Friday, 8 August 2025

வடவரில் முஸ்லிம் எவ்வளவு

வடவரில் முஸ்லிம் எவ்வளவு

தமிழகத்தில் இருக்கும் ஹிந்தியரில் முக்கால்வாசிப் பேர் சரியான நிறுவனப் பணிகளில் முறைப்படி பணிபுரிபவர்கள் அல்லர்.
 இவர்களில் கணிசமானோர் முஸ்லிம்கள்! 

 இருக்கும் புள்ளிவிபரங்களை அலசுவோம்
 திருப்பூர், சென்னை போன்ற நகரங்களில் முறைப்படி வேலைக்கு அமர்த்தப்பட்ட வடவர்களின் புள்ளிவிபரம் த.நா. தொழிலாளர் நலத்துறையிடம் உள்ளது.
 அவர்களது எண்ணிக்கையில் முஸ்லிம் எண்ணிக்கையை கண்டறிய அவர்களது பூர்வீக மாநிலத்தில் எத்தனை சதவீதம் முஸ்லிம்கள் என்று தெரிந்தால் கணிக்கலாம்!

 உதாரணமாக மேற்கு வங்கத்தில் ஏறத்தாழ 27% முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
 அங்கிருந்து இருந்து 100 பேர் தமிழகம் வந்தால் அதில் 27 பேர் முஸ்லிம் இருப்பார்கள் என்று கொள்கிறோம்.

அப்படி கணக்கிட்டால்

ஒரிசா 286500
முஸ்லிம் (2.17%) 6217

பீகார் 247016 
முஸ்லிம் (16.87%) 41671

ஜார்கண்ட் 190518 
முஸ்லிம் (14.53%) 27681

மே.வங்கம் 184960 
முஸ்லிம் (27.01%) 49940

அஸ்ஸாம் 92105 
முஸ்லிம் (14.22%) 13097

உ.பி 89462
முஸ்லிம் (19.26%) 17230

மொத்தம் 906745
முஸ்லிம் மொத்தம் 155836
அதாவது 17%  

 இந்த சரியான புள்ளிவிபரப்படியே 9 லட்சம் பேர்!
 அதில் முஸ்லிம்கள் ஒன்றரை லட்சம் பேர்!
ஆனால் உண்மை இதைவிட பல மடங்கு அதிகம்! பெ.மணியரசன் அவர்களது புள்ளிவிபரப்படி தமிழக மக்கட்தொகை அதிகரிப்பையும் குழந்தை பிறப்பு விகிதத்தையும் வைத்து பார்த்தால் ஒரு கோடி பேர் (தமிழகத்தில் பிறக்காத மக்கள்) நுழைந்திருக்கின்றனர்.

 இதிலும் முஸ்லிம்கள் (இருக்கவேண்டிய) 17% ஐ விட மிக மிக அதிகம்!

 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வடயிந்தியா முழுக்க முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்கள் இயங்குகிறார்கள்! 
 வடக்கே ஒரு முஸ்லிம் பிறப்பிலிருந்து இறப்பு வரை பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது!
 ஏற்கனவே இந்திய அளவில் sc மக்களை விட முஸ்லிம் மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர்!
 இதனால் குற்றச் செயல்களிலும் அவர்களே அதிகமாக உள்ளனர்!
 வடக்கே பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவராக பார்க்கின்றனர்! 
 ஆரம்ப கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள் பாகுபாடு!
 கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள் இழிவுபடுத்துவது!
அரசு நிறுவனங்களில் வேலை கிடைக்காமை!
 தொழில் செய்வோர் சக இந்து போட்டியாளர்களை எதிர்கொள்ள முடியாமை!
 அரசியலில் சரியான தலைவர்கள் இல்லாமை!
 தினசரி வாழ்க்கையில் ஹிந்துத்துவ ரவுடிகளை எதிர்கொள்வது!
 அரசு அதிகாரிகள் போலீஸ் என எல்லா அதிகாரிகளும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை கொட்டுவது! 
 ஊடகங்கள் தீவிரவாத முத்திரை குத்துவது!

இப்படி எல்லாவகையிலும் ஒடுக்கி ஒதுக்கி தள்ளப்பட்டு தமிழகம் வருகிறார்கள்!
 
  ஒரு காலத்தில் ஐரோப்பியர்கள் கடுமையான குற்றவாளிகளை (அவர்கள் வெள்ளையராக இருக்கும் பட்சத்தில் கொல்ல விருப்பமில்லாமல்) ஆஸ்திரேலியாவில் கொண்டுபோய் விட்டுவிடுவார்களாம்! 
 அதாவது உலகத்தை விட்டே ஒதுக்கிவைப்பது!
 அப்படித்தான் இங்கே வடக்கத்தி முஸ்லிம்கள் வந்து சேர்கின்றனர்.
 இவர்களுக்கு அடுத்து வந்துசேர்வது வடக்கத்தி sc மக்கள்!
 இப்படி வருகிற வடவரில் பெரும்பாலோர் பாஜக வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்! 
 அப்படி இருக்க இவர்களில் 6.5 லட்சம் பேரை ('சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்' மூலம்) தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கவுள்ளனர்.
 
 அதாவது வடவர் வருகையில் தமிழக பாஜக வுக்கு தேர்தலில் பெரிய லாபம் ஒன்றும் இல்லை! 

 இருந்தாலும் வருகின்ற சிலரில் தமக்கு வாக்களிப்பார்கள் என்கிற எச்சை புத்தியில் இதை ஆதரிக்கிறார்கள்! 

 திமுகவும் இதற்கு உடந்தை!
இத்தனை நாள் பிராமணரைக் காட்டி ஆரியம் திராவிடம் என்று ஓட்டியாயிற்று!
 இனி இவர்களைக் காட்டி வடவன்- தென்னிந்தியன் என்று ஓட்ட வேண்டியதுதான் அவர்கள் வேலை!

