Wednesday 16 October 2024

கயவாளி கட்டபொம்மன் 1

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் பரம்பரையின் வரலாறு

பகுதி -1

தெலுங்கர் நுழைவு
------------
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற தலைப்பில் தமிழ்வாணன் அவர்கள் எழுதிய நூல் ஆளும் தெலுங்கு வந்தேறிகளால் மறுபதிப்பு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.

அந்நூல் காட்டிய ஆங்கிலேயர் காலச் சான்றுகள் வைக்கப்பட்டிருந்த எழும்பூர் ஆவணக் காப்பகம் கருணாநிதி அரசால்  கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டுவிட்டது.

தற்போது கம்பளத்தார் சமூகத்தால் தமிழ்வாணனின் மகனுடன் சமரசம் பேசப்பட்டு அந்நூல் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வந்துள்ளது.

கட்டபொம்மன் என்கிற கெட்டிபொம்மு பற்றிய உண்மைகளை மீள ஆவணப்படுத்துவது அவசியமாகும்.
------------------
பதிவர்: அன்பெழில் (anpezhil)

தமிழர் வரலாற்றில் தெலுங்கர்கள் செய்த தகிடுதத்தங்கள் சொல்லி மாளாது.
வரலாற்றை மாற்றி, தங்கள் சுய அடையாளம் மறைத்து தமிழராக உருமாறி அவர்கள் காட்டிய, காட்டும் குரளிவித்தைகளை சமீபகாலம் வரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அவர்களில் முக்கியமானவன் நமக்கெல்லாம் வீரபாண்டியக் கட்டப்பொம்மனாக பி.ஆர்.பந்துலு நாயக்கனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கெட்டிப்பொம்மு நாயக்கன்.
பால்வாடி பொடிசுகளின் மேடைநாடகங்களிலும், பல்லுப்போன பெரிசுகள் டீக்கடைகளில் சிலாகித்து ஆத்தும் சிறப்புறைகளிலும் “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது” புகழ் வீரபாண்டியக் கட்டப் பொம்மனாக சித்தரிக்கப்பட்ட கட்டப்பொம்முவின் கதை உண்மையென்றே நம்பியவர்களுள் அடியேனும் ஒருவன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முறை திராவிட ஆதிக்கம் தொடர்பான கட்டுரைகளை இணையத்தில் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.
தேடலின் முடிவில் அது தெலுங்கர்களின் வரலாற்றில் போய் நின்றது.
தெலுங்கர்களின் வரலாற்றை அவர்களின் பக்கங்களில் தேடியபோது கட்டப்பொம்மனைப் பற்றிய அவர்களின் பெருமை பீத்தக்கலய உரைகளை வாசிக்க நேரிட்டே விட்டது.
அன்று துவங்கிய பொம்முநாயக்கன் பற்றிய தேடல் இன்றும் முடிவுறவில்லை.
ஒன்று மட்டும் உறுதி.
அவன் பாண்டிய மன்னன் இல்லை.
பாண்டிய மன்னன் எவனும் அவனுக்கு அப்பனாக இருந்ததும் இல்லை.
எனினும் அவன் ஒரு சுத்தத் தெலுங்கன் என்பதையும், வெள்ளையருக்கு அஞ்சி பணிந்தவன் என்பதையும், ஊர்புகுந்து திருடிய கொள்ளைக்காரன் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் வரையுமாவது கிடைத்து விட்டது.

அனைத்தையும் புத்தகமாக்கும் முன்பு அவற்றை சுருக்கி மக்கள் மன்றத்தில் வைக்கின்றேன்.
தெலுங்கு நாயக்கர்கள் புளகாங்கிதப்பட்டு போற்றிப் புகழும் கட்டப்பொம்மன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனா அல்லது டவுசரை ஈரமாக்கிக் கொள்ளும் தொடைநடுங்கி ஓடுகாலியா என்பதை வரும் அத்தியாயங்களைப் படித்தபின்பு முடிவெடுங்கள்.

