Tuesday, 18 November 2025

இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்


இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
16.10.2017

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பனிகடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
- முல்லைப்பாட்டு 1-6

இப்பாடலில் மேகத்தின் இயக்கம் அறிவியல் முறையில் விளக்கப்பட்டுள்ளது.  
கடலில் நீர் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது நெடுந்தொலைவு பயணித்து மலையில் தங்கி பெருமழையை பொழிந்தது
------------------

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே
- அகநானுறு183

குளிர்ந்த கடலில் நீரை மேகங்கள் குடிப்பது பற்றி வருகிறது
-----------

இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
- நற்றிணை 329:11

கருமையான வானம் பெரும் சத்தத்துடன் இடி இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்துவரும் கார்காலம்.
(அதாவது மேகம் கடலில் இருந்து நீரை எடுத்து மழையாக பொழியும் மழைக்காலம்)
---------------

மின்னு வசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
- நற்றிணை 228:1

மின்னலுடன் முழங்கும் பெரும் சத்தத்துடன் நீர் நிறைந்த மேகம்  பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையை கண்தெரியாத இருளடைந்த நடு இரவில் பொழியும்.
--------------------

இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர்
- நற்றிணை 115:3

மேகங்கள் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு, எஞ்சிய கடலின் நீர் சிறிது என்னும்படி கொணர்ந்தன.

(இது கடல் நீரை மேகங்கள் கொள்வதை சற்று மிகைப்படுத்திக் கூறுகிறது.
அதாவது பாதிக்கும் மேல் உறிஞ்சிவிட்டதாம்!)
-----------

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே
- ஐங்குறுநூறு 492

மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை கூறுகிறது
-----------

மேகங்களின் நகர்வு பற்றியும் குறித்துள்ளனர்,

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்
- ஐங்குறுநூறு 469

பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ
- அகநானூறு 840

கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
- நற்றிணை 140

கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
- அகநானூறு 43

போன்ற பாடல்கள் கடலில் உருவான மழைமேகம் மேற்கு நோக்கி (வலப்பக்கமாக) நகர்வதாக குறித்துள்ளனர்.
அதாவது வடகிழக்குப் பருவக்காற்று பற்றி கூறப்பட்டுள்ளது.
--------------

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து
- நற்றிணை 289

கடல் நீரைக் குடித்து செறிவு (அடர்த்தி) அதிகமான மேகம் மழை பொழிவதாகக் கூறுகிறது இப்பாடல்
-------------

கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
- குறுந்தொகை - 287

அதாவது நிறைமாத சூலி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கி செல்கின்றன என்று கூறுகிறது.
----------

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
- நற்றிணை 261

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
- பதிற்றுப்பத்து 12

மேகங்கள் மலையில் மோதி மழைபொழிவதைக் கூறுகிறது
----------

பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
- அகநானுறு 217

பெய்து தீர்த்த மேகம் வெண்மையான மென்பஞ்சுபோல ஆகிவிடும் என்று கூறுகிறது.
-----------

மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சங்ககாலத்திலேயே தமிழர்கள் அனைவரும் மழை எவ்வாறு பொழிகிறது என்று அறிந்திருந்ததை உணரமுடிகிறது.

பெயிலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பிற் றுவலை கற்ப
- நெடுநெல்வாடை 20

மழை பெய்துவிட்ட வெண்மையான மேகம் மேலெழுந்து சாரலை ஏற்படுத்துவது பற்றி வருகிறது
-----------------------

மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,

பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
சிறு நுண் ணெறும்பின்
- புறநானூறு 173

எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்
-----------

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
- புறநானூறு 35:7

தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
- புறம் 117:2

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவில்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
- பட்டினப்பாலை 1-6

மேற்கண்டவை உணர்த்தும் பொருள் யாதெனில்,
வானத்தில் வெள்ளி கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும்
தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும்
(ஆனாலும் காவிரி பொயக்காது)
----------
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
- பதிற்றுப்பத்து 13:25

செவ்வாய்க் கோள் சென்ற வழியில் வெள்ளி கோள் செல்லாததால் மழை தேவையான இடங்களிலெல்லாம் உன் நாட்டில் மழை பெய்கிறது.
(அதாவது வானில் கோள்கள் நகர்வு மூலம் மழையை கணித்துள்ளனர்)
----------

பழமையான மொழியான தமிழில் அறிவியல் இல்லை என்று சில பிறமொழி வந்தேறிகள் பிதற்றுகின்றனர்.

மேலே உள்ள மழை பற்றிய குறிப்புகள் மட்டுமே.
இதேபோல பல்வேறு விடயங்களை தமிழ் இலக்கியம் அறிவியல் பார்வையுடன் பதிவுசெய்துள்ளது.

வேறு எந்த மொழியினது தொடக்ககால இலக்கியத்திலும் இத்தகைய அறிவியல் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.

பட்டியல்சாதி ஐயங்கார்

பட்டியல்சாதி ஐயங்கார்

 அந்த ஐயங்காரின் பெயர் மானாமதுரை கிருஷ்ணசாமி. பெரிய வக்கீல். 
காந்தியின் சீடர்.  
ராஜாஜியின் நண்பர். 
காமராஜருக்கு ஆலோசகர்.  
மதுரை வைத்திய நாத ஐய்யருடன் திருக்குலத்தார் மீனாட்சி ஆலய பிரவேசம் செய்ய உடன் நின்றவர். 
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கோயில்களை சர்.சி.பி ராமாசமி ஐயர் எல்லோருக்கும் திறந்து விட்ட பின், தன் ஊரில் இருந்து திருக்குலத்தாரை தன் சொந்த செலவில் அங்கு சென்று ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தவர். 
மானாமதுரையில் ஹோட்டல்களில் எல்லோரும் சென்று சாப்பிட போராடி வழி செய்தவர். 
சுதந்திர இந்தியாவில், முதல் தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக (MLA) இருந்தவர். 
தன்னிடம் கொடுக்கப்பட்ட காரை விற்று அரிஜன சேவைக்கு பயன் படுத்தியவர். 
கோயில் தர்ம கர்த்தாக்கள் நியமனத்தில் திருக்குலத்தாரையும் சேர்க்க பாடுபட்டவர். அவர்களுக்கு அர்ச்சகர் பதவி கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர். 
அரசியலில் பணம் ஏதும் சம்பாதிக்காதவர். அதனால் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வழியில்லாமல் இருந்தவர். 
 அவரது மகன் ஒரு அதிகாரியாகி அவரைப் பார்க்க வருகிறார்.
இவர்  திருக்குலத்தில் பிறந்தவர். 
இவரை ஐயங்கார் சிறு வயதிலேயே தன்வீட்டில் சேர்த்துக் கொண்டு, ஊரைப் பகைத்துக் கொண்டு, பள்ளிக் கூடத்தில் சேர்த்து, ராஜாஜியின் உதவியுடன் கல்லூரியில் சேர்த்து ஆளாக்கி மத்திய அரசில் பெரிய பதவியில் உட்கார செய்தார். 
அவரின் திருமணத்தையும் தானே முன் நின்று நடத்தி வைத்தார். 
அந்த தத்து புத்திரன் தான் தற்போது பெரிய அதிகாரி. அவர்  பெயர் சம்பந்தம். 
திரு் சம்பந்தம் தன்னை ஆளாக்கிய தந்தையைப் பற்றி எழுதிய பழைய நூலை வைத்து கன்யூட்ராஜ் என்பவர் எழுதிய புனைவிலக்கியம் (நாவல்) தான் 'அரிஜன ஐங்கார்" எனும் படைப்பு. 
இவரைப் போன்றோருக்கு சிலை ஒன்று அவர் ஊரில் கூட இல்லை!
அவர் போட்டோவை இணையத்தில் தேடினேன். 
இல்லை. 

