Showing posts with label செருமனி. Show all posts
Showing posts with label செருமனி. Show all posts

Wednesday, 5 July 2017

வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை

வடதமிழக மக்களுக்கு ஒரு வரலாற்றுக் கதை
×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×€×

பிரான்ஸின் எல்லையை ஒட்டிய ஜெர்மனியின் ஒரு பகுதி 'ஸார்' (saar)

முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்றபோது பிரான்ஸ் அதை எடுத்துக்கொண்டது.
அங்கே பெருமளவு நிலக்கரி வளம் இருந்தது.
பிரான்ஸ் அதை நன்கு பயன்படுத்தியதுடன் அப்பகுதி ஜெர்மானியரையும் நன்றாக கவனித்துக்கொண்டது.

அதாவது ஒட்டுமொத்த ஜெர்மனியும் வறுமையில் திண்டாடியபோது ஸார் ஜெர்மானியர் ஓரளவு வசதியாக வாழமுடிந்தது.

பிறகு ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததும் இழந்த பகுதிகளை மீட்க முயற்சி மேற்கொண்டார்.
பிரான்ஸ் அதைத் திருப்பித்தரவேண்டும் என்று கேட்டார்.
பிரான்சுக்கு ஹிட்லரை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லை.
ஒப்பந்தத்தின்படி வாக்கெடுப்பு நடத்தி ஸார் மக்களே தீர்மானிக்கும்படி ஒரு ஏற்பாடு செய்தனர்.

பிரான்ஸ் ஸார் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தது.
"ஜெர்மனிக்கு ஸார் போனால் வறுமை வரும். நாஜிக்கள் இனவெறியால் போர் வரும்.
பிரான்ஸிற்கு வாக்களித்தால் உங்களை ஸார்லேன்ட் எனும் தனிநாடாக ஆக்கித் தருவோம்" என்றெல்லாம் ஆசை காட்டினர்.

பிரான்சிற்குள் இருக்கும் ஸாரில் நாஜிக்களால் நேரடியாக பிரச்சாரம் செய்யமுடியாத நிலை.
1935 ல் வாக்கெடுப்பு நடந்தது.
தமது பெரும் நிலக்கரி வளத்துடன் ஸார் ஜெர்மனிக்கு வாக்களித்து தம் தாய்நிலத்தோடு மீண்டும் இணைந்தது.

கதை இதோடு முடியவில்லை.

பிரான்ஸ் சொன்ன அத்தனையும் நடந்தது.
வறுமை, இரண்டாம் உலகப்போர், தோல்வி, பட்டினிச்சாவு, இனப்படுகொலை பழி என அத்தனையையும் ஜெர்மனியோடு ஜெர்மனியாக ஸார் சந்தித்தது.

இப்போது மீண்டும் பிரான்ஸ் ஸாரை எடுத்துக்கொண்டது.
முன்பு போலவே ஜெர்மனியின் பரிதாப நிலையைவிட ஸார் மக்கள் ஓரளவு நல்லநிலையில் இருந்தனர்.
பிரான்ஸ் முன்பை விட அதிக சலுகையாக ஸார் பகுதிக்கு தன்னாட்சி கொடுத்து தனது நாட்டில் வைத்துக்கொண்டது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது ஸார் மக்களுக்கு தனிநாடு ஆகலாமா? பிரான்சுடன் இணைவதா? ஜெர்மனியுடன் இணைவதா? என்று மூன்று வழிகள் இருந்தன.

அப்போது மீண்டும் ஜெர்மனிக்கே வாக்களித்து தன் தாய்நிலத்துடன் இணைந்தது ஸார்.

பேரதிர்ச்சியில் உறைந்தது பிரான்ஸ்!

ஜெர்மானியர் இனப்பற்றுக்கு முன் பிரான்சின் அத்தனை ராஜதந்திரங்களும் வீணாகிப்போனது.

அத்தகைய இனப்பற்றால்தான் இரண்டு உலகப்போர்களில் தோற்றும் இன்றும் உலகின் தலைசிறந்த வல்லரசாக நிமிர்ந்து நின்று ஐரோப்பா கண்டத்திற்கே தலைமை தாங்கி வழிநடத்துகிறது ஜெர்மனி.

அன்று பிரான்சைப் போல இன்று ஹிந்தியா கதிராமங்கலம் உட்பட வடதமிழ்நாட்டு வளங்களை சுரண்ட வடக்கை தனியாக பிரிக்க சதி செய்கிறது.