தமிழகத்திற்கு வந்து சேர்ந்த தெலுங்கர்களை குறைந்தது மூன்று வகைப்படுத்தலாம்.
முகமதியர்களின் காட்டுத்தனமான ஆக்கிரமிப்பிற்கு அஞ்சி பெண்டு பிள்ளைகளோடு கூட்டம் கூட்டமாய் வந்தேறியவர்கள்.
வேட்டையாடும் சாக்கில் காட்டுநாய்களோடு மருதநிலத்தை ஆக்கிரமித்து வந்தேறியவர்கள்.
விஜயநகர பேரரசின் பெயரால் வெளிப்படையான ஆக்கிரமிப்பில் வந்தேறியவர்கள்.

பாண்டிய அரசில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி வந்தேறிய தெலுங்கு நாயக்கர்களின் முதல் பிதாமகன் விசுவநாத நாயக்கன்.
பாண்டியநாட்டை முதலில் ராமநாதபுரம் துவங்கி மணியாச்சி வரை பதினாறு பாளையங்களாகப் பிரித்தான்.
இந்தப் பாளையங்கள் பெரும்பாலும் மறவர் பாளையங்களாக இருந்தது அவனுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.
பிறகு அதற்கும் வடுகர்கள் பாணியில் ஒரு திட்டம் தீட்டினான்.

படைவீரர்களாகவும், அரசப் பிரதிநிதிகளாகவும், வேட்டையாடவும், ஆடுமாடு மேய்க்கவும், பஞ்சத்தாலும், குறிசொல்லி பிழைக்கவும், முகமதியர்களின் அச்சுருத்தலுக்குப் பயந்தும் லக்கண்ணா, மாடண்ணா காலந்தொட்டே ஏராளமான தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறி இருந்தனர்.

அவர்களைத் தேடியெடுத்து நிலபுலன்களை வழங்கி மறவர் பாளையங்களைச் சுற்றி குடியேற்றினான்.
பின்பு பதினாறு பாளையங்களை பிரித்து 72 பாளையங்களாக்கினான்.
ஒவ்வொரு மறவர் பாளையங்களைச் சுற்றியும் குடியேறிய தெலுங்கர்களுக்கு பாளையங்கள் பிரித்து அமைக்கப்பட்டது.
இந்த தெலுங்கு பாளையங்கள் கம்பளத்தார் பாளையம் எனப்பட்டது.
இந்த 72பாளையங்களில் தேடிப்பார்த்தாலும் ‘பாஞ்சாலங்குறிச்சி’ எனும் பெயர் லேது!

பாண்டிய மன்னர்களின் காலத்தில் பாண்டியநாடு ஐம்பத்தியிரண்டு கூற்றங்களாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டது.
இந்த ஐம்பத்தியிரண்டு கூற்றங்களிலும் லென்ஸ் வைத்துத் தேடிப் பார்த்தாலும் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரையே கானவில்லை!

அப்போ, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் 47வது பரம்பரை, 600ஆண்டுகால ஆட்சி என பொம்முநாயக்கனின் ரசிக குஞ்சுகள் பீலா விடுவது?!

முதலில் இந்த பாளையப்பட்டு முறை என்றால் என்ன?
கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள். வரி வசூல், நீதி வழங்குதல், படை வைத்துக் கொள்வது, பாதுகாவல் புரிவது இவையெல்லாம் பாளையக்காரர் பொறுப்பு.
வரும் வருவாயில் ஒரு பங்கு பாளையத்தின் நிர்வாகத்திற்கு.
மற்றொரு பங்கு நாயக்கப் பேரரசுக்கு.
இன்னொரு பங்கு பாளையக்காரருக்கு.

பாளையத்து மக்களின் உழைப்பை வரியாக வசூலித்து மூன்றில் ஒருபங்கை நெய்போட்டுச் சாப்பிட்டுத்தான் சைடுக்கொண்டை வந்தேறிகளுக்கு வயிறு ஜோதிகா போல் ஆனது போலும்!

ஆந்திரர்கள் தமிழ் மண்ணில் உல்லாசமாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பாளையப்பட்டு முறை சீரும் சிறப்புமாக செயல்பட்டு, மேலும் பல புதிய கம்பளத்துப் பாளையங்கள் தோன்றி தமிழகம் மொட்டையடிக்கப்பட்டது.
அவை பற்றிய விபரங்கள் இணையத்திலேயே ஏராளமாக கிடைக்கிறது.

