அரேபிய கலாச்சாரம்
------------
நாள்: 02.12.2047
நேரம்: இரவு 11 மணி...
பிரபாகரன் படம் பொறித்த அந்த கார் ஆள் அரவமற்ற சாலையில் சென்று கொண்டிருந்தது.
"வேகமா போங்களேம்ப்பா"
"ஏன்டா?...
கார் ஓட்டும்போது இளையராஜா பாட்டு கேக்குறது என்ன ஒரு சுகம்?!"
 
ஜிங்குன ஜிங்குன ஜனஜம் 
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்....
ஜிங்குன ஜிங்குன ஜனஜம் 
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம் 
கொத்தமல்லி வாசம் ....
கொத்துகொத்தா வீசும்...
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்....
வெண்ணயிலே மாமா நெய்வாசம்...
எந் திண்ணையிலே மாமா உன் வாசம்...
ஹேய்... 
வாம் முனிம்...
 "என்னப்பா நிறுத்திட்டீங்க?"
 "இந்த பாட்டு இந்த வரி வரைக்கும்தான் இளையராஜா பாட்டு மாதிரி இருக்கும்.
 அப்பறம் கானா பாட்டா மாறிடும்.
தேவா மேல எனக்கு இது ஒரு பெரிய வருத்தம்.
 அப்டியே முழு பாட்டா வந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்?!"
 திடீரென்று கார் நிறுப்படுகிறது.
அதன் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
"என்னாச்சுப்பா?!"
(மென்மையான குரலில்)
"முகில்! மெதுவா எறங்கி கொஞ்சம் பின்னாடி போய் புதர்ல ஒழிஞ்சிக்கோ!
இந்தா என் செல்போன்.
 இதுல சக்திவேல் னு ஒரு அவசர நம்பர் இருக்கா?! 
அதுக்கு நாம இருக்குற எடத்த சொல்லி. ஒடனே ஆட்களோட வரச்சொல்லு.
சைலன்ட்ல போட்டுக்கோ!"
"அப்.."
"எதுவும் பேசாதே! சீக்கிரம் போ"
சிறுவன் இறங்கிக்கொள்ள
கார் பத்தடி முன்னே செல்கிறது.
திடீரென்று ஒரு சிறியரக சரக்கு வண்டி மறைவிலேயே வெளியே வந்து  சாலையை மறித்தவாறு நிற்க கார் நிறுத்தப்படுகிறது.
ஏழு பேர் கொண்ட கும்பல் வண்டியை சுற்றிவளைக்கிறது.
 அதில் இருவருக்கு வயது நாற்பதுக்கு மேல்.
 மற்றவர்களுக்கு பதினெட்டு முதல் இருபது வயது.
 அனைவரும் அரைக்குல்லா, கண்மை, கொத்து தாடி, ஜிப்பா, முழங்காலுக்கு மேல் வெள்ளை லுங்கி என்று ஒரே மாதிரி உடை அணிந்திருந்தனர்.
 "டேய் ரவூப்! கீழ எறங்குடா"
 "ரவுப் இல்லடா! தமிழ்ச் செல்வன்! த்தூ!"
 வண்டியை விட்டு தமிழ்ச் செல்வன் கீழே இறங்குகிறார்.
 "ஏ இவன பாருங்கடா! நெத்தில சாணிப்பொடி!  பளபளனு சட்ட! ஜரிக வேட்டி! கழுத்துல வேல் ! இவன பாக்க நம்மாளு மாதிரி இருக்கா?! இருந்த கொஞ்ச நஞ்ச இரக்கமும் போச்சு"
 "வேற எப்படிப்பா இருக்கணும்?! அல் கொய்தா கமான்டர் மாதிரி இருக்கணுமா?!
 இப்பிடி மாறுவேசம் போட்டு அலையவா மார்க்கம் சொல்லுது?!
 நீங்க பின்பற்றுரது இஸ்லாத் இல்ல அரேபிய கலாச்சாரம்.
 வடக்க திருநீறு பூசின ஒரு இந்துவ காட்டு பாப்போம்!
 நா இப்பவும் முஸ்லிம்தான்"
 "கழுத்துல என்ன வேல்?! ஓகோ முப்பாட்டன் முருகனா?! அல்லாவுக்கு எதையும் இணைவைக்கலாமா?!"
 "கடவுள் ஒருத்தர்தான் 
அதுக்காக அம்மா அப்பா தாத்தா பாட்டியை நன்றியோட நினைக்கக்கூடாதுனு இருக்கா?!
 முருகன் எங்க முப்பாட்டன்.
