Showing posts with label அணு. Show all posts
Showing posts with label அணு. Show all posts

Friday, 17 August 2018

வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்

வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்

வாஜ்பாய் இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றிபெற்றதாக கூறப்படுவது பொய்.

  ஒரு தமிழரான அப்துல் கலாம் இதைச் சாதித்தது பெருமை என்றும் கூறப்படுகிறது.

அப்துல் கலாம் என்ற ஒரு ராக்கெட் விஞ்ஞானியை தலைவராக வைத்துக்கொண்டு அணு விஞ்ஞானத்தில் எப்படி வாஜ்பாய் சாதித்தார் என்பது விடை வராத கேள்வி.

அந்த ப்ராஜெக்ட்டில் அப்துல் கலாமுக்கு அடுத்த தலைவர் டாக்டர்.டி.சிதம்பரம்.
இவரும் ஒரு தமிழர்தான்.

அதற்கு அடுத்தநிலை தலைவரான கே.சந்தானம் என்பவரும் தமிழர்.

இந்த சந்தானம் துணிச்சலாக வெளியே கூறிவிட்டார்.

"நாங்கள் செய்த பொக்ரான் அணுகுண்டு சோதனை தோல்வியில் முடிந்தது" என்று.

போர் வந்தால் இந்தியா அணுகுண்டு போடும் என்று எண்ணும் அப்பாவிகள் உண்மை அறிக.

http://m.oneindia. in/tamil/news/2009/09/18/india-santhanam-favours-probe-into-pokhran-ii.html

http://www.archive. inneram. com/200908261857/pokhran-2-not-successful-report

http://articles.timesofindia. indiatimes. com/2009-08-27/india/28210828_1_thermonuclear-device-pokhran-ii-ctbt

Thursday, 14 January 2016

தோல்வியில் முடிந்த பொக்ரான் சோதனை

இந்தியாவின் உச்சக்கட்ட வலிமையாகப் பார்க்கப்படுவது அதன் அணுவாயுத வலிமை,
ஆனால் அது செய்த அணுகுண்டு சோதனையே வெற்றிபெறவில்லை என்பது வெளிவுலகுக்கு மறைக்கப்பட்ட ஒன்று.

இப்போது சொல்லுங்கள் தமிழர் வீரத்துக்கு முன் இந்தியாவெல்லாம் ஒரு பொருட்டா ?!!!!!!!!!

http://m.oneindia.in/tamil/news/2009/09/18/india-santhanam-favours-probe-into-pokhran-ii.html

http://www.archive.inneram.com/200908261857/pokhran-2-not-successful-report

http://articles.timesofindia.indiatimes.com/2009-08-27/india/28210828_1_thermonuclear-device-pokhran-ii-ctbt

Friday, 27 November 2015

தமிழன் படைப்பு

படைத்தது என்னவோ தமிழன்தான்

[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

நடராசர் சிலை-தமிழன் கலையின் உச்சம்
இந்து என்பான்
இந்தியன் என்பான்
திராவிடன் என்பான்
பார்ப்பனீயம் என்பான்
எவன் எவனோ சொந்தம் கொண்டாடுவான்
எவன் எவனோ குறைசொல்லுவான்

ஆனால், வையமே வியந்து நிற்க
படைத்தது என்னவோ தமிழன்தான்.

