Tuesday 28 June 2022

நெஞ்சுக்கு நஞ்சு

நெஞ்சுக்கு நஞ்சு 

(பதிவில் தலித் என்ற வார்த்தை எளிமையாகப் புரிவதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது)

 நேற்று உதயநிதி ஸ்டாலின் (எம்.எல்.ஏ வேலையையெல்லாம் விட்டுவிட்டு) நடித்த நெஞ்சுக்கு நீதி படம் பார்த்தேன்.
 ஒவ்வொரு காட்சியும் நுட்பமாக திராவிட விசம் ஏற்றப்பட்டுள்ளது 

 அதாவது தமிழர்கள் செய்யாத தவறுக்கெல்லாம் அவர்கள் மீது பழி போடுவது.
 தமிழகம் என்றாலே சாதிவெறி பிடித்த பூமி என்று காட்ட முற்படுகிறார்கள்.
 இவர்களைத் திருத்த தமிழகத்திற்கு வெளியே படித்த ஒரு கலப்புத் திருமண வாரிசான ஹீரோ பெரியார் புத்தகத்துடன் வந்து இறங்குகிறார்.

 படம் தொடங்கியதுமே ஒரு பள்ளியில் சத்துணவு ஆயா சாதிக் கொடுமைக்கு ஆளாவது போல் காண்பிக்கப் படுகிறது.
 இது விருதுநகர் மாவட்டம் கம்மாப்பட்டியில் நாயக்கர் சாதி செய்த வன்கொடுமை அப்படியே பொள்ளாச்சி மக்கள் (கவுண்டர்) செய்வது போல் காட்டப்பட்டுள்ளது.

 பொள்ளாச்சியை ஏன் இவ்வாறு சாதிவெறி பிடித்த பகுதியாகக் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தி எதிர்ப்பில் மொழிப்பற்று காட்டி பெரும் துப்பாக்கிச்சூடு நடந்த இடம் என்பதால் இருக்கலாம்.

 தலித் என்றாலே பன்றி மேய்த்துக்கொண்டும் குப்பையையும் சாக்கடையையும் அள்ளிக்கொண்டும் இருப்பார்கள் என்று காட்டுகிறார்கள்.
 ஆனால், அரசின் துப்புரவு பணியாளர்களில் bc, mbc, oc, sc, st என எல்லா சாதியினரும் பணிசெய்கிறார்கள் என்பதுதான் புள்ளிவிபரம்.

 வெட்டியான் வேலை பற்றியும் வருகிறது. ஆனால் உண்மையில் ஒரு பார்ப்பன பெண் அரசாங்க மின் எரி மேடையில் வெட்டியான் பணிபுரிந்து வரும் செய்தி பத்திரிக்கைகளில் சமீபத்தில் வந்துள்ளது.

 கவுன்சிலரை தரையில் அமரச்செய்த செய்தி கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் திட்டை ஊராட்சியில் இதைச் செய்தது தி.மு.க.  

 இரண்டு சிறுமிகளை சாதிவெறியின் காரணமாக மூன்றுபேர் கற்பழித்து தூக்கில் போட்ட சம்பவம் காட்டப்படுகிறது. 

இத்தகைய சம்பவங்கள் வடக்கே பல நடந்தது. ஆனால் அது தமிழகத்தில் நடந்தது போலவும் அதெல்லாம் இங்கே சர்வ சாதாரணம் போலவும் காட்டப்பட்டுள்ளது.
ஏன்னா அதுவும் இந்தியாவாம் நாமால்லாம் இந்தியராம்.
 காஞ்சிபுரத்தில் ஒரு தலித் சிறுமியை கற்பழித்து எரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இது எந்த சம்பவத்தை என்று தெரியவில்லை. காஞ்சிபுரத்தில் நண்பர்களுடன் மது அருந்திய திருநங்கை அவ்வாறு கொல்லப்பட்டார் அதுவாக இருக்கலாம். அதில் சாதிவெறி எப்படி என்றுதான் தெரியவில்லை.

 பிறகு அச்சிறுமிகள் 30 ரூ கூலி உயர்வு கேட்டதாகவும் வருகிறது. 
 இது சின்னியம்பாளையம் சம்பவத்தை நினைவு படுத்துகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கூலி உயர்வு கேட்ட ராஜி என்கிற தொழிற்சங்க தலைவியை ஆலை அதிபரின் அடியாட்கள் வன்புணர்வு செய்து கொன்றார்கள். ஆனால் படத்தில் காட்டியதற்கு மாறாக தொழிலாளர்கள் அந்த குற்றத்தைச் செய்த பொன்னான் என்பவனை அடித்தே கொன்றார்கள்.
 இந்த சிறப்பான சம்பவத்தை முன்னின்று செய்த நான்கு தொழிலாளர்களை 1946 இல் தூக்கில் போட்டார்கள். அது அத்தனை சுலபமாக இல்லை. தொழிலாளர்களும் பொதுமக்களும் அந்த நால்வரை லண்டன் வரை மேல்முறையீடு காப்பாற்றப் போராடினார்கள். அத்தகைய கொங்கு மண் மீதா இப்படி ஒரு பழி?!
 கூலி உயர்வு கேட்டதற்காக கொலை என்றதும் கீழ்வெண்மணி யில் விவசாய மக்களைக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடு நினைவுக்கு வருகிறான்.
 