 நான் முன்பே கூறியதுபோல வடவர் போரினாலோ பஞ்சத்தாலோ அல்லது நல்ல வாய்ப்புகளை அடையவோ கூட இங்கே வருவதில்லை!
 அப்படி வேறுவழியில்லாமல் இங்கே வந்தால் அவர்களை அரவணைக்கலாம்! அதுவும் நிலமை சரியாகும் குறிப்பிட்ட காலம் வரை!
 ஆனால் வடவர்கள் இங்கே வருவது தமது அரசியலில் அடைந்த படுதோல்வியின் காரணமாகத்தான்!
 எல்லா வளங்களும் இருந்தும் தன் தாய்நிலத்தில் தன் இன ஆதிக்கவாதிகளை எதிர்க்கத் துப்பில்லாமல் இங்கே ஓடி வருகின்றனர்.

 இவர்களை தமிழகத்தில் இருக்கும் எல்லா இனத்து முதலாளிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர்!
 இதனால் தமிழினத் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்!
 இதனால் மோதல் நிலை உருவாகிறது!
ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ள வடவர்கள் இங்கே தமது குடும்ப-சமுதாய கண்கானிப்பும் இல்லாமல் சுதந்திரமாக திரிவதால் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கிறது!போலிஸ் மண்டையை உடைத்ததும் 9 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் நடந்தது!
 அப்படியே முதலாளிகளுக்கும் சரியான நிரந்தரமான தொழிலாளர்கள் இல்லாமல் எல்லா தொழில்களிலும் தரம் குறைகிறது!
 (தமிழினத் தொழிலாளிகள் திராவிட ஆட்சியில் குடிக்கு அடிமையாக்கப்பட்டு கிடப்பதும் ஒரு காரணம்!)

 ஆகவே இத்தகைய குடியேற்றத்தை தடுப்பதுதான் அனைவருக்குமே நல்லது! 
அரசு தடுக்காவிட்டால் பொதுமக்கள் தடுக்க வேண்டும்!
வடவரை எந்த இடத்திலும் சிறிதளவேனும் ஆதரிப்பது கூடாது!
நமக்குள் இருக்கும் மனிதநேயம் தடுத்தாலும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்! 
 
 அவரவர் மண்ணில் அந்தந்த மண்ணின் மைந்தர் தத்தமது தேசியவாத அரசியலை வளர்த்தெடுத்து தன்னிறைவு அடைவதே நிரந்தர தீர்வு! 



 

Tuesday, 22 July 2025

தமிழ்தேசிய சொர்க்கம்

தமிழ்தேசிய சொர்க்கம்

 அன்று பூவுலகை விட்டு விண்ணுலகம் வந்த தமிழர்கள் அவர்களது 'இனநலன் கணக்கு' பார்க்கப்பட்டு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
 ஒருவர் பேன்ட் சர்ட் போட்டு கறுப்பு கண்ணாடி போட்டிருந்தார். ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டு இருந்தார்.
 அவரை சொர்க்கத்துக்கு அனுப்பினார்கள்.
 இன்னொருவர் வேட்டி சட்டையில் தூய தமிழில் பேசிக் கொண்டு இருந்தார். அவரை நரகத்துக்கு அனுப்பினார்கள்!!
 இவர்களுக்கு பின்னால் நின்ற ஒருவர் எனக்குத் தெரிந்தவர் அவரை கணக்கு பார்த்து பூவுலகிற்கே அனுப்பிவிட்டனர்.
 எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அங்கே நீதிபதி போல தமிழ்த்தாய் அமர்ந்திருந்தார்.
 முதலில் மூன்றாவது நபரைப் பற்றி கேட்டேன்.
"அவர் இனத்திற்கென்று எதுவும் செய்யவில்லை.
சாமானியனாக வாழ்ந்தார். அதனால் மீண்டும் பிறக்க அனுப்பிவிட்டேன்" என்றார் தமிழ்த்தாய்.
 நான் "அவர் ஜாதி பட்டத்தை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டவர் ஆயிற்றே" என்று கேட்டேன்.
 அதற்கு "உலகம் முழுவதும் அப்படித்தானே?!
உலகின் மிக மதிக்கப்படும் தலைவர்கள் தம் பெயரையும் தம் குடிப்பட்டத்தையும் சேர்த்துதானே வைத்திருந்தனர்! சாதிப் பட்டத்தை பயன்படுத்துவது தவறில்லை பிற சாதிகளை மேலாகவோ கீழாகவோ எண்ணுவதுதான் தவறு!"
 "சரி! இன்னொருவரை நரகத்திற்கு அனுப்பினீர்களே அவர் யார்?!"
 "அவர்தான் எழுத்தாளர் தூயத்தமிழன்!"
"அவரா?! அவர் எழுத்துகளை வாசித்திருக்கிறேனே?!
 நல்ல எழுத்தாளர்தானே?!  இன உணர்வு உள்ளவர்தானே?! பிறகு ஏன் அவரை நரகத்தில் தள்ளினீர்கள்?!"
 "அவர் மொழிப்பற்றாளர்! மொழிபற்று மட்டுமே இன உணர்வு ஆகாது! தமிழில் கோர்வையாக நான்கு வரி எழுதத்தெரியாதவர்கள் கூட இனத்திற்காக பெரும் போராட்டங்களைச் செய்யவில்லையா?! 
அவர் தூய தமிழில் பேசுகிறார் மகிழ்ச்சிதான்! ஆனால் 'தமிழ் பேசுவோரெல்லாம் தமிழர்' என்றும் 'சாதியை விட்டொழிப்பதே தமிழ்தேசியம்' என்றும் 'தமிழர் தூய தமிழில் பேச வேண்டும்' என்றும் 
'கடவுள் நம்பிக்கையை விடவேண்டும்' என்றும் பேசியும் எழுதியும் வந்தார்"

"சரியாகத்தானே இருந்துள்ளார்?!"

"என்ன சரி?! இவரால் இயல்பான இனவுணர்வுடன் போராட வந்த பலரும் தலைதெறிக்க ஓடிவிட்டனர்"

"எப்படி?"

