Saturday 6 December 2014

தமிழகம் இழந்த பகுதிகள் -2

பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை.
அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது.
அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.
ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?
வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர்.
ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர்.
ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன்,
‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லாபகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.
வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர்.
இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.
ஆனாலும் தமிழத்தின் தேசிய
திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன்வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப்பகுதியில் திருத்தணி, வள்ளிமலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.
1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது.
சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது.
ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது.
திருப்பதி பறிபோனது.
காளஹஸ்தி போனது.
நந்தி மலை போனது.
நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால்
பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.
சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள்.
பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.
இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல்கட்சிகள்

No comments:

Post a Comment