 அதிலும் ஒரு இன்ஸ்பெக்டர் வருகிறார். நாய்க்கு புலி என்று பெயர்வைத்து அழைக்கிறார். அவரை ஐயர் என்று சாதியைச் சொல்லியே அறிமுகப்படுத்தி அவர் பட்டியல் சாதி மக்களை இழிவாக பேசுவது போலவும் நடத்துவது போலவும் காட்டியுள்ளனர். இதுவே வேறு சாதி பெயரைச் சொல்லியிருந்தால் கலவரமே வெடித்திருக்கும். அவர் சிறுமிகளுக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுப்பது போலவும் காட்டியுள்ளனர்.
 அச்சிறுமியரின் தந்தைகளை மிரட்டி அவர்களே தமது மகள்களை ஆணவக் கொலை செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்து உடல்களை உடனடியாக எரித்துவிடச் செய்வது போலவும் காட்டியுள்ளனர். இறுதியில் கற்பழித்தவரே அவர்தானாம். தமிழகத்தில் ஒரு போலீஸ்கார ஐயர் தலித் சிறுமியைக் கற்பழித்து கொலை செய்தது எங்கே நடந்தது?!
 தமிழகத்தில் இதுவரை ஒரு பிராமணர் மீது கூட சாதிக் கொடுமை செய்ததாக வன்கொடுமை வழக்கு பதிவாகவில்லை.
 அமைதியான சமுதாயம் என்றால் என்ன பழி வேண்டுமாலும் போடுவீர்களா?!
 சிறுமிகளுக்காகத் தீவிரவாத வழியில் போராடும் ஒருவரைக் காட்டுகிறார்கள். கறுப்பு சட்டை அல்லது கறுப்புத் துண்டுடன் எப்போதும் இருக்கிறார். அவர் சாதிக் கட்சியில் இருப்பதாக காட்டிவிட்டு பிறகு அவரே அந்த கட்சியை குற்றம் சாட்டுவது போலவும் வருகிறது. என்ன சொல்ல வருகிறார்கள் தலித் மக்களில் ஒருவன் அதிகாரத்திற்கு போனாலும் எதுவும் மாறாது என்றா?! 
அந்த போராளியை பொய்வழக்கு போட்டு குற்றவாளி ஆக்கிவிட்டனராம் சரி அவர் படித்த பள்ளி இடிந்துபோய் கிடக்கிறதே அது எதனாலாம்?! தமிழகத்தில் எங்கே தலித்துகள் பகுதியிலுள்ள பள்ளி இடிக்கப்பட்டது ?! 
கடைசியில் அந்த போராளியையும் ஐயர் கொன்றுவிடுகிறார்.

 தமிழகத்தில் தலித் மற்றும் தொழிலாளர்களுக்காகப் போராடியவர்கள் (வெண்மணி சம்பவத்துக்குப் பழிவாங்கியவரைத் தவிர)  பெரும்பாலும் தலித் இல்லை. மலேயா கணபதி, இரணியன், சாம்பவனோடை சிவராமன் முதல்  நீதிபதி சந்துரு, நல்லகண்ணு, சீதையின் மைந்தன் வரை பல தலித் அல்லாத தலைவர்கள் உண்டு. 
 

 பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் பெயர் அனிதா. திரைப்படத்தில் அனிதாவை டாக்டர் ஆக்கிய திராவிட சாதனையை என்னவென்று சொல்ல! 

 ஈ.வே.ரா மற்றும் அம்பேத்கர் சிலைகள் அருகருகே காட்டப்பட்டு என்னவோ ஈவேரா வும்  சாதிவெறிக்கு எதிராக போராடியது போல வசனம் பேசுகிறார்கள்.
 தொடக்கத்தில் இருந்து சாகும் வயதிலும் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தங்கள் எதிரி என்று தெளிவாகக் கூறியவர் ஈவேரா. 

 கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக தலித் மக்களை ஐயர் இன்ஸ்பெக்டர் அடிக்கும் காட்சி வருகிறது.
 இப்படி சம்பவமும் தமிழகத்தில் எங்கே நடந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஏறத்தாழ 50,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரங்கள் உள்ளன. இதில் தீண்டாமை கடைபிடிப்பதாக பதிவானவை 450 க்கும் கீழே! நாயக்கர் காலத்தில் கூட பள்ளர்கள் நிலத்தில் மறவர்கள் குளம் வெட்டி இருவரும் பயன்படுத்திய கல்வெட்டுச் சான்று உள்ளது. 

 இன்னொரு காட்சியில் அந்த ஐயர் போலிஸ் தலித் போலீசை நேர்மையாக நடந்துகொண்டதற்காக சட்டையைப் பிடித்து உலுக்கி போலீஸ் வேலை போனால் நான் மணியாட்டவும் நீ குப்பையள்ளவும் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறுகிறார். ஏன் வேறு வேலையே கிடைக்காதா?!
 தமிழகத்தில் என்ன விஜயநகர காலத்து மனுதர்ம ஆட்சியா நடக்கிறது?! 

