Monday, 6 October 2025

நெரிசல் மரணங்கள் நெஞ்சில் எழும் கேள்விகள்

நெரிசல் மரணங்கள் நெஞ்சில் எழும் கேள்விகள்

 சென்றமுறை விஜய் வேண்டுமென்றே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பீக் அவரில் மெதுவாக ரோட் ஷோ நடத்தியது அவரது கூட்டத்தை அதிகமாக்கும் நோக்கம் இருப்பதை காட்டுகிறதே?! 

 மனசாட்சி இல்லாமல் 7 மணிநேரம் தாமதமாக வந்துள்ளாரே?! 
தனக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு போதுமான உணவு தண்ணீர் இருக்கைகள் போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவில்லையே?! 

 தன்னைப் பார்த்துவிட்டால் மக்கள் கலைந்து சென்றுவிடுவார்கள் என்று வாகன ஜன்னல்களை மூடிய படி பயணித்து ரசிகர்களை தொடர்ந்து வரும்படி செய்ததாகச் சொல்கிறார்களே?!

 கூட்டத்தில் 30 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது கூட தெரியாமல் அல்லது கவலைப்படாமல் உடனடியாக பிளைட் ஏறியது எப்படி?! அப்போது களத்தில் ஒரு நிர்வாகி கூடவா இல்லை?! 

 இந்தமுறை பேசும்போது நிறைய உளறல் மற்றும் பதற்றம்.  இப்படி நடக்கவுள்ளதை விஜய் ஏற்கனவே அறிந்திருந்தாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?!

 சம்பவம் தெரிந்த பிறகும் களத்திற்கு கிளம்பி வராதது மற்றும் நிர்வாகிகளை அனுப்பாதது சந்தேகம் வரவைக்கிறதே?!

 நாளை காலையாவது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து களத்துக்கு வந்து தனது தரப்பு நியாயத்தை சொல்வாரா? அப்படி சொல்லவில்லை என்றால் சந்தேகம் அதிகமாகுமே?!
 
  சென்ற கூட்டங்களில் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை தெரிந்திருந்தும் ஏன் குறுகலான இடத்தை ஒதுக்கியது அரசு?! 

 சவுக்கு சங்கர் 'வீபரீதம் நடக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது' என்று முன்பே கூறியிருந்ததை இங்கே பொருத்திப் பார்க்கலாமா?!

 டேக் டைவர்ஸன் திட்டம் என ஏற்கனவே விஜய் கூட்டத்தை அலைக்களிக்கும் ப்ளானை செந்தில் பாலாஜி வைத்திருந்ததாக முன்பே கூறிய பத்திரிக்கை செய்தியும் இங்கே கவனத்தில் வருகிறதே?! 

 ஏற்கனவே எடப்பாடியார் கூட்டங்களில் பலமுறை ஆம்புலன்சை விட்டு நெருக்கடி ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது. அது இம்மாதிரி மரணங்களை ஏற்படுத்தவா எனும் சத்தேகம் எழுகிறதே?!

 சரியாக நெரிசல் ஏற்பட்ட நேரம் மின்தடை ஏற்பட்டதும் சந்தேகம் வரச் செய்கிறதே?!

 கும்பமேளா நெரிசல் மரணங்களுக்கு பாஜக அரசு பொறுப்பு என்று கூறிய உதயநிதி இப்போது அதுபோலக் கூறுவாரா?!
 மக்கட்பணி செய்யாமல் துணை முதலமைச்சர் துபாயில் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?! 

 மக்கள் பணத்தில் இருந்து 10 லட்சம் வாரிக் கொடுப்பது சரியா?! 
 கள்ளச் சாராயத்திற்கும் சினிமா மோகத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?!

 ஏற்கனவே பதாகை வைக்கையில் ஒரு ரசிகர் இறந்த போது விஜய் ஆறுதலோ நிவாரணமோ வழங்கவில்லை! இப்போதாவது ஏதாவது வழங்குவாரா?!

 சினிமா மோகத்தில் நடிகரை நேரில் பார்க்க காட்டும் அளவுக்கதிகமான ஆர்வம் இன்று 40 உயிர்களை காவு வாங்கும் அளவுக்கு போய்விட்டதே?! இனியாவது மக்கள் திருந்துவார்களா?!
 
 நெரிசல் ஏற்படும் என்று தெரிந்தும் அல்லது கணிக்கத் தவறியும் குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்களை என்னவென்று சொல்வது?!

  காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் போல 8 மணிநேரம் அங்கேயே தவம் கிடந்தது என்ன மாதிரியான மனநிலை?!
 
