Sunday, 14 December 2025

செங்கோட்டை சபிக்

 செங்கோட்டை சபிக் 

 செங்கோட்டை யில் கன்னட கொடியுடன் வலம் வந்த வண்டியை மறித்து கொடியை அகற்ற வைத்த நாம் தமிழர் மூத்த நிர்வாகி அண்ணன் முகமது சபிக் அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டார்.

 தென்காசி பொறுப்பாளர் வின்சென்ட் அவர்கள் பிணை எடுக்க ஆவன செய்துள்ளார்.
 இவ்வழக்கில் மேலும் சேர்க்கப்பட்டவர்கள் செங்கோட்டை பகுதி நிர்வாகிகள் காமராசு மற்றும் ஜெயசெல்வன் ஆகியோர் ஆவர்.
 (அதாவது ஒரு இசுலாமியர், ஒரு தேவேந்திரர், ஒரு கிறித்தவ நாடார்) 
 
 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் செங்கோட்டை பகுதி  பொறுப்பாளர்கள் மற்றும் கடையநல்லூர் நிர்வாகிகள் என 8 பேர் அண்ணன் சபிக் அவர்களது இல்லம் சென்று சிறிதளவு நிதி உதவி செய்துவிட்டு நாளை மறுநாள் பிணை கிடைத்துவிடும் என்று தைரியம் சொல்லிவிட்டு வந்தோம்.
 பிணையும் கிடைத்துவிட்டது.
 
 பி.கு: சமூக வலைகளில் இச்செய்தி பரவியதே கைதுக்கு காரணம் என்பதால் இச்செய்தி ஒரு வாரம் தாமதமாக பகிரப்படுகிறது 

 


 

Friday, 12 December 2025

தெலுங்கர் போல இனப்பற்று நமக்கு இல்லையே என்று புலம்பிய பாரதியார்

 தெலுங்கர் போல இனப்பற்று நமக்கு இல்லையே என்று புலம்பிய பாரதியார்

"சென்ற வெள்ளிக்கிழமை (1917) சூன் 1 யன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் சபாநாயகர் ஸ்ரீவெங்கடப்பய்ய பந்துலு செய்த உபந்யாஸம் கவனிக்கத் தக்கது.

ராஜநீதி சாஸ்த்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார்.
பாடலிபுத்ர நகரத்தில் நடந்த ஆந்திர ராஜ்யமும் பிற்காலத்தில் தமிழ் நாட்டைக் கட்டியாண்ட விஜயநகரத்து ராஜ்யமும் கீர்த்தி மிகுந்தனவன்றோ?
தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள் நமது பாஷையிலும் ஆகாராதிகளிலும் அழிக்க முடியாதபடி பதிந்து கிடக்கின்றன.
நமது ஸங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்றுவரை முழுகிக் கிடக்கின்றன.
பாடகர்கள் பாடும் கீர்த்தனங்கள், தாசிகள் ஆட்டத்தில் பாடும் வர்ணங்கள் ஜாவளிகள் முதலியவற்றில் நல்ல உருப்படியெல்லாம் தெலுங்கு.

நமது கிராமங்களிலுள்ள தெலுங்க ரெட்டிகளும், நாயுடுமாரும், ஆந்த்ர பிராமணப் புரோகிதர்களும், தெலுங்கு தாசிகளும் ராயர் சம்ஸ்தான காலத்தில் இங்கே உறுதி பெற்றவர்கள்.
நமது விவாக காலங்களில், பாடும் பத்யம், லாலி முதலானதெல்லாம் தெலுங்கு முறை.

நமது பாஷையில் "கவனம்", (ஆழ்ந்து நோக்குதல்) "ஜொகுஸு", "எச்சரிக்கை", "துரை", "வாடிக்கை", "கொஞ்சம்" முதலிய பதிற்றுக்கான தெலுங்குச் சொற்கள் சேர்ந்திருக்கின்றன.
இக்காலத்திலும் கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழரைக் காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவ்ர புத்தி செலுத்துகிறார்கள்.

ஆனால் நமக்குள் ஜாதி பேதமிருக்கிறது என்றால் ஜாதிபேதம் இந்தியாவில் மாத்திரமில்லை.
உலகத்தில் எல்லா தேசங்களிலும் இருக்கிறது.
இந்தியாவில் கொஞ்சம் தீவ்ரமாகவும், விநோதமாகவும், மாற்றுவது கஷ்டமாகவும் இருக்கிறது.
இப்போது பூமி முழுவதிலும் நடந்து வரும் மஹாப்ரளயத்தில் (உலகப்போர்) இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாய்ப் போய்ப் புதிய மாதிரி உண்டாகும்.

இதுவெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்றால், தமிழ்நாட்டு ஜனங்கள் வீண் சண்டைகளிலே பொழுது போக்குகிறார்கள்.
தெலுங்கர் ஜனபிவிருத்திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்தி வருகிறார்கள்.

சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு பங்கு கூடத் தமிழ் ஜனங்களிடம் இல்லை.

சென்ற வெள்ளிக் கிழமையன்று கூட மேற்படி நெல்லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தே மாதரம் என்ற கோஷம் அபரிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது.

கொஞ்ச காலத்துக்கு முன்பு கூட நெல்லூரில் கூடிய மாஹானசபையில் 'வந்தே மாதரம்' பாட்டுக் கூடப்பாடவில்லையென்று கேள்விப்பட்டேன்.

தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபை கூட அப்படி நடந்திராது.

இது நிற்க, மேற்படி சபையில் ஸ்ரீ வேங்கடப்பய்யா சபாநாயகராகப் பேசிய வார்த்தையின் ஸாரம் பின் வருமாறு:

1. தெலுங்கு தேசத்தைத் தனி மாகாணமாகப் பிரிக்க வேண்டும்.

2. இந்தியாவுக்குத் தன்னாட்சி கொடுக்க வேண்டும்.

3. இயன்ற வரை, இந்தியா முழுவதையும் பாஷைகளுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாணமாக்க வேண்டும்.
அதாவது மதராஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றி
தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மாராட்டிய நாடு, கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்கநாடு என்று பாஷைக்கிரமப்படி வகுக்க வேண்டும்.

4. ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய்விக்க வேண்டும்.
ராஜ்ய காரியங்களும் இயன்ற வரை ஸ்வபாஷையில் நடக்க வேண்டும்.

மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்றாவது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி;
இரண்டாவது மற்றொரு பகுதி.
இரண்டாவது தாய்ப்பகுதி;
மற்றவை கிளைப் பகுதிகளாகும்.

என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கொண்ட கொள்கை யெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது.

மேலும், தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை.

தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.

பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக்கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி.

தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி.

தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய் மொழியிலும், திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை."

மேற்படி கட்டுரை சுதேசிமித்திரனில் 9.6.1917இல் 'தெலுங்க மஹா சபை' எனும் தலைப்பில் 'சக்தி தாஸன்' எனும் புனைப்பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.
சேர,சோழ, பாண்டிய மூவேந்தரின் தமிழர் ஆட்சிக்கு பிறகு விசய நகரப் பேரரசு தமிழகத்தில் நிலை கொண்டது. பிரித்தானியர் ஆட்சியிலும் கூட தெலுங்கரின் ஆதிக்கம் தமிழகத்தில் ஓங்கி வளர்ச்சி பெற்றது. அதன் மூலம் தமிழர் பண்பாட்டிலும், மொழியிலும் சில கலப்புகள் நிகழ்ந்தது. அதுமட்டுமின்றி, அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழர்களுக்கு இன உணர்ச்சி ஏற்படுவதற்கு முன்பே 1912இல் தெலுங்கர்கள் 'ஆந்திர மகாசபை' அமைத்து தெலுங்கு இன உணர்ச்சி வளர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியதோடு மொழிவழி அடிப்படையில் மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால் மிகத் தாமதமாகவே இக்கோரிக்கையானது 1938இல் இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழர்களிடத்தில் ஏற்பட்டது. அதுவும் கூட 1939க்குப் பிறகு 'திராவிட நாடு' பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்
டது. தற்போது தமிழர்கள் முகத்தில் திராவிட, இந்திய முகமூடிகள் மாட்டப்பட்டு விட்டது. இவ்விரண்டையும் கழற்றி எறியாத வரை தமிழர்களுக்கு எப்போதும் வாழ்வில்லை என்பதைத்தான் சுப்பிரமணிய பாரதியாரின் கட்டுரை நமக்கு உணர்த்துகிறது. சுப்பிரமணிய பாரதியாரின் வரலாற்று வழியில் தவறாக புரிந்து கொண்ட இந்து மதக் கண்ணோட்டத்தை புறந்தள்ளி விட்டு அவரின் மொழிவழி தேசிய இனங்களின் சமத்துவ சிந்தனையை ஒவ்வொரு தமிழரும் ஏற்றிப் போற்றிடுவோம்!

பதிவர் : Kathir Nilavan
பதிவு நாள்: 06.11.2016
தெலுங்கனுக்கு உள்ள இன உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே...!
பாரதியார் வேதனை!

தமிழரல்லாதார் ஆட்சிஅம்பலப்படுத்திய பாரதியார்


தமிழரல்லாதார் ஆட்சி
அம்பலப்படுத்திய பாரதியார்

1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி
மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது,

  "புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்த
பிராமணரும்-பஞ்சமரும்-ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள்,
தமிழரும் அல்லாதார் என்று
ஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும்! இந்த பாஷை சரிப்படாது.

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்.

தமிழ் வேளாளர் ஒருவர்,
இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும்
ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும்
தெலுங்கர்கள் என்றும்
தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும்
என்னிடம் வந்து முறையிட்டார்"

(பாரதி தமிழ்: பக்.403)

 06.11.2016

Tuesday, 18 November 2025

இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்


இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
16.10.2017

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பனிகடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
- முல்லைப்பாட்டு 1-6

இப்பாடலில் மேகத்தின் இயக்கம் அறிவியல் முறையில் விளக்கப்பட்டுள்ளது.  
கடலில் நீர் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது நெடுந்தொலைவு பயணித்து மலையில் தங்கி பெருமழையை பொழிந்தது
------------------

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே
- அகநானுறு183

குளிர்ந்த கடலில் நீரை மேகங்கள் குடிப்பது பற்றி வருகிறது
-----------

இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
- நற்றிணை 329:11

கருமையான வானம் பெரும் சத்தத்துடன் இடி இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்துவரும் கார்காலம்.
(அதாவது மேகம் கடலில் இருந்து நீரை எடுத்து மழையாக பொழியும் மழைக்காலம்)
---------------

மின்னு வசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
- நற்றிணை 228:1

மின்னலுடன் முழங்கும் பெரும் சத்தத்துடன் நீர் நிறைந்த மேகம்  பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையை கண்தெரியாத இருளடைந்த நடு இரவில் பொழியும்.
--------------------

இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர்
- நற்றிணை 115:3

மேகங்கள் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு, எஞ்சிய கடலின் நீர் சிறிது என்னும்படி கொணர்ந்தன.

