Tuesday, 3 June 2025

செங்கிஸ்கான் கருணாநிதி

 செங்கிஸ்கான் கருணாநிதி

 ஈவேரா வசதி படைத்தவர்! ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்! நகர வாசி!
எம்.ஜி.ஆர் ஏழை என்றாலும் அழகும் உடல்வாகும் கொண்டவர்! 
ஜெயலலிதா கூட ஓரளவு பின்புலம் கொண்டவர்! அழகு வாய்க்கப் பெற்றவர்! நகர வாசி!
 பழனிச்சாமி கூட சமூக மற்றும் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்! உடல்வாகு வாய்க்கப் பெற்றவர்! கல்வித் தகுதியும் உண்டு!
 ஆனால் கருணாநிதி அப்படி இல்லை!
 அழகு இல்லை! உடல்வாகு இல்லை! ஒரு கண் குறைபாடு! தகர குரல்!
 கிராமத்தில் பிறந்தவர்!
 ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்!
கல்வியறிவும் பெரிதாகக் கிடையாது!
 தனிமனிதனாக திருட்டு ரயில் ஏறி சென்னை வந்துள்ளார்! 
 இப்படிப்பட்ட ஒரு மனிதர் ஆசியாவிலேயே பணக்காரனாக உயர்ந்திருக்கிறார்!
 ஒரு இனத்தையே சுரண்டி அழித்து பெரிதாக எந்த தண்டனைக்கும் ஆளாகமல் 
3 மனைவிகள் பல துணைவிகள் என சுகபோகமாக 90 வயது வரை வாழ்ந்து
 எந்த தகுதியும் இல்லாத தன் வாரிசுகளை ஆதிக்க சக்தியாக ஆக்கிவிட்டு செத்திருக்கிறார்!
 இந்த மண்ணில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு அவருடைய தாக்கம் இருக்கும்!
 அவரை நினைக்கும்போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது! 
 கருணாநிதி செங்கிஸ்கான் உடைய மறுபிறவி என்றே சொல்லலாம்! 
#HBDfatherOFcorruption 
 

சண்டாள சதிகாரன்

சண்டாள சதிகாரன்

 ஒரு நபர் இருந்தார். ஒரு கிராமத்தில் பலான புரோக்கருக்கு பிறந்தவர்.
 சரியான திருட்டு புத்தி வாய்ந்தவர்.
 அவரது தாத்தா காலத்தில்  இருந்தே வெள்ளையருக்கு சேவை செய்த வகையறா.
 அவருக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள் அவளும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அவளது அண்ணன்கள் இவர் மீது சந்தேகம் கொண்டு அடித்து உதைக்கின்றனர். கண்ணிலேயே குத்தினர். 
 எப்படியோ தப்பித்தவர் ஊரில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று ஊரைவிட்டு ஓட தீர்மானித்தார்.
 பக்கத்து ஊரில் இவருக்கு உறவினரான ஒரு நாட்டியக்காரி அக்கா சென்னையில் ஒருவருக்கு வைப்பாக இருந்தாள்.
 காலில் விழுந்து கெஞ்சியதால் எடுபிடி வேலைக்கு இவரை சென்னைக்கு அழைத்துச் சென்றார்கள்.
 முதல் வகுப்பு பெட்டியில் அந்த செல்வந்தரும் இவரது அந்த அக்காவும் உல்லாசமாக இருக்க டிக்கெட் இல்லாமல் வெளியே கிடந்த இவரை பரிசோதகர் பிடித்தார்.
 கதவைத் தட்டி கேட்க செல்வந்தர் இவரை யார் என்று தெரியாது என்று கைகழுவி விடுகிறார்.
 ரயிலில் இருந்து கழுத்தைப் பிடித்து தள்ளப் படுகிறார். 
சென்னைக்கு சற்று முன்னதாக இரவில் இறக்கிவிடப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
 கையிலும் பணமில்லை. அப்போது அருகில் ஒரு பத்திரிக்கையாளர்களுக்கான கூட்டம் ஒன்று நடக்கிறது.
  இவரும் அங்கே சென்று உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறார்.
 அங்கே இருந்தவர்கள் விசாரித்த போது தானும் எழுத்தாளர் என்றார்.
 நகரத்துக்கு சென்று செக்ஸ் புக் வாங்கி வந்து அதை கையால் எழுதியே பல பிரதிகளை தயார் செய்து அநியாய விலைக்கு விற்ற தன் விடலைப் பருவ அனுபவத்தையும் 
அவ்வப்போது பெண்களை ஏமாற்ற காதல் கடிதங்கள் எழுதிய தனது அனுபவத்தையும் 
 கொஞ்சம் மேம்படுத்தி தான் கையால் எழுதும் பத்திரிக்கையை நடத்தியதாகவும் தற்போது உள்ளூரில் மட்டும் பிரபலமாக இருக்கும் ஒரு சிறு பத்திரிக்கை நடத்துவதாகவும் தன்னை இறக்கிவிட்ட செல்வந்தரைப் பற்றிச் சொல்லி தான் அவருடைய உறவினர் என்றும் பொய் சொன்னார்.
 இரண்டொரு நாட்கள் அவர்களுடன் சுற்றிக் கொண்டிருந்த இவர் ஒரு இரவில் அவர்களுடைய பொருட்களைத் திருடிக்கொண்டு ஓடுகிறார்.
 அந்த அக்காவைத் தேடி அலைகிறார். அப்போது ஒரு பிளாட்பாரத்தில் தங்கினார். அங்கே ஒரு பெண் ஒரு வாடகை வீட்டில் இன்னொருவருக்கு வைப்பாக இருந்தார். அங்கே சோறு போட்டால் போதும் என்று வேலைக்கு சேர்ந்தார். சில நாட்களில் உன்னைப் பற்றி ஊரெல்லாம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியும் தன் பாலியல் புத்தியாலும் அந்தப் பெண்ணை தன் வழிக்கு கொண்டு வந்தார்.
 அந்த வயதான செல்வந்தர் வந்திருந்த நேரம் அவர் மனைவியிடம் இதை போட்டுக் கொடுத்து அவர் இங்கேயே தங்கும் படி செய்து விடுகிறார்.
 சிறிது காலத்தில் அந்த செல்வந்தரும் சந்தேகமான முறையில் இறந்து விடுகிறார்.
 அந்த வாடகை வீட்டில் அவருடைய பெயரை தான் எடுத்துக் கொண்டு இவர் செட்டில் ஆகிவிடுகிறார். குடும்பத் தொழிலான புரோக்கர் தொழிலை ஆரம்பிக்கிறார். அந்த நாட்டியக்காரி அக்காவை கண்டுபிடிக்கிறார்.
 அவள் மூலம் இன்னொரு அக்காவுக்கு தம்பியாக இருந்த ஒருவரின் பழக்கம் கிடைக்கிறது.
 இவரும் அண்ணன் தம்பி போல ஆகின்றனர்.
 அக்காவின் புண்ணியத்தால் ஒரு பணக்கார பெரியவருடன் நெருக்கம் கிடைக்கிறது.
  அவர் ஒரு லெட்டர்பேடு கட்சி நடத்திவந்தார்.
 அதில் இவர்களும் சேர்கின்றனர்.
பெரியவர் சரியான பெண்பித்தர் ஆனால் ஒரு பெண்ணை ஒரு முறைதான் தொடுவார்.
 அவரது குறுக்கு புத்தி வேலை செய்தது.
தன் வகையறாவில் ஒரு இளம்பெண்ணை வேலைக்காரியாக அனுப்பி வைத்தார்.
 இவரது வழிகாட்டுதலில் அந்த பெண் அந்த பெரியவரை கவிழ்த்து வேலைக்காரி, வைப்பாட்டி, வாரிசு, மனைவி என்று முன்னேறி அவரது சொத்துக்களை அடைகிறாள்.
 இதன் மூலம் அவரை கேவலப்படுத்தி கட்சி தலைமையில் இருந்து இறக்கி தன் அண்ணாவை தலைமைக்கு உயர்த்தி அக்காக்களின் புண்ணியத்தால் பிறரை சரிகட்டி இவ்விருவரும் பதவிகளை அடைகின்றனர்.
 ஒரு நடிகரிடம் வைப்பாக இருந்த இன்னொருத்தியையும் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கி ஒரு மகள் பிறந்த பிறகு பெரிய பிரச்சனை ஆகிறது. அந்த குழந்தை தன் மகளே இல்லை என்று கடைசி வரை சாதிக்கிறார்.
 இன்னொரு முக்கிய நடிகர் இவரது அக்கா சேவைக்காக இவருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தார்.
 ஆனால் வேறொருத்தி தன் அழகான மகளை நடிகையாக்கி இந்த முக்கிய நடிகருடன் கோர்த்துவிட்ட பிறகு பிரச்சனை வருகிறது. இவருக்கு அழிவுக்காலம் ஆரம்பமாகிறது.
 இன்னொரு மசாலா நடிகை இவர் மூலம் தொழில் செய்து வந்தாள்.
  அவளை கர்ப்பமாக்கி ஒரு மகனை கொடுக்கிறார்.
 இந்த நடிகை அவரது மூன்றாவது மனைவி பற்றி இரண்டாவது மனைவியிடம் சொல்லி குடும்பத்திலும் பிரச்சனை ஆகிறது.
 இன்னொரு சினிமாக்காரர் இவரது சேவைக்கு தாசனாக இருந்தவர் ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்த இவரைப் பற்றிய உண்மைகளை பக்கம் பக்கமாக எழுதினார். ஒரு புரோக்கரிடமே ஒரு விபச்சாரி பணம் வாங்கலாமா என்று ஒரு விபச்சார விடுதியில் அவர் பிரச்சனை செய்தது வெட்ட வெளிச்சமானது.
 அவர் செக்ஸ் கதைகள் எழுதி பணம் சம்பாதிப்பதும் அவ்வப்போது திருடுவதும் வெளியே தெரிந்தது. 
இப்படி எத்தனையோ பிரச்சனைகள் வந்தன.
 ஆனாலும் இவரை சரிக்க முடியவில்லை.
 ஏனென்றால் பல வைப்புகளை மெயின்டெய்ன் செய்த இவரது புரோக்கர் குடும்பம் முக்கியமாக அவர்கள் மூலம் வரும் கறுப்பு பணத்தை எப்படி கையாள்வது என்று நன்கு தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் அரசியலில் இறங்க பயந்தனர். 
 இவர் அரசியலில் இறங்கியதால் அவரது சமுதாயமே மாபியா போல இவரின் கீழ் ஒன்றிணைந்தது.
 கறுப்பு பண மையமாக இவர் மாறியிருந்தார்.

