Showing posts with label ஜெர்மானியர். Show all posts
Showing posts with label ஜெர்மானியர். Show all posts

Saturday, 4 November 2017

ஹிட்லர் ஏன் தோற்றார்?

ஹிட்லர் ஏன் தோற்றார்?

ஜெர்மானிய மக்கள் பல அரசுகளாக சிற்றரசுகளாக சிதறிக் கிடந்தனர்.
இதை ஜனநாயக வழியில் ஒரே நாடாக உருவாக்க வியன்னாவில் கூடிய ஜெர்மன் தேசியவாதிகள் மக்கட்புரட்சி மூலம் இதை செய்ய முடிவெடுத்தனர்.

1848 ல் இந்த முயற்சி ஆளும் வர்க்கம் அதிலும் குறிப்பாக சிற்றரசுகள் தனது அதிகாரம் போய்விடுமே என்று பயந்தன.
ராணுவ வலிமையால் இந்த எழுச்சி அடக்கப்பட்டது.

இதற்கு அடுத்து அன்றைய ஜெர்மனிய அரசுகளிலேயே பெரிய அரசான பிரஷ்யாவின் பிரதமராக வருகிறார் பிஸ்மார்க்.

1862 ல் இவர் நிகழ்த்திய உரை மிகவும் புகழ்பெற்றது.
அந்த பேச்சில் அவர் விவரித்த கொள்கையை 'இரத்தமும் இரும்பும்' (iron and blood) என்று சுருக்கமாகக் கூறுவர்.

அந்த உரையை சுருக்கமாகக் கூறினால்,
"ஜெர்மனிய அரசுகள் ஒன்றாக இணையவேண்டும்.
ஜெர்மானியர் வாழும் பகுதி ஒரே நாடாக இருக்கவேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயக வழியில் அல்லாது பிரஷ்யாவின் பலத்தால் (குருதியும் இரும்பும் செலவளித்து) நிறைவேற்றப்படும்"

இதன்பிறகு டென்மார்க் மீது படையெடுத்து அதனிடம் இருந்த ஜெர்மானிய பகுதியை மீட்டது பிரஷ்யா.
அடுத்து வடக்கு ஜெர்மனியில் இருந்த பல்வேறு சிற்றரசுகளை பேசியும் மிரட்டியும் பிரஷ்யாவில் இணைத்தனர்.

ஆனால் தெற்கே ஜெர்மானிய அரசான ஆஸ்திரியா அப்போது ஹங்கேரி உடன் இணைந்து ஆஸ்திரிய-ஹங்கேரி என்று பெரிய அரசாக இருந்தது.

ஆஸ்திரியா ஜெர்மனியுடன் இணைய மறுத்துவிட்டது.
காரணம் ஜெர்மனி கிறித்துவத்தில் புரோட்டஸ்டன்ட் பிரிவையும் ஆஸ்திரியா கத்தோலிக்க பிரிவையும் பின்பற்றுவது.
பிஸ்மார்க் ஆஸ்திரியா மீதும் படையெடுத்து அதைத் தோற்கடித்தார்.

"ஒற்றுமையே இல்லாத ஜெர்மானியர் இணைந்து ஜெருமானியப் பேரரசு அமைக்கப் போகிறார்களாம்" என்று பிரான்ஸ் இதை பரிகசித்தது.

பிஸ்மார்க் பிரான்சை ஆண்ட மூன்றாம் நெப்போலியனுக்கு துணிச்சல் இருந்தால் ஜெர்மனி மீது படையெடுக்குமாறு கடிதம் எழுதினார்.

போர் மூண்டது. பிரான்சை மிக எளிதில் படுதோல்வி அடையச்செய்தார் பிஸ்மார்க்.
இதைத் தொடர்ந்து வடக்கு முழுவதும் மத்திவரைக்கும் இருந்த ஜெர்மனிய அரசுகள் பிரஷ்யாவுடன் இணைந்தன.
ஆஸ்திரியா பெரிய ஜெர்மானிய பகுதியை இழந்தது.
1871ல் பிரஷ்யா ஜெர்மானிய பேரரசு ஆனது.
இது 80% ஜெர்மானிய பகுதியை உள்ளடக்கியது.