*CERN,
*Anand Candish Coomarasamy,
*Investment casting

Tuesday, 30 September 2014

அணுகுண்டே உரமாக

அணுகுண்டே உரமாக

உஊஉஊஉஊஉஊஉஊஉஊ

1945, உலகப்போரில் ஜெர்மனியும் அதன் கூட்டரசுகளும் வீழ்ந்துவிட்ட நேரம்; உலக உருண்டையின் மறுபக்கம் ரஷ்யாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பர்மாவிலிருந்து பசிபிக் தீவுகள் வரை உலகப் பந்தில் கிட்டத்தட்ட 30% ஜப்பானின் கட்டுப்பாட்டில்; வல்லரசுகளான அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா என ஒட்டுமொத்த உலகமும் இப்போது ஜப்பானை நோக்கித் திரும்பியது; சரணடையச் சொன்னார்கள்; ஜப்பான் மறுத்துவிட்டது; அமெரிக்கா பசிபிக் கடலில் முதல் அடி எடுத்துவைத்தது; வலுவான பதிலடி கிடைத்தது; பர்மாவில் இங்கிலாந்தும் சீனாவில் ரஷ்யாவும் கடுமையான மோதலுக்கும் பிறகு சில பகுதிகளை மீட்டன;
நேருக்கு நேர் மோதினால் ஜப்பானைத் தோற்கடிக்க 30ஆண்டுகளும் கோடிக்கணக்கான உயிர்ச்சேதமும் ஆகலாம் என்று கணக்கு சொன்னார்கள்;
1945-8-6 அன்று முதல் அணுகுண்டு ஹிரோஷிமா நகரில் முதல் அணுகுண்டு போடப்பட்டது; 1,40,000 பேர் உயிரிழக்கக் காரணமானது; ஜப்பான் சரணடைய மறுத்தது; மூன்றுநாட்கள் கழித்து நாகசாகியில் அணுகுண்டு; 70,000 பேர் உயிரிழக்கக் காரணமானது; வேறு வழியில்லாமல் ஜப்பான் 15ஆகஸ்ட்1945ல் சரணடைந்தது(இந்த வெற்றியைத்தான் ஹிந்திய மக்கள் ஸ்வதந்த்ர தினமாக கொண்டாடி வெள்ளையருக்குத் தாம் அடிமை என்பதை நிறுவிவருகின்றனர்); ஜப்பானின் சாமுராய் பரம்பரையினர் பலர் இழுக்கு பொறுக்காமல் தற்கொலை செய்துகொண்டனர்; (ஜப்பானிய அரசு சரணடைந்தாலும் ஜப்பான் படைத் தலைவர்கள் சரணடைய மறுத்து தொடர்ந்து அக்டோபர் வரை போர்புரிகின்றனர்).
அன்று ஜப்பானின் நிலை படுபாதாளத்தில் வீழ்ந்திருந்தது;
அழிவை சதவீதமாகக் கூறவேண்டுமானால், தலை நகரம் 57%, உற்பத்தி 90%, தொழிற்சாலைகள் 30%, கப்பல் கட்டுமானம் 80% அழிந்து போயிருந்தது; 81நகரங்கள் வானூர்தித் தாக்குதலில் அழிந்துபோயிருந்தன;
விலைவாசி 45மடங்கு அதிகம்; தலைநகர் டோக்கியோவில் 57% அழிவு; தொள்ளாயிரமாயிரம்(90லட்சம்) உயிரிழப்புகள்; ஒருகோடிப் பேரைக் கொன்ற கொலைப்பழி; கதிர்வீச்சு, நோய், பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், அரசு கலைப்பு, வீடில்லாத நிலை.
ஜப்பான் மீள 150ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டார்கள்;
ஆனால், பதினாறே ஆண்டுகளில் தலைநிமிர்ந்தது ஜப்பான்(!!).
அதுதான் ஜப்பான்.
நிலையான அரசு கிடையாது; வழிநடத்த தலைவன் கிடையாது; 1945-1952வரை அமெரிக்க ஆட்சி; படை கலைக்கப்பட்டு ஐநூறாயிரம்(5லட்சம்) வீரர்கள் வேலையிழந்தனர்; தொழிற்சாலை,படைத்துறை, அரச வேலைகளில் இருந்த அத்தனை பேரும் உணவுக்கு வழியில்லாமல் வேலையில்லாமல் அல்லாடினர்; தள்கொலைகளும் பட்டினிச்சாவுகளும் தெருவுக்குத் தெரு நடந்தது; உலகமே வெறுத்து ஒதுக்கியது; ஆனாலும் தூக்கத்தில் இருந்து எழுவதுபோல மரணத்திலிருந்து எழுந்தது ஜப்பான்; 
