Friday, 9 January 2026

சிவகார்த்திகேயன் தெலுங்கர் தான்



சிவகார்த்திகேயன் தெலுங்கர் தான்

அவசியமே இல்லாத இடத்தில் சிவகார்த்திகேயன் ஒரு தெலுங்கன் என அண்ணன் சத்யராஜ் அம்பலப்படுத்துவதையும்
அதற்கு சிவகா பதறுவதையும் பாருங்கள்.

இதை ஏன் இப்போது இடுகிறேன் என்றால் வருங்காலத்தில் இவன் கிழடு தட்டி போனபிறகு கறுப்புசட்டையை போட்டுகொண்டு கட்சி ஆரம்பித்து காவிரி பிரச்சனை பற்றி பேட்டி கொடுக்கும் நிலை வரக்கூடாது என்றுதான்.

சத்யராஜ்: சிவகார்த்திகேயன் தெலுங்கு நல்லா பேசுவார்.
ஹீரோயினோட தாய்மொழி தெலுங்கு.
ஏதோ விஜய் டிவி ப்ரோக்ராம் அதனால தமிழ் பேசுறார் இல்லனா புல்லா தெலுங்குதான்.

Koffee with dd
sivakarthikeyan special

( இந்த காணொளி யூட்யூபில் இல்லை!
09.12.2013 அன்று 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்பட விளம்பர நோக்கில் இப்பேட்டி இருந்தது)

https://m.facebook. com/story.php?story_fbid=1155698831200435
(காணொளித் துண்டு எனது பழைய முகநூல் கணக்கு. தற்போது இல்லை) 


பதிவு: 17.02.2018
அன்றைய தலைப்பு: அஞ்சுபைசா மூஞ்சி

Sunday, 28 December 2025

பாரதியார் கொண்டிருந்த தமிழினப்பற்று

 பாரதியார் கொண்டிருந்த தமிழினப்பற்று 
 
தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் பாரதியார் கொண்டிருந்த பற்றைப் பரலி சு. நெல்லையப்பர் அவர்களுக்கு அவர் எழுதிய கடிதம் மூலம் அறியலாம். 
பாதுகாக்கப் பட்டுள்ள அந்த பாரதியார் கடிதம் பின்வருமாறு:

புதுச்சேரி
19.07.1915
 "தம்பி தமிழ்நாடு வாழ்க என்றெழுது. 
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
 அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங் களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வாழ்க என்றெழுது.
 தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. 
அதன்பெயர் தமிழ் ஜாதி. 
அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக் குழந்தை என்றெழுது.

 ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது. 
அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது.
 பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது.
 பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது 

தமிழ் - தமிழ் - தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும் தம்பி.
 நான் ஏது செய்வேனடா? 
தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்த முண்டாகிறது.
 தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை.
 தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என்மனம் புண்படுகிறது.

தம்பி! உள்ளமே உலகம்! 
ஏறு! ஏறு! ஏறு! 
மேலே, மேலே, மேலே! 
நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி. 
உனக்குச் சிறகுகள் தோன்றுக. 
பறந்து போ.
சி. சுப்பிரமணிய பாரதி

Sunday, 14 December 2025

செங்கோட்டை சபிக்

 செங்கோட்டை சபிக் 

 செங்கோட்டை யில் கன்னட கொடியுடன் வலம் வந்த வண்டியை மறித்து கொடியை அகற்ற வைத்த நாம் தமிழர் மூத்த நிர்வாகி அண்ணன் முகமது சபிக் அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டார்.

 தென்காசி பொறுப்பாளர் வின்சென்ட் அவர்கள் பிணை எடுக்க ஆவன செய்துள்ளார்.
 இவ்வழக்கில் மேலும் சேர்க்கப்பட்டவர்கள் செங்கோட்டை பகுதி நிர்வாகிகள் காமராசு மற்றும் ஜெயசெல்வன் ஆகியோர் ஆவர்.
 (அதாவது ஒரு இசுலாமியர், ஒரு தேவேந்திரர், ஒரு கிறித்தவ நாடார்) 
 
 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் செங்கோட்டை பகுதி  பொறுப்பாளர்கள் மற்றும் கடையநல்லூர் நிர்வாகிகள் என 8 பேர் அண்ணன் சபிக் அவர்களது இல்லம் சென்று சிறிதளவு நிதி உதவி செய்துவிட்டு நாளை மறுநாள் பிணை கிடைத்துவிடும் என்று தைரியம் சொல்லிவிட்டு வந்தோம்.
 பிணையும் கிடைத்துவிட்டது.
 