 "இன அடையாளமான குடிப்பட்டத்தை மறைத்துக்கொண்டு....
 தமிழை நன்கு கற்று சிறப்பாகப் பேசத் தெரிந்த வேற்றினத்தவரை எல்லாம் ஆதரித்து...
 இயல்பான சாதிய மத பற்றுடன் இருந்தவர்களை வெறியர்கள் என்று தூற்றி...
 ஆங்கில சொற்களை கலந்து பேசினால் அவன் பிறப்பையே சந்தேகப்பட்டு...
 என் வயிற்றுப் பிள்ளைகளான பார்ப்பனர்களை வேற்றினம் என்று வெறுப்பை பரப்பி... 
 'தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்' என்று முட்டாள்த்தனமாக எண்ணிக்கொண்டு....
 இனப்பற்றை புறந்தள்ளி மொழிப்பற்றை முதன்மையாகக் கொண்டு...
 ச்சே ச்சே இத்தக்கைய நபர்களால்தான் தமிழினத்தில் புகுந்த வந்தேறிகள் அதிகாரத்திற்கு உயர்ந்து இனத்தையே அழிக்கின்றனர்"

 "என்றால் மொழி பெரிது இல்லையா?! அதுதானே இனத்தின் உயிர்?"

 "இனம் என்பது ஒரு மனிதன் என்றால் மொழி என்பது அவனது முகம்!
 இனம் எனும் உயிர் வாழவேண்டும்! மொழி எனும் அடையாளம் அவ்வளவு முக்கியமில்லை"

 "சரி அந்த கறுப்புக் கண்ணாடி ஆசாமியை சொர்க்கத்துக்கு ஏன் அனுப்பினீர்கள்?!"
 
"முதலில் அவர் தன் குடிப்பட்டத்தை சேர்த்துக் கொண்டு வாழ்ந்ததால் வந்தேறிகள் ஊடுறுவலைத் தடுத்து நிறுத்தினார்"
 
 "அதைத்தானே பூமிக்கு திரும்பச் சென்றவரும் செய்தார்?!" 

 "ஆம்! ஆனால் இவர் இனத்திற்கு பெரிய நன்மை ஒன்றைச் செய்துள்ளார்!"

"அப்படி ன்ன செய்தார்?!"

"நான்கு பிள்ளைகள் பெற்றுள்ளார்!"

"அட! இது பெரிய இனத்தொண்டா?!"

"என்ன இப்படி கேட்டுவிட்டாய் இனம் பெருக வேண்டும் இல்லாவிட்டால் அழிவுதான்!"
 உனக்கு எளிதாக புரியவைக்கிறேன்!
இனம் என்பதை ஒரு மனிதனாக கற்பனை செய்துகொள்!
 அவனுக்கு உயிர் வேண்டும்!
உயிரைக் காத்துக் கொள்ளும் தற்காப்பு சிந்தனை வேண்டும்!
அவன் பலசாலியாக இருக்க வேண்டும்!
அவன் அறிவாளியாகவும் இருக்க வேண்டும்! 
அதன் பிறகுதான் அவன் அழகாக இருக்கிறானா?! பாடுகிறானா?! ஆடுகிறானா?! என்ற தகுதிகள் எல்லாம்!
அதே போல,
 தமிழினம் வாழ இனம் பெருக வேண்டும்! மக்கட்தொகை பெருக வேண்டும்!
 பிற இனங்களுடன் போட்டி போடும் வலு வேண்டும்!
அதாவது இனத்திற்கு அரசும் ராணுவமும் வேண்டும்!
 அறிவியலும் தொழில்நுட்பமும் வேண்டும்!
 அதற்குப் பிறகுதான் அது தாய்மொழியை வளர்க்கிறதா?! சமத்துவத்தைப் பேணுகிறதா?! பழமையை நிறுவுகிறதா?! பிற இனங்களுக்கு உதவுகிறதா? என்பதெல்லாம் கணக்கில் வரும்"
இதைவிட வேறொரு நன்மையும் இனத்திற்கு செய்துள்ளார்"

"அது என்ன?!"

 "வேறொரு இனத்தில் பிறந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். அவள் மூலம் பிறந்த அந்த நான்கு குழந்தைகளையும் தமிழினத்திலேயே மணம் முடித்துள்ளார்"

 "புரியவில்லையே?!"

 "அதாவது ஒரு பெண் மூலம் வேறொரு இனம் விருத்தியாவதை தடுத்து தன் இனத்தில் அந்த விருத்தியைக் கொண்டுவந்துள்ளார்.
 அந்த நால்வரும் அம்மாவழியில் திருமணம் செய்திருந்தால் அவரை நரகத்தில் போட்டிருப்பபேன்!"

 "என்றால் வேற்றின பெண்களை குறிவைக்க சொல்கிறீர்களா?!"

 "அட முட்டாள்! தமிழினத்தில் பிறந்த ஆணோ பெண்ணோ வேறு இனத்தில் திருமணம் செய்து தமது சந்ததிகளை தமிழினத்தில் மணமுடித்து அடுத்த சந்ததிகளை உருவாக்குவது இனத்திற்கு பெரிய நன்மை!"

 "தமிழ்த்தாயே நீங்கள் கூறுவது பூலோகத்தில் பலரும் தமிழ்தேசியம் என்றால் என்ன என்று கூறும் வரையறைக்கு மாறாக இருக்கிறதே?!"

 "தமிழ்த்தாயே எனக்கும் உங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஆசை! நான் இனத்திற்குள்ளேயே திருமணம் செய்துவிட்டேன்! அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் வயதையும் கடந்துவிட்டேன்! தமிழிலும் புலமை கிடையாது! நான் என்ன செய்ய?!"
 