குரானும் பைபிளும் சொல்ற இப்ராகிமும் நோவாவும் மாதிரி முருகன் நம்ம முன்னோர்.
 அவர் கடவுளா இருக்கார்னு நாங்க சொல்லலயே!
 பிரபாகரன் மாதிரி அவரும் நமக்கு ஒரு வழிகாட்டி"
"ச்சீ வாய மூடு! நமக்குனு சொல்லாத! நாங்க வேற"
 "ஒன்னோட மொகரய பாத்தாலே தெரியுது! நீ நம்மாளுதான்.
 உன்னோட வீடு எந்த தெரு, உன் அப்பன் தாத்தன் என்ன தொழில்னு சொல்லு நீ என்ன ஆளுகனு சொல்றேன்.
 இதோ இந்த செவத்தவன் பேச்ச கேக்காத.
 இவன் வெளில இருந்த வந்த வந்தேறி"
 "டேய்! யாரப் பாத்துடா வந்தேறின்ன அவர் நம்ம சமூகத்துக்கு எவ்வளவு செஞ்சிருக்காரு.
பச்ச துரோகி நீயெல்லாம் அவரப்பத்தி பேசலாமா?!"
 "யாரு?! நீ நம்ம தங்கப்பா பேரன்தானே?!
உன் தாத்தா முஸ்லீமா மாறியும் பேர மாத்தாம இருந்தவரு!
 வாய்ல நுழையாத பேர வச்சாதான் அல்லா ஒத்துக்குவானானு கேப்பாரு!
 நீயென்னடான்னா உன் பிள்ளைய தமிழ் படிக்க அனுப்பாம பள்ளிவாசல்ல உருது படிக்க அனுப்புற?!
 நேத்து மதம் மாறின ஆட்கள்தான்டா ரொம்ப கொதிக்கிறீங்க!
நான் பரம்பரை முஸ்லீம்.
 எங்க கட்சியோட துணைத்தலைவர் ஒரு மரைக்காயர்.
அவங்க ஆயிரம் வருசமா முஸ்லீம்.
அவர்ட்ட பேசுறியா?"
 "யாரு முத்துமீரான சொல்றியா?! 
 அவனென்ன... உங்க பெரிய தலைவரே யாழ்ப்பாணத்துல இருந்து  எங்கள துரத்திதான விட்டாரு!
 காத்தான்குடி கொலையை நாங்க மறக்கமாட்டோம்"
 "என்னோட பெரிய தலைவன் அது பத்தி விளக்கம் கொடுத்து மன்னிப்பு கூட கேட்ருக்காரு.
 எங்க அண்ணனும் பல தடவ வெளக்கம் சொல்லிட்டாரு.
 சிங்கள பொதுமக்களயே கொல்லாத தலைவர் தன்னோட இனத்து முஸ்லீம்களையா கொல்வாரு. 
எல்லாம் உங்கள மாதிரி மதவெறி பிடிச்ச ரவுடி கும்பல்களால வந்த வினை.
 உங்களால இங்கயும் அதுதான் நடக்கும்.
 உலகமே முஸ்லீம்கள கைவிட்டமாதிரி தமிழ்நாடும் கைவிடும்.
 எங்கள மாதிரி தமிழ் கலாச்சாரத்துக்கு மாறிடுங்க.
 நாலு சுவத்துக்குள்ள மதத்த வச்சிக்கோங்க.
 எங்க அண்ணன்தான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு"
"பெரிய நொண்ணன்.
 அந்த ஆமவாயன் பெரிய மாமா நீ சின்ன மாமா ரெண்டுபேரும் சேந்து கூட்டிக் கொடுக்குறீங்க.
 இதோட எங்க பொண்ணுங்க நாலு பேர கைமாத்தி விட்ருக்க.
 இப்ப கூட கூட்டிக்கொடுத்துட்டுதான வார.
 இந்நேரம் ஒரு முஸ்லீம் ரத்தத்துல ஒரு சைத்தனோட விந்து கலந்திருக்கும்"
 "ஹ... ஹ... என்னது ரத்தமா?! ரத்தத்துக்கும் மதத்துக்கும் என்னப்பா சம்பந்தம்.
 உன்னோட ரத்தத்துல ஒன்னோட இனம் வேணா என்னனு பாக்கலாம்.
 மதம் என்னனு பாக்கமுடியாது.
  ஆசப்பட்டவங்கள அவங்க பெத்தவங்க சம்மதத்தோட சேத்துவச்சேன்.
 இதுல என்ன தப்பு?!
இதே நீங்க எத்தன பேருக்கு பொண்ணு கொடுத்து முஸ்லீமா மாத்திருக்கீங்க?!
 எத்தன பொண்ணுகள மடக்கி மதம் மாத்தி கல்யாணம் பண்ணிருக்கீங்க?!
அதுக்கு பேரு என்ன?!
அதுக்கு கூலியா அல்லா சொர்க்கத்துல பொண்ணுங்கள.."
அதிலொரு இளைஞன் எறிந்த ஒரு பெரிய கல் தமிழ்ச் செல்வன் தலையில் விழ அவர் மயங்கி சரிகிறார்.
 