இதன்பிறகு முதலாம் உலகப்போர் மூண்டபோது ஜெர்மனிய பேரரசும் ஆஸ்திரிய-ஹங்கேரியும் இணைந்தே போர்புரிந்தன.

ஆனால் போரில் தோற்றபிறகு ஜெர்மனியின் எல்லைப் பகுதிகளைப் பறித்துக்கொண்டு சுருக்கி (முதல் படம்) பெரிய தொகை நட்ட ஈடாக தரவேண்டும் என்று ஒப்பந்தம் வென்றநாடுகள் போட்டன.

ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் ஜெர்மனிக்கு ஓவியனாகும் ஆசையில் வந்தார்.
அவருக்கு அதில் பெரிய திறமையில்லை என்று நிராகரிக்கப்பட்டார்.

பிறகு முதல் உலகப்போர் நடந்தபோது ராணுவத்தில் செய்தி கொண்டுசெல்லும் பணியில் சேர்ந்து திறமையாக செயல்பட்டு சிப்பாயாக ஆனார்.
போரில் காயமடைந்தார்.
அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஜெர்மனி தோல்வியடைந்தது.

எல்லைகளை இழந்து ராணுவமும் களைக்கப்பட்டு போர்ச் செலவாலும் கடனாலும் நாடே பஞ்சத்தில் சிக்கித்தவித்த அந்த வேளையில் இட்லர் கூலிவேலை செய்து பிழைத்து வந்தார்.

ஒருநாள் அவருக்கு அரசியல் எவ்வாறு நடக்கிறது என்று பார்க்க ஆர்வம் வந்தது.

சட்டமன்றத்திற்கு போன அவர் அங்கே யூதர்களே நிறைந்திருப்பதும் அவர்கள் மக்கள் பிரச்சனைப் பற்றி பேசாமல் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டு அவர்களை அவர்களே பெரிதாகப் புகழ்ந்துகொண்டு இருந்ததைக் கண்டு யூதர்களே எல்லாவற்றுக்கும் காரணம் என்று முடிவுசெய்தார்.

"ஒவ்வொரு அரசு அதிகாரியும் யூதனாக இருந்தான்.
ஒவ்வொரு யூதனும் அரசதிகாரியாக இருந்தான்.
இவர்கள் போர்க்களத்தில் குறைவாகவும் நாற்காலிகள் அதிகமாகவும் காணக்கிடைத்தனர்"
என்று யூதர்களைப் பற்றி அவர் எழுதுகிறார்.

ஏற்கனவே பிஸ்மார்க் பற்றி அறிந்திருந்திருந்த இட்லர் இனப்பற்றும் மிக்கவராக இருந்தார்.
பிஸ்மார்க் வழியில் தானும் பயணித்து ஜெர்மனியை ஒருங்கிணைப்பது என்று சூளுரைத்தார்.

அன்று ஏழுபேர் மட்டுமே இருந்த ஒரு கட்சியில் சேர்ந்தார்.
அவர்கள் மொட்டைமாடிகளில் கூட்டம் நடத்தினர்.
ஹிட்லர் தம்மால் முடிந்த அளவு உழைத்து கூட்டம் திரட்டி நன்கொடை பெற்று எழுச்சிப்பூர்வமாக உரை நிகழ்த்தி அந்தக் கட்சியை மிகப்பெரிய அளவில் உயர்த்தினார்.
பிறர் கழன்றுகொண்டபோதும் இட்லர் உறுதியாக கட்சியை நடத்தினார்.

இவ்வாறாக படிப்படியாக வளர்ந்த கட்சி ஜெர்மானிய தேசியத்தை மீண்டும் மக்கள் மனத்தில் துளிர்விடச் செய்தார்.

பிஸ்மார்க் போல தற்போது ஜெர்மனி பேசும் பகுதிகள் அனைத்தையும் இணைத்து ஒரே ஆட்சியில் கொண்டுவருவேன் என்று பரப்புரை செய்தார் (பிற மூன்று படங்கள்).
16 ஆண்டுகளில் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தார்.