பதிவர்:- Ganesh Lakshminarayanan

Thursday, 6 November 2025

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

ஆந்திரம் பிரிந்து ஒரு மாதம் கடந்து விட்டது.
ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் தெலுங்கு மொழி இன்னும் நமது ராஜ்ய ரேடியோ நிலையத்திலிருந்து ஒழியவில்லை.
காலையில் எழுந்து ரேடியோவை திருகினால் நாம் கேட்கும் மொழி தெலுங்காகத்தான் இருக்கிறது.
தமிழில் பாடகர் பாடினாலும் இன்னார் இன்ன ராகம் இன்ன தாளத்தில் பாடுகிறார் என்பதை தெலுங்கில் தான் சொல்லுகிறார்கள்!
பாடகர்களிலும் பெரும்பாலோர் இன்னமும் தெலுங்கில் பாடுவதை விட்டதாக தெரியவில்லை.
ரேடியோ நிலைய அதிகாரிகள் வெறும் தமிழ் மட்டும் பாடுபவர்களை தரக்குறைவாக நடத்துகிறார்களாம்!
தெலுங்கிலும் பாடாவிட்டால் பாட அனுமதிக்க முடியாது என்று மிரட்டுகிறார்களாம்!
ஆந்திரம் பிரியும் முன்னர்  இந்த நிலையில் இருந்த்தை நாம் ஓரளவு சகித்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் ஆந்திரம் பிரிந்த பின்பும் அதே நிலை தான் என்றால் இப்படி ஒரு ரேடியோ நிலையம் அவசியம் தானா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் வேதனையுடன் தலைத் தூக்கி நிற்பது நியாயமே.
ஆந்திரர்களுக்கு விஜயவாடா ரேடியோ நிலையம் தனியாக இருக்கிறது.
செகந்திராபாத் ரேடியோ நிலையமும் முழுக்க ஆந்திர மயமே. அப்படி இருக்க தமிழ் ராஜ்ய ரேடியோ நிலையமும் தெலுங்கு மயமாகத்தான் இருக்க வேண்டுமா?!
விஜயவாடா ரேடியோ நிலையத்தில் தெலுங்கு பாடகர்கள் தமிழ் பாட்டுகளாக பாடிக் கொண்டிருந்தால் ஆந்திரர்கள் சும்மா இருப்பார்களா?!
தமிழர்கள் ஆந்திரர்களைப் போன்று வெறி பிடித்தவர்களாக இருக்க வேண்டாம் ஆனால் தங்கள் தாய்மொழி பற்றை கூடவா விட்டு விட வேண்டும்?!  சென்னை ரேடியோ நிலையத்தில் சினிமா ரிக்கார்டுகள் ஒளிபரப்பும் நேரத்தில் இந்தி ரெக்கார்டு போடுவதைப் போன்று தெலுங்கு ரெக்கார்டுகளையும் போட்டு தொலைத்து விட்டு போகட்டும்!
நாம் அக்கறைப்படவில்லை!
ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கால்வாசிக்கு மேல் தெலுங்கு மயமாக இருப்பதை உணர்ச்சி உள்ள தமிழர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை!
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும் இல்லை என்றால் 'தெலுங்கு ஒளிபரப்பு எதிர்ப்பு இயக்கம்' தமிழர்களால் தொடங்கப்பட நேரும்.
இதற்கு அறிகுறியாக இப்பொழுது தமிழ் ராஜ்யத்தில் ரேடியோ பெட்டி வைத்திருப்போர் தங்கள் தங்களின் அதிருப்தியை ரேடியோ நிலைய அதிகாரிகளுக்கும் மத்திய அரசாங்க மந்திரி அகர்வாலுக்கும் நமது ராஜ்ய மந்திரி சபை பிரச்சார இலக்காவிற்கும் மகஜர் மூலம் தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி பாகுபடற்ற முறையில் தமிழர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை நேரிய முறையில் ஆட்சியாளருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்!
தமிழகத்தில் எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் இது பற்றி தீர்மானம் நிறைவேற்றி ஆட்சி பீடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்!
தமிழ் ராஜ்யத்திலேயே தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதை தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க முற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
இசைத்தமிழ் தழைக்க, தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழகத் தலைவர்கள் பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறோம்.

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம்
01.11.1953

Wednesday, 5 November 2025

ஊர்திரும்ப சொல்லும் இட்லி கடை

ஊர்திரும்ப சொல்லும் இட்லி கடை

 பலரும் இட்லி கடை படத்தை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
 அதாவது "கையால் மாவரைப்பது அசுத்தம்"
"பிற்போக்காக இருக்கிறது"
 "உண்மையான கிராம வாழ்க்கை இப்படி இல்லை"
 "தனுஷ் சம்பாதித்த பணத்தை என்ன செய்தார்"
 "நித்யா மெனன்  (மேனன் இல்லை) செட்டாகவில்லை" என்றவாறு.

 சரி ஆசியாவிலேயே பெரிய கொள்ளைக்கும்பல் எடுத்த படம்தானே என்று விட்டுவிட்டேன்.