 விஜயை பார்க்க வேண்டும் என்று மரங்களிலும் மொட்டை மாடிகளிலும் குரங்குகள் போல ஏறி நிற்பது. விஜய் மீது பாய்ந்து குதற தயாராக இருப்பது போன்ற செயல்களும் உயிருக்கு ஆபத்து விளைவிக்குமே?! 
 
 சில உயிர்கள் போனால்தான் நாம் ஒரு விடயத்தைப் பற்றி பேசவே செய்வோமா?!

28.09.2025

Sunday, 5 October 2025

ரசிகர்களைப் புறந்தள்ளுவோம்

ரசிகர்களைப் புறந்தள்ளுவோம்

 உங்களுக்கு இது வினோதமாக இருக்கலாம்!
 ஆனாலும் ரசிக கூட்டத்தை மேய்க்க விஜய் போல நடந்தால்தான் முடியும்! 
 விஜய்க்கு உண்மையிலேயே இறந்தவர்கள் மீது இரக்கம் இருக்கலாம்!  
 அவர் மனசாட்சி உறுத்திக் கொண்டிருக்கலாம்!  உடனடியாக கிளம்பி இறந்த உடல்களைப் பார்க்க கால்கள் துடிக்கலாம்!
 இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து கண்ணீரைத் துடைக்க அவர் கைகள் துடிக்கலாம்! 
 ஆனாலும் அனைத்து உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு மனசாட்சி இல்லாதது போல அவர் காட்டிக் கொள்ள வேண்டும்!
 அப்போது தான் தீவிர ரசிகர்களைத் தக்கவைக்க முடியும்!
 ரசிக கூட்டம் என்று வந்துவிட்டாலே இங்கே தலைவனுக்கான வரையறை தலைகீழ்!
 அதாவது இங்கே தலைவன் என்பவன் தொண்டனுக்காக துரும்பைக்கூட அசைக்கக் கூடாது!
 தப்பித் தவறி கூட நல்லது செய்யக்கூடாது!
 ரசிகனிடமிருந்து எல்லாவற்றையும் உருவி எடுப்பவனாக மட்டுமே இருக்க வேண்டும்!
 அப்படி ஒருவனைத்தான் இந்த ரசிக கூட்டம் விரும்பும்!

 இதுவே விஜய் இறந்தவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்தியிருந்தாலும் இந்த கூட்டம் அவரை விட்டுவிட்டு வேறு ஒருவனை தேடும்!

 இந்த கொடூரமான தற்கொலை மனநிலைதான் அன்று அந்த கூட்டத்தில் அனைவருக்கும் இருந்திருக்கும்!
 இவர்களுக்கு நல்லவர்கள் தம்மைப் பார்த்து பதறுவதில் அலாதி இன்பம்!

 இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு பதில் கிடையாது!
 ஆனால் இது நடக்கிறது! உலகம் முழுவதும் நடக்கிறது! 

 சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள் பிறர் தம்மை ஏறெடுத்துப் பார்க்க அல்லது ஒரு நொடி திரும்பிப் பார்க்க இப்படியான கேவலமான கொடூரமான செயல்களை செய்வார்கள்!
 தாழ்வு மனப்பான்மையின் உச்ச வடிவம்தான் ரசிக மனநிலை! 

 இதை தடுக்க நாம் என்ன செய்வது! 
 இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் இருந்தாலே போதும்!
  கடந்து சென்றுவிட்டாலே போதும்!
பொதுமக்கள் இவர்கள் மீது குறைந்தபட்ச மனிதநேயம் கூட காட்டாமல் புறக்கணித்தால் இந்த கூட்டம் ஒழியும்!

 வட இந்தியரில் பொதுவாக சமூக அக்கறை கிடையாது! அதனாலேயே இத்தகைய கொடூரமான கோமாளிகள் அங்கே உருவாகவில்லை! 
 
 விஜய் முகத்தைப் பார்க்க கூட்டத்தில் முண்டியடித்து நசுக்கப்பட்டு வியர்வையில் நனைந்து பல மணிநேரம் அடக்கி வைத்திருந்த சிறுநீரும் மலமும் வெளிவந்து கேவலமாக இறந்து கிடந்தவர்கள் மீது எனக்கு எந்த இரக்கமும் ஏற்படவில்லை! 
 ஏனென்றால் அவர்கள் சாக வேண்டியவர்கள் தான்!

 ஆனால் பாதிப்பட்டோரில் வேறு காரணங்களுக்காக அந்த கூட்டத்தில் போய் சிக்கியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! 

 இனி இப்படியொரு நிகழ்வு நடக்காமல் இருக்க இந்ந ரசிகவெறி கும்பல் அதிகாரத்தை நோக்கி நகர்வதை தடுப்போம்!
 