 பி.கு: சமூக வலைகளில் இச்செய்தி பரவியதே கைதுக்கு காரணம் என்பதால் இச்செய்தி ஒரு வாரம் தாமதமாக பகிரப்படுகிறது 

 


 

Friday, 12 December 2025

தெலுங்கர் போல இனப்பற்று நமக்கு இல்லையே என்று புலம்பிய பாரதியார்

 தெலுங்கர் போல இனப்பற்று நமக்கு இல்லையே என்று புலம்பிய பாரதியார்

"சென்ற வெள்ளிக்கிழமை (1917) சூன் 1 யன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் சபாநாயகர் ஸ்ரீவெங்கடப்பய்ய பந்துலு செய்த உபந்யாஸம் கவனிக்கத் தக்கது.

ராஜநீதி சாஸ்த்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார்.
பாடலிபுத்ர நகரத்தில் நடந்த ஆந்திர ராஜ்யமும் பிற்காலத்தில் தமிழ் நாட்டைக் கட்டியாண்ட விஜயநகரத்து ராஜ்யமும் கீர்த்தி மிகுந்தனவன்றோ?
தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள் நமது பாஷையிலும் ஆகாராதிகளிலும் அழிக்க முடியாதபடி பதிந்து கிடக்கின்றன.
நமது ஸங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்றுவரை முழுகிக் கிடக்கின்றன.
பாடகர்கள் பாடும் கீர்த்தனங்கள், தாசிகள் ஆட்டத்தில் பாடும் வர்ணங்கள் ஜாவளிகள் முதலியவற்றில் நல்ல உருப்படியெல்லாம் தெலுங்கு.

நமது கிராமங்களிலுள்ள தெலுங்க ரெட்டிகளும், நாயுடுமாரும், ஆந்த்ர பிராமணப் புரோகிதர்களும், தெலுங்கு தாசிகளும் ராயர் சம்ஸ்தான காலத்தில் இங்கே உறுதி பெற்றவர்கள்.
நமது விவாக காலங்களில், பாடும் பத்யம், லாலி முதலானதெல்லாம் தெலுங்கு முறை.

நமது பாஷையில் "கவனம்", (ஆழ்ந்து நோக்குதல்) "ஜொகுஸு", "எச்சரிக்கை", "துரை", "வாடிக்கை", "கொஞ்சம்" முதலிய பதிற்றுக்கான தெலுங்குச் சொற்கள் சேர்ந்திருக்கின்றன.
இக்காலத்திலும் கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழரைக் காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவ்ர புத்தி செலுத்துகிறார்கள்.

ஆனால் நமக்குள் ஜாதி பேதமிருக்கிறது என்றால் ஜாதிபேதம் இந்தியாவில் மாத்திரமில்லை.
உலகத்தில் எல்லா தேசங்களிலும் இருக்கிறது.
இந்தியாவில் கொஞ்சம் தீவ்ரமாகவும், விநோதமாகவும், மாற்றுவது கஷ்டமாகவும் இருக்கிறது.
இப்போது பூமி முழுவதிலும் நடந்து வரும் மஹாப்ரளயத்தில் (உலகப்போர்) இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாய்ப் போய்ப் புதிய மாதிரி உண்டாகும்.

இதுவெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்றால், தமிழ்நாட்டு ஜனங்கள் வீண் சண்டைகளிலே பொழுது போக்குகிறார்கள்.
தெலுங்கர் ஜனபிவிருத்திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்தி வருகிறார்கள்.

சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு பங்கு கூடத் தமிழ் ஜனங்களிடம் இல்லை.

சென்ற வெள்ளிக் கிழமையன்று கூட மேற்படி நெல்லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தே மாதரம் என்ற கோஷம் அபரிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது.