 "இனப்பற்றோடு இரு! இன அரசியல் பற்றி அறிந்திரு! என்றாவது ஒருநாள் என் வயிற்றில் பிறந்த வீரமறவர்கள் இனம் காக்க வீறுகொண்டு எழுவார்கள்! அப்போது முடிந்தால் அவர்களுடன் சேர்ந்துகொள்! அல்லது முடிந்த அளவு உதவி செய்! நீ என்ன சாதியோ மதமோ எந்த நாட்டில் வாழுகிறாயோ அதையெல்லாம் இரண்டாம் இடத்தில் வை! நீ ஒரு தமிழன் என்ற இன உணர்வை முதல் இடத்தில் வை!
 எனக்கு ஆங்கிலேயர் போல உலகை தம் மொழியும் தம் இனமும் தம் மதமும் ஆள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை! 
 என் நிலத்தில் என் மக்கள் தனி நாடு அமைத்து பாதுகாப்பாக நிம்மதியாக வாழவேண்டும்!
 அவ்வளவுதான் என் ஆசை!

" இதை என்னால் முடிந்த அளவு மக்களிடம் கொண்டுசெல்கிறேன் அன்னையே! நன்றி!"


 

Saturday, 19 July 2025

வெட்டி முண்டம்

வெட்டி முண்டம்

 இது மதுவிலக்கு பற்றிய சிறுகதை! 
மதுப்பிரியர்கள் படிப்பது அவர்களது விருப்பம்!
போதை இறங்கிவிட்டால் நான் பொறுப்பில்லை! 