கட்டப்பொம்மன் பரம்பரையினர் 12ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே பாஞ்சாலங்குறிச்சிக்கு அதிபதிகளாய் இருந்தனர் என கட்டப்பொம்மனின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் எழுதிய நூல்களில் பெருமை பீற்றியிருக்கின்றனர்.
எனினும் வரலாற்றில் தேடிப்பார்த்தால் 18ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே கிடையாது.
கட்டப்பொம்மன் வம்சம் எனும் பேச்சே கிடையாது.

அப்படியானால் தெலுங்கர்களால் போற்றிப் புகழப்படும் மாமன்னன் கட்டப்பொம்மனின் வீரம் மிகுந்த வம்சம் வரலாற்றில் எங்கு ஒளிந்திருந்தது?

- தொடரும்
--------------
அடுத்த பகுதி
'காட்ர கட்டபிரமையா'

11.09.2018 அன்றைய பதிவு

மகாவம்சம் நூலே இப்படித்தான் கூறுகிறது

மகாவம்சம் நூலே இப்படித்தான் கூறுகிறது

  மகாவம்சம் இரு சம்பவங்களைக் கூறுகிறது!

 முதலாவது.....
வட கிழக்கு இந்தியாவில் (இன்றைய உத்தரபிரதேசம் அருகே) ஒரு தேசம்! அங்கே காட்டுக்கு அரசன் வேட்டைக்கு செல்கிறான்!
 அப்போது சிங்கம் நாட்டுக்குள் வருகிறது!
அந்நாட்டு இளவரசியை தூக்கிக்கொண்டு காட்டுக்கு போகிறது! இருவரும் கூடி சிம்மபாகு எனும் மகன் பிறக்கிறான்! இவன் அந்நாட்டு அரசன் ஆகிறான்! இவனது மகனே விஜயன்! இவன் முரடனாக இருந்தான்! இவன் தொல்லை பொறுக்காமல் அந்நாடே அவனையும் அவனது தோழர்ளையும் கப்பலில் ஏற்றி நாடுகடத்துகின்றனர்.
 இந்த கப்பல் இலங்கை (இன்றைய மன்னார் மாவட்டத்தில் உள்ள) மாதோட்டம் வருகிறது! அங்கே குவைனி எனும் யக்‌ஷ இளவரசி அடைக்கலம் தருகிறாள்! அவளை காதலிப்பது போல நடித்து பிறகு கொலை செய்துவிட்டு விஜயன் அரசனாகிறான்! மக்கள் ஏற்கவில்லை!
 மதுரை வந்து பாண்டிய வம்சத்து பெண்ணை மணந்து வருகிறான்! மக்கள் ஏற்கிறார்கள்! 

 இரண்டாவது....
 எல்லாளன் எனும் மன்னன் அநுராதபுரம் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆள்கிறான்!  ஒருமுறை ஆறு மாதம் அடைமழை பெறுகிறது! நெல்லை குத்தி அரிசியாக்கி பிழைக்கும் ஒரு மூதாட்டி ஆராய்ச்சி மணி அடிக்கிறாள்! குறையைக் கேட்ட மன்னன் நெல்லை காயப்போட சொல்கிறான்! நெல் இருக்கும் இடம் மட்டும் மழை பெய்யவில்லை! அந்த அளவு அவன் நீதி தவறாதவன்!
 இவன் காலத்தில் துட்டகைமுனு 27 முறை எல்லாளனை எதிர்த்து படையெடுத்து தோல்வியடைகிறான்!
 அவன் சோர்வடைந்து படுத்திருக்கும்போது அவன் தாய் விகார மாதேவி எனும் பேரழகி வந்து மீண்டும் போர் தொடுக்க சொல்கிறாள்!
 28வது முறை படை திரட்டி தோல்வியடையும் நிலையில் விகாரமாதேவி எல்லாளனை தனிப்பட்ட மோதலுக்கு அழைக்குமாறு தன் மகனிடம் சொல்கிறாள்! துட்டகைமுனு தான் இளைஞன் எல்லாளன் வயது முதிர்ந்தவன் என்று தயங்க விகாரமாதேவியோ அவனை கட்டாயப்படுத்துகிறாள்!  
 துட்டகைமு அறைகூவல் விடுக்க சவாலை ஏற்று தனியாளாக மோத எல்லாளன் வருகிறான்! அந்த மோதலிலும் எல்லாளன் வெற்றிபெறப் போகும் நேரத்தில் விகாரமாதேவி அங்கே வந்து தன் முக்காடை விலக்கி முகத்தைக் காட்ட அவன் அழகில் ஒரு நொடி சபலப்பட்ட எல்லாளனை ஈட்டியால் குத்தி கொன்று துட்டகைமுனு வெற்றிபெற்று இலங்கைக்கு அரசனாகிறான்!.