ஒருவேளை வடதமிழ்நாடு நமக்கு நன்மையாக அமையுமோ என்று யாராவது சிலர் சிந்தித்தால் அதற்கான பதில் மேற்கண்ட பதிவில் உள்ளது.

இனப்பற்று பிரச்சாரம் செய்து வருவதில்லை.

வட தமிழக மக்கள் ஸார் ஜெர்மானியரைப் போன்றவர்கள்தான்.

எதற்கும் இருக்கட்டுமே என்று இப்பதிவை இட்டுவைத்தேன்.

வரலாற்றில் அடையாளம் தெரியாமல் போய் ஆயிரம் ஆண்டுகள் கழித்து பேரெழுச்சி பெற்ற ஐரோப்பிய மூத்த இனமான ஜெர்மனி போல
தமிழர்நாடும் மீண்டு எழத்தான் போகிறது!

விரிவாக இட்ட பழைய பதிவு,
ஷாங்காயிலிருந்து பெர்லின்
(31 August 2014) வேட்டொலி

Sunday, 13 September 2015

ஜெர்மனியும் தமிழகமும்

ஜெர்மனியும் தமிழகமும்

தற்போதைய ஜெர்மனி நாடானது ஜெர்மானிய பெரும் நிலத்தின் ஒரு பகுதிதான்.

ஆஸ்திரியாவும் லக்சம்பர்க்கும் கூட ஜெர்மானிய நாடுகள்தான்.

இது போக பிரான்சிடமும் இத்தாலியிடமும் டென்மார்க்கிடமும் ஸ்லோவேனியாவிடமும் சிறிய சிறிய ஜெர்மானிய பகுதிகள் உள்ளன.

ஸ்விட்சர்லாந்தின் முக்கால்வாசி ஜெர்மானியரே.

போலந்திலும் செக் குடியரசிலும் இருந்த ஜெர்மானியர் உலகப்போருக்குப் பிறகு விரட்டப்பட்டுவிட்டனர்.

நீல நிற கோடு 1910வரை ஜெர்மானியர் வாழ்ந்த நிலப்பரப்பு.

இதை நமது சூழலுக்கு பொருத்திப் பார்த்தோமானால்

இன்று தமிழ்நிலம் ஏழுதுண்டுகளாக சிதறுண்டு உள்ளது.
1.தமிழகம்
2.ஈழம்
3.கிழக்கு கேரளம்
4.தென் கன்னடம்
5.தென் ஆந்திரம்
6.புதுச்சேரி
7.மலையகம்

ஐரோப்பாவிற்கு ஜெர்மானியர் எப்படியோ அதேபோல இந்திய துணைகண்டத்திற்கு தமிழர்.

ஒருவேளை அண்டை மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்கமுடியாது போனாலும்

ஈழம் தனிநாடாக ஆனாலும்

தமிழகம் மட்டும் தன் வலிமையால் தனிநாடாகி மாபெரும் வல்லரசாக உருவெடுக்கமுடியும்.

Sunday, 31 August 2014

ஷாங்காயிலிருந்து பெர்லின்

ஷாங்காயிலிருந்து பெர்லின்

இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகும் ஜெர்மனி வல்லரசாகத் திகழக் காரணம் என்ன?

ஒரு நிகழ்ச்சியின் மூலம் விளக்கவா?