(இது கடல் நீரை மேகங்கள் கொள்வதை சற்று மிகைப்படுத்திக் கூறுகிறது.
அதாவது பாதிக்கும் மேல் உறிஞ்சிவிட்டதாம்!)
-----------

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே
- ஐங்குறுநூறு 492

மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை கூறுகிறது
-----------

மேகங்களின் நகர்வு பற்றியும் குறித்துள்ளனர்,

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்
- ஐங்குறுநூறு 469

பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ
- அகநானூறு 840

கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
- நற்றிணை 140

கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
- அகநானூறு 43

போன்ற பாடல்கள் கடலில் உருவான மழைமேகம் மேற்கு நோக்கி (வலப்பக்கமாக) நகர்வதாக குறித்துள்ளனர்.
அதாவது வடகிழக்குப் பருவக்காற்று பற்றி கூறப்பட்டுள்ளது.
--------------

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து
- நற்றிணை 289

கடல் நீரைக் குடித்து செறிவு (அடர்த்தி) அதிகமான மேகம் மழை பொழிவதாகக் கூறுகிறது இப்பாடல்
-------------

கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
- குறுந்தொகை - 287

அதாவது நிறைமாத சூலி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கி செல்கின்றன என்று கூறுகிறது.
----------

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
- நற்றிணை 261

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
- பதிற்றுப்பத்து 12

மேகங்கள் மலையில் மோதி மழைபொழிவதைக் கூறுகிறது
----------

பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
- அகநானுறு 217

பெய்து தீர்த்த மேகம் வெண்மையான மென்பஞ்சுபோல ஆகிவிடும் என்று கூறுகிறது.
-----------

மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சங்ககாலத்திலேயே தமிழர்கள் அனைவரும் மழை எவ்வாறு பொழிகிறது என்று அறிந்திருந்ததை உணரமுடிகிறது.

பெயிலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பிற் றுவலை கற்ப
- நெடுநெல்வாடை 20

மழை பெய்துவிட்ட வெண்மையான மேகம் மேலெழுந்து சாரலை ஏற்படுத்துவது பற்றி வருகிறது
-----------------------

மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,

பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
சிறு நுண் ணெறும்பின்
- புறநானூறு 173

எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்
-----------

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
- புறநானூறு 35:7

தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
- புறம் 117:2

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவில்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
- பட்டினப்பாலை 1-6

மேற்கண்டவை உணர்த்தும் பொருள் யாதெனில்,
வானத்தில் வெள்ளி கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும்
தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும்
(ஆனாலும் காவிரி பொயக்காது)
----------
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
- பதிற்றுப்பத்து 13:25

செவ்வாய்க் கோள் சென்ற வழியில் வெள்ளி கோள் செல்லாததால் மழை தேவையான இடங்களிலெல்லாம் உன் நாட்டில் மழை பெய்கிறது.
(அதாவது வானில் கோள்கள் நகர்வு மூலம் மழையை கணித்துள்ளனர்)
----------

பழமையான மொழியான தமிழில் அறிவியல் இல்லை என்று சில பிறமொழி வந்தேறிகள் பிதற்றுகின்றனர்.

மேலே உள்ள மழை பற்றிய குறிப்புகள் மட்டுமே.
இதேபோல பல்வேறு விடயங்களை தமிழ் இலக்கியம் அறிவியல் பார்வையுடன் பதிவுசெய்துள்ளது.

வேறு எந்த மொழியினது தொடக்ககால இலக்கியத்திலும் இத்தகைய அறிவியல் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.