 தொடரும்...
 
 

Saturday, 24 May 2025

கோபுரங்கள் சாய்வதில்லை அகதிகளின் கதை

கோபுரங்கள் சாய்வதில்லை அகதிகளின் கதை கோபுரங்கள் சாய்வதில்லை - இரு அகதி(?)களின் கதை 03.01.2016 1982ல் இரண்டு நண்பர்கள் கடற்கரையில் சந்தித்துக் கொண்டனர். 20 ஆண்டுகள் முன்பு கொழும்பு காவல்துறையிடமிருந்து தப்பித்து கள்ளத்தோணியில் கடல்கடந்து வந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர். அதில் ஒருவர் வெற்றியம்பதி என்ற ஊரில் குடியேறினார். 15 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். திருமண வயதில் பெண் இருந்தாள். அவளுக்கு 80 பவுண் நகை சேர்த்துவைத்திருந்தார். அவள் பெயர் அருக்காணி. அவளுக்கு மாப்பிள்ளை அமையவில்லை. இன்னொருவர் சென்னையில் குடியேறினார். வட்டிக்கடை வைத்து வசதியாக இருக்கிறார். திருமண வயதில் அவருக்கு முரளி என்றொரு மகன் இருந்தான். நல்ல படிப்பு, பெரிய நிறுவனத்தில் மேலாளராக இருந்தான். இருவருக்கும் திருமணமானது. முரளிக்கு அருக்காணியைப் பிடிக்கவில்லை. தமிழர் மண்ணான பெங்களூரில் ஒரு ஜூலி என்றொரு தமிழ்ப்பெண்ணை பார்த்து காதல்வயப்படுகிறான். தனக்கு திருமணமானதை மறைத்து அவளைத் திருமணம் செய்துகொள்கிறான். இப்படி மேற்கொண்டு கதை செல்கிறது. ஆமாம். இதில் அகதி முகாம் கொடுமைகள் வரவில்லையே? இது அகதி முகாம்களில் இருக்கும் 2லட்சம் தமிழர்களின் கதை இல்லை. தமிழகம் முழுவதும் வாழும் 5லட்சம் அகதிகள் இல்லையில்லை எப்படியோ குடியுரிமை பெற்றுவிட்ட ஈழத்தமிழர்களின் கதை.

