Wednesday 9 May 2018

இலுமினாட்டி ஒரு கார்ப்பரேட் கற்பனை

இலுமினாட்டி ஒரு கார்ப்பரேட் கற்பனை 

இன்று உலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் படுகொலைகளுக்கும் காரணம் யூதர்களின் அமைப்பான இலுமினாட்டி என்று பலரும் கூறுகிறார்கள்.

அதை நம்பமுடியாத அதேவேளையில் அதைப் புறந்தள்ளவும் முடியவில்லை.

யூதர்கள் பற்றி முதலில் அறிவோம்.

யூதர் என்போர் ஓரினத்தவர் கிடையாது.
ஹீப்ரு இனத்தவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமான யூதாயிசத்தைத் தழுவியோரே இன்று யூதர்.

ஹீப்ரு மொழியோ அழிந்துவிட்டது.
ஆனாலும் யூத மத வழிபாட்டு மொழியாக அது உள்ளது.
இன்றைய யூதர் பழமையான ஹீப்ரு இனத்தவர் கிடையாது.
யூதரில் கறுப்பர், அராபியர், ஐரோப்பியர், இந்தியர் என பல இனத்தவரும் உண்டு.

இஸ்ரேலுக்கு சென்று நேரில் பார்த்தால் புரியும்.
அங்கே அந்த மண்ணுக்கு தொடர்பே இல்லாத வந்தேறி மக்கள் குடியேறி வாழ்கிறார்கள்.
இஸ்ரேலுக்குள்ளேயே ஒருமொழி பேசும் மக்கள் கூட்டாக வாழ்கின்றனர்.
பிரெஞ்சு பேசும் யூதர் ஒரு பகுதியிலும் மலையாளம் பேசும் யூதர் ஒரு பகுதியிலும் கூடி வாழ்கின்றனர்.

இஸ்ரேல் என்பது ஒரே மதத்தைப் பின்பற்றும் வெவ்வேறு இனத்தவரின் தொகுப்பு நாடு ஆகும்.
ஆக ஒற்றுமைக்கு உதாரணமாக காட்டப்படும் யூதராலே கூட இனம் என்ற கட்டமைப்பை உடைக்க முடியவில்லை.
இப்போது ஹீப்ரு மொழி மீண்டும் கற்பிக்கப்பட்டாலும் நடைமுறையில் இஸ்ரேலியர் தத்தமது தாய்மொழியையே பேசிவருகின்றனர்.

யூதர்கள் பிறப்பிலேயே அறிவாளிகள் என்பது கட்டுக்கதை.
யூதரில் ஐரோப்பியர் மட்டுமே அறிவாளிகள். அவர்களும் கல்வியாலும் முயற்சியாலும் அறிவாளிகள் ஆனாரேயன்றி மரபணுவினால் அல்ல.

யூதர்கள் ஒரே கலாச்சாரத்தைப் பின்பற்றுவதும் கிடையாது.
பொதுவான சில மதச்சடங்குகள் மட்டுமே உண்டு.

இதையெல்லாம் இங்கே ஏன் கூறுகிறேன் என்றால், யூதர்கள் ஓரினமாக தகவல்தொடர்புடன் இணக்கமாக ஒரே சமுதாயமாக வாழவில்லை என்பதை உணர்த்தத்தான்.

(நாடடையும் முயற்சியில் தமிழரை யூதருடன் ஒப்பிடுவது எந்த வகையிலும் சரியாகாது)

இஸ்ரேல் எனும் நாடு மத அடிப்படையில் உருவாக்கப்பட்டது,
ஆதலால் அதை தமிழ்தேசியம் அங்கீகரிக்க முடியாது.
தமிழ்த் தேசியமானது இனவழி நாடுகளை மட்டுமே அங்கீகரிக்க முடியும்.

சரி இலுமினாட்டி என்பது என்ன?

யூதரால் இலுமினாட்டி என்ற சங்கம் 1776ல் பவேரியாவில் (ஜெர்மனி) தொடங்கப்பட்டு உலக ஆதிக்கத்தை கைப்பற்ற திட்டமிடப்பட்டது உண்மைதான்.
இன்று அது இயங்கிவருவதும் உண்மைதான்.

ஆனால் இன்று அதுதான் உலகையே ஆட்டிப்படைக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தியலாக உள்ளது.