பட்டியல்சாதி ஐயங்கார்

பட்டியல்சாதி ஐயங்கார்

 அந்த ஐயங்காரின் பெயர் மானாமதுரை கிருஷ்ணசாமி. பெரிய வக்கீல். 
காந்தியின் சீடர்.  
ராஜாஜியின் நண்பர். 
காமராஜருக்கு ஆலோசகர்.  
மதுரை வைத்திய நாத ஐய்யருடன் திருக்குலத்தார் மீனாட்சி ஆலய பிரவேசம் செய்ய உடன் நின்றவர். 
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கோயில்களை சர்.சி.பி ராமாசமி ஐயர் எல்லோருக்கும் திறந்து விட்ட பின், தன் ஊரில் இருந்து திருக்குலத்தாரை தன் சொந்த செலவில் அங்கு சென்று ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தவர். 
மானாமதுரையில் ஹோட்டல்களில் எல்லோரும் சென்று சாப்பிட போராடி வழி செய்தவர். 
சுதந்திர இந்தியாவில், முதல் தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக (MLA) இருந்தவர். 
தன்னிடம் கொடுக்கப்பட்ட காரை விற்று அரிஜன சேவைக்கு பயன் படுத்தியவர். 
கோயில் தர்ம கர்த்தாக்கள் நியமனத்தில் திருக்குலத்தாரையும் சேர்க்க பாடுபட்டவர். அவர்களுக்கு அர்ச்சகர் பதவி கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர். 
அரசியலில் பணம் ஏதும் சம்பாதிக்காதவர். அதனால் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வழியில்லாமல் இருந்தவர். 
 அவரது மகன் ஒரு அதிகாரியாகி அவரைப் பார்க்க வருகிறார்.
இவர்  திருக்குலத்தில் பிறந்தவர். 
இவரை ஐயங்கார் சிறு வயதிலேயே தன்வீட்டில் சேர்த்துக் கொண்டு, ஊரைப் பகைத்துக் கொண்டு, பள்ளிக் கூடத்தில் சேர்த்து, ராஜாஜியின் உதவியுடன் கல்லூரியில் சேர்த்து ஆளாக்கி மத்திய அரசில் பெரிய பதவியில் உட்கார செய்தார். 
அவரின் திருமணத்தையும் தானே முன் நின்று நடத்தி வைத்தார். 
அந்த தத்து புத்திரன் தான் தற்போது பெரிய அதிகாரி. அவர்  பெயர் சம்பந்தம். 
திரு் சம்பந்தம் தன்னை ஆளாக்கிய தந்தையைப் பற்றி எழுதிய பழைய நூலை வைத்து கன்யூட்ராஜ் என்பவர் எழுதிய புனைவிலக்கியம் (நாவல்) தான் 'அரிஜன ஐங்கார்" எனும் படைப்பு. 
இவரைப் போன்றோருக்கு சிலை ஒன்று அவர் ஊரில் கூட இல்லை!
அவர் போட்டோவை இணையத்தில் தேடினேன். 
இல்லை. 

பதிவர்:- Ganesh Lakshminarayanan

Thursday, 6 November 2025

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

வானொலி யில் நிலவிய தெலுங்கு ஆதிக்கம்

ஆந்திரம் பிரிந்து ஒரு மாதம் கடந்து விட்டது.
ஆனால் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல் தெலுங்கு மொழி இன்னும் நமது ராஜ்ய ரேடியோ நிலையத்திலிருந்து ஒழியவில்லை.
காலையில் எழுந்து ரேடியோவை திருகினால் நாம் கேட்கும் மொழி தெலுங்காகத்தான் இருக்கிறது.
தமிழில் பாடகர் பாடினாலும் இன்னார் இன்ன ராகம் இன்ன தாளத்தில் பாடுகிறார் என்பதை தெலுங்கில் தான் சொல்லுகிறார்கள்!
பாடகர்களிலும் பெரும்பாலோர் இன்னமும் தெலுங்கில் பாடுவதை விட்டதாக தெரியவில்லை.
ரேடியோ நிலைய அதிகாரிகள் வெறும் தமிழ் மட்டும் பாடுபவர்களை தரக்குறைவாக நடத்துகிறார்களாம்!
தெலுங்கிலும் பாடாவிட்டால் பாட அனுமதிக்க முடியாது என்று மிரட்டுகிறார்களாம்!
ஆந்திரம் பிரியும் முன்னர்  இந்த நிலையில் இருந்த்தை நாம் ஓரளவு சகித்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் ஆந்திரம் பிரிந்த பின்பும் அதே நிலை தான் என்றால் இப்படி ஒரு ரேடியோ நிலையம் அவசியம் தானா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் வேதனையுடன் தலைத் தூக்கி நிற்பது நியாயமே.
ஆந்திரர்களுக்கு விஜயவாடா ரேடியோ நிலையம் தனியாக இருக்கிறது.
செகந்திராபாத் ரேடியோ நிலையமும் முழுக்க ஆந்திர மயமே. அப்படி இருக்க தமிழ் ராஜ்ய ரேடியோ நிலையமும் தெலுங்கு மயமாகத்தான் இருக்க வேண்டுமா?!
விஜயவாடா ரேடியோ நிலையத்தில் தெலுங்கு பாடகர்கள் தமிழ் பாட்டுகளாக பாடிக் கொண்டிருந்தால் ஆந்திரர்கள் சும்மா இருப்பார்களா?!
தமிழர்கள் ஆந்திரர்களைப் போன்று வெறி பிடித்தவர்களாக இருக்க வேண்டாம் ஆனால் தங்கள் தாய்மொழி பற்றை கூடவா விட்டு விட வேண்டும்?!  சென்னை ரேடியோ நிலையத்தில் சினிமா ரிக்கார்டுகள் ஒளிபரப்பும் நேரத்தில் இந்தி ரெக்கார்டு போடுவதைப் போன்று தெலுங்கு ரெக்கார்டுகளையும் போட்டு தொலைத்து விட்டு போகட்டும்!
நாம் அக்கறைப்படவில்லை!
ஆனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முக்கால்வாசிக்கு மேல் தெலுங்கு மயமாக இருப்பதை உணர்ச்சி உள்ள தமிழர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை!
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிக்க வேண்டும் இல்லை என்றால் 'தெலுங்கு ஒளிபரப்பு எதிர்ப்பு இயக்கம்' தமிழர்களால் தொடங்கப்பட நேரும்.
இதற்கு அறிகுறியாக இப்பொழுது தமிழ் ராஜ்யத்தில் ரேடியோ பெட்டி வைத்திருப்போர் தங்கள் தங்களின் அதிருப்தியை ரேடியோ நிலைய அதிகாரிகளுக்கும் மத்திய அரசாங்க மந்திரி அகர்வாலுக்கும் நமது ராஜ்ய மந்திரி சபை பிரச்சார இலக்காவிற்கும் மகஜர் மூலம் தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி பாகுபடற்ற முறையில் தமிழர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை நேரிய முறையில் ஆட்சியாளருக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்!
தமிழகத்தில் எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் இது பற்றி தீர்மானம் நிறைவேற்றி ஆட்சி பீடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்!
தமிழ் ராஜ்யத்திலேயே தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதை தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க முற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
இசைத்தமிழ் தழைக்க, தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழகத் தலைவர்கள் பாதங்களில் இதை சமர்ப்பிக்கிறோம்.

கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம்
01.11.1953

Wednesday, 5 November 2025

ஊர்திரும்ப சொல்லும் இட்லி கடை

ஊர்திரும்ப சொல்லும் இட்லி கடை

 பலரும் இட்லி கடை படத்தை தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டிருந்தனர்.
 அதாவது "கையால் மாவரைப்பது அசுத்தம்"
"பிற்போக்காக இருக்கிறது"
 "உண்மையான கிராம வாழ்க்கை இப்படி இல்லை"
 "தனுஷ் சம்பாதித்த பணத்தை என்ன செய்தார்"
 "நித்யா மெனன்  (மேனன் இல்லை) செட்டாகவில்லை" என்றவாறு.

 சரி ஆசியாவிலேயே பெரிய கொள்ளைக்கும்பல் எடுத்த படம்தானே என்று விட்டுவிட்டேன்.

 அண்ணன் சீமான் இந்த படத்தை பார்த்து நல்லபடியான விமர்சனம் கொடுத்திருந்தார். 
 அப்போதும் இது தனுஷ் நாயுடுவின் படம்தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.

 அப்போதுதான் இந்த படத்தை திராவிடியாத் தனமாக விமர்சித்து சில பதிவுகள் வந்தன.
அதாவது  "குலக் கல்வி, குலத் தொழிலை ஊக்குவிக்குறது"
"சாதியே இல்லாத கிராமமா?"
"பணக்காரன் சாதி பார்க்காமல் பெண்கொடுக்கிறான்" போன்ற வரிகள்.
 எனக்கு ஒரே ஆச்சரியம் "என்ன இது அடிமை திராவிடியாக்கள் தன் ஆண்டை இன்பாவை எதிர்த்து ஒரு வரி எழுதும் தைரியம் எப்படி வந்தது?" என்று.
 அண்ணனின் பாராட்டும் எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் காரணமில்லாமல் பாராட்டியிருக்க மாட்டாரே?!
சரி என்று நேற்று அந்த படத்தை குடும்பத்துடன் பார்த்தேன்.
  இதை வெறும் படமாக மட்டும் பார்த்தால் நல்ல படம்தான்!
 கிராமத்தில் பிறத்து வளர்ந்த ஒரு சாதாரண பையன் படித்து முடித்து அந்த கிராமத்தையே சொர்க்கமாக நினைக்கும் அவனது தந்தையுடன் முரண்பட்டு  வெளிநாட்டுக்கு போய் ஒரு கார்ப்பரேட் வேலையில் தன் திறமையைக் காட்டி முதலாளிக்கே மருமகனாகும் அளவு முன்னேறுகிறான்.
 ஆனாலும் ஏதோ ஒரு குறையை உணர்கிறான்.
 திருமணம் நெருங்கிய நிலையில் அவனது தந்தை இறந்துவிடுகிறார். கார்ப்பரேட் குடும்பம் கல்யாணத்தை நிறுத்த மறுக்கிறது.
 தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய வருபவன் பல ஆண்டுகள் கழித்து தாயையும் சொந்தங்களையும் பார்க்கிறான்.
 ஒரே மகனாக இருந்தும் பல ஆண்டுகள் தாய் தந்தையை தனியாக தவிக்கவிட்டதை எண்ணி வருந்துகிறான் (இந்த இடத்தில் இவ்வளவு நாள் அவன் சம்பாதித்த பணத்தை என்ன செய்தான் என்று லாஜிக் இடிக்கிறதுதான்).
 கணவன் பிரிந்த துக்கம் தாளாமல் அவன் அம்மாவும் இறந்துவிடுகிறாள் (இதுவும் கூட கொஞ்சம் ஓவர்தான்).
  இந்த நேரத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையையும் தன் தந்தை வாழ்ந்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கிறான்.
 தன் தந்தை கிராமத்தில் நிறைவாக வாழ்ந்து மறைந்துவிட்டதாக உணர்கிறான்.