 இதோ நல்ல வெயில் காலத்தில் திங்கட்கிழமை மதியம் வயிறு முட்ட தின்றுவிட்டு நடு வீட்டில் செங்கல் தரையில்  தலையணை வைத்துக்கொண்டு  காற்றாடியை முழு வேகத்தில் வைத்துக் கொண்டு இடுப்பில் இருந்த லுங்கிக் கட்டை அவிழ்த்து மார்பு வரை மூடி  இணையத்தில் இலவசமாக தரவிறக்கம்  செய்த புதிய ஒரு திரைப்படத்தை சுவற்றில் மாட்டி இருக்கும் டிவியில் போட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் அடைத்து விட்டு சத்தத்தை அதிகமாக்கி பார்த்துக்கொண்டிக்கும் போதே தூங்கி கிடக்கும் இவர்தான் இந்த கதையின் நாயகர். 
 இவர் என்றா சொன்னேன் மன்னிக்கவும் இவன்!
 இவன் ஒரு வெட்டி முண்டம்.
 இவனுடைய அன்றாட வேலை காலையில் 9 மணிக்கு மிக நிதானமாக எழுந்து நிதானமாக காலை கடன்களை முடித்துவிட்டு நல்ல உடைகளை உடுத்திக் கொள்வான். குழந்தைக்கும் இவனுக்கும்  அவனது மனைவி எதாவது ஒரு பழத்தை மிக்சியில் நாட்டு சக்கரையுடன் அரைத்து கூழ் போல கொடுப்பாள். அதைக் குடித்துவிட்டு பனிரெண்டாயிரம் ரூபாய் செல்போன் (அதில் 5ஜி இன்டர்நெட்) பணம் நிரம்பி வழியும் பர்ஸ், ஆயிரம் ரூபாய் ப்ளூடூத் நெக் பேன்ட், கர்சீப் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு எப்போதுமே முழு டேங்க் பெட்ரோல் இருக்கும் பைக்கை வெளியே இறக்கி குழந்தையை ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு விட செல்வான். சாலை வழியே போகாமல் தெரு வழியே சுற்றி சுற்றி போவான். அப்போது குழந்தையுடன் பேசிக்கொண்டே போவான்.
குழந்தையை பள்ளியில் இறக்கி டாட்டா காட்டிவிட்டு நல்ல தேநீர் கடைக்குப் போய் ஒரு தேநீரை வாங்கி அமர்ந்துகொண்டு நிதானமாக ரொம்ப நிதானமாக குடிப்பான். வாட்சப்பில் பத்து  ஸ்டேடஸ் போடுவான். ஒரு பருப்பு வடை அல்லது பஜ்ஜி வாங்கிக்கொள்வான்.
 அருகிலிருக்கும் பெட்டிக் கடையில் வேர்க்கடலையோ, பிஸ்கட்டோ வாங்கிக்கொள்வான்! வெயில் காலம் என்றால் குளிர்பானம் ஒன்று வாங்குவான். வீட்டிற்கு வந்து பழைய சோற்றை மோரில் பிசைந்து இரண்டு வகை ஊறுகாய் வைத்து வீட்டில் செய்த வத்தல் மற்றும் வாங்கிவந்த வடையுடன் மிக நிதானமாக டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவான். இப்போது நேரம் பதினோரு மணி ஆயிருக்கும். பிறகு கடையில் போய் அமர்வான்.
இவன் வீட்டிற்கு முன்பக்கமே கடை வைத்திருக்கிறார்கள். இவனுடைய அம்மாவும் மனைவியும் கடையை நடத்தி வந்தார்கள். அந்த கடைக்கு பொருட்கள் வாங்கி வருவது அந்த இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நேரத்தில் கடையில் போய் அமர்வதை தவிர இவனுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. இதுவும் இவன் மாமனார் புண்ணியம். ஓரளவு வசதியான சமூகத்தில் ஆனால் தின்றுகெட்ட குடும்பத்தில் பிறந்தவன் இவன்!
  இவன் கடையில் இருக்கும் நேரத்தில் வெயில் ஏறியிருக்கும் கடைக்கு ஆட்கள் வருவதும் குறைவாக இருக்கும்!
கடையில் எவனாவது வந்து எதையாவது எடுத்துக்கொண்டு போனால் கூட தெரியாத அளவுக்கு விட்டால் செல்போனுக்கு உள்ளே விழுந்துவிடும்படியாக அதை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். சமூக வலைகளில் புரட்சிகரமாக எதையாவது எழுதி பத்து லைக் வாங்க முக்கிக்கொண்டு இருப்பான். ஆனால் அது எப்போதும் நடந்ததில்லை.
 சிறிது நேரம் கழித்து தேநீர் போடச் சொல்லி அதையும் வாங்கி குடிப்பான்.
வெயில் நன்றாக உச்சிக்கு வந்து இறங்கும்போது 3 மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிடுவான். நல்ல அரிசியில் சோறு, வீட்டில் அரைத்த மசாலாவில் குழம்பு, அதில் நிறைய காய்கறிகள், கடலை எண்ணெயில் கூட்டு, ஆம்லேட், வாசலுக்கு வரும் கெட்டியான மோர், வீட்டு வத்தல், இரண்டு சுவையில் குரு ஊறுகாய், சின்ன அப்பளம் இரண்டு என்று அரைமணி நேரம் நிதானமாக சாப்பிடுவான். முன்னொரு காலத்தில் வடக்கே நல்ல வேலை கிடைத்து அங்கே போய் கைநிறைய சம்பாதித்து பை நிறைய பணத்துடன் அரிசிச் சோற்றுக்கு சிங்கி அடித்த  அனுபவம் உள்ளதால் சோற்றின் அருமை அதுவும் வீட்டுச் சமையலின் அருமை அவனுக்குத் தெரியும். "சாப்பாட்டுக்கு செலவு பண்ணலைனா நோய்க்கு செலவு பண்ண வேண்டி இருக்கும்" என்பது இவன் அப்பாவின் வேதவாக்கு.
 இவன் அப்பாவை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இவன் ஒட்டுண்ணி என்றால் இவன் அப்பன் ஒரு பொணந்தின்னி. அதாவது தட்டில் ஒரு உயிரினம் செத்துகிடக்காவிட்டால் அவனுக்கு தொண்டையில் கடப்பாரை வைத்து இடித்தாலும் சோறு இறங்காது.
எதுவும் இல்லையென்றாலும் பத்துரூபாய் பாக்கெட் கருவாடை வாங்கி தோசைக்கல்லில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கருக்கியாவது கொடுக்கவேண்டும் அல்லது ஒரு முட்டையையாவது ஆப்பாயில் போட்டு வைக்கவேண்டும். தட்டு சுத்த சைவமாக இருந்தால் அவனுக்கு அவனுடைய  நாயைப் போலவே கோபம் வந்துவிடும். உடனே அந்த நாயைப்போலவே தட்டை தள்ளிவிட்டு நடுவீதியில் நின்று கத்துவான். குடிகாரனாக இருந்தாலும் கட்டிய மனைவி அவனை சகித்துக் கொண்டாள். காரணம் அவன் அப்பன் கடைசி வரை வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை. இல்லையென்றால் என்றோ பாயாசத்தைப் போட்டிருப்பாள். சரி! அவனது அப்பன் தின்று கெட்ட கதையை பிறகு பேசுவோம்! இப்போது கதையை விட்ட இடத்திற்கு வருவோம்! 
 நம் வெட்டி முண்டம் சாப்பிட்டுவிட்டு 4 மணிக்கு குழந்தையை அழைத்துவர போவான். மீண்டும் தெருவழியே சுற்றிக்கொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டே வரும் வழியில் பேக்கரியில் நிறுத்தி சாக்லேட்டோ அல்லது சிறிய விளையாட்டு பொருட்களோ வாங்கிக்கொடுப்பான்.
அப்படியே அவனும் தேநீர் குடிப்பான் அல்லது குளிர்பானம் குடிப்பான்.