 முப்பாட்டன் முருகன் என்று காவி கும்பல் பேரணி போவது வருகிறது. முப்பாட்டன் முருகன் என்று முழங்கி தைப்பூசத்திற்கு விடுமுறை வாங்கிக் கொடுத்தது சீமான் அவர்கள். என்ன சொல்ல வருகிறார்கள் இதைச் சாதித்தது காவி கும்பல் என்றா இல்லை சீமான் ஒரு காவி என்றா?  

 இரண்டு மூன்று தடவை 2000 ஆண்டுகளாக அடிமையாக இருப்பதாக வருகிறது. இதற்காகவே இந்த படத்தை எடுத்தவனையும் வசனம் எழுதியவனையும் செருப்பால் அடிக்கலாம். எத்தனை ஆண்டுகள்தான் தலித்துகள் பல தலைமுறை கால அடிமை என்று தவறான தகவலைச் சொல்லி அவர்களை மூளைச் சலவை செய்வீர்கள்?

தமிழகத்தில் சோழர்கள் காலத்தில் பறையர்கள் பிராமணர் அளவுக்கு இறையிலி நிலங்கள் பெறும் அளவுக்கு உயர்ந்த இடத்தில் இருந்துள்ள சான்றுகள் உள்ளன. நிலவரி கட்டாத பிராமணர்கள் தண்டிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. கோவிலுக்குப் பக்கத்தில் பார்ப்பன சேரி போல பறைச்சேரியும் சோழ அரசாங்க மருத்துவமனை பகுதியில் நோயாளிகள் இருந்த தீண்டாச்சேரியும் இருந்தன. நாயக்கர் ஆட்சி வடக்கே பரவி தெற்கைப் பிடிக்கும் வரை கூட பாண்டிய நாட்டில் பறையர் மன்னரின் மெய்க்காப்பாளராக கோவிலுக்கு நிலதானம் வழங்கிய சான்று உள்ளது. 
நாயக்கர் கால தொடக்கத்தில் கூட பறையர் மறவர் சமாதான ஒப்பந்தம் கல்வெட்டாக உள்ளது.
 நாயக்கருக்கு அடங்கிய பறையர் ஜமீன் கூட உண்டு.
நாயக்கர் ஆட்சிக்கு முன்பு வரை தஞ்சை பெரியகோவிலும் மீனாட்சி அம்மன் கோவிலும் பார்ப்பனர் அல்லாதவர் தலைமையில் இருந்துள்ளன.

 அமெரிக்காவில் இந்தியர்கள் பெருமையோடு வாழ்கிறார்கள் ஆனால் இங்கே எல்லாரும் ஜாதிவெறி பிடித்து அலைகிறோமாம். உத்திர பிரதேசம் பற்றி எடுத்த படத்தை தமிழகத்திற்கு ஏற்றாற்போல மாற்றியதாகக் கூறினார்களே?! இந்த வசனத்தை மாற்ற மறந்துவிட்டார்களோ?! பீகார்க் காரனும் நாமும் ஒன்றா? தமிழகத்துக்கு வரும் இந்தி சிபிஐ அதிகாரியும் கூட அதே அளவு ஜாதிவெறியுடன் காட்டப்படுகிறாரே?! அதற்கும் தமிழகம்தான் பொறுப்பா?!

 இந்தி எதிர்ப்பு வசனம் ஆறுதலாக இருக்கிறது. நல்லவேளை அதையாவது ஒத்துக்கொண்டார்களே!

 ஆதிக்க சாதியினர் "ஆட்சி எங்கள் கையில்" என்று கூறுவதாக வருகிறது. மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழர்கள் கையில் ஆட்சியதிகாரம் 800 ஆண்டுகளாக இல்லை.  காமராசர், பழனிச்சாமி தவிர இப்போது வரையும் தமிழகத்தை ஆள்வது வந்தேறிகள். இந்த படுபாகத்தைச் செய்த உயர் சாதிக்கு ஆதரவாக காவல்துறை நடந்துகொள்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.
 அதாவது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியைக் காட்டுகிறார்கள். 
 ஒரு கவுண்டர் ஆட்சிக்கு வந்தால் அந்த சாதிக்காரர்கள் இப்படி வெறியாட்டம் போடுவார்களாம். 
என்றால் ஆளும் தெலுங்கு சின்னமேள சாதிதான் சாதிய குற்றங்களுக்கு காரணம் என்று ஒத்துக் கொள்கின்றனரா?!

 திரைப்படத்தில் இதற்கும் ஒரு தணிக்கை வேண்டும்!
எங்கேயோ எவரோ செய்த ஒன்றை அதற்கு சம்பந்தமே இல்லாத மக்கள் செய்ததாக காட்டுவதற்கும் தடை போட வேண்டும்!

 இந்த படத்தைப் பார்க்கும் வெளியாள் ஒருவர் தமிழகத்தைப் பற்றி என்ன நினைப்பார்?!