 அண்ணன் சீமான் இந்த படத்தை பார்த்து நல்லபடியான விமர்சனம் கொடுத்திருந்தார். 
 அப்போதும் இது தனுஷ் நாயுடுவின் படம்தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

 அப்போதுதான் இந்த படத்தை திராவிடியாத் தனமாக விமர்சித்து சில பதிவுகள் வந்தன.
அதாவது  "குலக் கல்வி, குலத் தொழிலை ஊக்குவிக்குறது"
"சாதியே இல்லாத கிராமமா?"
"பணக்காரன் சாதி பார்க்காமல் பெண்கொடுக்கிறான்" போன்ற வரிகள்.
 எனக்கு ஒரே ஆச்சரியம் "என்ன இது அடிமை திராவிடியாக்கள் தன் ஆண்டை இன்பாவை எதிர்த்து ஒரு வரி எழுதும் தைரியம் எப்படி வந்தது?" என்று.
 அண்ணனின் பாராட்டும் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் காரணமில்லாமல் பாராட்டியிருக்க மாட்டாரே?!
சரி என்று நேற்று அந்த படத்தை குடும்பத்துடன் பார்த்தேன்.
  இதை வெறும் படமாக மட்டும் பார்த்தால் நல்ல படம்தான்!
 கிராமத்தில் பிறத்து வளர்ந்த ஒரு சாதாரண பையன் படித்து முடித்து அந்த கிராமத்தையே சொர்க்கமாக நினைக்கும் அவனது தந்தையுடன் முரண்பட்டு  வெளிநாட்டுக்கு போய் ஒரு கார்ப்பரேட் வேலையில் தன் திறமையைக் காட்டி முதலாளிக்கே மருமகனாகும் அளவு முன்னேறுகிறான்.
 ஆனாலும் ஏதோ ஒரு குறையை உணர்கிறான்.
 திருமணம் நெருங்கிய நிலையில் அவனது தந்தை இறந்துவிடுகிறார். கார்ப்பரேட் குடும்பம் கல்யாணத்தை நிறுத்த மறுக்கிறது.
 தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய வருபவன் பல ஆண்டுகள் கழித்து தாயையும் சொந்தங்களையும் பார்க்கிறான்.
 ஒரே மகனாக இருந்தும் பல ஆண்டுகள் தாய் தந்தையை தனியாக தவிக்கவிட்டதை எண்ணி வருந்துகிறான் (இந்த இடத்தில் இவ்வளவு நாள் அவன் சம்பாதித்த பணத்தை என்ன செய்தான் என்று லாஜிக் இடிக்கிறதுதான்).
 கணவன் பிரிந்த துக்கம் தாளாமல் அவன் அம்மாவும் இறந்துவிடுகிறாள் (இதுவும் கூட கொஞ்சம் ஓவர்தான்).
  இந்த நேரத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையையும் தன் தந்தை வாழ்ந்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கிறான்.
 தன் தந்தை கிராமத்தில் நிறைவாக வாழ்ந்து மறைந்துவிட்டதாக உணர்கிறான்.
 தன் தந்தை போலவே தானும் வாழ முடிவெடுக்கிறான்.
 அவன் அப்பா நடத்திய இட்லிகடைதான் அவரது அடையாளம் என்றும் அவர் இடத்தில் இருந்து தான் அதை தொடர்ந்து நடத்துவதுதான் அப்பாவின் கடைசி ஆசையாக இருக்கும் என்றும் நினைக்கிறான். 
 இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள வெளிநாடுகளில் பணத்துக்காக மனதுக்கு ஒட்டாத வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு புரியும்.
 பிளைட்டில் வந்து இறங்கி ஓடிப்போய் தெருமுனை டீ கடையில் நம்ம ஊர் டீயும் வடையும் வாங்கி வாயில் வைத்தவுடன் குபுக்கென்று கண்ணீர் கொட்டும்.
 அதேபோல கடை நடத்தும் கிராமத்து அண்ணாச்சிகள் அந்த கடையையே வாழ்க்கையாக வாழ்வதை உடனிருந்து பார்த்தவர்களுக்கும் புரியும்.
  அவர்களுக்கு தொழில் மீது பற்று என்று கூற முடியாது. கடை மீது பற்று. தன் வாழ்விடம் என்ற உணர்வு.
 இதனால்தான் தனுஷ் அந்த கடை பெயரில் கிளைகள் திறக்க ஐடியா கொடுக்கும்போது அதை மறுக்கிறார் ராஜ்கிரண்.
 என் கையால் சமைத்து கொடுத்தால்தான் என் பெயர் போடவேண்டும் இல்லையென்றால் அது என் கடை ஆகாது என்கிறார்.
 நல்ல உணவகங்கள் பல கிளைகள் பரப்பி கார்ப்பரேட் ஆன பிறகு சுவை குறைந்தும் விலை மிகுந்தும் காணப்படுவதை நாம் பார்க்கவில்லையா?! 
 இந்த படம் ஏன் 'ஒஸ்தாத் ஓட்டல்' மலையாள படம் மாதிரி பல கிளை பரப்பி முன்னேறியது போல் காட்டி முடிவடையவில்லை என்ற கேள்விக்கு இதுவே விடை
 (இத்தனைக்கும் தனுஷ் கடை நடத்த தொடங்கி ஆறுமாதம் ஆவதற்குள் படமே முடிந்துவிடும்).
 இது புரியாமல் 'ஒன்று கார்ப்பரேட்டுக்கு அடிமையாக வெளிநாட்டில் இரு அல்லது நீ ஒரு கார்ப்பரேட் ஆகு' என்று கூறவருகிறார்கள் அதிமேதாவிகள்.
 தனுஷ் எடுத்த முடிவு பிற்போக்கு என்கின்றனர்.
 பட்டதிலேயே அதற்கு விடை உள்ளது.
 எது முன்னேற்றம்?! 
கார் பங்களா ஏசி என்று வாழ்வதா அல்லது இயற்கை, சொந்தபந்தம், கால்நடைகள் என்று வாழ்வதா 
எது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
 படத்தில் அப்பாவின் ஆவி வரும் காட்சிகள் கூட மிகையாக இல்லை!
 இறப்பு நடந்த வீட்டில் தனியாக படுத்திருக்கும் ஒருவனுக்கு அப்படியான எண்ணங்கள் வரத்தான் செய்யும்!
 அப்பாவின் மறுபிறப்பாக காட்டப்படும் கன்றுக்குட்டி, தனுஷைக் காப்பாற்ற வருபவர்க்கு இடம் காட்டும் பருந்து என்று பிற உயிர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
 குலதெய்வ கோவிலில் தனுஷுக்கு வரும் தெளிவு, சண்டைக் காட்சிகளில் ஆவேசமாக அடிக்கும்போது குலதெய்வ பாடல் என்று குலதெய்வ வழிபாட்டையும் முன்னிலைப் படுத்தியுள்ளனர். 
 எந்த விதத்தில் படத்தில் காட்டப்படும் கிராமம் உயிரோட்டமாக இல்லை என்று சொல்கிறார்களோ தெரியவில்லை.
 