ஆட்சிக்கு வந்ததும் இட்லர் ஜனநாயக முறைப்படி இரண்டு இழந்த பகுதிகளை மீட்டார்.

இராணுவத்தைக் கட்டமைத்து பல சீர்திருத்தங்கள் செய்து ஜெர்மனியை குறுகிய காலத்தில் தன்னிறைவு பெறச்செய்து வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றார்.

1938ல் ஆஸ்திரியாவை மிரட்டி பேச்சுவார்த்தை மூலமே ஜெர்மனியுடன் இணைத்து பிஸ்மார்க் சாதிக்கமுடியாததை தாம் சாதித்துக் காட்டினார்.

இழந்த பகுதிகளை மீட்க போலந்தின் மீது படையெடுத்து பாதியைப் பிடித்தார்.
பிரான்ஸ் மீது படையெடுத்து தோற்கடித்து அவர்கள் எந்த ரயில்பெட்டியில் தோற்றுப்போன ஜெர்மானியரை ஒப்பந்தம்போட வரச்சொல்லி நிற்கவைத்து அவமானப்படுத்தி கையெழுத்து வாங்கினார்களோ
அதே ரயில்பெட்டிக்கு பிரெஞ்சு பிரதிநிதிகளை வரச்சொன்னார்.
அவர்கள் வந்ததும் ஒப்பந்தத்தை கொடுத்துவிட்டு வெளியேறினார்.

செக்கோஸ்லோவாகியா நாட்டின் எல்லை மூன்று புறமும் இட்லர் கட்டுப்பாட்டில் இருந்தது.
எல்லையை ஒட்டி ஜெர்மானியர் வாழ்ந்த பகுதியை தந்துவிட்டால் போர்தொடுக்கமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து தாம் வாக்களித்தபடி ஜெர்மன் பேசிய பகுதிகள் அனைத்தையும் ஒரு ஆட்சியின் கீழ் இணைத்தார்.

ஹிட்லர் இதோடு நின்றிருந்தால் இன்று ஜெர்மனிதான் உலக வல்லரசு.

ஆனால் இட்லர் ஜெர்மானிய இனவெழுச்சியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தத் தொடங்கினார்.

வாக்குறுதி மீறி செக்கோஸ்லோவாகியா மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார்.
இது ஜெர்மன் பேசாத பகுதி ஆகும்.

அதன் பிறகு இத்தாலியுடன் கூட்டுவைத்து முதலாம் உலகப்போர் தோல்விக்கு பழிவாங்கவும் நாடுபிடிக்கும் எண்ணத்திலும் இட்லர் எல்லைமீறி போனார்.

ஆனாலும் ஜெர்மானிய இனம் அவருக்கு முடிந்த அளவு ஈடுகொடுத்து வெற்றிமேல் வெற்றி குவித்தது.

யூதர்களை தனியாக அடையாளமிட்டு தனிமைப்படுத்தி பிறகு சொத்துக்களை பறிமுதல் செய்து முகாம்களில் அடைத்து கடைசியில் கொத்துக் கொத்தாக கொலை செய்யச் சொன்னார்.

வெற்றியைக் குவித்தாலும்  தொடர்ச்சியான போர்களால் சோர்ந்துவிட்ட ஜெர்மன் படை மிகப்பெரிய இனமான ரஷ்ய இனத்திடம் தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்றது.
அங்கு நிலவிய காலநிலையும் இதற்கு முக்கிய காரணம்.

இறுதியில் ஜெர்மனி தோல்வியைத் தழுவியது.
போலந்திடம் பெரிய அளவு நிலத்தை இழந்தது.
அங்கிருந்த ஜெர்மானியர் விரட்டப்பட்டு போலந்து மக்கள் குடியேறிக்கொண்டனர்.
அதில் ஒரு சிறு பகுதியை ரஷ்யா எடுத்துக்கொண்டது.