  இப்படி சிங்களவர்களின் முதன்மை நூலான மகாவம்சமே இரண்டு முறை சூழ்ச்சி மூலம்தான் சிங்களவர் இலங்கையைக் கைப்பற்றியதாக சொல்கிறது.

 (மேற்கண்ட தகவல்கள் ஐயா.அருகோ அவர்கள் வளரி இணையத்துக்கு அளித்த பேட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்.
மகாவம்சத்தில் சிங்களவர், தமிழர் என்று யாரும் இல்லை! அது ஒரு கற்பனையான புராண நூல்! அதில் வரும் ஒரு தரப்பு கதாபாத்திரங்களை தமது இனமாக சிங்களவர்கள் அடையாளப்படுத்தி வைத்துள்ளனர்)





 

Friday 11 October 2024

ஆய்த பூசனை

ஆய்த பூசனை

19.10.2018 அன்றைய பதிவு 

சங்ககாலத்தில் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் மூளும் சூழல் உருவானது.
அதியமானின் தோழியான ஔவை போரைத் தவிர்க்கும் பொருட்டு தொண்டமானிடம் தூது போகிறாள்.
தொண்டைமான் தனது ஆயுத சாலையைப் பார்வையிட அழைத்துச் செல்கிறான்.

அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்து ஒரு ஔவை பாடல் பாடுகிறாள்.

"இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே  அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து
இல் லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே"
(புறநானூறு -95)

இலக்கணம் பற்றி படிக்கும்போது பாடல் வஞ்சப் புகழ்ச்சி அணியில் நீங்கள் இதை ஏற்கனவே படித்திருக்கலாம்.

அதாவது ஔவையார் தொண்டைமானைப் பார்த்து,
இங்கே ஆயுதங்கள் எல்லாம் (துருவேறாமல் பாதுகாக்க) எண்ணெய் பூசப்பெற்றுத்
அழகுக்காக ஆயுதக் குவியல்களின்மீதும் அடுக்குகளின்மீதும் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்டு
ஆயுத வரிசைகளின்மேல் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளும் அணிவிக்கப்பட்டு மினுமினுப்பாக அழகாகத் தெரிகின்றன.
அங்கே அதியமான் ஆயுதங்களோ ஓய்வே கிடைக்காமல் போரில் பயன்படுத்தப்பட்டு எப்போதும் பழுநீக்கத்திலேயே கிடக்கின்றன"
என்று கூறுகிறார்.

இதன் மூலம் அதியமான் தன்னைவிட பெரிய வீரன் என்று உணர்ந்த தொண்டைமான் அவனுடன் போரிடும் எண்ணத்தைக் கைவிடுகிறான்.

ஆம். ஆயுதங்களை அலங்கரித்து மரியாதை செய்வது (வணங்குவது அல்ல) தமிழர் பண்பாடு ஆகும்.

இதற்கு ஒரு விழாவும் இருந்துள்ளது.
அதன் பெயர் வாண்மங்கலம் (வாள்+மங்கலம்).
இது வாளுடை விழவு என்றும் அழைக்கப்பட்டது.

"மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்" என்று தொல்காப்பியம் கூறுகிறது (புறத்திணையியல், 30, பாடாண் திணை)

"கயக்கு அருங்கடல் தானை
வயக் களிற்றான் வாள் புகழ்ந்தன்று"
என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
(223, பாடாண் படலம்)

"றொன்மிசைந் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தோடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்ப”
என்கிறது பதிற்றுப் பத்து (பாட்டு-66).