 வீட்டிற்கு வந்ததும் கை கால் கழுவி லுங்கியை மாற்றிக்கொண்டு மெத்தையில் பல தலையணைகளை அடுக்கி ஒரு டேபிள் பேன், ஒரு சீலிங் பேன், ஒரு கூலர் என்று காற்றோட்டமாக  குழந்தையுடன் ஆனந்தமாக தூங்குவான்.
 அல்லது குழந்தைகளுக்கான படங்களை இணையத்தில் எடுத்து டிவியில் ஓடவிட்டு குழந்தை பார்க்க அவன் அருகிலேயே படுத்து தூங்கிவிடுவான்.
 மாலை 6 மணிக்கு தேநீர் போட்டுவிட்டு அவன் மனைவி எழுப்புவாள். எழுந்து கை,கால், முகத்தைக் கழுவிக்கொண்டு சூடான தேநீருக்குள் உள்ளூர் உற்பத்தியான கைசுற்று முறுக்கை உடைத்துப் போட்டு ஸ்பூனால் எடுத்து தின்றுகொண்டே மூவரும் குடிப்பார்கள். முறுக்கு தீர்ந்துவிட்டால் பிஸ்கெட் அல்லது குக்கரில் சூடான பாப்கான் செய்துகொள்வார்கள். மழை பெய்தால் இவனே இவன் கையால் மேகி செய்வான். மற்றபடி இவனுக்கு வெந்நீர் வைக்க கூட தெரியாது.
 6:30 மணிக்கு வண்டியை எடுத்துக்கொண்டு இவனது நண்பனின் மெடிக்கல்  கடைக்கு போவான். இவன் ஒரு வெட்டி முண்டம் என்றால் இவனது நண்பன் ஒரு வீணாப்போன தெண்டம். இருவரும் அங்கே அமர்ந்து இந்த உலகத்தை எப்படி திருத்துவது என்று விவாதிப்பார்கள். அப்படியே அங்கே அருகில் ஒரு கடை இருக்கிறது. இங்கே வாழைத்தண்டு சூப், முருங்கை கீரை  சூப், உளுந்தங்கஞ்சி, பருத்திப்பால், சுண்டல், களி என்று இயற்கையாக எதையாவது உள்ளே தள்ளிக்கொண்டே பேசுவார்கள்.
 அல்லது கொஞ்சம் தள்ளி ஒரு தள்ளுவண்டியில் சூப், குடல், காளான், சில்லி சிக்கன் என்று எதையாவது தின்பார்கள். நீள்வட்டத்தின் இரு மையங்கள் போன்ற இவர்களைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் இருந்தது.
 இருட்டும் நேரம் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தள்ளுவண்டியில் சூடாக தோலுடன் அவிக்கப்பட்ட வேர்க்கடலை வாங்கி தின்பார்கள் அல்லது சுக்கு காபி, சுண்டல் வாங்கித் தின்பார்கள். இப்போது அங்கே உலக பிரச்சனைகளுக்கு நூறு சதவீதம் சரியான தீர்வுகள் காணப்படும். 
  இருட்டிய பிறகு தேநீர் கடை சென்று சூடான பக்கோடா தின்றுகொண்டு தேநீர் குடிப்பார்கள். இது எல்லாவற்றுக்கும் இவன்தான் செலவு செய்வான்.
கடன் மட்டும் கொடுக்கமாட்டான். இவன் நண்பன் வீணாப்போன தண்டம் ஒரு நூறு ரூபாய் கடன் கேட்டதற்கு ஒரு வாரம் அவனை அன்பிரன்ட் செய்துவிட்டான்.  
 உலகத்தை திருத்திய பிறகு வீணாப்போன தெண்டம் மெடிக்கலில் இருந்து 8 மணி வாக்கில் கிளம்புவான். ஏடிஎம் இல் பணம் எடுத்துக்கொண்டு பெரிய கடைகளில் தன் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிகொண்டு பண்ணையில் பால் வாங்கிக்கொண்டு தின்ன இரண்டொரு பழங்கள் வாங்கிக்கொண்டு 9மணி வாக்கில் வீட்டுக்கு வருவான்.
 குழம்பை சுட வைத்து தோசை சுட்டு சட்னியும் வைத்து சாப்பிடுவான். ஒரு தோசைக்கு ஒரு கின்னம் குழம்பு குடிப்பான். அப்படியே ஒரு ஆப்பாயிலும் உள்ளே தள்ளுவான். வாரம் ஒருமுறை பரோட்டா, சால்னா, காடை, சில்லி சிக்கன் என வாங்கி வந்து தின்பார்கள்.
 பிறகு டிவியைப் போட்டுக்கொண்டு விளம்பர இடைவெளிகளில் செல்போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். 
 பத்து மணிக்கு மேல் வண்டியை உள்ளே எடுத்துவிட்டு கதவைப் பூட்டுவான். அனைவரும் படுக்கையில் படுப்பார்கள். மனைவியும் குழத்தையும் தூங்குவார்கள் இவன் படுத்துக்கொண்டே செல்லை நோண்டிக்கொண்டு இருப்பான். பனிரெண்டு மணிக்கு மேல் பாலை குடித்துவிட்டு பழம் சாப்பிடுவான். பிறகு மெல்ல தூங்கிவிடுவான். தூக்கம் வராவிட்டால் மனைவியை எழுப்புவான். அப்போதும் அவள் வெளியே எங்கேயாவது கூட்டிப்போ என்பதைத் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை. 
 இவன் வெளியே எங்கேயும் போகமாட்டான்.
பக்கத்து ஊருக்கு போகக்கூட மூக்கால் அழுவான். கேட்டால் இமயமலை உயரமே 9 கிலோமீட்டர்தான் என்பான்.
 9 மணிநேரம் தூங்கி 3 வேளை சாப்பிட்டு நினைத்தபோதெல்லாம் ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் நாக்கைத் தவிர எந்த உடல் பாகத்திற்கும் அதிக வேலை கொடுக்காமல் சுகபோகமாக வாழ்ந்துவந்த அவனது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் வந்தது. அவனது பெண் குழந்தை ஆளாகிவிட்டது. இப்பதானே நடக்க ஆரம்பித்தாள் என்று குழம்பி நின்ற அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள். மாமனாரும் மச்சான்களும் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தார்கள். அவன் மீது அனைவரும் கொஞ்சம் மரியாதை வைத்திருப்பது அவனுக்கு அப்போது தெரிந்தது.
சடங்கு வீட்டில் ஒப்புக்கு சப்பாணியாக சுற்றிக்கொண்டு இருந்தான்.  கடைசியில் கணக்கு பார்க்கும்போது செலவை விட வரவு அதிகமாக இருந்தது .  பெரிய திருப்பம் என்று நினைத்தது சிறிய திருப்பம் ஆகிவிட்டதால் அவன் பழையபடி வெட்டி முண்டமாகவே வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தான்.  அன்று இரவு அவனது மாமியாரும் மனைவியும் பேசிக்கொண்டனர். அவனது மாமியார் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டார். தன் கணவனைக் குறைகூறியதும் பொறுக்க முடியாத அவன் மனைவி "என் புருசன் குடிப்பதில்லை! ஒழுங்கா இருக்காரு! இதுக்கு மேல என்ன வேணும்?!" என்று சினந்தாள்.
 இந்த கதை மூலம் இதை எழுதியவர் இந்த உலகத்துக்கு சொல்ல வருவது என்னவென்றால் குடிப்பழக்கம் இல்லாதவன் பத்த பைசா பேறாத வெட்டி முண்டமாகவே இருந்தாலும் மதிக்கப்படுவான்!
ஆக இதுதான் அந்த மதுவிலக்கு சிறுகதை!
 பெரிதாக எதிர்பார்த்தவர்கள் மன்னிக்கவும்! 
கடைசியாக ஒரே ஒரு பஞ்ச் டயலாக்!
 குடிப்பவனுக்கு குடி மட்டும்தான் போதை! 
குடிக்காதவனுக்கு வாழ்க்கையே போதை! 