 இவர்கள் நண்பனோ உறவினரோ எவராயிருந்தாலும் மனிதநேயம் உள்ளவர்கள் புறக்கணிப்போம்! 

 ( 1 ம் தேதியே எழுதிய பதிவு)

 



 
 



 

Thursday, 18 September 2025

கச்சத்தீவு தாரைவார்ப்பு கருணாநிதி பங்கு

கச்சத்தீவு தாரைவார்ப்பு கருணாநிதி பங்கு

 புனித ஜார்ஜ் கோட்டையில் 19.06.1974 இல் நடந்த ஒரு சந்திப்பு பற்றிய ஆவணம் RTI மூலம் பெறப்பட்டுள்ளது.
 இது அன்றைய வெளியுறவுத்துறை செயலாளர் அளித்த அறிக்கை ஆகும்.
 அன்றைய தினம் வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, தலைமை செயலர் பி.சபாநாயகம், உள்துறை செயலர் எஸ்.பி.ஆன்ட்ரூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 அப்போது முன்னுரையில் 1973 இலேயே அக்டோபர் 13 மற்றும் 19 தேதிகளில் டெல்லியில் இது தொடர்பாக ஏற்கனவே முதல்வரோடு நடந்த பேச்சுவார்த்தை பற்றி மீள நினைவு படுத்தினார் உள்துறை செயலர்.
 அதில் 1973 அக்டோபர் 13 தமிழ அரசிடம் பேசிய பிறகே 14 தேதி இலங்கையுடன் இந்திய அரசு பேசத் தொடங்கியது. அதன் பிறகு அக்டோபர் 19 தேதி கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி முழுமையாக தமிழக அரசுக்கு விளக்கப்பட்டு நன்கு கவனிக்கவும் முழுமையாக விளக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
 அப்படி நினைவு கூர்ந்த பிறகு தற்போது ஒப்பந்தம் தொடர்பான தமிழக அரசின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்க இந்த கூட்டம் என்று கூறி பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை பிரதிநிதியாக இலங்கை இந்தியா இடைப்பட்ட பாக் நீரிணைப்பு சுமூகமாக பங்கு பிரிக்கப்பட ஒத்துழைக்குமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக்கொண்டு சந்திப்பை தொடங்கி வைத்தார். 
 இந்த ஒப்பந்த ஏற்பாட்டுக்கு தான் முழுமையாக உடன்படுவதாக முதலமைச்சர் கருணாநிதி உறுதியளிக்கிறார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக தன்னால் இதை வெளிப்படையாகச் செய்யமுடியாது என்றும் ஆனால் இது பெரிய பிரச்சனையாக மாறாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதியளிக்கிறார்.
 இதைப் பாராட்டிய வெளியுறவுத்துறை செயலர் மத்திய அரசுக்கு எதிராக இந்த பிரச்சனை திரும்பக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதை அறிக்கையாக மத்திய அரசுக்கு அளித்த ஆவணமே தற்போது வெளியிடப்பட்டது.

 அதாவது 1973 லிருந்தே மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்திவந்துள்ளது!
கருணாநிதியிடம் பேசிய பிறகே இலங்கையிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது!
  ஆனால் இதே கட்சிதான் மத்திய அரசை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கச்சத்தீவு கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வருகிறது.
  மத்திய அரசு 1974 இல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த ஒப்பந்தமும் 1976 இல் மீன்பிடி உரிமைகள் பறிக்கப்பட்டதற்கும் கடந்த 20 ஆண்டுகளில் 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும் 1175 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் யார் காரணம் என்று இந்த ஆவணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்

 - தற்போதைய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் அளித்த பேட்டியிலிருந்து 

Tuesday, 9 September 2025

திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு முக்கிய பதவி கிடையாதா

திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு முக்கிய பதவி கிடையாதா?’- 
அதிகார தீண்டாமையை கடைபிடிக்கும் அறிவாலயம்
By இரா.வினோத்


திமுகவின் 71 ஆண்டு கால வரலாற்றில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகள் இதுவரை ஒரு முறை கூட பட்டியல் வகுப்பினருக்கு வழங்கப்படவில்லை. தற்போது காலியாக இருந்த பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் ஒன்று ஆ.ராசாவுக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. சமூக வலைதளங்களில் திமுகவினரால் கொண்டாடப்படும் ஆ.ராசா பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் சமூக நீதி கொள்கையை கேள்வி எழுப்புகிறது.