  மீண்டும் ஒருமுறை உறுதியாக்க் கூறுகிறேன்!
நாங்கள் இந்தியர் இல்லை! எங்கள் நாடு இந்தியாவின் பகுதியாக வரலாற்றில் எப்போதும் இருந்ததில்லை! 
 வடக்கே நடந்த, நடக்கின்ற கொடூரங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை!
 இந்தியா என்கிற இழிவிலிருந்து விலகத்தான் தனிநாடு கேட்கிறோம்!
 இங்கே இருக்கின்ற வந்தேறிகள் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் வரை அவ்வந்தேறிகளும் அதிகார வர்க்கமும் செய்யும் அட்டூழியத்திற்கு நாங்கள் பொறுப்பில்லை!
 தவறு செய்த தமிழர்களுக்கு சக சமூகமான நாங்கள் பொறுப்பு என்றாலும் அவை மிகச்சில எடுத்துக்காட்டுகளே! திராவிட மாடல் ஆட்சியின் சாராய சாக்கடை அரசியலின் விளைவே! விதிவிலக்குகளை பொதுக் கலாச்சாரமாக திரிக்க வேண்டாம். 

 தன் சாதிக்காக ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்து ராணுவத்தில் மகார் சாதிக்கென்று தனி படைப்பிரிவு ஏற்படுத்திய அம்பேத்கரும்
 ஆங்கிலேயர் காலுக்கு செருப்பாக இருந்து கோயம்புத்தூர் தேர்தலில் தன் நாயக்க சாதிக்காக சீட் கேட்டு கதறிய ஈவேரா வும் சாதி ஒழிப்பு போராளிகள் என்றால் தன் சாதி பற்றி எப்போதுமே பேசாத சிந்திக்காத முத்துராமலிங்கத் தேவர் சாதிவெறியரா?!

 திராவிடவாதிகளுக்கு நாங்கள் சாதிவெறி பிடித்த சமூகமாக அடித்தட்டு மக்களை நசுக்குகின்ற ஆவணம் பிடித்தவர்களாக அதாவது உ.பி, பீகார் போல இருக்கவேண்டும் என்றும் திராவிட சிந்தனையாளர்கள் வந்து எங்களைத் திருத்தவேண்டும் என்று ஏன் தீராத ஆசை?!

 ஏன் அவ்வாறே எப்போதும் பிரச்சாரம் செய்கிறீர்கள்?! ஏன் ஆட்சியதிகாரத்தை வைத்து திரைத்துறையைக் கைப்பற்றி ஆக்கிரமித்து அந்த ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் விதமாகவே படம் எடுக்கிறீர்கள்? 

 இதற்காகத் தான் பாஜக வை இங்கே வளர்த்து விடுகிறீர்களா?! 

 உறுதியாக இறுதியாக கூறுகிறேன் திராவிட சிந்தனையாளர்கள் தமிழகத்தில் ஒன்றும் கிழித்ததில்லை!

Sunday 19 June 2022

சிதம்பரனாரை மகிழ்வித்த ஆஷ் மரணம்

வ.உ.சி யை மகிழ்வித்த ஆஷ் மரணம்

 ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 குற்றவாளிகளில் இருவர் அப்ரூவராக மாறினார்கள். அதாவது நடந்த உண்மையை தாங்களாகவே கூறி மற்றவர்களது குற்றங்களையும் கூறி குற்றத்தை ஒத்துக் கொள்வது (இதனால் அவர்கள் விடுதலை பெறுவார்கள்). அப்படி அப்ரூவராக மாறிய இருவரில் ஒருவர் சோமசுந்தரம் பிள்ளை. 
அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை சிறையில் தள்ளி அவரது சுதேசி நிறுவனத்தையும் கப்பல்களையும் முடக்கியதற்கான கண்டனத்தை தெரிவிக்க வேண்டியே ஆஷ் கொலை நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

 ஆம், ஆஷ் திருநெல்வேலி எழுச்சியில் (1908) மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நால்வரைக் கொன்றது மட்டுமில்லாமல் வ.உ.சி அவர்களை சிறையில் தள்ளி அவரது சுதேசி நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களை மிரட்டி அதை ஆங்கிலேயரிடமே விற்கவும் வைத்துள்ளான்.
 வ.உ.சி சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளானார்.
இவற்றையெல்லாம் அறிந்து வெறுப்புற்று வெகுண்டெழுந்த வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றார் (1911).

 இதற்குச் சான்றாக வ.உ.சி சுயசரிதை இருக்கிறது.
அவ்வரிகள் கீழே,

‘கலெக்டர் ஆஷுவைத் தெரியுமா?’ என்றான்.
‘நன்றாகத் தெரியும்’ என்றேன்.
‘எப்படி?’ என்றான்.
‘யான் இவண் ஏகியதற்கும் தூத்துக் குடியில் தோன்றிய ‘சுதேசிக் கப்பல் கம்பெனி’ செத்தொழிந் ததற்கும் அவன்கா ரண’மென் றறைந்தேன். 
‘ஒருவன் அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச் செத்தான்’ என்றான்.
‘நல்லதோர் செய்தி நவின்றாய் நீ நலம் பெறுவாய்’ என்றேன்.