போர்க்குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது; அரசரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மக்களாட்சி பிறந்தது; நிலங்கள் அதிகம் வைத்திருப்போரிடமிருந்து நிலம் பிடுங்கப்பட்டது;
வேளாண்மைக்குக் குறைந்த வட்டியில் கடன்; அரைவயிறோடு மாணவர்கள் கல்வி கற்றனர்; புதிய 167 பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன; 5000தனியார் நிறுவனங்கள் பொதுநிறுவனங்கள் ஆக்கப்பட்டன;
பெரிய நிறுவனங்கள் அழைக்கப்பட்டு வழிமுறைகள் வழங்கப்பட்டன; நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களையும் பொதுமக்களையும் பங்குதாரர்களாக ஆக்கின; படை இல்லாத நிலையைச் சமாளிக்க 1,10,000 பேர் கொண்ட காவல்படை உருவானது;
விலைவாசியைக் குறைக்க உற்பத்தி அதிகமாக்கப்பட்டது, மக்களிடம் பணப்புழக்கம் குறைக்கப்பட்டது, மக்கள் கையிலிருக்கும் பணத்தை அரசிடம் ஒப்படைத்தனர்; 360% இருந்த பணவீக்கம் கொஞ்சம் குறைந்தது; மக்களுக்கு அரசு உதவித்தொகை(500யென், அப்போது 360யென்=1அமெரிக்க டாலர்) தரும் அதுதான் வருமானம்; நகரமக்கள் பட்டிதொட்டிகளுக்குக் குடிபெயர்ந்தனர்; கள்ளச்சந்தையில் எதையும் வாங்குவதை முடிந்த அளவு தவிர்த்தனர்;  ஊழியர்கள் சப்பளம் உச்சவரம்பு அறிவிக்கப்பட்டது; உலக நாடுகளின் உதவிகள் ஏற்கப்பட்டன; வரிகள் கெடுபிடியாக வசூலிக்கப்பட்டன; பொதுமக்கள் சிறுசேமிப்பு அரசிடமே இருக்குமாறு வழியமைக்கப்பட்டது; கொரிய போருக்கு தளவாடங்கள் அனுப்ப உரிமம் பெறப்பட்டு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்;
பட்டு உற்பத்தி மவுசு குறைவதை புரிந்துகொண்டு நைலான்,பாலியஸ்டர் தயாரிக்கத் தொடங்கினர்;
அதாவது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தினர், வேண்டிய மாற்றங்களை உடன் செய்தனர்; தொழிலதிபர்கள் குழுமங்களாக சேர்ந்து தனிவங்கிகள் வைத்துக்கொண்டு அரசு உதவியுடன் தொழிற்துறையை மேம்படுத்தினார்கள்; முக்கியமான தொழில்களுக்கு வரிச்சலுகை; வெளிநாட்டில் தொழில்தொடங்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டன; வேற்றுநாடுகள் உள்நாட்டில் தொழில்தொடங்க தடை; உலகம் முழுவதும் முன்னனி தொழிற்சாலைகளில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன; ஜப்பானிய நிபுணர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று கற்றுவந்தனர்; கப்பல் மூலப்பொருட்களை தரையிறக்கும் துறைமுகங்கள் அருகிலேயே தொழிற்சாலைகள் மாற்றப்பட்டு பொருள்அலைச்சல் குறைக்கப்பட்டது; புதிய ஆலைகள் தொடங்கப்பட்டன; அதிக சம்பளம் வாங்கிய தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு புதிதாக வரும் மாணவர்கள் அமர்த்தப்பட்டனர்; நவீன பொருடகள் சந்தைக்கு வந்தால் அதில் ஒன்றை வாங்கி அதை அப்படியே நகல் எடுத்தாற்போல செய்தனர்; தொழில்நுட்ப கமுக்கங்களை(ரகசியம்) கையூட்டு(லஞ்சம்) கொடுத்து வாங்கினர்; ஆண்களின் சம்பளத்தில் பாதியளவு சம்பளத்திங் பெண்களை வேலைக்கு அமர்த்தினர்; புதிய கண்டுபிடிப்புகள் ஊக்கப்படுத்தப்பட்டன; புல்லட் தொடர்வண்டி, ரோபோ, செயற்கைகோள் என பல்வேறு துறைகளில் சாதனை படைக்க இது வழிவகுத்தது; மாணவர்கள் வெளிநாட்டில் கல்விபெற அனுப்பப்பட்டார்கள்; பொருளாதாரம் உயர உயர அது மக்களுக்குப் பயன்படுமாறு பார்த்துக்கொண்டனர்;