பதினாறாம் நூற்றாண்டு வாழ் புலவரான "காசிக்கலியன் கவிராயர்" என்பவர் எழுதிய "வீரபாண்டியன் வாண்மங்கலம்" என்னும் நூலின் பெயரை தென்காசி விஸ்வநாதர் கோயில் கோபுர வாயில் நிலையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

புதுக்கோட்டை சமஸ்தான ஆவணமும் இப்புலவர் இயற்றிய வீரபாண்டியன் வாண்மங்கலம், வீரபாண்டியன் குடைமங்கலம், வீரபாண்டியன் நாண்மங்கலம் ஆகிய சிற்றிலக்கியம் பற்றி கூறுகிறது.

ஆனால் மேற்கண்ட நூற்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

"பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்
மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடி"
என்று 5 ஆம் நூற்றாண்டு பெரிய புராணம் கூறுகிறது.

இந்த திருமுறை பாடலில் "மா நவமி" என்று அழைக்கப்படும் ஒன்பதாம் நாளான மங்கல விழாவிற்கு முன் அரசின் போர் யானையை நீராட்டி விழா எடுத்து கொண்டுவரப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்காலத்தில் புரட்டாசி மாதத்தில் அஸ்த நட்சத்திரம் தொடங்கி திருவோண நட்சத்திரம் வரை பெண்-தெய்வ வழிபாடு செய்யபடுகிறது.
இதன் ஒன்பதாவது நாள்தான் ஆயுத பூசை.
இதற்கான தயாரிப்பாகவே (இப்போது வாகனங்களைக் கழுவி மாலைபோட்டு அலங்கரிப்பது போல) யானை நீராட்டப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளது.

பத்தாவது நாள் விஜய தசமி இது வெற்றி விழா ஆகும்.

போரில் வெற்றி பெற்றவுடன் வென்ற மன்னன் தன் வாளுக்கு அபிசேகம் செய்து வெற்றியைக் கொண்டாடுவது அக்கால வழக்கம் (வாளுடை விழவு).
இதிலிருந்து விஜய தசமி வந்திருக்கலாம்.

வாளை வழிபடுவது போல அம்பு எய்வதற்கும் ஒரு விழா உள்ளது.
அன்று வன்னிமரம் அல்லது வாழைமரம் நோக்கி அம்பு எய்துகாட்டும் சடங்கு நடக்கிறது.

தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
(அகநானூறு 187)

மழவர் கொண்டாடிய இத்திருவிழா பல நாட்கள் நடந்துள்ளது.
அதில் முக்கியமான தலைநாள் அன்று நகரம் முழுவதும் புதுமணல் பரப்பியிருந்ததாக இப்பாடல் கூறுகிறது.

இவ்விழா பூந்தொடை அல்லது பூந்தொடு எனும் பெயரில் இன்றும் வேட்டுவர் (வேட்டுவக் கவுண்டர்) சமுதாயத்தால் புரட்டாசி திருவோணம் அன்று கொண்டாடப் படுகிறது.

மேற்கண்ட தரவுகளிலிருந்து நமக்குத் தெரிவன,
1) ஆய்த பூசனை தமிழர் விழாவே!
2) வெற்றிவிழா தமிழர் விழாவே!
3) பூந்தொடை தமிழர் விழாவே!
4) இன்று அவை பெயர் மாறியும் மத சடங்குகளாகவும் திரிந்து விட்டன.

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய விழாக்கள் தொடரவேண்டுமா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ஆயுதபூசை தொழில் ரீதியாக பயனுள்ளதாக உள்ளது.
தொழிலகம், கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி பேணி அலங்கரித்து வைக்க அந்நாள் பயன்படுகிறது.

எனவே தொழில்கூடங்களில் அனைத்து தமிழரும் ஆயுத பூஜையைத் தொடர்வதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.

Tuesday 8 October 2024

விஜய் தெலுங்குபதி

விஜய் தெலுங்குபதி

 "தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன்" என்று கூறிய விஜய் சேதுபதி உண்மையில் ஒரு தெலுங்கர்!

 சேதுபதி எனும் தமிழர் குடிப் பட்டம் சேர்த்துக்கொண்டு ஏமாற்றுகிறார்.