 ஆஷ் கொலையுண்ட செய்தியைக் கூறிய போலிஸ்காரனிடம் தன் நிறுவனத்தை அவன் அழித்ததையும் அவன் இறப்பால் தனக்குத் தோன்றிய மகிழ்ச்சியையும் மேற்கண்டவாறு தெரியப்படுத்தியுள்ளார் வ.உ.சி

Saturday 18 June 2022

ஈவேரா பரப்பிய சூத்திர அவதூறு

ஈவேரா பரப்பிய சூத்திர அவதூறு

சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று பொருளாம். தமிழர்களை அவ்வாறு மனுதர்மம் கூறுகிறதாம்.

இது பற்றிய ஈ.வெ.ரா கூறிய (தவறான) விளக்கம் கீழ்க்கண்டவாறு,

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.
1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்
3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்
4) விபச்சாரி மகன்
5) விலைக்கு வாங்கப்பட்டவன்
6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்
(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

- ஈ.வெ.ரா (குடிஅரசு  05.09.1926)

இதை வைத்துக் கொண்டு ஈ.வெ.ராமசாமி யைப்போல அவரது பக்தர்களும் இன்று வரை பிராமணர்கள் தமிழர்களை தேவடியாள் மகன் என்று கூறியதாக மூச்சுக்கு முன்னூறு முறை நம்மை இழிவுபடுத்தி வருகிறார்கள்.
ஆனால் எந்த தமிழ்ப் பார்ப்பனரும் நம்மை அப்படி குறிப்பிட்டதாக தெரியவில்லை.

ஈ.வே.ரா கூறிய மேற்கண்ட விளக்கம் எவ்வளவு தவறென்றால் அந்த சுலோகத்தில் 'சூத்திரன்' என்கிற வார்த்தையே வரவில்லை.
'விபச்சாரி' என்ற வார்த்தை கூட இல்லை.
இதில் அடிமைகள் பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது.

அந்த சுலோகம்,

த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।    
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச ஸப்தைதே தாஸயோநய: 
- 8 . 415

இதன் ஆங்கில விளக்கம் வருமாறு,

8.415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in slave house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.

இதன் தமிழாக்கம் : 

அடிமைகள் ஏழு வகைகளில் வருகிறார்கள் - 
போரில் அடிமைப்பட்டவன்,
உணவிற்காக வேலை செய்பவன், 
அடிமை வீட்டில் பிறந்தவன், 
வாங்கியவன், 
கொடுக்கப்பட்டவன், 
மூதாதையரால் தரப்பட்டவன், 
தண்டனையாக அடிமைப்பட்டவன்

மனுஸ்மிருதி யில் சூத்திரன் மீது பல அடக்குமுறைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் எங்குமே சூத்திரன் வேசிமகன் என்று சுலோகம் இல்லை.

ஈவேரா வுக்கு சூத்திரன் அடையாளத்தை தமிழர்கள் மீது சுமத்துவது மிக முக்கியமாக இருந்தது.
எந்த அளவுக்கு முக்கியம் என்றால் அவர் முதலில் சூத்திரர் கழகம் என்றுதான் பெயர் வைத்துக்கொள்ள முடிவுசெய்தார்.
அப்போதுதானே சூத்திரன் மீதான அத்தனை இழிவையும் தமிழர் மீது சுமத்த முடியும்.
எதிர்ப்புக்குப் பிறகு திராவிட கழகம் என்று வைத்துக்கொண்டார்.

அவர் அளித்த விளக்கம் வருமாறு,

திராவிடன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட்டால், வேறு மாறு பெயர் சூத்திரன் என்று கூறிக் கொள்ளத்தான் வேண்டும். சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திராவிடன் என்று கூறிக்கொள்கிறோம். திராவிடர் கழகம் என்றால், இன்று சூத்திரர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் கழகம் என்றுதான் அர்த்தம். ஏன் சூத்திரர்களுக்கும் கழகம் என்று கேட்டால், அந்த இழிவு நீங்குவதற்காகக் கழகம் வைத்துக் கொண்டிருக்கிறோம். சூத்திரர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறோம். அதனால் ஏற்படும் இழிவை ஒழிக்க விரும்புகிறோம் என்பதற்காகவே திராவிடர் கழகம் இருக்கிறது.
- ஈ.வெ.ரா (குடி அரசு , 30.05.1947)

கழகம் ஆரம்பித்த பிறகு சூத்திரன் மீது மனுஸ்மிருதியால் என்ன இழிவு சுமத்தப்பட்டு உள்ளதோ அதை தமிழர் மீது சுமத்தினார்.
அப்போதும் அவரது தமிழர் மீதான வெறுப்பும் இனவெறி யும் அடங்கவில்லை.
  மனுஸ்மிருதியே சூத்திரன் மீது சுமத்தாத இழிவையும் சேர்த்து தமிழர்கள் மீது சுமத்தினார்.
விபச்சாரி மகன் என்று தவறான விளக்கம் கொடுத்தார்.
சாகும் தருணத்திலும் நம்மை தேவடியா மகன் என்று கூறிவிட்டுத்தான் செத்தார்.