2004 சுனாமி செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் அந்த ஆழிப்பேரலை வரப்போவதை முன்கூட்டியே இலுமினாட்டியான கமலஹாசன் மூலம் 'அன்பே சிவம்' படத்தில் காட்டியதாகவும் கூட இலுமினாட்டி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இல்லுமினாட்டி என்ற ஒரு போலி கருத்தியலை உருவாக்கி மக்களை திசைதிருப்பி உலக அரங்கில் தமது ஏகாதிபத்திய அட்டூழியங்களை மடைமாற்றுகிறது அமெரிக்க அரசு.

ஒவ்வொரு நாட்டிலும் இப்படியான போலிக் கருத்தியல் உள்ளது.
என்றோ வாழ்ந்து மறைந்த ஆரியர் இன்றும் பிராமணராய் ஒற்றுமையாய் இந்தியாவை ஆள்வதாக ஒரு மடைமாற்றும் கருத்தியல் நம் கண் முன்னே உண்டு.

இதனால் நீட் உட்பட ஹிந்திய ஏகாதிபத்திய நடவடிக்கைகளை நாம் பார்ப்பனர் சதியாக பார்க்கிறோம்.

இதுபோலவே உலகளாவிய அரசியலில் அனைத்தும் இலுமினாட்டி சதியாக பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பெரிய பெரிய கார்ப்பரேட்டுகள் அந்த அந்த நாட்டின் அரசினை ஆட்டிப்படைக்கின்றன.
இந்த கார்ப்பரேட்டுளின் தலைமை அமெரிக்க கார்ப்பரேட்டுகள்.
ஏனென்றால் அமெரிக்க அரசே ஒரு கார்ப்பரேட் போலத்தான் செயல்படுகிறது.

அமெரிக்க அரசு ஒரு நாட்டின் அரசியலில் தலையிட்டு குழப்பி தனது கைப்பாவை ஒருவரை அதிகாரத்தில் அமர்த்த முயல்கிறது.
அது நடக்கவில்லை என்றால் அரசால் மக்கள் மீதோ அல்லது மக்களால் அரசின் மீதோ ஆயுத வன்முறையை நிகழ்த்தவைத்து அதை அடக்குவதாக கூறிக்கொண்டு தமது ராணுவத்தை அனுப்பி அம்மண்ணின் வளங்களைக் கொள்ளையடிக்கிறது.

அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகள் ஏதோ யூதர்களின் ஒரு சங்கம் மனிதர்களை அழிக்க முன்பே திட்டமிட்ட சதிகள் என அமெரிக்க அரசே பரப்புரை செய்கிறது.

1960களில் அமெரிக்க நாவல்களில் உலகையாளும் சங்கம் போன்ற கற்பனைகள் இடம்பெற்றன.

1970களில் அரசியல் நிகழ்வுகள் அந்த சங்கத்துடன் தொடர்புபடுத்தி நாவல்கள் கட்டுரைகள் எழுதப்பட்டன.

இதை அடியொற்றி 1980களில் இலுமினாட்டி கருத்தியல் அமெரிக்க உளவுத்துறையால் உருவாக்கப்பட்டது.
9,11 என்ற எழுத்துகளுடனும் விமானம் கட்டிடத்தில் மோதுவது போன்றும் பல அமெரிக்க திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெற்றன.
கார்ட்டூன்களிலும் இலுமினாட்டி சின்னம் ஆங்காங்கே தென்படுமாறு செய்தனர்.
பிறகு இரட்டை கோபுரத்தை அமெரிக்க அரசே தகர்த்தது.

பிறகு இது ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் அவை இலைமறை காய்மறையாக ஏற்கனவே காட்டப்பட்டதாகவும் சான்றுகள் உளவுத்துறையாலேயே வெளியிடப்பட்டன.
இதன்பிறகுதான் இலுமினாட்டி இருப்பதாக உலகம் நம்பத் தொடங்கியது.

இலுமினாட்டி என்ற பெயரை அமெரிக்கா நன்கு பிரபலப்படுத்தியதால் இன்று பிரபலமாக வேண்டிய விடயங்கள் இலுமினாட்டி தொடர்புடையதாக வேண்டுமென்றே காட்டப்படுகின்றன.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே 666, sex, ஒற்றைக்கண், கொம்புகள், கண் கொண்ட பிரமீடு என இலுமினாட்டி வடிவங்கள் இடம்பெறுகின்றன.

அதைக் கண்டுபிடித்துவிட்டதாக இலுமினாட்டி ஆய்வாளர்கள் அதற்கான விளம்பரத்தை தம்மை அறியாமலே செய்துதருகிறார்கள்.