சத்தியவாணி :-
கடந்த 1949-ல் திமுக.வை அண்ணா தொடங்கிய போது முன்னணி தலைவர்களாக இருந்தவர்களில் ஒருவர் சத்தியவாணி முத்து. பட்டியல் வகுப்பினரான அவர், கட்சிக்காக கர்ப்பிணியாக இருந்த போதும் சிறை கொட்டடியை அனுபவித்தவர். அதனால் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராகவும், ஆட்சியில் அமைச்சராகவும் உயர்ந்தார். அண்ணாவுக்கு பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் புறக்கணிக்கப்பட்ட சத்தியவாணி முத்து, `தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்' என்ற தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் அதிமுக.வில் இணைந்தார். அவருக்கு எம்ஜிஆர் மத்திய அமைச்சர் பதவி வழங்கினார்.


கடந்த 1959 சென்னை மாநாகராட்சி தேர்தலில்தான் திமுக.வுக்கு அரசியலில் முதல் வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியை பெற்று தந்தவர்கள் ஒருங்கிணைந்த சென்னையின் மாவட்ட செயலாளர்களாக இருந்த ஏ.கே.சாமியும், இளம்பரிதியும். இருவரும் பட்டியல் வகுப்பை சேர்ந்த செல்வாக்கான தலைவர்கள். இந்த வெற்றி தந்த தன்னம்பிக்கையிலே அண்ணா, `ரிப்பன் கோட்டையை கைப்பற்றி விட்டோம். இன்னும் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஜார்ஜ் கோட்டையையும் கைப்பற்றுவோம்'' என்றார்.

பட்டியல் வகுப்பினர் திமுக.வை ஆதரித்ததால் 1980-களில் தமிழகம் முழுவதும் வெல்ல முடிந்த எம்ஜிஆரால் சென்னையில் மட்டும் அவரால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. சென்னையில் திமுக.வின் தளபதிகளாக இருந்த ஏ.கே.சாமி, இளம்பரிதி, வை.பாலசுந்தரம் போன்ற ‌பட்டியல் வகுப்பினர் ஓரங்கட்டப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினர். அதன் பிறகே சென்னையில் திமுக தோல்வியை தழுவ தொடங்கியது.


குறிஞ்சிப்பாடி ராஜாங்கம், ஓ.பி.ராமன், டாக்டர் ராமகிருஷ்ணன் போன்ற பட்டியல் வகுப்பு தலைவர்களால் ஆட்சியில் அமைச்சர் பதவி பெற முடிந்தாலும், கட்சியில் பெரிய பொறுப்புக்கு வர முடியவில்லை. பொள்ளாச்சி பொதுத் தொகுதியில் வென்ற சி.டி.தண்டபாணி, முரசொலி மாறனை விட டெல்லியில் செல்வாக்காக இருந்தார். நாடாளுமன்ற துணைக் குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவர், முரசொலி மாறனுக்காக பலி கொடுக்கப்பட்டார்.

கடந்த 1980-களில் திமுக இளைஞர் அணியை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பரிதி இளம்வழுதி. பட்டியல் வகுப்பை சேர்ந்த அவர், மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமாக செயல்பட்டு, 6 முறை எம்எல்ஏ.வாக வெற்றிப் பெற்றார். ஆட்சியில் அமைச்சர் பதவியை பெற முடிந்த அவரால் கட்சியில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை மட்டுமே அடைய முடிந்தது. ஒரு கட்டத்தில் திமுக.வில் ஒதுக்கப்பட்டதால் பரிதி இளம்வழுதியும் கட்சியில் இருந்து விலகி, அதிமுக.வில் இணைந்தார்.

இதனால் பரிதி இளம்வழுதி வகித்த துணை பொதுச் செயலாளர் பதவி, மற்றொரு பட்டியல் வகுப்பில் அருந்ததியர் பிரிவை சேர்ந்த வி.பி.துரைசாமிக்கு வழங்கப்பட்டது. திமுக.வில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டிய வி.பி.துரைசாமி, 2-வது முறையாக அக்கட்சியில் இருந்து விலகினார். பாஜக.வில் இணைந்த அவருக்கு உடனடியாக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசி ஆட்சியைப் பிடித்த திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. பிரதான பதவிகளில் தொடங்கி மாவட்ட செயலாளர், நகர செயலாளர் பதவி வரை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 65 மாவட்ட செயலாளர்களைக் கொண்ட அக்கட்சியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒரே ஒருவருக்கு மட்டுமே அந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

பச்சை அக்கரை:- 
திமுக.வில் பட்டியல் வகுப்பினர் புறக்கணிக்கப்படும் அதே வேளையில், எம்ஜிஆர் அதிமுக.வை தொடங்கியவுடன் அவ்வகுப்பை சேர்ந்த எஸ்.எம்.துரைராஜூக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து சௌந்தர பாண்டியன் என்பவருக்கு பொருளாளர் பதவியும், தொழில்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. பட்டியல் வகுப்பை சேர்ந்த டாக்டர் வேணு கோபாலுக்கு, ஜெயலலிதா நாடாளுமன்ற குழு தலைவர் பதவியை வழங்கினார். சாதி பாகுபாட்டுக்கு ஆளான தனபாலுக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவியும், உணவுத் துறை அமைச்சர் பதவியும் வழங்கினார். ஏ.எஸ்.பொன்னம்மா, செ.கு.தமிழரசன் ஆகிய பட்டியல் வகுப்பினரை தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராகவும் நியமித்தார்.

