Monday 8 March 2021

திருநங்கை குடியேற்றம்

திருநங்கை குடியேற்றம்

தனித் தமிழர்நாடு புத்தகத்தில் சொல்லப்படாத ஒரு குடியேற்றம் இருக்கிறது என்றால் அது சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் திருநங்கையர் குடியேற்றம்.

இது அதிகம் கவலைப்பட வேண்டிய விடயம் இல்லைதான். இந்திய ஒன்றியத்தில் திருநங்கையர் மொத்தமே ஐந்து லட்சம் பேர்தான் என்றாலும் இவர்களது குடியேற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

வழக்கம்போல தமிழர்கள் திருநங்கையர் விடயத்தில் மற்றவர்களை விட நல்லவர்களாக நடந்து கொள்கின்றனர்
(நல்லவனாக இருந்ததால்தானே நாம் நாசமாகப் போனோம்).
ஜெயலலிதா இவர்களுக்கு குடியிருப்பு, கல்வியில் சலுகை, ரேசன் மற்றும் பெண்களுக்கான சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி என்று நிறைய நல்லதுகளைச் செய்தார்.
நாம் தமிழர் கட்சி முதல்வர் வேட்பாளரை எதிர்த்து ஒரு திருநங்கையை நிறுத்தும் அளவுக்கு அங்கீகாரம் கொடுத்தது.

அது என்ன ராசியோ தெரியவில்லை. இதுவரையான மக்கட்தொகை கணக்கெடுப்பை உற்றுநோக்கினால் தென்னிந்தியாவில்  ஆந்திராவில் திருநங்கையர் மிக அதிகமான இருக்கிறார்கள் அதாவது மாநில ஆண், பெண் விகித்ததுடன் ஒப்பிடும்போது ஆந்திராவில் மிக அதிகமாகவும் கேரளாவில் மிகக் குறைவாகவும் இருக்கிறது.
ஆனால் பிற தென்னிந்திய மாநிலங்களை விட தமிழகமே இவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இதுவே தென்னிந்திய திருநங்கைகள் தமிழகத்திற்குப் படையெடுக்கக் காரணம்.
இயற்கையே சபித்துவிட்ட இவர்கள் வாலிபப் பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பிற திருநங்கையருடன் சேர்ந்துகொள்கின்றனர்.

இவர்களுக்கு என்று ஒரு கட்டமைப்பு இருக்கிறது. நகரங்களில் குழுவாக இருக்கும் இவர்கள் ஒரு வயதான திருநங்கையின் தலைமையில் ஒரு குடும்பம் போல இயங்குவார்கள். இப்படியான குழுக்கள் தங்களுக்குள் ஏரியா பிரித்துக்கொண்டு அதற்குள் இரவில் விபச்சாரம் மற்றும் பகலில் பிச்சையெடுத்தல் ஆகியவற்றைச் செய்கின்றனர்.

டீனேஜ் காலத்தில் பிச்சையெடுத்து சம்பாதித்து கொடுப்பார்கள். உணவு உடை மற்றும் 25 வயது வாக்கில் ஆணுறுப்பை நீக்கும் ஆபரேசனுக்கு குழு பணம் வழங்கும்.

மும்பையில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் சட்ட விரோதமாக செய்யப்படும். மருத்துவமனையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை தவிர கோவில்களில் செய்யப்படும் பழங்கால முறையும் உண்டு.
(கோவில்களில் நிறைய சாராயம் கொடுத்து ஆணுறுப்பை கத்தியால் அறுத்து பஞ்சைவைத்து கட்டுப்போட்டு ஒரு குழியில் படுக்க வைப்பார்கள். அதிக ரத்தப் போக்கினால் உயிரிழந்துவிட்டால் அப்படியே புதைத்துவிடுவார்கள். உயிரிழக்க அதிக வாய்ப்பு உண்டு)

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு விபச்சார கூடங்களுக்கு ஏலம் விடுவார்கள். சில விபச்சாரக் கூடங்கள் அறுவைசிகிச்சை செலவைச் செய்து வாங்கிக் கொள்வார்கள். சில விபச்சாரக் கூடங்கள் பார்க்க பெண்போலவே இருப்பவர்களை இளம்வயதிலேயே வாங்கி அவர்கள் உடல் பெண்போலவே ஆக சுரப்பிகள் இயங்க ஊசி, மருந்து போட்டு அறுவை சிகிச்சையும் செய்து தொழிலில் விடுகிறார்கள்.