 வில்லன் பக்கம் பார்த்தால் ஒரு கார்ப்பரேட் குடும்பம் தன் நிறுவன நலனுக்காக வேலை செய்யும் ஒருவனை தன் குடும்பத்தில் ஒருவனாக ஆக்கிக்கொள்ள நினைக்கிறது.
 அவனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுக்கிறது.
 இதனால் அவனது அடிமை மனநிலை மாறிவிடுகிறது.
இதனால் திருமணம் நின்று அவமானத்தை சந்தித்த அந்த பணக்கார குடும்பம் கிராமத்துக்கு வந்து அவனை பழிவாங்க நினைக்கிறது.
 அந்த ஊரிலேயே ஒரு போலீஸ்காரனையும் போட்டியாக ஓட்டல் நடத்தும் ஒரு முதலாளியையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறது.
 இவற்றை தனது தந்தை சம்பாதித்த நல்ல பெயராலும் ஊர்மக்களின் ஆதரவுடனும் எதிர்கொள்கிறான் அவன்.
 இதில் என்ன குறையைக் கண்டீர்கள்?!
 'வாழ்க்கை பிச்சை போட்டவர்களின் காலை வாரிவிட்ட துரோகி' என்று பட்டம் கட்டுகிறார்கள்.
 இதுதான் கார்ப்பரேட் ஆதரவு!
 பெரிய இடத்து மருமகனாக வாழ்வதை விட தன்மானத்துடன் வாழ்வதுதான் முக்கியம்!
 சில புதியபூமர்கள் 'தனுஷ் கடை நடத்தட்டும் அதை ராஜ்கிரண் போலவேதான் நடத்த வேண்டுமா?' என்று கேட்கின்றனர்.
 கிராமத்தில் அந்த ஊர் ஆள் மாதிரி இல்லாமல் கோட்சூட் போட்டுக்கொண்டா திரியமுடியும்?! 
 இவர்கள்தானே ஒரு இசுலாமியத் தாய் செய்யும் அற்புதமான சுவையில் பிரியாணி செய்ய ஒரு பிராமண பெண் தொழுதுவிட்டு பிரியாணி செய்வது போல காட்டிய போது கைதட்டியவர்கள்?!
 கையால் மாவு அரைப்பது என்ன கேவலமா?! 
அதில் என்ன அசுத்தம் என்று புரியவில்லை?!
கொரோனா விற்கு பிறகு இந்த மனநிலை அதிகரித்துவிட்டது.
 சக மனிதன் தொட்டாலே செத்துவிடுவோமோ என்று பயத்துடன் வாழ்கின்றனர்.
 கைக்குத்தல் அரிசி, செக்கு எண்ணெய், கைத்தறி புடவை, நாட்டு சர்க்கரை, பனங்கள் போன்றவை பாதுகாக்கப் பட நாம் நினைப்பது இல்லையா?!
 கையால் மாவரைத்து இட்லி சுட்டால் தனி சுவை இருக்கத்தானே செய்யும்!
 எல்லா ஓட்டல்களும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
 இப்படியும் சில ஓட்டல்கள் இருக்கட்டுமே என்றுதான் சொல்கிறேன்.
 கிராமத்தில் அவர்களுக்குத் தகுந்தது போல ஒரு உணவகம் செயல்படுகிறது.
 இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அந்த அந்த கிராமத்திற்கு ஏற்ற கடைகள், கட்டமைப்பு, வழிபாடு, உடை, கலாச்சாரம் என்று இருப்பதுதானே தன்னிறைவு?!
 திருநெல்வேலி நகரத்தில் மையமாக இருக்கும் நெல்லையப்பர் கோவில் வீதியில் இருக்கிறது இருட்டு கடை.
 பெயர்பலகை கூட இருக்காது. ஒரு குண்டு பல்ப் தவிர விளக்குகூட கிடையாது (அதனால்தான் அந்த பெயர்).
 ஆனால் உலக பிரபலம்!
 அல்வா வாங்க வருபவர்கள் மதியமே பூட்டியிருக்கும் கடை முன் வரிசையில் நிற்கவேண்டும்.
 சாயங்காலம் திறப்பார்கள். கிலோ கிலோவாக கட்டி வைத்திருப்பார்கள்.
 இருட்டும் முன் விற்று தீர்த்துவிட்டு இன்னமும் நிற்கும் கூட்டத்திடம் நாளை வாருங்கள் என்று கூறிவிட்டு மூடிவிடுவார்கள்.
 அவ்வளவுதான்!
அவர்கள் கிளை பரப்பவும் இல்லை! விளம்பரம் செய்யவும் இல்லை! உற்பத்தியை அதிகரிக்கவோ கடையை மேம்படுத்தவோ கூட இல்லை!
 அவர்களின் நோக்கம் தரம் குறையாமல் இருப்பது மட்டுமே! 
 திருநெல்வேலி அல்வா என்று பலரும் உலகம் முழுக்க விற்கிறார்கள் ஆனாலும் அந்த கடை அல்வா போல வராது! இதை இப்போதும் பெரிய பெரிய கார்களில் வந்து வரிசையில் நிற்கும் கூட்டம் சொல்லும்! 
 ஒரு கடை முதலாளி தன் கைகளால் உணவு தயாரித்து லாப நோக்கம் இல்லாமல் வருபவர்களுக்கு தரமான உணவு வழங்கி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கி எந்த பேராசையும் இல்லாமல் பழைய ஓட்டு வீடு மனைவி மாடு என்று திருப்தியுடன் ஒரு கிராமத்து வாழ்க்கை வாழ்கிறார்.
 இதில் என்ன தவறு?! 
 'அப்பா தொழிலையே பிள்ளையை செய்யச் சொல்கிறது! இதற்கா குலக் கல்வியை ஒழித்தோம்?'  என்று சில திராவிடியாக்கள் தங்கள் தீராத அரிப்பை இங்கே கொண்டுவந்து தேய்க்கிறார்கள்.
 முதலில் குலக் கல்வி என்று ஒன்று கொண்டுவரப்படவே இல்லை.
ராஜாஜி அன்று ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 'மாணவர்கள் படித்த நேரம் போக மீதி நேரம் தந்தைக்கு உதவியாக இருக்கலாம்' என்று கூறியதை தவறாக அர்த்தமாக்கி அவதூறு பரப்பியது திராவிடம்.
 இந்த படத்திலும் மகன் அவனே விருப்பப்பட்டு தான் கேட்டரிங் படிக்கிறான்.
