Thursday, 8 May 2025

பலூச்சிஸ்தான் விடுதலை

பலூச்சிஸ்தான் விடுதலை

  பலூச் மொழி பேசும் மக்கள் எப்போதுமே நேரடி ஆங்கில ஆதிக்கத்தில் இருந்ததில்லை!
 1947 இல் சுதந்திர நாடு என்று அறிவிக்கப்பட்ட பலூச்சிஸ்தானை பல்வேறு சதிகளைச் செய்து ஆக்கிரமித்தது பாகிஸ்தான்.
 ஆனால் பலூச்சிகள் துவண்டு விடவில்லை.
அன்று விடுதலைக்காக ஆயுதத்தை தூக்கிய அவர்கள் தொடர்ந்து நடந்த துரோகங்களுக்கு பிறகும் விடுதலைப் போராட்டத்தை சளைக்காமல் முன்னெடுத்து  இன்று உச்சக்கட்ட எழுச்சியில் இருக்கின்றனர்.
 பாகிஸ்தானால் இனி அவர்களுடன் மோதி வெல்ல முடியாது என்ற கட்டத்திற்கு வந்துவிட்டனர்.
 கூடிய விரைவில் விடுதலை அடைந்துவிடுவர்.
 இதை ஏதோ தாங்கள்தான் செய்தது போல ஹிந்திய அரசு பொய்க் கதைகளை பரப்பி வருகிறது.

 பலூச் மக்களின் வரலாற்றில் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் நாணித் தலைகுனிய வேண்டிய தருணங்களும் ஏராளம்!
 
 இது பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்!