Friday, 23 May 2025

இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு

 கண்ணாடியைப் பார்த்து என் கூந்தலில் இருந்த சில நரைமுடிகளை நகவெட்டியை வைத்து வெட்டிப் போட்டேன்.
 அகவை நாற்பதைத் தொடவுள்ளது. இன்னும் சில காலம் தான். நாகரீகத்தின் ஆதித்தொழிலில் 40 வயதுக்கு மேல் வருமானம் குறைந்துவிடும்.
 அதன்பிறகு என்ன செய்வது என்று நான் சிந்திப்பதில்லை. ஏனென்றால் அதற்கான நேரமும் இல்லை துணிச்சலும் இல்லை.
 கதவு தட்டப்பட்டது. திறந்தேன்.  "அத்தை" தான்.
"ஏன்டி இவ்வளவு நேரம்?!"
"சீவி சிங்காரிக்க வேண்டாமா அத்தை?!"
"அத கேக்கல வர்றதுக்கு ஏன் இவ்வளவு நேரம்? எவனோடடி ஊர்சுத்திட்டு வர்ற?"
"கடைவீதிக்கு போய் மேக்கப் சாமான்கள் வாங்கப்போனேன்"
"ம்..! வாசனை பத்தலையே?! பூவும் வைக்கலையா?"
"அத்தர் பூசினேனே! போதும் போதும்!"
"ஆமா... வர்றவன் உன் வீட்டுக்காரன் பாரு மல்லிப்பூவோட வர்றதுக்கு?! இந்தா பூ"
"அத்தை பசிக்குது"
"சனியனே! மதியம் நல்லா சாப்டலயா நம்ம தொழில்ல மதியத்துக்கு பிறகு சாப்பிட முடியாதுனு உனக்கு தெரியாது! இரு சர்பத் அனுப்புறேன்"
 அத்தை போய்விட்டாள்.
இவளும் ஆண்களைப் போலத்தான். இளமை இருந்தபோது செல்லம், பட்டு என்று எவ்வளவு கொஞ்சுவாள் இப்போது நான் சனியன் ஆகிவிட்டேன்.
 சர்பத்தை குடித்துவிட்டு படுக்கையில் காத்திருந்தேன்.
 இந்த விலைமாதர் விடுதியில் பத்து ஆண்டுகள் ஓட்டிவிட்டேன். அனாதை! ஏமாற்றிய காதலன்! கற்பழிப்பு! பிச்சை! போலீஸ்! விபச்சாரம்! அடுத்து என்ன...?! சாவுதான்!
 என் தொழில்முறை தோழி ஒரு யோசனை கூறியிருந்தாள்!
 "இளமை இருக்கும்போது கொஞ்சம் வயதான பணக்காரனை வளைத்துப் போட்டு சின்னவீடு ஆகிவிடு! அப்படியே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டால் இரண்டாம் தர வாழ்க்கையாவது கிடைக்கும்".
 இளமை இருந்த திமிரில் அந்த அறிவுரை காதுகளில் ஏறவில்லை! 
 இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை!  
 என் உருவம் சிறியது! உள்ளாடை போடாமலே நேராக குத்திட்டு நிற்கும் என் மார்பகம்! எவனையும் அளவுக்கு மீறி கசக்க விட்டதில்லை! அளவான உணவு மற்றும் நல்ல பகலுறக்கம்! அதனால் வாய்த்த கட்டான உடல்! கொஞ்சம் நடனம் கற்றுக் கொடுத்துள்ளனர்! தீய பழக்கங்கள் பக்கம் போகவில்லை! எனவே இப்போதும் பார்க்க 25 வயது போல இருக்கிறேன் (என்று நினைக்கிறேன்).
தோழி சொன்ன திட்டத்தை இன்றே நிறைவேற்ற வேண்டியதுதான்.
 வருபவன் கொஞ்சம் பணக்காரனாக இருந்தால் சரி!
 இந்த ஆண்களைக் கவிழ்ப்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை!
 ஆண் ஒரு பெண்ணின் உடல் மீது வைத்திருக்கும் ஆசைதானே இந்த உலகமே இயங்க அடிப்படை!
 ஆறுதலாக நான்கு வார்த்தைகள்!
பிறகு கொஞ்சம் வலியைத் தாங்கிக்கொண்டால் போதும்! காலில் விழுந்து கிடப்பார்கள்!
 கதவு தட்டப்பட்டது! திறந்தேன்!
 ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் நின்றுகொண்டு இருந்தார்!
 இருவரும் ஒருவருக்கொருவரை பார்வையால் அளந்தோம்!
 அவரை கையைப் பிடித்து உள்ளே இழுத்து கதவைத் தாழிட்டேன்!
 சிலர் தாழிடும்போது பின்புறத்தில் இருந்து கட்டிப்பிடிப்பார்கள்! இவர் அப்படி இல்லை! தலையைக் குனிந்தபடி நின்றுகொண்டு இருந்தார்.
 நல்ல உடைகள் உடுத்தி இருந்தார்! நடுத்தர வர்க்கம் என்று தெரிந்தது! அரசாங்க ஊழியராக இருக்கலாம்!
 "என்னங்க முதல் தடவையா?!" 
"ம்"
"உக்காருங்க! இந்தாங்க தண்ணி குடிங்க!"
"இல்ல வேண்டாம்.."
"சரக்கு எதும்..."
"இல்ல பழக்கமில்ல"
"டீ கொண்டு வர சொல்லவா"
"இல்ல அதுவும் பழக்கமில்லை" 
"சரி உக்காருங்க"
அவர் உட்கார்ந்தார். அருகில் அமர்ந்தேன்.
"சொல்லுங்க என்ன பண்ணனும்?!"
"நா அதுக்காக வரலை! ஏதோ வேகத்துல வந்துட்டேன்"
"முதல் தடவை எல்லாரும் இப்டித்தான் சொல்வாங்க! கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா நானே போதும்னு கையெடுத்து கும்புடுற மாதிரி பண்ணுவீங்க!"
 அவர் என் முகத்தைப் பார்த்து சிரித்தார்.
"நா என்ன சொன்னாலும் செய்வீங்களா?!"
"செய்வேன். என்ன நீங்க என்னவேணாலும் செய்யலாம்!"
 ஏன்தான் இந்த வார்த்தைகள் ஆண்களுக்கு ரொம்ப பிடிக்குமோ தெரியாது!
  அவர் தயாரானார்! தன் கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்தார்.
 "அங்கே போய் நில்லு"
அடடா! என்ன அதிகாரம்! 
கொஞ்சம் தூரம் போய் நின்றேன்! 
அவர் தன் சட்டையைக் கழற்றினார்.
நானும் என் உடைகளைக் கழற்றினேன்!
அவர் கண்களை சுருக்கி விரித்து பார்த்தார்.
கண் கண்ணாடி இல்லாமல் அவருக்கு மங்கலாகத் தெரிகிறேன் என்று புரிந்தது.
 சட்டைப்பையில் சிறிய பொட்டலம் வைத்திருத்தார் அதில் பாரம்பரிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் வாசனைப் பவுடர் இருந்தது. அதை என்னை நோக்கி விட்டெறிந்து "இதைப் போட்டுக்க" என்றார்.
 நான் அதைக் கைகளில் கொட்டி கழுத்து அக்குள் மார்பு என பூசிக்கொண்டேன்! 
 கட்டிலில் அமர்ந்தபடி அவர் கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் நீட்டி குழந்தை போல அழைத்தார்! 
 நான் அருகே வந்ததும் கட்டி அணைத்துக் கொண்டார்.
 அவர் வலது காதை என் இடது மார்பில் வைத்து அழுத்தியபடி இறுகக் கட்டியணைத்தார்.
 நான் ஏதோ சொல்லவர "ஷ்..." என்று அமைதிப் படுத்தினார்.
 அவர் என் இதயத் துடிப்பைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
 மார்புக்கு அடியில் என் விலா எலும்புகளில் கைவைத்து நான் மூச்சுவிடுவதை உணர்ந்தார்.
ஐயோ பாவம்! காதல் தோல்வி அடைந்தவர்! இவருடைய காதலி இறந்துவிட்டாள் போலிருக்கிறது! அவளை உயிரோடு இருப்பதாக உணர்வதற்காக இப்படி செய்கிறார்!
 அவர் தலையை என் மார்போடு அணைத்தேன்.
என் மூச்சுக்காற்று அவர் மீது படும்படி செய்தேன்!
என் மார்பைச் சுட்டது அவரது கண்ணீர்.
கொஞ்ச நேரம் அழவிட்டேன். பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டேன். தலைமுடியைக் கோதிவிட்டேன்!
முதுகைத் தடவிக் கொடுத்தேன்!
 "தங்கம்... எந்...தங்கம்! எந்ந்ந்... தங்க்...கம்!" என்று அவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்ததார். 
சில காதல் தோல்வி அடைந்தவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள்! ஒரு பெண்ணின் உடலில் இன்னொரு பெண்ணின் ஆன்மாவைத் தேடுவார்கள்! பிறகு அது கிடைக்காமல் மேலும் நொறுங்கிப் போவார்கள்! 
 பார்க்கவே பாவமாக இருக்கும்!
 நான் அணைத்தபடி அவரைத் தூங்கவைப்பது போல  தட்டிக் கொடுத்தேன்! அவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார்! விசும்பியபடி கைக்குட்டையால் கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டார்!
 நான் அவர் அருகில் அமர்ந்தேன்!
 அவரது ஒரு கையை என் மார்பில் பதியுமாறு அணைத்துக்கொண்டு ஒட்டி உட்கார்ந்தேன்!
"என்ன ஆச்சுங்க?! ஏன் அழறீங்க?"
"என் காதலி நினைவு வந்துருச்சு" 
"அவங்க பேரு தங்கமா?!"
"இல்ல! நா அவள அப்பிடித்தான் கூப்பிடுவேன்!"
"ம்..."
"இன்னைக்கு கடைவீதில உன்னைப் பார்த்தேன்! அவள மாதிரியே இருந்தே! அதான் பின்னாடியே வந்தேன்"
 "கவலைப் படாதீங்க எல்லாம் சரியாயிடும்! ஆமா உங்களுக்கு ஏன் அவங்க கிடைக்காம போனாங்க?! உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்கிட்ட சொல்லலாம்!"
 "அவ எங்க வீட்டுக்கு பக்கத்து தெரு! சொக்கத் தங்கத்துல செஞ்ச சிலை மாதிரி இருப்பா! அவ பேரு தெரியாதப்பவே அவளுக்கு நா எனக்குள்ள வச்ச பேருதான் தங்கம்! தங்கத்தை ரொம்ப நாளா ஒரு தலையாக் காதலிச்சேன்! ஆனா என் தங்கத்துக்கு என்ன புடிக்கல! அப்பறம் சாக மனசில்லாம எங்கேயோ போய்ட்டேன்! ஆனா ரொம்ப நாள் கழிச்சு விதி எங்களை சேத்துவச்சது!"
 "அப்போ அவங்க இப்ப..."
"என் மனைவி!"
"அவங்க கிடைச்சிட்டாங்களே அப்பறம் ஏன் இவ்வளவு சோகம்?!"
"அவ மனசுல யாரோ இருக்காங்க! அவளால என்னோட ஒட்ட முடியல! காதலி கிடைச்சிட்டா ஆனா காதல் கிடைக்கல!"
 அடக் கடவுளே! இதென்ன கொடுமை! 
காதலி இறந்துவிட்டால் தானும் இறந்துவிடலாம்! காதலி நிராகரித்துவிட்டால் மனதைத் தேற்றிக்கொண்டு வேறு பெண்ணை ஏற்றுக் கொண்டு வாழலாம்!
 ஆனால் இது வாழவும் முடியாத சாகவும் முடியாத நிலை ஆயிற்றே!
 காதலே இல்லாத கண்களை தினமும் பார்க்கும் இவர் எத்தனை கொடுப்பினையற்ற பிறவி?!
 இருந்தாலும் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றத் தோன்றியது! 
"இவ்வளவு காதல் வச்சிருக்கீங்க!? இதுவே வாழ்க்கைக்கு போதுமே! பெரும்பாலும் காதலர்கள் னு சொன்னாலே அதுல ஒருத்தர்தான் காதலிப்பாங்க! இன்னொருத்தர் அத ஏத்துக்குவாங்க! ஒருத்தரோட காதலை வச்சுதான் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வாங்க! இதுதான் யதார்த்தம்"
 "ஆமா! ஆனா.... எப்ப அவ என்னை வேண்டாம்னு சொன்னாளோ அப்பவே என் உலகம் நின்னு போச்சு! 
 நா காதலிச்ச தங்கமும் என் மனைவியும் ஒருத்திதான் னு என்னால ஏத்துக்க முடியல!"
 நான் என்ன சொல்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்!
"எனக்கு பெண்குழந்தை பிறக்கும்னு நெனச்சேன்! அத என் தங்கமா நெனச்சு வாழலாம்னு நெனச்சேன்! அதுவும் நடக்கல!"
 "அவங்க மனசுல இருக்குறது யாரு?!"
"தெரியாது! இருக்காங்களா இல்லையானு கூட தெரியாது!"
அவர் அமைதியாக எதையோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தார். பிறகு மூச்சை இழுத்த படி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
 "என் தங்கம் இவ இல்ல! அவ இன்னும் எங்க வீட்டு பக்கத்துல தெருவுல இருக்கா! அவ என்னையே நினச்சுக்கிட்டு இருக்கா! எனக்கு நல்லா தெரியும்! அவ என்னோட தங்கம்! எனக்கு மட்டும்தான் அவ சொந்தம்!"
 அப்படியே இருந்தோம்! 
கதவு தட்டப்பட்டது! 
நேரம் முடிந்துவிட்டது!
அவர் கிளம்பினார். அவரது பர்சை எடுத்துக் கொடுத்தபோது பார்த்தேன் ஒரு பழைய புகைப்படத்தில் மாணவி ஒருவர் சிரித்தபடி இருந்தார். 
 
