்றன;  அதனால்தான் கூறுகிறேன்; இந்த கவிதைகளை ஆவணப்படுத்தி பாதுகாப்பது நமது கடமையாகும்)

மேலும் ஒரு வியப்பான வகைக் கவிதையையும் இங்கே கூறுகிறேன்; ஒரே ஒரு எழுத்தை மட்டுமே பயன்படுத்தி எழுதப்படும் பாடல்கள்

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
http://www.nalan.me/nalan.me.drupal/node/75

கொக்கொக் கிகைக்கா காக் ககக்கை
காக்காகா காக்கைக் கொக் கீகைக்
கை கோக்  கை
http://rajarajan-c.blogspot.com/2013_01_01_archive.html?m=1

"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க
கைக்குக்குக்
     காக்கைக்குக் கைக்கைக்கா கா"
http://www.tamilvu.org/slet/l0B34/l0B34ari.jsp?pageno=376&ref=5

.
( https://m.facebook.com/photo.php?fbid=473214182782240&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739)
எதிலுமே உச்சம்
தமிழன்

No comments:

Post a Comment