Friday, 18 July 2025

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

தமிழ்நாடு பெயர்மாற்றமும் அண்ணாதுரையும்

*1920 இல் காங்கிரஸ் கட்சி 'அமையவுள்ள தங்களது ஆட்சியில் மொழி உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்' என்று உறுதியளித்து அதற்கு முன்மாதிரியாக கட்சி கட்டமைப்பை மொழிவாரி கிளைகளாக மாற்றி அமைத்தது.
 அப்படி அமைந்ததே 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி' எனும் கிளை (அதாவது தமிழ்நாடு என்பதே மக்கள் இயல்பாக பயன்படுத்திய சொல்.
 மக்கள் ஆதரவைப் பெற இதைச் செய்த அதே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு மொழிவாரி உரிமைகளை தர மறுத்தது).

*  1920 இல் காங்கிரசின் இந்த கொள்கையை ஏற்று தீவிர காந்தி பக்தரான வரதராஜுலு நாயுடு "தமிழ்நாடு" எனும் காங்கிரஸ் ஆதரவுப் பத்திரிக்கையைத் தொடங்கி 1931 வரை நடத்தினார் (1925 இல் தமிழ்நாடு காங்கிரசுக்கு இவர் தலைவரானார்).

*1942 இல் 'தமிழ் ராஜ்யம்' என்ற பெயரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனர் நூல் ஒன்று வெளியிட்டார்.
 அதில் இருந்த வரைபடத்தில் அன்றைய மதாராஸ் மாகாண தமிழர் பெரும்பான்மை மாவட்டங்கள், பாண்டிச்சேரி காரைக்கால், திருவனந்தபுரம் உள்ளடக்கிய குமரி, இலங்கையின் வடபகுதி எல்லாம் இருந்தது (பார்க்க: படம்).

* குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய போராளிகளை 'தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில்' சேர்க்க முடியாது என்று காமராஜர் துரத்திவிட்டார்.
 இதையடுத்து 1945 இல் குமரித் தமிழர்கள் சாம் நத்தானியேல் நாடார் தலைமையில் காங்கிரசில் இருந்து பிரிந்து தொடங்கிய கட்சி  1946 இல் 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்று பெயர்மாற்றப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயரில் இருந்த முதல்  கட்சி இதுவே (தமிழ்நாடு என்பதே இயல்பான பெயராக அப்போதும் விளங்கியது).

* 1947 இல் தமிழர் கழகம் எனும் கட்சி தொடங்கி 'தமிழர் நாடு' எனும் பெயரில் பத்திரிகையும் தொடங்கினார்  'முத்தமிழ் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை 

 *1953 இல் மதராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட மேலவையில் முதன்முதலாகப் பேசினார் ம.பொ.சி  (ஆனால் 1953 இல் 'ஆந்திர ராஜ்யம்' உருவாகிவிட்டது. 1956 இல் 'ஆந்திர பிரதேசம்' ஆனது).

* 1955 இல் ம.பொ.சி தனது தமிழரசுக் கழக செயற்குழு கூட்டத்தில் தமிழர் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்மொழிந்தார்.

 * 1955 இல் சட்டசபையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "தமிழ் ராஜ்யம்" என்று பெயரிடுமாறு குரல் கொடுத்தார்.
தனது பத்திரிக்கையிலும் தொடர்ந்து எழுதினார்.

* 1956 இல் 'மதராஸ் மாகாணம்' அதே பெயரால் 'மதராஸ் மாநிலம்' ஆனது.
'மதராஸ்' என்ற பெயருக்கு பதிலாக 'தமிழ்நாடு' என்று பெயரிட சங்கரலிங்க நாடார் உண்ணாவிரதம் இருந்தார்.

* காமராசர் பாராமுகமாக இருக்க 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபரில் அவர் இறந்தார்.
அதற்குப் பிறகு 42 நாட்கள் கழித்து சட்டமன்றத்தில் பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காமராசர் அதைத் தள்ளுபடி செய்தார்.

* 1960 இல் ம.பொ.சி தலைமையில் மீண்டும் பெயர்மாற்றத்திற்கான மக்கள் திரள் போராட்டம் நடந்தது.
இதில் அண்ணாதுரை கலந்துகொண்டதோடு சரி.

* 1961 இல் சின்னதுரை கொண்டுவந்த தீர்மானத்தில் மதராஸ் மாகாணம் தமிழில் எழுதும்போது 'தமிழ்நாடு' எனவும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் எழுதப்படும் என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை 'தமிழ்நாடடின் நிதிநிலை அறிக்கை' என்ற பெயரிலேயே தாக்கல் செய்து வாசித்தார்.

அதாவது பாதி வெற்றி அடைந்த இந்த நிலையில்தான் அதுவரை வேடிக்கை பார்த்த ('திராவிட நாடு' பத்திரிக்கை நடத்திவந்த) அண்ணாதுரை இதில் நுழைகிறார்.

இதற்குக் காரணம் அண்ணாதுரை 1962 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தான் பிறந்த மண்ணான காஞ்சிபுரத்திலேயே மண்ணைக் கவ்வினார்.

அப்போது மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்திற்கு இருக்கும் பரவலான ஆதரவை கவனித்து மக்கள் கவனத்தைப் பெற இந்த விடயத்தில் பங்கெடுக்கிறார் அண்ணாதுரை.

* 1962 இல் காமராசர் ஆட்சியில் பெயர்மாற்றத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது.

* 1963 இல் இந்திய பாராளுமன்றத்தில் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு குரல்கொடுத்து தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவர் இப்பெயர்மாற்ற போராட்டத்தில் செய்த குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு ஆகும்.

* பிறகு 1964 இல் பக்தவச்சலம் ஆட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு மீண்டும் நிறைவேறாமல் போனது.

* அதற்கடுத்த இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில காங்கிரஸ் அரசுகள் செய்த அடக்குமுறைகள் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி 1967 ஏப்ரலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க காரணமானது.

(இந்தியெதிர்ப்பு போராட்டமும் இவ்வாறே!
அதாவது சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்று நடத்தியதே.
அண்ணாதுரை பங்கு அதிலும் பெரிதாக ஏதுமில்லை.
ஈவேரா ஒரு படி மேலே போய் போராடும் மாணவர்களை சுடச்சொல்லி எழுதிவந்தார்)

* ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கழித்து 18.7.1967 அன்று சட்டமன்றத்தில் அண்ணாதுரை பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அது ஏகமனதாக நிறைவேறியது.
 அன்று அண்ணாதுரை பேசியதைக் கவனிப்போம்...
"மதிப்பு மிக்க திரு. ம.பொ.சி அவர்கள் இதிலே மிகுந்த மன எழுச்சி பெற்றது இயற்கையானதாகும். அவர்கள் பல ஆண்டுகளாக 'தமிழ் நாடு' என்ற பெயர் இந்த நாட்டுக்கு இடப்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு பாடுபட்டவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே “திராவிட” என்பதை நினைத்துக் கொண்டிருப்பதாலே "தமிழ்நாடு" என்பதிலே அக்கரை இல்லாமல் போய்விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் ‘தமிழ்நாடு' என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திக்கொண்டு வந்திருக்கிறோம்."