பிப்ரவரி 29, 2016 தினகரன் செய்தி

தமிழக தெலுங்கர் யுகாதி விழா

2016-02-29@ 00:26:52

சென்னை: அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பாக ‘தமிழக தெலுங்கர் யுகாதி விழா’ மீனம்பாக்கத்திலுள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.
யுகாதி விழாவிற்கு சம்மேளனத் தலைவர் சிஎம்கே. ரெட்டி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பு செயலாளர் நந்தகோபால், பொருளாளர் அ.சங்கரன், மாநில துணை தலைவர் ஜெஎஸ்கே. சதீஷ்குமார், இளைஞரணி தலைவர் டி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் 'தமிழகத்தில் முக்கிய பங்களிக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மா, ஜி.டி. நாயுடு, ஓமந்தூரார் ஆகியோர் தெலுங்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தமிழகத்தில் சிறந்து விளங்கினார்கள்.
அதேபோல் இங்கு அமர்ந்திருக்கும் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரும் சிறந்து விளங்குகிறார்கள்.
யார் எந்த மொழி பேசினாலும், தாய்மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.

இவ்விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு, பின்னணி பாடகி பி.சுசிலா, வேல்டெக் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன், ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

  திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உலக தெலுங்கு சம்மேளனத் தலைவர் வி.எல். இந்திரா டெக், அகில பாரத விஷ்வகர்மா மகாசபை நிறுவனர் ராஜமகாலிங்கம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

(தகவலுக்கு நன்றி: Asa Sundar)

26.09.2017 அன்றைய பதிவு

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

மக்களை வெயிலுக்கு இரையாக்கிய ஜெயலலிதா

 2016 ஏப்ரலில் ஹெலிகாப்டர் மூலம் சுற்றுப்பயணம் செய்து பிரச்சார கூட்டங்களில் பேசினார் ஜெ. அப்போது சேலத்தில் 3 பேரும் விருத்தாசலத்தில் 2 பேரும் என 5 பேர் வெயிலில் தாக்கத்தால் இறந்தனர்!
 அப்போதும் வெயில் உச்சத்தில் இருந்த நேரம்!
 ஹெலிகாப்டர் தரையிறங்க பிரத்யேகமாக தளம் அமைக்கப்பட்டு அதில் ஜெ இறங்கி மேடையில் பத்து கூலர்கள் மத்தியில் அமர்வார் ஆனால் மக்கள் காலையிருந்து வெயிலில் காத்திருப்பர்!
 உயிரிழப்பு 5 பேர் மயங்கி விழுந்தவர்களோ 30  பேருக்கும் மேல்!
 இதையடுத்து கண்டனங்கள் குவிந்தன!
 பாமக ஜெ மீது கொலை வழக்கு பதிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரியது!
அதன்பிறகு தான் மாலை நேரங்களில் மட்டும் கூட்டம் நடத்தினார்!

 இன்று மெரினாவில் அலட்சியத்தால் திமுக கொன்றது 5 உயிர்கள் என்றால் அன்று அதிமுக கொன்றதும் 5 உயிர்கள்தான்!
 இரண்டும் வேறு வேறு இல்லை!

 1992 இல் கும்பகோணம் மகாமகம் சென்று நெரிசல் உண்டாக்கி 60பேர் உயிரைக் குடித்தவர் ஜெயலலிதா என்பதையும் இங்கே நினைவு கூற வேண்டும்.
 
 

Monday 7 October 2024

அண்ணாதுரை பேசியது தமிழ்தேசியம்

அண்ணாதுரை பேசியது தமிழ்தேசியம் 

 தி.மு.க தமிழ்தேசியம் பேசித்தான் ஆட்சிக்கு வந்தது!
 அண்ணாதுரை தனிக் கட்சி தொடங்கியதும் தமிழ்தேசிய கூறுகளை மட்டும் வைத்துக் கொண்டு திராவிட கூறுகளை கை கழுவி விட்டார்.
 திராவிடம் என்ற பெயரில் தமிழ்த் தேசியம் தான் பேசினார்!

  1949 இல் தி.க  விலிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்தபோது அன்று ஈவேரா கூறிவந்த மக்களுக்கு ஒவ்வாமல் இருந்த வரட்டு நாத்திகம், கண்மூடித்தனமான பார்ப்பன வெறுப்பு ஆகியவற்றைக் கைவிட்டார்!
 தனித்தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு, தமிழ்ப் பற்று, மதுவிலக்கு ஆகியவற்றை  முதன்மைக் கொள்கைகளாகக் கைக்கொண்டார்!