அப்படியே அவனது அப்பாவின் தொழிலை அவன் செய்தால் என்ன தவறு?!
 அப்பாவின் தொழிலையே மகன் செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் தான் அது தவறு!
 விருப்பப்பட்டு செய்தால் என்ன தவறு?! 
 இவர்கள் மட்டும் நான்கு தலைமுறையாக படம் எடுக்கலாம். 
 ஆனால் கார்ப்பரேட்டுகளில் மாத சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஒருவன் அப்பாவிடம் திரும்பி சென்று தன் காலில் நின்றுவிடக் கூடாது இல்லையா?!
 எல்லா தமிழனும் தன் கிராமத்திலேயே தன்னிறைவு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டால் cheap labour ஐ நம்பி இங்கே இருக்கும் நிறுவனங்கள் திவாலாகிவிடும் இல்லையா?! 
 சில கழிசடைகள் 'நிச்சயம் செய்த பெண்ணை விட்டுவிட்டு அதாவது ஏமாற்றிவிட்டு எடுபிடி வேலைக்கு வந்த பெண்ணை காதலிக்கிறாயே பிறகு வேறொருத்தி வந்தால் இவளை விட்டுவிடுவாயா?' என்று மகா கிரிஞ்ச் தனமாக விமர்சித்துள்ளனர்.
 தாய் தந்தை இல்லாத நிலையில் ஊராரும் ஒட்டாதபோது தனக்கு துணை நிற்கும் ஒரு பெண் மீது காதல் வருமா அல்லது தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒரு பணக்கார பெண் மீது காதல் வருமா?!
 தனுஷ் அந்த பணக்கார பெண்ணை காதலிப்பதாக காட்டவே இல்லை! திருமணத்திற்கு அரைகுறையான சம்மதித்து குழப்பமாக இருப்பதாகவே காட்டப்பட்டுள்ளது.
 இட்லிகடை சினிமாவாக மட்டும் பார்த்தால் கிராமத்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வெறும் பணத்திற்காக மட்டுமே வாழும் பல லட்சம் தமிழர்களின் ஊர்திரும்பும் மனநிலையைப் பேசுகிறது. 
 அவர்களை தைரியமாக ஊர் திரும்பச் சொல்கிறது.
தாய் மண்ணும் மக்களும் உங்களை சோதித்தாலும் கைவிட மாட்டார்கள் என்ற உண்மைச் சொல்கிறது.
 பணம்தான் வாழ்க்கை அதுதான் முன்னேற்றம் என்று நினைப்பவர்களுக்கு இது புரியாது! 
 நான் இங்கே கேட்க இன்னொரு கேள்வி இருக்கிறது!
 ஏன் ஒருவன் இங்கே தன் கிராமத்தில் இருந்து பணக்காரன் ஆக முடிவதில்லை! 
 அரசாங்கம் என்ன கிழித்துக் கொண்டு இருக்கிறது?!
கிராமத்தில் ஒரு இட்லி கடை நடத்துபவனின் மகனுக்கும் நகரத்தில் பீசா கடை நடத்துபவன் மகனுக்கும் ஒரே கல்வி ஒரே வாய்ப்புகள் ஏன் கிடைப்பதில்லை?! 
 எல்லாரும் கிராமத்தை விட்டு சென்றுவிட்டால் யார்தான் கிராமத்தில் இருப்பது?!
 யார் விவசாயம் பார்ப்பது?! 
கிராமங்கள் காலியாகிவிட்டால் விவசாயத்தை கைவிட்டுவிட்டால் ஒரு நாடு தாக்குப்பிடிக்குமா?! 
"படிங்க! படிச்சு வேலைக்கு போங்க! வசதியான வேலைக்காரனா இருங்க!" என்று ஒவ்வொருவனையும் ஊரிலிருந்து துரத்தி நிரந்தமில்லாத ஒரு கார்ப்பரேட் வேலைக்கு அனுப்புவதிலேயே ஏன் குறியாக இருக்கிறீர்கள்?! 
 ஏன் அவன் படித்து ஒரு முதலாளி ஆக்ககூடாதா?! படித்து அரசியல்வாதி ஆகக்கூடாதா?! படித்து சேவை, கலை, தொண்டு என்று போக்ககூடாதா?! 
"படி! வேலைக்கு போ" "படி! வேலைக்கு போ" என்று படிப்பது வேலைக்கு போகத்தான் என்று ஏன் மூளைச்சலவை செய்யப் படுகிறது?!
'கிராமம் என்றாலே முட்டாள்கள்! அங்கே ஒரே சாதிவெறி!' என்று கட்டமைப்பதன் உள்நோக்கம் என்ன?!
 பிறந்த ஊர்ப்பாசம் என்பது சாதி, மதம், இனம், வர்க்கம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உணர்வு என்பது தெரியாதா?! 
 அல்லது எங்கிருந்தோ வந்து பல தலைமுறை இங்கே வாழ்ந்தும் இந்த மண்ணின் உப்பைத் தின்றும் இதன் மீது பாசம் வராத ஒரு கூட்டத்தின் கூச்சலா?!
 திராவிட கும்பல் எடுத்த படமே ஆனாலும் அது கார்ப்பரேட்டுக்கு எதிராக தற்சார்பு வாழ்க்கைக்கு ஆதரவாக இருந்தால் அதை எதிர்ப்பீர்களா?! 
 உங்களது உண்மையான முதலாளிகள் திராவிடம் நடத்தும் திரைத்துறையா அல்லது திராவிடம் நடத்தும் தொழில்துறையா?! 
 தனுஷ் தன்னுடைய சிந்தனையைப் படமாக்கியதாக நான் கருதவில்லை.
மக்களின் மனநிலைக்கு ஏற்ப ஒரு படத்தை எடுத்துள்ளார்.
 மக்கள் இதை ஆதரிக்க வேண்டும்!
 வேறு வழியும் இல்லை!
இப்படி ஒரு படத்தை ஒரு தமிழன் எடுத்து வெளிவிடுவது என்பது திராவிட ஆதிக்க சூழலில் நடக்காத ஒன்று! 
 அதேபோல திராவிட ஆதிக்கம் தலைவிரித்தாடும் இன்றைய சூழலில் இனி ஒரு தமிழன் சரவண பவன் அண்ணாச்சி போல வரவே முடியாது! வந்தாலும் அவர் கதிதான்! 
 படங்களிலாவது மக்களின் கனவுகள் நிறைவேறட்டும்! 
 

