சேனைத்தலைவர் என்றே பதிவோம்
சேனைத்தலைவர் உறவுகளே!
நான் பிறந்த தமிழ்க் குடியே!
நடக்கவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது நமது குடிப்படங்களான மூப்பனார், முதலியார், செட்டியார், பிள்ளை போன்ற பின்னொட்டுப் பெயர்களையும் தவிர்த்து
சேனைக்குடையார், சேனைக்குடியர், சேனையர், இலைவாணியர், கொடிக்கால் பிள்ளை போன்ற கொஞ்சம் மருவிய குடிப் பெயர்களையும் தவிர்த்து
"சேனைத்தலைவர்" எனும் நமது உண்மையான குடிப் பெயரை மட்டுமே சாதியாக கணக்கெடுப்பிலும் சாதித் சான்றிதழ் இலும் நமது பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
"சேனைத்தலைவர்" என்ற 7 எழுத்துகளே நமது முதல் இலக்கிய சான்று படி நமது அடையாளம் ஆகும்.
கி.பி. 6ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு குறிப்பிடும் "செங்குந்தப் படையர் சேனைத்தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்.." எனும் வரிகளே அந்த சான்று!
நாம் தமிழ்க்குடி அதிலும் போர்க்குடி என்பதற்கான வெளிப்படையான சான்றும் "சேனைத்தலைவர்" எனும் பெயரே!
இந்நாள் வரை இப்பெயரை அழியாமல் காத்து வந்த நாம் இனியும் அந்தப் பெயரை விட்டுக் கொடுக்கக் கூடாது!
அதே நேரத்தில் அந்த பெயருக்கு ஏற்றாற்போல தமிழினத்தை சூழ்ந்திருக்கும் ஆபத்திலிருந்து காக்கவும் முற்பட வேண்டும்!
தமிழினத்தில் வெறும் அரை சதவீதம் இருந்தாலும் நாம் முக்கியமான குடி!
சேர, சோழ, பாண்டியருக்கு அடுத்து படைத் தலைவர்களாக நாட்டை கட்டியாண்டது நாமே!
போர் வீரர்கள் லட்சக்கணக்கில் இருப்பர் ஆனால் அவர்களுக்கு தளபதிகள் சிலரே இருப்பர்!
அந்த வகையிலேயே நாம் சிறுபான்மையாக உள்ளோம்!
பிற போர்க்குடிகள் போல பழைய வரலாறுகளை தோண்டி எடுத்து நேரத்தை வீணாக்காமல் நாம் புதிய வரலாறு படைப்போம்!
மரத்திலிருந்து கிளை போல நாம் சக தமிழ்க்குடிகளில் இருந்தே வந்தோம்!
இன்று அனைத்து தமிழ்க் குடிகளையும் ஏற்றத்தாழ்வு இன்றி அரவணைத்து வழிநடத்தவேண்டிய பெரும் பொறுப்பும் நமக்கு உள்ளது!
தமிழரில் எவர் ஆளும் பொறுப்புக்கு வருகிறாரோ அவரே மூவேந்தர் வாரிசு!
அப்படி நாமோ அல்லது சக தமிழ்க்குடி ஒருவரோ அரியணைக்கு உயர்ந்தால் அதற்கு தோள்கொடுக்க வேண்டியதும் அரணாக நிற்க வேண்டியதும் நமது கடமை!
சுருங்கச் சொன்னால்
தமிழரைத் தமிழர் ஆள வேண்டும்!
அப்படி ஆள வைத்தவன் சேனைத்தலைவன் என்றிருக்க வேண்டும்!
சேனைத்தலைவர் என்றே பதிவோம்!
சேனைத்தலைவர் என்பதை நிரூபிப்போம்!
நன்றி!
No comments:
Post a Comment