Monday, 12 May 2025

செந்தூர் என்பதே sindoor

செந்தூர் என்பதே sindoor

 தூர் என்பது பொடி எனும் பொருள் தரும்.
தூரல் - சிறு சிறு மழைத்துளிகள் 
தூர்ந்து போதல்- சிறு மணல் சேர்ந்து மேடாகுதல்.
தூர் வாருதல் - படிந்த நுண் மணலை அள்ளுதல்
தூர்த்தல் - சிறு மணலை அள்ளுதல் அதாவது சுத்தம் செய்தல் (திருநெல்வேலி வழக்கு)

 இவ்வாறாக செந்தூர் என்பது சிவந்த பொடியைக் குறிக்கும். இதுவே குங்குமம் ஆகும்.
 தூரம் ஆவது என்பது மாதவிலக்கைக் குறிக்கும் என்பதை நோக்குக.
 செந்தூரப்பூ சிவந்த நிறமுடையது.
 இது வடக்கே உள்ள குங்குமப்பூ  என்றும் செம்பருத்திதான் செந்தூரப்பூ என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.
 அதேவேளை செந்தூர் பயன்பாடு ஆண்பாலுடன் தொடர்புடையது.

 செந்தூரன், செந்தூரப் பாண்டியன், திருச்செந்தூர் போன்றவை இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டவை.

 வடக்கே சென்ற இச்சொல் சிந்தூர் என்றாகி மீண்டும் தமிழுக்கு வந்து செந்தூரம் என்றானது.

No comments:

Post a Comment