Tuesday, 4 November 2025

சென்னையை காத்த மபொசி பற்றி கா மு ஷெரீப்

சென்னையை காத்த மபொசி பற்றி கா.மு.ஷெரீப்

 'இழைத்தவன் பொண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி' என்பது கிராமிய பழமொழி.
 ஆந்திரர்கள் சென்னையை இந்த பழமொழிக்கு இலக்காக பார்க்கின்றனர்.
 சென்னையை என்ன, திருமலை நாயக்கர் ஆண்ட மதுரையை கூட தனதாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணினர் ஆந்திர வெறியர்கள்.
 அதற்கான திட்டத்தையும் நடத்த அவர்கள் தயங்கவில்லை.
பிரகாசம் முதல்மந்திரியாக வந்ததும் ஆந்திராவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சென்னையில் பவனி வரச் செய்தார்.
 சும்மா அல்ல 'மதராஸ் மனதே!' என்று கூப்பாடுடன்!
 தட்டி கேட்க ஆளில்லை!
 சென்னை நகரில் ஓடும் பஸ்களில் எல்லாம் கூட தெலுங்கிலும் பெயர் போடச் செய்தார்கள்!
 இத்தனையும் கண்டு பாரா கண்கள் படைத்தவர்களாக தமிழக தலைவர்கள் இருந்தபோதுதான் 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று குரல் கொடுத்தது தமிழரசு கழகம்! 
வெறிபிடித்த ஆந்திரப்படை பின்வாங்கியது!
 அவர்களை துரத்திச் செல்வது போல பின் தொடர்ந்து சென்ற தமிழரசு கழகத்தினர் சித்தூர் பகுதிகளில் முகாமிட்டு திருப்பதி வரை தமிழர்களுடைய நிலம் என்பதை நிலைநாட்டி திரும்பினர்!
 இதன் பிறகு தார் கமிஷன்,  J.V.P ரிப்போர்ட் ஆகிய தீர்ப்புகளின் மூலம் 'சென்னை தமிழருடைய நகரம்',  'எல்லைப் பகுதிகள் ஆராயப்பட வேண்டியது' என்று முடிவு கட்டப்பட்டது.
 இதை அன்று 'அகில இந்திய காங்கிரஸ்' முதல் 'ஆந்திர காங்கிரஸ்' வரையிலும் நேரு முதல் சஞ்சீவ ரெட்டி வரையிலும் ஒப்புக்கொள்ளாதார் இல்லை!
 ஆனால் முன்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஒப்புக்கொண்டதை மாற்றி 'ஆலோசிக்காமல் அவசரப்பட்டு தமிழர்களுக்கு அதிக சலுகை வழங்கி விட்டோம்! இப்பொழுது ஆலோசித்து சொல்கிறோம்! சென்னையை தமிழர்களுக்கு தர முடியாது!' என்று சஞ்சீவ ரெட்டி கூறுகிறார்.
 இந்த சஞ்சீவி ரெட்டியையும் மிஞ்சிப் போகிறார் பிரகாசம் 'சென்னையில் மட்டுமல்ல திருநெல்வேலி வரையும் கூட ஆந்திரா கேட்டால் அதில் நியாயம் இல்லாமல் இல்லை' என்கிறார்!
 ஆனால் 1947, 48 இல் இருந்தது போல் இன்று தமிழர்கள் அலட்சியமாக இல்லை!
 ஆந்திர படையெடுப்பை முறியடிக்க துணிந்து நிற்கிறார்கள்!
 சண்டித்தனம் பிடிக்கும் சாமியார், சஞ்சீவ ரெட்டி, பிரகாசம் போன்றோரை சென்னை நகரத்தில் அல்ல அவர் வாழும் ஆந்திர பகுதிக்கு சென்று அதட்டி கேட்கும் அளவிற்கு உணர்ச்சி பற்றி நிற்கிறார்கள்!
 1948 இல் நம்மை எதிர்த்த கட்சிகள் எல்லாம் இன்று நாம் சொல்வதை முன்னிறுத்தி தம்மை வளர்க்கப் பார்க்கின்றன.
 தார் கமிஷனிடம் 'தலைநகரம் தமிழனுக்கு போனாள் என்ன ஆந்திரனுக்கு போனால் என்ன இருவரும் திராவிடர்களே' என்று கூறிக் கொண்டிருந்த ஈ.வே.ரா இன்று விடுதலை மூலம் ஆந்திரரின் மண்வெளியை கண்டிக்கின்றார்.
 தமிழரசு கழக கோரிக்கையை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்த பத்திரிகைகள் எல்லாம் சஞ்சீவ ரெட்டியையும் பிரகாசத்தையும் கண்டித்து தலையங்கம் தீட்டுகின்றன.
 சென்னை ராஜ்ய முதல்மந்திரியே தீர்ப்பு கூறுகிறார் 'சென்னை ஆந்திரர்கள் நினைக்கக் கூடாது' என்பதாக!
இத்தனை தமிழரசு கழகத்தாரின் அரிய சாதனை என்றால் அது மிகையாகாது!
 'மொழிவாரி பைத்தியங்கள்' என்று பழித்துக் கூறிய கம்யூனிஸ்ட் சோசியலிஸ்டுகளை மொழிவாரி மாநில பிரிவினையை ஒப்புக்கொள்ள வைத்தது!
 'ஆந்திரமும் தமிழகமும் ஒன்றே தலைநகரச் சண்டை எங்களுக்கில்லை' என்ற தி.க கூட்டத்தினரின் ஏடான விடுதலையை ஆந்திரர்களைக் கண்டித்து எழுதும்படி திருத்தியது!
 'இது என்ன தமிழ் பாகிஸ்தான்?' என்று கேட்ட தேசிய வட்டாரங்களின் மத்தியில் 'தமிழகம் தனி ராஜ்யம்' என்ற எண்ணத்தை வளர்த்து விட்டது!
  இத்தனை பணிகளையும் ஐந்தே ஆண்டுகளில் தமிழரசு கழகத்தினரால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால் ஆந்திரர்கள் யோசிக்க வேண்டும்.
 இனியும் 'சென்னை ஆந்திரர்களுடையது!' என்று கூறினால் தமிழரசு கழகம் அளிக்கும் பதில் "சென்னை என்று நீங்கள் ஜெபித்துக் கொண்டே இருங்கள். சென்னையை நீங்கள் அடைகிறீர்களா?! நாங்கள் பெறுகிறோமா?! என்பதை பிறகு கண்ணால் காணலாம்".
 ஆந்திரர்களே! ஆத்திரப்படாதீர்கள்!
 உங்கள் ஆசைக்கு சாவு மணி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது!
அதன் ஓசையை நீங்கள் 1953 ஜனவரி 24, 25 சென்னையில் நடைபெறவிருக்கும் தமிழரசு கழக இரண்டாவது மாநில மாநாட்டில் கேட்கலாம்!

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம் 
01.11.1952

Sunday, 2 November 2025

ஆகமத்தை விட தமிழ் உயர்ந்தது என்ற தமிழ்த் தாத்தா

ஆகமத்தை விட தமிழ் உயர்ந்தது என்ற தமிழ்த் தாத்தா

 உ.வே.சாமிநாத ஐயர் தம் சுயசரிதையில் 
“குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்” என்று ஒருவர் கூற...
"இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? ‘அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்!" கோபமாக கூறியுள்ளார்.