கொஞ்ச காலத்துக்கு முன்பு கூட நெல்லூரில் கூடிய மாஹானசபையில் 'வந்தே மாதரம்' பாட்டுக் கூடப்பாடவில்லையென்று கேள்விப்பட்டேன்.

தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபை கூட அப்படி நடந்திராது.

இது நிற்க, மேற்படி சபையில் ஸ்ரீ வேங்கடப்பய்யா சபாநாயகராகப் பேசிய வார்த்தையின் ஸாரம் பின் வருமாறு:

1. தெலுங்கு தேசத்தைத் தனி மாகாணமாகப் பிரிக்க வேண்டும்.

2. இந்தியாவுக்குத் தன்னாட்சி கொடுக்க வேண்டும்.

3. இயன்ற வரை, இந்தியா முழுவதையும் பாஷைகளுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாணமாக்க வேண்டும்.
அதாவது மதராஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றி
தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மாராட்டிய நாடு, கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்கநாடு என்று பாஷைக்கிரமப்படி வகுக்க வேண்டும்.

4. ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய்விக்க வேண்டும்.
ராஜ்ய காரியங்களும் இயன்ற வரை ஸ்வபாஷையில் நடக்க வேண்டும்.

மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்றாவது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி;
இரண்டாவது மற்றொரு பகுதி.
இரண்டாவது தாய்ப்பகுதி;
மற்றவை கிளைப் பகுதிகளாகும்.

என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கொண்ட கொள்கை யெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது.

மேலும், தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை.

தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.

பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக்கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி.

தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி.

தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய் மொழியிலும், திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை."

மேற்படி கட்டுரை சுதேசிமித்திரனில் 9.6.1917இல் 'தெலுங்க மஹா சபை' எனும் தலைப்பில் 'சக்தி தாஸன்' எனும் புனைப்பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.
சேர,சோழ, பாண்டிய மூவேந்தரின் தமிழர் ஆட்சிக்கு பிறகு விசய நகரப் பேரரசு தமிழகத்தில் நிலை கொண்டது. பிரித்தானியர் ஆட்சியிலும் கூட தெலுங்கரின் ஆதிக்கம் தமிழகத்தில் ஓங்கி வளர்ச்சி பெற்றது. அதன் மூலம் தமிழர் பண்பாட்டிலும், மொழியிலும் சில கலப்புகள் நிகழ்ந்தது. அதுமட்டுமின்றி, அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழர்களுக்கு இன உணர்ச்சி ஏற்படுவதற்கு முன்பே 1912இல் தெலுங்கர்கள் 'ஆந்திர மகாசபை' அமைத்து தெலுங்கு இன உணர்ச்சி வளர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியதோடு மொழிவழி அடிப்படையில் மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால் மிகத் தாமதமாகவே இக்கோரிக்கையானது 1938இல் இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழர்களிடத்தில் ஏற்பட்டது. அதுவும் கூட 1939க்குப் பிறகு 'திராவிட நாடு' பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்
டது. தற்போது தமிழர்கள் முகத்தில் திராவிட, இந்திய முகமூடிகள் மாட்டப்பட்டு விட்டது. இவ்விரண்டையும் கழற்றி எறியாத வரை தமிழர்களுக்கு எப்போதும் வாழ்வில்லை என்பதைத்தான் சுப்பிரமணிய பாரதியாரின் கட்டுரை நமக்கு உணர்த்துகிறது. சுப்பிரமணிய பாரதியாரின் வரலாற்று வழியில் தவறாக புரிந்து கொண்ட இந்து மதக் கண்ணோட்டத்தை புறந்தள்ளி விட்டு அவரின் மொழிவழி தேசிய இனங்களின் சமத்துவ சிந்தனையை ஒவ்வொரு தமிழரும் ஏற்றிப் போற்றிடுவோம்!

பதிவர் : Kathir Nilavan
பதிவு நாள்: 06.11.2016
தெலுங்கனுக்கு உள்ள இன உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே...!
பாரதியார் வேதனை!

தமிழரல்லாதார் ஆட்சிஅம்பலப்படுத்திய பாரதியார்


தமிழரல்லாதார் ஆட்சி
அம்பலப்படுத்திய பாரதியார்

1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி
மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது,

  "புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்த
பிராமணரும்-பஞ்சமரும்-ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள்,
தமிழரும் அல்லாதார் என்று
ஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும்! இந்த பாஷை சரிப்படாது.