"டேய் உன்னாலதான்டா என் நிஷா எனக்கு கெடைக்காம போய்ட்டா?!
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்துவந்தவன் கூட்டிட்டு போனானாம்.
ஒக்காலி சாவுடா! சாவுடா!" 
 
 என்றவாறு கத்தியால் வயிற்றில் பலமுறை குத்துகிறான்.
 தூரத்தில் அதிவேகமாக கார் வரும் வெளிச்சம் தெரிகிறது.
 ஒருவன் ஆடு வெட்டும் கத்தியால் தமிழ்ச் செல்வன் கழுத்தை வெட்டிவிட்டு தமிழ்ச் செல்வனது காரையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடுகின்றனர்.
 பின்னால் வந்த ஆட்டோ அங்கே வந்து நிற்கவும் இவர்கள் புறப்படவும் சரியாக இருக்கிறது.
 
 "டேய் என் தம்பிக்கு மட்டும் எதாவது ஆச்சு உங்க வம்சமே இருக்காதுடா.."
என்கிற குரல் தப்பிச் செல்பவர்களின் காதில் விழுந்தது.
 தமிழ்ச் செல்வனை தூக்கிக் கொண்டு ஆட்டோ எதிர்திசையில் பயணமானது.
 காருக்குள் யாருமே பேசவில்லை சிறிது நேரம் கழித்து ஒருவன் பிளேயரை ஆன் செய்தான்.
 ஜிங்குன ஜிங்குன ஜனஜம் 
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்....
ஜிங்குன ஜிங்குன ஜனஜம் 
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்...
கொத்தமல்லி வாசம் ....
கொத்துகொத்தா வீசும்...
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்....
வெண்ணயிலே மாமா நெய்வாசம்...
எந் திண்ணையிலே மாமா உன் வாசம்...
ஹேய்... வாம் முனிம்மா வா...
 
 "ச்ச எவ்வளவு நல்ல பாட்டுய்யா! இத அப்டியே முழுசா ஒரு பாட்டா போட்ருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்.
 கெடுத்துட்டானுகளே..."
முகநூலில் 05.09.2021
No comments:
Post a Comment