ஸார் (saar) என்ற பகுதி பிரான்சின் எல்லையைத் தொட்டவாறு இருக்கும் ஒரு ஜெர்மானியப் பகுதி;
நிலக்கரி வளமிக்கது இந்தப் பகுதி.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது; வழக்கம்போல போரில் தோற்ற மக்களின் தாய்நில வளங்களை வென்ற மக்கள் பங்குபோட்டுக் கொண்டனர்;
15ஆண்டுகளுக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியோடு ஸார் பகுதி ஜெர்மனியிடமிருந்து பறிக்கப்பட்டது;
15 ஆண்டுகள் வென்ற நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது; போரில் வென்ற பிரான்சு நிலக்கரியை தாராளமாக அள்ளிக்கொண்டிருந்தது;
அப்பகுதி ஜெர்மானியர்கள் ஓரளவு வேலைவாய்ப்பு கிடைத்து நோடிந்துபோகாத வாழ்க்கையைப் பெற்றனர்;
ஆனால் ஜெர்மனியின் நிலையோ மிக மோசமாக இருந்தது; அங்கே போருக்கு முன் ஒருவரின் ஒரு திங்களுக்கு(மாதத்திற்கு) போதுமான வருமானம், போருக்குப் பிறகு ஒரு நாளுக்குக்கூட போதவில்லை;
நாடே சின்னாபின்னமாகிக் கிடந்தது;
முதல் உலகப் போரில் தாய்மண்ணைக் காக்க ஆஸ்திரியா(அதுவும் ஜெர்மானிய நாடுதான்) நாட்டிலிருந்து வந்து போர்வீரனாகச் சேர்ந்து போராடிய ஹிட்லர்  நாஜிக் கட்சியின் தலைவனாக ஆட்சியைப் பிடித்து ஜெர்மனியை மெல்ல மெல்ல சீர்செய்து கொண்டிருந்தார்;
பதினைந்து ஆண்டுகள் முடியும் தருவாயில் ஸார் பகுதியில் பொதுவுடைமையாளர்களும்(கம்யூனிஸ்ட்), கத்தோலிக்கர்களும், பிரான்சு முதலாளிகளும், ஸாரை ஆண்ட 'வென்ற நாடுகளின் கூட்டரசின்' அனைத்து அரசியல் இயந்திரங்களும் ஜெர்மானிய மக்களிடம் வாக்கெடுப்பின் மூலம் ஜெர்மனியுடன் இணையவேண்டாம் என்று தீவிர பரப்புரை செய்தனர்;
நாஜிக் கட்சியினர் யூதர்களை ஒடுக்கிவருவதைக் காட்டி அவர்கள் பேச்சைக் கேட்கவேண்டாம் என்றும் கூறினர்;
ஜெர்மனி பொருளாதாரத்தில் சீர்குலைந்திருப்பதையும் ஸார் ஜெர்மனியுடன் இணைந்தால் வறுமையை சந்திக்கவேண்டிவரும் என்றும் சுட்டிக்காட்டினர்;
மறுபடியும் போர் வந்தால் அழிவு நேரிடும் என்று கணித்துச் சொன்னார்கள்;
வென்ற நாடுகளின் கீழிருந்தால் தனி நாடாக அமையலாம் என்றும் ஆசை காட்டினர்.

நாஜிக் கட்சியினரால் வேறொரு ஆட்சியின் கீழ் இருக்கும்  ஸார் மக்களிடம் நேரடியாகப் பெரிய அளவில் பரப்புரை செய்யமுடியாத நிலை.

வாக்கெடுப்பு நாளும் வந்தது;
யாருமே எதிர்பார்க்காத வண்ணம் 90% பேர் ஜெர்மனியுடன் இணைய வாக்களித்தனர்;
ஸார் பகுதியிலிருந்து வாழ்க்கை தேடி வெளியேறிய ஜெர்மானியர் பலரும் பெருமுயற்சி செய்து பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களித்தனர்;
நோயாளிகள் நாஜிக்கட்சியினரின் உதவியுடன் சென்று வாக்களித்தனர்;
எடுத்துக்காட்டாக, ஒரு வயதான பெண்மணி ஷாங்காயிலிருந்து பெர்லின் வந்தார்;
1935ல் இது 16நாட்கள்  தொடர்வண்டிப் பயணமாகும்(!!);
அவர் பெர்லினுக்கு வாக்கெடுப்பின் கடைசிநாளில் வந்துசேர்ந்தார்;
நாஜிக்கள் உடனடியாக வானூர்தி மூலம் ஸார் பகுதிக்கு அழைத்துச்சென்று வாக்குபோட வைத்தார்கள்.

1935 மார்ச் 1, ஸார் பகுதி ஜெர்மனியுடன் மீண்டும் இணைந்தது;
இணைந்த பிறகு வென்ற நாடுகளின் கூட்டணி சொன்ன அத்தனையும் நடந்தது;
வறுமை வந்தது; நாஜிக்களின் ஆதரவாளர் என்ற விமர்சனம் வந்தது; போர் வந்தது; அழிவு வந்தது; அத்தனையும் அறிந்துதான் அவர்கள் ஜெர்மனியுடன் இணைந்தனர்.