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்.

தமிழ் வேளாளர் ஒருவர்,
இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும்
ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும்
தெலுங்கர்கள் என்றும்
தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும்
என்னிடம் வந்து முறையிட்டார்"

(பாரதி தமிழ்: பக்.403)

 06.11.2016

Tuesday, 18 November 2025

இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்


இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
16.10.2017

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பனிகடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
- முல்லைப்பாட்டு 1-6

இப்பாடலில் மேகத்தின் இயக்கம் அறிவியல் முறையில் விளக்கப்பட்டுள்ளது.  
கடலில் நீர் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது நெடுந்தொலைவு பயணித்து மலையில் தங்கி பெருமழையை பொழிந்தது
------------------

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே
- அகநானுறு183

குளிர்ந்த கடலில் நீரை மேகங்கள் குடிப்பது பற்றி வருகிறது
-----------

இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
- நற்றிணை 329:11

கருமையான வானம் பெரும் சத்தத்துடன் இடி இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்துவரும் கார்காலம்.
(அதாவது மேகம் கடலில் இருந்து நீரை எடுத்து மழையாக பொழியும் மழைக்காலம்)
---------------

மின்னு வசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
- நற்றிணை 228:1

மின்னலுடன் முழங்கும் பெரும் சத்தத்துடன் நீர் நிறைந்த மேகம்  பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையை கண்தெரியாத இருளடைந்த நடு இரவில் பொழியும்.
--------------------

இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர்
- நற்றிணை 115:3

மேகங்கள் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு, எஞ்சிய கடலின் நீர் சிறிது என்னும்படி கொணர்ந்தன.

(இது கடல் நீரை மேகங்கள் கொள்வதை சற்று மிகைப்படுத்திக் கூறுகிறது.
அதாவது பாதிக்கும் மேல் உறிஞ்சிவிட்டதாம்!)
-----------

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே
- ஐங்குறுநூறு 492

மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை கூறுகிறது
-----------

மேகங்களின் நகர்வு பற்றியும் குறித்துள்ளனர்,

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்
- ஐங்குறுநூறு 469

பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ
- அகநானூறு 840

கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
- நற்றிணை 140

கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
- அகநானூறு 43

போன்ற பாடல்கள் கடலில் உருவான மழைமேகம் மேற்கு நோக்கி (வலப்பக்கமாக) நகர்வதாக குறித்துள்ளனர்.
அதாவது வடகிழக்குப் பருவக்காற்று பற்றி கூறப்பட்டுள்ளது.
--------------

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து
- நற்றிணை 289

கடல் நீரைக் குடித்து செறிவு (அடர்த்தி) அதிகமான மேகம் மழை பொழிவதாகக் கூறுகிறது இப்பாடல்
-------------

கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
- குறுந்தொகை - 287

அதாவது நிறைமாத சூலி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கி செல்கின்றன என்று கூறுகிறது.
----------

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
- நற்றிணை 261

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
- பதிற்றுப்பத்து 12

மேகங்கள் மலையில் மோதி மழைபொழிவதைக் கூறுகிறது
----------

பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
- அகநானுறு 217

பெய்து தீர்த்த மேகம் வெண்மையான மென்பஞ்சுபோல ஆகிவிடும் என்று கூறுகிறது.
-----------

மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சங்ககாலத்திலேயே தமிழர்கள் அனைவரும் மழை எவ்வாறு பொழிகிறது என்று அறிந்திருந்ததை உணரமுடிகிறது.

பெயிலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பிற் றுவலை கற்ப
- நெடுநெல்வாடை 20

மழை பெய்துவிட்ட வெண்மையான மேகம் மேலெழுந்து சாரலை ஏற்படுத்துவது பற்றி வருகிறது
-----------------------

மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,

பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
சிறு நுண் ணெறும்பின்
- புறநானூறு 173

எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்
-----------

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
- புறநானூறு 35:7

தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
- புறம் 117:2

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவில்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
- பட்டினப்பாலை 1-6

மேற்கண்டவை உணர்த்தும் பொருள் யாதெனில்,
வானத்தில் வெள்ளி கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும்
தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும்
(ஆனாலும் காவிரி பொயக்காது)
----------
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
- பதிற்றுப்பத்து 13:25

செவ்வாய்க் கோள் சென்ற வழியில் வெள்ளி கோள் செல்லாததால் மழை தேவையான இடங்களிலெல்லாம் உன் நாட்டில் மழை பெய்கிறது.
(அதாவது வானில் கோள்கள் நகர்வு மூலம் மழையை கணித்துள்ளனர்)
----------

பழமையான மொழியான தமிழில் அறிவியல் இல்லை என்று சில பிறமொழி வந்தேறிகள் பிதற்றுகின்றனர்.

மேலே உள்ள மழை பற்றிய குறிப்புகள் மட்டுமே.
இதேபோல பல்வேறு விடயங்களை தமிழ் இலக்கியம் அறிவியல் பார்வையுடன் பதிவுசெய்துள்ளது.

வேறு எந்த மொழியினது தொடக்ககால இலக்கியத்திலும் இத்தகைய அறிவியல் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.

பட்டியல்சாதி ஐயங்கார்

பட்டியல்சாதி ஐயங்கார்

 அந்த ஐயங்காரின் பெயர் மானாமதுரை கிருஷ்ணசாமி. பெரிய வக்கீல். 
காந்தியின் சீடர்.  
ராஜாஜியின் நண்பர். 
காமராஜருக்கு ஆலோசகர்.  
மதுரை வைத்திய நாத ஐய்யருடன் திருக்குலத்தார் மீனாட்சி ஆலய பிரவேசம் செய்ய உடன் நின்றவர். 
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கோயில்களை சர்.சி.பி ராமாசமி ஐயர் எல்லோருக்கும் திறந்து விட்ட பின், தன் ஊரில் இருந்து திருக்குலத்தாரை தன் சொந்த செலவில் அங்கு சென்று ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தவர். 
மானாமதுரையில் ஹோட்டல்களில் எல்லோரும் சென்று சாப்பிட போராடி வழி செய்தவர். 
சுதந்திர இந்தியாவில், முதல் தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக (MLA) இருந்தவர். 
தன்னிடம் கொடுக்கப்பட்ட காரை விற்று அரிஜன சேவைக்கு பயன் படுத்தியவர். 
கோயில் தர்ம கர்த்தாக்கள் நியமனத்தில் திருக்குலத்தாரையும் சேர்க்க பாடுபட்டவர். அவர்களுக்கு அர்ச்சகர் பதவி கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர். 
அரசியலில் பணம் ஏதும் சம்பாதிக்காதவர். அதனால் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வழியில்லாமல் இருந்தவர். 
 அவரது மகன் ஒரு அதிகாரியாகி அவரைப் பார்க்க வருகிறார்.
இவர்  திருக்குலத்தில் பிறந்தவர். 
இவரை ஐயங்கார் சிறு வயதிலேயே தன்வீட்டில் சேர்த்துக் கொண்டு, ஊரைப் பகைத்துக் கொண்டு, பள்ளிக் கூடத்தில் சேர்த்து, ராஜாஜியின் உதவியுடன் கல்லூரியில் சேர்த்து ஆளாக்கி மத்திய அரசில் பெரிய பதவியில் உட்கார செய்தார். 
அவரின் திருமணத்தையும் தானே முன் நின்று நடத்தி வைத்தார். 
அந்த தத்து புத்திரன் தான் தற்போது பெரிய அதிகாரி. அவர்  பெயர் சம்பந்தம். 
திரு் சம்பந்தம் தன்னை ஆளாக்கிய தந்தையைப் பற்றி எழுதிய பழைய நூலை வைத்து கன்யூட்ராஜ் என்பவர் எழுதிய புனைவிலக்கியம் (நாவல்) தான் 'அரிஜன ஐங்கார்" எனும் படைப்பு. 
இவரைப் போன்றோருக்கு சிலை ஒன்று அவர் ஊரில் கூட இல்லை!
அவர் போட்டோவை இணையத்தில் தேடினேன். 
இல்லை. 

பதிவர்:- Ganesh Lakshminarayanan