டிஸ்னி கார்ட்டூன்களில் பல காட்சிகளில் ஆபாசம் இருப்பதைக் கண்டுபிடித்ததாக பலரும் போலியான படங்களை பரப்பி விளம்பரம் தேடிக்கொண்டனர்.

அமெரிக்க பாடகர்களும் நடிகர்களும் பிரபலமாக இதுபோன்ற சின்னங்களைப் பயன்படுத்தினர்.

சரி யூதர்கள் என்ன செய்தார்கள்?!
எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?!

யூதர்கள் என்றாலே ஏதோ உலகை ஆட்டிவைக்கும் வல்லவர்கள் என்ற மாயையை உருவாக்க அமெரிக்கா அனுமதி கேட்டால் யூதர்களுக்கு அது கசக்கவா போகிறது?!

இந்த திட்டத்திற்கு யூதர்களும் இஸ்ரேலிய உளவுத்துறையும் உடந்தை (உடன்படுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை).
இந்த பழியைத் தாங்கிக் கொள்ள யூதர்களுக்கும் அவர்களின் நாட்டிற்கும் பணம், ஆயுதம், அரசியல் ஆதரவு என அனைத்தையும் வழங்குகிறது அமெரிக்கா.

உலகத்தையே சில யூத குடும்பங்கள் ஆட்டிப்படைக்கின்றன என்றும்,
அதன் தலைமை இங்கிலாந்து அரச குடும்பம் என்றும்,
அதன் பூர்வீகம் பிரமீடு கட்டிய பாரோ மன்னர்கள் என்றும்,
பிராமணர்கள் இலுமினாட்டிகள் என்றும்,
உலகின் பெரும்பான்மை ஊடகங்களும் வங்கிகளும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதென்றும்,
அவர்களே உலகின் பழமையான இனங்களை அழித்து வருவதாகவும்,
இன்று நடக்கும் விபத்துகள், கண்டுபிடிப்புகள், அரசியல் திருப்பங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்களால் திட்டமிடப்பட்டவை என்றும்,
நோய்களைப் பரப்பி போர்களை தூண்டி மக்கட்தொகையைக் குறைத்து உலகையே ஒரு குடையில் ஆள திட்டம் தீட்டியுள்ளதாகவும் இலுமினாட்டி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு அவர்கள் ஊடகங்களில் மறைமுகமாக சில வடிவங்களைக் காட்டி நமது மூளையில் அதைப் பதியவைக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு சில விடயங்களை மனதில் புகுத்த முடியும் என்றாலும் இவ்வாறெல்லாம் செய்து இலுமினாட்டி உலகையாளும் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

  200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலுமினாட்டி இயங்கியிருந்தால் யூதர்களைப் பற்றி அவதூறு பரப்புரை செய்து செய்தே ஆட்சியைப் பிடித்த ஹிட்லர் இலுமினாட்டி பற்றி எங்குமே பேசவோ எழுதவோ இல்லையே!

ஒருவேளை இலுமினாட்டி என்ற சங்கம் வெறுமனே பெயருக்கு தொடங்கப்பட்டு காலப்போக்கில் செயல்படாமல் போய் அது அமெரிக்க யூத பணக்காரர்கள் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து தமது திட்டங்களை அமெரிக்க அரசு மூலம் நிறைவேற்றுவதாக வைத்துக்கொண்டாலும் அவர்கள் கடைபிடிப்பதாகக் கூறப்படும் 'மறைமுக உளவியல் புகுத்தல்' வழியில் அவர்களது உலகையாளும் இலட்சியத்தை நிறைவேற்ற ஆயிரம் ஆண்டுகளாவது ஆகும்.

இஸ்ரேலிய உளவுத்துறை திறமையானது,
இஸ்ரேல் அரேபிய மண்ணில் அமெரிக்காவின் நுழைவாயில்.
இவ்விரு காரணங்களால் இசுரேல் சாதித்த ராணுவ வெற்றிகள் உலகை வியப்பில் ஆழ்த்தின.

மற்றபடி வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் சிறு எதிர்ப்பும் தெரிவிக்காமல் இனப்படுகொலையுண்ட கோழைகளான யூதர்கள்,
அதிசயப் பிறவிகளும் கிடையாது.
ஆளப் பிறந்தவர்களும் கிடையாது.

இத்தகைய மடைமாற்ற கற்பனைக் கருத்தியல்களுக்கு மயங்காமல் அறிவார்ந்த தமிழினம் பிரச்சனையின் உண்மையான வேரைத்தேடி சென்றால் உண்மை விளங்கும்.

No comments:

Post a Comment