அதே போல காங்கிரஸில் பட்டியல் வகுப்பை சேர்ந்த மரகதம் சந்திரசேகருக்கு நேரு அமைச்சரவையிலும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் என்ற பெரும் பதவியும் வழங்கப்பட்டது. முனுசாமி பிள்ளை, கக்கன், டி.ஆர்.பரமேஷ்வரன், ஜோதி வெங்கடாசலம் போன்றவர்களுக்கு முறையே உள்ளாட்சித் துறை, உள்துறை, இந்து அறநிலையத் துறை, சுகாதாரத் துறை வழங்கப்பட்டது. ஜோதி வெங்கடாசலத்துக்கு கேரள மாநில ஆளுநர் பதவி கூட வழங்கப்பட்டது. பட்டியல் வகுப்பை சேர்ந்த இளையபெருமாள் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதோடு, தேசிய ஆணையத்தின் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இன்னொரு தேசிய கட்சியான பாஜக.வும் பட்டியல் வகுப்பை சேர்ந்த டாக்டர் கிருபாநிதியை 2000-ம் ஆண்டு மாநிலத் தலைவராக நியமித்தது. கடந்த மார்ச் மாதம் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச்சில் எல்.முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக.வினரால் பிற்போக்கான கட்சியாக சொல்லப்படும் பாஜக.வில் எவ்வித பின்புலமும் இல்லாத முருகனால் தலைவராக முடிகிறது. முற்போக்கான கட்சியாக சொல்லப்படும் திமுக.வில் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர், எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் பிரதான பதவிக்கு வர முடியாதது ஏன்?

திமுக.வில் பிற வகுப்பினர் தாக்குப் பிடித்து பிரதான பதவியை பிடிக்க முடிகிறது. ஆனால் பட்டியல் வகுப்பினர் சத்தியவாணி முத்துவில் தொடங்கி வி.பி.துரைசாமி வரை அக்கட்சியில் தாக்குப் பிடிக்க முடியாமல், தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றனர். ஒரு காலத்தில் பட்டியல் வகுப்பினரின் கட்சி என அழைக்கப்பட்ட திமுக.வில், இன்று அவ்வகுப்பினர் இல்லாத கட்சியாக மாறி இருக்கிறது. சமூக நீதி, சாதி ஒழிப்பு பேசி, பெரியாரின் பெயரை மேடைதோறும் உச்சரிக்கும் திமுக, அதனை கட்சியில் கடைப்பிடித்து, 20 சதவீத மக்கள் தொகை கொண்ட பட்டியல் வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்குமா?

நன்றி: Hindu Tamil 
08.09.2020

Sunday, 7 September 2025

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா

சசிகலா செங்கோட்டையனை புறக்கணித்தாரா
 இதோ விளக்கம்!
சசிகலா சரியாகவே நடந்துள்ளார்!
நியாயப்படி அவர் கட்டுப்பாட்டில் பலமாக இன்று இருந்திருக்க வேண்டிய அதிமுக அப்போது பாஜக வின் தூண்டுதலால் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தால் ஜனநாயகப் படுகொலை நடந்து விதிகளெல்லாம் மீறப்பட்டு சசிகலாவிடம் இருந்து பிடுங்கப்பட்டு இந்த நிலையில் இருக்கிறது! 
 அன்று வளர்மதி பாடநூல் கழகத் தலைவராக நியமித்தார், தளவாய் சுந்தரம் அரசின் சிறப்பு பிரதிநியாக நியமித்தார். இருவருமே சசிகலாவின் சமூகத்தவர்கள் கிடையாது.
 அன்று முதல்வரை நியமிக்கும் அதிகாரம் இருந்த போதும் 4 சீனியர் முக்குலத்து அமைச்சர்கள் இருந்தபோதும் மூப்பு அடிப்படையில் சீனியரான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா. 
 எடப்பாடியை விட சீனியரான நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்து இருந்தனர்.
 அன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று அவரே வெளியே போய்விட்டார்.
 செங்கோட்டையனை 2016 இல் ஜெயலலிதா வே அமைச்சராக நியமிக்கவில்லை! 
 அதனால் ஓ.பன்னீர்செல்வம் உடன் வெளியேறிய மாஃபா பாண்டியராஜன் வகித்த கல்வியமைச்சர் பதவியை செங்கோட்டையனுக்கு வழங்கினார். 
ஓபிஎஸ் வகித்த நிதியமைச்சர் பதவியை மீனவ சமுதயாத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு வழங்கினார்.
 இப்படி சசிகலா நியமித்த எவருமே முக்குலம் இல்லை! 
 இப்படி கட்சி விதிப்படி சமுதாய உணர்வில்லாமல் நியாயமாக நடந்துகொண்டார் சசிகலா!