 மேலும் "பழங்காலத்திற் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால் பழம் பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுவடிகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!
 வரகுண பாண்டியர் ஏடுகள் அக்கினி பகவானுக்கு உணவாயிற்றென்ற செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளத்தில் அமைதி இல்லாமல் போயிற்று. ‘இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா!’ என்றெல்லாம் மனம் நொந்தேன்." என்றும் எழுதியுள்ளார்.
 

Monday, 20 October 2025

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்

 1965 இல் ஆதித்தனார் தமிழ்நாடு தனிநாடு ஆவதன் அவசியம் பற்றி எழுதும் போது டெல்லி அதுவரை அதாவது 1947 லிருந்து 18 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுரண்டிய தொகை ரூ.2460 கோடி என்று கணக்கிட்டுக் கூறியுள்ளார்.
 மத்திய அரசு வாங்கும் வரி வடக்கே போய் அதன் பங்கு வடக்கிலேயே பெரும்பகுதி செலவாகிவிடுகிறது.
 எனவே இது அல்ல பேரரசர்களுக்கு பயந்து குறுநில மன்னர்கள் கட்டும் கப்பம் போன்றது என்றும் கூறியுள்ளார்.
 இதில் ஆச்சரியமான விடயம் ரூபாய்த் தாள்கள் பற்றி அவர் கூறிய கருத்து.
 அதாவது தமிழ்நாட்டில் எவ்வளவு காகித ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவோ அதே அளவு மதிப்புள்ள பொருட்களை டெல்லி சுரண்டி விட்டு அதற்குப் பதில் வெறும் காகிதத்தை ரூபாய் நோட்டாக தந்து ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார். 
 1965 இல் 2460 கோடி மிகப்பெரிய தொகை!
இதற்குப் பிறகு இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு 120 கோடி நாம் நஷ்டக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். 
 அப்போதே ஆண்டுக்கு 2500 பேர் தற்கொலை செய்துகொள்வதைக் கவலையோடு குறிப்பிட்டு அதற்கு காரணம் வறுமை என்கிறார்.  
 மத்திய அரசு திட்டமிட்டு மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் புகுத்தி தமிழர் எண்ணிக்கையை இன்று பெருமளவு குறைத்துவிட்டது.
 ஆனால் வடவர்களோ பல மடங்கு பெருகிவிட்டனர். 
 இதை அன்றே எதிர்த்த ஆதித்தனார் மக்கட்தொகை குறைப்பு என்பது செருப்பு அளவுக்கு காலை வெட்டுவது என்றாகும் என கூறியுள்ளார்.
 அன்று தமிழ்நாட்டை விட சிறிய 106 நாடுகள் உலகத்தில் உள்ள போது தமிழ்நாடு ஏன் தனிநாடு ஆக முடியாது என்று கேட்கிறார். அந்த 105 நாடுகளின் பட்டியலையும் மக்கட்தொகையையும் கூட பட்டியலிட்டார்.
 தமிழருக்கு தனி அரசு இருந்திருந்தால் 5கோடி தமிழர்களை 35 லட்சம் சிங்களவர்கள் ஏளனமாக நினைப்பார்களா?! கள்ளத்தோணி என்று கூறி விரட்டி அடிப்பார்களா என்று கேட்கிறார்.
 தமிழகமும் ஈழமும் ஒன்றாக இணைய வேண்டும் என்று 1942 இலேயே 'தமிழ் ராஜ்யம்' எனும் நூல் எழுதி அதில் தமிழர் வாழும் பகுதிகளை குறித்து வரைபடம் வெளியிட்டார் ஆதித்தனார்.
 அவரது வார்த்தைகளில் கூறினால்...
"தமிழ் மக்கள் சிதறுண்டு கிடக்கும் நிலை நீங்கி ஒரே நாடாக ஒரே கொடையின் கீழ் தமிழ் இனம் வாழ வேண்டும்!
 பாண்டிச்சேரியிலும் ஈழத்திலும் சென்னை ராஜ்யத்திலும் சிதறுண்டு தனித்தனியாக வாழ்வதால் தமிழ் இனம் வலுவற்று கிடக்கிறது!
 இந்தப் பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சுதந்திர தமிழ்நாடு அமைத்துக் கொண்டு வல்லரசாக திகழ வேண்டும் என்பது தமிழ் இனத்தின் நியாயமான ஆசை!
 தமிழகத்தில் இருக்கிற 500 லட்சம் தமிழர்களும் இலங்கையில் இருக்கின்ற 35 இலட்சம் தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்!
 இந்திய தேசத்தை துண்டு போடுவது துரோகம் என்பதாக சொல்பவர்கள் தமிழ்நாடு துண்டுபட்டு கிடக்கிறதே அது தமிழர்களுக்கு செய்த துரோகம் இல்லையா?! 
  பீர்மேடு, தேவிகுளம், நெய்யாற்றின் கரை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்டு மலையாளிகள் கையில் சிக்கி கிடக்கின்றனவே!?
  வட எல்லையில் வேங்கடம் வரையில் உள்ள தமிழ் பகுதிகள் ஆந்திராவில் ஆட்சியில் கிடைக்கின்றனவே?!
 பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்கள் டெல்லியின் கண்காணிப்பில் இருக்கின்றனவே?!
 18 மைல் அகலம் உள்ள ஒரு சிறிய நீர்ப்பகுதிக்கு அப்பால் வட இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 
அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான்!
 அது தாயகத்தில் இருந்து பிரித்து கிடக்கிறதே?!
 இந்தப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர வேண்டாமா?!
 ஆகையால் தமிழ்நாடு ஒன்று சேர வேண்டும் என்று சொல்வது துரோகம் ஆகாது! " என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார்.