 

 

 

Wednesday, 21 May 2025

இந்திய அமைதிப்படை கொலைகள் முழு பட்டியல்

இந்திய அமைதிப்படை கொலைகள் முழு பட்டியல் இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் நடத்திய படுகொலைகளின் பட்டியல் 1) 02.06.1987 - Liberation Operation படுகொலை - வடமராட்சி 2) 10.06.1987 - முகமாலை இளைஞர் படுகொலை - முகமாலை சந்தி 3) 14.06.1987 - Operation Liberation சிறை படுகொலை - பூசாசிறைச்சாலை 4) 17.06.1987 - liberation operation இராணுவ நடவடிக்கை - வடமராட்சி 5) 28.06.1987 - நாட்டுப்பற்றாளர் க.ஏகாம்பரம் படுகொலை - கூனித்தீவு 6) 08.07.1987 - தையிட்டி பராசக்தி சன சமூக நிலைய மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் படுகொலை 7) 10.07.1987 - வடமாராட்சி தேடுதல் வேட்டை - (கல்லூரி, ஆலயம், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்) 8 ) 19.07.1987 - பன்குளம் குழந்தைகள் எரித்துப் படுகொலை - கிராமம் 9) 26.07.1987 - அளவெட்டி ஆசிரமம் படுகொலை - ஆசிரமம் 10) 23.09.1987 - மனு கொடுக்கச் சென்ற யோகன் படுகொலை - எழுத்தூர் 11) 10.10.1987 - கோட்டைப் படுகொலை - யாழ் 12) 11.10.1987 - பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை - பெரியபுலம் 13) 11.10.1987 - காங்கேசன்துறை தேடுதல் வேட்டை - வீடு 14) 11.10.1987 - புதுக்காட்டு சந்தி படுகொலை - சந்தி 15) 12.10.1987 - மல்லாகம் படுகொலை - கிராமம் 16) 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை - கிராமம் 17) 12.10.1987 - சுன்னாகம் படுகொலை - கிராமம் 18) 12.10.1987 - பிரம்படி படுகொலை - கிராமம் 19) 12.10.1987 - பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை) 20) 19.10.1987 - யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை - குடியிருப்புப் பகுதி 21) 19.10.1987 - கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை 22) 20.10.1987 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 23) 20.10.1987 - கேரதீவு இறங்குதுறை தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 24) 20.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 25) 20.10.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 26) 21.10.1987 - யாழ் மருத்துவர்கள் படுகொலை - மருத்துவமனை 27) 21.10.1987 - யாழ் மருத்துவமனைப் படுகொலை - மருத்துவமனை 28) 22.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டை - குடியிருப்புப் பகுதி 29) 22.10.1987 - யாழ் மருத்துவமனை ஊழியர்கள் படுகொலை 30) 22.10.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை 31) 22.10.1987 - சுண்டுக்குளி படுகொலை 32) 22.10.1987 - அராலித்துறை படுகொலை 33) 24.10.1987 - யாழ் மத்திய கல்லூரி மாணவர் லக்ஸ்மணன் படுகொலை 34) 24.10.1987 - கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை 35) 25.10.1987 - கொக்குவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது பீரங்கித்தாக்குதல் 36) 25.10.1987 - சேரதீவு படுகொலை 37) 25.10.1987 - சந்தை மீது உலங்கு வானூர்தித் தாக்குதல் 38) 25.10.1987 - இந்துக்கல்லூரி அகதி முகாம் படுகொலை 39) 26.10.1987 - சூறாவத்தை படுகொலை 40) 26.10.1987 - அளவெட்டி படுகொலை 41) 26.10.1987 - புத்தூர் படுகொலை 42)26.10.1987 - அளவெட்டி படுகொலை 43) 26.10.1987 - புத்தூர் படுகொலை 44) 27.10.1987 - சாவகச்சேரி கந்தசட்டி கோயில் படுகொலை 45) 04.11.1987 | - களபூமி, வீமன்காமம், கோண்டாவில் படுகொலை 46) 05.11.1987 - மூளாய் மருத்துவமனை படுகொலை 47) 07.11.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப்படுகொலை 48) 07.11.1987 - உரும்பிராய் படுகொலை 49) 09.11.1987 - மானிப்பாய் படுகொலை 50) 10.11.1987 - அச்சுவேலி தேடுதல் வேட்டைப் படுகொலை 51) 10.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை 52) 10.11.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை 53) 11.11.1987 - நெடுங்கேணி தேடுதல் வேட்டைப்படுகொலை 54) 12.11.1987 - இணுவில் தேடுதல் வேட்டைப்படுகொலை 55) 12.11.1987 - சுன்னாகம் தேடுதல் வேட்டைப்படுகொலை 56) 16.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை 57) 19.11.1987 - குழந்தைகள் சுவரில் அடித்து படுகொலை 58) 20.11.1987 - அச்செழு படுகொலை 59) 21.11.1987 - ஆனைக்கோட்டைச் சந்தி பதுங்குகுழி படுகொலை 60) 30.11.1987 - மூதூர் எழுவர் படுகொலை 61) 02.12.1987 - மட்டக்களப்பு படுகொலை 62) 27.12.1987 - மட்டக்களப்பு எறிகணைவீச்சு 63) 02.12.1987 - தம்பாப்பிள்ளைசிவம் படுகொலை 64) 02.12.1987 - ஏழாலை இளைஞர்கள் படுகொலை 65) 03.12.1987 - மட்டக்களப்பு பேரூந்து படுகொலை 66) 20.12.1987 - ஊரெழு தேடுதல் வேட்டைப் படுகொலை 67) 27.12.1987 - சாவகச்சேரி பொதுச்சந்தை படுகொலை 68) 28.12.1987 - முல்லைத்தீவு நகர் படுகொலை 69) 30.12.1987 - காத்தான்குடி படகு பயணிகள் படுகொலை 70) 04.01.1988 - புதுக்குடியிருப்பு தேடுதல் வேட்டை 71) 13.01.1988 - வட்டுக்கோட்டை காவல் முகாம் படுகொலை முகாம் 72) 19.01.1988 - பாண் வியாபாரி தங்கராசா படுகொலை 73) 21.01.1988 - தாண்டியடி படுகொலை 74) 26.01.1988 - கிண்ணியடி படுகொலை 75) 02.02.1988 - வட்டக்கச்சி பதுங்குகுழி படுகொலை 76) 03.02.1988 - வட்டக்கச்சி து.கிருஷ்ணப்பிள்ளை படுகொலை 77) 08.02.1988 - தம்பிலுவில் அரசியல் பிரமுகர் நடேசன் படுகொலை 78) 08.02.1988 - ஏறாவூர் வானூர்தித் தாக்குதல் 79) 08.02.1988 - திருக்கோவிலில் குண்டு வெடித்து 9 வயது சிறுவன் சிறுவன் விஜேந்திரன் இறப்பு 80) 13.02.1988 - நாட்டுப்பற்றாளர் சிவா படுகொலை 81) 16.02.1988 - பம்பலப்பிட்டி விநாயகர் ஆலயப்படுகொலை 82) 19.02.1988 - வட அளவெட்டி அமைதிப்படை முகாம் படுகொலை 83) 04.03.1988 - கோணமலை விமானத் தாக்குதல் 84) 06.03.1988 - மட்டக்களப்பு பொதுமக்கள் படுகொலை 85) 11.03.1988 - திருமலை பேருந்து படுகொலை (வவுனியா வழியில்) 86) 11.03.1988 - முத்தையன்கட்டு படுகொலை 87) 15.03.1988 - தம்பலகாமம் எல்லை பேருந்து பயணிகள் படுகொலை 88) 15.03.1988 - ஸ்கந்தபுரம் தமிழர் படுகொலை 89) 15.03.1988 - கோட்டைக்கல்லாற்றில் பேராதனை வைத்தியபீட மாணவன் கொலை 90) 15.03.1988 - வடக்கந்தை தமிழர் படுகொலை 91) 16.03.1988 - ஸ்கந்தபுரம் துப்பாக்கிச்சூடு 92) 16.03.1988 - மட்டு தமிழ் இளைஞர் படுகொலை 93) 16.03.1988 - வந்தாறுமூலையில் இளையோர் படுகொலை 94) 22.03.1988 - ஹொரவபொத்தானை பேரூந்து பயணிகள் படுகொலை 95) 