 1957 இல் முதல் தேர்தலிலேயே காமராசர், இராஜாஜி, ஈவேரா என்ற மூன்று பெரும் ஆளுமைகளைத் தாண்டி 14% வாக்கு பெற்றார்.

  அவர் பேசிய தமிழ்தேசியமும் அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு கொள்கையும் தான் அவரை 1962 இல் 27% வாக்குபெற்று எதிர்க்கட்சியாக உயர்த்தியது (அப்போது அண்ணாதுரை நின்ற சொந்த தொகுதியான காஞ்சிபுரம் தொகுதியில் தோற்றுவிட்டார். இதிலிருந்தே அவர் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாதவர் என்பதை அறியலாம்).

 1967 இல் 77% வாகுகள் பெற்றபோது அவரது முதன்மை வாக்குறுதிகளில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றம் ஒன்றாகும்!
 தான் தெலுங்கர் என்றாலும் தனக்குப் பிறகு அரசியல் வாரிசாக நெடுஞ்செழியன் என்ற தமிழரைத் தான் முன்னிறுத்தினார். 

 அண்ணாதுரை வென்றதற்கு காரணம் தமிழர்களிடம் எப்போதுமே இருக்கும் 'இந்திய எதிர்ப்பு' மனநிலை மற்றும் 'தனிநாடு' அடையும் வேட்கை!

 வெற்றிக்காக மேலும் சில சமசரங்கள் செய்தார் என்பதும் வென்றபிறகு கொள்கைகளை எல்லாம் கைவிட்டார் என்பதும் உண்மை! 

 அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க நெடுஞ்செழியன் கைக்கு வந்தது!
 ஆனால் அவரை சதி செய்து வீழ்த்தி தமிழரல்லாதவர் கட்சியை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

 பிறகு எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கிய போது பெயருக்கு மட்டுமே அதில் திராவிடம் இருந்தது! 
 மற்றபடி அது முழு தமிழர் கட்சியாக இருந்தது!
 புலிகளை வளர்த்துவிட்டது! 
 எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அதுவும் நெடுஞ்செழியன்  கைக்கு வந்தது.
 இப்போதும் தமிழரல்லாதார் அதை அபகரித்துக் கொண்டனர்.

 தமிழர்கள் எப்போதுமே தமிழ்தேசியத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
  நீதிக் கட்சி 'சொத்துள்ளவர்கள் மட்டும் வாக்களிக்கும் முறை' இருந்தபோது வென்றது ஏனென்றால் தமிழகத்தில் நிலவுடைமையும் செல்வமும் வந்தேறிகள் கையில் பெரும்பாலும் உள்ளது!
 ஈவேரா ஆதரித்த கட்சியோ நபரோ ஒருமுறை கூட தேர்தலில் வென்றதே இல்லை! 
 எவர் வென்றாலும் அவர்தான் தாவி ஒட்டிக்கொள்வார்!
 தோல்வியே காணாதவர் என்று கூறப்படும் கருணாநிதி இருந்தவரை திமுக ஒரே ஒருமுறை தவிர்த்து பெரும்பாலும் தோல்வி அல்லது மைனாரிட்டி ஆட்சி என்றுதான் இருந்தது!
 
 வாக்குப்பதிவு இயந்திரம் வந்தபிறகு தேர்தல் முடிவுகள் மீது நம்பிக்கை வராதபடி எப்போதும் நடக்கிறது!

 இப்போதும் குளறுபடிகள் இல்லாத தேர்தல் நடந்தால் தமிழ்தேசியம் பேசும் கட்சிதான் வெல்லும்! 
 

குலக்கல்வி என்ற அவதூறு

குலக்கல்வி என்ற அவதூறு

ஒரு பொய்யைத் திரும்பத்திரும்பத் திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டே இருந்தால் அது காலப்போக்கில் உண்மையாகிவிடும் என்பது கோயபல்ஸ் பரப்புரை அரசியல் உத்தி ஆகும்

இராஜகோபாலாச்சாரி மீது பரப்பப்பட்ட அவதூறுகள்,
1)இராஜாஜி குலக்கல்வியைக் கொண்டுவந்தார்.
2)நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி 600 பள்ளிகளை மூடினார்.