“நான் பிறப்பதற்கு முன்னோலேயே தேவடியா மக்கள் நீங்கள், நான் பிறப்பதற்கு முன்பே சூத்திரர்கள் நீங்கள். நான்காவது சாதி நீங்கள், இப்போது நாளைக்கு நான் சாகப்போகிறேன் – சூத்திரனாய் விட்டுவிட்டுத்தானே சாகிறேன்…
(பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3205)”

“சாஸ்த்திரத்திலே தேவடியாள் மகன் என்கிறான், பார்ப்பானுக்கு பிறந்தவன் என்கிறான், சூத்திரனுக்கு பெண்டாட்டியே கிடையாது என்கிறான். சூத்திரச்சி பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று எழுதி இருக்கிறான். யார் கவனித்தீர்கள்.
(பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3234)

“நாம் முதலாவது இப்போது மானத்துக்காகப் போராடுகிறோம், வேறே எதற்காகவும் இல்லை. இழிவு – தேவடியாள் மகன், பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன், தாசிப் புத்திரன் என்று சட்டத்திலே இருக்கிறது"
(பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3249)

  தமிழரை பார்ப்பனர் வேசிமகன் என்று கூறுவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து செய்தே தமிழர்கள் நெத்தியில் வேசிமகன் எனும் பட்டத்தை ஒட்டி தன் இனவெறுப்பைத் தீர்த்துக்கொண்டார் ஈவேரா.

அவர் சொன்ன 7 அர்த்தங்களில் வேசி மகன் என்பதுதான் தற்காலத்திலும் பொருந்துகிறாம்.
இவ்வாறு ராமசாமியின் அடிப்பொடிகளும் தமிழர் மீதான வெறுப்பை அவர் வழியிலேயே தீர்த்துக்கொண்டு வருகின்றனர்.

Thursday 16 June 2022

ஈடில்லாத வீரன் வாஞ்சிநாதன்

ஈடில்லாத வீரன் வாஞ்சிநாதன்

 எதிர்ப்புகள் அனைத்தையும் அடக்கி ஆங்கிலேயர் இந்திய துணைக்கண்டத்தில் முறையான நிர்வாகத்தை (1857 இல்) ஆரம்பத்தனர்.
 அதன் பிறகு அரசாங்கத்தை எதிர்த்து 20 க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் நடந்தன.
 அதில் சரியாக வெற்றி பெற்றவை இரண்டே இரண்டு! 
 ஒன்று வாஞ்சிநாதன் செய்த ஆஷ் படுகொலை!
இரண்டாவது லண்டனில் உதம்சிங் செய்த ஓடயர் படுகொலை! 
 (பகத் சிங் படுகொலை கூட தவறான நபர்தான்)
 இவ்விரண்டில் உதம்சிங் லண்டன் சென்று 7 ஆண்டுகள் திட்டமிட்டு ஓடயரைக் கொன்றார். 
 ஜாலியன் வாலாபாக் (1919) படுகொலைக்கு 20 ஆண்டுகள் கழித்து (1940) பழிவாங்கினார்.
(அவரது முக்கிய இலக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலையை முன்னின்று செய்த ஓ டயர் எனும் வேறொரு அதிகாரி. அவர் இறந்துவிட்டதால் அவருக்கு உத்தரவிட்ட மேலதிகாரி ஓடயரைக் கொன்றார்.) 
 அப்போது ஓடையர் வயதாகி பணி ஓய்வு பெற்ற முதியவர். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காரணத்தால் குழப்பமான அரசியல் சூழலும் உதமுக்கு  சாதகமாக இருந்தது.

 ஆனால் அவருக்கு 30 ஆண்டுகள் முன்பே ஒப்பற்ற தலைவர் வ.உ.சி தலைமையில் நடந்த திருநெல்வேலி எழுச்சியை (1908) மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 4 உயிர்களைப் பலிகொண்டு அடக்கிய ஆஷ் துரையை நம் வாஞ்சிநாதன் இரண்டே ஆண்டுகளில் (1911 இல்) பழிதீர்த்தார்.
 அதுவும் ஆஷ் பதவியில் இருக்கும் போதே அவர் அதிகாரம் செல்லும் இடத்திலேயே அவரை முடித்தார்.

 தற்கொலைப் போராளியான வாஞ்சி தன் மனைவியை தலைப் பிரசவத்திற்கு விட்டுவிட்டு போனவர். அரசாங்க வேலையில் இருந்தவர். உதம் தற்கொலைப் போராளி இல்லை. திருமணமாகாதவர். பல ஆண்டுகள் சிறையில் இருந்து கூலி வேலை செய்ய லண்டன் சென்றவர்.

 வாஞ்சி மற்றும் உதம் இருவருமே சமமான மதிப்பு பெறும் புரட்சியாளர்கள். இந்திய அளவில் ஈடு இணை அற்றவர்கள். ஏனென்றால் உதம்சிங் நீண்ட காலம் எடுத்துக்கொண்டாலும் ஆங்கிலப் பேரரசின் இதயத்தில் பதிலடி கொடுத்தார். இருவருமே காணாப் பிணம் ஆகினர்.