 "தமிழ்நாடு வறண்ட நாடு ஆகையால் அது சுதந்திர நாடாக இருக்க தகுதியற்றது" என்று சட்டமன்ற உறுப்பினர் குழந்தை அம்மாள் ஒரு முறை பேசினார்.
 "தமிழ்நாட்டில் நீர் வளம் நிலவலம் இல்லை" என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் எழுதியது.
 இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதித்தனார் "தமிழ்நாட்டில் பாலாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் ஓடாமல் இருப்பதற்கு காரணம் மைசூர் நாட்டில் அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதே.
 இப்போது தமிழ்நாடு டெல்லியின் கீழ் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.
 தமிழ்நாடு டெல்லியின் படியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடு ஆனால் தண்ணீர் விடும்படி உரிமையுடன் கேட்க முடியும்.
ஏனென்றால் சுதந்திர நாடுகளுக்கு தண்ணீர் உரிமை உண்டு. 
மேலும் மலையாளத்தில் ஓடுகின்ற சோலை ஆறு பரம்பிக்குளம் ஆகிய ஆறுகளின் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு பயன்படுத்த செய்யும் பணியை சுதந்திர தமிழர்கள் செய்ய முடியும்.
மேலும் ஆறு மட்டுமே ஒரு நாட்டின் வளத்தை நிச்சயிப்பதாக சொல்ல முடியாது!" என்று எழுதியிருக்கிறார்.
 மேலும் காவிரி ஆறு பற்றி அவர் எழுதும்போது "காவிரி ஆற்றின் ஒரு கிளை கன்னடர் நாடு வழியாக அதாவது மைசூர் மாநிலத்தின் வழியாக ஓடி வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.
 காவிரி ஆற்றுத் தண்ணீர் முழுவதும் மைசூரில் இருந்து வருகிறது என்று சிலர் சொல்வது மிகைப்படுத்தி கூறுவது ஆகும்.
இதை காட்டி தமிழ்நாடு தனிநாடாக இயங்க முடியாது என்று சொல்வது நியாயமான காரணம் ஆகாது. பிரம்மபுத்திரா என்ற ஆறு இந்தியா, சீனா வழியாக 5000 மைல் ஓடி பின்னர் பாகிஸ்தானில் ஓடுகிறது. இதைப் போலவே ஐரோப்பாவில் டானியூப் என்ற நதி 6 நாடுகளை தொடுகிறது.
 பொதுவாக பார்த்தால் உலகில் ஆறுகளின் காரணமாக நாடுகளிடையே சண்டை சச்சரவு ஏற்படுவதில்லை.
 அதற்கு விதிகள் இருக்கின்றன.
 விதிகளை மீறினால் ஐக்கிய நாடுகள் அவையிலும் உலக நாடுகளின் நீதிமன்றத்திலும் தீர்த்துக் கொள்ளலாம்.
 ஆகவே தமிழ்நாடு தனி நாடாக இயங்கினால் காவிரி ஆற்று தண்ணீரை இழந்து விடுவோம் என்பது வீண் புரளி. தண்ணீரை இழக்க மாட்டோம் என்பதோடு இழந்திருக்கும் தண்ணீர் உரிமைகளை மீண்டும் பெறுவோம்".

அன்றும் சிறுபான்மை என்கிற சொல் அரசியலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது இதை ஆதித்த நாள் வேறு பார்வையில் பார்க்கிறார்.
 "இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள்.
 சிங்களவர் பெரும்பான்மையாக சட்டசபை க்கு வருகிறார்கள் அதனால் சிங்களவர் ஆதிக்கத்தில் ஆட்சி அமைய நேரிடுகிறது.
 தாய்த் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் நான்கரை கோடி பேர் இருக்கின்றனர். ஆனால் 38 கோடி பேர் தமிழர் அல்லாத பிறமொழியினர் பெரும்பான்மையாக ஆட்சியில் இருக்கின்றனர்.
டெல்லி பாராளுமன்றத்தில் 40 பேர் தமிழர்கள் என்றால் 460 பேர் தமிழர் அல்லாதவர்கள் இருக்கின்றனர்.
 தமிழர் சிறுபான்மை என்றாவதால் எல்லாத் தொல்லைகளும் உண்டாகின்றன.
  தமிழர்கள் தனியாக பிரிந்தால் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மை என்ற நிலையை அடைய முடியும்!
 பலர் சொல்வது போல கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் உடன் தமிழர் சேர்ந்து திராவிடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினாலும் நான்கரை கோடி பேர் தமிழர்கள் இருப்பர் ஆனால் 10 கோடி பேர் தமிழர் அல்லாதவர்கள் இருப்பர்.
 அப்போதும் சிறுபான்மையாகத் தான் தமிழர்கள் இருப்பார்கள். தொல்லைகள் நீடிக்க தான் செய்யும்.
சிறுபான்மை நிலை ஒழிந்தால் இனம் வாழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக யூதர்களின் வரலாற்றை சொல்லலாம்.
 பல நாடுகளில் யூதர்கள் சிறுபான்மையாக இருந்தார்கள் எல்லா நாடுகளிலும் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவு கிடையாது எல்லா நாடுகளாலும் யூதர்கள் விரட்டப்பட்டு கடைசியில் சிதறிக்கிடந்த 8 லட்சம் யூதர்கள் 1948 ஆம் ஆண்டு அரேபிய பாலைவனத்தில் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் என்ற சுதந்திர தனி நாட்டை அமைத்தார்கள் அதன்பிறகு அவர்களுடைய தொல்லைகள் நீங்கின.
 தமிழ்நாடு அதை விட 30 மடங்கு பெரியது" 
 என்று எழுதும்போது ஈழத் தமிழர் துயரத்தையும் எழுதியுள்ளார்.
"1958 ஏப்ரல் மே மாதங்களில் தமிழர்களில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் கொலை கொள்ளை தீ வைத்தல் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்கள் வீடுகள் பொருட்கள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேதமாக்கப்பட்டன பஞ்சாப் படுகொலை விட இது 10 மடங்கு பயங்கரமானது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். 1961 பிப்ரவரி முதல் இலங்கையில் தமிழர்கள் ராணுவ ஆட்சியின் கீழ் சிக்கி சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் அண்மை காலம் வரை தமிழ் தலைவர்கள் சிறையில் இருந்தனர் இன்று தமிழுக்கு அங்கு எவ்வித உரிமையும் இல்லை தமிழர் வாழ் பகுதிகளில் சிங்களவர்களை கொடியேற்றி தமிழர்களின் தனித்தன்மையை அளிக்க சிங்கள அரசு முனைகிறது" 
 மேலும் அவர் தமிழின விடுதலை பற்றி கூறுகையில்
 "5கோடி தமிழ் மக்கள் ஓர் இனம் என்பதை உணர்ந்து தமது அடிமை தளையை அறுத்து எறிவது என்று வீறிட்டு எழுந்தால் அதை எதிர்த்து உலகமே திரண்டாலும் தடுக்க முடியாது! டெல்லி அரசாங்கத்தாலும் முடியாது! அந்த அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்கிற 38 கோடி வடவர்களாலும் முடியாது ! 30 லட்சம் அயர்லாந்து மக்களின் சுதந்திர போராட்டத்தை தடுப்பதற்கு அவர்களைப் போல் 15 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஆங்கிலேயர்களால் முடியாமல் போய்விட்டது!" என்று கூறுகிறார்.
 ஆதித்தனார் தனிநாடு கொள்கையுடன் 'தமிழ் ராஜ்ய கூட்டணி' அமைத்து அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை தேர்தலில் வென்றார்.
 ஆனால் மத்திய அரசு ஆளுநரை வைத்து விளையாடி அவரை நியாயப்படி முதலமைச்சர் ஆவதைத் தடுத்தது என்பது வரலாறு! 
நன்றி: ஆதித்தனார் எழுதிய 'தமிழப் பேரரசு' நூல்