22.03.1988 - பம்பைமடு தேடுதல் வேட்டை படுகொலை 96) 05.04.1988 - இந்துக் கல்லூரி மாணவன் கொலை 97) 21.04.1988 - பண்ணாகம் தேடுதல் வேட்டை 98) 28.04.1988 - வட்டக்கச்சி கணபதிப்பிள்ளை படுகொலை 99) 10.05.1988 - கெப்பிட்டிகொலாவ தாய் - சேய் படுகொலை 100) 12.05.1988 - கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர் கொலை 101) 13.05.1988 - மணலாறு தமிழர்கள் படுகொலை 102) 13.05.1988 - விசாரணை முகாமில் மகாவித்தியாலய மாணவன் படுகொலை 103) 13.05.1988 - நாசிவன்தீவு சரிபுதீன் மொகமட் சபீர் படுகொலை 104) 14.05.1988 - திருகோணமலை பெண் திரைப்படத் தயாரிப்பாளர் கொலை (ஒட்டுக்குழு + IPKF) 105) 16.05.1988 - கிராம சேவையாளர் கடத்தல் (வெற்றிலைக்கேணி சேவையகம்) 106) 17.05.1988 - மல்லாவி விவசாயி படுகொலை 107) 19.05.1988 - மதவாச்சிபாரவூர்திக்கு தீ வைப்பு 108) 27.05.1988 - பிரசைகள் குழுத்தலைவர் படுகொலை (ஆரையம்பதி வீதி) 109) 01.06.1988 - உரும்பிராய் நாட்டுப்பற்றாளர் பாக்கியம் அக்கா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF) 110) 01.06.1988 - நல்லூர் நாட்டுப்பற்றாளர் க.நடராசா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF) 111) 11.06.1988 - கிரான்குளம் பொதுமகன் படுகொலை 112) 01.07.1988 - பாவற்குளம் பொதுமகன் படுகொலை 113) 06.06.1988 - அருட்திரு. சந்திரா பெர்னாண்டோ படுகொலை 114) 03.07.1988 - நெடுங்கேணி தாய், மகள் வல்லுறவுப் படுகொலை 115) 08.07.1988 - நவஜீவனம் தேடுதல் வேட்டைப் படுகொலை 116) 09.07.1988 - இராமநாதபுரம் தேடுதல் வெட்டிப்படுகொலை 117) 12.07.1988 - சில்லாலை நீர்ப்பாசன இலாகா அலுவலப் படுகொலை 118) 13.07.1988 - ஆரையம்பதி விசாரணை முகாம் இளைஞர் படுகொலை 119) 13.07.1988 - இன்பருட்டியில் சிற்றூர்தி மீதான தாக்குதல் 120) 15.07.1988 - பரந்தன் சந்தி தேடுதல் வேட்டை 121) 15.07.1988 - தமிழ்ப்பொதுமகன் படுகொலை (தள்ளாடி முகாம்) 122) 18.07.1988 - பரந்தன் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 123) 18.07.1988 - கம்பர்மலை இளைஞர் கைது - படுகொலை 124) 04.08.1988 - பரந்தன் குடியிருப்புப் பகுதி படுகொலை 125) 15.08.1988 - யாழ் நாட்டுப்பற்றாளர் இரங்கநாதன் படுகொலை 126) 16.08.1988 - திருகோணமலை வீதி துப்பாக்கிச்சூடு 127) 18.08.1988 - பேராதனை பல்கலை., பொறியியல் பீடம் மீதான தாக்குதல் 128) 24.08.1988 - நாட்டுப்பற்றாளர் துரைராசா படுகொலை (உரும்பிராய்) 129) 31.08.1988 - முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியர் சுட்டுக்கொலை 130) 05.09.1988 -மட்டக்களப்பு விசாரணை முகாம் படுகொலை 131) 08.09.1988 - நுணா தேடுதல் வேட்டைப் படுகொலை 132) 11.09.1988 - ஈச்சமோட்டை பொறியியலாளர் படுகொலை (நல்லூர் நாவலர் மண்டபம்) 133) 17.09.1988 - நல்லூர் வீதி தேடுதல் வேட்டை படுகொலை 134) 23.09.1988 - செல்வக்குமார் படுகொலை (யாழ் வீதி) 135) 25.09.1988 - பட்டிருப்பு பொதுமக்கள் படுகொலை 136) 29.09.1988 - யாழ்ப்பாணம் இராமலிங்கம் வீதி இளைஞர் படுகொலை 137) 02.10.1988 - சிறுப்பிட்டி மாணவன் நந்தன் சுட்டுக்கொலை 138) 04.10.1988 - கெருடாவில் தந்தை, மகன் படுகொலை 139) 04.10.1988 - சாளம்பைக்குளம் படுகொலை 140) 04.10.1988 - யாழ் மத்திய பேருந்து நிலைய படுகொலை 141) 04.10.1988 - பூநகரி மரத்தடி படுகொலை 142) 05.10.1988 - மின்சாரம் பாய்ச்சிக்கொல்லப்பட்ட துரையம்மா (விசாரணை சித்ரவதை) 143) 05.10.1988 - இடைக்காடு தமிழர்கள் படுகொலை 144) 06.10.1988 - மயிலங்காடு பொன்னம்பலம் சுட்டுக்கொலை 145) 06.10.1988 - மட்டக்களப்பு உபதபாலதிபர் சுட்டுக்கொலை (காங்கேயன் ஓடை) 146) 09.10.1988 - இராணுவ முகாமில் மட்டக்களப்பு மாணவன் படுகொலை 147) 11.10.1988 - திருமலை வீதி தேடுதல் வேட்டை 148) 11.10.1988 - ஈரற் பெரியகுளம் பேருந்து படுகொலை 148) 11.10.1988 - கட்டைபறிச்சான் படுகொலை 148) 13.10.1988 - ரவி சுட்டுப்படுகொலை 149) 13.10.1988 - தெல்லிப்பழை வீதி படுகொலை 150) 13.10.1988 - இணுவில் வீதி படுகொலை 151) 14.10.1988 - யாழ் கதிர்காமநாதன் படுகொலை 152) 14.10.1988 - பொன்னையா சிறிதரன் படுகொலை 153) 17.10.1988 - மங்களஓயா படுகொலை 154) 18.10.1988 - குளிர்பான நிலையம் மானிப்பாய் சற்குணராசா படுகொலை 155) 21.10.1988 - செல்வராசா விசாரணைப் படுகொலை 156) 21.10.1988 - தமிழீழ மக்கள் மன்றத்தலைவர் சிவானந்தசுந்தரம் படுகொலை (வெலிங்டன் சந்தி) 157) 22.10.1988 - ஊர்காவற்றுறை புதுமணத் தம்பதியர் கொலை (பொன்னாச்சி கடைச்சந்தி) 158) 22.10.1988 - கிற்றார் கலைஞர் கி.செல்லையா படுகொலை (இசைக்கூடம்) 159) 22.10.1988 - பொன்னாச்சி இளம்தம்பதியார் படுகொலை (கடைச்சந்தி) 160) 25.10.1988 - விஞ்ஞான ஆசிரியர் படுகொலை (யாழ் மருத்துவமனை வீதி) 161) 25.10.1988 - சுகாதார அத்தியட்சகர் பணிமனை படுகொலை 162) 25.10.1988 - மல்லாகம் வர்த்தகர்சங்கத் தலைவர் படுகொலை 163) 25.10.1988 - வவுனியா சுகாதார பணிமனை படுகொலை 164) 25.10.1988 - சங்கானை ஆசிரியர் படுகொலை 165) 25.10.1988 - மல்லாகம் வர்த்தக சங்கத் தலைவர் சிவதாசபிள்ளை படுகொலை 166) 26.10.1988 - கரடிக்குழி படுகொலை 167) 26.10.1988 - மறிச்சுக்கட்டி படுகொலை 168) 31.10.1988 - நெடுங்கேணி படுகொலை 169) 31.10.1988 - யாஸ் பரியோவான் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை 170) 31.10.1988 - நுணாவில் தேடுதல் வேட்டை 171) 31.10.1988 - மகாவித்தியாலய மாணவர்கள் படுகொலை 172) 02.11.1988 - நாட்டுப்பற்றாளர் வெள்ளையன் படுகொலை 173) 02.11.1988 - கனகராயன்குளம் படுகொலை 174) 02.11.1988 - சகோதரர்கள் உயிருடன் எரித்துக்கொலை 175) 02.11.1988 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப்படுகொலை 176) 03.11.1988 - சரசாலை நாட்டுப்பற்றாளர் சுந்தரம் படுகொலை 177) 04.11.1988 - புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் படுகொலை 178) 04.11.1988 - பச்சனூர் படுகொலை 179) 04.11.1988 - இணுவில் நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் படுகொலை 180) 04.11.1988 - புங்குடுதீவு படுகொலை 181) 05.11.1988 - சாவகச்சேரி வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராசா படுகொலை 182) 06.11.1988 - ஆனையிறவு குடியிருப்புப் பகுதி படுகொலை 183) 07.11.1988 - மூதூர் 55ஆம் கட்டைபகுதி படுகொலை 184) 07.11.1988 - மூதூர் நாட்டுப்பற்றாளர் ரகு படுகொலை 185) 08.11.