 தன் தந்தை போலவே தானும் வாழ முடிவெடுக்கிறான்.
 அவன் அப்பா நடத்திய இட்லிகடைதான் அவரது அடையாளம் என்றும் அவர் இடத்தில் இருந்து தான் அதை தொடர்ந்து நடத்துவதுதான் அப்பாவின் கடைசி ஆசையாக இருக்கும் என்றும் நினைக்கிறான். 
 இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள வெளிநாடுகளில் பணத்துக்காக மனதுக்கு ஒட்டாத வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு புரியும்.
 பிளைட்டில் வந்து இறங்கி ஓடிப்போய் தெருமுனை டீ கடையில் நம்ம ஊர் டீயும் வடையும் வாங்கி வாயில் வைத்தவுடன் குபுக்கென்று கண்ணீர் கொட்டும்.
 அதேபோல கடை நடத்தும் கிராமத்து அண்ணாச்சிகள் அந்த கடையையே வாழ்க்கையாக வாழ்வதை உடனிருந்து பார்த்தவர்களுக்கும் புரியும்.
  அவர்களுக்கு தொழில் மீது பற்று என்று கூற முடியாது. கடை மீது பற்று. தன் வாழ்விடம் என்ற உணர்வு.
 இதனால்தான் தனுஷ் அந்த கடை பெயரில் கிளைகள் திறக்க ஐடியா கொடுக்கும்போது அதை மறுக்கிறார் ராஜ்கிரண்.
 என் கையால் சமைத்து கொடுத்தால்தான் என் பெயர் போடவேண்டும் இல்லையென்றால் அது என் கடை ஆகாது என்கிறார்.
 நல்ல உணவகங்கள் பல கிளைகள் பரப்பி கார்ப்பரேட் ஆன பிறகு சுவை குறைந்தும் விலை மிகுந்தும் காணப்படுவதை நாம் பார்க்கவில்லையா?! 
 இந்த படம் ஏன் 'ஒஸ்தாத் ஓட்டல்' மலையாள படம் மாதிரி பல கிளை பரப்பி முன்னேறியது போல் காட்டி முடிவடையவில்லை என்ற கேள்விக்கு இதுவே விடை
 (இத்தனைக்கும் தனுஷ் கடை நடத்த தொடங்கி ஆறுமாதம் ஆவதற்குள் படமே முடிந்துவிடும்).
 இது புரியாமல் 'ஒன்று கார்ப்பரேட்டுக்கு அடிமையாக வெளிநாட்டில் இரு அல்லது நீ ஒரு கார்ப்பரேட் ஆகு' என்று கூறவருகிறார்கள் அதிமேதாவிகள்.
 தனுஷ் எடுத்த முடிவு பிற்போக்கு என்கின்றனர்.
 பட்டதிலேயே அதற்கு விடை உள்ளது.
 எது முன்னேற்றம்?! 
கார் பங்களா ஏசி என்று வாழ்வதா அல்லது இயற்கை, சொந்தபந்தம், கால்நடைகள் என்று வாழ்வதா 
எது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
 படத்தில் அப்பாவின் ஆவி வரும் காட்சிகள் கூட மிகையாக இல்லை!
 இறப்பு நடந்த வீட்டில் தனியாக படுத்திருக்கும் ஒருவனுக்கு அப்படியான எண்ணங்கள் வரத்தான் செய்யும்!
 அப்பாவின் மறுபிறப்பாக காட்டப்படும் கன்றுக்குட்டி, தனுஷைக் காப்பாற்ற வருபவர்க்கு இடம் காட்டும் பருந்து என்று பிற உயிர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
 குலதெய்வ கோவிலில் தனுஷுக்கு வரும் தெளிவு, சண்டைக் காட்சிகளில் ஆவேசமாக அடிக்கும்போது குலதெய்வ பாடல் என்று குலதெய்வ வழிபாட்டையும் முன்னிலைப் படுத்தியுள்ளனர். 
 எந்த விதத்தில் படத்தில் காட்டப்படும் கிராமம் உயிரோட்டமாக இல்லை என்று சொல்கிறார்களோ தெரியவில்லை.
 