அதாவது ம.பொ.சி பாடுபட்டார், திமுக வலியுறுத்தியது.
 இதிலிருந்து இது யாருடைய போராட்டம் என்பது தெளிவாகப் புரிகிறது அல்லவா?! 

* ஓராண்டு கழித்து 1968 ஆண்டுக் கடைசியில் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.

* 14.01.1969 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் அண்ணாதுரை புகையிலைக் குதப்பும் பழக்கத்தால் வந்த புற்றுநோயினால் உயிரிழந்தார்.

ஏதோ அண்ணாதுரை சாகும்வரை போராடி பெயர்மாற்றம் கொண்டுவந்தது போல புனைக்கதைகள் எழுதப்படும் அதே வேளையில்
"தமிழ்நாடு" என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்க நாடாரை 'பெயர்மாற்ற விழா' அன்று நினைவுகூர்ந்ததோடு சரி அதன்பிறகு இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

  தமிழ்நாடு என்ற பெயரை முன்மொழிந்து போராட்டம் நடத்தி சாதித்துக் காட்டிய ம.பொ.சி கூட பிற்பாடு மெல்ல மெல்ல இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்.

 இன்று தமிழ்நாடு என்ற பெயரை உருவாக்கியதே அண்ணாதுரைதான் என்றும் அவர் இல்லாவிட்டால் நாம் 'மதராசி'களாக இருந்திருப்போம் என்றும் திராவிடவாதிகள் பேசுவதைப் பார்க்கிறோம்.

அண்ணாதுரைக்குப் பிறகும் இவர்களின் லட்சணம் (செயலழகு) எவ்வாறு என்றால்,

* கால் நூற்றாண்டு கழித்துதான் 1996 இல் மதராஸ் சென்னை ஆனது.

* (பிற மாநிலங்கள் போல அல்லாமல்) தமிழகத்தின் உயர்நீதி மன்றம் தமிழில் "சென்னை உயர்நீதிமன்றம்" ஆங்கிலத்தில் "மதராஸ் ஹைகோர்ட்" என்றே இன்றுவரை உள்ளது.
"தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம்" என்று இல்லை

* பிற மாநிலங்கள் தமது மாநிலத்தின் பெயரிலேயே தலைமைப் பல்கலைக்கழகம் வைத்துள்ளன.
ஆனால் இன்றுவரை தமிழகத்தின் தலைமைப் பல்கலைக்கழகம் "அண்ணா பல்கலைக்கழகம்" என்றே உள்ளது. 
"தமிழ்நாடு பல்கலைக் கழகம்" என்று இல்லை.
 இதிலும் ஒரு சதி 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' என்பதை சுருக்கி 'அண்ணா பல்கலை' என்று அண்ணாதுரையைக் குறிக்கும் வகையில் திரிக்கின்றனர். 

 அண்ணாதுரையும் தமிழுக்கோ தமிழருக்கோ செய்தது ஏதுமில்லை!  

(23.08.2018 மற்றும் 31.10.2021 பதிவுகள் இணைத்து மேலதிக தரவுகள் சேர்த்தது இப்பதிவு)

Wednesday, 16 July 2025

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை

 ஈ.வே.ரா தன் வாழ்நாளில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் இருந்தார் என்றால் அது அவரது பெண்களைப் பற்றிய நிலைப்பாடுதான்!

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.
- "குடியரசு' (6.4.1930)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)

---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது. பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும்.  பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்."
- ஈ.வே.ரா (நூல்: உயர்ந்த எண்ணங்கள்) 
----------------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக் கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
ஈவேரா சொன்னவற்றை சுருக்கமாகச் சொன்னால்
 "ஒரு பெண் திருமணம் செய்யாமல் குழந்தை பெறாமல் வாழவேண்டும் அதுதான் பெண் சுதந்திரம்" 

06.09.2017 அன்றைய முகநூல் பதிவை மேம்படுத்திய பதிவு 

Tuesday, 15 July 2025

காமராஜரை 6 முறை பெண்ணாக வரைந்த கருணாநிதி

காமராஜரை 6 முறை பெண்ணாக வரைந்த கருணாநிதி 

 காமராசர் வாழ்நாளில் அவரை அதிகம் இழிவு படுத்தியவர் கருணாநிதி!
 தனது முரசொலி பத்திரிக்கையில் அட்டைப் படமாக தொடர்ந்து காமராசர் பற்றி கேலிச்சித்திரம் வரைந்து கேவலப்படுத்தி வந்தார்.
 அதிலும் அவரது வக்கிர புத்தி  உச்சகட்டமாக காமராசரை ஆறு தடவை பெண் உருவத்தில் வரைந்து பிற அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக சேர்த்துவைத்து வரைந்துள்ளார்.

ரிசானா நிமிஷா வேறுபாடு

 ரிசானா நிமிஷா வேறுபாடு

  ஏமனில் ஒரு மலையாள பிராடு !
அவளுடைய லோக்கல் கூட்டாளியை கொன்றுவிடுகிறாள்! 
 மரண தண்டனை அடைகிறாள்!
 அவளைப் பற்றி தெரிந்தும் 8.5 கோடி திரட்டி நட்ட ஈடு அளித்து அரும்பாடு பட்டு இன்று கடைசி நிமிடத்தில் மரண தண்டனையில் இருந்து அவரைக் காப்பாற்றிய மலையாளிகள் எங்கே?!

 17 வயது ஈழத்து சிறுமி ரிசானா!
 25 வயது என பொய் சொல்லி சவுதி க்கு வீட்டுவேலைக்கு போன இடத்தில் தவறுதலாக உணவு கொடுத்து ஒரு 4மாத கைக்குழந்தை இறந்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து 2013 இல் நடுத்தெருவில் தலையை வெட்டி கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்த நாம் எங்கே?!