Thursday, 28 August 2025

அடகுக்கடை விளம்பரம்

 அடகுக்கடை விளம்பரம்

 அவன் பீரோவைத் திறந்து எதையோ அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.
 அவள் பின்னாள் வந்து நின்று "நா என்ன தேடுறேன்?" என்று கேட்டாள்.
 அவன் அரைநொடி மௌனத்திற்குப் பிறகு "ஒண்ணுமில்ல! அது வந்து..." என்று இழுக்க 
 அவள் அருகே வந்து பீரோவுக்குள் கைவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்து காட்டி "இதை தானே தேடுறேன்?"
 அவன் தலைகுனிந்து நின்றான்.
 "என் பேர்ல இருக்குறதே இந்த வீடு ஒண்ணுதான்! அதுவும் நா கஷ்டப்பபட்டு கட்டினது! ஈயெம்மை கூட முடியல! அப்படி என்ன அவசரம் எனக்கு?!"
 "லோன் கிடைக்கல தங்கம்! கடைசி நேரத்துல ரிஜெக்ட் ஆயிருச்சு!" என்ற படி அவள் கழுத்தைப் பார்த்தான்
 ரெட்டை வடம் மயில் வில்லை பொறித்த தங்க சங்கிலி ஜன்னல் வழியே வந்த சூரிய ஒளிக் கீற்று பட்டு மின்னிக் கொண்டிருந்தது.
 "என் ப்ரென்டு சரவணா கிட்ட கேக்கலாம்ல?!"
"அவன் ஒரு வாரமாவது டைம் கேக்குறான்!"
 "ஒரு வாரம் கழிச்சு பணம் போட முடியாதா?!"
"இல்ல இன்னைக்கே போட்டாகணும்! இல்லைனா உன் தொழில் அவ்வளவுதான்! நீ வாக்கு வேற குடுத்துட்ட!"
அவள் அமைதியாக நின்றாள்!
 "ஒரு வாரம் இதை நம்ம காசி மாமா கிட்ட வச்சி பணம் வாங்கி சமாளிச்சு அப்பறம் கண்டிப்பா மீட்டுடலாம்"
 "சரி! என் இஷ்டம்!" என்று சொல்லிவிட்டு டக்கென்று திரும்பி சென்றாள்.
 அவன் உடைகளை உடுத்திக் கொண்டு பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளிய வந்து வாசலில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தான்!
 "மாமா...! ரொம்ப அவசரம்தான் ஆனா வட்டி ரொம்ப  அதிகமா இருக்கே! ஒரு வாரத்துல மீட்டுருவேன்! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க மாமா!"
 அவள் வாசல் பக்கம் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்!
 அவன் உறைந்து போய் வாசல் திண்டு மேல் உட்கார்ந்தான்!
 தலையை பிடித்துக் கொண்டான்.
 
 "செல்வீ....!" அவள் உள்ளே இருந்து கூப்பிட்டாள்!
அவன் சற்றே கலங்கியிருந்த கண்களை துடைத்து விட்டு உள்ளே வந்தான்! 
"என்ன தங்கம்?!"
 கையில் ஒரு பெட்டியைக் கொடுத்தாள்!
திறந்து பார்த்தான்! அதில் அந்த ரெட்டைவட சங்கிலி இருந்தது.
 அவள் கழுத்தைப் பார்த்தான்.
மெல்லிய நூல் போன்ற தாலி சங்கிலி மட்டும் கிடந்தது.
 "உன் கிட்ட கேட்ருக்கலாமே?! நீ இருக்கும்போது நான் கண்டவங்க கிட்ட  கெஞ்சுறேன்?!" என்று கொஞ்சம் கோபமாக கேட்டாள்.
 "எங்கிட்ட இருக்கிறதே இது மட்டும்தானே?! அடுத்த மாசம் எங்க வீட்டுல கல்யாணம் வருது! நா பிறந்த வீட்டுல இப்டி வெறுங்கழுத்தா போய் நின்னா உன்ன பத்தி என்ன நினைப்பாங்க?!"
 அவள் கழுத்தை தடவிப் பார்த்தான்.
அவள் அவனுடைய இரு கைகளையும் பிடித்து விரல்களைக் கோர்த்து மாலை போல கழுத்தில் போட்டுக்கொண்டாள்! மார்பில் உரசிக் கிடந்த கைகளைப் பிடித்து மார்போடு அழுத்தியபடி அவன் கண்களை ஊடுறுவிப் பார்த்து சொன்னாள்  "நான் தான் உன்னோட உண்மையான தங்கம்!".
 அப்படியே இழுத்து கண்ணோடு கண் ஒற்றினான்.
 அவள் கன்னத்தில் வழிந்த நீரில் இரண்டு கண்ணீர் கலந்திருந்தது. 