 வில்லன் பக்கம் பார்த்தால் ஒரு கார்ப்பரேட் குடும்பம் தன் நிறுவன நலனுக்காக வேலை செய்யும் ஒருவனை தன் குடும்பத்தில் ஒருவனாக ஆக்கிக்கொள்ள நினைக்கிறது.
 அவனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுக்கிறது.
 இதனால் அவனது அடிமை மனநிலை மாறிவிடுகிறது.
இதனால் திருமணம் நின்று அவமானத்தை சந்தித்த அந்த பணக்கார குடும்பம் கிராமத்துக்கு வந்து அவனை பழிவாங்க நினைக்கிறது.
 அந்த ஊரிலேயே ஒரு போலீஸ்காரனையும் போட்டியாக ஓட்டல் நடத்தும் ஒரு முதலாளியையும் கூட்டு சேர்த்துக் கொள்கிறது.
 இவற்றை தனது தந்தை சம்பாதித்த நல்ல பெயராலும் ஊர்மக்களின் ஆதரவுடனும் எதிர்கொள்கிறான் அவன்.
 இதில் என்ன குறையைக் கண்டீர்கள்?!
 'வாழ்க்கை பிச்சை போட்டவர்களின் காலை வாரிவிட்ட துரோகி' என்று பட்டம் கட்டுகிறார்கள்.
 இதுதான் கார்ப்பரேட் ஆதரவு!
 பெரிய இடத்து மருமகனாக வாழ்வதை விட தன்மானத்துடன் வாழ்வதுதான் முக்கியம்!
 சில புதியபூமர்கள் 'தனுஷ் கடை நடத்தட்டும் அதை ராஜ்கிரண் போலவேதான் நடத்த வேண்டுமா?' என்று கேட்கின்றனர்.
 கிராமத்தில் அந்த ஊர் ஆள் மாதிரி இல்லாமல் கோட்சூட் போட்டுக்கொண்டா திரியமுடியும்?! 
 இவர்கள்தானே ஒரு இசுலாமியத் தாய் செய்யும் அற்புதமான சுவையில் பிரியாணி செய்ய ஒரு பிராமண பெண் தொழுதுவிட்டு பிரியாணி செய்வது போல காட்டிய போது கைதட்டியவர்கள்?!
 கையால் மாவு அரைப்பது என்ன கேவலமா?! 
அதில் என்ன அசுத்தம் என்று புரியவில்லை?!
கொரோனா விற்கு பிறகு இந்த மனநிலை அதிகரித்துவிட்டது.
 சக மனிதன் தொட்டாலே செத்துவிடுவோமோ என்று பயத்துடன் வாழ்கின்றனர்.
 கைக்குத்தல் அரிசி, செக்கு எண்ணெய், கைத்தறி புடவை, நாட்டு சர்க்கரை, பனங்கள் போன்றவை பாதுகாக்கப் பட நாம் நினைப்பது இல்லையா?!
 கையால் மாவரைத்து இட்லி சுட்டால் தனி சுவை இருக்கத்தானே செய்யும்!
 எல்லா ஓட்டல்களும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
 இப்படியும் சில ஓட்டல்கள் இருக்கட்டுமே என்றுதான் சொல்கிறேன்.
 கிராமத்தில் அவர்களுக்குத் தகுந்தது போல ஒரு உணவகம் செயல்படுகிறது.
 இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அந்த அந்த கிராமத்திற்கு ஏற்ற கடைகள், கட்டமைப்பு, வழிபாடு, உடை, கலாச்சாரம் என்று இருப்பதுதானே தன்னிறைவு?!
 திருநெல்வேலி நகரத்தில் மையமாக இருக்கும் நெல்லையப்பர் கோவில் வீதியில் இருக்கிறது இருட்டு கடை.
 பெயர்பலகை கூட இருக்காது. ஒரு குண்டு பல்ப் தவிர விளக்குகூட கிடையாது (அதனால்தான் அந்த பெயர்).
 ஆனால் உலக பிரபலம்!
 அல்வா வாங்க வருபவர்கள் மதியமே பூட்டியிருக்கும் கடை முன் வரிசையில் நிற்கவேண்டும்.
 சாயங்காலம் திறப்பார்கள். கிலோ கிலோவாக கட்டி வைத்திருப்பார்கள்.
 இருட்டும் முன் விற்று தீர்த்துவிட்டு இன்னமும் நிற்கும் கூட்டத்திடம் நாளை வாருங்கள் என்று கூறிவிட்டு மூடிவிடுவார்கள்.
 அவ்வளவுதான்!
அவர்கள் கிளை பரப்பவும் இல்லை! விளம்பரம் செய்யவும் இல்லை! உற்பத்தியை அதிகரிக்கவோ கடையை மேம்படுத்தவோ கூட இல்லை!
 அவர்களின் நோக்கம் தரம் குறையாமல் இருப்பது மட்டுமே! 
 திருநெல்வேலி அல்வா என்று பலரும் உலகம் முழுக்க விற்கிறார்கள் ஆனாலும் அந்த கடை அல்வா போல வராது! இதை இப்போதும் பெரிய பெரிய கார்களில் வந்து வரிசையில் நிற்கும் கூட்டம் சொல்லும்! 
 ஒரு கடை முதலாளி தன் கைகளால் உணவு தயாரித்து லாப நோக்கம் இல்லாமல் வருபவர்களுக்கு தரமான உணவு வழங்கி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கி எந்த பேராசையும் இல்லாமல் பழைய ஓட்டு வீடு மனைவி மாடு என்று திருப்தியுடன் ஒரு கிராமத்து வாழ்க்கை வாழ்கிறார்.
 இதில் என்ன தவறு?! 
 'அப்பா தொழிலையே பிள்ளையை செய்யச் சொல்கிறது! இதற்கா குலக் கல்வியை ஒழித்தோம்?'  என்று சில திராவிடியாக்கள் தங்கள் தீராத அரிப்பை இங்கே கொண்டுவந்து தேய்க்கிறார்கள்.
 முதலில் குலக் கல்வி என்று ஒன்று கொண்டுவரப்படவே இல்லை.
ராஜாஜி அன்று ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 'மாணவர்கள் படித்த நேரம் போக மீதி நேரம் தந்தைக்கு உதவியாக இருக்கலாம்' என்று கூறியதை தவறாக அர்த்தமாக்கி அவதூறு பரப்பியது திராவிடம்.
 இந்த படத்திலும் மகன் அவனே விருப்பப்பட்டு தான் கேட்டரிங் படிக்கிறான்.