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர் பிரேம்குமார் படுகொலை 186) 08.11.1988 - சாவகச்சேரிதமிழ் மாணவன் படுகொலை 187) 08.11.1988 - பண்டத்தரிப்பு பிரசைகள் குழுவினர் படுகொலை 188) 09.11.1988 - வடமராட்சி அட்டூழியம் 189) 11.11.1988 - மன்னார் உயர்வகுப்பு மாணவன் படுகொலை 190) 11.11.1988 - ஆசிரியர் பாலகிருஷ்ண படுகொலை 191) 12.11.1988 - பொருளியல் ஆசிரியர் கிருஷ்ணானந்தன் படுகொலை 192) 12.11.1988 - சரசாலை தமிழ் இளைஞர் படுகொலை 193) 13.11.1988 - மகேந்திரநாதன் படுகொலை 194) 13.11.1988 -தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் படுகொலை (மாம்பழம் சந்தி - அரியாலை) 195) 13.11.1988 - ஊரிக்காடு தேடுதல் வேட்டைப் படுகொலை 196) 13.11.1988 - திருநெல்வேலி நாட்டுப்பற்றாளர் வைகுந்தவாசன் படுகொலை 197) 14.11.1988 - முல்லைத்தீவு நாட்டுப்பற்றாளர்கள் சங்கர்-கிளியன் கொலை 198) 16.11.1988 - சங்கத்தானை நாட்டுப்பற்றாளர் குணாளன் படுகொலை 199) 16.11.1988 - இருதயக்கல்லூரி தேடுதல் வேட்டை 200) 17.11.1988 - பொத்துவில் படுகொலை 201) 17.11.1988 - முல்லைத்தீவு குடியிருப்புப் படுகொலை 202) 19.11.1988 - மகாவித்தியாலய மாணவன் படுகொலை 203) 21.11.1988 - கோணாவில் நாட்டுப்பற்றாளர் சங்கரன் படுகொலை 204) 22.11.1988 வவுனியா நாட்டுப்பற்றாளர் பூலோகசிங்கம் படுகொலை 205) 22.11.1988 - பாவற்குளம் 4 ஆம் படிவம் படுகொலை 206) 22.11.1988 - கல்முனை படுகொலை 207) 23.11.1988 - யாழ் செயலக கணக்காளர் படுகொலை 208) 23.11.1988 - திருகோணமலை தேடுதல் நடவடிக்கை 209) 25.11.1988 - கடற்றொழிலாளி படுகொலை 210) 26.11.1988 - வட்டக்கச்சி கட்சன் வீதி படுகொலை 211) 27.11.1988 - வட்டகச்சி கண்ணிவெடி படுகொலை 212) 27.11.1988 - யாழ் பேராலய இளைஞர் படுகொலை 213) 28.11.1988 - நாவற்குழி நாட்டுப்பற்றாளர் மனோகரி படுகொலை 214) 28.11.1988 - நாவற்குழி தேடுதல் வேட்டை படுகொலை 215) 29.11.1988 - இணுவில் மருத்துவமனையில் நோயாளி இளம்பெண் படுகொலை 216) 30.11.1988 - மூதூர் தமிழர்கள் படுகொலை 217) 01.12.1988 - புத்தூர் புத்தெழில் ஆசிரியர் திருஞானம் படுகொ (தேசவிரோதிகள் + IPKF)லை 218) 03.12.1988 - கருகம்பனை சிவதாசன் நிர்மலன் படுகொலை 219) 03.12.1988 - பற்றிக்சுவீதி தமிழர் படுகொலை 220) 04.12.1988 - ஆசிரியர் கருணானந்தசிவம் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 221) 05.12.1988 - வவுனிக்குளம் படுகொலை 222) 07.12.1988 - காணிக்கை மாதா கோயில் படுகொலை 223) 08.12.1988 - யாழ் சிற்றூர்தி சங்கத்தலைவர் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 224) 09.12.1988 - காங்கேசன்துறை மாணவன் படுகொலை 225) 12.12.1988 - திருகோணமலை எறிகணைத்தாக்குதல் 226) 15.12.1988 - ஊரெழு தேவதாசன் படுகொலை (கோப்பாய் முகாம், தேசவிரோதிகள் + IPKF) 227) 17.12.1988 - அக்கரைப்பற்று படுகொலை 228) 17.12.1988 - ஆலையடிவேம்பு படுகொலை 229) 19.12.1988 - சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவர்கள் படுகொலை 230) 19.12.1988 - ஆனைக்கோட்டை படுகொலை 231) 19.12.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 232) 19.12.1988 - மன்னார் இளைஞர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 233) 21.12.1988 - அப்புத்தளை மலையகம் தமிழிளைஞர்கள் படுகொலை 234) 23.12.1988 - மானிப்பாய் ஜெயதாசன் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 235) 27.12.1988 - மட்டக்களப்பு அட்டூழியம் 236) 02.01.1989 - ஒட்டிசுட்டான் துப்பாக்கிச்சூடு 237) 07.01.1989 - கண்டாவளை தேடுதல் வேட்டை 238) 08.01.1989 - இராமநாதபுரம் பழைய கண்டி வீதி கண்ணிவெடி வெடிப்பு 239) 09.01.1989 - அக்கரைப்பற்று பேரூந்து நிலைய காவல் சோதனை படுகொலை 240) 13.01.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டை படுகொலை 241) 17.01.1989 - காத்தார் சின்னக்குளம் படுகொலை 242) 20.01.1989 - மன்னார் காவல் நிலைய படுகொலை 243) 26.01.1989 - இந்துக் கல்லூரி படுகொலை 244) 28.01.1989 - அரியாலை பொதுமக்கள் படுகொலை 245) 29.01.1989 - அளம்பில் தேடுதல் வேட்டை 246) 30.01.1989 - ஆறுகால்மடம் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர் படுகொலை 247) 31.01.1989 - கரவெட்டி இராணுவ முற்றுகை படுகொலை 248) 03.02.1989 - மிருசுவில் சிவரஞ்சன் சுட்டுக்கொலை 249) 08.02.1989 - பிறவுண்வீதி இளைஞர் படுகொலை (கிழக்கு கொக்குவில்) 250) 10.02.1989 - பேசாலை படுகொலை 251)15.02.1989 - மாவிட்டபுரம் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட இளைஞர் 252) 15.02.1989 - முள்ளியவளை செல்வரட்ணம் சுதர்சன் படுகொலை 253) 15.02.1989 - உடுப்பிட்டி முகாமில் யாழ் சகோதரிகள் சுட்டுக்கொலை 254) 16.02.1989 - மொறக்கொட்டாஞ்சேனை படுகொலை (டெலோ + IPKF) 255) 22.02.1989 - நெல்லியடி மருத்துவமனைக் காவலாளி படுகொலை 256) 23.02.1989 - துன்னாலை எறிகணைத் தாக்குதல் 257) 23.02.1989 - திக்கம் மக்கள் படுகொலை 258) 01.03.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை 259) 14.03.1989 - பளை தேடுதல் வேட்டைப் படுகொலை 260) 16.03.1989 - மட்டுவில் தேடுதல் வேட்டை 261) 19.03.1989 - மணற்காட்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை 262) 11.04.1989 - காட்டுமுறி தமிழ்ப்பொதுமகன் படுகொலை 263) 14.04.1989 - கரம்பன் மேற்கு பக்தி கிராமம் கிராமசேவகர் படுகொலை 264) 25.04.1989 - கட்டுவன்புலம் பள்ளி மாணவன் படுகொலை 265) 01.05.1989 - நாட்டுப்பற்றாளர்கள் சிறி.முறிசெல்வம் & செ.பாலேந்திரன் படுகொலை (வவுனியா சிறை) 266) 02.05.1989 - பருத்தித்துறை தேடுதல் வேட்டை 267) 03.05.1989 - மல்லாகம் செல்லையா நிர்மலன் படுகொலை 268) 03.05.1989 - புங்குடுதீவு முருகேசு குகதாஸ் படுகொலை 269) 14.05.1989 - மிருசுவில் பேருந்து மீது தாக்குதல் 270) 14.05.1989 - மணலாறு உணவு விடுதி படுகொலை 271) 14.05.1989 - யாழ் மருத்துவமனையில், தமிழிளைஞரை சடலமாக ஒப்படைத்தது 272) 16.05.1989 - தரவத்தை விவசாயப் பெண் கூலித்தொழிலாளர் கடத்தல் 273) 16.05.1989 - பால்நிலைய அதிபர் படுகொலை 274) 16.05.1989 - புத்தூர் வாதரவத்தை படுகொலை 275) 17.05.1989 - மல்லாவி பெண் படுகொலை 276) 17.05.1989 - அத்தியாயர் கல்லூரி மாணவன் படுகொலை 277) 17.05.1989 - புன்னாலைக்கட்டுவன் படுகொலை 278) 18.05.