 

 

Friday, 8 August 2025

வடவரில் முஸ்லிம் எவ்வளவு

வடவரில் முஸ்லிம் எவ்வளவு

தமிழகத்தில் இருக்கும் ஹிந்தியரில் முக்கால்வாசிப் பேர் சரியான நிறுவனப் பணிகளில் முறைப்படி பணிபுரிபவர்கள் அல்லர்.
 இவர்களில் கணிசமானோர் முஸ்லிம்கள்! 

 இருக்கும் புள்ளிவிபரங்களை அலசுவோம்
 திருப்பூர், சென்னை போன்ற நகரங்களில் முறைப்படி வேலைக்கு அமர்த்தப்பட்ட வடவர்களின் புள்ளிவிபரம் த.நா. தொழிலாளர் நலத்துறையிடம் உள்ளது.
 அவர்களது எண்ணிக்கையில் முஸ்லிம் எண்ணிக்கையை கண்டறிய அவர்களது பூர்வீக மாநிலத்தில் எத்தனை சதவீதம் முஸ்லிம்கள் என்று தெரிந்தால் கணிக்கலாம்!

 உதாரணமாக மேற்கு வங்கத்தில் ஏறத்தாழ 27% முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
 அங்கிருந்து இருந்து 100 பேர் தமிழகம் வந்தால் அதில் 27 பேர் முஸ்லிம் இருப்பார்கள் என்று கொள்கிறோம்.

அப்படி கணக்கிட்டால்

ஒரிசா 286500
முஸ்லிம் (2.17%) 6217

பீகார் 247016 
முஸ்லிம் (16.87%) 41671

ஜார்கண்ட் 190518 
முஸ்லிம் (14.53%) 27681

மே.வங்கம் 184960 
முஸ்லிம் (27.01%) 49940

அஸ்ஸாம் 92105 
முஸ்லிம் (14.22%) 13097

உ.பி 89462
முஸ்லிம் (19.26%) 17230

மொத்தம் 906745
முஸ்லிம் மொத்தம் 155836
அதாவது 17%  

 இந்த சரியான புள்ளிவிபரப்படியே 9 லட்சம் பேர்!
 அதில் முஸ்லிம்கள் ஒன்றரை லட்சம் பேர்!
ஆனால் உண்மை இதைவிட பல மடங்கு அதிகம்! பெ.மணியரசன் அவர்களது புள்ளிவிபரப்படி தமிழக மக்கட்தொகை அதிகரிப்பையும் குழந்தை பிறப்பு விகிதத்தையும் வைத்து பார்த்தால் ஒரு கோடி பேர் (தமிழகத்தில் பிறக்காத மக்கள்) நுழைந்திருக்கின்றனர்.

 இதிலும் முஸ்லிம்கள் (இருக்கவேண்டிய) 17% ஐ விட மிக மிக அதிகம்!

 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வடயிந்தியா முழுக்க முஸ்லிம்களுக்கு எதிராக பொதுமக்கள் இயங்குகிறார்கள்! 
 வடக்கே ஒரு முஸ்லிம் பிறப்பிலிருந்து இறப்பு வரை பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது!
 ஏற்கனவே இந்திய அளவில் sc மக்களை விட முஸ்லிம் மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர்!
 இதனால் குற்றச் செயல்களிலும் அவர்களே அதிகமாக உள்ளனர்!
 வடக்கே பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவராக பார்க்கின்றனர்! 
 ஆரம்ப கல்விக் கூடங்களில் ஆசிரியர்கள் பாகுபாடு!
 கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள் இழிவுபடுத்துவது!
அரசு நிறுவனங்களில் வேலை கிடைக்காமை!
 தொழில் செய்வோர் சக இந்து போட்டியாளர்களை எதிர்கொள்ள முடியாமை!
 அரசியலில் சரியான தலைவர்கள் இல்லாமை!
 தினசரி வாழ்க்கையில் ஹிந்துத்துவ ரவுடிகளை எதிர்கொள்வது!
 அரசு அதிகாரிகள் போலீஸ் என எல்லா அதிகாரிகளும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை கொட்டுவது! 
 ஊடகங்கள் தீவிரவாத முத்திரை குத்துவது!