மூன்றுமே வடிகட்ட பொய்கள்.

முதல் பொய் இராசாசி குலக்கல்வியைக் கொண்டுவந்தார் என்பது.
அவர் பார்ப்பனராம், மனிதர்கள் எந்த எந்த குலத்தில் பிறந்தார்களோ அந்த அந்த தொழிலைச்  செய்யவேண்டும் என்று மனுதர்மம் கூறுவதை நடைமுறைப்படுத்தப் பார்த்தாராம்.
உண்மை என்ன வென்றால் அது இராசாசி வகுத்த திட்டமே கிடையாது.
அதிலே குலம் பற்றி எதுவுமே விதிகள் இல்லை. அவர் செய்தது நேரச் சீர்திருத்தம் மட்டும்தான்.
Hereditary Education Policy என்ற இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜாவின் ஆட்சியில் சில பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது. அதை தமிழகம் முழுவதும் இராசாசி நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.
ஆசிரியர்கள் அப்போது குறைவு. புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் பணமில்லை.
அதனால் ஆசிரியரின் 8 மணிநேர வேலை நேரத்தை ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று மூன்று மணிநேரமாக பிரித்துக்கொடுப்பதுதான் திட்டம்.
சாதி பற்றியோ பிறப்பு பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை.
இத்திட்டத்தால் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்தது.
மூன்றுமணிநேரம் போக மீதி நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு பேட்டியில் கேட்டார்களாம்.
இராஜாஜி "மீதி நேரங்களில் பெற்றோருக்கு உதவி செய்யலாம்" என்று கூறினாராம்.
இதை அண்ணாதுரை பிடித்துக்கொண்டு 'பெற்றோரின் வேலையைத் தான் பிள்ளைகள் செய்யவேண்டும் என்று பார்ப்பனர் இராசாசி கூறிவிட்டார்' என்று அவதூறு பரப்பினார்.
இதற்கு 'குலக்கல்வித் திட்டம்' என்று தாமே பெயர் சூட்டி திராவிடவாதிகள் பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டனர். 
இன்றுவரை இந்தப் பொய்ப் பெயரால்தான் இந்தத் திட்டமே அறியப்படுகிறது.

6000 பள்ளிகளை அவர் மூடினார் என்பதும் பச்சைப்பொய்.
அன்று கல்வி சேவை செய்யும் சில கிராமிய அமைப்புகளைக்கு அரசு நிதி கொடுத்துவந்தது.
இத்தகைய அமைப்புகள் அன்று மதராஸ் மாகாணத்தில் இருந்த தெலுங்கு பகுதிகளில் அதிகம் இருந்தன.
அந்த நிதி முறையற்ற வகையில் செலவு செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதை இராசாசி நிறுத்தக்கூட இல்லை.
அது சரியாக நடக்கிறதா என்று முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார்.
ஆந்திராவுக்குக் கிடைக்கும் நிதி போய்விடுமோ என்ற பயத்தில் நீதிக்கட்சி எனும் திராவிடக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
உடனே ஈ.வே.ரா, ஆந்திராவில் இந்த நிதி இல்லாமல் போனால் 6000 'பள்ளிகள்' மூடவேண்டி வரலாம் என்று உண்மைக்குப் புறம்பாக எழுதினார்.
அதையும் கோயபல்ஸ் பரப்புரை செய்துவருகின்றனர்.

நன்றி : எழுத்தாளர்.திரு.ஜெயமோகன்
---------------
அன்று இராசாசி எதைச் செய்தாலும் திராவிடவாதிகள் அதை எதிர்த்தனர்.
எடுத்துக்காட்டாக,
அன்று அவர்அரும்பாடு பட்டு மதுவிலக்கை அமல்படுத்தினார்.
உடனே ஈ.வே.ரா முழுமூச்சாக குடிக்கும் உரிமை கேட்டு மது ஆதரவுப் பிரச்சாரம் செய்தார்.
25 ஆண்டுகள் குடியை மறந்திருந்த தமிழகத்தில்  திராவிடம் வந்து மீண்டும் சாராயக்கடைகளைத் திறந்தது.

09.04.2016 அன்றைய பதிவு