 இருந்தாலும் நடந்த காலகட்டம், நிகழ்ந்த இடம், அப்போதைய சூழல், கிடைத்த ஆதரவு, உருவாக்கிய திட்டம், சரியான இலக்கு, செய்த தியாகம் என எல்லாவற்றையும் ஆராய்ந்தால் வாஞ்சிநாதன் ஒரு படி மேல் என்றுதான் சொல்லவேண்டும்.

 அவ்வகையில் வாஞ்சிநாதன் ஈடில்லாத வீரன்.
நம் இனத்தின் பெருமை!

 
 

இராவணன் எனும் பார்ப்பனன்

 இராவணன் எனும் பார்ப்பனன்

 இராமனை காமவல்லி (சூர்ப்பனகை) திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோது அவளை 
'அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்று கூறி திருமணத்திற்கு மறுக்கிறான்.
 அதற்கு அவள் அளிக்கும் மறுமொழியிலும் 'ஆரண மறையோன் எந்தை' என்று குறிப்பிடுகிறாள்.
(கம்ப இராமாயணம், சூர்ப்பணகைப் படலம்)

'ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன்' என்றும் கம்பர் இராவணனைக் குறிப்பிடுகிறார் 
(கம்ப இராமாயணம், நிந்தனைப் படலம்)

 'வேத நாவன் நூலினான்' என்று இலங்கை வேந்தனை அப்பர் குறிப்பிடுகிறார். 
(தேவாரம், அப்பர், 303: 3)

 

Sunday 12 June 2022

தீட்சிதர்கள் தேவார சுவடிகளை பூட்டிவைத்தனரா

தீட்சிதர்கள் தேவார சுவடிகளை பூட்டிவைத்தனரா?!

  இராஜராஜ சோழனின் காலம் 10 ஆம் நூற்றாண்டின் இறுதி என்பது நமக்குத் தெரியும்.
 ஆனால் ராஜராஜ சோழன் சிதம்பரம் கோவிலில் இருந்து தேவார சுவடிகளை மீட்டதாக கிபி 14 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் 'திருத்தொண்டர் புராணம்' எனும் நூல் முதன்முதலில் கூறுகிறது.
 அதாவது இராசரான் காலத்திற்கு ஏறத்தாழ 300 ஆண்டுகள் கழித்து!
 இந்நூலை எழுதியதும் இன்னார் என்று உறுதியாகத் தெரியவில்லை. அதன் ஆசிரியராகக் கருதப்படுபவர் உமாபதி சிவாச்சாரியார் கூட ஒரு தீட்சிதர்தான்.
சரி நூலின் வரிகளாவது தெளிவாக இருக்கிறதா என்றால் இல்லை.
 அதில் திருமுறைகண்ட சோழனாக ‘அபயகுல சேகரன் இராசராசன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 ஆனால் ‘அபயகுல சேகரன்’ எனும் பட்டம் இராஜராஜன் கொண்ட பல பட்டங்களின் பட்டியலிலேயே இல்லை. பிற்பாடு சேர்க்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் கூட அபயன் என்ற பட்டமே கொண்டுள்ளான். 
 

தகவல்களுக்கு நன்றி:- VICKY KANNAN

Thursday 9 June 2022

மனுதர்மம் என்றால்

மனுதர்மம் என்றால்

 மனுதர்மம் என்பது நால்வர்ண கொள்கை என்று தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
 பிற்கால சோழர், பாண்டியர் கல்வெட்டுகள் மனுநீதியை மனுதர்மத்தை நிலைநாட்டியதாக கூறுவதைத் திரித்து ஏதோ மூவேந்தர் பிராமண அடிமை போல சித்தரிக்கிறார்கள்.

 மனுதர்மம் என்பது நீதி தவறாத என்கிற பொருள் தருவதாகவும் அதனால் மனுநீதி சோழன் போன்ற அறம் வழுவாத ஆட்சி மனுதர்ம ஆட்சி எனவும் கூறுவோர் உண்டு.

 மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் இதன் வேர்ச்சொல் பற்றி ஆராய்ந்து மன் (மனம்) என்பதில் இருந்து உருவான சொல்தான் மனு என்று வடக்கே திரிந்துவிட்டதாகக் கூறுகிறார்.
 இதுவே மனிதன் என்ற சொல்லுக்கும் வேர் என்று கூறுகிறார்.

 மேலும் தமது திருக்குறள் உரையில் ,
"மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் 
எல்லாப் புகழும் தரும்"

 மனநலம் என்பதற்கு மனிதநேயம் என்று பொருள் கூறியுள்ளார்.

 தொல்காப்பியர் கூற்றுப்படி,
"ஆறறிவு அதுவே, அவற்றொடு மனனே"
அதாவது தோல் , நாக்கு, மூக்கு, கண், காது ஆகியவற்றுடன் மனம் ஆறாவது அறிவு (உணர்ச்சி) என்கிறார். 