அப்படியே அவனது அப்பாவின் தொழிலை அவன் செய்தால் என்ன தவறு?!
 அப்பாவின் தொழிலையே மகன் செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் தான் அது தவறு!
 விருப்பப்பட்டு செய்தால் என்ன தவறு?! 
 இவர்கள் மட்டும் நான்கு தலைமுறையாக படம் எடுக்கலாம். 
 ஆனால் கார்ப்பரேட்டுகளில் மாத சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஒருவன் அப்பாவிடம் திரும்பி சென்று தன் காலில் நின்றுவிடக் கூடாது இல்லையா?!
 எல்லா தமிழனும் தன் கிராமத்திலேயே தன்னிறைவு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டால் cheap labour ஐ நம்பி இங்கே இருக்கும் நிறுவனங்கள் திவாலாகிவிடும் இல்லையா?! 
 சில கழிசடைகள் 'நிச்சயம் செய்த பெண்ணை விட்டுவிட்டு அதாவது ஏமாற்றிவிட்டு எடுபிடி வேலைக்கு வந்த பெண்ணை காதலிக்கிறாயே பிறகு வேறொருத்தி வந்தால் இவளை விட்டுவிடுவாயா?' என்று மகா கிரிஞ்ச் தனமாக விமர்சித்துள்ளனர்.
 தாய் தந்தை இல்லாத நிலையில் ஊராரும் ஒட்டாதபோது தனக்கு துணை நிற்கும் ஒரு பெண் மீது காதல் வருமா அல்லது தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒரு பணக்கார பெண் மீது காதல் வருமா?!
 தனுஷ் அந்த பணக்கார பெண்ணை காதலிப்பதாக காட்டவே இல்லை! திருமணத்திற்கு அரைகுறையான சம்மதித்து குழப்பமாக இருப்பதாகவே காட்டப்பட்டுள்ளது.
 இட்லிகடை சினிமாவாக மட்டும் பார்த்தால் கிராமத்திலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் வெறும் பணத்திற்காக மட்டுமே வாழும் பல லட்சம் தமிழர்களின் ஊர்திரும்பும் மனநிலையைப் பேசுகிறது. 
 அவர்களை தைரியமாக ஊர் திரும்பச் சொல்கிறது.
தாய் மண்ணும் மக்களும் உங்களை சோதித்தாலும் கைவிட மாட்டார்கள் என்ற உண்மைச் சொல்கிறது.
 பணம்தான் வாழ்க்கை அதுதான் முன்னேற்றம் என்று நினைப்பவர்களுக்கு இது புரியாது! 
 நான் இங்கே கேட்க இன்னொரு கேள்வி இருக்கிறது!
 ஏன் ஒருவன் இங்கே தன் கிராமத்தில் இருந்து பணக்காரன் ஆக முடிவதில்லை! 
 அரசாங்கம் என்ன கிழித்துக் கொண்டு இருக்கிறது?!
கிராமத்தில் ஒரு இட்லி கடை நடத்துபவனின் மகனுக்கும் நகரத்தில் பீசா கடை நடத்துபவன் மகனுக்கும் ஒரே கல்வி ஒரே வாய்ப்புகள் ஏன் கிடைப்பதில்லை?! 
 எல்லாரும் கிராமத்தை விட்டு சென்றுவிட்டால் யார்தான் கிராமத்தில் இருப்பது?!
 யார் விவசாயம் பார்ப்பது?! 
கிராமங்கள் காலியாகிவிட்டால் விவசாயத்தை கைவிட்டுவிட்டால் ஒரு நாடு தாக்குப்பிடிக்குமா?! 
"படிங்க! படிச்சு வேலைக்கு போங்க! வசதியான வேலைக்காரனா இருங்க!" என்று ஒவ்வொருவனையும் ஊரிலிருந்து துரத்தி நிரந்தமில்லாத ஒரு கார்ப்பரேட் வேலைக்கு அனுப்புவதிலேயே ஏன் குறியாக இருக்கிறீர்கள்?! 
 ஏன் அவன் படித்து ஒரு முதலாளி ஆக்ககூடாதா?! படித்து அரசியல்வாதி ஆகக்கூடாதா?! படித்து சேவை, கலை, தொண்டு என்று போக்ககூடாதா?! 
"படி! வேலைக்கு போ" "படி! வேலைக்கு போ" என்று படிப்பது வேலைக்கு போகத்தான் என்று ஏன் மூளைச்சலவை செய்யப் படுகிறது?!
'கிராமம் என்றாலே முட்டாள்கள்! அங்கே ஒரே சாதிவெறி!' என்று கட்டமைப்பதன் உள்நோக்கம் என்ன?!
 பிறந்த ஊர்ப்பாசம் என்பது சாதி, மதம், இனம், வர்க்கம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உணர்வு என்பது தெரியாதா?! 
 அல்லது எங்கிருந்தோ வந்து பல தலைமுறை இங்கே வாழ்ந்தும் இந்த மண்ணின் உப்பைத் தின்றும் இதன் மீது பாசம் வராத ஒரு கூட்டத்தின் கூச்சலா?!
 திராவிட கும்பல் எடுத்த படமே ஆனாலும் அது கார்ப்பரேட்டுக்கு எதிராக தற்சார்பு வாழ்க்கைக்கு ஆதரவாக இருந்தால் அதை எதிர்ப்பீர்களா?! 
 உங்களது உண்மையான முதலாளிகள் திராவிடம் நடத்தும் திரைத்துறையா அல்லது திராவிடம் நடத்தும் தொழில்துறையா?! 
 தனுஷ் தன்னுடைய சிந்தனையைப் படமாக்கியதாக நான் கருதவில்லை.
மக்களின் மனநிலைக்கு ஏற்ப ஒரு படத்தை எடுத்துள்ளார்.
 மக்கள் இதை ஆதரிக்க வேண்டும்!
 வேறு வழியும் இல்லை!
இப்படி ஒரு படத்தை ஒரு தமிழன் எடுத்து வெளிவிடுவது என்பது திராவிட ஆதிக்க சூழலில் நடக்காத ஒன்று! 
 அதேபோல திராவிட ஆதிக்கம் தலைவிரித்தாடும் இன்றைய சூழலில் இனி ஒரு தமிழன் சரவண பவன் அண்ணாச்சி போல வரவே முடியாது! வந்தாலும் அவர் கதிதான்! 
 படங்களிலாவது மக்களின் கனவுகள் நிறைவேறட்டும்!