கதை இங்கே முடியவில்லை; இரண்டாம் உலகப் போரில் மீண்டும் ஜெர்மனி தோற்றது;
முதல் உலகப் போரைவிட மிகப்பெரிய சேதம்;
அப்போதும் ஸார் பகுதி ஜெர்மனியிடமிருந்து பறிக்கப்பட்டது;
1947-1956 காலகட்டத்தில் தன்னாட்சி பெற்ற பகுதியாக பிரான்சு அரசின் கீழ் வந்தது;

அதே பழைய நிலை; ஜெர்மனி சின்னாபின்னமாகிக் கிடந்தது;
1955ல் 'மேற்கு ஐரோப்பிய கூட்டணியின்' கீழ் ஸார் பகுதி தனி நாடாக அறிவிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது;
68% ஜெர்மானியர் தனிநாடு வேண்டாம் என்று (ஜெர்மனியுடன்தான் இணைவோம் என்று) வாக்களித்தனர்;
1957ல் ஸார் பகுதி மீண்டும் தனது தாய்நிலத்துடன் இணைந்தது; வறுமையைச் சந்தித்தது; இன்னொரு போரைச் சந்திக்கவும் ஆயத்தமாக இருந்தது.

வென்ற நாடுகள் தூக்கிப்போட்ட எலும்புத்துண்டுகளுக்காக ஜெர்மானிய மக்கள் வாலாட்டவில்லை.
வல்லரசுகளின் அத்தனை தந்திரங்களும் ஜெர்மானியரின் இன்பற்றுக்கு முன்னே தோற்றுப்போனது.

ஜெர்மானியர் தமது தாய்நாட்டை வல்லரசாக அமைத்துக்கொண்டதில் என்ன வியப்பு?

https://m.facebook.com/photo.php?fbid=486678444769147&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr&refid=13

ஷாங்காயிலிருந்து பெர்லின்

ஷாங்காயிலிருந்து பெர்லின்

இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகும் ஜெர்மனி வல்லரசாகத் திகழக் காரணம் என்ன?

ஒரு நிகழ்ச்சியின் மூலம் விளக்கவா?

ஸார் (saar) என்ற பகுதி பிரான்சின் எல்லையைத் தொட்டவாறு இருக்கும் ஒரு ஜெர்மானியப் பகுதி;
நிலக்கரி வளமிக்கது இந்தப் பகுதி.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது; வழக்கம்போல போரில் தோற்ற மக்களின் தாய்நில வளங்களை வென்ற மக்கள் பங்குபோட்டுக் கொண்டனர்;
15ஆண்டுகளுக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியோடு ஸார் பகுதி ஜெர்மனியிடமிருந்து பறிக்கப்பட்டது;
15 ஆண்டுகள் வென்ற நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது; போரில் வென்ற பிரான்சு நிலக்கரியை தாராளமாக அள்ளிக்கொண்டிருந்தது;
அப்பகுதி ஜெர்மானியர்கள் ஓரளவு வேலைவாய்ப்பு கிடைத்து நோடிந்துபோகாத வாழ்க்கையைப் பெற்றனர்;
ஆனால் ஜெர்மனியின் நிலையோ மிக மோசமாக இருந்தது; அங்கே போருக்கு முன் ஒருவரின் ஒரு திங்களுக்கு(மாதத்திற்கு) போதுமான வருமானம், போருக்குப் பிறகு ஒரு நாளுக்குக்கூட போதவில்லை;
நாடே சின்னாபின்னமாகிக் கிடந்தது;
முதல் உலகப் போரில் தாய்மண்ணைக் காக்க ஆஸ்திரியா(அதுவும் ஜெர்மானிய நாடுதான்) நாட்டிலிருந்து வந்து போர்வீரனாகச் சேர்ந்து போராடிய ஹிட்லர்  நாஜிக் கட்சியின் தலைவனாக ஆட்சியைப் பிடித்து ஜெர்மனியை மெல்ல மெல்ல சீர்செய்து கொண்டிருந்தார்;
பதினைந்து ஆண்டுகள் முடியும் தருவாயில் ஸார் பகுதியில் பொதுவுடைமையாளர்களும்(கம்யூனிஸ்ட்), கத்தோலிக்கர்களும், பிரான்சு முதலாளிகளும், ஸாரை ஆண்ட 'வென்ற நாடுகளின் கூட்டரசின்' அனைத்து அரசியல் இயந்திரங்களும் ஜெர்மானிய மக்களிடம் வாக்கெடுப்பின் மூலம் ஜெர்மனியுடன் இணையவேண்டாம் என்று தீவிர பரப்புரை செய்தனர்;
நாஜிக் கட்சியினர் யூதர்களை ஒடுக்கிவருவதைக் காட்டி அவர்கள் பேச்சைக் கேட்கவேண்டாம் என்றும் கூறினர்;
ஜெர்மனி பொருளாதாரத்தில் சீர்குலைந்திருப்பதையும் ஸார் ஜெர்மனியுடன் இணைந்தால் வறுமையை சந்திக்கவேண்டிவரும் என்றும் சுட்டிக்காட்டினர்;
மறுபடியும் போர் வந்தால் அழிவு நேரிடும் என்று கணித்துச் சொன்னார்கள்;
வென்ற நாடுகளின் கீழிருந்தால் தனி நாடாக அமையலாம் என்றும் ஆசை காட்டினர்.