1973ல் இசுரேலுக்கு உதவிசெய்யும் நாடுகளுக்கு எண்ணெய் உற்பத்தியை அரபுநாடுகள் நிறுத்தியபோது, இது நீண்டகாலம் நீடிக்காது என்று தெரிந்த மற்றநாடுகள் அசட்டையாக இருந்தன; பெட்ரோல் விலை உயர்ந்தது; ஆனால், ஜப்பான் முக்கியமான ஆலைகளுக்கு மட்டுமே பெட்ரோல்; அவைகளுக்கும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்தியது; மாற்று ஆற்றல்கள் பயன்பாட்டில் கவனம்; பெட்ரோல் சிக்கன நுட்பங்கள்; பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்தால் பாராட்டு,சலுகை,விருது; இந்த காலகட்டத்தில் ஜப்பானிய உற்பத்தி செலவு மற்ற நாடுகளைவிட குறைவென்பதால் குறைந்தவிலையில் பொருட்களை விற்று சந்தையைப் பிடித்தது; பெட்ரோலிய நாடுகள் அதை விற்காமல் தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்து மறுபடியும் பெட்ரோலை ஏற்றுமதி செய்தபோது பெட்ரோல் விலை குறைந்தது; ஏற்கனவே பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்திருந்த ஜப்பான் மேலும் விலையைக் குறைத்தது.
எத்தனை வீழ்ச்சியிலும் ஜப்பான் பொருட்களின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளவேயில்லை;
ஜப்பான் தனது பழைய நிலையை 1961வாக்கில் அடைந்தது; 1964ல் ஒலிம்பிக் நடத்தி தம் சொந்த செயற்கோள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப அந்த ஒலிம்பிக் சுடரை ஹிரோஷிமா நகரில் பிறந்த யோஷிநோரி ஸக்காய் என்பவரை ஏற்றச்செய்து ஜப்பான்;
உலகத்தாரெல்லாம் பார்வையாளராக அண்ணாந்து பார்க்க கால்மேல் கால்போட்டு நிமிர்ந்த நெஞ்சுடன் வல்லரசு அரியணையில் பத்தொன்பதே ஆண்டுகளில் மீண்டும் அமர்ந்தது ஜப்பான்;
பதக்கப்பட்டியலிலும் 16தங்கம்,5வெள்ளி, 8வெண்கலம் என மூன்றாவது இடம் (ஜப்பானுக்கு 1936ல் முதல் ஒலிம்பிக்ஸ் அதன்பிறகு 1964தான் இரண்டாவது);
வானொலி பழுதுபார்க்கும் கடையாகத் தொடங்கிய சோனி, மிதிவண்டி விளக்குகள் தயாரிப்பில் தொடங்கிய பானசோனிக் உலக முன்னனி நிறுவனங்களாக உள்ளன;
அமெரிக்கா பணத்தில் புரண்டுகொண்டிருந்தபோது மாணவர்கள் வேலைகிடைத்தவுடன் மகிழுந்து வாங்குவதற்காக சிறிய மகிழுந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்தது செய்தது; 1989 அமெரிக்காவிலேயே ஆலைகளைத் தொடங்கியது;
1990களுக்குப் பிறகு பொருளாதாரச் சுழலில் சிக்கினாலும், பல்வேறு இயற்கைச் சீற்றங்கள்,அதிக மக்கள்தொகை, வளக்குறைவு என பல தடைகளைத் தாண்டி ஜப்பான் இன்றும் வெற்றிநடை போடுகிறது ஜப்பான்.
https://m.facebook.com/photo.php?fbid=498153826954942&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=17&_ft_&__tn__=E