எல்லைப் பகுதிகளை இழந்து ஆஸ்திரியா தனிநாடாகியது.
ஜெர்மனியும் கிழக்கு மேற்காக இரண்டாக பிரிக்கப்பட்டு வென்றநாடுகள் அடக்கி ஆண்டன.

45 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்த இரு பகுதிகள் மக்கள் எழுச்சியால் பிரிவினை சுவர் இடிக்கப்பட்டு ஜெர்மனி ஒருங்கிணைந்தது.

ஜெர்மானிய தாய்நிலத்தில் பாதியை இழந்தாலும் ஜெர்மனி இன்றும் ஒரு வல்லரசு.

ஆஸ்திரியா ஹங்கேரி போன்றன இன்று சிறிய நாடுகள்.
ஆனாலும் ஆஸ்திரியா நல்லநிலையில் உள்ளது.

இட்லரின் பேராசையும் பழிவாங்கும் உணர்வும் வரம்பு மீறி போனதால் இன்று ஜெர்மனியர் தமது இயல்பான இனப்பற்றைக் கூட வெளிப்படையாகக் காட்டமுடியாத நிலையில் உள்ளனர்.

இட்லர் அரசியலில் காலடி எடுத்துவைத்த அன்றைய ஜெர்மனி அப்படியே இன்றைய தமிழகத்தை ஒத்திருக்கிறது.
எல்லைப் பகுதிகள் இழந்த நிலையில் தமிழகம், ஆஸ்திரியா இடத்தில் ஈழம், துண்டானபகுதி இடத்தில் மலையகம்  ஆகியன பொருந்தி உள்ளன.

கிழக்கு மேற்கு என்று ஜெர்மனியை எதிரிகள் பிரித்தது போல வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு என்று இன்று தமிழகத்தை பிரிக்க சதி நடக்கிறது.

ஐரோப்பாவில் மூத்த இனமான ஜெர்மனியின் வரலாறு இந்திய துணைக்கண்டத்தில் மூத்த இனமான நமது வரலாறுடன் ஒத்துப்போகிறது.

நாம் எங்கே தொடங்கவேண்டும் எங்கே முடிக்கவேண்டும் என்பதற்கான பாடம் ஜெர்மனியின் வரலாற்றில் இருக்கிறது.

Thursday, 26 October 2017

அமெரிக்க இனங்கள்

அமெரிக்க இனங்கள்

(பேசுவது பலவகை ஆங்கிலம்)

இதன்படி ஜெர்மானிய-அமெரிக்கர் (German American) அமெரிக்காவின் மிகப்பெரிய இனம் ஆவர்.
மொத்த மக்கட்தொகையில் 15%.

இது ஆங்கில அமெரிக்கரை (8%) விட ஏறத்தாழ இருமடங்கு ஆகும்.

Wednesday, 5 July 2017

வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை

வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை
×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×

பிரான்ஸின் எல்லையை ஒட்டிய ஜெர்மனியின் ஒரு பகுதி 'ஸார்' (saar)

முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றபோது பிரான்ஸ் அதை எடுத்துக்கொண்டது.
அங்கே பெருமளவு நிலக்கரி வளம் இருந்தது.
பிரான்ஸ் அதை நன்கு பயன்படுத்தியதுடன் அப்பகுதி ஜெர்மானியரையும் நன்றாக கவனித்துக்கொண்டது.

அதாவது ஒட்டுமொத்த ஜெர்மனியும் வறுமையில் திண்டாடியபோது ஸார் ஜெர்மானியர் ஓரளவு வசதியாக வாழமுடிந்தது.

பிறகு ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததும் இழந்த பகுதிகளை மீட்க முயற்சி மேற்கொண்டார்.
பிரான்ஸ் அதைத் திருப்பித்தரவேண்டும் என்று கேட்டார்.
பிரான்சுக்கு ஹிட்லரை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லை.
ஒப்பந்தத்தின்படி வாக்கெடுப்பு நடத்தி ஸார் மக்களே தீர்மானிக்கும்படி ஒரு ஏற்பாடு செய்தனர்.