நாஜிக் கட்சியினரால் வேறொரு ஆட்சியின் கீழ் இருக்கும்  ஸார் மக்களிடம் நேரடியாகப் பெரிய அளவில் பரப்புரை செய்யமுடியாத நிலை.

வாக்கெடுப்பு நாளும் வந்தது;
யாருமே எதிர்பார்க்காத வண்ணம் 90% பேர் ஜெர்மனியுடன் இணைய வாக்களித்தனர்;
ஸார் பகுதியிலிருந்து வாழ்க்கை தேடி வெளியேறிய ஜெர்மானியர் பலரும் பெருமுயற்சி செய்து பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களித்தனர்;
நோயாளிகள் நாஜிக்கட்சியினரின் உதவியுடன் சென்று வாக்களித்தனர்;
எடுத்துக்காட்டாக, ஒரு வயதான பெண்மணி ஷாங்காயிலிருந்து பெர்லின் வந்தார்;
1935ல் இது 16நாட்கள்  தொடர்வண்டிப் பயணமாகும்(!!);
அவர் பெர்லினுக்கு வாக்கெடுப்பின் கடைசிநாளில் வந்துசேர்ந்தார்;
நாஜிக்கள் உடனடியாக வானூர்தி மூலம் ஸார் பகுதிக்கு அழைத்துச்சென்று வாக்குபோட வைத்தார்கள்.

1935 மார்ச் 1, ஸார் பகுதி ஜெர்மனியுடன் மீண்டும் இணைந்தது;
இணைந்த பிறகு வென்ற நாடுகளின் கூட்டணி சொன்ன அத்தனையும் நடந்தது;
வறுமை வந்தது; நாஜிக்களின் ஆதரவாளர் என்ற விமர்சனம் வந்தது; போர் வந்தது; அழிவு வந்தது; அத்தனையும் அறிந்துதான் அவர்கள் ஜெர்மனியுடன் இணைந்தனர்.

கதை இங்கே முடியவில்லை; இரண்டாம் உலகப் போரில் மீண்டும் ஜெர்மனி தோற்றது;
முதல் உலகப் போரைவிட மிகப்பெரிய சேதம்;
அப்போதும் ஸார் பகுதி ஜெர்மனியிடமிருந்து பறிக்கப்பட்டது;
1947-1956 காலகட்டத்தில் தன்னாட்சி பெற்ற பகுதியாக பிரான்சு அரசின் கீழ் வந்தது;

அதே பழைய நிலை; ஜெர்மனி சின்னாபின்னமாகிக் கிடந்தது;
1955ல் 'மேற்கு ஐரோப்பிய கூட்டணியின்' கீழ் ஸார் பகுதி தனி நாடாக அறிவிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது;
68% ஜெர்மானியர் தனிநாடு வேண்டாம் என்று (ஜெர்மனியுடன்தான் இணைவோம் என்று) வாக்களித்தனர்;
1957ல் ஸார் பகுதி மீண்டும் தனது தாய்நிலத்துடன் இணைந்தது; வறுமையைச் சந்தித்தது; இன்னொரு போரைச் சந்திக்கவும் ஆயத்தமாக இருந்தது.

வென்ற நாடுகள் தூக்கிப்போட்ட எலும்புத்துண்டுகளுக்காக ஜெர்மானிய மக்கள் வாலாட்டவில்லை.
வல்லரசுகளின் அத்தனை தந்திரங்களும் ஜெர்மானியரின் இன்பற்றுக்கு முன்னே தோற்றுப்போனது.

ஜெர்மானியர் தமது தாய்நாட்டை வல்லரசாக அமைத்துக்கொண்டதில் என்ன வியப்பு?

https://m.facebook.com/photo.php?fbid=486678444769147&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr&refid=13