Showing posts with label ஜமீன்தார். Show all posts
Showing posts with label ஜமீன்தார். Show all posts

Wednesday, 28 March 2018

தமிழக விவசாயிகள் சிதறிக் கிடப்பதேன்?

தமிழக விவசாயிகள் சிதறிக் கிடப்பதேன்?
----------------------

தமிழகத்தில் வந்தேறிகள் கைவசமுள்ள நிலவுடைமை வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது (நீலநிறம்).

(இதில் பிராமணர் என்பதில் பார்ப்பன குலத் தமிழர் உண்டா என்பது தெரியவில்லை.
எனக்குத் தெரிந்து தமிழ்ப் பார்ப்பனர் எவரிடமும் நிலவுடைமை இல்லை.
எனவே பி என்று குறிக்கப்பட்டோர் வடுக பிராமணராகவே இருக்க வாய்ப்பு அதிகம்)

மேலும் இது ஆங்கிலேயர் கால வரைபடம் ஆகும்.

50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தெலுங்கு கன்னட வந்தேறிகளின் நிலவுடைமை வரைபடத்தில் உள்ளதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

இத்துடன் திராவிட ஆட்சியில் நகர்ப்புற நிலவுடைமை மார்வாடிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது.

தமிழகத்தில் 8 ல் ஒரு பங்கு நிலம் மலையாளிகள் கையில் உள்ளது.

கேரள எல்லைப்பகுதிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி கேரள குடியுரிமைக்கு விண்ணப்பித்து எல்லைக்கற்களை பிடுங்கி கேரளாவுடன் இணைக்கப்பட்ட தாளூர் போன்ற கிராமங்கள் பல.

இவையெல்லாம் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை.

அதாவது தமிழகத்தில் பெரும்பாலான நிலம் தமிழருக்கு சொந்தமில்லை.

விவசாய நிலங்கள் பெரும்பாலும் தெலுங்கர் கையில் உள்ளன.
விவசாய சங்கங்களில் பொறுப்பில் பதவியில் இருப்பவர்கள் இவர்களே!

கீழவெண்மணி படுகொலை செய்த கோபாலகிருஷ்ண நாயுடு நினைவுக்கு வரலாம்.
அவருக்கு ஈ.வே.ராமசாமியும் அண்ணாதுரையும் முட்டுக்கொடுத்து நினைவிருக்கலாம்.

விவசாயக் கூலிகளை விவசாயியாக யார் ஒத்துக்கொள்கிறார்கள்?!

தெலுங்கர்கள்தான் தமிழக விவசாயிகளை ஒன்றுசேரவிடாமல் நடுநடுவே ஊடுறுவி உள்ளனர்.

இதுவே விவசாய போராட்டம் பெரிய அளவு வெடிக்காத்தற்கு காரணம்.

நாராயணசாமி நாயுடு சீனிவாசராவ் போன்றவர்களை உப்புக்கு சப்பாணியாக ஒத்துக்கொள்ளலாம்

(வரைபடத்திற்கு நன்றி : பார்க்கவன் தமிழன்)