பிரான்ஸ் ஸார் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தது.
"ஜெர்மனிக்கு ஸார் போனால் வறுமை வரும். நாஜிக்கள் இனவெறியால் போர் வரும்.
பிரான்ஸிற்கு வாக்களித்தால் உங்களை ஸார்லேன்ட் எனும் தனிநாடாக ஆக்கித் தருவோம்" என்றெல்லாம் ஆசை காட்டினர்.

பிரான்சிற்குள் இருக்கும் ஸாரில் நாஜிக்களால் நேரடியாக பிரச்சாரம் செய்யமுடியாத நிலை.
1935 ல் வாக்கெடுப்பு நடந்தது.
தமது பெரும் நிலக்கரி வளத்துடன் ஸார் ஜெர்மனிக்கு வாக்களித்து தம் தாய்நிலத்தோடு மீண்டும் இணைந்தது.

கதை இதோடு முடியவில்லை.

பிரான்ஸ் சொன்ன அத்தனையும் நடந்தது.
வறுமை, இரண்டாம் உலகப்போர், தோல்வி, பட்டினிச்சாவு, இனப்படுகொலை பழி என அத்தனையையும் ஜெர்மனியோடு ஜெர்மனியாக ஸார் சந்தித்தது.

இப்போது மீண்டும் பிரான்ஸ் ஸாரை எடுத்துக்கொண்டது.
முன்பு போலவே ஜெர்மனியின் பரிதாப நிலையைவிட ஸார் மக்கள் ஓரளவு நல்லநிலையில் இருந்தனர்.
பிரான்ஸ் முன்பை விட அதிக சலுகையாக ஸார் பகுதிக்கு தன்னாட்சி கொடுத்து தனது நாட்டில் வைத்துக்கொண்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது ஸார் மக்களுக்கு தனிநாடு ஆகலாமா? பிரான்சுடன் இணைவதா? ஜெர்மனியுடன் இணைவதா? என்று மூன்று வழிகள் இருந்தன.

அப்போது மீண்டும் ஜெர்மனிக்கே வாக்களித்து தன் தாய்நிலத்துடன் இணைந்தது ஸார்.

பேரதிர்ச்சியில் உறைந்தது பிரான்ஸ்!

ஜெர்மானியர் இனப்பற்றுக்கு முன் பிரான்சின் அத்தனை ராஜதந்திரங்களும் வீணாகிப்போனது.

அத்தகைய இனப்பற்றால்தான் இரண்டு உலகப்போர்களில் தோற்றும் இன்றும் உலகின் தலைசிறந்த வல்லரசாக நிமிர்ந்து நின்று ஐரோப்பா கண்டத்திற்கே தலைமை தாங்கி வழிநடத்துகிறது ஜெர்மனி.

அன்று பிரான்சைப் போல இன்று ஹிந்தியா கதிராமங்கலம் உட்பட வடதமிழ்நாட்டு வளங்களை சுரண்ட வடக்கை தனியாக பிரிக்க சதி செய்கிறது.

ஒருவேளை வடதமிழ்நாடு நமக்கு நன்மையாக அமையுமோ என்று யாராவது சிலர் சிந்தித்தால் அதற்கான பதில் மேற்கண்ட பதிவில் உள்ளது.

இனப்பற்று பிரச்சாரம் செய்து வருவதில்லை.

வட தமிழக மக்கள் ஸார் ஜெர்மானியரைப் போன்றவர்கள்தான்.

எதற்கும் இருக்கட்டுமே என்று இப்பதிவை இட்டுவைத்தேன்.

வரலாற்றில் அடையாளம் தெரியாமல் போய் ஆயிரம் ஆண்டுகள் கழித்து பேரெழுச்சி பெற்ற ஐரோப்பிய மூத்த இனமான ஜெர்மனி போல
தமிழர்நாடும் மீண்டு எழத்தான் போகிறது!

விரிவாக இட்ட பழைய பதிவு,
ஷாங்காயிலிருந்து பெர்லின்
(31 August 2014) வேட்டொலி