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை 279) 19.05.1989 - உரும்பிராய் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 280) 20.05.1989 - சுதுமலை படுகொலை 281) 20.05.1989 - நிலாவெளி கோயில் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 282) 23.05.1989 - கிளிநொச்சி பிரசைகள் குழுப்பிரமுகர் கொலை (கனகபுரம் - ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 283) 28.05.1989 - வந்தாறுமூலை இளைஞர்கள் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 284) 28.05.1989 - தமிழ்ப்பொதுமகன் சுட்டுக்கொலை (சாவச்சேரி) 285) 28.05.1989 - வண்ணார்பண்ணை இருதமிழர் சுட்டுக்கொலை (நாகர்கோவில்) 286) 01.06.1989 - நாவாந்துறை தேடுதல் வேட்டைப் படுகொலை 287) 01.06.1989 - திருநெல்வேலி தேடுதல் வேட்டைப் படுகொலை 288) 01.06.1989 - மாணிக்கம் யோகேந்திரன் படுகொலை 289) 01.06.1989 - ஏழாலை தேடுதல் வேட்டைப் படுகொலை 290) 01.06.1989 - வைத்தீஸ்வரா கல்லூரி மாணவர் ஆனந்தராசா படுகொலை 291) 04.06.1989 - கட்டுடைச்சந்தி வணிகர் கணபதிப்பிள்ளை படுகொலை 292) 04.06.1989 - பிராம்பத்தை கோடீஸ்வரி பத்மநாதன் படுகொலை 293) 04.06.1989 - தபால்பெட்டிச்சந்தியில் அரியாலை தமிழ்ப்பொதுமகன் படுகொலை 294) 05.06.1989 - வரணி எறிகுண்டுத் தாக்குதல் 295) 05.06.1989 - கண்டிக்காடு படுகொலை 296) 17.06.1989 - சங்கத்தானை தேடுதல் வேட்டை 297) 19.06.1989 - கோப்பாய் சண் படுகொலை 298)19.06.1989 - புதுக்குடியிருப்பு பேபி படுகொலை 299)20.06.1989 - கந்தர்மடம் சண்முகம் உதயவர்மன் படுகொலை 300) 20.06.1989 - மாவிட்டபுரம் கந்தையா குஞ்சுக்கிளி படுகொலை 301) 20.06.1989 - முருகுசசிக்குமார் படுகொலை 302) 20.06.1989 - யாழ் வைத்தியசாலையில் முகமாலை நாகேந்திரராசா படுகொலை 303) 24.06.1989 - நாகர்கோவில் தேடுதல் வேட்டை 304) 24.06.1989 - கந்தரோடை கணேசகுமார் படுகொலை 305) 24.06.1989 - தாண்டிக்குளம் பெரியதம்பி படுகொலை 306) 24.06.1989 - வேப்பங்குளம் மோகன்ராஜ் படுகொலை 307) 24.06.1989 - வல்லிபுரம் முருகேசு படுகொலை 308) 24.06.1989 - நெடுந்தீவு ஏரம்புநடராசா படுகொலை 309) 26.06.1989 - அத்தாய் மகேந்திரராசா படுகொலை 310) 28.06.1989 - அல்வாய் மாலிசந்தி தேடுதல் வேட்டைப் படுகொலை 311) 28.06.1989 - நந்தாவில் அம்மன்கோவிலடி படுகொலை 312) 28.06.1989 - பண்டத்தரிப்பில் இளைஞர் சடலம் மீட்பு 313) 28.06.1989 - அளவெட்டி தேடுதல் வேட்டைப் படுகொலை 314) 28.06.1989 - மிருசுவில் தேடுதல் வேட்டைப் படுகொலை ஆசைப்பிள்ளை ஏற்றம் 315) 28.06.1989 - செல்வம் அக்கா சித்ரவதை படுகொலை (ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 316) 28.06.1989 - புலோலிகந்த முருகேசனார் சிலை தமிழ்ப்பெண் சுட்டுப்படுகொலை 317) 29.06.1989 - அளம்பில் துப்பாக்கிச்சூடு 318) 29.06.1989 - நீர்வேலி பெண்கள் வன்படுகொலை 319) 03.07.1989 - ஓமந்தை எறிகணைத் தாக்குதல் 320) 03.07.1989 - கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு 321) 18.07.1989 - திருகோணமலை தேடுதல் வேட்டை 322) 19.07.1989 - பாரதிபுரம் தேடுதல் வேட்டை படுகொலை 323) 24.07.1989 - உயரப்புலம் தமிழிளைஞர் சுட்டுப்படுகொலை 324) 26.07.1989 - அல்வாய் ஆசிரியர் சின்னத்தம்பி படுகொலை 325) 26.07.1989 - தெல்லிப்பளை ரவீந்திரன் படுகொலை 326) 26.07.1989 - ஓராம்கட்டை இராணுவ நடவடிக்கை 327) 02.08.1989 - தீருவில் தேடுதல் வேட்டைப் படுகொலை 328) 02.08.1989 - அரியாலை இளைஞர் கைது 329) 02.08.1989 - வல்வெட்டித்துறை படுகொலை (மருத்துவமனை, சமூக நிலையம், கோயில், குடியிருப்புப் பகுதி) 330) 02.08.1989 - வல்வை 15 பெண்கள் பாலியல் வன்படுகொலை 331) 04.08.1989 - கீரிமலை தேடுதல் வேட்டைப் படுகொலை 332) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் தேடுதல் படுகொலை 333) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் எறிகணைத்தாக்குதல் 334) 10.08.1989 - கோண்டாவில் இளைஞர் சடலமாக மீட்பு 335) 14.08.1989 - பருத்தித்துறை வியாபாரி எரித்துப்படுகொலை 336) 14.08.1989 - மூலை நடன ஆசிரியர் படுகொலை 337) 14.08.1989 - யாக்கரை எறிகணைவீச்சு படுகொலை 338) 17.08.1989 - நெடுங்கேணி தமிழ்க்குழந்தைகள் படுகொலை 339) 17.08.1989 - கன்னியர்மட மாணவியர் வன்படுகொலை (எழுதுமட்டுவாள்) 340) 17.08.1989 - உடுப்பிட்டி இமையணனை படுகொலை (கரவெட்டி வதிரிச்சந்தி) 341) 18.08.1989 - ஐயன்குளம் படுகொலை 342) 18.08.1989 - நுணா சிறுவன் சுட்டுக்கொலை 343) 21.08.1989 - வடமராட்சி தேடுதல் வேட்டைப் படுகொலை (திக்கம், அல்வாய் பகுதிகளில்) 344) 21.08.1989 - மாணவன் அருளானந்தம் சுதாகரன் கொலை 345) 21.08.1989 - கந்தளாய் படுகொலை 346) 23.08.1989 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை 347) 23.08.1989 - மாவிட்டபுரம் வியாபாரி படுகொலை 348) 25.08.1989- ஆவரங்கால் இந்திரன் சுட்டுப்படுகொலை 349) 27.08.1989 - பேசாலை எறிகணைத்தாக்குதல் 350) 31.08.1989 - ஆவிரங்கால் விவசாயி சுட்டுக்கொலை 351) 02.09.1989 - ஆண்டான்வளவு தேடுதல் வேட்டை 352) 02.09.1989 - ஆண்டான் வளவுப் பகுதியில் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 353) 08.09.1989 - பருத்தித்துறை பொதுமக்கள் படுகொலை 354) 17.09.1989 - கிளிநொச்சி முகாம் படுகொலை 355) 18.09.1989 - புற்றளை தேடுதல் வேட்டைப் படுகொலை 356) 22.09.1989 - நமசிவாயம் தெய்வேந்திரன் படுகொலை 357) 23.09.1989 - இயக்கச்சி நாட்டுப்பற்றாளர் தர்மகுலேந்திரன் படுகொலை 358) 25.09.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப் படுகொலை 359) 26.10.1989 - கரடிக்குழி தேடுதல் வேட்டைப் படுகொலை 360) 26.10.1989 - மறிச்சுக்கட்டி தேடுதல் வேட்டை 361) 29.10.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் ரவீந்திரன் படுகொலை 362) 17.11.1989 - மானிப்பாய் செல்லத்தம்பி படுகொலை 363) 26.11.1989 - கிளாலி நாட்டுப்பற்றாளர் பவுண் படுகொலை 364) 10.12.1989 - மன்னார் பெண் குழந்தை படுகொலை 365) 28.12.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் பாலா படுகொலை 366) 12.01.1990 - கோண்டாவில் நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை படுகொலை 367) 24.05.1990 - வங்காலை முகாம் படுகொலை 368) 14.06.1990 - கந்தளாய் பேருந்து பயணிகள் வெட்டிப்படுகொலை 369) 14.06.1990 - மூதூர் பீரங்கித் தாக்குதல் (இப்பட்டியல் The North-East Secretariat on Human Rights (NESoHR), Voice உலகத்தமிழர்கள் உரிமைகள் குரல் அமைப்பு, Tamil Nation, ஆகியவை வெளியிட்ட ஆவணங்கள் & நூல்களில் இருந்து இப்பட்டியலை பரப்புரை நோக்கத்திற்காக தயாரித்துள்ளோம்) தோழர் சிவப்ரியன் செம்பியன் பதிவிலிருந்து பகிர்வு