ஆகவே,
 மன் அல்லது மனம் என்பது அறிவைக் குறிக்கும் அறிவில் சிறந்தவன் மனிதன். மனிதத் தன்மையுடன் அதாவது பகுந்தறிவுடன் ஆட்சி நடத்துவது மனுதர்மம்.

 இதனை வடநாட்டு மனுஸ்மிருதி உடன் குழப்புவது ஏற்புடையது அன்று. 

தீட்சிதர்களுக்கு கண்டனம்

தீட்சிதர்களுக்கு கண்டனம்

 தீட்சிதர்கள் தமிழினம்! 
 அவர்கள் கனக சபையில் யாரையும் ஏற விடுவதில்லை!
அது அவர்களது நம்பிக்கை அடிப்படையிலானது.
கோவிலில் பணியில் இல்லாத ஒரு தீட்சிதர் கனகசபையில் ஏற முயன்றபோது கூட தாக்கி விரட்டினர் (13.02.2022 செய்தித்தாள்கள் சான்று).
 இவர்களை தமிழுக்கும் தமிழருக்கும் எதிரானவர்களாக வந்தேறிகள் சித்தரித்து வந்தனர்.
 தினமும் தமிழில்தான் தீட்சிதர்கள் ஓதுகின்றனர்.
தீட்சிதர்கள் கனகசபை (திருச்சிற்றம்பலம்) மீது ஏறி தேவாரம் பாட அனுமதிக்காததை திரித்து அவர்கள் ஏதோ தமிழில் பாட அனுமதிக்க மறுப்பதாக பிரச்சாரம் செய்துவந்தனர் திராவிடவாதிகள்.
 இந்த திரிப்புக்குதான் எதிர்ப்பு தெரிவித்து வந்தேன்.
மற்றபடி பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தெய்வத் தமிழ்ப் பேரவையின் போராட்டத்தையும் அதன் விளைவாக காவல்துறை பாதுகாப்புடன் கனகசபை மீது நின்று தேவாரம் பாடியதையும் முழுமையாக வரவேற்கிறேன்.
 இதற்குப் பழிவாங்கும் நோக்கில் தீட்சிதர்கள் தற்போது அரசு அதிகாரிகளிடம் நடந்துகொள்வதை ஏற்க முடியாது.
 திராவிட ஆட்சியில் இதை வேண்டுமென்றே மென்மையாகக் கையாண்டு மக்களை முட்டாளாக்குகின்றனர். 
 தீட்சிதர்கள் சிதம்பரம் நடராசர் கோவில் மீது முழு உரிமை கோருவது ஏற்புடையது அல்ல! 
 தீட்சிதர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!
 அதே நேரத்தில் தீட்சிதர்களை ஆரியர்கள் என்று முத்திரை குத்தி தமிழுக்கு எதிரானவர்களாக சித்தரிப்பதைக் கண்டு ஏமாறவும் கூடாது.
 

 

Wednesday 8 June 2022

சிறுபான்மைத் தமிழ்க் குடிகள் கட்சி



சாதிவாரி மக்கட்தொகை கணக்கெடுப்பு நமக்குத் தேவை!
 ஆம்! 
அது மட்டும் நடந்துவிட்டால் அரசியலில் தீண்டப்படாமல் இருக்கின்ற (என்னைப் போன்ற)  மிகச்சிறுபான்மையான சாதிகளை ஒருங்கிணைத்து  ஒரு கட்சி ஆரம்பிக்க வேண்டும்.
அதாவது தமிழக மக்கட்தொகையில் 3% க்கும் கீழே இருப்பவர்கள்!
 அதில் தமிழ்க் குடிகள் மட்டும் சேரவேண்டும்!

 ஏனென்றால்,  திராவிட ஆட்சியில் வந்தேறிகளில் மீமிகச் சிறுபான்மை சாதி வரை அரசியல் பலன் அதிகமாகவே கிடைக்கிறது.

 சாதி வாரியாக கணக்கெடுப்பு நடந்துவிட்டால் வந்தேறிகள் எங்கே எவ்வளவு இருக்கிறார்கள் என்பதும் தெரிந்துவிடும்!
 வந்தேறிகள் செய்யும் தந்திரம் என்னவென்றால் இரண்டு பெரிய சாதிகளுக்கு மத்தியில் குடியேறி அவர்களுக்குள் சண்டை மூட்டிவிட்டு நடுவில் அமர்ந்து தலைமையைப் பிடிப்பது! 
 அல்லது எந்த சாதியும் பெரும்பான்மையாக இல்லாத (நகர்ப்புறம் சார்ந்த) தொகுதியில் நின்று வெல்வது!
 பெரும்பான்மைச் சாதிகளுக்கு எதிராக இயல்பாகவே சிறுபான்மை சாதிகளின் ஆதரவு வந்தேறிகளுக்குக் கிடைக்கிறது.
 இதை மாற்றவேண்டும்!
மிகவும் சிறுபான்மை மக்கள் கவுன்சிலர் ஆவதோடு நிற்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்!
 அவ்வாறு கிடைக்கும் பதவிக்காலத்தை தமக்குள் சதவீத அடிப்படையில் சுழற்சி முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!