பிற விபச்சாரக் கூடங்கள் போலவே இங்கும் விபச்சாரத்தில் நேரடியாக ஈடுபடும் திருநங்கைக்கு பெரிய லாபம் எதுவும் இருக்காது. எல்லாமே இவர்கள் குழுத் தலைவி, போலீஸ், தரகர்கள், விடுதிகள் என போய்விடும்.
40 வயதுக்கு மேல் மறுபடி பிச்சை எடுப்பார்கள் இவர்களது குழு இவர்களுக்கு கடைசிவரை ஆதரவாக இருக்கும்.
திருமணம் எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.

41% திருநங்கையர் கணக்கெடுப்பில் தொழில் என்ற இடத்தில் மற்றவை என்றே கூறியுள்ளனர்.
அதாவது தற்போதைய நிலையில் திருநங்கைகளுக்கு விபச்சாரம் செய்வதைத் தவிர வேறுவழியில்லை. தமிழகத்தில் ஏற்கனவே தேவதாசி முறை இருந்த காலத்தில் இருந்தே கன்னட தெலுங்கர்களே விபச்சாரம் செய்துவருகின்றனர். தற்போது தமிழகத்தில் பெரிய நகரங்கள் முதல் சிறு டவுன்கள் வரை பிற மாநில திருநங்கைகள் குடியேறியுள்ளனர்.
குடியிருப்பும் பெண்களுக்கான சலுகை மூலம் ஸ்கூட்டியும் வாங்கிக் கொள்கின்றனர்.
இளம் வயது ஆண்களிடம் மிரட்டி 50 ரூபாய் வரை பிச்சைவாங்குவது பரவலாக நடக்கிறது. 
(வடயிந்தியாவில் அதுவும் ரயிலில் ஆண்களே மீசை தாடியை மழித்துக்கொண்டு சேலையைக் கட்டிக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள் அந்த அளவு வருமானம்)
இரவில் பேருந்து நிலையங்களில் நின்று விபச்சாரத்திற்கு ஆள் பிடிக்கிறார்கள்.
அதனால்தான் இவர்களது குடியேற்றத்தால் விபச்சாரம் பெருகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்.

மாநில அரசு இப்படியான பிற மாநிலத்தார் குடியேற்றங்களைத் தடுக்க வேண்டும்.
தனது மாநில திருநங்கைகளுக்கு கல்வி வழங்க போதிய ஏற்பாட்டைச் செய்யவேண்டும். பெற்றோரும் திருநங்கையரை விரட்டாமல் பிற பிள்ளைகள் போலவே வளர்க்கவும் வேண்டும்.
சமூகமும் இவர்களை சக மனிதர்களாக ஏற்க வேண்டும். அரசும் இவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடவொதுக்கீடு அளிக்கவேண்டும். அரசு சாரா நிறுவனங்களும் சிறு தொழிலகங்களும் திருநங்கையருக்கு வேலை வழங்க முன்வரவேண்டும்.

இதையெல்லாம் விட திருநங்கையர் விபச்சாரத்திற்குப் போகாமல் மற்றவர்கள் போல படித்து வேலைக்குச் செல்ல முயற்சிக்க வேண்டும்.

திருநங்கையரை பிறர் ஏளமாகப் பார்க்க முதல் காரணம் அவர்களது தோற்றம் அல்ல செய்யும் தொழிலும் நடந்துகொள்ளும் முறையும்தான்.

நாகரீகமாக உடையணிந்த படித்த வேலைக்குப் போகிற ஒரு திருநங்கையாக முயற்சி செய்வதே இதையெல்லாம் மாற்றும்.

18.01.2021

No comments:

Post a Comment