Tuesday, 20 May 2025

ஆகாஷ் பாஸ்கரன் இன்னொரு உதயநிதி

ஆகாஷ் பாஸ்கரன் இன்னொரு உதயநிதி

 தற்போது அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கியுள்ள ஆகாஷ் பாஸ்கரன் சேலம் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் தம்மம்பட்டி யைச் சேர்ந்தவர்!
 1940 களிலேயே இவரது பாட்டன் ரங்கசாமி ரெட்டியார் நகைக்கடை ஆரம்பித்து அதை இன்றும் நடத்தி வருகிறது இவர்களது குடும்பம்!
 ஆகாஷின் அக்கா அன்பில் மகேஸ் பொய்யாமொழி யின் உறவினர் ஒருவரை மணந்துகொள்கிறார்.
 இதன் பிறகு அன்பில் மகேஷ் இந்த குடும்பத்துக்கு நெருக்கம் ஆகிறார்.
 இதன்மூலம் உதயநிதி தொடர்பு கிடைக்கிறது!
 ஆகாஷ் திரைத்துறையில் நுழைகிறார்.
இரண்டு பெரிய படங்களில் (நானும் ரவுடிதான், அமரன்) உதவி இயக்குநராக இருந்ததாக சொல்கிறார்கள்!
 பிறகு இவரது பெயரில் டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் உருவானது!
 அது முதல் படம் (இட்லிக்கடை)  தயாரித்து அது இன்னும் வெளிவரவில்லை!
 ஆனால் பராசக்தி, முரளியின் இதயம், சிம்பு நடிக்கும் ஒரு படம் என முன்னனி நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கிறார்.
 கருணாநிதியின் முதல் மகனான மு.க.முத்து வின் மகள் தேன்மொழி (கவின் கேர் உரிமையாளர்). இவரது மகளான தாரணியை ஆகாஷ் திருமணம் செய்துள்ளார்! 
தற்போது ஆகாஷுக்கு 30 வயது! 

 இவரது குடும்பம் தம்மம்பட்டியில் இருந்த நகைக்கடையை (PRR) பெரிதாக கட்டிக்கொள்கின்றனர்.
 திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய நகரங்களில் மூன்று கிளைகள் தொடங்க வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
 குறைந்தது ஒரு டன் தங்கம் இவர்களது கைவசம் இருப்பதாக சொல்கிறார்கள்! 
 ஆட்சியாளர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பிரபலமான நிறுவனங்களை இப்படி சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொள்வது வழக்கம்! 
 அந்த வகையில் தற்போது திமுக உருவாக்கிய ஆகாஷ் பாஸ்கரன் ஈ.டி ரெய்டில் சிக்கியுள்ளார்.

தகவல்களுக்கு நன்றி Shiva media 
 
 இருந்தால் தெலுங்கராக இருக்க வேண்டும்!
 அதிலும் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்!
 அதிலும் தற்போதைய ஆட்சியில் இருக்க வேண்டும்! 
அப்படி இருந்தால் எந்த கவலையும் இல்லை! 

Monday, 12 May 2025

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை
26.04.2017

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்
இது மாசித் திருவிழா.
மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்.
அதுவும் மதுரையில் அல்ல தேனூர் அருகே.

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.