இப்படி எல்லாவகையிலும் ஒடுக்கி ஒதுக்கி தள்ளப்பட்டு தமிழகம் வருகிறார்கள்!
 
  ஒரு காலத்தில் ஐரோப்பியர்கள் கடுமையான குற்றவாளிகளை (அவர்கள் வெள்ளையராக இருக்கும் பட்சத்தில் கொல்ல விருப்பமில்லாமல்) ஆஸ்திரேலியாவில் கொண்டுபோய் விட்டுவிடுவார்களாம்! 
 அதாவது உலகத்தை விட்டே ஒதுக்கிவைப்பது!
 அப்படித்தான் இங்கே வடக்கத்தி முஸ்லிம்கள் வந்து சேர்கின்றனர்.
 இவர்களுக்கு அடுத்து வந்துசேர்வது வடக்கத்தி sc மக்கள்!
 இப்படி வருகிற வடவரில் பெரும்பாலோர் பாஜக வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்! 
 அப்படி இருக்க இவர்களில் 6.5 லட்சம் பேரை ('சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்' மூலம்) தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கவுள்ளனர்.
 
 அதாவது வடவர் வருகையில் தமிழக பாஜக வுக்கு தேர்தலில் பெரிய லாபம் ஒன்றும் இல்லை! 

 இருந்தாலும் வருகின்ற சிலரில் தமக்கு வாக்களிப்பார்கள் என்கிற எச்சை புத்தியில் இதை ஆதரிக்கிறார்கள்! 

 திமுகவும் இதற்கு உடந்தை!
இத்தனை நாள் பிராமணரைக் காட்டி ஆரியம் திராவிடம் என்று ஓட்டியாயிற்று!
 இனி இவர்களைக் காட்டி வடவன்- தென்னிந்தியன் என்று ஓட்ட வேண்டியதுதான் அவர்கள் வேலை!

 நான் முன்பே கூறியதுபோல வடவர் போரினாலோ பஞ்சத்தாலோ அல்லது நல்ல வாய்ப்புகளை அடையவோ கூட இங்கே வருவதில்லை!
 அப்படி வேறுவழியில்லாமல் இங்கே வந்தால் அவர்களை அரவணைக்கலாம்! அதுவும் நிலமை சரியாகும் குறிப்பிட்ட காலம் வரை!
 ஆனால் வடவர்கள் இங்கே வருவது தமது அரசியலில் அடைந்த படுதோல்வியின் காரணமாகத்தான்!
 எல்லா வளங்களும் இருந்தும் தன் தாய்நிலத்தில் தன் இன ஆதிக்கவாதிகளை எதிர்க்கத் துப்பில்லாமல் இங்கே ஓடி வருகின்றனர்.

 இவர்களை தமிழகத்தில் இருக்கும் எல்லா இனத்து முதலாளிகளும் பயன்படுத்திக் கொள்கின்றனர்!
 இதனால் தமிழினத் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்!
 இதனால் மோதல் நிலை உருவாகிறது!
ஏற்கனவே பின்தங்கிய நிலையில் உள்ள வடவர்கள் இங்கே தமது குடும்ப-சமுதாய கண்கானிப்பும் இல்லாமல் சுதந்திரமாக திரிவதால் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கிறது!போலிஸ் மண்டையை உடைத்ததும் 9 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் நடந்தது!
 அப்படியே முதலாளிகளுக்கும் சரியான நிரந்தரமான தொழிலாளர்கள் இல்லாமல் எல்லா தொழில்களிலும் தரம் குறைகிறது!
 (தமிழினத் தொழிலாளிகள் திராவிட ஆட்சியில் குடிக்கு அடிமையாக்கப்பட்டு கிடப்பதும் ஒரு காரணம்!)

 ஆகவே இத்தகைய குடியேற்றத்தை தடுப்பதுதான் அனைவருக்குமே நல்லது! 
அரசு தடுக்காவிட்டால் பொதுமக்கள் தடுக்க வேண்டும்!
வடவரை எந்த இடத்திலும் சிறிதளவேனும் ஆதரிப்பது கூடாது!
நமக்குள் இருக்கும் மனிதநேயம் தடுத்தாலும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்! 
 
 அவரவர் மண்ணில் அந்தந்த மண்ணின் மைந்தர் தத்தமது தேசியவாத அரசியலை வளர்த்தெடுத்து தன்னிறைவு அடைவதே நிரந்தர தீர்வு!