  பலூச்சிகள் ஒரே மொழி பேசும் பல்வேறு இனக்குழுக்களாக சிதறி இருந்தனர்.
 ஆனால் இவர்களை 12 ஆம் நூற்றாண்டில் மொழி அடிப்படையில் ஒன்று திரட்டி ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தியவர் மீர் ஜலால் கான்.
 இவர் செய்த தவறு இவர்களுடன் வாழும் பிராகுய் இன மக்களையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டது.
  இந்த கூட்டமைப்பு அறிவிக்கப்படாத தலைமை ஒன்றை ஏற்படுத்தி அவரை அரசராகக் கொண்டு அதன் மூலம் பலூச்சிஸ்தானில் இருக்கும் பல்வேறு இன குழுக்களை ஒன்றிணைத்து நாடாக செயல்பட்டது.
 ஆனாலும் பலூச் இனக்குழுக்கள் ஒற்றுமை இல்லாமலேயே இருந்தன.
 குறிப்பாக வடக்கே இருந்த பலூச் இனக்குழுக்கள் இந்த கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் முழுமையாக ஏற்கவில்லை.
  ஆங்கிலேயர் இவர்கள் மீது படையெடுத்த போது இவர்களை பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் கட்டுப் படுத்தினர்.
 வடக்கை ஆக்கிரமித்து குத்தகை என்கிற பெயரில் ஒப்பந்தம் போட்டு தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தெற்கு பகுதியை தனக்கு அடங்கிய சுதந்திரப் பகுதியாக வைத்திருந்தனர். பலூச்சிகளின் எல்லைப் பகுதியில் கொஞ்சத்தை பிய்த்து ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தாரை வார்த்தனர்.
 இப்படி நான்காக உடைக்கப்பட்ட பலூச் தாய்நிலத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்குள் அடித்துக் கொண்டு இருந்த பலூச்சியர்கள் இனம் பெரிதென எண்ணாமல் இனக்குழுவே பெரியது என்று எண்ணி குறுகிய மனப்பான்மையுடன் இருந்தனர்.
 ஆனால் மீர் ஜலால் வம்சாவளிகளும் தெற்கு பலூச்சிகளும் பலூச்சிய கூட்டமைப்பை கைவிடாமல் பலூச்சிஸ்தானை ஒன்றிணைத்து சுதந்திர நாடாக்குவதில் குறிக்கோளுடன் செயல்பட்டனர்.
 ஆங்கிலேயர் வெளியேறும்போது பலூச் கூட்டமைப்பு வசம் உள்ள தென்பகுதியை சுதந்திர நாடு என்று அறிவித்தனர்.
 அப்போது கூட வடக்கு பலூச்சிகள் அதில் இணையவில்லை. பறிபோன எல்லைகளை மீட்பது பற்றி யோசிக்கவில்லை. இவ்வளவு ஏன் பலூச்சிஸ்தான் என்று பெயர் கூட இல்லை. 
 இந்த சுதந்திர பிரகடனத்தை அன்று இந்தியப் பிரிவினையின் போது நேரு, ஜின்னா, மவுண்ட்பேட்டன் என அனைவருமே அங்கீகரித்தனர்.
  ஆனால் பாகிஸ்தான் நாடு அமைந்த உடனேயே ராணுவத்தை அனுப்பி சுதந்திர பலூச்சிஸ்தானை ஆக்கிரமித்தது.
 அன்று அதன் மன்னர் போல இருந்த கூட்டமைப்பின் தலைவர் ஆங்கிலேயரிடம் முறையிட அவர்களும் உதவ முடியாது என்று கூறிவிட்டனர் எங்கும் ஆதரவு கிடைக்காத நிலையில் தோல்வி அடைந்து சரணடைந்த மன்னர் பாகிஸ்தானுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டார்.
  ஆனால் மன்னரின் தம்பி நவுரோஸ் கான் இதை ஒத்துக் கொள்ளாமல் தலைமறைவாகி பலூச்சிகளை ஒன்று திரட்ட முயன்றார். ஒரு தனிப்படையை திரட்டி கோரில்லா தாக்குதல்கள் நடத்தி  பலூச்சிஸ்தான் விடுதலைக்காக போராட ஆரம்பித்தார். ஓராண்டு போருக்குப் பிறகு அவரைப் பிடித்து சிறையில் தள்ளி பிறகு கொன்றது பாகிஸ்தான். 
 அப்போதும் பலூச் இனக்குழுக்கள் ஓரணியில் திரளவில்லை.
 ஆனாலும் தனித் தனியாக ஆயுதக் குழுக்கள் தொடங்கப்பட்டு எல்லா பலூச் இனக்குழுக்களும் போராட ஆரம்பித்தன.
  அன்றிலிருந்து இன்று வரை தூக்கிய ஆயுதத்தை கீழே போடவில்லை.
 பாகிஸ்தான் எவ்வளவோ முயன்றும் கொரில்லா குழுக்களை ஒழிக்க முடியவில்லை.
 பாகிஸ்தான் குரான் மீது சத்தியம் செய்து பலூச் ஆயுதக்குழுக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சத்தியத்ததை மீறி சிறைபிடித்து முதுகில் குத்தியிருக்கிறது.
 இதனாலேயே பலூச்சிகளுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டாலும் அவர்களால் பாகிஸ்தானை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 1970 களில் பூமியைத் தோண்டி எரிவாயு எடுக்கும் நாசகர திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
 அதை எதிர்த்தும் பெரிய போராட்டம் நடத்தது.
 பிறகு 2000 களில் பாகிஸ்தானின் தெற்கே கடலில் துறைமுகம் அமைத்து அங்கிருந்து காஷ்மீர் வழியே சீனா வரைக்குமான பாதை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
 பலூச்சிகளின் நிலம் பிடுங்கப்பட்டது. வளங்கள் அழிக்கப் பட்டன. அதில் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.
 இதனால் ஆயுதக் குழுக்கள் தொடர்ந்து இந்த பாதையில் தாக்குதல் நடத்தினர். 4 சீனர்களையும் கொன்றனர். 
 பாகிஸ்தான் முழுப் பலத்துடன் பலூச்சிஸ்தானில் இறங்கியது. ஆனாலும் கொரில்லா குழுக்களை வெல்ல முடியவில்லை.
  2000 களில் தான் இந்த இன குழுக்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டான பலூச்சிஸ்தான் ராணுவத்தை நிறுவினர்.
  பலூச் மக்கள் இப்போதுதான் மொழி அடிப்படையில் ஓரணியில் திரண்டு பெரும் எழுச்சி பெற்று அரசை எதிர்த்து சுதந்திர தாகத்துடன் போராடி வருகின்றனர்.
 இன்னொரு ஹிந்தியாவான பாகிஸ்தான் உடையட்டும்!
 தேசிய இனமான பலூச்சியர் விடுதலை அடையட்டும்!
 தமிழர் தனிநாடு அமைக்க முன்மாதிரியாக விளங்கட்டும்! 
 

 

No comments:

Post a Comment